புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_m10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_m10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_m10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_m10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_m10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_m10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_m10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_m10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_m10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_m10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_m10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_m10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
mruthun
ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_m10ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:46 am


இன்றைய வாழ்வு தரும் பார்வை, சுதந்திர உணர்வு ஆகியவற்றால் உறவின் வரையறைகளை மாற்றத் துடிக்கிறது இளைஞர்களின் மனம். இதைப் பற்றிப் பேசும் படமான ‘ஓ காதல் கண்மணி’ கல்யாணம் என்னும் கால்கட்டு இல்லாமலேயே காதல் வளர்ந்து நிலைக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது.


ஆதி (துல்கர் சல்மான்), தாரா (நித்யா மேனன்) இருவரும் தனித்தன்மையை யும் சுதந்திர உணர்வையும் இழக்க விரும்பாத காதலர்கள். முதிய ஜோடியான கணபதி (பிரகாஷ் ராஜ்), பவானி (லீலா சாம்சன்) வீட்டில் தங்கியிருக்கும் துல்கர், அங்கேயே நித்யாவையும் கூட்டிவந்துவிடுகிறார்.

மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள லீலாவைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார் பிரகாஷ் ராஜ். இளம் ஜோடியின் வாழ்வில் ஏற்படும் சலனங்களில் இவர்களும் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.

திருமணம் தவிர்த்த வாழ்க்கையை விரும்பும் காதலர்களைத் திருமணத்தை நோக்கித் தள்ள அவர்களது குடும்பங் கள் செய்யும் முயற்சிகள் தோல்வி யடைகின்றன. ஆனால் தொழில் நிமித்தமாக ஏற்படும் பிரிவால் வரும் வேதனை அவர்கள் முடிவை மறு பரிசீலனை செய்யவைக்கிறது. அதீத மான அன்புக்கும் சுதந்திர உணர்வுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் எது வெல்கிறது என்ற கேள்விக்கான பதிலாக விரிகிறது படம்.

படம் முழுவதும் இளமைத் துள்ள லின் உற்சாக அதிர்வை உணர முடி கிறது. ஏ.ஆர். ரஹ்மானின் இசை, மணிரத்னத்தின் வசனங்கள், காட்சி யமைப்புகள், பி.சி. ராம் செதுக்கி யுள்ள ஒளி-நிழல் சித்திரங்கள் ஆகியவை இளமையின் உற்சாகத்தையும் அனை வருக்குமான அழகியலையும் ரசனை யோடு முன்வைக்கின்றன. லீலா சாம்சனிடம் நித்யா மேனன் பாடிக் காட்டும் இடத்தில் இயக்குநர், இசை யமைப்பாளர், பாடலாசிரியர் வைர முத்து ஆகிய மூவரும் இணைந்து இனிமை யான அனுபவத்தை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள். நாடகத்தன்மை யைத் தாண்டியும் அந்தக் காட்சி நம்மை ரசிக்கவைக்கிறது. பாடல்களிலும் பின்னணி இசையிலும் ரஹ்மான் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியின் உணர்ச்சியையும் பின்னணி இசை கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது.

அகமதாபாதில் இஸ்லாமியக் கட்டிடக் கலையைப் பார்வையிடும் காட்சி அற்புதமானது. கம்பீரமான அந்தக் கட்டிடம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதமும் பின்னணியில் ஒலிக்கும் பாடலும் மனதில் ஆழமான சலனங்களை ஏற்படுத்துகின்றன.

காதலை வெளிப்படுத்தும் காட்சி களில் இளமையும் ரசனையும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஊரி லிருந்து அண்ணன் குடும்பம் வரும் சமயத்தில் துல்கருக்கு ஏற்படும் பதற்றத்தை வைத்து நித்யா மேனன் விளையாடும் இடம் அழகு. பேருந்து, ரயில் பயணங்களில் பொங்கி வழியும் காதல் உணர்வுகளும் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சின்னச் சின்னச் சண்டைகளும் சமாதானங்களும் ரசனையோடு படமாக்கப்பட்டுள்ளன. காதல் வளரும் விதம் இயல்பாக இல்லை என்றாலும் இன்றைய இளைஞர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் விதத்தில் காதல் காட்சிகள் உள்ளன.

காதலர்களின் பிரிவுக்கான கார ணம், மனம் மாறுவதற்கான சூழல் ஆகியவற்றில் புதிதாக எதுவும் இல்லை. முக்கியப் பிரச்சினைக்கு வருவதற்குத் திரைக்கதை ரொம்ப நேரம் எடுத்துக்கொள்வதில் இரண்டாம் பாதியில் படம் மந்தமாகிறது. காதலின் ஈரத்தையும் காதலுக்குள் முளைக்கும் சண்டையையும் சமாதானத்தையும் சொல்லும் காட்சிகள் கடைசிவரை திரும்பத் திரும்ப இடம்பெறுகின்றன.

படத்தின் முக்கியமான பிரச்சினைகள் இவை அல்ல. மணிரத்னம் சமகாலப் பிரச்சினை ஒன்றைக் கையில் எடுக் கிறார். அதைப் பெருமளவில் ஒரு பெண்ணின் கண்ணோட்டத்துடன் சித் தரிக்கிறார். முரண்பாட்டை உருவாக்கி, வலுவான கதை முடிச்சாக மாற்றுகிறார். இந்த முடிச்சை அவிழ்க்கும் சவாலை எதிர்கொள்வதில் பலவீனமாக வெளிப் படுகிறார். புதியதொரு கேள்விக்குப் புதியதொரு பதில் இல்லை. பார்வை யாளர்களின் கற்பனைக்கு இடம் தரும் முடிவாகவும் அமையவில்லை. பழைய பதிலைத் தருவதில் தவ றில்லை. அந்தப் பதில் பாத்திரங்களின் அனுபவம் மூலம் வெளிப்படும் பதிலாக இருக்க வேண்டும். மாறாக, செயற்கையாக முன்வைக்கப்படும் பதிலாக இருக்கிறது. இதுதான் படத்தின் பலவீனம்.

மணிரத்னத்துக்கே உரிய ஒப்பனை களை மீறி வசனங்கள் பல இடங்களில் இயல்பாக இருக்கின்றன. “ஒரு சர்டிஃபிகேட் இருந்தா எல்லாம் சரியாயிடுமா?” என்பன போன்ற கூர்மையான வசனங்களும் உள்ளன. திருமண பந்தத்தைத் தவிர்ப்பதற்கான காரணங்களைச் சொல்லியிருப்பது போலவே, திருமணம் தவிர்த்த வாழ்க்கை யில் இருவரும் ஏற்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் வசனங்கள் சொல்கின்றன.

ரசனையும் அலட்டிக்கொள்ளாத தன்மையும் கொண்ட பாத்திரத்தில் துல்கர் சல்மான் கச்சிதமாகப் பொருந்து கிறார். படம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே விதமான உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய பாத்திரம் இவருக்கு. கடைசிக் காட்சியில் மட்டும் மாறுபட்ட நடிப்புக்கான வாய்ப்பு கிடைக்கிறது. நித்யா மேனனின் ‘துறுதுறு’ தோற்றமும் துள்ளல் நடிப்பும் படத்தின் சிறப்பம்சம். காதலின் வேகம், செல்லக் கோபம், சோகம் என எல்லா உணர்ச்சிகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். பிரகாஷ் ராஜும், லீலா சாம்சனும் படத் துக்குக் கூடுதல் பரிமாணத்தை வழங்குகிறார்கள்.

இளமைத் துள்ளல் படத்தின் மிகப் பெரிய பலம். எடுத்துக்கொண்ட பிரச்சினையைக் கையாளும் விதம் பலவீனம்.


இந்து டாக்கீஸ் குழு



ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:48 am

'ஓ காதல் கண்மணி'யின் அழகும் 'ஆர்ட்டிஸ்ட்'டின் ஆழமும்!

பலூனுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் காற்றுக்கு இருக்கின்ற சுதந்திரம்தான் இன்றைய தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கு இருக்கிறது. டாஸ்மாக் பற்றியும், பெண்களை எள்ளி நகையாடியும் சுதந்திரமாக படம் எடுக்கலாம். அந்த வட்டத்தைத் தாண்டி மதம், கலாச்சாரம், அரசியல் முதலானவற்றைப் பேசினால் படைப்பாளிகளின் நிலைமை அதோகதிதான். சமீபத்தில் வெளிவந்த பல படங்கள் சந்தித்த நிலை இதை மெய்ப்பித்துள்ளன.

'ஓ காதல் கண்மணி' படம் வெளியாகும் வரை, இது எப்படிப்பட்ட படம் என்று சொல்லாமல் இருந்ததுதான் சச்சரவின்றி அந்தப் படம் வெளிவருவதற்கான காரணமாக இருந்திருக்கும். இது 'லிவிங் டுகெதர்' உறவு பற்றிய படம் என்று தெளிவாகத் தெரிந்திருந்தால் கலாச்சாரக் காவலர்களின் போராட்டம் நிகழ்த்தப்பட்டு, கோர்ட் வாசலில் நின்றிருக்க வாய்ப்புண்டு.

வெகுநாள் கழித்து ஒரு ஜாலியான காதல் சினிமா பார்த்த திருப்தியை 'ஓ காதல் கண்மணி' அளித்தது. மணிரத்னம் மீது ஈடுபாடு இல்லாத ரசிகர்களுக்கும் ஏதோ ஒரு துள்ளலான இளைஞர் படம் போன்றுதான் தோன்றியிருக்கும். படம் முழுக்க அத்தனை இளமை. 'மௌன ராகத்தில்' இருந்த முதிர்ச்சி இப்போது இரண்டாவது குழந்தைப் பருவத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. மணிரத்னம் வெர்ஷன் 2.0'-வாக மீண்டும் ஒரு புதிய இயக்குனர் போல் பிறந்திருக்கிறார்.

இந்தப் படத்தை மணிரத்னம் இயக்காமல் வேறு யாராவது இயக்குநர் இயக்கிருந்தால் என் மனதில் சில முக்கியக் கேள்விகள் எழுந்திருக்காது. படம் முழுக்க என்ஜாய் செய்ததை மறுக்கவில்லை. ஆனால், இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத 'லிவிங் டுகெதர்' உறவைப் பற்றி மணிரத்னம் ஒரு படம் அளித்துள்ளார். அதுவும், இந்திய அளவில் மிகவும் கவனிக்கத்தக்க இயக்குநர் அவர்.

அப்படி இருக்கும்போது, 'லிவிங் டுகெதர்' என்றால் என்ன? இவ்வகையான உறவில் இருக்கின்ற சங்கடங்கள், சமூகப் பார்வை, அதை எதிர்கொள்ளும் விதம், இளைஞர்கள் சந்திக்கின்ற சவால்கள் என்னென்ன? இவற்றைப் பற்றி எதையுமே மணிரத்னம் பெரிதாக படத்தில் பேசவில்லை. தமிழ் சினிமா இன்று சந்திக்கும் போராட்டங்களைக் கண்டு, 'எதற்கு நாம் எதாவது பெரிதாக சொல்ல வேண்டும்' என்று ஜாலியாக படம் எடுத்ததுபோன்றுதான் 'ஒகே கண்மணி' தோன்றியது.

'லிவிங் டுகெதர்' உறவு என்பது ஒரு சுயநலத்தின் பிரதிபலிப்பு தானே?! 'எனக்கு நீ வேண்டும், உனக்கு நான் வேண்டும் நாம் இணைந்தால் என்ன? ஆனால் எனக்கு என் வாழ்க்கை முக்கியம், உனக்கும் அப்படியே! இந்த பொறுப்பெல்லாம் ஏற்க முடியாது கண்மணியே!

எண்ணங்களைப் பகிர்வோம், மெத்தையைப் பகிர்வோம், நாணத்தை மறப்போம், சமூகம் நமக்கு எதற்கு? நாம் நாமென்ற எண்ணம் மட்டும்தான் நம்மிடத்து. நாளை கசந்திடும்போது புன்னகைத்து விடை பெறுவோம். அன்று நீ யாரோ! நான் யாரோ என்று' – இதுதானே இந்த உறவின் அடிப்படை என்கின்றனர், அந்த உறவில் வாழ்ந்து வருவோர்.

என்னைப் பொறுத்தவரை இந்த உறவில் இருக்கின்ற சந்தோஷங்களை, நிகழ்கின்ற சங்கடங்களை, கசப்புகளை நேர்மையாக, நேரடியாக பேசிய தென்னிந்திய திரைப்படம் ஆர்டிஸ்ட் (மலையாளம்). மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ஷியாம் பிரசாத் இயக்கிய இப்படம் 2013-ல் வெளியானது. Dreams In Prussian Blue என்ற நாவலைத் தழுவி புனையப்பட்ட திரைக்கதை. சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய மூன்று பிரிவுகளில் கேரள அரசின் விருதுகளைக் குவித்தது.

மைக்கேல் (ஃபஹத் பாசில்) ஓர் ஓவியக் கலைஞன். ஓவியக் கலை மீது தீராத காதல் கொண்டவன். அது குறித்த தெளிந்த பார்வை, ஒரு கலைஞனுக்கே உரித்தான வினோத சிந்தனை, நான் திறமையானவன் என்ற கர்வம், எனக்கு என் வாழ்க்கைதான் பிரதானம் என்கிற எண்ணம் படைத்தவன்.

காசு வருவதற்காக படிப்பது கல்வியல்ல, காதலுக்காக படிப்பது என்கிற தெளிந்த சிந்தனையில் ஓவியக் கல்லூரியில் சேரும் காயத்ரி (ஆன் அகஸ்டின்). "உண்மையான கலைஞன் என்பவன் 'அவன் உலகிற்கு சென்று மற்றவர் பார்க்க வேண்டும் என்று மட்டும் நினைக்கக் கூடாது. தான் தினமும் பார்க்கின்ற உலகத்தை பிறருக்கு படைக்க வேண்டும், அந்தப் படைப்பில் ஒரு நேர்மை இருக்க வேண்டும். அது நிஜத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது ஓர் உன்னத படைப்பு" என்றெல்லாம் மைக்கேல் பேச, அதை சலிக்காமல் கேட்டுக் கொண்டிருக்கும் காயத்ரி மெல்ல மெல்ல அவனது திறன்களால், சிந்தனைகளால் ஈர்க்கப்படுகிறாள்.

தனது படைப்பின் உன்னதத்தை உணரும் விசிறியாக காயத்ரியை கண்ட மைக்கேலும் ஈர்க்கப்படுகிறான். ஒருமுறை இருவரும் பேசிக்கொண்டிருக்குபோது, "நீ என்னுடன் வருவாயா? நாம் இருவரும் ஒன்றாக வாழலாம், எண்ணங்களைப் பகிர நிறைய நேரம் அளிக்கலாம். ஒரே வீட்டில் என்ன சொல்கிறாய்?" என்று கேட்கிறான். காயத்ரியும் பெற்றோர்களிடமிருந்து விடுபட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

இப்படித்தான் இவர்களின் 'லிவிங் டுகெதர்' உறவு துவங்குகிறது. 'ஓ காதல் கண்மணி' பார்க்கும்போது எனக்கு தோன்றிய வியப்பு இதுதான்... 'ரயில் ஏறச் செல்லும்போது நாயகன், நாயகியைப் பார்க்கிறான். சில நாட்களுக்கு பிறகு அதே பெண்ணை சர்ச்சில் பார்க்கிறான், நம்பர் எக்ஸ்சேன்ஜ், அடுத்தது காபி ஷாப் உரையாடல்... அதன் பிறகு ஒரு ரயில் பயணம் அடுத்தது 'லிவிங் டுகெதர்' உறவின் தொடக்கம். நித்யா மேனன், துல்கரின் கூட்டணியில் இளமை துள்ள ஆட்டம் போட வைத்து, பீ.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் 'பறந்து செல்லவா?' என மறக்க வைத்து ரஹ்மான் இசையால் பார்ப்போர்கள் மனதை மென்டல் ஆக்குகிறார் மணிரத்னம்.

இதனால்தான் 'எப்படி டா இவங்க ரெண்டு பேர் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்புக்கு வந்தார்கள்?' என்று யோசித்தால், அந்தக் கேள்விக்கு பெரிய விடை கிடைக்கவில்லை. சரி... பிரகாஷ் ராஜ் பெரிய தலையாச்சே... அவர் ஏதாவது கேள்வி கேட்பார் என்று பார்த்தால் 'மலர்களைக் கேட்டேன்' என்று நித்யா மேனன் நித்யஸ்ரீ மகாதேவனாக மாறி கர்நாடக சங்கீதம் பாடக் கேட்டு மெய்மறந்து துல்கருடன் நித்யா சேர்ந்து வாழ சம்மதிக்கிறார்.

அங்கேயும் இது எப்படி நடக்கும் என்று நம்மை யோசிக்க விடாமல் பிரகாஷ் ராஜ், லீலா சாம்சனின் நடிப்பும், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் இணைந்து மென்மையாக கடத்திச் செல்கிறது. யோசித்துப் பார்த்தால் பல விஷயங்கள் அபத்தமாக முலாம் பூசியதாக தோன்றும். ஆனால் நம்மை அழகாக யோசிக்க விடாமல் வழநடத்தி மணிரத்னம் அழைத்துச் செல்கிறார்.

இதைப் போன்ற இடங்களில்தான் 'ஆர்ட்டிஸ்ட்' என் மனதில் ஆழமாக அடித்தளம் போடுகிறது. மைக்கேல், காயத்ரி இருவரும் இணைந்து வாழத் தொடங்குவதனால் வீட்டிலிருந்து இருவருக்கும் கிடைத்த பணவரத்து நிறுத்தப்பட்டுவிடும்.

இனிமையான வாழ்வைத் தடம்புரளச் செய்கிறது ஒரு விபத்து. அந்த விபத்தில் மைக்கேலின் கண்கள் பறிபோகின்றன. இருந்தும் தன் கலைத் திறனை உலகுக்கு நிரூபிக்கத் தவிக்கிறான். 'எனக்கு இந்த பெயின்ட் இந்த பிராண்டில் இந்த வெர்ஷனில் வேண்டும்... இதை வாங்கி வா' என்று வீட்டில் இருந்தபடியே கட்டளையிடும் மைக்கேல், "எனக்கு என் வாழ்க்கை முக்கியம், என் ஓவியத்தின் தரம் முக்கியம், நீ என் ரசிகை... என் காதலி. ஆனால் நீ என் மனைவி இல்லையே! எனக்கு என் உலகம் முக்கியம்" என்ற எண்ணம் தான் மைக்கேலுக்கு. படிப்பும் நின்று போக, வீட்டை நடத்துவதற்காக பாஸ்ட் புட்டில் காயத்ரி வேலைப் பார்க்கிறாள்.

மெல்ல மெல்ல தான் மைக்கேலுக்காக எவ்வளவு செய்தாலும் அவனுக்கு அவனைப் பற்றிய கவலை மட்டும்தான். சில சமயங்களில் என்னை அவன் ஒரு மனுஷியாகக் கூட எண்ணுவதில்லை என்கிற எண்ணம் காயத்ரி மனதில் தீவிரமாக இடம் பிடிக்கிறது.

எனினும், ஒரு ரசிகையாக மட்டுமின்றி, வாழ்க்கைத் தோழியாக அவனுக்கு வேண்டியதைச் செய்கிறாள். உயர் ரக பெயின்ட் வாங்க காசில்லை. மலிவு விலையில் ஒரே நீலத்தில் டப்பா டப்பாவாக பெயின்ட் வாங்கித் தருகிறாள். அந்த பெயின்ட்டுக்கு பல வண்ணங்களின் பெயர் வைத்துத் தருகிறாள். அவனும் வரைந்து தீர்க்கிறான். எல்லா வண்ணமும் கலந்துதான் தன் ஓவியம் உருவாவதாக அவன் நினைத்துக் கொண்டிருப்பான். ஆனால், அது ஒற்றை வண்ணத்தில் உருவான ஓவியங்கள் என்பது அவனுக்கும் அவன் இழந்த கண்களுக்கும் தெரியாது.

ஆனால், வெறும் நீல வண்ணக் கலவையிலான அவனது ஓவியங்கள், கலைச் சந்தையில் தனித்துவத்துடன் கவனம் ஈர்க்கும். அதுவே அவனை புகழின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும்.

ஒரு கட்டத்தில் அடையாளமற்று இருந்த மைக்கேல் உலகம் போற்றும் ஓவியனாக ஓர் அங்கீகாரத்தைப் பெறும்போது 'இருவருக்குள்ளும் எப்போதும் போல் சண்டை பிறக்கிறது. அப்போது, தான் இதுவரை ஒற்றை வண்ணத்தை வைத்துதான் நூற்றுக்கணக்கான ஓவியங்களைத் தீட்டி இருக்கிறோம் என்ற உண்மை தெரியவரும். அதுவே தனக்கு வெற்றி தந்தது என்றாலும், தன்னை காயத்ரி ஏமாற்றிவிட்டதை எண்ணி வெறுத்துத் தெறிப்பான் மைக்கேல். 'நீ எனக்காக செய்த செலவினை வேண்டுமானாலும் திருப்பித் தருகிறேன். என் வாழ்க்கையை விட்டு விலகி விடு, என் வீட்டை விட்டு வெளியேறு' என்று கூச்சலிடுகிறான். அவள் சொல்வதைக் கேட்க அவனுக்கு நிதானம் இல்லை. 'சரி, இனிமே என் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்கிறேன்" என்று மனதுக்குள் உரைத்து அவனிடமிருந்து காயத்ரி விலகிச் செல்வாள்.

தனக்குப் புகழ் கிட்டுவதற்கு வித்திட்டாலும்கூட, தன்னிடம் நேர்மையாக இல்லை என்ற நிஜக் கலைஞனின் கோபத்தின் வெளிப்பாடுதான் காயத்ரியை மைக்கேல் உதறிய முடிவு. அதேபோல், ஒரு மகத்தான கலைஞனின் வெற்றிக்காக, நட்பின் பெயரிலான துரோகி ஒருவனுக்கு துகிலுரிக்கவும் முன்வந்த காயத்ரிக்கோ, உண்மை நிலையைப் புரியவைத்து அவனது வெற்றி வாழ்க்கையில் பங்குபோட தன்மானம் இடம் தரவில்லை.

நம் சமூகச் சூழலில் 'லிவிங் ரிலேஷன்ஷிப்' பற்றி பொட்டில் அடித்துப் பேசிய 'ஆர்டிஸ்ட்' ஓர் உன்னதப் படம். இந்தப் படத்தில் அமைந்த உண்மையும் இயல்புத்தன்மையும் 'ஓ காதல் கண்மணியில்' மிஸ்ஸிங்.

குடும்ப 'கமிட்மென்ட்ஸ்' எனும் வலையில் சிக்காமல் தங்கள் இலக்குகளை அடைவதற்கு கிடைக்கின்ற சுதந்திரம், சமூக கட்டமைப்புகளில் சிக்கிக் கொள்ளாத அதேநேரத்தில், இளமையின் தேவையைப் பூர்த்தி செய்தல், குடும்ப அமைப்புக்கே உரிய பாதுகாப்புத் தன்மையைப் பெறுதல் முதலானவை பற்றியெல்லாம் சினிமா மொழியில் பேசும் படம் ஆர்ட்டிஸ்ட். அதேவேளையில், நம் இந்தியக் குடும்பச் சூழலில் வளர்ந்து, அந்த உறவில் ஈடுபடும்போது உண்டாகும் உளவியல் சிக்கல்களையும் அப்படம் காட்சிகளால் நிரவியிருக்கும்.

பாரம்பரியத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், இந்தப் படத்தின் கதை போகும் திசையைக் கண்டு திடுக்கிடலாம். ஆனால், அவர்களின் லிவிங் டுகெதர் வாழ்க்கையைத் தொடங்கியதால் ஏற்பட்ட சிக்கல்கள், எதிர்பாராத விபத்தால் நிகழ்ந்த தடுமாற்றங்கள் முதலானவை அந்த உறவு குறித்த எண்ணத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, இரண்டு கதாபாத்திரங்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தரத் தொடங்கிவிடும். அந்த இடத்தில்தான் ஷியாம் பிரசாத் தன் ஆளுமையைப் பதிவு செய்திருப்பார்.

ஆனால், இங்கே மணிரத்னம்? வழக்கமான தமிழ் சினிமா தன்மைகள் இல்லாதபோதும் 'ஓ காதல் கண்மணி' ஒரு வழக்கமான மணிரத்னத்தின் சினிமாவே. காலத்திற்கேற்றார் போல் நவநாகரீகம் பெற்றிருக்கிறது. திருமணம் என்ற பந்தம் பக்கம் சாய்வதற்கு, 'அரவணைப்பு' என்ற அம்சம்தான் முக்கியக் காரணம் என்று மணி நேரடியாகவும் குறிப்பாலும் சொல்லியிருக்கிறார். ஆனால், அது மட்டுமே வலுவான காரணமாக இருந்திருக்க முடியாது என்பது நிதர்சனம். வேறு காரணங்களைத் தேடியிருந்தால், திருமண பந்தம் தேவையற்றது என்ற நிலைப்பாட்டுக்குக்கூட ஒரு படைப்பாளியாக இறுதி முடிவு எடுத்திருக்கக் கூடும். அது, தற்போதைய தமிழ்ச் சூழலில் எதிர்ப்பு அரசியலுக்கு வித்திடும் என்பதால் பாதுகாப்பான ஆட்டக்காரராகவே இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

இதைப் போன்ற கீச்சிடல்கள் இருந்தும் 'ஓ காதல் கண்மணி' ஈர்த்ததற்கு முக்கிய காரணம் பிரகாஷ்ராஜ், லீலா சாம்சனின் முதுமைக் காதலே! 'வயதானாலும் நீயென் கண்மணியே' என்று உணர்த்தும் விதத்தில் பிரகாஷ் தன் மனைவியை நடத்தும் விதம் அழகாக இழைக்கப்பட்டிருக்கிறது. முதுமை மண வாழ்க்கையில் அமைந்திருந்த இந்த நேர்மையான பதிவேற்றம், 'லிவிங் டுகெதர்' உறவை உரைக்க மட்டும் தவறிவிட்டது.

தமிழ் சினிமாவில் கதாநாயகனை, ரசிகர்களை குஷிப்படுத்தும் போகப் பொருளாக நாயகிகளை கையாளும் இயக்குனர்கள் இடையே 'நாயகியை பெண்ணாக, மனைவியாக, ரத்தமும் சதையும் உணர்ச்சி கொண்ட ஓர் உயிராக' நாகரீகத்துடன் கையாளும் மணி ரத்னத்தின் நாயகர்களின் கண்ணியம் மனதைக் கவர்கிறார்.

"நீ பாரிஸுக்கு போ... உலகத்துல எங்க வேணும்னாலும் போ... ஆனா, என்ன கல்யாணம் பண்ணிட்டு போ! உன் கனவுகளைத் துறந்து எனக்காக மட்டும் வாழ் என்று சொல்பவன் காதலன் அல்ல சாடிஸ்ட்!"

இந்த ஒரு கண்ணிய நடத்தையே ஒகே கண்மணிக்கு ஓஹோ போட வைக்கிறது!

ஆனால், ஏனோ மீண்டும் முதல் பாராவை இங்கே போட்டு இந்தக் கட்டுரையை முடிக்கத் தோன்றுகிறது...

பலூனுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் காற்றுக்கு இருக்கின்ற சுதந்திரம்தான் இன்றைய தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கு இருக்கிறது. டாஸ்மாக் பற்றியும், பெண்களை எள்ளி நகையாடியும் சுதந்திரமாக படம் எடுக்கலாம். அந்த வட்டத்தைத் தாண்டி மதம், கலாச்சாரம், அரசியல் முதலானவற்றைப் பேசினால் படைப்பாளிகளின் நிலைமை அதோகதிதான். சமீபத்தில் வெளிவந்த பல படங்கள் சந்தித்த நிலை இதை மெய்ப்பித்துள்ளது.

சினிமா பித்தன்



ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 12:51 am

ஓ காதல் கண்மணி - படம் எப்படி ?

'கல்யாணம் தேவையா... இல்லையா?' - இதுதான் ‘ஓ காதல் கண்மணி’.

வீடியோ கேம் உருவாக்கும் ஜாலி ஐடி பாய் துல்கர் சல்மான். ஆர்க்கிடெக்ட் படிக்கிற ஜிலீர் பெண்ணாக நித்யா மேனன். ரெண்டு பேருக்கும் ஒரே மைண்ட் செட்... 'கல்யாணம்னாலே டார்ச்சர்’. அதே மைண்ட் செட்டோட மீட்டிங்... அப்பறம் டேட்டிங்... ஒரு கட்டத்துல நாம ஏன் கல்யாணம் பண்ணாமலேயே வாழக் கூடாதுன்னு யோசிக்கிறாங்க. முடிவு என்னாச்சுங்கறது மிச்ச கதை!

'மீட் பண்ணலாமா', 'வாயேன்', 'பக்கா', 'கல்யாணம்', 'ஆமா' ... இப்படி படம் முழுக்க மணிரத்னம் சிறப்பு கட் டு கட் வசனங்கள். மும்பையை வளைய வந்து சுத்திக் காட்டியிருக்கிறார்கள்.

’உஸ்தாத் ஹோட்டல்’, ‘100 டேஸ் ஆஃப் லவ்’ இப்படி மலையாளம் ஏரியா படங்களை மாறி மாறி பார்க்கும் ரசிகராக இருந்தால் துல்கர் சல்மான், நித்யா ஜோடி கொஞ்சம் பழசுதான். ஆனால், போஸ்டர்ல மட்டும்தான் பாத்திருக்கோம்னு சொன்னா, இவங்க கெமிஸ்ட்ரிக்கு இந்தப் படம் கேரன்டி.

ஒவ்வொரு சீன்லயும் துல்கர் சல்மான் துறுதுறு கேரக்டர். கவலையே இல்லாமல் வந்து, 'ப்ச்... நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை இல்லியே?'னு நினைக்க வைக்கிறாரு. நித்யா மேனன் ஒரு படி மேல. இப்படி ஒரு ஆபீஸ் எங்கேப்பா இருக்கு? அவங்க பாட்டுக்கு வராங்க, டக்குன்னு கிளம்பி காபி சாப்பிடப் போறாங்க. ஈரமான கண்கள், குண்டு கன்னம், சுருள் முடின்னு இப்படி ஒரு பொண்ணு நம்ம வீட்டுப் பக்கத்துல இல்லியேன்னு ஏங்க வைக்கிறாங்க.பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் ஜோடிதான் கதையின் கனமான பாத்திரங்கள். மற்றபடி கனிகா கெஸ்ட் ரோல் மாதிரி மத்தவங்களும் வர்றாங்க... போறாங்க!

படத்துக்கு முக்கிய பலம் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், பின்னனி இசை. முந்தைய மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியோடு ஒப்பிடும்போது இந்தப் படம் சுமார்தான். எனினும், படமே ஏ.ஆர்.ரஹ்மான் இசைதான் என்பதையும் மறுக்க முடியல. ’மென்டல் மனதில்’, 'மௌலாலா’ பாடல்கள் ஐபாட் லிஸ்ட். பி.சி.ஸ்ரீராம் மும்பையின் சந்துகள்ல நம்மை கையைப்பிடிச்சே அழைச்சுகிட்டுப் போறார். பாடல் காட்சிகளில் நமக்கு ஒரு ஜோடி இறக்கைகள் முளைத்துவிடும் போல்.

எனினும் என்ன பயன்? க்ளைமாக்ஸ் இதுதான் எனத் தெரிஞ்சுட்ட பிறகும் படம் பார்ப்பது, கொஞ்சம் கஷ்டமாதான் இருக்குது. தமிழ் சினிமா ரசிகர்கள் இப்ப வேற மாதிரின்னு சொல்லத் தோணுது. திரும்பத் திரும்ப அதே மாதிரி காட்சிகள், மீண்டும் மீண்டும் கட்டிப்பிடி கசமுசாக்கள்... கொஞ்சம் போர். ஒரு கட்டத்தில் 'அட முடிங்கப்பா'ன்னு தியேட்டர் இருட்டில் சத்தங்கள் கேட்குது.

சரி... படம் பார்க்கலாமா? பாப்கார்ன் சாப்பிட்டுகிட்டே கேர்ள் ஃப்ரண்டோட ஜாலியா ஒரு படம் பார்க்கணும்னா இந்தப் படம் 'ஒகே கண்மணி’. சீரியஸ் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் நாட் ஓகே!

- சினிமா விகடன் குழு -




ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 1:10 am

ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் 1571444738



ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக