புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
40 நாட்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னைக்கு வருவது, இதுதான் முதல் முறை. திரு.வி.க.,நகரில் சித்தப்பா வீடு இருந்தது. சித்தப்பா ரொம்ப நாளாய் வரச் சொல்லி அழைத்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக வந்து சேர்ந்ததும், சந்தோஷப்பட்டாலும், அவர் முகத்தில் ஏதோ சஞ்சலம் தெரிந்தது. விசாரித்த போது, ''அமீர் சாஹெப்பிற்கு உடம்புக்கு முடியல; ரொம்ப சீரியசாக இருக்கார். ஆஸ்பத்திரிக்கு போகணும்...'' என்றார். ''யார் சித்தப்பா அமீர் சாஹெப்?'' என்று கேட்டேன்.
''கூடவா வா சொல்றேன்,'' என்று, புரசை வாக்கத்தில் இருந்த ஆயிஷா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அமீர் சாஹெப் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே மக்கள் கூடியிருந்தனர். அதில், மிக கவலையோடு நின்றிருந்த நான்கு பேரை சுட்டிக் காட்டிய சித்தப்பா, ''இந்த நான்கு பேரும் ஒரு காலத்தில பொறுக்கிங்களா திரிஞ்சாங்க; இவங்களப் பாத்தா ஏரியாவே பயந்து நடுங்கும். ஆனா, இப்ப நல்லவங்களா மாறிட்டாங்க,'' என்றார். ''அது எப்படி சித்தப்பா...'' என்றேன் நான்.
''அது, ஒரு பெரிய கதை,'' என்று கூறிய சித்தப்பா, என்னை ஒரு ஓரமாக அழைத்து சென்று, அவர்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்...
இப்ராஹிம் பாயை, அப்பகுதி மக்கள், அமீர் சாஹெப் என்று தான் அழைப்பர்.
நெடிய உயரம், நீண்ட கரிய தாடி, கூரான மூக்கு, புன்னகை தவழும் முகம் என, முதல் சந்திப்பிலேயே யாரையும் நண்பனாக்கி விடும் தோற்றம் அவருக்கு. ஐந்து வேளை, நேரம் தவறாமல் தொழுவார். அவரை நேசிப்பவர்கள் அதிகம்; அதே போல், அவரைப் பார்த்து பயந்து ஓடுவோரும் உண்டு. காரணம், மசூதிக்கு தொழ வராதவர்களை தொழ அழைப்பார். அதனால், அவரை பார்த்து சிலர் ஒளிந்து கொள்வர். அதில், இந்த நால்வரும் அடக்கம்.
எப்போது பார்த்தாலும் டீக்கடையில் உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருப்பர் அல்லது சலூன் கடையில் அரட்டை அடிப்பர். பகலில் சூதாடுவர்; இரவானால், குடித்து கும்மாளமிடுவர். சாப்பிடவும், தூங்கவும் மட்டுமே வீட்டிற்கு செல்வர். வீட்டில் மிகவும் பண நெருக்கடி என்றால் தான், ஏதாவது கூலி வேலைக்கு செல்வர்; ரொம்ப கஷ்டம் என்றால், மற்றவர்களிடம் கடன் கேட்பர். அவர்கள் கடனை திருப்பி கேட்டால், வேறு யாரிடமாவது வட்டிக்கு கடன் வாங்கிக் கொடுப்பர்.
அவர்களைப் பற்றி அறிந்த அமீர் சாஹெப், அவர்கள் மசூதிக்கு வந்து தொழுகையாளியாக மாறி விட்டால், அவர்களுடைய கெட்ட பழக்கங்கள் நீங்கி விடும் என்று எண்ணி, தொடர்ந்து, அவர்களிடம் நயமாக பேசினார். ஆனால், அது, அவர்களுக்கு புரியவில்லை; அவர் வருவது தெரிந்தால் ஒளிந்து கொள்வர்.
இவர்கள் இப்படிச் செய்வதால், சில சமயங்களில், அவர்களுடைய வீடுகளுக்கே சென்று அழைப்பார் அமீர் சாஹெப். அவர்களுடைய வீட்டுப் பெண்களோ, 'அமீர் சாஹெப்... இவர்களை எப்படியாவது உங்களோட ஜமாத்துக்கு கூட்டிட்டு போய் தொழ வையுங்க...' என்பர்.
அன்று வழக்கம் போல் கடைவீதி பக்கமாக நடந்து சென்றார் அமீர் சாஹெப். அவரை பார்த்து ஓடி, ஒளியும் நால்வரும், அன்று ஏனோ நகராமல், அவரை கண்டு கொள்ளாமல் நின்றிருந்தனர்.
'அஸ்ஸலாமு அலைக்கும்...'
'வாலைக்கும் ஸலாம்...'
'இன்ஷா அல்லாஹ்! இந்த வாரம், 40 நாளைக்கு சில்லா ஜமாத் புறப்படுது; நானும் போறேன்; நீங்களும் வரணும்...' என்றார்.
'சில்லா ஜமாத்ன்னா என்ன?' என்று கேட்டான் அவர்களில் ஒருவன்.
'இறைவனுடைய பாதையில், 40 நாட்கள் செல்வதற்கு பெயர் தான் சில்லா ஜமாத்...'
'எங்கே போவது?' என்று கேட்டான் மற்றொருவன்.
'மசூதியில போயி தங்குவோம்; ஐந்து வேளையும் விடாமல் தொழுவோம். அந்த பகுதியில் தொழாதவர்களை சந்தித்து, 'தொழுகையில் தான் வெற்றி இருக்கிறது...' என்று சொல்லி, மசூதிக்கு அழைத்து வருவோம். நாங்களே சமைத்து உண்போம்...'என்றார்.
'எவ்வளவு செலவாகும்...' என்றான் மூன்றாமவன்.
'ஆளுக்கு, 1,500 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாய் வரை ஆகும்...' என்றார்.
'இடையில வீட்டிற்கு வரக்கூடாதா?'
'அப்படி எதுவும் கட்டாயமில்ல; ரொம்ப அவசியம்ன்னா வரலாம்...'
'நாற்பது நாட்கள் எப்படி வீட்டை விட்டு, மனைவி, பிள்ளைகளை விட்டு வருவது... நாம இல்லாம, குடும்பம் எப்படி நடக்கும்?'என்று கேட்டான் ஒருவன்.
'நம்மிடமுள்ள கர்வம் அகலவும், நம்மிடையே, ஒரு மாற்றம் உருவாகவும், இறைவனால் தான் எல்லாம் நடக்கிறது என்பதை உணரவும் தான், சில்லா ஜமாத்திற்கு செல்கிறோம். அதனால், குடும்பத்தை அந்த இறைவனே பார்த்துக் கொள்வார்...' என்றார்.
'பாக்கலாம்...' என்றனர். தொடர்ந்து அவர்களிடம், 40 நாட்களுக்காக, அழைப்பு விடுத்தார். அத்துடன், அவர்களுடைய வீட்டாரும், சில்லா ஜமாத்திற்கு செல்லும் படி வற்புறுத்திய போது, 'ஜமாத்திற்கு போக பணம் தேவைபடும்; அதோட வீட்டுச் செலவுக்கும் காசு வேணும்...' என்று சமாளித்துப் பார்த்தனர். ஆனால், வீட்டுப் பெண்களோ,'வீட்டு செலவ நாங்க பார்த்துக்றோம்; நீங்க ஜமாத்தில், 40 நாளைக்கு போறதா இருந்தா அந்த காசையும் நாங்களே தர்றோம்...' என்றனர்.
அன்றிரவு, அந்த நால்வர் அணி, ரகசியமாக கூடி விவாதித்தது...
'ஏண்டா... அந்த ஆளை ஆரம்பத்துலேயே வெட்டி விடாம விஷயம் இவ்வளவு தூரம் வந்துருச்சே... வீட்டிலேயும் இனி நம்மள அனுப்பாம விடமாட்டாங்க போலிருக்கே... எனக்கு ஒரு யோசனை தோணுது... ஒரு முறை ஜமாத்திற்கு போய் தான் பாப்போம்; அங்கே நாம செய்கிற கலாட்டாவில அந்த அமீர் சாஹெப், இனி யாரையும் ஜமாத்துக்கு அழைக்கவே கூடாது...' என்று ஒருவன் யோசனை சொன்னதும், அதை மற்ற மூவரும் ஏற்றுக் கொண்டனர்
.
இறைவன் எல்லா சூழ்ச்சியையும் முறியடிக்கக்கூடியவன் என்று, பாவம் அவர்களுக்கு தெரியவில்லை.
அந்த நால்வரும், 40 நாட்கள் சில்லாவுக்கு செல்வதைப்பற்றி, மசூதியில் பரபரப்பாக பேசினர்.
'அமீர் சாஹெப், இது தேவைதானா... ரிஸ்க் எடுக்காதீங்க...'என்றனர்.
thodarum............
''கூடவா வா சொல்றேன்,'' என்று, புரசை வாக்கத்தில் இருந்த ஆயிஷா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அமீர் சாஹெப் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே மக்கள் கூடியிருந்தனர். அதில், மிக கவலையோடு நின்றிருந்த நான்கு பேரை சுட்டிக் காட்டிய சித்தப்பா, ''இந்த நான்கு பேரும் ஒரு காலத்தில பொறுக்கிங்களா திரிஞ்சாங்க; இவங்களப் பாத்தா ஏரியாவே பயந்து நடுங்கும். ஆனா, இப்ப நல்லவங்களா மாறிட்டாங்க,'' என்றார். ''அது எப்படி சித்தப்பா...'' என்றேன் நான்.
''அது, ஒரு பெரிய கதை,'' என்று கூறிய சித்தப்பா, என்னை ஒரு ஓரமாக அழைத்து சென்று, அவர்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்...
இப்ராஹிம் பாயை, அப்பகுதி மக்கள், அமீர் சாஹெப் என்று தான் அழைப்பர்.
நெடிய உயரம், நீண்ட கரிய தாடி, கூரான மூக்கு, புன்னகை தவழும் முகம் என, முதல் சந்திப்பிலேயே யாரையும் நண்பனாக்கி விடும் தோற்றம் அவருக்கு. ஐந்து வேளை, நேரம் தவறாமல் தொழுவார். அவரை நேசிப்பவர்கள் அதிகம்; அதே போல், அவரைப் பார்த்து பயந்து ஓடுவோரும் உண்டு. காரணம், மசூதிக்கு தொழ வராதவர்களை தொழ அழைப்பார். அதனால், அவரை பார்த்து சிலர் ஒளிந்து கொள்வர். அதில், இந்த நால்வரும் அடக்கம்.
எப்போது பார்த்தாலும் டீக்கடையில் உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருப்பர் அல்லது சலூன் கடையில் அரட்டை அடிப்பர். பகலில் சூதாடுவர்; இரவானால், குடித்து கும்மாளமிடுவர். சாப்பிடவும், தூங்கவும் மட்டுமே வீட்டிற்கு செல்வர். வீட்டில் மிகவும் பண நெருக்கடி என்றால் தான், ஏதாவது கூலி வேலைக்கு செல்வர்; ரொம்ப கஷ்டம் என்றால், மற்றவர்களிடம் கடன் கேட்பர். அவர்கள் கடனை திருப்பி கேட்டால், வேறு யாரிடமாவது வட்டிக்கு கடன் வாங்கிக் கொடுப்பர்.
அவர்களைப் பற்றி அறிந்த அமீர் சாஹெப், அவர்கள் மசூதிக்கு வந்து தொழுகையாளியாக மாறி விட்டால், அவர்களுடைய கெட்ட பழக்கங்கள் நீங்கி விடும் என்று எண்ணி, தொடர்ந்து, அவர்களிடம் நயமாக பேசினார். ஆனால், அது, அவர்களுக்கு புரியவில்லை; அவர் வருவது தெரிந்தால் ஒளிந்து கொள்வர்.
இவர்கள் இப்படிச் செய்வதால், சில சமயங்களில், அவர்களுடைய வீடுகளுக்கே சென்று அழைப்பார் அமீர் சாஹெப். அவர்களுடைய வீட்டுப் பெண்களோ, 'அமீர் சாஹெப்... இவர்களை எப்படியாவது உங்களோட ஜமாத்துக்கு கூட்டிட்டு போய் தொழ வையுங்க...' என்பர்.
அன்று வழக்கம் போல் கடைவீதி பக்கமாக நடந்து சென்றார் அமீர் சாஹெப். அவரை பார்த்து ஓடி, ஒளியும் நால்வரும், அன்று ஏனோ நகராமல், அவரை கண்டு கொள்ளாமல் நின்றிருந்தனர்.
'அஸ்ஸலாமு அலைக்கும்...'
'வாலைக்கும் ஸலாம்...'
'இன்ஷா அல்லாஹ்! இந்த வாரம், 40 நாளைக்கு சில்லா ஜமாத் புறப்படுது; நானும் போறேன்; நீங்களும் வரணும்...' என்றார்.
'சில்லா ஜமாத்ன்னா என்ன?' என்று கேட்டான் அவர்களில் ஒருவன்.
'இறைவனுடைய பாதையில், 40 நாட்கள் செல்வதற்கு பெயர் தான் சில்லா ஜமாத்...'
'எங்கே போவது?' என்று கேட்டான் மற்றொருவன்.
'மசூதியில போயி தங்குவோம்; ஐந்து வேளையும் விடாமல் தொழுவோம். அந்த பகுதியில் தொழாதவர்களை சந்தித்து, 'தொழுகையில் தான் வெற்றி இருக்கிறது...' என்று சொல்லி, மசூதிக்கு அழைத்து வருவோம். நாங்களே சமைத்து உண்போம்...'என்றார்.
'எவ்வளவு செலவாகும்...' என்றான் மூன்றாமவன்.
'ஆளுக்கு, 1,500 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாய் வரை ஆகும்...' என்றார்.
'இடையில வீட்டிற்கு வரக்கூடாதா?'
'அப்படி எதுவும் கட்டாயமில்ல; ரொம்ப அவசியம்ன்னா வரலாம்...'
'நாற்பது நாட்கள் எப்படி வீட்டை விட்டு, மனைவி, பிள்ளைகளை விட்டு வருவது... நாம இல்லாம, குடும்பம் எப்படி நடக்கும்?'என்று கேட்டான் ஒருவன்.
'நம்மிடமுள்ள கர்வம் அகலவும், நம்மிடையே, ஒரு மாற்றம் உருவாகவும், இறைவனால் தான் எல்லாம் நடக்கிறது என்பதை உணரவும் தான், சில்லா ஜமாத்திற்கு செல்கிறோம். அதனால், குடும்பத்தை அந்த இறைவனே பார்த்துக் கொள்வார்...' என்றார்.
'பாக்கலாம்...' என்றனர். தொடர்ந்து அவர்களிடம், 40 நாட்களுக்காக, அழைப்பு விடுத்தார். அத்துடன், அவர்களுடைய வீட்டாரும், சில்லா ஜமாத்திற்கு செல்லும் படி வற்புறுத்திய போது, 'ஜமாத்திற்கு போக பணம் தேவைபடும்; அதோட வீட்டுச் செலவுக்கும் காசு வேணும்...' என்று சமாளித்துப் பார்த்தனர். ஆனால், வீட்டுப் பெண்களோ,'வீட்டு செலவ நாங்க பார்த்துக்றோம்; நீங்க ஜமாத்தில், 40 நாளைக்கு போறதா இருந்தா அந்த காசையும் நாங்களே தர்றோம்...' என்றனர்.
அன்றிரவு, அந்த நால்வர் அணி, ரகசியமாக கூடி விவாதித்தது...
'ஏண்டா... அந்த ஆளை ஆரம்பத்துலேயே வெட்டி விடாம விஷயம் இவ்வளவு தூரம் வந்துருச்சே... வீட்டிலேயும் இனி நம்மள அனுப்பாம விடமாட்டாங்க போலிருக்கே... எனக்கு ஒரு யோசனை தோணுது... ஒரு முறை ஜமாத்திற்கு போய் தான் பாப்போம்; அங்கே நாம செய்கிற கலாட்டாவில அந்த அமீர் சாஹெப், இனி யாரையும் ஜமாத்துக்கு அழைக்கவே கூடாது...' என்று ஒருவன் யோசனை சொன்னதும், அதை மற்ற மூவரும் ஏற்றுக் கொண்டனர்
.
இறைவன் எல்லா சூழ்ச்சியையும் முறியடிக்கக்கூடியவன் என்று, பாவம் அவர்களுக்கு தெரியவில்லை.
அந்த நால்வரும், 40 நாட்கள் சில்லாவுக்கு செல்வதைப்பற்றி, மசூதியில் பரபரப்பாக பேசினர்.
'அமீர் சாஹெப், இது தேவைதானா... ரிஸ்க் எடுக்காதீங்க...'என்றனர்.
thodarum............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'அப்படிச் சொல்லாதீங்க; நாம ஒருவர் செய்யும் பாவச் செயல்களைத் தான் வெறுக்கணுமே தவிர, அவங்களையே வெறுக்கக் கூடாது...' என்று கூறி, அவர்களை சமாதானப்படுத்தினார்.
ஜமாத்தின் தலைவராக அமீர் சாஹெப் இருந்தார். முதல் நாள், அமீர் சாஹெப் மற்றும் ஒரு இளைஞனும் சேர்ந்து சமையல் செய்தனர்.
'என்ன சாப்பாடு இது... உப்பும் இல்ல; காரமும் இல்ல...' என்று நால்வரும் கோபப்பட்டனர்.
அன்றிரவு, மது அருந்தாததாலும், ஊரெல்லாம் சுற்றியதாலும் கால் வலிக்குது என்று கூறி தூங்க முடியாமல் அவஸ்தைப் பட்டனர். அவர்கள் அருகே அமர்ந்து அவர்களுடைய கால்களை பிடித்து விட்டார் அமீர் சாஹெப். அது சரியில்லை என்று தெரிந்தும், அதை ரசித்தனர். அவர் மென்மையாக பிடித்து விட்டதில் சிறிது நேரத்தில், தூங்கி விட்டனர்.
அதிகாலை, 3:00 மணிக்கே, தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்த அமீர் சாஹெப், மற்றவர்களின் தூக்கத்தை கெடுக்காமல், ஒரு ஓரமாக நின்று தொழுதார். மற்றவர்களும், ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து தொழ ஆரம்பித்தனர். ஆனால், அந்த நால்வர் மட்டும் எழவில்லை.
காலை, 5:00 மணிக்கு, பஜர் தொழுகைக்கு, அவர்களை எழுப்பினார் அமீர் சாஹெப். அதுவரை, அவ்வளவு சீக்கிரமாய் எழுந்து பழகாத அவர்களுக்கு அது, மிகவும் சிரமமாக இருந்தது. தொழுது முடிந்ததும், ஒரு ஓரமாய் படுத்து, மறுபடியும் தூங்கி விட்டனர். கொஞ்ச நேரத்தில் டீ, பிஸ்கட் வர அவர்களை எழுப்பி தந்த அமீர், காலை உணவாக உப்புமா தயாரித்தார்.
வேறு வழியில்லாமல் அதைப் சாப்பிட்ட நால்வர் கூட்டணி, 'பரவாயில்லை, இது கூட நல்லாத்தான் இருக்கு; அமீர் சாஹெப், இன்னைக்கு நாங்க நால்வரும் சேர்ந்து சமைக்கிறோம்; ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க...' என்றனர்.
சரி என்று அவர் ஒப்புதல் தரவே, சமைப்பதற்காக காய்கறி, அரிசி, மளிகை பொருட்கள் வாங்க, பஜாருக்கு சென்றனர். பஜாரில் பொருட்களை வாங்கும் போதுதான், விலைவாசி பற்றியே, அவர்களுக்கு தெரிந்தது. நாம் கொடுக்கும் கொஞ்ச பணத்தில், பெண்கள் எப்படிக் குடும்பம் நடத்துகின்றனர் என்று நினைத்து, முதன் முதலாக கவலைப்பட்டனர்.
சமையல் செய்யும் போது, ஸ்டவ்வை பற்ற வைக்கவும், வெங்காயம் நறுக்கவும், அவர்கள் பட்ட கஷ்டங்கள், மறுபடியும் வீட்டு நினைப்பை கொடுத்தது.
ஒரு வழியாக சமையல் வேலைகளை முடித்தனர். ஜுஹர் தொழுகைக்கு பின், பகல் உணவுக்காக மற்றவர்கள் உட்கார்ந்தனர். அவர்களுக்கு, அந்த நால்வரும் உணவு பரிமாறினர். எல்லாரும் அமைதியாக சாப்பிட்டனர்.
'அற்புதம்; உண்மையிலேயே வீட்டு சாப்பாடு நினைவுக்கு வருது...' என்றார் அமீர் சாஹெப். அவர்கள் சாப்பிட்டு முடித்த பின், அந்த நால்வரும் சாப்பிட உட்கார்ந்தனர். அமீர் சாஹெப் அவர்களுக்கு பரிமாறினார். ஒரு பிடி சோற்றை எடுத்து வாயில் வைத்ததுமே அவர்கள் முகம் மாறிவிட்டது. 'இவ்வளவு மோசமாக உள்ளதே... இதையா மற்றவர்கள் ஒரு குறை கூட சொல்லாமல் சாப்பிட்டனர்... இந்த உணவையா அமீர் சாஹெப் பாராட்டினார்...' என, நினைத்து வெட்கப்பட்டனர்.
'அமீர் சாஹெப் என்னை எட்டி உதையுங்கள்...' என்றான் அவர்களில் ஒருவன்.
'ஏன்?' என்று கேட்டார்.
'சுவையாக சமைக்காத என் மனைவியை, நான் அப்படித்தான் உதைப்பேன்...' என்றான். 'அப்படி செய்வது தவறு. சமையல் நல்லா இருந்தா பாராட்டுங்க; இல்லேன்னா திட்டாதீங்க; பொறுமையா சொல்லுங்க. எந்த நிலையிலும் இறைவனுக்கு நன்றி சொல்ல தவறாதீங்க...' என்றார். அவர்கள் மவுனமாக தலை குனிந்தபடி சாப்பிட்டனர்.
ஒரு வாரம் இப்படியே கழிந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும், நாளடைவில் மசூதியின் சூழல், அந்த நால்வருக்கும் பழகிப் போனது. ஐந்து வேளையும் விடாமல் தொழுதனர். அமீர் சாஹெப் தூங்கும் போது அவருக்கு கால் பிடித்து விடுவர். அவருக்கு தலைவலி என்றால், தைலம் தடவி விட்டனர். அவர் தூங்கும் வரை, பக்கத்திலே உட்காந்திருந்தனர்.
முதன் முறையாக அவர்களுக்கு வீட்டு ஞாபகம் வந்தது. பக்கத்தில் இருந்த மளிகை கடையின் தொலைபேசியிலிருந்து தங்கள் வீட்டிற்கு பேசினர். அம்மா மற்றும் மனைவிக்கு சலாம் கூறி, நலம் விசாரித்தனர். பிள்ளைகளைப் பற்றி கேட்டனர். தங்கள் கணவர்தானா இப்படி பேசுவது என்று மனைவியர்க்கு வியப்பு.
அந்த நால்வரும் பஜாருக்கு சென்ற போது, யாரோ அமீர் சாஹெப் பற்றி தவறாக பேசி விட்டார். உடனே, கோபம் வந்து, அந்த ஆளை அடிக்க பாய்ந்து விட்டனர்.
'பொறுமையாயிருங்க, அவர் தெரியாமல் பேசி விட்டார். நீங்க இப்படி கலாட்டா செஞ்சா ஜமாத் பெயர்தான் கெடும்...' என்று அவர்களை சமாதானப்படுத்தினார் அமீர் சாஹெப். அவர்கள் மவுனமாக, அவரை பின் தொடர்ந்து, மசூதிக்கு சென்றனர்.
ஒரே மாதத்தில் நேரத்திற்கு தொழவும், குர் ஆன் ஓதவும் கற்றுக் கொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மாறி போயினர். அவர்களுடைய பேச்சு, நடை, உடை, பாவனை மாறி, கனிவு, கருணை, பொறுமையுடன் காணப்பட்டனர். இப்ப யார் அவர்களை பார்த்தாலும், அந்த பழைய மனிதர்களா இவர்கள் என்று வியந்து போயினர்.
நாற்பது நாட்கள் முடிந்து, வீட்டிற்கு செல்லும் சமயம் வந்தது. பழங்கள், இனிப்பு, அத்தர் என்று, அவர்களுக்கு வாங்கி கொடுத்த அமீர் சாஹெப், 'உங்க வீட்டில் பிள்ளைங்க ஆசையுடன் எதிர்பார்ப்பர்; இதை கொண்டு போய் கொடுங்க...' என்று கூறி, அவர்களை அனுப்பி வைத்தார்.
புதிய மனிதர்களாய் மாறி வந்தவர்களுக்கு வீட்டிலும், அந்த பகுதியிலும் நல்ல மரியாதை கிடைத்தது. அதன்பின், அவர்கள் பழைய மாதிரி வீணாக பொழுதை கழிக்கவில்லை. நால்வரும் சேர்ந்து, ஒரு டீ கடை போட்டனர்; அது, நன்றாகவே போய் கொண்டிருக்கிறது. தொழுகை சமயங்களில், மசூதிக்கு செல்கின்றனர்.
இதை அனைத்தையும் சித்தப்பா சொல்லி முடித்த போது, என் கண்களும் கலங்கி விட்டது. இறைவன், தன்னை நாடியவர்களுக்கு, நேர்வழியை காட்டுகிறான் என்பதை உணர்ந்தேன்.
மருத்துவமனையிலிருந்த கூட்டம் மெல்லக் குறைந்தது. ஆனால், அந்த நால்வர் மட்டும் அங்கேயே இருந்தனர்.
'எங்க அமீர் சாஹெப் கண் திறக்கும் வரை நாங்க இங்கிருந்து நகர மாட்டோம்; எங்களைவிட்டுட்டு போயிடாதீங்க அமீர் சாஹெப். நாங்கள் அனாதைகளாக ஆகிடுவோம்...' என்று அவர்கள் கதறினர்.
அவர்களுடைய நம்பிக்கை நிறைவேறட்டும் என்று இறைவனை பிரார்த்தித்தப்படி மருத்துவமனையை விட்டு, சித்தப்பாவுடன் வெளியேறினேன்.
அப்சல்
ஜமாத்தின் தலைவராக அமீர் சாஹெப் இருந்தார். முதல் நாள், அமீர் சாஹெப் மற்றும் ஒரு இளைஞனும் சேர்ந்து சமையல் செய்தனர்.
'என்ன சாப்பாடு இது... உப்பும் இல்ல; காரமும் இல்ல...' என்று நால்வரும் கோபப்பட்டனர்.
அன்றிரவு, மது அருந்தாததாலும், ஊரெல்லாம் சுற்றியதாலும் கால் வலிக்குது என்று கூறி தூங்க முடியாமல் அவஸ்தைப் பட்டனர். அவர்கள் அருகே அமர்ந்து அவர்களுடைய கால்களை பிடித்து விட்டார் அமீர் சாஹெப். அது சரியில்லை என்று தெரிந்தும், அதை ரசித்தனர். அவர் மென்மையாக பிடித்து விட்டதில் சிறிது நேரத்தில், தூங்கி விட்டனர்.
அதிகாலை, 3:00 மணிக்கே, தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்த அமீர் சாஹெப், மற்றவர்களின் தூக்கத்தை கெடுக்காமல், ஒரு ஓரமாக நின்று தொழுதார். மற்றவர்களும், ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து தொழ ஆரம்பித்தனர். ஆனால், அந்த நால்வர் மட்டும் எழவில்லை.
காலை, 5:00 மணிக்கு, பஜர் தொழுகைக்கு, அவர்களை எழுப்பினார் அமீர் சாஹெப். அதுவரை, அவ்வளவு சீக்கிரமாய் எழுந்து பழகாத அவர்களுக்கு அது, மிகவும் சிரமமாக இருந்தது. தொழுது முடிந்ததும், ஒரு ஓரமாய் படுத்து, மறுபடியும் தூங்கி விட்டனர். கொஞ்ச நேரத்தில் டீ, பிஸ்கட் வர அவர்களை எழுப்பி தந்த அமீர், காலை உணவாக உப்புமா தயாரித்தார்.
வேறு வழியில்லாமல் அதைப் சாப்பிட்ட நால்வர் கூட்டணி, 'பரவாயில்லை, இது கூட நல்லாத்தான் இருக்கு; அமீர் சாஹெப், இன்னைக்கு நாங்க நால்வரும் சேர்ந்து சமைக்கிறோம்; ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க...' என்றனர்.
சரி என்று அவர் ஒப்புதல் தரவே, சமைப்பதற்காக காய்கறி, அரிசி, மளிகை பொருட்கள் வாங்க, பஜாருக்கு சென்றனர். பஜாரில் பொருட்களை வாங்கும் போதுதான், விலைவாசி பற்றியே, அவர்களுக்கு தெரிந்தது. நாம் கொடுக்கும் கொஞ்ச பணத்தில், பெண்கள் எப்படிக் குடும்பம் நடத்துகின்றனர் என்று நினைத்து, முதன் முதலாக கவலைப்பட்டனர்.
சமையல் செய்யும் போது, ஸ்டவ்வை பற்ற வைக்கவும், வெங்காயம் நறுக்கவும், அவர்கள் பட்ட கஷ்டங்கள், மறுபடியும் வீட்டு நினைப்பை கொடுத்தது.
ஒரு வழியாக சமையல் வேலைகளை முடித்தனர். ஜுஹர் தொழுகைக்கு பின், பகல் உணவுக்காக மற்றவர்கள் உட்கார்ந்தனர். அவர்களுக்கு, அந்த நால்வரும் உணவு பரிமாறினர். எல்லாரும் அமைதியாக சாப்பிட்டனர்.
'அற்புதம்; உண்மையிலேயே வீட்டு சாப்பாடு நினைவுக்கு வருது...' என்றார் அமீர் சாஹெப். அவர்கள் சாப்பிட்டு முடித்த பின், அந்த நால்வரும் சாப்பிட உட்கார்ந்தனர். அமீர் சாஹெப் அவர்களுக்கு பரிமாறினார். ஒரு பிடி சோற்றை எடுத்து வாயில் வைத்ததுமே அவர்கள் முகம் மாறிவிட்டது. 'இவ்வளவு மோசமாக உள்ளதே... இதையா மற்றவர்கள் ஒரு குறை கூட சொல்லாமல் சாப்பிட்டனர்... இந்த உணவையா அமீர் சாஹெப் பாராட்டினார்...' என, நினைத்து வெட்கப்பட்டனர்.
'அமீர் சாஹெப் என்னை எட்டி உதையுங்கள்...' என்றான் அவர்களில் ஒருவன்.
'ஏன்?' என்று கேட்டார்.
'சுவையாக சமைக்காத என் மனைவியை, நான் அப்படித்தான் உதைப்பேன்...' என்றான். 'அப்படி செய்வது தவறு. சமையல் நல்லா இருந்தா பாராட்டுங்க; இல்லேன்னா திட்டாதீங்க; பொறுமையா சொல்லுங்க. எந்த நிலையிலும் இறைவனுக்கு நன்றி சொல்ல தவறாதீங்க...' என்றார். அவர்கள் மவுனமாக தலை குனிந்தபடி சாப்பிட்டனர்.
ஒரு வாரம் இப்படியே கழிந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும், நாளடைவில் மசூதியின் சூழல், அந்த நால்வருக்கும் பழகிப் போனது. ஐந்து வேளையும் விடாமல் தொழுதனர். அமீர் சாஹெப் தூங்கும் போது அவருக்கு கால் பிடித்து விடுவர். அவருக்கு தலைவலி என்றால், தைலம் தடவி விட்டனர். அவர் தூங்கும் வரை, பக்கத்திலே உட்காந்திருந்தனர்.
முதன் முறையாக அவர்களுக்கு வீட்டு ஞாபகம் வந்தது. பக்கத்தில் இருந்த மளிகை கடையின் தொலைபேசியிலிருந்து தங்கள் வீட்டிற்கு பேசினர். அம்மா மற்றும் மனைவிக்கு சலாம் கூறி, நலம் விசாரித்தனர். பிள்ளைகளைப் பற்றி கேட்டனர். தங்கள் கணவர்தானா இப்படி பேசுவது என்று மனைவியர்க்கு வியப்பு.
அந்த நால்வரும் பஜாருக்கு சென்ற போது, யாரோ அமீர் சாஹெப் பற்றி தவறாக பேசி விட்டார். உடனே, கோபம் வந்து, அந்த ஆளை அடிக்க பாய்ந்து விட்டனர்.
'பொறுமையாயிருங்க, அவர் தெரியாமல் பேசி விட்டார். நீங்க இப்படி கலாட்டா செஞ்சா ஜமாத் பெயர்தான் கெடும்...' என்று அவர்களை சமாதானப்படுத்தினார் அமீர் சாஹெப். அவர்கள் மவுனமாக, அவரை பின் தொடர்ந்து, மசூதிக்கு சென்றனர்.
ஒரே மாதத்தில் நேரத்திற்கு தொழவும், குர் ஆன் ஓதவும் கற்றுக் கொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மாறி போயினர். அவர்களுடைய பேச்சு, நடை, உடை, பாவனை மாறி, கனிவு, கருணை, பொறுமையுடன் காணப்பட்டனர். இப்ப யார் அவர்களை பார்த்தாலும், அந்த பழைய மனிதர்களா இவர்கள் என்று வியந்து போயினர்.
நாற்பது நாட்கள் முடிந்து, வீட்டிற்கு செல்லும் சமயம் வந்தது. பழங்கள், இனிப்பு, அத்தர் என்று, அவர்களுக்கு வாங்கி கொடுத்த அமீர் சாஹெப், 'உங்க வீட்டில் பிள்ளைங்க ஆசையுடன் எதிர்பார்ப்பர்; இதை கொண்டு போய் கொடுங்க...' என்று கூறி, அவர்களை அனுப்பி வைத்தார்.
புதிய மனிதர்களாய் மாறி வந்தவர்களுக்கு வீட்டிலும், அந்த பகுதியிலும் நல்ல மரியாதை கிடைத்தது. அதன்பின், அவர்கள் பழைய மாதிரி வீணாக பொழுதை கழிக்கவில்லை. நால்வரும் சேர்ந்து, ஒரு டீ கடை போட்டனர்; அது, நன்றாகவே போய் கொண்டிருக்கிறது. தொழுகை சமயங்களில், மசூதிக்கு செல்கின்றனர்.
இதை அனைத்தையும் சித்தப்பா சொல்லி முடித்த போது, என் கண்களும் கலங்கி விட்டது. இறைவன், தன்னை நாடியவர்களுக்கு, நேர்வழியை காட்டுகிறான் என்பதை உணர்ந்தேன்.
மருத்துவமனையிலிருந்த கூட்டம் மெல்லக் குறைந்தது. ஆனால், அந்த நால்வர் மட்டும் அங்கேயே இருந்தனர்.
'எங்க அமீர் சாஹெப் கண் திறக்கும் வரை நாங்க இங்கிருந்து நகர மாட்டோம்; எங்களைவிட்டுட்டு போயிடாதீங்க அமீர் சாஹெப். நாங்கள் அனாதைகளாக ஆகிடுவோம்...' என்று அவர்கள் கதறினர்.
அவர்களுடைய நம்பிக்கை நிறைவேறட்டும் என்று இறைவனை பிரார்த்தித்தப்படி மருத்துவமனையை விட்டு, சித்தப்பாவுடன் வெளியேறினேன்.
அப்சல்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமையான கதை..........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![40 நாட்கள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|