புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
59 Posts - 55%
heezulia
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
54 Posts - 55%
heezulia
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_m10 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயை பற்றிய தத்துவக் கதைகள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:10 am

First topic message reminder :

 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 AojoAMsRIiKrU5hSGnfV+agTOvgEK

மாயையும் பிரம்மமும் முறையே, ஓடும் பாம்பையும், சலனமற்றுக்கிடக்கும் பாம்பையும் ஒக்கும். இயங்கும் சக்தி மாயையாகும்; நிலையான சக்தி பிரம்மம். இவ்வாறு மாயையைப் பற்றி இராமகிருஷ்ணபரமகம்சர் கூறியுள்ளார். “மாயை போலியானது, உண்மையற்றது, ஏமாற்றுவது” என்று இருக்கு வேதம் கூறுகின்றது. “பல்வேறு வகைப்பட்ட தோற்றங்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல் கொண்டது மாயை” என்று அதர்வண வேதம் கூறுகிறது. உபநிடதங்களும் மாயையைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன; “பிரபஞ்சத்தின் தோற்றத்திற்குக் காரணம் மாயை” என்று சுவேதாஸ்வர உபநிடதம் கூறுகின்றது. உலகப் படைப்புக்கு மாயை முதற்காரணமாகவும், சக்தி துணைக்காரணமாகவும், சிவன் நிமிர்த்த காரணமாகவும் இருக்கின்றான்” எனப் புராணங்கள் கூறுகின்றன. “மா” என்றால் தோன்றல். “யா” என்றால் ஒடுங்கல் என்று மாயைக்குப் பொருள் சொல்லப்படுகின்றது. ஆன்மாவும் மாயையும் சேர்ந்தால் எப்பொழுதும் துன்பமே உண்டாகும். இதனால் தான் பிறப்புக்கள் உண்டாகின்றன. ஆன்மாவும் பிரம்மமும் சேர்ந்தால் பேரின்பம் உண்டாகும். இதனால் பிறப்பற்ற நிலை உண்டாகும்.

எப்பொருள் மீதாவது ஆசையுள்ளவன் மாயையால் பீடிக்கப்பட்டவனாவான். உதாரணமாகப் பணத்தின் மீது ஆசை; உணவின் மீது ஆசை; பெண்ணின் மீது ஆசை. இவ்வாசை உள்ளவர்கள் எல்லோரும் மாயையின் வசப்பட்டவர்கள் என்று வியாசமுனிவர் கூறியுள்ளார். மாயை இரு வகைப்படும். உலகை உயிர்ப்பிப்பதும் மாயை தான்; உலகை துன்பப்படுத்துவதும் மாயை தான். உலக உய்விக்கும் மாயையை “வித்தை” என்றும், உலகைத் துன்பப்படுத்தும் மாயையை அவித்தை என்றும் கூறப்படுகிறது. ஈஸ்வரனிடம் வித்தை, அவித்தை என்ற இரு மாயைகளும் உள்ளன. வித்தியா மாயை உயிர்களை இறைவனோடு சேர்த்துவைக்கும். அவித்தியா மாயை உயிர்களுக்குப் போகங்களைக் கொடுத்து அவைகளை இறைவனை விட்டு நீங்கச் செய்யும். மாயை தான் பிரம்மத்தைக் காணச்செய்கின்றது. மாயை இல்லாவிட்டால் உலகம் இயங்காது;. உயிர்களால் இறைவனின் மகிமைகளை அறிந்து கொள்ள முடியாது. பிரம்மஞானம், பரமானந்தம், பேரின்பம், முத்தி முதலியவைகளெல்லாம் மாயையின் மூலமே உயிர்களுக்குக் கிடைக்கின்றன. இவ்வாறு இந்து சாஸ்த்திரநூல்கள் கூறுகின்றன. அப்படியான வல்லமை பொருந்திய மாயையின் குணங்களைப் பற்றிய தத்துவங்களை இந்நூலில் கதைகளாக எழுதியுள்ளேன்.


கே.வி. குணசேகரம்



 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:19 am


“இந்த வகையில் நான் சோதிடத்தைப் பற்றியும் உனக்குக் கூறுதல் வேண்டும். சோதிடம் உண்மையானது. ஆனால் மாயையின் வசப்பட்டது. மாயையின் வசப்பட்ட ஆன்மாவுக்கு அது பயனளிக்காத நம்பிக்கையாக வாழ்நாள் பூராகவும் இருக்கும்”. “மன்னா, நீ திருகோண நட்சத்திரத்தில் பிறந்தவன். உனது ராசி மகரம். இப்பொழுது உனக்கு அட்டமத்துச் சனி நீங்கியுள்ளது. ஆசைகொள்ளாது நீதியாக வாழ்ந்து தர்மம் செய்பவனைக் கிரகங்கள் பெரிதாக வருத்தாது. நீ அட்டமத்துச் சனி நடந்த காலத்திலும் போர்களில் வெற்றியடைந்தாய். அதற்குக் காரணம் நீ தர்மமான முறையில் நடந்து கொண்டதுதான்”. “சென்ற மாதம் அட்டமத்துச் சனி நீங்கிவிட்டதென்று நீ மகிழ்ச்சியடைய முடியாது. ஏனெனில் வியாழபகவான் இன்னும் மூன்று மாத காலத்திற்கு ஜென்மத்திலேயே இருப்பார். இது நல்லதல்ல. கிரகங்கள் மாறுவது போல வக்கிரமடைவதுமுண்டு. வக்கிரமடைதல் என்பது திரும்பவும் இருந்த இடத்திற்கு வருதல். வியாழன் இரண்டாம் இடத்திற்கு வந்து இரண்டு மாத காலத்தின் பின் சனிபகவான் வக்கிரமடைந்து மீண்டும் ஆறு மாதகாலத்திற்கு அட்டமத்திற்கு வருகிறார். இதனால் மீண்டும் உனக்கு அட்டமத்துச் சனியால் துன்பம் உண்டாகும்”. “அதன் பின் இராகுபகவான் பதினொராம் இடத்திற்கும், கேதுபகவான் ஐந்தாம் இடத்திற்கும் வந்து ஒருவருட காலம் இருப்பார். இக்காலமும் உனக்கு நல்லதல்ல. இதனால் அட்டமத்துச்சனி விலகியபோதும் ஏனைய கிரகங்களால் துன்பமுண்டு”.

“நவக்கிரகங்கள் யாவும் ஒருவருக்கு நன்மை செய்வதற்காகவோ, தீமை செய்வதற்காகவோ ஒன்றுபட்டதில்லை. ஒரு கிரகம் நன்மை செய்யும் போது மறு கிரகங்கள் தீடைசெய்யும். இல்லாவிட்டால் தடைகளைத் தரும். அதனால் மனிதனுக்குக் கிரகங்களால் நன்மைகளும் தீமைகளும் அடிக்கடி வரும். கடவுள் பக்தியுள்ளவர்களைக் கிரகங்களால் வருத்த முடியுமே தவிரக் கெடுக்க முடியாது. மனிதர்கள் கிரகங்கள் நல்ல இடத்தில் சஞ்சரிக்கும் போது தமக்கு நல்லவை நடைபெறும் என்ற மாயைக்குட்படாது தர்மமான முறையில் வாழ்வதன் மூலமே நன்மைகளைப் பெறலாமென நம்பவேண்டும்”. “மன்னா, மனம் கட்டுப்படாது அலையும் தன்மை கொண்டது. எனினும் அதைக் கட்டுப்படுத்துவதற்குப் பயிற்சியும் வைராக்கியமும் உதவும். மனதை அடக்காதவன் இறைவனை அடையமாட்டான். மனதை அடக்கி இறைவனை அடைய முயல்பவனே இறைவனை அடைவான். குணங்களான மாயையை நீக்க முடியாது. யார் இறைவனைச் சரணடைகிறார்களோ அவர்கள் இந்தக் குணங்களாளான மாயையை நீக்குவார்கள்”

“மன்னா, மரணகாலத்தில் தனது குலதெய்வங்களை நினைத்துக்கொண்டு உடலைத்துறந்து யார் போகிறானோ அவன் அக்குல தெய்வத்தை அடைவான். அதுபோல இறுதிக்காலத்தில் எப்பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை உகுக்கிறானோ, எப்பொழுதும் அப்பொருளை விரும்புபவனாகிய அவன் அதையே அடைவான். அதனால் சர்வ காலமும் இறைவனை நினைத்துக்கொண்டே வாழ்பவன்; மனத்தையும் புத்தியையும் இறைவனிடம் அர்ப்பணம் செய்வதால் தான் இறைவனை அடைகிறான்”. “சுவாமி, பற்றுக்களால் நான் தினமும் துன்பப்பட்டுக்கொண்டே இருந்தேன். எனது மனைவியை விட்டுப் பிரியவே முடியவில்லை. அவள் எனது பலவீனத்தைப் பயன்படுத்தி என்னைத் தனது விருப்பிற்கேற்ப நடத்துவதாக நாட்டு மக்கள் எந்நாளும் குறைகூறுவதாக எனது ஒற்றர்கள் அடிக்கடி கூறுவார்கள். எனது மனைவியின் பேரழகு என்னை ஒரு போதும் சிந்திக்கவிடுவதில்லை. அவளது கண்களைக் கண்டால் நான் மெய்மறந்துவிடுவேன். அவள் என்னை அணைத்தால் நான் இவ் உலகையே மறந்துவிடுவேன். என்னை இறுக அணைத்து முத்தமிட்டாளானால் நான் என்னையே இழந்துவிடுவேன். அதன் பின் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியாது. இதனால் செய்யக்கூடாத பல தீமைகளைச் செய்துவிட்டேன். அவளின் மேல் ஏற்பட்ட மோகத்தால் நீதி தவறிவிட்டேன். இப்போது அவற்றை எண்ணிப் பார்க்கையில் வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. இத்தீமைகளுக்கெல்லாம் பரிகாரம் தேடவேண்டும்” என்றான் மன்னன்.

“மன்னா, கவலை கொள்ளாதே. செய்தவை தவறு என்று உணர்ந்து கொள்பவன் இறைவனை நேசிக்கத் தொடங்குகிறான். மன்னா, முற்றும் உணர்ந்தவனை, அனைத்தையும் ஆளுபவனை, அணுவிலும் நுண்மையானவனை, அனைத்தையும், தாங்குபவனை சிந்தனைக்கெட்டாத வடிவுடையோனை, கதிரவனைப் போன்று ஒளிர்பவனை, அஞ்ஞான இருளுக்கு அப்பாற்பட்டவனை, பக்தியோடும், உறுதியான மனத்தோடும். யோகபலத்தோடும் பிரார்த்திப்பவன் இறைவனின் அம்சங்களைப் பெற்றவனாவான். அவனைப் பற்றுக்கள் அணுகாது. மன்னா, பரிபக்குவ நிலையை அடைவது எப்படியென்று உனக்கு உபதேசித்துள்ளேன். அதன்படி நடந்து ஆத்ம ஈடேற்றம் பெறுவாயாக”. என்று வாழ்த்தினார் நமசிவாயகம் சுவாமியார்.

“சுவாமி, வேட்டையாடக் காட்டுக்கு வரும்போதெல்லாம் தங்களைச் சந்தித்து உரையாடுவேன். அதில் மிகுந்த அவசரமிருக்கும். வேட்டையாடுவதை இடையில் விட்டுவிட்டு நாட்டுக்குத் திரும்பிவிடுவேன். இம்முறை தங்களுடன் ஆற அமர இருந்து உரையாடியமையால் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். வாழ்க்கை துன்பகரமானது; நிலையில்லாதது என்பதை புரிந்து கொண்டேன். காமவசப்பட்டமையால் அக்காமத்தைத் தீர்க்க முயன்றேனே தவிர நாட்டைப் பற்றிய நினைவு எனக்கு வரவில்லை. துயரத்துக்குரியவர் அல்லார் பொருட்டுத் துயரமடைந்தேன். ஞானிகளின் உபதேசங்களையும் கேட்காது அலட்சியப்படுத்தினேன். இறந்தவர்களுக்காகத் துன்பப்பட்டேன். ஆன்மாவுக்குரிய உடலில் இளமையும் யௌவனமும் நிலைத்திருக்கும் என்று நினைத்தேன். வாழ்க்கையில் பேரின்பத்தைத் தருவது அழகிய பெண்களின் மொழியும், உடலும் என்று நினைத்தேன். இல்லாதவற்றிற்கு இருப்பு உண்டென்று நம்பினேன். இப்பொழுது தான் உண்மையான நிலையை அறிந்து கொண்டேன். நித்தியமானதாய், நாசமற்றதாய், அளப்பரியதாய் இருக்கும் ஆன்மா பெற்ற உடலங்கள் யாவும் அழியும் தன்மை உடையனவென்றும் தெரிந்து கொண்டேன்”.

“ஆன்மா ஒருபோதும் பிறப்பதில்லை, இறப்பதுமில்லை. அது இல்லாதிருந்து பிறகு பிறந்ததல்ல. ஆன்மா பிறவாதது, இறவாதது, தேயாதது, வளராதது. உடல் அழியுமிடத்தும் ஆன்மா அழிவதில்லை. அது பழைய உடல்களை விட்டுவிட்டுப் புதிய உடலைத்தேடிக்கொள்ளும் என்பதையும் தெரிந்து கொண்டேன். அதனால் நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை விட்டு விட்டு நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக வாழப்போகிறேன். அது எனது ஆன்மஈடேற்றத்திற்கு உதவி புரியும்” என்றான் மன்னன். “நல்லது மன்னா, உடல்கள் அனைத்திலும் உறைகின்ற ஆன்மா என்றும் வதைக்கப்படாதது. ஆகையால் உயிர்களின் பொருட்டு நீ வருந்தாது உனது கடமைகளைச் செய். யாரும் ஒரு கணப்பொழுதேனும் செயலாற்றாது இருந்ததில்லை. ஏனென்றால் பிரகிருதியில் இருந்து உதித்த குணங்களால் ஒவ்வோர் உயிரும் தன் வயமின்றிக் கர்மம் செய்விக்கப்படுகின்றது என்பதை உணர்ந்து கொண்டாய். இனி நாட்டுக்குத் திரும்பி நல்லாட்சி செய்” என்று வாழ்ந்தினார் நமசிவாய சுவாமியார்.

 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Eegarai_Bar




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 02, 2015 10:17 pm

இதையும் கொஞ்சம் படிங்களேன்!

மாயை என்றால் என்ன?
சரவணன் wrote:"ஸ்வாமி ஜீ, எல்லாம் மாயை என்கிறார்களே, மாயை என்றால் என்ன?"

"நல்ல கேள்வி, மாயையை வார்தைகளால் விளக்க முடியாது, எனினும் வேதங்களும் உபநிஷத்களும் மாயையை பற்றி விளக்க முயற்சிக்கின்றன.எல்லோருக்கும் புரியும் வண்ணம் ஒரு கதை உள்ளது. அதை சொல்கிறேன் கேள்".

    "சரி, ஸ்வாமி ஜீ".

"ஒரு முறை அர்ஜுனனும் கண்ணனும் நடந்து போய்க்கொண்டிருக்கும் போது,அர்ஜுனனுக்கும் இதே சந்தேகம். அவர் கண்ணனிடம், கண்ணா மாயை மாயை என்கிறார்களே அது என்ன என்று எனக்கு சொல்லக்கூடாதா? என்று கேட்க,சொல்கிறேன். எனக்கு தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வா என்று சொல்ல, அர்ஜுனனும் அருகில் ஆறு இருக்கும் இடத்துக்கு வேகமாக ஓடி,ஆற்றில் ஓடுகின்ற நீரை ஒரு சொம்பு மொண்டு நிமிர்ந்து பார்க்கும் போது அங்கு ஒரு அழகிய பெண் ஒருத்தியை பார்த்து, அவள் மேல் ஆசை கொண்டு, அவளிடம் பேசி, பழகி, காதலித்து, அவள் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு பிறகு குழந்தைகள் பல பெற்று, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி அவர்களுக்கு திருமணம் முடித்து, அந்த குழந்தைகளுக்கு குழந்தைகள் பிறந்து ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் வர எல்லோரும் ஆற்றில் அடித்துக்கொண்டு போக,அர்ஜுனன் இதை நினைத்து அழுதுக்கொண்டு இருக்க, கண்ணன் அவரை கூப்பிட்டு ஏன் தண்ணீர் கொண்டு வரவில்லை என்று கேட்டாராம். இப்பொழுது என்ன நடந்தது என்று கேட்க, இது தான் மாயை என்று கண்ணன் சொன்னாராம்".

"இதுதான் மாயை, இந்த உலகம் நிஜம், உன் உறவுகள் நிஜம், இந்த உலகில் உள்ளது எல்லாம் உனக்கு சொந்தம் என்றும், நீ விரும்பியவை எல்லாம் உனக்கு சொந்தம் ஆக வேண்டும் என்று நினைக்கிறாயே அந்த ஆசைதான் மாயை, எல்லா இடத்திலும் உன் ஆளுமையை செலுத்த நினைக்கும் உன் ஆசை தான் மாயை".

Courtesy: Chandan@isaithamil
மேற்கோள் செய்த பதிவு: 279012



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக