புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கதைகள் -- - Page 4 I_vote_lcapஎனது கதைகள் -- - Page 4 I_voting_barஎனது கதைகள் -- - Page 4 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
எனது கதைகள் -- - Page 4 I_vote_lcapஎனது கதைகள் -- - Page 4 I_voting_barஎனது கதைகள் -- - Page 4 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
எனது கதைகள் -- - Page 4 I_vote_lcapஎனது கதைகள் -- - Page 4 I_voting_barஎனது கதைகள் -- - Page 4 I_vote_rcap 
3 Posts - 6%
mohamed nizamudeen
எனது கதைகள் -- - Page 4 I_vote_lcapஎனது கதைகள் -- - Page 4 I_voting_barஎனது கதைகள் -- - Page 4 I_vote_rcap 
2 Posts - 4%
heezulia
எனது கதைகள் -- - Page 4 I_vote_lcapஎனது கதைகள் -- - Page 4 I_voting_barஎனது கதைகள் -- - Page 4 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
எனது கதைகள் -- - Page 4 I_vote_lcapஎனது கதைகள் -- - Page 4 I_voting_barஎனது கதைகள் -- - Page 4 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கதைகள் -- - Page 4 I_vote_lcapஎனது கதைகள் -- - Page 4 I_voting_barஎனது கதைகள் -- - Page 4 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
எனது கதைகள் -- - Page 4 I_vote_lcapஎனது கதைகள் -- - Page 4 I_voting_barஎனது கதைகள் -- - Page 4 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
எனது கதைகள் -- - Page 4 I_vote_lcapஎனது கதைகள் -- - Page 4 I_voting_barஎனது கதைகள் -- - Page 4 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
எனது கதைகள் -- - Page 4 I_vote_lcapஎனது கதைகள் -- - Page 4 I_voting_barஎனது கதைகள் -- - Page 4 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
எனது கதைகள் -- - Page 4 I_vote_lcapஎனது கதைகள் -- - Page 4 I_voting_barஎனது கதைகள் -- - Page 4 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கதைகள் --


   
   

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 17, 2015 8:55 am

First topic message reminder :

ஓட்டைப் படகு.
============
காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாகப் பீரிட்டு வந்தது; முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இருந்த துணியும் பிடுங்கிக்கொண்டது. ஆக நான்கு ஓட்டைகள் வழியாக தண்ணீர் வேகமாக உள்ளே வந்துகொண்டிருந்தது. படகோட்டி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த தத்துவ ஞானி,

"ஓட்டைப்படகிலே மூன்று ஓட்டைப் படகுகள் ஏறிவிட்டன . " என்றார்.

" ஐயா ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? "

" தம்பி ! மனித உடம்பு ஒன்பது ஓட்டைகள் உள்ள படகுதானே ! அதைக் குறிப்பிட்டேன் ! "

" ஐயா ! தத்துவம் பேசுவதற்கு இது நேரம் அல்ல! படகு மூழ்கிக்கொண்டு இருக்கிறது; நாம் மூவரும் தப்பிக்க ஏதாவது வழியுண்டா ? அதைச் சொல்லுங்கள் !"

" தம்பி ! நம்முடைய வாழ்க்கையே ஒரு கடல் போன்றது. இந்தக் கடலைக் கடக்கவேண்டும் என்றால் , நாம் ஏறிச்செல்லும் படகிலே ஓட்டைகள் இருக்கக் கூடாது. முக்கியமாக நான்கு ஓட்டைகள் இருக்கக்கூடாது. அதாவது தாமதம், மறதி, சோம்பேறித்தனம், தூக்கம் ஆகிய நான்கு ஓட்டைகள் இருக்கக் கூடாது ; அவ்வாறு இருந்தால் நடுவழியிலேயே படகு கவிழ்ந்துவிடும். இதை நான் சொல்லவில்லை ; வள்ளுவர் சொல்லுகிறார்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ( மடியின்மை- 606 )

" ஐயா ! அவசரம் தெரியாமல் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ! திருக்குறள் கேட்பதற்கு இது நேரம் அல்ல. நாம் சாகப் போகிறோம்; தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்! வெட்டிப்பேச்சு வேண்டாம். "

" நாம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கும் வள்ளுவர் ஒரு வழி சொல்லுகிறார் ! "

" அது என்ன வழி ? "

" அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை-421 )

அதாவது , அறிவு இருந்தால் , அது நம்மை மரணத்திலிருந்து கூடக் காப்பாற்றும்; மேலும் அந்த அறிவு பகைவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் அரண் போல விளங்கும்."

" ஐயா! இப்போது எப்படி நம்மைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் ? அதைச் சொல்லுங்கள் !"

உடனே தத்துவஞானி ஓடக்காரனைப் பார்த்து," தம்பி ! படகின் மூலையிலே இருக்கின்ற அந்த நான்கு தகர பீப்பாய்கள் காலியாகத்தானே உள்ளன ? "

" ஆம் ஐயா ! காலியாகத்தான் உள்ளன. "

" அப்படியானால் அதன் வாயிலே இருக்கின்ற மூடியைக் காற்றுப் புகாவண்ணம் இறுக மூடி, அந்த நான்கு பீப்பாய்களையும் பக்கவாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, கயிற்றினால் இறுகக் கட்டு. "

ஓடக்காரனும், நானும் விரைவாக அந்தப் பணியைச் செய்து முடித்தோம்.

" அப்படியே அந்த நான்கு பீப்பாய்களையும் மெதுவாக ஆற்றினுள் இறக்குங்கள்! "

நாங்கள் பீப்பாய்களை ஆற்றினுள் இறக்குவதற்கும், படகு மூழ்குவதற்கும் சரியாக இருந்தது. ஒன்றாகக் கட்டிய பீப்பாய்கள் படகுபோல மிதந்தன. நாங்கள் மூவரும் தட்டுத்தடுமாறி பீப்பாய்கள் மேலே ஏறி அமர்ந்தோம்.பிறகு ஓடக்காரனின் துணையோடு பத்திரமாகக் கரை சேர்ந்தோம்.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 12, 2015 7:41 pm

பாராட்டுக்கு நன்றி பிரீதிகா சந்திரகுமார் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 15, 2015 12:45 pm

பொன்னம்மாள் டேவிட் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது மணி ஏழு. மருமகள் மெர்சி இன்னமும் தூங்கிக்கொண்டு இருந்தாள். காலைக்கடன்களை முடித்துக்கொண்டு , குளித்துவிட்டு வந்தாள். மணி எட்டாயிற்று. இன்னமும் மெர்சியின் தூக்கம் கலைந்தபாடில்லை. நேராகத் தன் மகனிடம் சென்ற பொன்னம்மாள் டேவிட்,

" என்னடா ஜான்சன்! இது வீடா இல்லை சோம்பேறிகள் மடமா? உம் பொண்டாட்டி இன்னமும் தூங்கிட்டிருக்கா! ஒரு பொண்ணா லட்சணமா ஆறு மணிக்கு எழுந்து , வீடு வாசல் பெருக்கிக் கோலம் போடவேண்டாம்?எந்த வீட்லடா நடக்கும் இந்த அநியாயம்? நான் சுகர் பேஷண்டுன்னு தெரியுமில்ல?வேளாவேளைக்கு நான் சாப்பிட வேணாம்? காலம் போன காலத்துல , வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுவான்னு தானே இவளைக் கட்டிவச்சேன்! போற போக்கைப் பாத்தா , மூணுவேளையும் நான் சமைச்சுப் போட்டா இவ ஒக்காந்து சாப்பிடுவா போல இருக்கே! இதென்னடா கொடுமை?"

" அம்மா! எதுக்கம்மா சண்டை போடறீங்க? அவளுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லை! அதான் தூங்கிட்டிருக்கா! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போங்கம்மா!"

" டேய்! நான் அவளை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போலாம்டா! ஆனா என் வயிறு என்னை அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகலையே! பசி தாங்காத உடம்புடா இது." பொன்னம்மாள் டேவிட்டின் குரல் தளுதளுத்தது. கண்களில் கண்ணீர் கசிந்தது.அவள் தன் மகனை நோக்கி

" ஜான்சன்! நான் முதியோர் இல்லம் போறேன். அங்கேதான் எனக்கு நிம்மதி கிடைக்கும் ."

" என்னம்மா இது! இப்படி பேசறீங்களே! நான் இருக்கும்போது நீங்கள் இப்படிப் பேசலாமா ?நான் வேணுமின்னா டிபன் செஞ்சு தரட்டுமா? எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா ! நானும் கூட வரட்டுமா ?

" வேணாம்; வழியில எங்காவது ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன் ."

' சரி; உங்க இஷ்டம்! நான் சொன்னா கேக்கவா போறிங்க?; முதியோர் இல்லம் சேர்ந்தவுடனே எனக்கு போன் பண்ணுங்க!"

" சரிடா!"

அவசர அவசரமாக ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு முதியோர் இல்லம் வந்து சேர்ந்தாள் பொன்னம்மாள் டேவிட்.

பொன்னம்மாள் டேவிட்டைப் பார்த்தவுடனே , அவளுடைய P.A. விசாலம் ஓடிவந்து வரவேற்றாள்.

" வாங்க பிரசிடென்ட்! எல்லாரும் உங்களுக்காகத்தான் காத்திருக்காங்க! என்ன மேடம்! உங்க கார்ல வராம ஆட்டோவில வந்திருக்கீங்க?"

' என் கார சர்வீசுக்கு விட்டிருக்கேன்! அதான் ஆட்டோவில வந்தேன்! ஆண்டுவிழாவுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிட்டீங்களா ?"

" எல்லாம் பக்காவா இருக்கு மேடம்!"

" மினிஸ்டர் எப்ப வரார்?"

" சரியா பத்து மணிக்கு வந்துருவார் மேடம்!"

" ஒ.கே! "

பொன்னம்மாள் டேவிட் தன் செல்போனை எடுத்துத் தன் மகனுக்குப் பொன் செய்தாள்.

" ஜான்சன்! நான் பத்திரமா முதியோர் இல்லம் வந்து சேந்துட்டேன்!"

" சரி அம்மா! சாயங்காலம் ஆபீஸ் முடிந்தவுடன் வீட்டிற்குப் போகும்போது நான் உங்களை பிக்கப் பண்ணிக்கிறேன்."

" தேங்க்ஸ்டா!"

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 5:59 pm

M.Jagadeesan wrote:சாவதே மேல்.
===========
மாலை மணி நான்கு இருக்கும்.

வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. விரைந்து சென்று கதவைத் திறந்தார் கந்தசாமி.

சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். மீசை தாடியுடனும், பரட்டைத் தலையுடனும், அழுக்கடைந்த ஆடைகளுடனும் காட்சியளித்த அந்த முதியவர் , பார்க்கப் பரிதாபமாக இருந்தார்.

" யார் நீங்கள் ? உங்களுக்கு என்ன வேணும் ? "

" கந்தசாமி ! என்னைத் தெரியவில்லையா உனக்கு ? நான்தான் உன்னுடைய பால்ய சிநேகிதன் ராமசாமி! '

" ராமசாமியா நீ ? பார்த்து 30 வருடங்களுக்குமேல் இருக்குமே ! அதான் சட்டென்று அடையாளம் தெரியவில்லை; உள்ள வா ராமசாமி ! "

ராமசாமி உள்ளேசென்று சோபாவில் அமர்ந்தார்.

கந்தசாமி , " அபிராமி ! " என்று சொல்லி தன் மனைவியைக் கூப்பிட்டார். அபிராமி வந்தாள்.

" அபிராமி ! நான் அடிக்கடி சொல்வேனே ; என் நண்பன் ராமசாமி ! அவர் இவர்தான். ரொம்பநாள் கழிச்சு என்னைப் பார்க்க வந்திருக்கார்! "

" வாங்க ! " என்று சொல்லி ராமசாமியை வரவேற்றாள் அபிராமி.

" அபிராமி ! காபி கொண்டுவா!"

அபிராமி கொண்டுவந்த காபியைப் பருகிக் கொண்டே நண்பர் இருவரும் பேசத் தொடங்கினர்.

" என்னப்பா ராமசாமி ! தாடியும், மீசையுமாக இது என்ன கோலம் ? "

ராமசாமி சிறிதுநேரம்என் எதுவும் பேசவில்லை; அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டு இருந்தது.

" ஏம்பா ராமசாமி ஏன் அழறே ? என்ன ஆச்சு உனக்கு ? "

" கந்தசாமி ! இப்ப என்னோட நிலைமை சரியில்லப்பா! என் பையன் அவனோட பொண்டாட்டி பேச்சைக் கேட்டுட்டு என்னை வீட்டைவிட்டுத் துரத்திட்டான்; என்னை அவன் மதிப்பதில்லை ! அடுத்த வேளை சோத்துக்கே வழியில்லாம நடுத்தெருவுக்கு வந்துட்டேன்பா ! பிச்சை எடுக்க என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை! சொந்த ஊரில் இருக்கவும் பிடிக்கவில்லை. உன்னுடைய வீட்டுவிலாசம் என்னிடம் இருந்தது; அதான் உன்னைத்தேடி பறப்பட்டு வந்திட்டேன். என்னிடம் இருந்த கொஞ்ச நஞ்ச காசும் செலவாகிவிட்டது. தெரியாதவர்களிடம் சென்று உதவி கேட்பதைவிட , பழகிய நண்பனிடம் உதவி கேட்பது மேலானதல்லவா! அதுதான் உதவிகேட்டு உன்னிடம் வந்துள்ளேன். " இடுக்கண் களைவதாம் நட்பு " என்ற வள்ளுவர் வாக்குப்படி என்னுடைய துன்பத்தை நீதான் போக்கவேண்டும்." என்று சொன்ன ராமசாமியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

' அழாதேப்பா! உனக்கா இந்த நிலை! பள்ளியிலும், கல்லூரியிலும் நாம் ஒன்றாகப் படித்த நாட்கள், பழகிய நாட்கள் இன்றும் பசுமையாக நினைவில் நிற்கின்றன. மற்றவர்களுக்காக ஓடி ஓடி உதவி செய்வாயே! உனக்கா இந்த கதி ? எனக்காகப் பலமுறை பள்ளிக் கட்டணமும், தேர்வுக் கட்டணமும் கட்டி உதவி செய்தாயே ! அந்த நன்றியை நான் மறக்கமுடியுமா ? நான் தினமும் தயிர் சோறும் , ஊறுகாயும் மதிய உணவுக்காகக் கொண்டுவருவேன்; ஆனால் நீயோ வகை வகையாய்ச் சமைத்த சுவையான உணவுகளைக் கொண்டுவருவாய்! அதையெல்லாம் நீ எனக்கு ஊட்டி மகிழ்வாயே! அந்த நாட்களையெல்லாம் எப்படி நான் மறக்கமுடியும்? ஒருசமயம், கல்லூரி மைதானத்தில் ,நாம் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்த சமயத்தில், வேகமாக வந்த கிரிக்கெட் பந்து என்தலையில் பட்டு இரத்தம் கொட்டிய சமயத்தில், மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்று , எனக்குச் சிகிச்சை அளித்து , என்னை வீட்டிலே கொண்டுபோய் விட்டாயே! அதை எப்படி நான் மறக்க முடியும்?கடைசியாக நாம் கல்லூரியைவிட்டுப் பிரியும் சமயத்தில், உன் நினைவாக ,எனக்கு ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசாகக் கொடுத்தாயே !அதை இன்னும் நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். ராமசாமி ! உனக்கு நான் என்ன செய்யவேண்டும் ? சொல் ! "

ராமசாமி சிறிதுநேரம் பேசவில்லை. குரல் தழுதழுக்க , " கந்தசாமி ! நான் இருக்கப்போவது இன்னும் கொஞ்சநாள்தான்; நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. என்னை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடப்பா ! வேலைசெய்து பிழைக்க என் உடலில் தெம்பு இல்லை; என் கடைசி நாட்களை அங்கு கழிக்க விரும்புகிறேன் ! "

" ராமசாமி ! அதெல்லாம் இருக்கட்டும்; முதலில் நீ சாப்பிடு ! மற்றவற்றை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்."

" அபிராமி ! ரெண்டு பேருக்கும் இலைபோடு ! "

அபிராமி இலைபோட்டு இருவருக்கும் உணவு பரிமாறினாள். நண்பர்கள் இருவரும் கைகழுவிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தனர்.

" கொஞ்சம் உள்ள வந்துட்டுப் போங்க ! " அபிராமி கூப்பிட்டாள்.

கந்தசாமி உள்ளே சென்றார்.

" உங்க பிரண்டை முதியோர் இல்லத்தில் சேர்க்கப் போறீங்களா ? "

" ஆமாம் ! "

" முதியோர் இல்லத்துல முதல்ல டெபாசிட் கட்டச் சொல்லுவாங்க ! அப்புறம் மாசாமாசம் பணம் கட்டணும்; அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது; உங்க பிரண்டு கிட்ட , சாப்பிட்ட கையோட அஞ்சோ பத்தோ குடுத்து அனுப்பிடுங்க ! தேவையில்லாத பிரச்சினையில மாட்டிக்காதீங்க !"

" மெதுவா பேசுடி ! அவரு காதில விழப்போகுது ! அவரு எனக்கு எவ்வளவோ செய்து இருக்காரு ! ஏதோ அவருடைய கெட்ட காலம் , அவரோட மகன் வீட்டைவிட்டுத் துரத்திட்டான். அவரு கேட்ட இந்த உதவிகூட நான் செய்யலைன்னா , என்னைவிட நன்றிகெட்டவன் இந்த உலகத்துல யாரும் இருக்கமுடியாது. அதுக்கு நான் சாகறதே மேல் ; மேற்கொண்டு எதுவும் பேசாதே ! வந்து சாப்பாடு பரிமாறு ! "

கந்தசாமி டைனிங் ஹாலுக்கு வந்தார். அங்கு ராமசாமி இல்லை. இலையில் பரிமாறிய உணவு அப்படியே இருந்தது.

" ராமசாமி ! என்று அழைத்துக்கொண்டே தெருவுக்கு வந்தார். தெருக்கோடி வரைக்கும் சென்று தேடிப்பார்த்தார். ஆனால் ராமசாமியைக் காணவில்லை.

கவலையோடு வீட்டுக்குத் திரும்பினார் கந்தசாமி. மனைவியுடன் எதுவும் பேசவில்லை; சாப்பிடவும் இல்லை; படுக்கை அறைக்குச் சென்று படுத்துக் கொண்டார். இரவு முழுவதும் நண்பன் ராமசாமியின் நினைவாகவே இருந்தார். ஒரு வாய் சாப்பாடு கூடச் சாப்பிடாமல் சென்றுவிட்டாரே என்று வருத்தப்பட்டார். தூக்கம் வரவில்லை. எப்போது விடியும் என்று காத்திருந்தார்.

விடிந்ததும் , மனைவிடம் கூடச் சொல்லாமல் நண்பனைத்தேடிப் புறப்பட்டார். பேருந்து நிறுத்தத்தில் சென்று பார்த்தார். நண்பனைக் காணவில்லை. அங்கேயே சிறிதுநேரம் உட்கார்ந்திருந்தார். எங்குசென்று நண்பனைத் தேடுவது ? ஒருவேளை சொந்த ஊருக்கே புறப்பட்டுப் போயிருப்பாரோ ? சிந்தனையில் ஆழ்ந்தார். அங்கிருந்த பெட்டிகடைக்கு வெளியே செய்தித்தாள் தொங்கிக்கொண்டு இருந்தது. அதில்

" முதியவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை ! " என்று போட்டிருந்தது.

ஏதோ பொறி தட்டவே செய்தித்தாள் ஒன்றை வாங்கிப் படித்தார்.

சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். உடல் அடையாளம் காணமுடியாத அளவுக்குப் பல துண்டுகளாக சிதறிவிட்டது. அவரது தற்கொலைக்கு வறுமை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது சட்டைப் பையில் ஒரு துண்டுக் காகிதம் இருந்தது. அதில் ஒரு விலாசம் குறிப்பிட்டிருந்தது. அந்த விலாசம்...

அந்த விலாசத்தைப் பார்த்த கந்தசாமி அதிர்ச்சி அடைந்தார். அது தன்னுடைய விலாசம். இறந்துபோனது தன் நண்பன் ராமசாமி என்று தெரிந்ததும் , துக்கம் அவரது தொண்டையை அடைத்தது. அது ஒரு பொதுஇடம் என்பதையும் மறந்து , வாய்விட்டுக் கதறி அழுதார். சிறிதுநேரம் அழுதுகொண்டு இருந்த கந்தசாமி , துக்கத்தைக் கட்டுப் படுத்திக்கொண்டு மெல்ல எழுந்தார். ஒரு முடிவுக்கு வந்தார். கால்போன போக்கில் நடந்தார். நண்பனின் நினைவாகவே இருந்தார்; திடீரென நின்றார். தான் நின்றுகொண்டிருக்கும் இடம் ஓர் ஆற்றுப் பாலம் என்பதை அறிந்துகொண்டார். ஆற்றிலே வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்தது. பாலத்தின் கைப்பிடிச் சுவரின்மீது ஏறி நின்றார்.

" ராமசாமி ! உன்னைத்தேடி , நீ இருக்கும் இடத்திற்கு நானும் வந்துட்டேன்பா ! " என்று சொல்லிக்கொண்டே ஆற்றில் குதித்தார்.


குறள்
=====

சாதலின் இன்னாதது இல்லை; இனிததூம்
ஈதல் இயையாக் கடை. ( ஈகை-210 )


இறத்தலைப் போலத் துன்பம் தருவது வேறு ஒன்றும் இல்லை;ஆனால் பிறர் யாசிக்கும்போது , அவருக்கு உதவி செய்யமுடியாத நிலை ஏற்படுமாயின், அவ்விறத்தலாகிய துன்பமும் கூட இன்பமாய்விடும்.

மனம் கனக்கிறது இதை படித்ததும்......மகா பாவி, வீட்டுக்கு வந்தவருக்கு ஒருவாய் சாப்பாடு கூட போடாமல் துரத்தி விட்டாளே?...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 6:03 pm

//பர்த்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி இருக்கலாம்- சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாயின்
கூறாமல் சன்யாசம் கொள்.//

சூப்பர் !............ரொம்ப சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 6:07 pm

M.Jagadeesan wrote:நேர்காணல்
=========
அது ஒரு முதியோரில்லம். சுமார் 100 முதியோர்கள் அங்கு தங்கியிருந்தனர். அவர்களைக் கவனித்துக்கொள்ள 10 ஆயாக்களும், இரண்டு மருத்துவர்களும், மேலாளர் ஒருவரும், வாட்ச்மேன் ஒருவரும் நியமிக்கப்பட்டு இருந்தனர். மேலாளராக இருந்தவர் ஓய்வு பெற்றுவிடவே , வேறு ஒரு மேலாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக அன்று நேர்முகத்தேர்வு நடக்க இருந்தது.

சரியாகப் பத்து மணிக்கு நேர்முகத்தேர்வு ஆரம்பிக்க இருந்தது. அந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக ஆண்களும் ,பெண்களுமாக 20 பேர் வந்திருந்தனர். செயலாளரின் அறைக்கு முன்பாக இருந்த இருக்கைகளில் அனைவரும் அமர்ந்திருந்தனர். செயலாளரின் வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர். அவர் வந்தபாடில்லை. அனைவரும் ஒருவித மன இறுக்கத்துடன் காணப்பட்டனர். கையில் புத்தகங்களை வைத்துப் படித்துக் கொண்டிருந்தனர். சரியாகப் 10 மணிக்கு செயலாளர் , அவரது அறையில் நுழைந்தார்.

சிறிதுநேரம் கழித்து இண்டர்வியூ ஆரம்பமானது.

பியூன் வெளியேவந்து ," ரகுராமன் யார் ? உள்ள போங்க ! " என்று சொன்னான்.

ரகுராமன் உள்ளே சென்றார்.

சிறிதுநேரம் கழித்து இண்டர்வியூ முடிந்தவுடன் ரகுராமன் வெளியே வந்தார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்துகொண்டார். இண்டர்வியூ முடிவுக்காகக் காத்திருந்தார்.

அடுத்து பியூன் வெளியே வந்து, " மாலதி ! " என்று கூப்பிட்டான்.

மாலதி என்ற பெயருடைய அந்தப் பெண் செயலாளரின் அறைக்கு உள்ளே நுழைய யத்தனித்தபோது

திடீரென்று அங்கு வந்திருந்த 20 பேரில் ஒருவன் ," ஐயோ ! அம்மா ! நெஞ்சு வலிக்கிறதே ! நெஞ்சு வலிக்கிறதே ! தாங்க முடியலையே !" என்று சொல்லி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்தான். " என்னை யாராவது மருத்துவ மனையில் சேர்த்துவிடுங்கள் " என்று சொல்லி அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்துக் கெஞ்சினான். அவனுக்கு சுமார் 35 வயதிருக்கும்.

இண்டர்வியூக்கு வந்திருந்தவர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவனுக்கு உதவப்போய் , இண்டர்வியூவைத் தவறவிட்டால் , வேலைவாய்ப்புக் கிடைக்காமல் போய்விடும் என்று எண்ணி யாரும் அவனுக்கு உதவ முன்வரவில்லை.

மாலதியும் அவனை ஒருகணம் பார்த்தாள். இன்டர்வியூவுக்குப் போவதா அல்லது அவனுக்கு உதவுவதா என்று அவளுக்குத் தெரியவில்லை. சிறிதுநேரம் குழம்பினாள். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தாள். மாலதி அவனருகே விரைந்து சென்றாள்.

" சார் ! கொஞ்சம் பொறுத்துக்கோங்க ! நான் போய் ஒரு ஆட்டோவைக் கூட்டிகிட்டு வர்றேன்." என்று சொல்லிவ்ட்டு மாலதி வெளியே சென்றாள்.

பத்துநிமிடம் கழித்து மாலதி வந்தாள். ஆட்டோ வெளியில் நின்றிருந்தது.

உள்ளே வந்த மாலதிக்கு ஒரே வியப்பு. வலியால் துடித்த அந்த நபர் , சிரித்துக் கொண்டே அங்கு நின்றிருந்தான். அவன் மாலதியைப் பார்த்து,

" வா ! மாலதி ! You are appointed ; உன்ன மாதிரி பொறுப்பு உள்ள ஒருவரைத்தான் நாங்க எதிர்பார்த்தோம். உன்ன நம்பி 100 என்ன ! ஆயிரம் முதியவர்களைக் கூட ஒப்படைக்கலாம். நான்தான் இந்த முதியோர் காப்பகத்தை நடத்துகிறேன்." என்று சொன்ன அவர்

" செக்ரட்டரி ! " என்று கூப்பிட்டார்.

செக்ரட்டரி அறையிலிருந்து வெளியே வந்தார்.

" செக்ரட்டரி ! இந்தப் பெண் மாலதிக்கு appointment order கொடுத்திருங்க ! " என்றார்.

" Yes Sir ! " என்றார் செக்ரட்டரி.

செக்ரட்டரி இண்டர்வியூவுக்கு வந்திருந்தவர்களைப் பார்த்து, " Interview is over ! you can go ! " என்றார்.

எனது கதைகள் -- - Page 4 3838410834 எனது கதைகள் -- - Page 4 3838410834 எனது கதைகள் -- - Page 4 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 6:09 pm

M.Jagadeesan wrote:திருடன் !
=======
இரவு மணி இரண்டு இருக்கும். பவர்கட் இருந்ததால் எங்கும் ஒரே கும்மிருட்டு. திடீரென்று பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. என் மனதில் பயம் பற்றிக்கொண்டது. ஒருவேளை திருடன் எவனாவது வந்திருப்பானோ? நல்லவேளையாக போன மின்சாரம் , திரும்ப வந்தது.நைட்லேம்ப்பின் மங்கலான வெளிச்சத்தில் பூட்டியிருந்த பீரோவைக் கண்டதும் , மனதிற்குள் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது.திருடன் யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்டேன்.

பீரோவைத் திறப்பதற்காக சாவியைத் தேடினேன். எங்கு தேடியும் சாவி கிடைக்கவில்லை. மாற்று சாவியைப் பயன்படுத்தி பீரோவைத் திறந்தேன்.
பீரோவில் நகைகளும், பணமும் பத்திரமாக இருந்தது கண்டு போன உயிர் திரும்ப வந்தது.கடவுளுக்கு நன்றி சொன்னேன். வீட்டுக்காரன் விழித்துக் கொள்வதற்கு முன்பாக வந்த வேலையை முடித்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணி , பீரோவில் இருந்த நகைகளையும், கரன்சி நோட்டுகளையும் அவசர அவசரமாக , நான் கொண்டுவந்த கோணிப் பைக்குள் நிரப்பினேன். சத்தமில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினேன்.


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 6:11 pm

M.Jagadeesan wrote:நோய் கொடுத்த டாக்டர் !
=========================
எழுபது வயதான பங்கஜம் தன் மகனைப் பார்த்து,"சரவணா! எனக்குஉடம்புக்கு ரொம்பவும் முடியல! படுத்தா உக்கார முடியல, உக்காந்தாநிக்க முடியல! நின்னா நடக்க முடியல! கீழ தள்ளுது.டாக்டர பாத்தாதேவல! என்ன டாக்டர் கிட்டஅழச்சிட்டுப் போப்பா." என்று கேட்டாள்.

"அம்மா! ஆபீஸிலிருந்து வந்த பின்னாடி இன்னிக்கி சாயங்காலம் உன்னடாக்டர் கிட்ட அழச்சிட்டுப் போறேம்மா!" என்றான் சரவணன்.

மாலை ஆறு மணி. ஆபீஸிலிருந்து சரவணன் வந்தான்.டாக்டரிடம் போவதற்கு ரெடியாக இருந்தாள் பங்கஜம்.இருவரும் ஒரு ஆட்டோவைப்பிடித்துக் கொண்டு டாக்டரின் கிளினிக்கை அடைந்தார்கள்.

டாக்டர் பங்கஜத்தை செக்கப் செய்தபிறகு சரவணனைப் பார்த்து,"அம்மாவுக்கு ஒன்றுமில்லை!பிரஷர் அதிகமாக உள்ளது.மாத்திரைகள் எழுதித் தாரேன்.தொடர்ந்து சாப்பிடணும்;சாப்பாட்டில் உப்பைக் குறைச்சிக்கணும்;தினமும் அரைமணி நேரம் வாக்கிங் போகணும்.இன்னும் ஒரு மாசம்கழிச்சி என்ன வந்து பாருங்க!" என்று சொல்லி மாத்திரைகளை எழுதித்தந்தார்.

பங்கஜம் தொடர்ந்து மருந்துகளை சாப்பிட்டு வந்தாள்.பத்து நாட்களிலேயே நல்ல குணம் தெரிந்தது.ஓடி ஆடி வீட்டு வேலைகளைச்செய்தாள்.ஆனால் சரவணனுக்கு உடம்புக்கு வந்துவிட்டது.எதையும்சரியாகச் சாப்பிடுவதில்லை;இரவில் சரியாகத் தூங்குவதில்லை; அவன்முகத்தில் சிரிப்பைப் பார்த்தேவெகுநாளாயிற்று.ஆபீஸுக்கும் நேரத்திற்குச்செல்வதில்லை.பித்துப்பிடித்தவன்போலஇருந்தான்.உடம்பும்மெலிந்துவிட்டது.இப்படியேஒருமாதம்ஆயிற்று.இதையெல்லாம் கவனித்த பங்கஜம் தன்மகனைப் பார்த்து,"என்னப்பா சரவணன்! உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கே? ஒழுங்கா சாப்பிட்டாத்தானே உடம்புநல்லா இருக்கும்!ஆபீஸ்ல ஒழுங்காவேலைசெய்யமுடியும்! எப்பவும்கலகலன்னு சிரிச்சி பேசறவன் இப்படி உம்மணா மூஞ்ஞியாட்டம் இருக்கியே! இன்னிக்கி வா! டாக்டரைப் போய்ப் பார்க்கலாம்!என்று மகனிடம் சொன்னாள்.

"சரிம்மா! இன்னிக்கி சாயங்காலம் போலாம்!"

மாலை ஆறு மணிக்கு சரவணனை அழைத்துக்கொண்டு டாக்டரிடம்சென்றாள் பங்கஜம்.
"வாங்கம்மா!எப்படி இருக்கீங்க? மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடறீங்களா?"
"டாக்டர்! இப்ப நான் நல்லா இருக்கேன்.எனக்கு ஒன்னும் இல்ல! ஆனால்என் மகனுக்குத்தான் ஒரு மாசமா உடம்பு சரியில்ல எதையும் சரியாசாப்பிடறது இல்ல.சரியா தூங்கறது இல்ல!எதையோ பறி கொடுத்தவன்மாதிரி இருக்கான்!இப்பல்லாம் அவன் முகத்தில் சிரிப்பையே காணோம்.என்னன்னு கொஞ்ஞம் பாருங்க டாக்டர்!

டாக்டர் சரவணனை உள்ளே அழைத்துச் சென்றார்.பத்து நிமிடம் கழித்து டாக்டர் வெளியே வந்தார்.அவருக்குப் பின்னால் சரவணன்சிரித்துக் கொண்டே வெளியே வந்தான்.தன் மகன் சிரிப்பதைக் கண்டுபங்கஜம் மிகுந்த வியப்பு அடைந்தாள்.

"அம்மா! உங்க மகனுக்கு ஒன்னும் இல்ல! உங்க மகனுக்கு வந்திருக்கிறநோய் இந்த வயசுல எல்லாருக்கும் வர்ரதுதான்.அவருக்கு வந்திருக்கிறதுகாதல் நோய்! அந்த நோயை அவருக்குக் கொடுத்ததேநான்தான் .இப்பநானேஅதசரிபண்ணிட்டேன்.இனிமே உங்க மகன் ஒழுங்கா சாப்பிடுவாரு! ஒழுங்கா தூங்குவாரு! கவலைப் படாமே போய் வாங்க அத்தை!"என்று சொன்னாள் இருபத்தைந்து வயதான டாக்டர் அகல்யா.

"அத்தையா!" என்று சொல்லி மயக்கம் அடைந்தாள் பங்கஜம்.

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து.

என்பது குறள்.

ம்...நல்ல டாக்டர் புன்னகை................ சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 6:19 pm

M.Jagadeesan wrote:பெருசும், சிறுசும்.
===================
காலை 9 மணி. அது ஒரு ஹார்டுவேர் பொருட்கள் விற்பனை செய்யும் கடை. வாடிக்கையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள், கார்ப்பெண்டர்கள், பெயிண்டர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அந்தக் கடைக்கு வந்தார். கூட்ட நெரிசலில் நுழைய முடியாமல் சற்றுத் தொலைவிலேயே நின்று கொண்டிருந்தார். பத்து நிமிடம் சென்றிருக்கும். கூட்டம் குறைந்த பாடில்லை. கல்லாவில் உட்கார்ந்திருந்த கடை முதலாளி பெரியவரைப் பார்த்து

" பெருசு ! உங்களுக்கு என்ன வேணும் ?" என்று கேட்டார்.

" புருசு வேணும்." என்றார் பெரியவர்.

" எதுக்கு ?"

" வீட்டுக்கு வெள்ளையடிக்க ! எவ்வளவு விலை?"

" எழுபது ரூபா ஆகும்."

" சரி, ஒன்னு கொடுங்க."

" பெருசுக்கு நல்லதா புருசு ஒன்னு எடுத்துக் குடுடா !" என்று கடைப் பையனிடம் சொல்லிவிட்டு மற்றவர்களைக் கவனித்தார் கடை முதலாளி.

கடைப்பையன், பெரியவருக்கு ஒரு புருசு கொண்டுவந்து கொடுத்தான். அதை வாங்கிக்கொண்ட பெரியவர் , கடை முதலாளியிடம் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினார். அதை வாங்கிக் கல்லாவில் போட்டுக் கொண்டார் கடை முதலாளி. உடனடியாக சில்லறை கொடுப்பதற்குள் , கைபேசி சிணுங்கவே ,அதை எடுத்துப் பேசிக்கொண்டிருந்தார்.

பெரியவர் கால்மணி நேரமாக நின்றுகொண்டிருந்தார். பெரியவருக்குக் கொடுக்கவேண்டிய பாக்கி சில்லறையை மறந்துவிட்டு , வியாபாரத்தைக் கவனித்தார் கடை முதலாளி.

" ஐயா ! எனக்குப் பாக்கித்தொகையைக் கொடுத்தீங்கன்னா நான் போயிடுவேன்! என்னால நிக்க முடியல !"

" உடனே முதலாளி, பெருசு ! நீங்க என்ன வாங்கினீங்க? எவ்வளவு கொடுத்தீங்க ?" என்று கேட்டார்.

" இந்தப் புருசு ஒன்னு வாங்கினேன்; ஐந்நூறு ரூபாய் கொடுத்தேன். " என்றார் பெரியவர். சொல்லி முடிப்பதற்குள் பெரியவருக்கு வியர்த்தது.

மீதி 430 ரூபாயை பெரியவரிடம் கடைக்காரர் கொடுத்தார்.

அவசர அவசரமாக ரூபாயை வாங்கி , பேண்ட் பைக்குள் திணித்துக்கொண்டு பெரியவர் புறப்பட்டார். கர்சீப்பால் தன் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.

பெரியவர் சிறிது தூரம் சென்றிருப்பார்.

" தாத்தா ! தாத்தா !" என்ற குரல் கேட்டு பெரியவர் திரும்பினார். தன்னை நோக்கி ஒரு பத்துவயதுப் பையன் ஓடி வருவதைக் கண்டார்.

பெரியவரிடம் வந்த அந்தப் பையன், " தாத்தா! நீங்க கர்சீப் எடுக்கும்போது , உங்க பேண்ட் பாக்கெட்டிலிருந்து இந்த ரூபா நோட்டுங்க கீழே விழுந்துடிச்சி ! இந்தாங்க " என்று சொல்லிக் கொடுத்தான். கொடுத்துவிட்டு சிரித்துக்கொண்டே அந்தப் பையன் ஓடிவிட்டான்.

பெரியவர் அந்தப் பணத்தை உற்றுப் பார்த்தார். அந்த ரூபாய் நோட்டிலிருந்த காந்தித் தாத்தா , பெரியவரைப் பார்த்து,

" நீயும் பெருசு; நானும் பெருசு, ஆனால் நமக்குள்ளே எத்தனை வித்தியாசம்! " என்று கேட்பதுபோல் தோன்றவே பெரியவர் குற்ற உணர்ச்சியால் தலை கவிழ்ந்தார்.


குறள் :
=======

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும் . ( வாய்மை-293 )

ஹும்............வயசுக்கும் நேர்மைக்கும் தொடர்பு இல்லை என்பது நிதர்சனமாய் தெரிகிறது .......புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 6:25 pm

M.Jagadeesan wrote:துளசியோட கதையை முடிச்சுடுங்க !
=====================================
மதுசூதனன் அலுவலகத்தில் தன் வேலையில் மூழ்கி இருந்தான்.

அப்போது ஆபீஸ் பியூன் சுப்பு அவனிடம் வந்து, " சார் ! மேனேஜர் உங்களைக் கூப்பிடறார். " என்று சொன்னான்.

" இதோ வந்துட்டேன் " என்று சொல்லிக்கொண்டே மேனேஜருடைய கேபினுக்கு மதுசூதனன் சென்றான்.

" சார் ! மே ஐ கம் இன் ? "

" வாங்க மது வாங்க ! பிளீஸ் பீ சீடெட். "

" என்ன சார் ! என்ன விஷயம் ? எதுக்குக் கூப்பிட்டீங்க ? "

" ஒரு முக்கியமான விஷயம்; அது உங்களால மட்டும்தான் முடியும். "

" என்ன மேட்டர்னு சொல்லுங்க ! " மது கேட்டான்.

" துளசியோட கதைய நீங்க முடிச்சுடனும் ! "

மதுவுக்குக் குப்பென்று வியர்த்தது. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

" சார் ! நான் அவங்களை நெருங்கக் கூட முடியாது; அப்புறம் எப்படி அவங்கக் கதைய நான் முடிக்கிறது ? சார் ! என்னால முடியாது; தயவுபண்ணி வேறு யாரையாவது துணிச்சலான ஆளை நீங்க ஏற்பாடு பண்ணுங்க ! சாரி சார் ! என்னால முடியாது. "

" மது ! மத்தவங்களை விட உங்களுக்குத்தான் துளசியோட பழக்கம் அதிகம்; அவங்களோட ஒவ்வொரு மூவ்மெண்டும் உங்களுக்கு அத்துபடி; அதனாலதான் இந்தவேலைக்கு உங்களை நான் தேர்ந்தெடுத்தேன். மத்தவங்ககிட்ட இந்த வேலைய ஒப்படைச்சா அவங்க சொதப்பிடுவாங்க ! இனிமேலும் இந்த வேலைய நான் தள்ளிப்போட முடியாது; நாலாபுறமிருந்து நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க ! உங்கபேரு வெளிய வராம நான் பாத்துக்கிறேன்.

இந்த File -ல் எல்லா விவரமும் இருக்கு; இத எடுத்துகிட்டு போங்க; இன்னும் இரண்டு நாள்ல இந்த வேலைய நீங்க முடிக்கணும். இந்தாங்க இந்த ஐம்பதாயிரம் ரூபாயை அட்வான்சா வச்சிகுங்க ! மீதியை வேலைய முடிச்சப்புறம் தரேன் ! "

மிகுந்த மனக் கலக்கத்தோடு அந்த ரூபாயை மது வாங்கிக் கொண்டான்.

" சரிங்க சார் ! இரண்டு நாள் கழிச்சு வந்து உங்களைப் பார்க்கிறேன். "

இரண்டு நாட்கள் கழிந்தது. வேலையைக் கச்சிதமாக முடித்த மது மேனேஜரிடம் சென்று பைலைக் கொடுத்தான். பைலைப் படித்துப் பார்த்த மேனேஜர் துள்ளிக் குதித்தார்.

" வெல்டன் மது ! அபாரம் ! அருமை ! நான் நினைச்ச மாதிரியே வேலையைக் கச்சிதமா முடிச்சிட்டீங்க ! எழுத்தாளர் துளசியின் அகால மரணம், அதாவது சாலை விபத்துல அவங்க காலமானது நமக்கு ஹெவி லாஸ். அவங்களோட " ஆளவந்தார் கொலை வழக்கு " என்கிற துப்பறியும் கதை ஜனங்ககிட்ட ரொம்பவும் வரவேற்பைப் பெற்றது. ஆனா நம்மளோட துரதிஷ்டம் அந்தக் கதையோட கிளைமேக்சை எழுதிகிட்டு இருக்கும்போது துளசிக்கு இந்த மாதிரி ஒரு மரணம் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. துளசி இறந்து மூணு மாசம் ஆயிடுச்சி. ஜனங்க அவங்க கதையை முடிக்கச்சொல்லிப் பிரஷர் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. நேரடியாகவும், போன் மூலமாகவும், கடிதங்கள் எழுதியும் கதையை முடிக்கச் சொல்லி என்னைக் கேட்டுகிட்டாங்க. நல்லவேளை ! கதையோட அவுட்லைனை துளசி என்னிடம் கொடுத்து வச்சிருந்தாங்க. மீதிக் கதை முடிக்க அது ரொம்பவும் உதவியா இருந்தது. இந்த பைல் மட்டும் இல்லைன்னா, கதையை முடிக்க ரொம்பவும் கஷ்டமா இருந்திருக்கும். துளசி மாதிரி ஒரு பிரபலமான எழுத்தாளரோட கதையை அவங்க விட்ட இடத்திலிருந்து எழுதறதுன்னா அது சாதாரண விஷயம் இல்லை. முதல்ல நீங்க ரொம்பவும் பயப்பட்டீங்க ! அது இயல்புதான் ஆனாலும் எனக்கு உங்கமேல ரொம்ப நம்பிக்கை இருந்தது; அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

துளசியோட கதையைக் கச்சிதமா முடிச்சிட்டீங்க ! இந்தாங்க மீதி ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கிக்குங்க !"

" தேங்க்ஸ் !" என்று சொல்லி அந்த ரூபாயைப் பெற்றுக் கொண்டான் மதுசூதனன்.

எக்சலண்ட்..........அருமையாக எழுதரீங்க ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 15, 2015 7:32 pm

சாவதே மேல் , நேர்காணல் ,திருடன் ,நோய் கொடுத்த டாக்டர் , பெருசும் சிறுசும் , துளசியோட கதைய முடிச்சுடுங்க ஆகிய கதைகளைப் படித்துப் பாராட்டிய கிருஷ்ணம்மா அவர்களுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக