புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரவு! Poll_c10ஆதரவு! Poll_m10ஆதரவு! Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
ஆதரவு! Poll_c10ஆதரவு! Poll_m10ஆதரவு! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரவு! Poll_c10ஆதரவு! Poll_m10ஆதரவு! Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
ஆதரவு! Poll_c10ஆதரவு! Poll_m10ஆதரவு! Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதரவு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 17, 2015 2:27 pm

''டீச்சர்... உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்,'' என்று சொல்லி, தன் அருகில் வந்து நின்ற சுமதியை, வியப்புடன் பார்த்தாள் தேவகி. 'வகுப்பில் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாமல் அழுத்தமாய் உட்கார்ந்திருப்பவள், இப்போது வீட்டிற்குக் கிளம்பும்போது பேச வர்றாளே...' என்று நினைத்து, ''எதுவானாலும் நாளைக்குப் பேசு; எனக்கு இப்ப நேரமில்ல,'' என்றாள் சற்று எரிச்சலுடன்!

சாதாரணமாய் யாரிடமும் எரிந்து பேசத் தெரியாதவள் தேவகி. பிறவியிலே வலது கால் ஊனம் என்பதால், உள்ளூர தாழ்வு மனப்பான்மையுடன் வளர்ந்தவளுக்கு, சுமதியை பார்த்த பின், அந்த எண்ணம் முற்றிலும் மாறியது.

ஐந்தாம் வகுப்பில் புதிதாய் சேர்ந்திருக்கும் சுமதி, ஆதரவற்றோர் இல்லத்து சிறுமி. சுமதியைப் போல சிலரை பள்ளியில் சேர்க்க வந்த போது, இல்லத் தலைவி சுகன்யா, 'எல்லாம் அனாதைங்கம்மா... ஏதோ நானும், என் புருஷனும் இதுங்களுக்காக இல்லம் நடத்தி காப்பாத்தறோம்; இதுங்களைப் படிக்க வச்சு, பெரியாளாக்க வேண்டியது ஆசிரியர்களான உங்க பொறுப்பு...' என்றாள்.

அந்த எண்ணத்தில் தான், தன் வகுப்பில் சேர்ந்த சுமதிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தாள் தேவகி. சற்று கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டாலும், எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டாள் சுமதி. பள்ளி முடிந்ததும் விழுந்தடித்து, இல்லத்திற்கு ஓடி விடுவாள்.இது குறித்து, ஒரு முறை இல்லத் தலைவி சுகன்யாவிடம் பேசினாள் தேவகி.

'எங்க இல்லத்துக்கு, யாரோ ஒருத்தர் இவளையும், இவ தம்பியையும் கொண்டு வந்து விட்டாங்கம்மா. சாப்பிட மட்டும் தான் வாயத் திறப்பா. சாயந்திரம், 5:00 மணிக்கு இல்லத்துல டிபன் போடுவோம்; அதுக்காக ஓடி வந்துடுறா போலிருக்கு... அழுத்தக்கார கழுதை; விட்டுத் தள்ளுங்க...' என்று, அலுத்துக் கொண்டாள் சுகன்யா.

அவளை தனிமையில் அழைத்து, 'சுமதி...நீ, வகுப்புக்கு வந்து மூணு மாசமாச்சு; ஏன் எப்பவும் இறுகிப் போன முகத்தோடயே இருக்கே... உனக்கு என்ன பிரச்னைன்னு என்கிட்ட சொல்லு. நான் உனக்கு டீச்சர் மட்டுமில்ல, தாய் மாதிரி. அதனால, என்கிட்ட பயமில்லாம பேசு...' என்றாள்.
'ஒண்ணுமில்ல டீச்சர்...' என்றாள் தயக்கத்துடன்!

'அப்போ அந்த சுகன்யா சொல்ற மாதிரி சோத்துக்குத் தான் பள்ளிக் கூடம் விட்டதும் ஓடுறியா?''
'இல்ல ஆ... ஆமா டீச்சர்...'

'போடி... போய்த் தொலை...' என்று கோபமாக கூறினாள் தேவகி.

'நானும் ஏழை தான்; அனாதை இல்லையே தவிர, கால் ஊனம் காரணமா இந்த சமூகத்தில அனாதையை போல நிராகரிக்கப்பட்டவ. படிச்சேன்; என்னையும் ஒருத்தர் காதலிச்சு கல்யாணம் செய்தார். கதை, கவிதைகளில் ஆர்வம் உள்ளவர். இருவரும் நல்ல நிலைமைக்கு வந்தபின், குழந்தை பெத்துக்கலாம்ன்னு தீர்மானிச்சு இருக்கிறதால, வகுப்பு பிள்ளைகளையே என் குழந்தைகளாக நினைச்சு அக்கறை காட்டினா, இந்த சுமதி இவ்வளவு அழுத்தக்காரியா இருக்காளே...' என்று நினைத்தாள் தேவகி.

அதன்பின், தேவகி, சுமதியிடம் பேசவே இல்லை. வழக்கம் போல இறுக்கமாகவே இருந்தாள் சுமதி.
''டீச்சர் உங்ககிட்ட...'' என்று சுமதி தயங்க, ''வகுப்புல மாஞ்சி மாஞ்சி சொல்லிக் கொடுத்தாலும் பதில் சொல்ல மாட்டே... இப்ப என்ன பேச வர்றே போ போ,'' என்று சொல்லி, வெளியே வந்த போது, மொபைல் அழைத்தது. போனில் அவள் கணவன் தான் பேசினான்...

''தேவகி... நான் உதவி ஆசிரியரா வேலை பாத்திட்டு இருந்த பத்திரிகைய மூடப் போறாங்க; வாங்கிட்டுருந்த சொற்ப சம்பளமும் இனிமேல் வராது. இனி உனக்கு பாரமாய், நான்...''
போனிலேயே அழுது விடுவான் போலிருந்தது.

''என்னங்க... இதுக்குப் போயி கவலைப்பட்டுட்டு... உங்க கற்பனை வளம் ஊற்றுக்கண்ணா இருக்கு. எழுத்தாளர்கள் எழுதி சம்பாதிக்கிற காலங்க இது. ஒருத்தர்கிட்ட கைநீட்டி வேலை பாக்கிறதை விட, எழுத்து வானில் சுதந்திரமாய் பறக்கும் பறவையாகி இருக்கீங்க. இதுக்கு போய் கவலைப்படுறீங்களே...'' என்று ஆறுதல் கூறினாள்.

தொடர்ந்து முழு ஆண்டு தேர்வுகள் வந்ததால், அதிலேயே கவனமாக இருந்தாள் தேவகி.
முழுஆண்டு விடுமுறையில் ஒரு நாள் சுகன்யாவை பார்க்க, அந்த இல்லத்திற்கு சென்ற தேவகி, அவளை மனம் திறந்து பாராட்டினாள்.

''இந்தப் பாராட்டெல்லாம் என் கணவருக்குத் தாங்க; அவர் தான் முழுப் பொறுப்பு எடுத்து நடத்துறார்,'' என்றவள், இல்லத்தை சுற்றிக் காட்டினாள். தேவகி, சுமதி இருந்த அறை பக்கம் போன போது அங்கே அவள் இல்லை. மற்ற சிறுமிகள் படித்துக் கொண்டும், விளையாடியபடியும் இருக்க, சுமதி சாப்பாடு பரிமாறும் கூடத்தில் அமர்ந்திருந்தாள்.

''நான் சொல்லல டீச்சர்...'' கிண்டலாய் சிரித்தாள் சுகன்யா.
தேவகியைப் பார்த்த சுமதி, புன்னகைக்க கூட இல்லை.

சம்பள நாள் அன்று ஆசிரியர்கள், பள்ளி அலுவலர்கள் எனக் கூட்டமாய் இருக்க, தேவகியிடம் ஊதியக் கவர் வழங்கப்பட்டது. நன்றி கூறி திரும்பிய போது, ''ஒரு நிமிஷம்,'' என்று பள்ளி அலுவலகப் பெண்மணி அழைத்தாள்.

ஒரு பைலை எடுத்துப் பிரித்து, ''இதில் கையெழுத்துப் போடுங்க,'' என்றாள்.
அதைப் பிரித்து பார்த்தாள் தேவகி. அதில், 'தாங்கள் இந்த ஆண்டு மிகவும் திறமையுடன் பணிபுரிந்தீர்கள் என்பதில் மகிழ்ச்சி; இத்துடன் தங்கள் பணி நிறைவு பெறுகிறது...' என்று எழுதி இருந்தது.

முகம் வெளிற நிமிர்ந்தாள் தேவகி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 17, 2015 2:29 pm

''என்னாச்சு தேவகி... இந்த ஆண்டு வரைக்கும் தானே உங்கள தற்காலிக பணியில் நியமிச்சாங்க. அதான், இப்ப உங்கள பணியிலிருந்து விடுவிக்கிறாங்க,'' என்றாள் அலுவலகப் பெண்.

''இல்லையே... முன்பிருந்த தலைமை ஆசிரியை எனக்கு நிரந்தர போஸ்ட்ன்னு தானே சொன்னாங்க...'' பரிதாபமாய் சொன்னாள் தேவகி.

''அதை அவங்க கிட்ட கேட்டுக்குங்க... இதுல கையெழுத்துப் போடுங்க,'' என்றாள் இரு நாட்களுக்கு முன் வந்திருந்த புதிய தலைமையாசிரியை.

'கெட் அவுட்...' என்று சொல்லாமல் சொன்னது, அவளின் குரல்.
கையெழுத்திட்டு பள்ளிக்கூட வாசலுக்கு வந்தபோது சுமதி எதிரில் வந்து, ''டீச்சர் உங்ககிட்ட ஒரு விஷயம்...'' என, இழுத்தாள்.

தேவகிக்கு இருந்த மனநிலையில், அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
வீட்டிற்கு சோர்வாக வந்தாள்.

''அநியாயம் இது... அபிஷியலா டி.இ.ஓ., சி.இ.ஓ.,வுக்கு புகார் கொடுப்போம்; இல்லேன்னா கோர்ட்க்கு போகலாம்... விடக் கூடாது,'' என்றான் தேவகியின் கணவன்.
இரண்டு மாதங்களுக்கு பின், மாலையில், 'டிவி'யில், 'நீதியே வெல்லும்' என்ற நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தாள் தேவகி.

நிகழ்ச்சி நடத்தும் பெண்மணி திரையில் தோன்றி, ஆதரவற்ற குழந்தைகள் பற்றி சில தகவல்களை தெரிவித்து, அவர்களுக்கு சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை, இந்நிகழ்ச்சி வெளிச்சம் போடப் போவதாக கூறி, 'நேயர்களே... நாம் எந்த மாதிரியான சமூகத்தில் இருக்கிறோம்... நம் கண் முன் நடக்கும் அக்கிரமங்களைக் காண்கிறோமா, நமக்கான சமூக அக்கறை தான் என்ன?

'சமீபத்தில், எங்கள், 'டிவி' நிலையத்தை தொடர்பு கொண்ட ஒருவர், தான் பணிபுரியும் ஆதரவற்றோர் இல்லத்தில் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றி சொன்னார். அவர் சொன்னதன் படி, நாங்கள் ஒரு சிறுமியை நிலையத்துக்கு வர வழைத்திருக்கிறோம்...' என்று கூறியவள், 'வாம்மா...' என்று அழைத்தாள்.
மேடைக்கு வந்த சிறுமியைப் பார்த்ததும், துள்ளி எழுந்த தேவகி, ''சுமதீ...'' என்று, கத்தி விட்டாள்.
திரையில் அவள் பார்வை குத்திட்டது.

'உன் பேர் என்னம்மா?'
அன்பாகக் கேட்டார், நிகழ்ச்சி நடத்தும் பெண்மணி.
பதில் சொல்லவில்லை சுமதி.
'ஏன்மா பேச மாட்டியா...'
பேச மாட்டேன் என்பது போல தலையாட்டினாள் சுமதி.
'ஏன் பேச மாட்டே... பேசக் கூடாதுன்னு உன்னை யாராவது பயமுறுத்தினாங்களா?' என்று கேட்டாள்.
'ஆமாம்...' என்பது போல தலையை ஆட்டினாள் சுமதி.
'உன்னை பயமுறுத்தியது யாருன்னு சொல்லட்டுமா... உங்க ஆதரவற்றோர் இல்லத்து உரிமையாளர் வெற்றி பெருமாள் தானே...'
'ஆமாம்' என்பது போல் மறுபடியும் தலையாட்டலே பதிலாக வந்தது.

'பயப்படாதே... உன்னை மீட்க நாங்க இருக்கோம்...' என்று கூறியவள், 'நேயர்களே... இந்தக் குழந்தைக்கு நடந்த கொடுமைகள பாத்து மனசு பொறுக்க முடியாம, இவளோட இல்லத்து சமையக்காரர் தான் எங்களுக்கு தகவல் கொடுத்தார். அந்த இல்லத்து தலைவியும், அவங்க புருஷனுக்கு உடந்தை. ஆதரவற்றோருக்கு அடைக்கலம் கொடுக்குற ஆயிரமாயிரம் அனாதை இல்லங்களுக்கு இடையே, இப்படியும் ஒரு சில இடங்கள் இருப்பதை நினைத்து மனசுக்கு வேதனையாக இருக்கு...' என்று சொன்னவள், சுமதியை நோக்கி, 'சொல்லு சுமதி... எதுக்காக வாயே திறக்க மாட்டேங்கிற...'

'வெற்றி ஐயா தான் நான் வாயத் தொறந்தா, என் தம்பியக் கொன்னுடுவேன்னாரு... அதனால பேசப் பயமா இருக்கு...'
'ஏன்ம்மா... அப்படி சொன்னாரு... அந்த ஆளு உன்கிட்ட தப்பா நடந்திட்டு, அதை வெளில சொல்லக் கூடாதுன்னு பயமுறுத்தினாரா?' என்று கேட்டாள்.

'ஆமா...'
'நீ அதை அவங்க மனைவிகிட்ட சொல்லி இருக்கலாம்ல...'
'சொன்னேன்... அவங்க, 'உளறாதே, வாயை மூடு'ன்னு மிரட்டினாங்க... அவங்க வீட்டுல பாத்திரம் கழுவி, வீடு பெருக்கி சுத்தம் செய்யணுங்கிறதுக்காக பள்ளிக்கூடம் விட்டதும் சீக்கிரமா வரச் சொல்லுவாங்க. அத முடிச்சதும், வெற்றி ஐயா மாடி ரூமுக்கு வரச் சொல்வாரு...'

'அங்க என்னம்மா செய்வாரு...'
பதில் சொல்லாமல் அழுதாள் சுமதி.
பார்த்துக் கொண்டிருந்த தேவகிக்கு, உடம்பு பதற ஆரம்பித்தது.
'சொல்லும்மா...'

'தப்பா நடப்பாரு... எனக்கு தான் யாருமில்லையே... பாட்டிக்கு வயசாயிடுச்சி. அதனால, காப்பாத்த முடியலன்னு என்னையும், தம்பியையும் தெரிஞ்சவங்க மூலமா இங்க சேர்த்து விட்டுச்சு. அதனால, யாரும் கேக்க மாட்டாங்கன்னு என்கிட்ட தப்பா நடப்பாரு. வெளியில சொன்னா, தம்பியக் கொன்னுடுவேன்னு மிரட்டுவாரு. அதான் பயத்துல பேச முடியல. ஆனா, எனக்கு எங்க தேவகி டீச்சரைப் பிடிக்கும். அவங்க தான், 'உனக்கு நான் அம்மா மாதிரி'ன்னு ஒருமுறை சொன்னாங்க. அதனால, அவங்கிட்ட சொல்லலாம்ன்னு நினைச்சேன்...' கண்ணில் நீர் வழிய, தேம்பினாள் சுமதி.

'ஐயோ... நான் மகா பாவி... கால் மட்டுமில்ல, எனக்கு மனசும் ஊனம். என் பிரச்னையில உன்னை உதாசீனப் படுத்திட்டேனே... இல்லன்னா உன்னை அன்னிக்கே காப்பாத்தி இருப்பேனே... ஐயோ கடவுளே... நான் இதுக்கு என்ன பிராயச்சித்தம் செய்யப் போறேன்...' நெஞ்சிலடித்து அழுதாள் தேவகி.

'தேவகி டீச்சருக்கிட்ட சொன்னியா?'
'அவங்ககிட்ட சொல்ல வாய்ப்பு வரல...'
'இல்ல நான் தான் அதைக் காது கொடுத்து கேட்கல...' என, தேவகி மனது அரற்றியது.

'சொல்லு சுமதி... அந்த வெற்றி பெருமாள் உன்னை போல இன்னும் எத்தனை சிறுமிகளை கசக்கிப் பிழஞ்சுருக்கான்னு சொல்லு. அந்த கயவன பிடிச்சு போலீஸ்ல கொடுக்குறோம். உனக்கு உதவ நாங்க இருக்கோம்; உன் தம்பிய படிக்க வச்சி காப்பாத்த, பல நல்ல உள்ளங்கள் இருக்கு...' என்றவள், 'நேயர்களே... அக்கிரமக்காரர்களை தண்டிக்க நீதிமன்றம் இருக்கு. ஆனா, இந்த சுமதி போல எத்தனையோ சுமதிகள், இத்தகைய கொடுமையை அனுபவிச்சிகிட்டு இருப்பாங்க... அவங்கள அந்தக் கொடுமையிலிருந்து காப்பாற்றுவது உங்களோட கடமையாகவும் இருக்கட்டும்.

'பாதிக்கப்பட்ட இத்தகைய சிறுமிகளை வாழ வைக்க, உங்களோட ஆதரவு எங்களுக்கு தேவை. தயவு செய்து, எங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்க...' என்று கூறி, கண்கலங்க கை குவித்தார் நிகழ்ச்சி அமைப்பாளர்.

தேவகி கண்களில் நீர் வடிய, தன் மொபைல் போனில், எண்களை அழுத்த ஆரம்பித்தாள்.

ஷைலஜா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 17, 2015 2:39 pm

நாம் எந்த மாதிரியான சமூகத்தில் இருக்கிறோம்... நம் கண் முன் நடக்கும் அக்கிரமங்களைக் காண்கிறோமா, நமக்கான சமூக அக்கறை தான் என்ன?
இல்லை என்ற பதிலை சொல்ல வேதனையாக தான் இருக்கிறது.



ஆதரவு! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆதரவு! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆதரவு! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Fri Apr 17, 2015 2:47 pm

அருமையான கதை!இது போன்ற சம்பவங்கள் இலைமறை காயாக
சமுகத்தில் நடந்து கொண்டிருகின்றன!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக