புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 1%
bala_t
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 1%
prajai
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
293 Posts - 42%
heezulia
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
prajai
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_m10 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தமவில்லன் - திரைவிமர்சனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 01, 2015 9:59 pm


நடிகர் : கமல்
நடிகை : பூஜா குமார்
இயக்குனர் : ரமேஷ் அரவிந்த்
இசை : ஜிப்ரான்
ஓளிப்பதிவு : ஷாம்தத்


கமலஹாசன் ஒரு மிகப்பெரிய நடிகர். இவர் தனது மனைவி ஊர்வசி, மகன் மற்றும் மாமனார் விஸ்வநாத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். கமலுக்கும் அவரது குடும்ப டாக்டரான ஆண்ட்ரியாவுக்கும் நெருக்கமான உறவு இருந்து வருகிறது. இந்நிலையில், கமல் நடித்து முடித்த ஒரு படத்துக்கு படக்குழுவினர் ஒரு பெரிய ஓட்டலில் பார்ட்டி நடத்துகின்றனர். இதில் கமலின் குடும்பத்தினர் கலந்துகொள்கின்றனர்.

அப்போது, அந்த பார்ட்டிக்கு வரும் ஜெயராம், கமலை தனியாக சந்தித்து அவருக்கு ஒரு பெண் இருப்பதாகவும், இதுபற்றி விவரம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் தன்னை தொடர்புகொள்ளுமாறும் கூறிவிட்டு அவரிடம் தன்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு செல்கிறார்.

அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கும் கமலஹாசன், தனது மேனேஜரிடம் கூறி இதுகுறித்து விசாரிக்க சொல்கிறார். ஆனால், இதற்குள் கமலுக்கு அந்த ரகசியத்தை தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் அதிகமாகவே, ஜெயராமை தேடிச் சென்று சந்திக்கிறார். அப்போது, கமல் கல்யாணத்துக்கு முன்பே ஒரு பெண்ணிடம் நெருக்கமாக பழகியதையும், அந்த பெண் கர்ப்பமுற்று, அந்த பெண்ணின் கருவை கலைக்க இவரது மாமாவான விஸ்வநாத் பணம் கொடுத்ததையும், அந்த பெண் அதை வாங்க மறுத்து, அந்த கருவுடனேயே கமலை விட்டு பிரிந்து சென்றதையும், அந்த பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டதையும் அவரிடம் விளக்கிக் கூறுகிறார்.

அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைதான் மாளவிகா மேனன். அவள் தற்போது கல்லூரியில் படித்து வருவதாக கமலிடம் கூறும் ஜெயராம், ‘அவள் உங்களை ஒரு வில்லனாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என்கிறார். தன் தவறை உணர்ந்த கமல், அவளை பார்க்கத் துடிக்கிறார்.

இந்நிலையில், கமலுக்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கும் தலைவலி தற்போது அதிகமாகிறது. ஸ்கேன் செய்து பார்க்கும்போது, கமலின் தலையில் ஒரு கட்டி இருப்பதாகவும், நீண்ட நாளைக்கு உயிரோடு இருக்கமாட்டார் என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மனவேதனையடையும் கமல், தான் ஒரு நடிகர் என்பதால், தான் இறப்பதற்குள் தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு நல்ல, நகைச்சுவை கலந்த படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்று தீர்மானிக்கிறார்.

இதற்காக தனது குருநாதர் கே.பாலச்சந்தரிடம் சென்று ‘உங்களையும் என்னையும் இந்த மக்கள் மறக்க முடியாத அளவுக்கு ஒரு படத்தை இயக்க வேண்டும்’ என்று கேட்கிறார். ஏற்கெனவே, கமல் மீதும், அவரது மாமனார் விஸ்வநாத் மீதும் மனஸ்தாபத்தில் இருக்கும் கே.பாலச்சந்தர் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். தன்னுடைய கதையை கேட்டுவிட்டு பின்னர் உங்கள் முடிவை தெரிவிக்குமாறு கமல் கூற, அவரும் வேண்டா விருப்பாக கதையை கேட்கத் தொடங்குகிறார். இறுதியில், அந்த கதை கமலுடைய நிஜவாழ்வில் நடந்த கதை என்பது தெரிந்ததும் கமலை வைத்து ‘உத்தமவில்லன்’ என்ற படத்தை இயக்க ஒப்புக் கொள்கிறார்.

கமல்-கே.பாலச்சந்தர் மீண்டும் இணைந்தது கமலுடைய குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. கமலுக்கும் அவரது மாமனாருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. கமல் தன் மாமனாரை கோபத்தில் திட்ட, இதனால் கமலுடைய மனைவி தனது மகன் மற்றும் அப்பாவுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார். இருப்பினும், தன்னுடைய லட்சியத்தில் விடாப்பிடியாக இருக்கும் கமல், இதையெல்லாம் தாங்கிக் கொண்டு படத்தில் நடிக்க ஆரம்பிக்கிறார்.

இறுதியில், கமல் அந்த படத்தை திட்டமிட்டபடி முடித்தாரா? பிரிந்துபோன இவர் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

கமல் ஒரு மகா கலைஞன் என்பதை இந்த படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஒரு படத்தில் சாதாரண கதாபாத்திரம் என்றாலே நடிப்பில் வெளுத்து வாங்குவார். அதிலும், இந்த படத்தில் ஒரு நடிகர் கதாபாத்திரம். சொல்லவா? வேண்டும். ஒவ்வொரு காட்சியிலும், அதற்கேற்ற முகபாவனை, வசன உச்சரிப்பு, நக்கல், நையாண்டி என அனைத்தையும் கச்சிதமாக செய்து அசத்தியிருக்கிறார். சென்டிமெண்ட் காட்சிகளில் அவருக்கே உரித்த அழுத்தமான நடிப்பு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், இந்த படத்தில் சில காட்சிகளே வந்தாலும் அற்புதமான நடிப்பு. இவருடைய கோபம் கலந்த வசனங்கள் தியேட்டரையே அதிரவைக்கிறது. அதேபோல், கமலின் மாமனாராக வரும் கே.விஸ்வநாத்தும் தனக்கே உரித்தான ஸ்டைலில் அழகாக நடித்திருக்கிறார்.

இரண்டாம் பாதியிலேயே பூஜாகுமாருக்கு வேலை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அவருடைய பகுதியை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். நடனக் காட்சிகளில் அழகான முகபாவனையில் கவர்கிறார். ஆண்ட்ரியாவுக்கும் இந்த படத்தில் சில காட்சிகள்தான். அதேபோல், கமலின் மனைவியாக வரும் ஊர்வசி, அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் பளிச்சிடுகிறார். கமலின் மேனேஜராக வரும் எம்.எஸ்.பாஸ்கருக்கு இப்படத்தில் ரொம்பவும் வலிமையான கதாபாத்திரம். இவருடைய முந்தைய படங்களில் இவர் காமெடியராகத்தான் கலக்கியிருந்தார். இந்த படத்தில் அதையெல்லாம் தாண்டி சிறப்பாக நடித்து கைதட்டலை பெறுகிறார்.

ஜெயராமுக்கும் இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம்தான். சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். நாசர், கமல் படங்களில் கமலைவிட ஒரு பங்கு தனது நடிப்பு மேலோங்கி இருக்கவேண்டும் என்று நினைத்து நடிப்பார்போல. அதேபோல், இந்த படத்திலும் அவருடைய நடிப்பு பலே.

இயக்குனர் ரமேஷ் அரவிந்த், தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை கையாண்டிருக்கிறார். அதை திறம்பட செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், கமல் - கே.பாலச்சந்தர் போன்ற மிகப்பெரிய மகா கலைஞர்களை வைத்து படத்தை இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. அதை பக்குவமாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். படைப்பாளிகள் இறந்துவிட்டாலும், அவர்களுடைய படைப்புகளும், புகழும் என்றும் மறைவதில்லை என்பதை இப்படத்தில் அழகாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக, கமல்-கே.பாலச்சந்தர் இருவரும் பேசிக்கொள்ளும் வசனங்கள் அவர்களுடைய நிஜவாழ்க்கையை பதிவு செய்வதாக அமைந்துள்ளது அற்புதம்.

அதேபோல், படத்தின் ஒளிப்பதிவும் அற்புதமாக அமைந்துள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைக்க இவரது கேமரா அழகாக உதவியிருக்கிறது. ஜிப்ரான் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்றாலும், பின்னணி இசை அசத்தல்.

மொத்தத்தில் 'உத்தமவில்லன்' வாழ்வியல் யதார்த்தம்.

மாலைமலர்



 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 01, 2015 10:11 pm

நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 02, 2015 11:55 am

சூப்பருங்க  உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் 1571444738



 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 02, 2015 11:59 am

நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 08, 2015 1:56 am

உத்தமவில்லன் - சினிமா விமர்சனம்

உச்ச நட்சத்திர நடிகன், நிழலில் தனக்குப் பிடித்த 'உத்தமனாக’ நடித்துக்கொண்டே நிஜத்தில் தனது 'வில்லன்’ வேடங்களைக் கலைத்தால்..?!

ஆச்சர்யம்... கமல், 'அசல் கமல்’ போல நடித்திருக்கும் சினிமா. நிஜத்தைப் பிரதிபலிக்கும் சினிமா. அதற்குள் ஒரு சினிமா. இரண்டும் இணையும் புள்ளியில் தொடங்குகிறது, ஒரு முடிவும் சில அபிப்பிராயங்களும்!

பிரபல நடிகர் 'மனோரஞ்சன்’ கமலுக்கு மூளையில் கட்டி (ஆம்... அதேதான்!). அதுவரை சினிமாவில் கமர்ஷியல் கலாட்டா நடத்திக்கொண்டிருப்பவர், தன் ஆத்மார்த்தமான கடைசிப் படத்தை, தன் குரு கே.பாலசந்தர் இயக்க வேண்டுமென விரும்புகிறார். அந்தச் சமயம் மனைவி பிரிய, மகன் வெறுப்பை உமிழ, முன்னாள் காதலி மூலம் தனக்குப் பிறந்த பெண் கண் முன் நிற்க, இடைவிடாமல் மரணம் துரத்த... கமலுக்கு என்ன நடக்கிறது என்பதே சினிமா!

கமல் கமலாக இருக்கிறார்... அதுவும் உண்மைக்கு மிக நெருக்கமாக. ஓர் உச்ச நடிகனாக திரைக்கு வெளியே அனுபவிப்பதை, காட்சிக்குக் காட்சி கடத்தியிருக்கிறார் கமல். ரசிகர்களின் கைதட்டலுக்கு ஏங்குபவராக, மனைவியின் அன்பை, மகனின் நம்பிக்கையை இழந்தவராக, திரைமறைவுக் காதலுக்கு நெகிழ்பவராக, மகளுடனான முதல் சந்திப்பிலேயே கூனிக் குறுகி நிற்பவராக... அட்டகாசம் கமல்!

அதட்டலும் நெகிழ்ச்சியுமாக ஆச்சர்யப்படுத்துகிறார் கே.பாலசந்தர். படத்தில் 'மரணம் துரத்தும்’ கமல் கதாபாத்திரம், நிஜத்தில் கே.பாலசந்தருக்கு உரியது. நடிப்பின் ஒவ்வொரு துடிப்பிலும் அந்த மரண அவசரம். கமல் படத்தில் அவருக்கே சவால் கொடுப்பதுபோல கே.விஸ்வநாத், நாசர், ஆண்ட்ரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, பார்வதி மேனன்... என அனைவரும் அப்ளாஸ் அள்ளுகிறார்கள்.

'நான் சினிமா படிச்சுட்டு வந்து, கோடம்பாக்கத்துக்கு நீங்க யாருனு புரியவைக்கிற மாதிரி ஒரு படம் எடுப்பேன்!’ என கமலிடம் மகன் உருகும் இடம், 'நான் அழகாத்தான் இருந்தேன். ஆனா, அதைத் தின்னே தீர்த்தேன்’ என ஊர்வசி ஆதங்கப்படும் இடம், 'இந்த கார்ல இருக்கிற மூணு ஆம்பளைங்களைத் தவிர வேற யாருக்கும் இந்த விஷயம் தெரியக் கூடாது’ என ஆண்ட்ரியா கலங்கும் இடம், தான் கொண்டு சேர்க்காத கடிதத்தை எம்.எஸ்.பாஸ்கர் வாசித்து வெடித்து அழும் இடம், தான் எழுதிய கடிதத்தை மகள் படிக்கப் படிக்க கமல் ஒப்பனை கலைக்கும் இடம்... மனித மனங்களின் புரியாத பிரியங்களை உருக்கமும் நெருக்கமுமாக பதிவுசெய்த கிளாஸிக் தருணங்கள்!

இப்படி, மனோரஞ்சன் வாழ்க்கையில் ஒவ்வோர் அத்தியாயமும் உணர்வுகளால் மனம் கலைக்க, 'உத்தமன் சினிமா’வோ செம சலிப்பு. மன்னன், இளவரசி, புலி, சாகாவரம்... என படத்தின் சரிபாதி நீளத்துக்கு காமாசோமா மெகா டிராமா. நாசருக்கு ஒரு காது கேட்காது என்பதை நமக்கு காது வலிக்கும் அளவுக்கு அத்தனை தடவை சொல்வது அலுப்பு! அந்த சினிமாவிலும் நாசர் ஸ்கோர் செய்ய, 'வாவ்... என்னமா நடிக்கிறான்ல!’ என கமலுக்குப் பாராட்டு குவிவது... என்னா வாத்தியாரே!

'நான் முதல்ல ஆண்... பிறகுதான் நடிகன்!’, 'சித்ரகுப்தன் கேப்பானே...’ 'பொய் சொல்லிரலாம்... நான்தான் நடிகனாச்சே!’ - 'நறுக் சுருக்’காகத் தெறிக்கின்றன வசனங்கள்.

வாழ்க்கை முழுக்க பிறர் மனங்களைக் காயப்படுத்திவிட்டு, மரணம் துரத்தும்போது உண்மையை ஒப்புக்கொண்டால், வில்லன் உத்தமன் ஆகிவிடுவானா என்ன?

ஆனாலும், உத்தமனைக் காட்டிலும் வில்லனே ஈர்க்கிறான்!

- விகடன் விமர்சனக் குழு



 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 08, 2015 4:44 pm

பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Fri May 08, 2015 5:28 pm

பகிர்வுக்கு நன்றி....



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 10, 2015 8:24 am

பகிர்வுக்கு நன்றி... மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 10, 2015 12:39 pm

i'm waiting ......... புன்னகை

for tamilrockers அய்யோ, நான் இல்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 10, 2015 2:05 pm

ராஜா wrote:i'm waiting ......... புன்னகை

for tamilrockers அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1135823

இதை ஏதோ ஹிந்தி பாஷையில் எழுதி உள்ளீர் போல் இருக்கே !
ஒன்றும் புரியவில்லை .
இருந்தாலும் பொதுவாக வாழ்த்துவோம் ,
விரும்பியது கூடிய சீக்கிரத்திலேயே கிடைக்கட்டும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக