புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
23 Posts - 48%
heezulia
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
1 Post - 2%
prajai
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
145 Posts - 41%
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
138 Posts - 39%
Dr.S.Soundarapandian
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10எனது கவிதைகள் ! - Page 4 Poll_m10எனது கவிதைகள் ! - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !


   
   

Page 4 of 16 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 16  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 16 May 2015 - 22:08

First topic message reminder :

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 26 May 2015 - 20:24

தட்டு.
=======
தவறு செய்தால் தட்டிக் கேள் !
அது
ஆண்டவனாய் இருந்தாலும் அச்சம் கொள்ளாதே !

தட்டிக் கொடுத்து வேலை வாங்கு!
அது நீ
முதலாளி ஆவதற்கு முதல் தகுதியாகும்.

" தட்டுங்கள் திறக்கப்படும் "
என்ற
இயேசுவின் பொன்மொழியை என்றும் நினைவில் வை !

இரண்டு கைகளையும் தட்டினால்தான் ஓசை வரும்.
இது
கூட்டுறவுத் தத்துவத்தின் அரிச்சுவடியாகும்.

வருகின்ற வாய்ப்புகளை நழுவ விடாதே!
அவை உன்
வாசற்கதவை தினந்தோறும் தட்டுவதில்லை.

கொடுக்கின்ற பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதே!
அது உன்
வெற்றிக்கு நீ போடும் முட்டுக் கட்டையாகும்.

பெண்ணுக்கு வருகின்ற வரன்களெல்லாம்
தட்டிப் போகிறதே என்று கவலை கொள்ளாதே!
கஜினியின் வெற்றிக்கு
பதினேழு முறை தோற்றதுதான் காரணம் என்பதைக்
கருத்தில் வை.

அடுத்தவன் தட்டிலே இருக்கின்ற
அறுசுவை உணவை விட
உன்னுடைய தட்டிலே இருக்கின்ற கூழே மேலானது.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 27 May 2015 - 10:25

வரும்.. ..ஆனா வராது!
=================
அளவுக்கு மீறிய செல்வம் சேர்ந்தால்
ஆனந்தம் வரும்; நிம்மதி வராது.

கலப்படம் செய்து வணிகம் செய்தால்
இலாபம் வரும்; புண்ணியம் வராது.

காப்பி அடித்து தேர்வில் வென்றால்
பட்டம் வரும்; பண்பு வராது.

வரவுக்கு மீறிய செலவு செய்தால்
வறுமை வரும்; வசந்தம் வராது.

பெற்றோர் வார்த்தையைப் பேணி நடந்தால்
வெற்றிகள் வரும்; வேதனை வராது.

சுற்றம் தம்மோடு சூழ இருந்தால்
இன்பம் வரும்; துன்பம் வராது.

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுகை வரும்; பேச்சு வராது.

கூடா நட்பினைத் தொடர விட்டால்
கேடுகள் வரும்; நன்மை வராது.

நான்கு கண்கள் சந்தித்த வேளையில்
காதல் வரும்; காமம் வராது.

அளவுக்கு மீறி பிள்ளைகள் பெற்றால்
அல்லல் வரும்; ஆனந்தம் வராது.

ஐந்து புலன்களை அடக்கிய ஒருவனுக்கு
ஞானம் வரும்; ஈனம் வராது.

திருக்குறள் நூலைத் தினமும் படித்தால்
ஏற்றம் வரும்; ஏமாற்றம் வராது.

கணபதி என்னும் கடவுளைத் தொழுதால்
கருணை வரும்; கவலை வராது.

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu 28 May 2015 - 4:51

கவிஞர் ஜெகதீசன் அவர்களே, அத்தனை கவிதைகளும் அருமை. முத்து முத்தாய் உள்ளன. கவி மழை பொழிந்து உள்ளீர்கள். சபாஷ். மேலும் எழுதுங்கள். ரசிக்க காத்திருக்கிறோம். எனது கவிதைகள் ! - Page 4 3838410834 எனது கவிதைகள் ! - Page 4 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 28 May 2015 - 10:10

எது கவிதை?
==========
கவிதையெனும் பந்தலுக்கு நான்கு தூணுண்டு
செவிக்கினிய சொற்கள் முதலாம் தூணாகும்
சந்தமெனும் ஓசையினால் மெல்லவே உள்ளத்தை
உந்துகின்ற உணர்ச்சி இரண்டாம் தூணாகும்
பருப்பின்றி சாம்பார் சுவைக்காது என்பதுபோல்
பொருட்சுவையே கவிதைக்கு மூன்றாம் தூணாகும்
தோப்புக்கு வேலியே காப்பு என்பதுபோல்
யாப்பென்னும் கட்டுறுதி நான்காம் தூணாகும்
இந்நான்கு தூண்களிலே ஒன்று பழுதெனினும்
சிங்காரக் கவிப்பந்தல் நில்லாது சரிந்திடுமே!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 28 May 2015 - 12:57

திருக்குறளில் ஹைக்கூ கூறுகள்
===================================
திருக்குறள் :
==========
நீங்கின் தெறூவும் குறுகுங்கால் தண்என்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் .( புணர்ச்சி மகிழ்தல் -1104 )

ஹைக்கூ ;
=========
நெருங்கினால் ஜில்லென்றிருக்கும்!
விலகினால் சுட்டெரிக்கும் வினோத நெருப்பு !
-காதல்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 28 May 2015 - 12:59

திருக்குறள் :
===========
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. ( குறிப்பறிதல்- 1091 )

ஹைக்கூ :
=========
நோயும் தந்து அதற்குரிய
மருந்தும் கொடுக்கும் அதிசய மருத்துவர் !
- காதலி



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 28 May 2015 - 13:01

திருக்குறள் :
===========
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க ; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். ( வெகுளாமை- 305 )

ஹைக்கூ :
=========
உடல் வளர்த்தேனே ! உயிர் வளர்த்தேனே !
உன்னையும் வளர்த்ததால் , உயிர் இழந்தேனே !
- சினம்



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 28 May 2015 - 13:02

திருக்குறள் :
===========
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. ( ஈகை-226 )

ஹைக்கூ :
==========
சேர்த்த பொருளைப் பாதுகாப்பாக
சேமித்து வைக்க சிறந்த வங்கி
- பசித்தவன் வயிறு.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 28 May 2015 - 13:03

திருக்குறள் :
===========
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. ( வாய்மை- 299 )

ஹைக்கூ :
=========
ஆயிரம் வாட் பல்பைக் காட்டிலும்
அதிக ஒளியைத் தருவது
-உண்மை.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 28 May 2015 - 13:05

திருக்குறள் :
===========
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. ( அடக்கமுடைமை -127 )

ஹைக்கூ :
==========
அணுகுண்டைக் காட்டிலும்
ஆபத்தான ஆயுதம்
- நாக்கு.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 4 of 16 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக