புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10தேசியச் செய்திகள் - Page 13 Poll_m10தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10தேசியச் செய்திகள் - Page 13 Poll_m10தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10 
2 Posts - 6%
heezulia
தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10தேசியச் செய்திகள் - Page 13 Poll_m10தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10தேசியச் செய்திகள் - Page 13 Poll_m10தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10தேசியச் செய்திகள் - Page 13 Poll_m10தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்


   
   

Page 13 of 20 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 16 ... 20  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.



தேசியச் செய்திகள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 02, 2018 8:15 pm



மகாராஷ்டிராவில் சிறுவனின் வாயிலே பட்டாசு வெடித்ததில் அவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி தொடங்கவிருப்பதால் குழந்தைகள் குஷியில் ஆழ்ந்துள்ளனர். சில வாண்டுகள் இப்பொழுதே தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

அப்படி மகாராஷ்டிரா மாநில புல்தானா மாவட்டத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் ஜாலியாக பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தான். அவன் பற்றவைத்த பட்டாசு வெடிக்காததால், சிறுவன் அந்த பட்டாசை எடுத்து அதன் திரியை வாயால் கடித்துள்ளான்.

அப்போது பயங்கர சத்தத்துடன் அந்த பட்டாசு வெடித்ததில் சிறுவன் படுகாயமடைந்தான். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



தேசியச் செய்திகள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 03, 2018 6:18 am

அயோத்தியில் 151 மீ பிரம்மாண்ட ராமர் சிலை: யோகி ஆதித்நாத்
-
தேசியச் செய்திகள் - Page 13 Tamil_News_large_2137407
லக்னோ:
உ.பி. மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை
அமைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்
முடிவு செய்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளன.

இது குறித்து உ.பி. தகவல் துறை கூடுதல் தலைமை செயலாளர்
கூறுகையில் உ.பி. மாநிலம் அயோத்தியில் சராயு நதிக்கரையில்
151 மீ உயரத்தில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்க முதல்வர்
முடிவுசெய்துள்ளார்.

அதற்கான அறிவி்ப்பை வரும் 6-ம் தேதி வெளியிடுகிறார்.
இதற்கான திட்ட மதிப்பு குறித்து சுற்றுலா மற்றும
கலாச்சாரத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்தப்பட்டுள்ளது.

இந்த சிலை அமைக்கப்பட்டால் அது சுற்றுலாத்துறையை ஈர்க்கும்
என்றார்.
-
---------------------------------------
தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 03, 2018 6:27 am

சுற்றுலா தலமாக மாறுகிறது சுப்ரீம் கோர்ட்: பொதுமக்கள் பார்வையிட அனுமதி
-
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டை பொதுமக்கள் பார்வையிட அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்டத்தை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகெய் துவக்கி
வைத்தார். நேற்று நீதிபதிகள் ஒய்வறையில் ஒரு எளிய நிகழ்ச்சியாக
நடந்தது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் 1 மணி வரை
பொது மக்கள் சுப்ரீம் கோர்டை பார்வையிடலாம்.

பொது விடுமுறைகளில் அனுமதி இல்லை.
பொதுமக்களுக்கு வழிகாட்டியும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் உச்ச நீதிமன்றத்தின் கட்டிடக் கலை குறித்தும் வரலாற்றுச்
சிறப்பு வாய்ந்த வழக்குகள் குறித்தும் விவரிப்பார்.

பார்வையாளர்கள் ஆன்லைன் மூலமாகவும் தங்களின்
சுற்றுலாவை முன்பதிவு செய்யலாம்.
-
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 08, 2018 4:25 am

தெலுங்கானாவில் கட்டுக்கட்டாக சிக்கியது ரூ. 7.51 கோடி பணம்
-
ஐதராபாத்:
தெலுங்கானாவில் தேர்தல் ஆணைய பறக்கும்படையினர்
நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக ரூ. 7 கோடி பணம்
சிக்கியது.

தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி
தேர்தல் நடைபெறது. இத்தேர்தலில் ஓட்டுக்காக பணம்
கொடுக்கும் நபர்களை பிடிக்க தேர்தல் கமிஷன் சார்பில்
பறக்கும் படையினரும், போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு ஐதராபாத் நகரில் சைஃபாபாத்
என்ற பகுதியில் போலீசார் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில்
உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கோடிக்கணக்கில்
பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்
சோதனை நடத்தினர்.

சோதனையில்கணக்கில் வராத ரூ.7. 51 கோடி பணம் கட்டுக்
கட்டாக சிக்கியது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார்,
4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பக்கத்து மாநிலமான மஹாராஷ்டிராவில் இருந்து கார்மூலம்
கடத்தி வரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
-
------------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 08, 2018 4:25 am

ரூ.18 கோடி ஊழல்: மாஜி அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு

புதுடில்லி:
கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்தவர்கள்
ரெட்டி சகோதரர்கள். இதில் ஜனார்த்தன் ரெட்டி
சுரங்கத் தொழில், இரும்புத்தாது ஏற்றுமதி என
பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.

கர்நாடகாவில் முந்தைய பா.ஜ. ஆட்சியின்போது,
சுரங்கங்கள் ஒதுக்கிய விவகாரத்தில்
ஜனார்த்தன் ரெட்டி 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு
3 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில்
வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் ஜனார்த்தன் ரெட்டி அமைச்சராக இருந்த
போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை விடுவிக்க
ரூ. 18 கோடி லஞ்சம் கேட்டதாக வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு
தற்போது திடீரென தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
-
-------------------------------------
தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 08, 2018 4:33 am

ஏ.டி.எம். இயந்திரத்தில் பயங்கர தீ
-
புதுடில்லி:
டில்லியின் கிழக்கு மாவட்டமான லஷ்மிநகரில்
தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மிஷன்
அறை உள்ளது.

இங்கு நேற்று (நவ. 7) இரவு திடீரென தீப்பிடித்தது.
தீ மளமளவென பரவி முற்றிலும் எரிந்து சாம்பலானது.

தவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம்மில் எத்தனை லட்சம் இருந்தது என்பது குறித்த
தகவல் இல்லை.
-
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 7:20 am

இந்த தீ விபத்து விசமிகள் வேலையாக இருக்கலாமோ?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 10, 2018 8:19 am

மிசோரம் தலைமை தேர்தல் ஆணையர் நீக்கம்
-
புதுடில்லி:
மிசோரம் சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.பி. ஷசாங்க்
மீது மிசோரமில் ப்ரூ சமூகத்தினரை வாக்காளர் பட்டியலில்
நீக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு புகார்
கூறப்பட்டது. இதையடுத்து ஷசாங்க் நீக்கப்பட்டு, அவருக்கு
பதிலாக துணை தேர்தல் ஆணையராக இருந்த சுதீப் ஜெயின் நியமிக்கப்பட்டார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 10, 2018 8:20 am

மம்தாவுக்கு பாரத ரத்னா: எம்.பி. வலியுறுத்தல்
-
கோல்கட்டா:
மேற்குவங்க மாநில ஆளும் திரிணாமுல்
காங். எம்.பி. இத்ரிஸ் அலி கூறியது,

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வளர்ச்சி, மத நல்லிணக்கம்
உள்ளிட்ட விஷயங்களில் தேசிய ஒருமைபாட்டின் சின்னமாக
திகழ்கிறார்.

அவருக்கு இணையான தலைவர் வேறுயாரும் இருக்க முடியாது.

எனவே மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது
வழங்கி கவுரவிக்க வேண்டும் என்றார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 11, 2018 7:55 am

4½ ஆண்டு கால ஆட்சியில் 15 தொழில் அதிபர்களுக்கு ரூ.3½ லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு
-
சரமா,

90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு
2 கட்டமாக நாளை(12-ந் தேதி) மற்றும் 20-ந்தேதி தேர்தல் நடைபெற
உள்ளது.

இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த மாநிலத்தில்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


நேற்று அவர் கான்கெர் மாவட்டத்தில் உள்ள சரமா நகரில் நடந்த
பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது பிரதமர் மோடியை
கடுமையாக தாக்கினார்.

அவர் கூறியதாவது:-

கடந்த 4½ ஆண்டுகளில் மோடி ரூ.3½ லட்சம் கோடியை
15 பணக்காரர்களுக்கு கடனாக கொடுத்து உள்ளார்.
ஆனால் நாட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை செயல் படுத்த
ஒரு ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி மட்டுமே போதுமானது.

இதைப்போல் 10 மடங்கு மதிப்புள்ள கடன் தொகையை 15 தொழில்
அதிபர்களுக்கு கொடுத்துவிட்டு அதை மோடி தள்ளுபடியும் செய்து
விட்டார்.

அரசின் கஜானா சாவிகளை மோடி குறிப்பிட்ட 15 தொழில்
அதிபர்களிடம் மட்டும் ஒப்படைத்தார். இதுதான் மோடி அரசின்
4½ ஆண்டு கால சாதனை.

அதேநேரம் இந்த கஜானா சாவிகள் விவசாயிகள், இளைஞர்கள்,
ஏழைகள், பெண்கள், பழங்குடியினரிடம் தரப்பட வேண்டும் என்று
காங்கிரஸ் விரும்புகிறது.

மத்திய பிரதேசத்திலும், சத்தீஷ்காரிலும் காங்கிரஸ் தலைமையிலான
ஆட்சி அமைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த 2 மாநிலங்களுமே
மிகப்பெரிய வேளாண் மையங்களாக உருவாகும்.

நாட்டிற்கு தேவையான உணவு, பழங்கள், காய்கறிகளை வினியோகிக்கும்
மாநிலங்களாக இவை திகழும். எனவே காங்கிரசுக்கு மக்கள்
வாக்களிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
-
---------------------------------
தினத்தந்தி


Sponsored content

PostSponsored content



Page 13 of 20 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 16 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக