புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
44 Posts - 41%
heezulia
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
5 Posts - 5%
prajai
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Raji@123
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Barushree
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
21 Posts - 5%
prajai
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10தேசியச் செய்திகள் - Page 4 Poll_m10தேசியச் செய்திகள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்


   
   

Page 4 of 20 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 20  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.



தேசியச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 18, 2015 3:32 pm

மும்பை மருத்துவமனையில் 42 வருடமாக கோமாவில் இருந்த நர்சு அருணா ஷான்பாக் இன்று காலமானார்

மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனையில் 42 வருடம் கோமாவில் இருந்த நர்ஸ் அருணா ஷான்பாக் இன்று காலமானார்.

கடந்த 1973 ஆம் ஆண்டு, நவம்பர் 27-ந் தேதியன்று மருத்துவமனையில் பணி செய்து கொண்டிருந்தபோது, வார்டு பாய் ஒருவரால் கற்பழிக்கப்பட்ட அருணா கடுமையாக தாக்கப்பட்டார். இதனால் அவரது மூளை செயலிழந்தது. இதையடுத்து கே.இ.எம். மருத்துவமனையிலேயே அருணா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள வார்டு எண் 4-ல் அனுமதிக்கப்பட்ட அருணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் நினைவு திரும்பிய பாடில்லை.

கடந்த 2011 ஆம் ஆண்டு அருணாவை கருணை கொலை செய்ய அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் எழுத்தாளர் பிங்கி விரானி மனு தாக்கல் செய்தார். ஆனால் கருணை கொலை செய்ய மருத்துவமனை ஊழியர்களும், நிர்வாகமும் எதிர்ப்பு தெரிவித்ததால் உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.

இதனிடையே அருணாவின் சகோதரியான நாயக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு காலமானார். இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அருணாவின் உடல்நிலை திடீரென மோசமானது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவம் செய்யப்பட்டது. எனினும் சிறிது நாளில் அவரது உடல்நிலை மீண்டும் தேறியது. ஆகையால் மீண்டும் சாதாரண வார்டுக்கு அருணா மாற்றப்பட்டார். அவரை மருத்துவமனை நிர்வாகிகளும், ஊழியர்களும் சிரத்தை எடுத்து கவனித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அருணாவின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. மருத்துவர்கள் வெண்டிலேட்டர் வைத்து அருணாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணமடைந்தார். ஏறத்தாழ 42 ஆண்டுகாலம் கோமாவில் இருந்த அருணாவுக்கு என்றாவது நினைவு திரும்பும் என்று எதிர்பார்த்த நிலையில், நினைவு திரும்பாமலேயே இன்று அவரது உயிர் பிரிந்தது...



தேசியச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:13 pm

உலகின் மிகப்பெரிய இந்துக் கோவிலுக்கு நிலத்தை நன்கொடையாக வழங்கிய பீகார் முஸ்லீம்கள்

20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யும் அளவுக்கு உலகின் மாபெரும் இந்துக் கோவில் ஒன்று இந்தியாவில் உருவாக உள்ளது. ரூ.500 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இந்த கோவில் பாட்னாவிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு சம்பரன் மாவட்டம் கெசாரியாவுக்கு அருகில் ஜானகி நகரில் உருவாக உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் வரும் ஜூன் மாதம் துவங்குகிறது.

உலகிலேயே மிகப்பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்த இந்துக் கோவிலை மும்பையை சேர்ந்த வாலேசா கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் நிறுவனம் கட்டுகிறது. இந்த கோவில் 2,500 அடி நீளமும், 1,296 அடி அகலமும், 379 அடி உயரமும் கொண்டதாக அமையவுள்ளது. குறிப்பாக, நேபாள எல்லையில் அமைவதால் நிலநடுக்கத்தையும் தாங்கக்கூடிய வகையில் earthquake proof-வுடன் உருவாகிறது.

இந்நிலையில், மதநல்லிணக்கத்தை தழைக்கச் செய்யும் பொருட்டு இந்த கோவிலுக்காக பீகார் முஸ்லிம்கள் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளதாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குணால் தெரிவித்துள்ளார். ஆச்சார்யா பாட்னாவை சேர்ந்த மஹாவீர் மந்திர் டிரஸ்டின் செயலராகவும் இருக்கிறார். இந்த அறக்கட்டளைதான் உலகின் மாபெரும் இந்துக் கோவிலை கட்டுகிறது.

ஆச்சார்யா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-

முஸ்லீம்கள் நிலத்தை நன்கொடையாக மட்டும் வழங்கவில்லை. உலகின் மிகப்பெரிய இந்துக் கோவிலை கட்டுவதற்கு மிகக்குறைவான விலையிலும் நிலங்களை வழங்கியிருக்கிறார்கள். முஸ்லீம்களின் உதவி மட்டும் இல்லையென்றால் இந்த கனவுத்திட்டத்தை உருவாக்குவது கடினமே. கோவில் கட்டுவதற்கு இந்துக்கள் நிலத்தை நன்கொடையாக வழங்குவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், முஸ்லீம்கள் நிலத்தை நன்கொடையாக வழங்குவது இதுவே முதல்முறையாக இருக்கும் என நினைக்கிறேன். இது அபூர்வமான ஒன்று. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடமிருந்து 50 ஏக்கர்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. மீதமுள்ளவை விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.

இதற்கு முன்னதாக, சில முஸ்லீம்கள் கயா மாவட்டத்தில் துர்கா கோவிலுக்கு நிதியுதவி செய்திருந்தனர். அதேபோல், சித்தாமார்ஹி மற்றும் பெகுசாராய் மாவட்டத்தில் சிவன் கோவில் கட்டுவதற்கும் உதவிகள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.



தேசியச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:35 pm

‘ஜீரோக்களால் ஹீரோக்களை கண்டுபிடிக்க முடியாது’ ராகுல் காந்திக்கு, பாரதீய ஜனதா பதிலடி

‘ஜீரோக்களால் ஹீரோக்களை கண்டுபிடிக்க முடியாது’ என்று ராகுல் காந்திக்கு, பாரதீய ஜனதா பதிலடி கொடுத்து உள்ளது.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதிக்கு 3 நாட்கள் பயணமாக நேற்று சென்றார். அங்கு செல்லும் வழியில், பாரபங்கி மாவட்டம் ஜெகதீஷ்பூர் என்ற இடத்தில், பருவம் தவறிய மழையால் சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். பிரதமர் மோடி ஆட்சியில், ஏழை தொழிலாளர்களும், விவசாயிகளும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். மோடி, விவசாயிகளின் வீடுகளுக்கு செல்வது இல்லை. வெளிநாடுகளுக்குத்தான் சென்று கொண்டிருக்கிறார். வெளிநாடு செல்லும்போதெல்லாம், ஒரு கேமராமேனையும் கூட்டிச் செல்கிறார். என்று குற்றம் சாட்டினார்.

‘மோடி அரசு ஓராண்டு நிறைவு செய்யும் நிலையில், அந்த அரசின் செயல்பாடுகளுக்கு எத்தனை மதிப்பெண் கொடுப்பீர்கள்?’ என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு ராகுல் காந்தி, ‘விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சினைகளை அணுகியதை பொறுத்தவரை, 10–க்கு 0 மதிப்பெண்தான் கொடுக்க முடியும். சில தொழில் அதிபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரச்சினைகளை அணுகியதை கணக்கில் கொண்டால், 10–க்கு 10 மதிப்பெண் கொடுப்பேன்’ என்று கூறினார்.

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில்அடி கொடுத்துஉள்ள பாரதீய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு, “ராகுல் காந்தி, பாரதீய ஜனதா தலைமையிலான அரசுக்கு ஜீரோ மார்க் கொடுத்து உள்ளார். ஜீரோக்களால், ஹீரோக்களை அங்கீகாரம் செய்ய முடியாது. ஜீரோக்கள், ஜீரோக்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியும்,” என்று டுவிட் செய்து உள்ளார்.



தேசியச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 1:53 am


டெல்லி விமான நிலையத்தில் கதிரியக்க கசிவால் பரபரப்பு!

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் மருத்துவக் கருவிகளில் இருந்து கதிரியக்கம் கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் விமான நிலையத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கதிரியக்க கசிவை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக மிகப் பெரும் விபத்து தடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

துருக்கியில் இருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்த சரக்கு விமானம் ஒன்றில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்காக மருத்துவக் கருவிகள் அடங்கிய சரக்குப் பெட்டி ஒன்று வந்துள்ளது. விமானம் தரையிறங்கியது முதல் மருத்துவக் கருவிகளில் இருந்து கதிரியக்கம் வெளியானதாகக் கூறப்படுகிறது. விமான நிலையத்தில் திடீரென கதிரியக்கம் வெளியானதால் பயணிகள் பலர் கண் எரிச்சலுக்கு ஆளாகினர்.

இது தொடர்பாக விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கதிரியக்கத் தன்மை கொண்ட மருத்துவக் கருவிகளில் இருந்து கதிரியக்க கசிவு ஏற்பட்டது. எனினும், எந்தவொரு அசம்பாவிதங்களும் ஏற்படுவதற்கு முன்பாக அணு ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக் குழுவினர் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் உடனடியாக வரவழைக்கப்பட்டு கதிரியக்கக் கசிவு நிறுத்தப்பட்டது.”

“இதனால் வழக்கமான விமான நிலையப்பணிகள் பாதிக்கப்படவில்லை. கதிரியக்க கசிவு சரக்கு வைக்கும் பகுதியில் நடந்ததால், விமான பயணிகளுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கதிரியக்க கசிவு தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது:-

“இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் போதிய நடவடிக்கை எடுத்து கதிரியக்க கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு தான் இந்திரா காந்தி விமான நிலையம் உலக அளவில் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், கதிரியக்க கசிவு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுமளவிற்கு பாதுகாப்புக் குறைபாடுகள் விமான நிலையத்தில் உருவாகி உள்ளன வா என்று எண்ணத் தோன்றுகிறது.




தேசியச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 10:10 pm

80 வயது மூதாட்டியை கோடரியால் வெட்டி சாய்த்த பேரன் கைது

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் நகரில் 80 வயது மூதாட்டியை கோடரியால் வெட்டி சாய்த்த பேரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

வீட்டின் அருகேயுள்ள மரத்தின் கிளைகளை வெட்டுவதற்காக கோடரியை எடுத்து தருமாறு தனது பாட்டி ஜம்கு தேவி(80) என்பவரிடம் அவரது பேரனான சோஹன் நாத்(28) கேட்டுள்ளார். கோடரி எங்கே கிடக்கிறதோ.., எனக்கு தெரியவில்லை என பாட்டி கூறியுள்ளார்.

பின்னர், வீடு முழுவதும் தேடி, கோடரியை கண்டுபிடித்த சோஹன் நாத் ஆத்திரத்தில் பாட்டியின் கழுத்தில் கோடரியால் வெட்டினார். இதில் கழுத்து துண்டாகி, துடிதுடித்த ஜம்கு தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சோஹன் நாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



தேசியச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 10:11 pm

ஆந்திராவில் வெயிலுக்கு 24 மணி நேரத்தில் 146 பேர் சாவு- பலியானோர் எண்ணிக்கை 1636 ஆக உயர்ந்தது

விண்வெளியின் ஓஸோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள துளைகள் மற்றும் வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை போன்றவற்றால் பருவநிலையில் ஏற்படும் பெரும் மாற்றம் காரணமாக தற்போதெல்லாம், வெயில், மழை, பனி உள்ளிட்ட அனைத்து பருவக்காலங்களும் மிகவும் உக்கிரமாகவே உள்ளது.

இந்நிலையில், இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. இந்த வெயிலுக்கு ஆந்திர மாநிலத்தில் மட்டும் கடந்த 18-ம் தேதியில் இருந்து இன்று இரவு 8 மணிவரை 1636 பேர் பலியாகியுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெயிலின் தாக்கத்துக்கு 146 பேர் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டத்தில் 333 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 233 பேரும், கிழக்கு கோதாவரியில் 192 பேரும், விசாகப்பட்டினத்தில் 185 பேரும், விஜயநகரத்தில் 177 பேரும், நெல்லூரில் 166 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 78 பேரும், சித்தூரில் 64 பேரும், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 60 பேரும், அனந்தபூரில் 56 பேரும், கடப்பாவில் 38 பேரும், கர்நூலில் 34 பேரும், மேற்கு கோதாவரியில் 23 பேரும் பலியாகியுள்ளனர் என ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தேசியச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 10:14 pm

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் திடீர் நில அதிர்வு

ஜப்பானில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் விளைவாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று திடீர் நில அதிர்வு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் இன்று பிற்பகல் சுமார் 4.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வையடுத்து வீடுகளில் இருந்த மக்கள் பயந்தடித்து, தெருக்களுக்கு வந்து குவியத் தொடங்கினார்கள். இதேபோல் வடக்கில் உள்ள சில முக்கிய நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



தேசியச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 01, 2015 12:15 am

காஷ்மீரில் பயங்கரவாதிகள் பிடியில் இருந்து பிணைக்கைதிகள் மீட்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் டாங்தார் என்ற இடத்தில், இரண்டு குடும்பங்களை சேர்ந்த 12 பேரை 7 பயங்கரவாதிகள் பிடித்து பிணைக்கைதிகளாக சிறை பிடித்தனர். இதனையடுத்து அப்பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்து பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி, பிணைக்கைதிகளை மீட்டனர். ராணுவத்தினர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் பலியானார்கள். தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.




தேசியச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 3:57 am


நாடு முழுவதும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,338 ஆக உயர்வு

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. நாடு முழுவதும் நிலவி வரும் இந்த கோடை வெயில் மற்றும் அனல் காற்றுக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஆந்திராவில் மேலும் 42 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1719-ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவிலும் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 21-லிருந்து 25 ஆக அதிகரித்து உள்ளது.இதைப்போல தெலுங்கானாவிலும் பலி எண்ணிக்கை 541-லிருந்து 585 ஆக அதிகரித்து உள்ளது. எனினும் இந்த மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை இதுவரை கணக்கிடப்படவில்லை என அம்மாநில பேரிடர் மேலாண்மை சிறப்பு கமிஷனர் சதா பார்கவி கூறியுள்ளார்.

டெல்லியில் 40.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், அங்கு பரவலாக மழை பெய்தது. இதனால் இங்கு அதிகப்படியான வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாகவே இருந்தது.




தேசியச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 02, 2015 4:00 am


நாடு முழுவதும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,338 ஆக உயர்வு

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. நாடு முழுவதும் நிலவி வரும் இந்த கோடை வெயில் மற்றும் அனல் காற்றுக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஆந்திராவில் மேலும் 42 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1719-ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவிலும் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 21-லிருந்து 25 ஆக அதிகரித்து உள்ளது.இதைப்போல தெலுங்கானாவிலும் பலி எண்ணிக்கை 541-லிருந்து 585 ஆக அதிகரித்து உள்ளது. எனினும் இந்த மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை இதுவரை கணக்கிடப்படவில்லை என அம்மாநில பேரிடர் மேலாண்மை சிறப்பு கமிஷனர் சதா பார்கவி கூறியுள்ளார்.

டெல்லியில் 40.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், அங்கு பரவலாக மழை பெய்தது. இதனால் இங்கு அதிகப்படியான வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாகவே இருந்தது.




தேசியச் செய்திகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 20 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக