புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_c10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_m10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_c10 
30 Posts - 50%
heezulia
 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_c10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_m10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_c10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_m10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_c10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_m10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_c10 
72 Posts - 57%
heezulia
 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_c10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_m10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_c10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_m10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_c10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_m10 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 06, 2015 12:07 am

First topic message reminder :


ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு தேதி - தொடரும் சஸ்பென்ஸ் - ஏகிறும் டென்சன்

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு தேதி தள்ளிக் கொண்டே செல்வதால், தமிழக அமைச்சர்களும், அதிமுகவினரும் கடும் டென்சனில் உள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீிதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, குற்றவாளிகள் தரப்புக்கு 4 வருட சிறை தண்டனையும், ரூ 100 கோடி அபராமுதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதனால், இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கர்நாடக நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் பவானி சிங்கின் நியமனத்தை தமிழக அரசே நியமனம் செய்ததால், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பவானி சிங் நியமனம் குறித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று பரபரப்பு தீர்ப்பளித்தனர்.

அந்தத் தீர்ப்பிலேயே, இந்த வழக்கை தொடுத்த திமுக பொதுச் செயலர் பேராசிரியர் அன்பழகனின் எழுத்து பூர்வமான வாதங்களையும், கர்நாடாக அரசின் எழுத்துப் பூர்வமான வாதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பவானிசிங் வைத்த வாதங்களை ஏற்றுக் கொள்ள தேவையில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த வாதங்களை கணக்கில் கொண்டு, நன்கு பரிசீலித்த பிறகே தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி குமாரசாமி நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின்படி, கர்நாடக உயர் நீதி மன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 81 பக்கம் மனுவும், கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 18 பக்க எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தனர்.

தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருக்குமா அல்லது அவரது எதிர்காலத்தை மீண்டும் புரட்டிப் போடும் வகையில் இருக்குமா என மில்லியன் டாலர் கேள்வி அதிமுக , திமுக தரப்பில் மட்டும் இன்றி இந்தியா முழுமைக்கும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், இந்த வழக்கு தீர்ப்பு தேதி குறித்து மே 8 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதிக்குள் நீதிபதி குமாரசாமி வெளியிடுவார் என கர்நாடாகவில் தகவல் பரவிவருகின்றது.

இந்த தகவல் உறுதியாகாத நிலையில், தமிழகத்தில் அதிமுக அமைச்சர்கள் கடும் டென்சனில் உலா வருகின்றனர்.

முன்னிலையில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்துள்ள கூட்டுச்சதி குற்றச்சாட்டை நீக்க வேண்டும் என நால்வர் தரப்பிலும் கடந்த வாரம் தாக்கல் செய்த‌ மனு விசாரணைக்கு வந்தது.



 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 10, 2015 7:24 am

மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு:
-
பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெ., ஆஜராக தேவையில்லை:

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sun May 10, 2015 11:35 am

ஏராளமான கருப்பு ஆடுகள் நம்ம நாட்டில் சுதந்திரமாக சுத்தி திரியும்போது இந்த அம்மாவை மட்டும் தண்டிப்பது வருத்தமாக இருக்கிறது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 10, 2015 11:49 am

அடுத்த வாரம் மகிழ்வுந்தில் கோவை செல்லலாம் என்று இருக்கின்றோம். கல்லடியையும் சொல்லடியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ தெரியவில்லை. ஒன்னும் புரியல

ponsamon
ponsamon
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 10/05/2015

Postponsamon Sun May 10, 2015 12:41 pm

டோன்ட் வொர்ரி அம்மா வில் return

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 10, 2015 2:05 pm

anikuttan wrote:ஏராளமான கருப்பு ஆடுகள் நம்ம நாட்டில் சுதந்திரமாக சுத்தி திரியும்போது இந்த அம்மாவை மட்டும் தண்டிப்பது வருத்தமாக இருக்கிறது.

நல்லா இருக்கு உங்க நியாயம் புன்னகை , உங்களை போன்றவர்களை தான் அதிமுகவுக்கு தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 11, 2015 12:33 am

தொண்டர்கள் நிதானம் காக்க வேண்டும்; ஜெயலலிதா மீண்டும் கட்டளை

ரெயில் முன் பாய்ந்து அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து, தொண்டர்கள் உணர்ச்சி வயப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று ஜெயலலிதா மீண்டும் கட்டளையிட்டுள்ளார்.

இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ரெயில்முன் பாய்ந்துதற்கொலை

அ.தி.மு.க. தலைமையின் மீது மிகுந்த பேரன்பு கொண்டு பல்வேறு தியாகங்களை தொடர்ந்து செய்து வரும் கழக தொண்டர்கள், ஒரு சில இடங்களில் எனக்குப் பெரிதும் மனவேதனையைத் தருகின்ற வகையில் தங்கள் இன்னுயிரையே மாய்த்துக்கொள்ளும் செயல்களிலும் ஈடுபட்டுவிடுகின்றனர்.

அண்மையில், திருநெல்வேலி புறநகர் மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி 5-வது வார்டு செயற்குழு உறுப்பினர் எம்.முத்தையா ரெயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகவும் துடிதுடித்தேன்.

நிதானம் காக்க வேண்டும்

என் உயிரினும் மேலான எனதருமைக் கழக தொண்டர்கள் உணர்ச்சிவயப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று மீண்டும் கட்டளை இடுகிறேன்.

முத்தையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 12:35 am

//என் உயிரினும் மேலான எனதருமைக் கழக தொண்டர்கள் உணர்ச்சிவயப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று மீண்டும் கட்டளை இடுகிறேன்.//

இதைப்படிக்கும் போதே நாளை என்ன விபரீதம் நடக்கப்போகிறதோ என்று பயமாய் இருக்கே சிவா ! சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 06, 2015 1:01 am

ஜெயலலிதா வழக்கில் ஜூலை 1-ம் தேதிக்கு பிறகு மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும். வக்கீல் ஆச்சார்யா

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு கடந்த மாதம் 11–ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா ஆகியோர் மட்டுமின்றி தமிழக எதிர்க்கட்சிகளும் வந்தன.இந்த நிலையில் கர்நாடாக மாநில மந்திரி சபை முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் கூடி ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆச்சார்யாவுக்கு உதவ வழக்கறிஞர் சந்தேஷ் சவுடாவையும் கர்நாடக அரசு நியமித்துள்ளது.

மேல் முறையீடு எபோது செய்யபடும் எனபது குறித்து நேற்று ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வக்கீல் ஆச்சார்யா அளித்த பேட்டி விவரம் அவருமாறு

எஸ்எல்பி தயார் செய்ய ஒன்று இரண்டு வாரங்கள் ஆகலாம்.தற்போது உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறை நடைமுறையில் உள்ளது. எனவே அவசர வழக்குகளை மட்டுமே உடனடியாக விசாரணைக்கு எடுப்பர். இவ்வழக்கு அவசர வழக்காக கருதப்பட முடியாது என்பதால், விடுமுறை கால பெஞ்சில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாது என்று கருதுகிறேன். எனவே, ஜூலை 1ம் தேதிக்கு பிறகு மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும்.

வழக்கமாக, அப்பீல் மனுக்கள் மீது சட்டத்துறை செயலாளர் இறுதி முடிவு எடுப்பார். இந்த வழக்கு, ஒரு மாநில முதல்வருக்கு எதிரானது என்பதால், கர்நாடக முதல்வர், ஒட்டுமொத்த அமைச்சரவை சம்மதத்துடன் இம்முடிவை எடுத்துள்ளார். இந்த கூட்டு முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. சட்டப்படிதான் எல்லாம் நடந்துள்ளது.

காங்கிரசில் ஒரு கோஷ்டி, மேல்முறையீடு வேண்டாம் என்று கூறிவந்தாலும், மற்றொரு கோஷ்டி மேல்முறையீட்டுக்கு ஆர்வம் காண்பித்தது. எனக்கே காங்கிரசிலிருந்து சிலர் கடிதம் எழுதி, உங்கள் முயற்சி தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இறுதியில் சட்டப்படியே மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பிலுள்ள ஏகப்பட்ட தவறுகளை அடிப்படையாக வைத்து, மேல்முறையீட்டின்போது வாதம் செய்யப்படும். அக்னிகோத்ரி வழக்கில், வருமானத்துக்கு அதிகமாக 10 சதவீதத்துக்கு குறைவாக சொத்து இருந்ததால் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால், அது ஒன்றும் கணக்கீடு அல்லது அறிவியல் பார்முலா கிடையாது. எல்லாவற்றிலும் அதை அப்ளை செய்யவும் முடியாது.

உதாரணத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் வைத்துள்ள ஒருவர், 900 கோடிகளை வருவாய்க்கு அதிகமாக சேர்த்தாலும், அது 10 சதவீதத்துக்கு குறைவாகத்தான் வருகிறது. இதற்காக 900 கோடி ரூபாயை சுருட்டியவரை விடுதலை செய்துவிட முடியுமா? 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான வித்தியாசமாக இருந்தால், பரவாயில்லை என்று சொல்லலாம். இதையெல்லாம், உச்சநீதிமன்றத்தில் எடுத்து வாதிடுவோம்.

மேல்முறையீடு எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாது. 18 வருடங்களாக நடந்த வழக்கு, ஹைகோர்ட்டில் நான்கே மாதங்களில் முடிவடைந்தது. உச்சநீதிமன்றத்தில் எப்படி நடைபெறும் என்று தெரியாது. ஆனால், ஊழல் தடுப்பு சட்டப்படி, இதுபோன்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

இவ்வாறு ஆச்சாரியா கூறியுள்ளார்.



 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 06, 2015 1:01 am

ஜெயலலிதா வழக்கு அப்பீல் அரசு வழக்கறிஞராக ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு கடந்த மாதம் 11–ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா ஆகியோர் மட்டுமின்றி தமிழக எதிர்க்கட்சிகளும் வந்தன.இந்த நிலையில் கர்நாடாக மாநில மந்திரி சபை முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் கூடி ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆச்சார்யாவுக்கு உதவ வழக்கறிஞர் சந்தேஷ் சவுடாவையும் கர்நாடக அரசு நியமித்துள்ளது. இவ்வழக்கில், அரசு வழக்கறிஞராக ஐகோர்ட்டில் ஆஜரான ஆச்சாரியாவையும், அவரின் உதவிக்காக வழக்கறிஞர் சந்தேஷ்சவுட்டாவையும் சுப்ரீம்கோர்ட்டிலும் தொடரச் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.அதற்கான அரசாணை, இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு தொடரும் வழக்கு என்பதால், இந்த அரசாணை அவசியமாகும். ஜூலை 1ம் தேதிக்கு பிறகு மேல்முறையீடு செய்ய கர்நாடக தரப்பு திட்டமிட்டுள்ளது.



 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 06, 2015 1:02 am

ஜெயலலிதா வழக்கை நடத்த செலவிட்ட ரூ.5.11 கோடியை தமிழக அரசிடம் வசூலிப்போம் --கர்நாடக அரசு

பெங்களூரு விதானசவுதாவில் கர்நாடக சட்டத்துறை மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துகுவிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி பெங்களூரு தனிக்கோர்ட்டு மற்றும் கர்நாடக ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. கர்நாடக ஐகோர்ட்டில் நடந்த மேல் முறையீட்டு விசாரணையின்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் அரசு சிறப்பு வக்கீலாக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார்.

மேலும் கர்நாடக அரசு தரப்பு வாதமும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்த கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

இந்த வழக்கை நடத்துவதற்கு கர்நாடக சட்டத்துறை சார்பில் ரூ.5.11 கோடி வரை செலவிடப்பட்டு இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது. அதுபோல, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான செலவு விவரங்கள் குறித்து உள்துறை அமைச்சகத்திடம் கேட்டு உள்ளேன். அதுபற்றிய விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான செலவு தொகையையும் தமிழக அரசிடம் இருந்து பெறுவோம்.

மேலும் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்கு ஆகும் முழு செலவையும் தமிழக அரசிடம் இருந்து பெறுவோம். இந்த வழக்கிற்கு ஆகும் செலவை தமிழக அரசிடம் இருந்து பெற்று கொள்ளும்படி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.”

இவ்வாறு மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா கூறினார்.

கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதி சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி (தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்) ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்--அமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாகவும், அதனால் ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.18.9.1996-ந் தேதி ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.

19.11.1999-ந் தேதி தொடங்கிய விசாரணை 18.7.2001-ந் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 259 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யபட்டன. அவர்களிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 2001-ம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 79 சாட்சிகளிடம் மறு விசாரணை நடந்தது. இந்த நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களில் முதல் நபர்(ஜெயலலிதா) முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ளதால் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அப்போதைய நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே.சீமா அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து கர்நாடக அரசு 27.12.2003-ந் தேதி அன்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தனிக்கோர்ட்டு அமைத்து உத்தரவிட்டது.



 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நிலவரம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக