புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது கதைகள் --
Page 5 of 9 •
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
ஓட்டைப் படகு.
============
காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாகப் பீரிட்டு வந்தது; முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இருந்த துணியும் பிடுங்கிக்கொண்டது. ஆக நான்கு ஓட்டைகள் வழியாக தண்ணீர் வேகமாக உள்ளே வந்துகொண்டிருந்தது. படகோட்டி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த தத்துவ ஞானி,
"ஓட்டைப்படகிலே மூன்று ஓட்டைப் படகுகள் ஏறிவிட்டன . " என்றார்.
" ஐயா ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? "
" தம்பி ! மனித உடம்பு ஒன்பது ஓட்டைகள் உள்ள படகுதானே ! அதைக் குறிப்பிட்டேன் ! "
" ஐயா ! தத்துவம் பேசுவதற்கு இது நேரம் அல்ல! படகு மூழ்கிக்கொண்டு இருக்கிறது; நாம் மூவரும் தப்பிக்க ஏதாவது வழியுண்டா ? அதைச் சொல்லுங்கள் !"
" தம்பி ! நம்முடைய வாழ்க்கையே ஒரு கடல் போன்றது. இந்தக் கடலைக் கடக்கவேண்டும் என்றால் , நாம் ஏறிச்செல்லும் படகிலே ஓட்டைகள் இருக்கக் கூடாது. முக்கியமாக நான்கு ஓட்டைகள் இருக்கக்கூடாது. அதாவது தாமதம், மறதி, சோம்பேறித்தனம், தூக்கம் ஆகிய நான்கு ஓட்டைகள் இருக்கக் கூடாது ; அவ்வாறு இருந்தால் நடுவழியிலேயே படகு கவிழ்ந்துவிடும். இதை நான் சொல்லவில்லை ; வள்ளுவர் சொல்லுகிறார்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ( மடியின்மை- 606 )
" ஐயா ! அவசரம் தெரியாமல் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ! திருக்குறள் கேட்பதற்கு இது நேரம் அல்ல. நாம் சாகப் போகிறோம்; தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்! வெட்டிப்பேச்சு வேண்டாம். "
" நாம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கும் வள்ளுவர் ஒரு வழி சொல்லுகிறார் ! "
" அது என்ன வழி ? "
" அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை-421 )
அதாவது , அறிவு இருந்தால் , அது நம்மை மரணத்திலிருந்து கூடக் காப்பாற்றும்; மேலும் அந்த அறிவு பகைவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் அரண் போல விளங்கும்."
" ஐயா! இப்போது எப்படி நம்மைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் ? அதைச் சொல்லுங்கள் !"
உடனே தத்துவஞானி ஓடக்காரனைப் பார்த்து," தம்பி ! படகின் மூலையிலே இருக்கின்ற அந்த நான்கு தகர பீப்பாய்கள் காலியாகத்தானே உள்ளன ? "
" ஆம் ஐயா ! காலியாகத்தான் உள்ளன. "
" அப்படியானால் அதன் வாயிலே இருக்கின்ற மூடியைக் காற்றுப் புகாவண்ணம் இறுக மூடி, அந்த நான்கு பீப்பாய்களையும் பக்கவாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, கயிற்றினால் இறுகக் கட்டு. "
ஓடக்காரனும், நானும் விரைவாக அந்தப் பணியைச் செய்து முடித்தோம்.
" அப்படியே அந்த நான்கு பீப்பாய்களையும் மெதுவாக ஆற்றினுள் இறக்குங்கள்! "
நாங்கள் பீப்பாய்களை ஆற்றினுள் இறக்குவதற்கும், படகு மூழ்குவதற்கும் சரியாக இருந்தது. ஒன்றாகக் கட்டிய பீப்பாய்கள் படகுபோல மிதந்தன. நாங்கள் மூவரும் தட்டுத்தடுமாறி பீப்பாய்கள் மேலே ஏறி அமர்ந்தோம்.பிறகு ஓடக்காரனின் துணையோடு பத்திரமாகக் கரை சேர்ந்தோம்.
ஓட்டைப் படகு.
============
காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாகப் பீரிட்டு வந்தது; முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இருந்த துணியும் பிடுங்கிக்கொண்டது. ஆக நான்கு ஓட்டைகள் வழியாக தண்ணீர் வேகமாக உள்ளே வந்துகொண்டிருந்தது. படகோட்டி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த தத்துவ ஞானி,
"ஓட்டைப்படகிலே மூன்று ஓட்டைப் படகுகள் ஏறிவிட்டன . " என்றார்.
" ஐயா ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? "
" தம்பி ! மனித உடம்பு ஒன்பது ஓட்டைகள் உள்ள படகுதானே ! அதைக் குறிப்பிட்டேன் ! "
" ஐயா ! தத்துவம் பேசுவதற்கு இது நேரம் அல்ல! படகு மூழ்கிக்கொண்டு இருக்கிறது; நாம் மூவரும் தப்பிக்க ஏதாவது வழியுண்டா ? அதைச் சொல்லுங்கள் !"
" தம்பி ! நம்முடைய வாழ்க்கையே ஒரு கடல் போன்றது. இந்தக் கடலைக் கடக்கவேண்டும் என்றால் , நாம் ஏறிச்செல்லும் படகிலே ஓட்டைகள் இருக்கக் கூடாது. முக்கியமாக நான்கு ஓட்டைகள் இருக்கக்கூடாது. அதாவது தாமதம், மறதி, சோம்பேறித்தனம், தூக்கம் ஆகிய நான்கு ஓட்டைகள் இருக்கக் கூடாது ; அவ்வாறு இருந்தால் நடுவழியிலேயே படகு கவிழ்ந்துவிடும். இதை நான் சொல்லவில்லை ; வள்ளுவர் சொல்லுகிறார்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ( மடியின்மை- 606 )
" ஐயா ! அவசரம் தெரியாமல் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ! திருக்குறள் கேட்பதற்கு இது நேரம் அல்ல. நாம் சாகப் போகிறோம்; தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்! வெட்டிப்பேச்சு வேண்டாம். "
" நாம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கும் வள்ளுவர் ஒரு வழி சொல்லுகிறார் ! "
" அது என்ன வழி ? "
" அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை-421 )
அதாவது , அறிவு இருந்தால் , அது நம்மை மரணத்திலிருந்து கூடக் காப்பாற்றும்; மேலும் அந்த அறிவு பகைவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் அரண் போல விளங்கும்."
" ஐயா! இப்போது எப்படி நம்மைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் ? அதைச் சொல்லுங்கள் !"
உடனே தத்துவஞானி ஓடக்காரனைப் பார்த்து," தம்பி ! படகின் மூலையிலே இருக்கின்ற அந்த நான்கு தகர பீப்பாய்கள் காலியாகத்தானே உள்ளன ? "
" ஆம் ஐயா ! காலியாகத்தான் உள்ளன. "
" அப்படியானால் அதன் வாயிலே இருக்கின்ற மூடியைக் காற்றுப் புகாவண்ணம் இறுக மூடி, அந்த நான்கு பீப்பாய்களையும் பக்கவாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, கயிற்றினால் இறுகக் கட்டு. "
ஓடக்காரனும், நானும் விரைவாக அந்தப் பணியைச் செய்து முடித்தோம்.
" அப்படியே அந்த நான்கு பீப்பாய்களையும் மெதுவாக ஆற்றினுள் இறக்குங்கள்! "
நாங்கள் பீப்பாய்களை ஆற்றினுள் இறக்குவதற்கும், படகு மூழ்குவதற்கும் சரியாக இருந்தது. ஒன்றாகக் கட்டிய பீப்பாய்கள் படகுபோல மிதந்தன. நாங்கள் மூவரும் தட்டுத்தடுமாறி பீப்பாய்கள் மேலே ஏறி அமர்ந்தோம்.பிறகு ஓடக்காரனின் துணையோடு பத்திரமாகக் கரை சேர்ந்தோம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு சமயம் ஒரு மன்னன் ஒரு போட்டி வைத்தான்.நிறத்திலும்,உருவத்திலும் ஒத்த இரண்டு மாடுகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.ஒரு மாடு உண்மையான மாடு.மற்றொன்று போலி. போலியான மாடும்,உண்மையான மாட்டைப் போலவே அங்க அசைவுகளைக் கொண்டிருந்தது..போலியான மாடு எது என்று கண்டுபிடிக்க வேண்டும்.இதுதான் போட்டி.மாட்டைத் தொடக்கூடாது என்பது விதி.
போட்டியில் கலந்து கொண்ட யாராலும் போலியான மாட்டைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
அப்போது ஒரு சிறுவன் மன்னனைப் பார்த்து,"மன்னா என்னால் போலியான மாட்டைக் கண்டுபிடிக்க இயலும்"-என்று சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். "பெரியவர்களாலேயே செய்யமுடியாத ஒன்றை சிறுவனாகிய உன்னால் எப்படிச் செய்ய முடியும்?'-என்று மன்னனும் கேட்டான்.
"மன்னா எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள், என்னால் முடியும்" என்று சிறுவன் மீண்டும் உறுதிபடச் சொன்னான்.
சிறுவனின் உறுதியைக் கண்ட மன்னனும்,"சரி, நீ போட்டியில் கலந்து கொள்ளலாம்" என்று சொன்னான்.அதற்குச் சிறுவன்,"நன்றி மன்னா, எனக்கு இரண்டு சிறிய கற்கள் வேண்டும்"-என்று கேட்டான்.அவ்வாறே இரண்டு கற்கள் சிறுவனிடம் கொடுக்கப்பட்டன.
ஒரு கல்லை எடுத்து ஒரு மாட்டின் மேல் எறிந்தான்.கல் பட்ட இடத்தில் எந்த அசைவும் இல்லை.மற்றொரு மாட்டின் மீது மற்றொரு கல்லை எறிந்தான்.கல் பட்ட இடத்தை மட்டும் அந்த மாடு அசைத்துக் காட்டியது.அந்த மாடே உண்மையான மாடு என்று அந்த சிறுவன் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிசயித்தனர்.ஏனென்றால் அதுதான் உண்மையான மாடு.
அரசன் சிறுவனிடம் ,"எப்படி உண்மையான மாட்டைக் கண்டறிந்தாய்?"-எனக்கேட்க,"மன்னா நான் ஒரு இடையன். ஆடு, மாடுகளை மேய்ப்பவன்.தொட்ட இடத்தை அசைத்துக் காட்டும் தன்மை மாடுகளுக்கு உண்டு.போலி மாடுகளால் அவ்வாறு செய்ய இயலாது" என்று கூறினான்.
அவனது மதி நுட்பத்தைக் கண்டு வியந்த மன்னன்,"அமைச்சர்களே இவனது மதி நுட்பம் வியக்கத் தக்கதாய் உள்ளது.இவனது மதி நுட்பத்தை நாம் பயன் படுத்திக் கொள்ளவேண்டும்.இவனுக்கு அமைச்சரவையில் தக்க பதவி ஒன்றைக் கொடுக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.உங்களுடைய கருத்தைத் தெரிவியுங்கள்"-என்று கேட்டார். அதற்கு அமைச்சர்கள்,"ஆடு மாடுகளை மேய்க்கும் ஒரு சிறுவனுக்கு இருக்க வேண்டிய அறிவுதான் அவனிடத்தில் உள்ளது.மாடாளும் அறிவு நாடாள உதவாது.எனவே தங்களுடைய கருத்தை நாங்கள் ஏற்க இயலாது"-என்று கூறிவிட்டனர்.
கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
என்பது குறள்.
படிக்காதவனுடைய அறிவு எவ்வளவுதான் மேம்பட்டு இருந்தாலும், அறிவுடையவர்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது இக்குறளின் பொருள்.
எடிசன், ஜி.டி.நாயுடு போன்ற பெருமக்களை அறிவியல் அறிஞராக இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை.நியூட்டன்,ஆர்க்கிமிடிஸ் போன்ற பெரு மக்களையே அறிவியல் அறிஞராக இந்த உலகம் ஏற்றுக்கொண்டது.ஏனென்றால் பல கண்டு பிடிப்புகளுக்கு வழிகோலும் அறிவியல் விதி ஒன்றை அவர்கள் வகுத்துக் கொடுத்தார்கள்.
போட்டியில் கலந்து கொண்ட யாராலும் போலியான மாட்டைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
அப்போது ஒரு சிறுவன் மன்னனைப் பார்த்து,"மன்னா என்னால் போலியான மாட்டைக் கண்டுபிடிக்க இயலும்"-என்று சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். "பெரியவர்களாலேயே செய்யமுடியாத ஒன்றை சிறுவனாகிய உன்னால் எப்படிச் செய்ய முடியும்?'-என்று மன்னனும் கேட்டான்.
"மன்னா எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள், என்னால் முடியும்" என்று சிறுவன் மீண்டும் உறுதிபடச் சொன்னான்.
சிறுவனின் உறுதியைக் கண்ட மன்னனும்,"சரி, நீ போட்டியில் கலந்து கொள்ளலாம்" என்று சொன்னான்.அதற்குச் சிறுவன்,"நன்றி மன்னா, எனக்கு இரண்டு சிறிய கற்கள் வேண்டும்"-என்று கேட்டான்.அவ்வாறே இரண்டு கற்கள் சிறுவனிடம் கொடுக்கப்பட்டன.
ஒரு கல்லை எடுத்து ஒரு மாட்டின் மேல் எறிந்தான்.கல் பட்ட இடத்தில் எந்த அசைவும் இல்லை.மற்றொரு மாட்டின் மீது மற்றொரு கல்லை எறிந்தான்.கல் பட்ட இடத்தை மட்டும் அந்த மாடு அசைத்துக் காட்டியது.அந்த மாடே உண்மையான மாடு என்று அந்த சிறுவன் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிசயித்தனர்.ஏனென்றால் அதுதான் உண்மையான மாடு.
அரசன் சிறுவனிடம் ,"எப்படி உண்மையான மாட்டைக் கண்டறிந்தாய்?"-எனக்கேட்க,"மன்னா நான் ஒரு இடையன். ஆடு, மாடுகளை மேய்ப்பவன்.தொட்ட இடத்தை அசைத்துக் காட்டும் தன்மை மாடுகளுக்கு உண்டு.போலி மாடுகளால் அவ்வாறு செய்ய இயலாது" என்று கூறினான்.
அவனது மதி நுட்பத்தைக் கண்டு வியந்த மன்னன்,"அமைச்சர்களே இவனது மதி நுட்பம் வியக்கத் தக்கதாய் உள்ளது.இவனது மதி நுட்பத்தை நாம் பயன் படுத்திக் கொள்ளவேண்டும்.இவனுக்கு அமைச்சரவையில் தக்க பதவி ஒன்றைக் கொடுக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.உங்களுடைய கருத்தைத் தெரிவியுங்கள்"-என்று கேட்டார். அதற்கு அமைச்சர்கள்,"ஆடு மாடுகளை மேய்க்கும் ஒரு சிறுவனுக்கு இருக்க வேண்டிய அறிவுதான் அவனிடத்தில் உள்ளது.மாடாளும் அறிவு நாடாள உதவாது.எனவே தங்களுடைய கருத்தை நாங்கள் ஏற்க இயலாது"-என்று கூறிவிட்டனர்.
கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
என்பது குறள்.
படிக்காதவனுடைய அறிவு எவ்வளவுதான் மேம்பட்டு இருந்தாலும், அறிவுடையவர்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது இக்குறளின் பொருள்.
எடிசன், ஜி.டி.நாயுடு போன்ற பெருமக்களை அறிவியல் அறிஞராக இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை.நியூட்டன்,ஆர்க்கிமிடிஸ் போன்ற பெரு மக்களையே அறிவியல் அறிஞராக இந்த உலகம் ஏற்றுக்கொண்டது.ஏனென்றால் பல கண்டு பிடிப்புகளுக்கு வழிகோலும் அறிவியல் விதி ஒன்றை அவர்கள் வகுத்துக் கொடுத்தார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1151224M.Jagadeesan wrote:சாவதே மேல் , நேர்காணல் ,திருடன் ,நோய் கொடுத்த டாக்டர் , பெருசும் சிறுசும் , துளசியோட கதைய முடிச்சுடுங்க ஆகிய கதைகளைப் படித்துப் பாராட்டிய கிருஷ்ணம்மா அவர்களுக்கு நன்றி .
நன்றி ஐயா, இன்று உட்கார்ந்து எல்லாத்தையும் படித்தேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" என்ன முனியா? கையெல்லாம் இரத்தம்? " என்று கேட்டார் தணிகாசலம்.
" ஐயா! வாசலின் அருகே வளர்ந்திருந்த முள் மரத்தை வெட்டும்போது கையைக் கிழித்துவிட்டது." என்று சொன்னான் முனியன்.
' இதுக்குத்தான் அது செடியாக இருக்கும்போதே வெட்டிவிடு என்று சொன்னேன்; நீதான் கேட்கவில்லை. நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய செடியைக் கோடரி கொண்டு வெட்டும்படி செய்துவிட்டாய்! அதனால்தான் அது உன் கையைக் கிழித்துவிட்டது. எப்போதும் ஒரு தீமையை , அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும். தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்; ஞாபகத்தில் வைத்துக்கொள்." என்று முனியனுக்கு அறிவுரை வழங்கினார்.
பேசிக்கொண்டே இருந்த தணிகாசலம் திடீரென்று இருமத் தொடங்கினார். நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு இருமிக் கொண்டே வாஷ்பேஸின் அருகில் சென்றார். வாஷ்பேஸினில் எச்சிலைத் துப்பினார். அவர் துப்பிய எச்சிலில் இரத்தம் கலந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்பாவின் இருமல் சத்தம் கேட்டு அங்கு வந்த கீதா , அப்பா துப்பிய எச்சிலில் இரத்தம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
" என்ன அப்பா இது? குடிக்கவேண்டாம் என்று டாக்டர் பலமுறை சொல்லியும் கேட்காமல் குடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்; வியாதியை முற்ற விட்டுவிட்டீர்கள். இப்போது பார்த்தீர்களா?நீங்கள் இருமும்போது இரத்தம் வருகிறது. முனியனுக்கு நீங்கள் கூறிய அறிவுரை உங்களுக்கும் பொருந்தும்.எப்போதும் ஒரு தீமையை, அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும்;தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்." என்றால் கீதா.
கீதா சொல்லி முடிக்கும் முன்பாக , அவளுடைய அம்மா அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள். " பாவி மகளே! +2 தேர்வில் நீ எல்லாப் பாடத்திலும் பெயிலாகி விட்டாய் ; இப்பதான் இன்டர்நெட்டில் உன்னுடைய ரிசல்டைப் பார்த்தேன்; எதிர் வீட்டுப் பையனுடன் காதல், கத்திரிக்காய் என்று அலையாதேன்னு தலபாடாய் அடிச்சுகிட்டேனே! கேட்டாயா நீ! இந்த லட்சணத்துல அப்பாவுக்கு அறிவுரை சொல்ல வந்துட்டா! அப்பாவுக்கு நீ சொன்ன அறிவுரை உனக்கும் பொருந்தும். ஒரு தீமையை , அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும்; தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.ஞாபகத்தில் வைத்துக்கொள். " என்று கீதாவின் அம்மா பொரிந்து தள்ளினாள்.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. ( பகைத் திறந் தெரிதல் -879 )
முட்செடியை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்;அது முற்றி வயிரம் பாய்ந்துவிட்டால், வெட்டுபவனின் கையைத் தைத்துத் துன்பப்படுத்தும்.
" ஐயா! வாசலின் அருகே வளர்ந்திருந்த முள் மரத்தை வெட்டும்போது கையைக் கிழித்துவிட்டது." என்று சொன்னான் முனியன்.
' இதுக்குத்தான் அது செடியாக இருக்கும்போதே வெட்டிவிடு என்று சொன்னேன்; நீதான் கேட்கவில்லை. நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய செடியைக் கோடரி கொண்டு வெட்டும்படி செய்துவிட்டாய்! அதனால்தான் அது உன் கையைக் கிழித்துவிட்டது. எப்போதும் ஒரு தீமையை , அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும். தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்; ஞாபகத்தில் வைத்துக்கொள்." என்று முனியனுக்கு அறிவுரை வழங்கினார்.
பேசிக்கொண்டே இருந்த தணிகாசலம் திடீரென்று இருமத் தொடங்கினார். நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு இருமிக் கொண்டே வாஷ்பேஸின் அருகில் சென்றார். வாஷ்பேஸினில் எச்சிலைத் துப்பினார். அவர் துப்பிய எச்சிலில் இரத்தம் கலந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்பாவின் இருமல் சத்தம் கேட்டு அங்கு வந்த கீதா , அப்பா துப்பிய எச்சிலில் இரத்தம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
" என்ன அப்பா இது? குடிக்கவேண்டாம் என்று டாக்டர் பலமுறை சொல்லியும் கேட்காமல் குடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்; வியாதியை முற்ற விட்டுவிட்டீர்கள். இப்போது பார்த்தீர்களா?நீங்கள் இருமும்போது இரத்தம் வருகிறது. முனியனுக்கு நீங்கள் கூறிய அறிவுரை உங்களுக்கும் பொருந்தும்.எப்போதும் ஒரு தீமையை, அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும்;தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்." என்றால் கீதா.
கீதா சொல்லி முடிக்கும் முன்பாக , அவளுடைய அம்மா அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள். " பாவி மகளே! +2 தேர்வில் நீ எல்லாப் பாடத்திலும் பெயிலாகி விட்டாய் ; இப்பதான் இன்டர்நெட்டில் உன்னுடைய ரிசல்டைப் பார்த்தேன்; எதிர் வீட்டுப் பையனுடன் காதல், கத்திரிக்காய் என்று அலையாதேன்னு தலபாடாய் அடிச்சுகிட்டேனே! கேட்டாயா நீ! இந்த லட்சணத்துல அப்பாவுக்கு அறிவுரை சொல்ல வந்துட்டா! அப்பாவுக்கு நீ சொன்ன அறிவுரை உனக்கும் பொருந்தும். ஒரு தீமையை , அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும்; தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.ஞாபகத்தில் வைத்துக்கொள். " என்று கீதாவின் அம்மா பொரிந்து தள்ளினாள்.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. ( பகைத் திறந் தெரிதல் -879 )
முட்செடியை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்;அது முற்றி வயிரம் பாய்ந்துவிட்டால், வெட்டுபவனின் கையைத் தைத்துத் துன்பப்படுத்தும்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
என்நண்பர் பஜாரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கும் கடை வைத்திருந்தார். கடைக்கு USE AND THROW என்று பெயர் வைத்திருந்தார். நண்பரைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. எனவே அவரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டேன்.
நண்பருடைய பெயர் ஆராவமுதன். என்னைப் பார்த்தவுடன் முகமலர்ச்சியுடன் வரவேற்றார். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது ஒரு வாடிக்கையாளர் வந்தார்.
" சார்! இந்த Mother board ல் Display வரவில்லை .கொஞ்சம் சர்வீஸ் செய்து தரமுடியுமா?" என்று அவர் கேட்டார்.
நண்பர் அந்த மதர்போர்டை வாங்கிப் பார்த்தார். " சார்! வாரண்டி பீரியட் இருந்ததுன்னா , வாங்குன கடையில பில்லைக் கொடுத்து வேற ஒரு மதர்போர்டு வாங்கிடுங்க; இல்லைன்னா புதுசா ஒன்னு வாங்குறதுதான் நல்லது.இத சர்வீஸ் பண்றது வேஸ்ட் சார்!.இது ரொம்ப பழைய மதர்போர்டு சார். இப்ப டெக்னாலஜி ரொம்பவும் மாறிடிச்சி சார்! எல்லாமே இன்பில்ட்டா வந்துடிச்சி; எனவே இதக் கடாசி எறிஞ்சிட்டு வேற ஒன்னு புதுசா வாங்கிடுங்க! எலக்ட்ரானிக்ஸ் ஐட்டம் எல்லாமே USE AND THROW Concept தான் சார்! கெட்டுப் போச்சுன்னா வேற ஒன்னு வாங்குறதுதான் நல்லது. அதனாலதான் என் கடைக்குக் கூட USE AND THROW ன்னு பேர் வச்சிருக்கேன்."
வாடிக்கையாளர் சென்றுவிட்டார். நான் நண்பரைப் பார்த்து," அமுதன் சார்! அப்ப நான் போயிட்டு வரேன். அப்பா அம்மாவைக் கேட்டதா சொல்லுங்க.அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்காங்களா?" என்று கேட்டேன்.
அதற்கு நண்பர்," அவங்களப் பார்த்து ஆறு மாசம் ஆச்சு! " என்றார்.
நான் பதட்டத்துடன் , " ஏன்? என்ன ஆச்சு ?" என்று கேட்க
," என் மனைவிக்கும் , என் பெற்றோர்களுக்கும் ஒத்து வரவில்லை; அதனால அவங்கள முதியோர் இல்லத்துல சேத்துட்டேன்." என்று நண்பர் பதில் சொன்னார்.
இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன்.
நண்பரைப் பார்த்து, " அமுதன்! தப்பு பண்ணிட்டீங்க! உங்களப் பெத்து வளர்த்து ஆளாக்கி இந்த நிலைக்குக் கொண்டு வந்தவங்கள சர்வ சாதரணமா தூக்கி எறிஞ்சிட்டீங்க! உங்க USE AND THROW concept ஐ உங்களுடைய பெற்றோர்கள் விஷயத்திலும் காட்டிட்டீங்க! நாளைக்கு உங்க பையனும் இதே USE AND THROW Cocept-ஐ உங்க கிட்ட காட்டுவான் " என்றேன்
நான் கூறியதைக்கேட்ட நண்பர், தலை நிமிர்ந்து பார்க்காமலேயே எனக்கு விடை கொடுத்தார்.
நண்பருடைய பெயர் ஆராவமுதன். என்னைப் பார்த்தவுடன் முகமலர்ச்சியுடன் வரவேற்றார். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது ஒரு வாடிக்கையாளர் வந்தார்.
" சார்! இந்த Mother board ல் Display வரவில்லை .கொஞ்சம் சர்வீஸ் செய்து தரமுடியுமா?" என்று அவர் கேட்டார்.
நண்பர் அந்த மதர்போர்டை வாங்கிப் பார்த்தார். " சார்! வாரண்டி பீரியட் இருந்ததுன்னா , வாங்குன கடையில பில்லைக் கொடுத்து வேற ஒரு மதர்போர்டு வாங்கிடுங்க; இல்லைன்னா புதுசா ஒன்னு வாங்குறதுதான் நல்லது.இத சர்வீஸ் பண்றது வேஸ்ட் சார்!.இது ரொம்ப பழைய மதர்போர்டு சார். இப்ப டெக்னாலஜி ரொம்பவும் மாறிடிச்சி சார்! எல்லாமே இன்பில்ட்டா வந்துடிச்சி; எனவே இதக் கடாசி எறிஞ்சிட்டு வேற ஒன்னு புதுசா வாங்கிடுங்க! எலக்ட்ரானிக்ஸ் ஐட்டம் எல்லாமே USE AND THROW Concept தான் சார்! கெட்டுப் போச்சுன்னா வேற ஒன்னு வாங்குறதுதான் நல்லது. அதனாலதான் என் கடைக்குக் கூட USE AND THROW ன்னு பேர் வச்சிருக்கேன்."
வாடிக்கையாளர் சென்றுவிட்டார். நான் நண்பரைப் பார்த்து," அமுதன் சார்! அப்ப நான் போயிட்டு வரேன். அப்பா அம்மாவைக் கேட்டதா சொல்லுங்க.அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்காங்களா?" என்று கேட்டேன்.
அதற்கு நண்பர்," அவங்களப் பார்த்து ஆறு மாசம் ஆச்சு! " என்றார்.
நான் பதட்டத்துடன் , " ஏன்? என்ன ஆச்சு ?" என்று கேட்க
," என் மனைவிக்கும் , என் பெற்றோர்களுக்கும் ஒத்து வரவில்லை; அதனால அவங்கள முதியோர் இல்லத்துல சேத்துட்டேன்." என்று நண்பர் பதில் சொன்னார்.
இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன்.
நண்பரைப் பார்த்து, " அமுதன்! தப்பு பண்ணிட்டீங்க! உங்களப் பெத்து வளர்த்து ஆளாக்கி இந்த நிலைக்குக் கொண்டு வந்தவங்கள சர்வ சாதரணமா தூக்கி எறிஞ்சிட்டீங்க! உங்க USE AND THROW concept ஐ உங்களுடைய பெற்றோர்கள் விஷயத்திலும் காட்டிட்டீங்க! நாளைக்கு உங்க பையனும் இதே USE AND THROW Cocept-ஐ உங்க கிட்ட காட்டுவான் " என்றேன்
நான் கூறியதைக்கேட்ட நண்பர், தலை நிமிர்ந்து பார்க்காமலேயே எனக்கு விடை கொடுத்தார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
Use & throw ,
தற்காலத்தில் நடக்கும் அலங்கோலங்களில் இதுவும் ஒரு அங்கம் .
ரமணியன்
பிகு : தமிழ்களஞ்சியத்தில் ஆங்கில தலைப்பு வேண்டாமே என்பதால் ,
தமிழாக்கத்துடன் மாற்றப்பட்டுள்ளது .
ர...ன்
தற்காலத்தில் நடக்கும் அலங்கோலங்களில் இதுவும் ஒரு அங்கம் .
![எனது கதைகள் -- - Page 5 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![எனது கதைகள் -- - Page 5 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
ரமணியன்
பிகு : தமிழ்களஞ்சியத்தில் ஆங்கில தலைப்பு வேண்டாமே என்பதால் ,
தமிழாக்கத்துடன் மாற்றப்பட்டுள்ளது .
ர...ன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி இரமணியன் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சோமுவும், ராமுவும் ஒரே ஊரினர் ; ஒரே வயதினர்; நெருங்கிய நண்பர்கள். நீண்டகாலம் அரசுப் பணியிலிருந்து, தற்போது ஓய்வுபெற்று வீட்டில் இருக்கின்றனர். இருவருக்கும் வயது 65 ஆகிறது. இதுநாள்வரையில் அவர்களுடைய கால்கள் தமிழ்நாட்டைத் தாண்டியதில்லை. வடஇந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளையும், கோவில்களையும் பார்த்து வரவேண்டும் என்று ஆவல் கொண்டனர். எனவே சுற்றுலா நிறுவனம் ஒன்றில் தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்துகொண்டனர்.
இன்றிரவு பத்து மணிக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து வண்டி புறப்படுகிறது. பக்கத்துத் தெருவிலிருக்கும் தன் நண்பர் ராமுவைப் பார்த்துவர , சோமு புறப்பட்டார். சோமுவைப் பார்த்தவுடன், ராமு
' வா! சோமு! நானே வரலாம்னு நினச்சுகிட்டு இருந்தேன்; நல்லவேளை நீயே வந்துட்டே! இப்படி உட்காரு! காபி சாப்பிடறயா?"
" ஒரு கப் சூடா கொண்டு வரச் சொல்லு!"
" அம்மா! மாலதி! சோமு வந்திருக்கார்! காபி கொண்டு வாம்மா!"
" இதோ கொண்டுவரேன் அப்பா !"
மாலதி , ராமுவின் ஒரே மகள். மாலதி கொண்டுவந்த காபியைப் பருகிக் கொண்டே சோமு பேசத் தொடங்கினார்.
" என்னப்பா! ராமு! மாலதிக்கு வரன் ஏதும் பாக்கலியா? "
" இல்ல சோமு , அவளுக்கு வயசு இருபத்தஞ்சு தானே ஆகுது! இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்; அவ கல்யாணத்துக்கு முன்னாடி வீட்ட இடிச்சிக் கட்டனும்;வீடு கட்றதுக்காக லோனுக்கு அப்ளை பண்ணியிருந்தேன் ; பத்து லட்சம் சாங்க்ஷன் ஆகியிருக்கு! பத்து வருஷத்துல லோனைக் கட்டி முடிக்கணும். மாலதிக்குக் கல்யாணம் முடிஞ்ச கையோட கார் ஒன்னு வாங்கலாம்னு இருக்கேன்; நாலு இடத்த சுத்திப் பாக்க வசதியா இருக்கும்ல? நீ என்ன சொல்றே?"
" ராமு! நீ சொல்றதப் பாத்தா, நீ புறப்படத் தயாரா இல்ல போலிருக்கே?"
" என்னப்பா சோமு அப்படிச் சொல்லிட்டே? இத பாரு ! இந்த சூட்கேசுல எல்லாம் எடுத்து வச்சிட்டேன்; பத்து நாள் பயணத்துக்குத்
தேவையான துணிமணிகள், ஸ்வெட்டர், சோப்பு, சீப்பு, பவுடர், கண்ணாடி,மருந்து மாத்திரைகள், ATM கார்டு , ரேஷன் கார்டு ஜெராக்ஸ் காபி எல்லாம் எடுத்து வச்சிட்டேன் ! அது சரி ! நீ எப்படி? Are you ready for the journey ?"
" ராமு! என்னோட ஒரே பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டேன்;ரெண்டு மகன்களுக்கும் சொத்தைப் பாகம் பிரிச்சு எழுதி ரிஜிஸ்தர் பண்ணிட்டேன்; எனக்கு ஒரு பைசாக் கடன் கிடையாது; என்னோட இறுதிச் சடங்குச் செலவுக்குக் கூட ஐம்பதாயிரம் ரூபாய வீட்ல ரெடியா வச்சி இருக்கேன்;எது எப்படி செய்யனும்னு பசங்களுக்கு சொல்லிக் கொடுத்திட்டேன்."
" என்னப்பா சோமு! நான் ஒன்னு கேட்டா ; நீ ஒன்னு பதில் சொல்றே?"
" இல்ல ராமு! நான் எந்தப் பயணத்துக்கும் ரெடின்னு சொல்ல வந்தேன்."
இன்றிரவு பத்து மணிக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து வண்டி புறப்படுகிறது. பக்கத்துத் தெருவிலிருக்கும் தன் நண்பர் ராமுவைப் பார்த்துவர , சோமு புறப்பட்டார். சோமுவைப் பார்த்தவுடன், ராமு
' வா! சோமு! நானே வரலாம்னு நினச்சுகிட்டு இருந்தேன்; நல்லவேளை நீயே வந்துட்டே! இப்படி உட்காரு! காபி சாப்பிடறயா?"
" ஒரு கப் சூடா கொண்டு வரச் சொல்லு!"
" அம்மா! மாலதி! சோமு வந்திருக்கார்! காபி கொண்டு வாம்மா!"
" இதோ கொண்டுவரேன் அப்பா !"
மாலதி , ராமுவின் ஒரே மகள். மாலதி கொண்டுவந்த காபியைப் பருகிக் கொண்டே சோமு பேசத் தொடங்கினார்.
" என்னப்பா! ராமு! மாலதிக்கு வரன் ஏதும் பாக்கலியா? "
" இல்ல சோமு , அவளுக்கு வயசு இருபத்தஞ்சு தானே ஆகுது! இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்; அவ கல்யாணத்துக்கு முன்னாடி வீட்ட இடிச்சிக் கட்டனும்;வீடு கட்றதுக்காக லோனுக்கு அப்ளை பண்ணியிருந்தேன் ; பத்து லட்சம் சாங்க்ஷன் ஆகியிருக்கு! பத்து வருஷத்துல லோனைக் கட்டி முடிக்கணும். மாலதிக்குக் கல்யாணம் முடிஞ்ச கையோட கார் ஒன்னு வாங்கலாம்னு இருக்கேன்; நாலு இடத்த சுத்திப் பாக்க வசதியா இருக்கும்ல? நீ என்ன சொல்றே?"
" ராமு! நீ சொல்றதப் பாத்தா, நீ புறப்படத் தயாரா இல்ல போலிருக்கே?"
" என்னப்பா சோமு அப்படிச் சொல்லிட்டே? இத பாரு ! இந்த சூட்கேசுல எல்லாம் எடுத்து வச்சிட்டேன்; பத்து நாள் பயணத்துக்குத்
தேவையான துணிமணிகள், ஸ்வெட்டர், சோப்பு, சீப்பு, பவுடர், கண்ணாடி,மருந்து மாத்திரைகள், ATM கார்டு , ரேஷன் கார்டு ஜெராக்ஸ் காபி எல்லாம் எடுத்து வச்சிட்டேன் ! அது சரி ! நீ எப்படி? Are you ready for the journey ?"
" ராமு! என்னோட ஒரே பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டேன்;ரெண்டு மகன்களுக்கும் சொத்தைப் பாகம் பிரிச்சு எழுதி ரிஜிஸ்தர் பண்ணிட்டேன்; எனக்கு ஒரு பைசாக் கடன் கிடையாது; என்னோட இறுதிச் சடங்குச் செலவுக்குக் கூட ஐம்பதாயிரம் ரூபாய வீட்ல ரெடியா வச்சி இருக்கேன்;எது எப்படி செய்யனும்னு பசங்களுக்கு சொல்லிக் கொடுத்திட்டேன்."
" என்னப்பா சோமு! நான் ஒன்னு கேட்டா ; நீ ஒன்னு பதில் சொல்றே?"
" இல்ல ராமு! நான் எந்தப் பயணத்துக்கும் ரெடின்னு சொல்ல வந்தேன்."
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
யானைக்கும் அடி சறுக்கும்.
====================
டேய் ! பாஸ்கரா! பரீட்சையில நீ பெயிலாயிட்டியாமே?
ஆமாம் பாட்டி! அடுத்த தடவை எழுதும்போது பாசாயிடுவேன்!
நம்ம வீட்ல இதுவரைக்கும் யாரும் பெயிலானது கிடையாது; நீதான் முதல் தடவையா பெயிலாயிருக்கே!
பரீட்சையில கேள்வி எல்லாம் கொஞ்சம் கஷ்டமா கேட்டுட்டாங்க! அதான் பெயிலாயிட்டேன்; அடுத்த தடவை எழுதும்போது நிச்சயம் பாசாயிடுவேன் பாட்டி!
உடனே அங்கு வந்த அம்மா,பாட்டியிடம், " பரீட்சை சமயத்துல இவன் கிரிக்கெட் மேட்ச் பாத்துக்கிட்டு இருந்தா எப்படி பாசாக முடியும்? நாம சீரியல் பாக்க விடாம நம்ம வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டான். அதான் பெயிலாயிட்டான்; இவன் பெயிலாயிட்டான்னு வெளியில சொன்னா வெட்கக்கேடு!"
அப்போது அங்குவந்த பாஸ்கருடைய அக்கா," நம்ம வீட்டுக் குழந்தைங்க பரீட்சையில மார்க்கு கம்மியா வாங்குனா ," தண்டச்சோறு, மக்கு பிளாஸ்திரி,எருமைமாடு அப்பிடி,இப்பிடின்னு திட்டுவான் .இப்ப இவனே பெயிலாயிட்டானே ! முகத்த எங்ககொண்டு போயி வச்சுக்குவான்னு தெரியலையே! அம்மா ! இந்த லட்சணத்துல இவன் பரீட்சை எழுதும்போது பிட்டு வேற அடிச்சிருக்கான்; இவனோட பிரண்ட் மாதவன் சொன்னான்; நேத்து அவனைக் கடை வீதியில பாத்தேன்; அப்ப அவன் சொன்னான்."
இதைக்கேட்ட பாட்டி,தலையிலடித்துக் கொண்டே, " கருமம்! கருமம் ! பிட்டு வேற அடிச்சானா? அட ஈஸ்வரா! இதக் கேட்டு இன்னும் நான் உயிரோட இருக்கேனே? என்னைக் கொண்டு போயிடப்பா! " என்று புலம்பினாள்.
M. A. தேர்வில் பெயிலான பட்டதாரி ஆசிரியரான பாஸ்கர் , தன்னுடைய ஆத்திரத்தை எல்லாம் தன்னுடைய பைக்கின் மீது காட்டி பலமாக உதைத்தார். பள்ளிக்குப் புறப்பட்டார்.
====================
டேய் ! பாஸ்கரா! பரீட்சையில நீ பெயிலாயிட்டியாமே?
ஆமாம் பாட்டி! அடுத்த தடவை எழுதும்போது பாசாயிடுவேன்!
நம்ம வீட்ல இதுவரைக்கும் யாரும் பெயிலானது கிடையாது; நீதான் முதல் தடவையா பெயிலாயிருக்கே!
பரீட்சையில கேள்வி எல்லாம் கொஞ்சம் கஷ்டமா கேட்டுட்டாங்க! அதான் பெயிலாயிட்டேன்; அடுத்த தடவை எழுதும்போது நிச்சயம் பாசாயிடுவேன் பாட்டி!
உடனே அங்கு வந்த அம்மா,பாட்டியிடம், " பரீட்சை சமயத்துல இவன் கிரிக்கெட் மேட்ச் பாத்துக்கிட்டு இருந்தா எப்படி பாசாக முடியும்? நாம சீரியல் பாக்க விடாம நம்ம வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டான். அதான் பெயிலாயிட்டான்; இவன் பெயிலாயிட்டான்னு வெளியில சொன்னா வெட்கக்கேடு!"
அப்போது அங்குவந்த பாஸ்கருடைய அக்கா," நம்ம வீட்டுக் குழந்தைங்க பரீட்சையில மார்க்கு கம்மியா வாங்குனா ," தண்டச்சோறு, மக்கு பிளாஸ்திரி,எருமைமாடு அப்பிடி,இப்பிடின்னு திட்டுவான் .இப்ப இவனே பெயிலாயிட்டானே ! முகத்த எங்ககொண்டு போயி வச்சுக்குவான்னு தெரியலையே! அம்மா ! இந்த லட்சணத்துல இவன் பரீட்சை எழுதும்போது பிட்டு வேற அடிச்சிருக்கான்; இவனோட பிரண்ட் மாதவன் சொன்னான்; நேத்து அவனைக் கடை வீதியில பாத்தேன்; அப்ப அவன் சொன்னான்."
இதைக்கேட்ட பாட்டி,தலையிலடித்துக் கொண்டே, " கருமம்! கருமம் ! பிட்டு வேற அடிச்சானா? அட ஈஸ்வரா! இதக் கேட்டு இன்னும் நான் உயிரோட இருக்கேனே? என்னைக் கொண்டு போயிடப்பா! " என்று புலம்பினாள்.
M. A. தேர்வில் பெயிலான பட்டதாரி ஆசிரியரான பாஸ்கர் , தன்னுடைய ஆத்திரத்தை எல்லாம் தன்னுடைய பைக்கின் மீது காட்டி பலமாக உதைத்தார். பள்ளிக்குப் புறப்பட்டார்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஜானு
=====
கதவு தட்டும் ஓசை கேட்டது.
கதவைத் திறந்தது ஜானு.பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி நின்று கொண்டிருந்தாள்.
" வாங்க மாமி! உள்ள வாங்க!"
" என்ன ஜானு! வீட்டுவேலை எல்லாம் முடிஞ்சுதா?"
" அதை ஏன் மாமி கேக்குறீங்க! இன்னும் ஒழிஞ்சபாடு இல்ல! காலங்காத்தாலே ஐஞ்சு மணிக்கே எழுந்துட்டேன். நான் குளிச்சிமுடிச்ச பிறகு, கிருஷ்ணா குளிக்கிறதுக்கு வெந்நீர் விளாவினேன். அப்புறமா குழந்தைகளக் குளிப்பாட்டி, ட்ரெஸ் பண்ணிவிட்டு,டிபன் சாப்பிடவச்சி ஸ்கூலுக்கு அனுப்புறதுக்குல்ல போதும் போதும்னு ஆயிடறது. அப்புறம் கிருஷ்ணாவுக்கு லஞ்ச் பாக்ஸுல சாப்பாடு எடுத்து வச்சு ஆபீஸுக்கு அனுப்பி வச்சேன். செத்த நேரம் அக்கடான்னு உக்கார முடியல மாமி! அடுத்தாப்ல அழுக்குத் துணியெல்லாம் துவைக்கணும்; பண்ட பாத்திரம் கழுவணும்;ஒரு சீரியல் கூட உக்காந்து பாக்கமுடியல மாமி!'
" இந்தாங்க மாமி! பஜ்ஜி சாப்பிடுங்கோ!" ஜானு கொண்டுவந்து வைத்த பஜ்ஜியை பங்கஜம் மாமி ருசி பார்த்தாள்.
" பஜ்ஜி டேஸ்ட் வித்தியாசமா இருக்கே! என்ன பஜ்ஜி இது? எப்படி பண்ணுனே?"
" இது பலாக்கா பஜ்ஜி மாமி! டி.வி. யில நேத்து கீதா மாமி சொல்லிக் கொடுத்தாங்க! அதன்படி செஞ்சு பாத்தேன். பிரமாதமா இருந்தது. அதான் உங்களுக்கு ரெண்டு வச்சேன்."
" ஏன் ஜானு! இவ்வளவு கஷ்டப்படுறியே! ஒரு வேலைக்காரிய வச்சுகிட்டா என்ன?"
" கிருஷ்ணா வாங்குற சம்பளத்துக்கு வேலக்காரிய வச்சுக்கிறதெல்லாம் கட்டுப்படி ஆகாது மாமி! நாலு வீட்ல வேலை செய்றவங்க; அரக்கபரக்க செய்வாங்க; வேலைல சுத்தம் இருக்காது; கிருஷ்ணாவுக்கும் அது பிடிக்காது."
" என்ன ஜானு! செயின் புதுசா இருக்கே? எப்ப எடுத்தே?"
" நேத்துதான் மாமி! ரொம்ப நாளா கிருஷ்ணா கிட்ட கேட்டுண்டு இருந்தேன்; நேத்து என்னோடபர்த்டே இல்லியோ அதான் நானும் கிருஷ்ணாவும் எடுத்துண்டு வந்தோம்."
" மாமி! மணி ஐஞ்சு ஆறது. நான் ஆபீஸுக்குப் போய் கிருஷ்ணாவை அழச்சுண்டு வரணும்.அப்படியே ஸ்கூலுக்குப் போய் பசங்களையும் அழச்சுண்டு வரணும்."
" சரி ஜானு! நான் ஆத்துக்குப் போறேன்" என்று சொல்லிவிட்டுப் பங்கஜம் மாமி போய் விட்டாள்.
" அவசர அவசரமாக சட்டையையும், பேண்டையும் அணிந்துகொண்டு, தன் மனைவி கிருஷ்ணவேணியையும், குழந்தைகளையும் அழைத்து வருவதற்காக ஜானகிராமன் டூவீலரில் கிளம்பினான்.
=====
கதவு தட்டும் ஓசை கேட்டது.
கதவைத் திறந்தது ஜானு.பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி நின்று கொண்டிருந்தாள்.
" வாங்க மாமி! உள்ள வாங்க!"
" என்ன ஜானு! வீட்டுவேலை எல்லாம் முடிஞ்சுதா?"
" அதை ஏன் மாமி கேக்குறீங்க! இன்னும் ஒழிஞ்சபாடு இல்ல! காலங்காத்தாலே ஐஞ்சு மணிக்கே எழுந்துட்டேன். நான் குளிச்சிமுடிச்ச பிறகு, கிருஷ்ணா குளிக்கிறதுக்கு வெந்நீர் விளாவினேன். அப்புறமா குழந்தைகளக் குளிப்பாட்டி, ட்ரெஸ் பண்ணிவிட்டு,டிபன் சாப்பிடவச்சி ஸ்கூலுக்கு அனுப்புறதுக்குல்ல போதும் போதும்னு ஆயிடறது. அப்புறம் கிருஷ்ணாவுக்கு லஞ்ச் பாக்ஸுல சாப்பாடு எடுத்து வச்சு ஆபீஸுக்கு அனுப்பி வச்சேன். செத்த நேரம் அக்கடான்னு உக்கார முடியல மாமி! அடுத்தாப்ல அழுக்குத் துணியெல்லாம் துவைக்கணும்; பண்ட பாத்திரம் கழுவணும்;ஒரு சீரியல் கூட உக்காந்து பாக்கமுடியல மாமி!'
" இந்தாங்க மாமி! பஜ்ஜி சாப்பிடுங்கோ!" ஜானு கொண்டுவந்து வைத்த பஜ்ஜியை பங்கஜம் மாமி ருசி பார்த்தாள்.
" பஜ்ஜி டேஸ்ட் வித்தியாசமா இருக்கே! என்ன பஜ்ஜி இது? எப்படி பண்ணுனே?"
" இது பலாக்கா பஜ்ஜி மாமி! டி.வி. யில நேத்து கீதா மாமி சொல்லிக் கொடுத்தாங்க! அதன்படி செஞ்சு பாத்தேன். பிரமாதமா இருந்தது. அதான் உங்களுக்கு ரெண்டு வச்சேன்."
" ஏன் ஜானு! இவ்வளவு கஷ்டப்படுறியே! ஒரு வேலைக்காரிய வச்சுகிட்டா என்ன?"
" கிருஷ்ணா வாங்குற சம்பளத்துக்கு வேலக்காரிய வச்சுக்கிறதெல்லாம் கட்டுப்படி ஆகாது மாமி! நாலு வீட்ல வேலை செய்றவங்க; அரக்கபரக்க செய்வாங்க; வேலைல சுத்தம் இருக்காது; கிருஷ்ணாவுக்கும் அது பிடிக்காது."
" என்ன ஜானு! செயின் புதுசா இருக்கே? எப்ப எடுத்தே?"
" நேத்துதான் மாமி! ரொம்ப நாளா கிருஷ்ணா கிட்ட கேட்டுண்டு இருந்தேன்; நேத்து என்னோடபர்த்டே இல்லியோ அதான் நானும் கிருஷ்ணாவும் எடுத்துண்டு வந்தோம்."
" மாமி! மணி ஐஞ்சு ஆறது. நான் ஆபீஸுக்குப் போய் கிருஷ்ணாவை அழச்சுண்டு வரணும்.அப்படியே ஸ்கூலுக்குப் போய் பசங்களையும் அழச்சுண்டு வரணும்."
" சரி ஜானு! நான் ஆத்துக்குப் போறேன்" என்று சொல்லிவிட்டுப் பங்கஜம் மாமி போய் விட்டாள்.
" அவசர அவசரமாக சட்டையையும், பேண்டையும் அணிந்துகொண்டு, தன் மனைவி கிருஷ்ணவேணியையும், குழந்தைகளையும் அழைத்து வருவதற்காக ஜானகிராமன் டூவீலரில் கிளம்பினான்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
தீயா வேலை செய்யறியே ஜானு !
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» கார்டூன் கதைகள் - Part 1 - (முல்லா கதைகள்)
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
» கார்டூன் கதைகள் - Part 1 - (முல்லா கதைகள்)
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 9
|
|