புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவை சொன்ன கதைக் காடு Poll_c10பறவை சொன்ன கதைக் காடு Poll_m10பறவை சொன்ன கதைக் காடு Poll_c10 
65 Posts - 63%
heezulia
பறவை சொன்ன கதைக் காடு Poll_c10பறவை சொன்ன கதைக் காடு Poll_m10பறவை சொன்ன கதைக் காடு Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
பறவை சொன்ன கதைக் காடு Poll_c10பறவை சொன்ன கதைக் காடு Poll_m10பறவை சொன்ன கதைக் காடு Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பறவை சொன்ன கதைக் காடு Poll_c10பறவை சொன்ன கதைக் காடு Poll_m10பறவை சொன்ன கதைக் காடு Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பறவை சொன்ன கதைக் காடு Poll_c10பறவை சொன்ன கதைக் காடு Poll_m10பறவை சொன்ன கதைக் காடு Poll_c10 
1 Post - 1%
viyasan
பறவை சொன்ன கதைக் காடு Poll_c10பறவை சொன்ன கதைக் காடு Poll_m10பறவை சொன்ன கதைக் காடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவை சொன்ன கதைக் காடு Poll_c10பறவை சொன்ன கதைக் காடு Poll_m10பறவை சொன்ன கதைக் காடு Poll_c10 
257 Posts - 44%
heezulia
பறவை சொன்ன கதைக் காடு Poll_c10பறவை சொன்ன கதைக் காடு Poll_m10பறவை சொன்ன கதைக் காடு Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பறவை சொன்ன கதைக் காடு Poll_c10பறவை சொன்ன கதைக் காடு Poll_m10பறவை சொன்ன கதைக் காடு Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பறவை சொன்ன கதைக் காடு Poll_c10பறவை சொன்ன கதைக் காடு Poll_m10பறவை சொன்ன கதைக் காடு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பறவை சொன்ன கதைக் காடு Poll_c10பறவை சொன்ன கதைக் காடு Poll_m10பறவை சொன்ன கதைக் காடு Poll_c10 
17 Posts - 3%
prajai
பறவை சொன்ன கதைக் காடு Poll_c10பறவை சொன்ன கதைக் காடு Poll_m10பறவை சொன்ன கதைக் காடு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பறவை சொன்ன கதைக் காடு Poll_c10பறவை சொன்ன கதைக் காடு Poll_m10பறவை சொன்ன கதைக் காடு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பறவை சொன்ன கதைக் காடு Poll_c10பறவை சொன்ன கதைக் காடு Poll_m10பறவை சொன்ன கதைக் காடு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பறவை சொன்ன கதைக் காடு Poll_c10பறவை சொன்ன கதைக் காடு Poll_m10பறவை சொன்ன கதைக் காடு Poll_c10 
7 Posts - 1%
mruthun
பறவை சொன்ன கதைக் காடு Poll_c10பறவை சொன்ன கதைக் காடு Poll_m10பறவை சொன்ன கதைக் காடு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவை சொன்ன கதைக் காடு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 08, 2015 1:35 am


ஊரு தாண்டி பெரிய காடு. சூரிய வெளிச்சம்கூடக் கொஞ்சமாத்தான் காட்டுக்குள்ள நுழையும். நிலா வெளிச்சம் மாதிரிதான் பகல் இருக்கும். இரவைப் பத்திச் சொல்லவே வேண்டாம். அடர்ந்த காடு அப்படித்தானே இருக்கும்?

மனிதர்கள் யாரும் அந்தக் காட்டுக்குள் போனதில்ல. மனிதர்கள் போகாத காட்டுல மரங்களும் விலங்குகளும் நிம்மதியா இருந்துச்சுங்க. பெரிய பெரிய மரங்க. எவ்வளவு பெருசு தெரியுமா? வகுப்புல இருக்கிற எல்லாரும் கைகளக் கோத்துக்கிட்டுக் கட்டிப் பிடிச்சாலும் மீதி இடம் இருக்கும். அவ்வளவு பெருசு. மரங்களுக்கு நடுவுல உடம்ப நுழைச்சு மெதுவாத்தான் போகணும். விலங்குகள் அப்படித்தான் போகும். மரங்கள் இல்லாத புல்வெளிகளும் ஆங்காங்கே இருந்துச்சு.

அந்தக் காட்டுக்கு என்ன பேரு? கதைக் காடுன்னு பேரு. காட்டுக்கு யாரு ராஜா? சிங்கம்னு நீங்க சொல்றது காதுல விழுது. அதான் இல்ல. ராஜாவெல்லாம் கிடையாது. குட்டி இளவரசி மட்டுமே இருந்தா. முயல்தான் அந்த இளவரசி. சொகுசா அவள் இருப்பா. எப்பவும் தூங்கிக்கிட்டுக் கனவிலேயே இருப்பா. யாரும் அவள எழுப்பக் கூடாது. எழுப்புனா கோபம் கோபமா வரும். நல்லாத் தூங்கி எழுந்ததும் தான் கண்ட கனவைக் கதையா சொல்லுவா.

ஒவ்வொரு கதையும் ஒரு ருசி. ஒரு கத பலா ருசியா இருக்கும். இன்னொன்னு மாம்பழ ருசியா இனிக்கும். ஆயிரம் ருசியோட கத சொல்லுவா. முயல் சொல்ற கதையைக் கேட்கறதுக்கு நிலா, நட்சத்திரங்கள் இறங்கி மரத்து மேல உட்கார்ந்துடும். விலங்குகள் எல்லாமும் புல்வெளியில படுத்துட்டும் உட்கார்ந்துட்டும் கண் கொட்டாமக் கேட்கும். காடே கதையைக் கேட்கும்.

காட்டில ஆயிரமாயிரம் உயிர்கள். யாரும் யாரையும் சாப்பிடுறதில்ல. காட்டுக்கு நடுவுல ஒரு ஏரி இருக்கு. விலங்குகள், பறவைகள் எல்லாத்துக்கும் ஏரி நீர்தான் உணவு. பூச்சிகளுக்குக் காத்துதான் உணவு. மரங்கள் நிறைய இருக்கறதால மழைத்தண்ணி எல்லாம் அப்படியே நிலத்துக்கு அடியிலேயே இருக்கும். மரங்களும் பசியில்லாம வளர்ந்துச்சு. எல்லா உயிர்களுக்கும் காடு மிகப் பெரிய வீடா இருந்துச்சு.

‘கதைக் காடு’ பசுமையாவும் பூக்கள் பழங்கள் நெறைஞ்சும் இருந்துச்சு. காட்டை ஒரு இடம் விடாம இளவரசி முயல் பார்த்து வரும். எல்லா உயிர்களும் காட்டில குதூகலமாக வாழ்ந்துச்சுங்க. பறவைகள் வானத்துக்கு மேல உயரமா பறந்து போகும். சில நேரம் நட்சத்திர உயரத்துக்குப் பறந்து திரும்பும். அப்படித் திரும்பி வர்றப்ப ஒரு கதையோட வரும். பறவை சொல்ற கதையைக் கேட்கறதுக்குக் காட்டில எல்லாரும் காத்திருப்பாங்க.

விலங்குகள் கதை சொல்லாதா? அதுங்களும் கதை சொல்லும். எப்படி? காத்துல கரைஞ்சு காடு தாண்டி இருக்கிற ஊர்களுக்கு எப்பவாவது போகும். காத்தா அலைஞ்சு மனுசங்களோட கதைகளைச் சொல்லும். ஒரு விலங்குதான் ஊருக்குள்ள போயிட்டு வரும்.

பூச்சிங்க மட்டும் சும்மா இருக்குமா? பூக்களுக்கு உள்ள நுழைஞ்சு பூக்களோட உலகத்தைக் கதை கதையா பேசும்.

விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் மனுசங்களைப் பிடிக்கல. ஏன் பிடிக்கல? காத்து ஆகாயம் பூமி எல்லாத்தையும் மனுசங்க கெடுத்துட்டதாக அதுங்க நினைச்சது. கதைக்காடு கதைகளால் நிரம்பி வழிஞ்சுச்சு.

பசுமையான புல் படுக்கை. இலைகளோட மெல்லிய சத்தம். முயல் இளவரசி தூங்கிட்டிருந்தா. சிங்கம் ஓடி வந்து தயங்கி நின்னுச்சு. எழுப்பலாமா வேண்டாமான்னு யோசனை. அதுக்குள் அந்த எடத்துக்கு எல்லா விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் வந்துடுச்சுங்க. அப்பவும் முயல் இளவரசி தூங்கிட்டுதான் இருந்தா. குட்டி மான் ஓடிப்போய் முகத்தால முட்டி அவளை எழுப்பிச்சு. கண்ணைத் தொறந்து எல்லாரையும் பார்த்தா. எல்லாரும் பயந்து நின்னத முயல் இளவரசி தெரிஞ்சிக்கிட்டா.

“என்ன ஆச்சு எதற்குப் பயந்து நடுங்கறீங்க?” அமைதியாகக் கேட்டா.

“ஆபத்து வந்துடுச்சு இளவரசி. நம்ம காட்டுக்குள் ரெண்டு மனுஷங்க புகுந்துட்டாங்க. காட்டுல ஏராளமான மரங்கள் இருக்கு. வெட்டி வித்தா நிறையப் பணம் கிடைக்கும்னு பேசிக்கிறாங்க. நம்ம நிலத்துக்கு அடியில நிலக்கரி, எண்ணெய், தங்கம் எல்லாம் இருக்குதாம். நாங்க எல்லாரும் அவங்க பேசினதக் கேட்டோம். பயந்து ஓடி வந்துட்டோம்” விலங்குகள் இணைஞ்சு ஒரே குரல்ல சொல்லிச்சு.

“கவலைப்படாதீங்க, கதைக் காட்டை மனுஷங்களால அழிக்க முடியாது. கத சாமி பார்த்துக்குவாரு. நல்ல கனவுக்கு நடுவுல என்னை எழுப்பிட்டீங்க. கொஞ்சம் தூங்கிக் கனவ முழுசாப் பார்த்துட்டு உங்களுக்குச் சொல்றேன். போயிட்டு வாங்க”ன்னு முயல் இளவரசி சொன்னா. புல் மேல மெல்ல சாஞ்சு உடனே தூங்கிட்டா. எல்லாரும் பயத்தோட திரும்புனாங்க.

காட்டுக்குள்ள நொழஞ்ச மனுஷங்க காதுல... கழுத்து மணி ஓசை கேட்டுச்சு. இருட்டுல அவங்களுக்கு எதுவும் தெரியல. கொஞ்ச நேரம் கழிச்சு ஆட்டுக்குட்டின்னு தெரிஞ்சிட்டாங்க. ரெண்டு மனுஷங்க. அவங்க கையில துப்பாக்கி. ‘மெ.... மெ....’ங்கற சத்தம். காடு முழுசும் ‘மெ...’ சத்தம் எதிரொலிச்சது. இடி ஒசை மாதிரிச் சத்தம் காதுல விழுவே மனுஷங்க பயந்துட்டாங்க. முதுகைப் பிடிச்சு யாரோ தள்ளுன மாதிரி தடுமாறுனாங்க.

அப்போ வானத்துல ரெண்டு பறவைங்க வெளிச்சமா வந்ததைப் பார்த்தாங்க. காடு பிரகாசமாயிடுச்சு. விலங்குக மெல்ல மெல்ல பக்கத்துல வந்ததைப் பார்த்து ரெண்டு பேரும் துப்பாக்கிய நீட்டினாங்க. வெளிச்சப் பறவைங்க தீப்பறவையாக மாறி.... துப்பாக்கிங்க மேல ஒக்காந்துச்சுங்க. துப்பாக்கிங்க தீப்பிடிச்சு கரிக்கட்டைங்களாச்சு. விரலெல்லாம் வெந்து மனுஷங்க கதறுனாங்க. தீப்பறவை அவங்க தலைமேல உட்கார்ற மாதிரிப் பறந்துச்சு. மனுஷங்க பயந்து காட்டிலிருந்து வெளியே ஓடிட்டாங்க.

அப்புறமென்ன கதைக் காட்டுல இருக்குற விலங்குகள் எல்லாத்துக்கும் ஒரே கொண்டாட்டம்தான்.

க.வை. பழனிச்சாமி @ தி இந்து




பறவை சொன்ன கதைக் காடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக