புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
2 Posts - 2%
prajai
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
2 Posts - 2%
Manimegala
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
420 Posts - 48%
heezulia
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
28 Posts - 3%
prajai
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
2. ரீதி - பூமணி Poll_c102. ரீதி - பூமணி Poll_m102. ரீதி - பூமணி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2. ரீதி - பூமணி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 16, 2015 3:15 am

அப்படியே முடிவாயிற்று.

மூன்று பேரும் ஓடமரத்து நிழலில் போய் உருண்டார்கள். தொரட்டிக் கம்பு மரக்கொம்பைக் கவ்வி ஏலவட்டம் போட்டது.

உதிர்ந்து கிடந்த பூக்கருகல்களைப் பொறுக்கி நெறித்துக்கொண்டே பெரியவன் கேட்டான்.

“அப்ப இண்ணக்கி கஞ்சியில்லையாக்கும். எங்க வீட்டில ஆருருந்தா?”

சின்னவன் தொண்டையை நனைத்தான்.

“ஒங்கம்மா புள்ளையாட்டீட்டிருந்தா ‘புளிச்ச தண்ணிக்குள்ள” கூட இல்லனு கையை விரிச்சுட்டா... அவன் வீட்ல ஆளவே காணும்...”

“நீ குடிச்சிட்டு வந்தயா?”

“அதெல்லாம் கேலி மயிருல்ல. கொஞ்சம் நஞ்சம் இருந்ததவும் எங்கண்ணக்காரன் உருட்டீட்டான்.”

“ஆரு படிக்கிறவனா?”

“ஆமாமா அவன் ஒருத்தன் வந்து கெடக்கான்ல வீட்ல..”

கரிசல் புழுதியை முகர்ந்த வெள்ளாடுகள் விதறுபட்டு ஓங்கரித்தன. பட்டுக்கிடந்த இலந்தைச்செடியையு கொம்பட்டி நெற்றையும் கொறிப்பதுடன் அவை அடங்குவதாயில்லை. ரோட்டோரம் சில தோட்டப் பசப்புக்களைத் தவிர எட்டாக் கை வரையில் ஒரே கரிசல் விரிப்புத்தான் கருகிக் கிடந்தது.

“செருப்புக் காலோட ஒரு ஓட்டம் ஓடி ஆட்டத் திருப்பீட்டு வந்துரு. எங்கயாச்சும் பெறப்புடுவோம்”

“இங்க திருப்பீட்டு வந்து என்ன செய்ய. ஆட்டுக்கு வகுறு நெறஞ்சா போகும். அந்தானக்கி சில்லாங் காட்டுக்குப் போவோம்.”

“அதுஞ் சரிதான். ரெண்டு கொப்புக் கொழைய வளச்சுக் குடுத்துட்டே போனாச்சுன்னா தென்னமரத்துக் கரண்டுக் கெணத்துக்குப் போயிறலாம்.”

அவர்கள் கிளம்புகையில் மேற்கே வெயிலலையில் ஆட்டுக்கூட்டம் நீய்வதுபோலத் தெரிந்தது.

”ஏலே ஆட்டக் குளுப்பாட்டி எத்தன நாளாச்சு. காணம் வந்துரும் போலருக்கு.”

“இவன் ஒருத்தன், ஆட்டுக்குத் தண்ணி காட்றதே பெரிசாருக்கு. இதுல குளிப்பு வேற கேக்குதோ.”

“அந்தா தெக்குத் தாருல கம்மந்தட்ட சும்மாதான கெடக்குது, அதுல வுட்டாக்கூட ரெண்டு கடிக்குமே.”

”வேறு வென வேண்டாம். அவரு தன்னால ரெண்டு மாட்ட வச்சிட்டு கூளத்துக்குத் திண்டாடுறாரு, கண்டுக்கிட்டாருன்னா நொக்கப் பிதுக்கிப்பிடுவாரு.”

இண்ணக்கி ஊட்டுக்கு என்னதான் செய்யப் போறமோ தெரியல’ எளங்குட்டி வீட்ல பாலுக்குப் பாடாப் படுத்தும்.

“அங்க பாரு மழ தண்ணியில்லாம மொச்சி கூடபட்டுப் போயிக் கெடக்குது.”

எதிர்ப்பட்ட பனைமரத்தில் கல் வைத்துச் சதைத்து நெஞ்சில் சாறு தெறிப்பதில் நிம்மதிப்பட்டான் இன்னொருத்தன்.

சின்னவனுக்கு வயிறு குடைந்தது. தூரத்தில் சில உருவங்கள் கோடுகளாய் நெளிந்தன.

“ஏய் நான் ரோட்டுக்கு வடக்கு கொய்யாத் தோட்டத்துக்குப் போயிட்டு வரட்டுமா?”

“எலேய் போயும் போயும் அதுலயா கை நீட்டப் போற. அவரு ஒரு பிசினாறி. கண்டாச்சுன்னா அலறீட்டு வருவாரு கடமாங்கொளவி மாதிரி.”

“நாயிருந்தாக்கூட வேட்டையாடலாம். அது இன்னியேரம் எங்க நாக்கத் தள்ளீட்டுக் கெடக்கோ.”

“எங்கயாச்சும் கரண்டுத் தொட்டிக்குள்ள கெடக்கும்.”

“அதுல்லாம அணிலு வேட்டையாடுவமே.”

“அருவாருக்குதுல்ல, ரெண்டு பனையப் பாத்து ஏறலாம்.”

“சரி வெளாரு செதுக்கீட்டு வா”

பெரியோடைக் கரையில் கும்மல் பனைகளில் அணில் கிடக்கும் நிழலை அருவம் பார்த்து முடிக்க ஐந்து பனை தேறியது. பெரியவன் மூன்று பனைகளில் ஏறி ஓலையோடு சேர்த்து அணில் கிடந்த பாகத்தை வெட்டி விழுத்தாட்டினான். பதமான வெட்டில் அவை கோரப்பட்டு விழுந்து செத்தன. விடலிப் பனையொன்றில் ஏறிய சின்னவன் குருத்தையொட்டிக் கிடந்த அணிலை ஓலையுடன் பிடித்தே நெறித்துக்கொன்றான். இன்னொன்று இந்தச் சலசலப்புக்கு நழுவிவிட்டது.

சின்னவன் சுதாரித்துச் சொன்னான்.

”நாலாச்சு.”

ஆடுகள் ஓடை மர அடர்த்திக்குள் மறுக்கி மறுக்கி நெற்றுப் பொறுக்கித் திரிந்தன.

“இப்ப தீக்குச்சு வேணுமே”

“நடுக்காட்ல ஆருட்டப் போயிக் கேக்குறது.”

“பெறகு இதத் தூக்கீட்டே அலையவா. சூட்டாங்கறி போட்ருவோம்.”

“அப்ப கொத்தப் பருத்தி கெடந்தா பெறக்கீட்டு வா. நான் ரெண்டு சீனிக்கல்லு பாத்துட்டு வாறென். சிக்கிமுக்கி தட்டுவோம்.”

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கரையோரம் தத்துக்குக்கீழ் தீமூட்டம் புகைந்தது. முகஞ் சுண்டச்சுண்ட நாலு அணில்களையும் நன்றாய் வாட்டிக் குடலெடுத்தனர்.

“சூட்டோட சூடா ரெண்டு மூணு கல்லத் தீக்குள்ள போட்டு வையி.”

“நீயென்ன அப்பிடிக் கொடலெடுக்க ஈரலெல்லாம் சேத்து, அத இங்க கொண்டா.”

சின்னவன் ஈரல் துண்டைக் கத்தரித்து தீயில் கருக வாட்டி வாயில் பிட்டுப் போட்டுக்கொண்டான்.

“ஆடு எங்க போகுதுன்னு பாருலே”

‘அது எங்கப் போகப்போகுது இந்த வெயில்ல.”

“நாயிருந்தாலும் இந்தக் கொடலத் திங்கும்”

சுட்டெடுத்த அணில்களை சப்பையும் சதையுமாப் பிய்த்து சூடேறப் போட்ட கற்களில் ஒற்றி நீருறிஞ்ச வைத்தார்கள். பிறகு மூன்று பங்காய் வைத்து கல்லாங்கூறு போட்டுப் பகிர்ந்து தின்றார்கள்.

கையைப் புழுதியில் துடைத்துவிட்டு அவர்கள் எழுந்து பார்த்த போது ஆடுகள் அனேகமாய் தென்னமரத்துக் கிணற்றை எட்டியிருந்தன.

“இண்ணிக்கி அம்புட்டுத்தான் தொலஞ்சோம்.”

குடல் தெறிக்க ஓடினார்கள். ஆடுகள் அத்தனையும் தோட்டத்தில் மிளகாய்ச் செடிகளை உழப்பிக்கொண்டு போய் கினற்றைச் சுற்றித் தளிர்த்திருந்த பாலாட்டஞ் செடிகளை மொய்த்திருந்தன.

தெற்கு மடக்கில் உழுதுக்கொண்டிருந்த புஞ்சைக்காரர் அவர்களுக்கு முந்தியிருந்தார். அவர் கையில் சாட்டைக்கம்பு இருந்தது.

அவர்கள் ஆட்டுக்கும்பலை ஓடித் திருப்பி விரட்டியதும் அவர் இரைந்தார்.

”ஏலே சாதிகெட்ட சலுப்புத் தேவிடியா புள்ளீகளா, இங்க வாங்கலே. வெள்ளாமக்காடு தெரியாம அம்புட்டென்னதே பூளக் கொழுப்பு. இப்ப மூணு பேரவும் தென்னமரத்துல கெட்டித் தொலிய உரிக்கனா என்னன்னு பார்.”

உழவு கட்டிக்குள் விழுந்தடித்து ஓடி சின்னவனைச் சாட்டையால் விளாசினார். அவன் கூப்பாடு போட்டுக்கொண்டு ஓட்டம் பிடித்தான். அதுக்குமேல் அவரால் பின் தொடர முடியவில்லை. மிச்சக் கோவத்தை கண்டனமாக்கி வைது தீர்த்துக்கொண்டார்.

முள்ளுக் காடெல்லாம் தாண்டி வந்தபிறகும் சின்னவனுக்கு விக்கலும் விம்மலும் அடங்கவில்லை. உடம்பைச் சுற்றி புரி முறுக்கியது போல் தடிப்பு சிவந்திருந்தது.

“பெலமாப் பட்ருச்சோடா?”

சின்னவன் பேசவில்லை, மூக்கை உறிஞ்சினான்.

“அந்தானக்கி அவனத் தொரட்டிக் கம்புட்டு ஒரு போடு போடுவமான்னு வந்துச்சு. என்னமோ வெள்ளாமையெல்லாம் அழிஞ்சு போனது போலல்ல வாரான். இருக்கட்டும் ஒரு நாளைக்குத் தொரட்டிக்கத்திய நல்லாத் தீட்டிட்டு வந்து தென்னங் குருத்தெல்லாம் அறுத்துப் போட்டுட்டுப் போயிருறேன்.”

“இவன் துமுறுக்கு இன்னேரம் நம்மூருனா கெதி என்னாகும். ஈரக்கொல செதறிப்போகும். இண்ணக்கினுல்ல தொயந்துகை நீட்டிட்டுத்தான் வாரான். எண்ணக்கித்தான் பூச வாங்கிக் கெட்றான்னு தெரியல.”

“ஆடு வெள்ளாமையில ஒரு எலகூடக் கடிக்கல. பாவம் காரப்பெய தொட்டித்தண்ணியில சாணியக் கரச்சுவுட்டுக்கிறதப் பாரு. ரெண்டு நெத்தப் பெறக்குனதுக்கு அதுக தண்ணிகூடக் குடிக்கல.”

“இனியொரு நாளைக்கு என்ன செய்யணும்னுருக்கென் தெரியுமா. வார வெருச்சியில கத்திக் கும்பு குத்தி ஏத்திறணும். இவனால செயிலுக்குப் போயிட்டாத்தான், என்ன. வாய்க்கால்ல நிண்ணு ஆடு தண்ணி குடிச்சிட்டாக் கொறஞ்சா போகுது அத்தனையும். பேசாம ரோட்டுக் கெணத்துக்கு ஆட்ட வுடு.”

ஒத்தக் கடையோரம் ரோட்டுக் கிணற்றில் கமலை இறவையாடியது.

குறண்டிச் செடிகளில் சில்லான் அடித்துவிட்டு அவர்கள் லாத்தலாய்ப் போனார்கள்.

பெரியவன் சின்னவனைக் கேட்டான்.

“ஒங்க அண்ணன் எதுக்குடா ரொம்ப நாளா இங்க வந்து கெடக்கான் படிப்ப வுட்டுட்டு.”

“என்னமோ பெரிய படிப்புப் படிக்கணும்னு சொல்லு ரெண்டு மூணு ஆட்ட வித்து அனுப்புனாக. அங்க அரிசியில்லாமச் சோறு சரியாப் போடமாட்டாங்கன்னு சத்தம் போட்டாங்களாம். எல்லாத்தவும் இழுத்து மூடி வெறட்டியடிச்சிட்டான்.”

“சோறில்லாம வகுத்துப் பசியோட எப்பிடி உக்காந்துட்ருக்கிறது. ஒங்கய்யாவுக்குக் கோவங் கோவமாருக்குமே.”

“அதுக்கென்ன செய்யிறது. பொட்டியாருக்கு கூழுக்களின்னா மொகஞ் சுண்டும். எங்கம்மா வேல செஞ்சிட்டு வார தவசத்துலதான் கம்மங்கஞ்சி காச்சிக் குடுக்கிறது.”

“ஒங்க வீட்டோரம் பிச்சையா குடும்பத்தோட எங்கயோ போயிட்டானாமில்லடா?”

“ஆமா, மலப்பக்கம் போயிட்டான். வீட்ல கஞ்சிக்கில்லன்னா என்ன செய்யிறது. வேற வேலையுமில்ல.”

“கெணத்துக் காடெல்லாம் தண்ணியில்லாமக் கெடக்கையில என்ன வேலருக்கும்.”

”ஙோத்தா, மழையாச்சும் பேயுதா. வேண்டாம் வேண்டாமிங்கப் பேயிறது. இப்பிடி நேரம் போட்டெடுக்கிறது.”

“கொஞ்ச நா போச்சுனா எல்லாரும் கிளம்ப வேண்டியதுதான்.”

கமலை மாடுகள் கக்கிய நுரைக்குமிழ்கள் பறந்தவண்ணமிருந்தன. கமலையடித்த கிழவர் கூனைக்கொருக்க கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துக்கொண்டார். ஒரு கூனை தண்ணீர் ஊற்ற மாட்டு வாலைப் பிடித்துக்கொண்டு ரொம்ப தூரம் வடத்தில் உட்கார வேண்டியிருந்தது.

“அடேய் ஒழப்பீராம ஆட்டவுடுடா, எங்கயாச்சும் ஒடஞ்சிருச்சுனா எட வத்திப்போகும். ஆளுல்லாத நேரத்துல வண்ணாப் பெய வந்து வெளுத்துருக்கான் கெணத்துக்குள்ள. அவனுக்கு வேற எடங்கெடக்கல போலருக்கும். அது பாரு அந்த அழுக்குச் சீண்றத்துக்கு தண்ணிய வாயிக்கிட்டக் கொண்டு போக முடியல.”

ஆடுகள் ஆசை தீரத் தண்ணீர் குடித்துக் கிளம்பின. சில முதுகுதறி வெயிலுறைப்பை நாக்கால் தடவிச் சென்றன. கமலைக் குழியோரம் வைத்திருந்த தண்ணீர்ச் செம்பைத் தட்டிவிடாமல் பார்த்துக்கொண்டார் கிழவர்.

அவர்கள் மூன்ரு பேரும் முகங்கழுவித் தெளுச்சியாகப் புறப்பட்டார்கள்.

“ஒத்தக் கடையோரம் போயிக் கொஞ்சம் அமத்துவமே.”

”ரோட்டு மேலயா?”

“அதுக்கென்ன, வேற மரமெங்க இருக்கு. வாங்கப்பா போவோம்.”

சின்னவனுக்கு இதெல்லாம் மனசிலில்லை.

”எனக்குத் தண்ணித் தவிக்குது. இது வெறுஞ் சவருத் தண்ணி. வாயில் வய்க்க முடியல.”

”எங்களுக்கும் தவிக்கத்தான் செஞ்சது. என்ன செய்யிறதுன்னு இதுலதான் ரெண்டு கையள்ளிக் குடிச்சோம்.”

“தாயக் கழிச்சாலும் தண்ணியக் கழிக்கப்புடாதுலே.”

“நான் எங்கயாச்சும் போயிக் குடிச்சிட்டு வாறென்.”

“அந்தா வாகமரத்தோரம் கரண்டுக் கெணறு இருக்குது பாரு அங்க போயிக் குடிச்சிட்டு வா. நாங்க இப்படியே ஒத்தக் கடைக்குப் போறோம்.”

சின்னவன் வேகமாகப் போய்த் திரும்புவதற்குள் ஆட்டுக்கூட்டம் ரோட்டு வேம்படியில் கூடிக்குழை கடித்துக்கொண்டிருந்தது. பெரியவன் அவசரத்தில் தொரட்டிக்கம்பால் வேப்பங்குழைகளை வளைத்து இழுத்துப் போட்டான். ஆடுகள் அமர்ந்து தின்பதைப் பார்க்க சந்தோசமாயிருந்தது அவனுக்கு.

“என்னலே தண்ணி குடிச்சயா?”

“குடிச்சேன். கெணத்துக்காரப் பெய படிய இடிச்சுப் போட்ருக்கான்.”

”பெறகு?”

“கரண்டுக் கொழாயி வழியா எறங்கிக் குடிச்சிட்டு வாறென்.”

அண்ணாந்திருந்த பெரியவன் கொஞ்சம் குனிந்து பார்த்தான். அந்த நேரத்தில் கிழக்கேயிருந்து முரட்டுவாக்கில் வந்த கார்ச்சத்தத்துக்கு ஆட்டுக்கூட்டம் ஒரேயடியாக விரண்டதைப் பார்த்ததும் சின்னவன் வாய்க்கு வந்தபடி வைதுகொண்டே காருக்குப் பின்னால் ஓடிக் கல்லெறிந்தான். அப்பவும் பெரியவன் குழையிழுத்துக் கொண்டு தானிருந்தான்.

சிதறிக்கிடந்த ஆடுகளை ஒன்று திரட்டித் திருப்பி வந்த இன்னொருத்தன். “அந்தக் கொழாயில பெரிய பாறையத் தூக்கிப் போட்ருக்கணும்லே” என்று தென் சரிவில் உயர்ந்து தெரிந்த ட்ரான்ஸ்பாரத்தை நோக்கி கல் உச்சினான்.

வெள்ளாடுகள் குழைகடிப்பதில் அமைதி கண்டிருந்தன.

2. ரீதி - பூமணி Eegarai_Bar




2. ரீதி - பூமணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 16, 2015 7:09 am

மிகவும் நன்று

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக