புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
5 Posts - 63%
heezulia
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_m10ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 12, 2015 1:54 pm

ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Gallerye_235520202_1227852

புதுடில்லி: 'ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேல் தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்கள், தங்களின், 'பான் கார்டு' எண்ணை தெரிவிக்க வேண்டும்' என்ற மத்திய அரசின் அறிவிப்பு, தங்க நகை விற்பனையாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த புதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், தங்கம் விற்பனையில் மந்த நிலை ஏற்படுவதோடு, இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு வணிகர்கள், சில்லரை வியாபாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, அத்துறையினர் கூறுகின்றனர்.

தங்கம் விற்பனையை ஒழுங்குபடுத்தவும், கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தவும், மத்திய நிதிஅமைச்சகம் அதிரடியாக பல முடிவுகளை எடுத்துள்ளது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டார். அதன்படி, 'ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான மதிப்புடைய தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் 'நிரந்தர கணக்கு எண்' எனப்படும், பான் கார்டு எண்ணை தெரிவிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டது.

அதிர்ச்சி :

நிதியமைச்சகத்தின் இந்த அறிவிப்பு, ஒருசாராரிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும், தங்க நகை விற்பனையில் ஈடுபட்டுள்ள, சிறு வணிகர்கள், சில்லரை வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பலரும் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் இருப்பதாக கவலை தெரிவித்துள்ளளனர்.

இதுகுறித்து, தங்க நகை விற்பனையாளர்கள் கூறியதாவது:நம் நாட்டை பொறுத்தவரை, இல்லத்தரசிகள் தான் வீட்டின் நிதியமைச்சர்கள். நடுத்தர குடும்பங்கள் முதல், பொருளாதார ரீதியில் ஓரளவு முன்னேறிய குடும்பங்கள் வரை, வீட்டின் வரவு, செலவு நிர்வாகம் அனைத்தையும் பெண்களே கவனிக்கின்றனர். அந்த வகையில், பெண்கள் சிறுக சிறுக சேமிக்கும் தொகையை, பெரும்பாலும் தங்கத்திலேயே முதலீடு செய்கின்றனர். மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பால், பெண்கள் தங்கம் வாங்குவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த அறிவிப்பு, மக்கள்

மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், 90 சதவீத இல்லத்தரசிகளிடம், பான் கார்டு இல்லை. தற்போதைய நிலவரப்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில், வெறும், 17 கோடி பேரிடம் மட்டுமே பான் கார்டு உள்ளது.

வருமான வரிசெலுத்துவோர்:

அதிலும் வெறும், மூன்று கோடி பேர் மட்டுமே, வருமான வரி செலுத்துபவர்களாக உள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கும் நபர்கள், அவர்களின் பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு, எந்த அளவு சாத்தியம் என தெரியவில்லை. இதனால், நடுத்தர மற்றும் பொருளாதார ரீதியில் ஓரளவு முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த இல்லத்தரசிகளின் முதலீடு, வேறு வழியில் திசை மாற வாய்ப்புள்ளது.

பாதிப்பு:

தவிர, பழைய நகைகளைக் கொடுத்து, அதற்கு பதிலாக புதிய நகைகளை வாங்கும் பழக்கம் நம் நாட்டு பெண்களிடம் உள்ளது. இந்த முறையில் தான், பெரும்பாலான சிறு நகைக் கடைகளில் விற்பனை நடைபெறுகிறது. மத்திய அரசின் அறிவிப்பால், இந்த மாதிரியான விற்பனை முறையும் பாதிக்கப்படும். இதனால், தங்க நகை விற்பனையில் ஈடுபட்டுள்ள, சிறு வணிகர்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள், பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை, மறுபரிசீலனை செய்ய வேண்டும். தற்போதுள்ள, ஒரு லட்சம் ரூபாய் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி, 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் மேலான மதிப்பில் தங்கம் வாங்குவோருக்கு, பான் கார்டை கட்டாயப்படுத்தலாம். இதன் மூலம், பெண்களின் முதலீடு தங்கத்தில் தொடர்வதோடு, சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரமும் எந்த வகையிலும் பாதிக்காது. அந்த துறையில்

ஈடுபட்டுள்ள, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பயன் அடைவர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கறுப்பு பணம் கட்டுப்படுத்தப்படுமா?

இதுகுறித்து, நிதி ஆலோசகர்கள் கூறியதாவது: நாட்டில் கறுப்புப் பணப் பதுக்கலைத் தடுக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் பட்டியலை கேட்டு பெற்று, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.இந்நிலையில், மத்திய அரசின் கிடுக்கிப்பிடியால், கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் பண முதலைகள், தங்கள் பணத்தை, தங்கமாக மாற்றி மீண்டும் பதுக்கலில் ஈடுபடுவதாக, அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. கறுப்புப் பணத்தை பதுக்க நினைக்கும் பண முதலைகள், ஒரு லட்சம் ரூபாய் என்ற சிறிய தொகைக்கு தங்கம் வாங்கப் போவதில்லை. அவர்கள், 10 லட்சத்திற்கும் மேலாகவே, தங்கத்தை வாங்கி பதுக்க முற்படுவர். வெறும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை விற்பனையில் கிடுக்கிப்பிடி போடுவது, எந்த வகையிலும் பலன் அளிக்காது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

ஒரு சிலருக்கு மட்டுமே பயன் :

சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: இந்தியாவில், 10 சதவீத மக்கள் மட்டும், பான் கார்டு வைத்துள்ளனர்; 90 சதவீத மக்களிடம் இல்லை. ஆனால், 'ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல், நகை வாங்கினால், பான் கார்டு வழங்க வேண்டும்' என்ற, மத்திய அரசின் அறிவிப்பால், ஒரு சிலர் மட்டும், தங்கம் வாங்கும் நிலை ஏற்படும். எனவே, நடைமுறைக்கு ஒத்து வராத அறிவிப்பை நீக்க வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை, மறுபரிசீலனை செய்வதாக, அரசும், உறுதி அளித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

இந்திய நவரத்தினங்கள் மற்றும் தங்கம் வர்த்தக கூட்டமைப்பு மண்டல தலைவர் அனந்த பத்மநாபன் கூறியதாவது: 'ஒரு லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கினால், பான் கார்டு அவசியம்' என்ற அறிவிப்பை, அரசு, பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளது. இதில், அரசின் முடிவு பார்லிமென்ட் கூட்டத்தொடரில் தெரியவரும்.

இவ்வாறு, அவர் கூறினார்.



ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம்: விற்பனை, தொழில் பாதிக்கும் என வியாபாரிகள் கருத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 12, 2015 1:58 pm

பில் போடாமலேயே வெறும் வெள்ளை காகிதத்தில் கணக்கு போட்டு தங்க நகைகளை விற்கும் நகைக்கடை முதலாளிகளுக்கு இது அதிர்ச்சியாக தான் இருக்கும்.

அதே நேரத்தில் திருமணம் போன்ற வைபவங்களுக்கு நகை வாங்கு ஏழை / நடுத்தர மக்களுக்கு இதிலிருந்து அரசு விளக்கு அளிக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக