புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_c10 
49 Posts - 52%
heezulia
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_c10 
91 Posts - 56%
heezulia
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 27, 2015 11:10 pm

First topic message reminder :

தாலியும் தமிழரும்! - "செந்தமிழ் வேள்விச் சதுரர்" திரு. மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதியது தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - Page 2 DNkpdAyQSqi2ovDHtDTI+images

என் கைபேசி பாடி அழைத்தது; அன்று 12-3-2015. எடுத்துப் பேசியதில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியிலிருந்து பழகிய குரல் என்னை அழைத்தது. அன்று மாலை ‘மக்கள் மேடை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூற வேண்டும் என்றார் அவர். எது பற்றி என்று கேட்ட போது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி வளாகத்தில் அன்று காலை 3.00 மணிக்கு யாரோ சில விஷமிகள் குண்டு எறிந்து அது வெடித்தது என்றும், நல்ல வேளையாக எந்த நபரும் அதனால் பாதிக்கப்படவில்லை என்றும், அந்த வளாகத்தின் சில பகுதிகள் சேதாரமடைந்தன என்றும் சொன்னார்.

  எதனால் இந்தக் குண்டு வெடிப்பு என்று கேட்ட போது இரு நாட்களுக்கு முன் ‘உரக்கப் பேசுவோம்’ என்ற நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தது என்றும், அந் நிகழ்ச்சியின் தலைப்பு ‘தாலி மகளிர்க்கு அவசியமா’ என்றும், மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும், அவசியம் என்று 32 மகளிரும், தேவையே இல்லை என்று 32 மகளிரும் கலந்து கொண்டு விவாதித்தனர் என்றும் சொன்னார். உண்மையிலேயே ‘சிறப்பு’ நிகழ்ச்சி தான் இது என்று சிரித்துக் கொண்டே நான் சொல்லி, குண்டெறிதல் வரை கூட்டிச் சென்றது சிறப்பு தானே என்றேன்.

  உண்மையிலேயே நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவே இல்லை என்றார். பிறகு ஏன் இந்தக் குண்டெறிதல் என்று கேட்டேன். நிகழ்ச்சி ஒளி பரப்பப்படப் போகிறது என்று அதிலிருந்து சில காட்சிகளை மட்டும் முன்னாளிலிருந்து முன்னோட்டம் தொலைக்காட்சியில் தொடர்ந்து காட்டப்பட்டு வந்தது என்றும், அதில் தாலி தேவை இல்லை என்ற கருத்துடைய ஒரு பெண் நிகழ்ச்சி அரங்கிலேயே தாலியைக் கழற்றி எறிகிற காட்சி காட்டப்பட்டது என்றும் இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சிலர் நிகழ்ச்சி ஒளி பரப்பப்படும் நாள் காலை கூட்டமாக வந்து தொலைக்காட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அங்கு பல லட்சக் கணக்கான மதிப்புடைய ஒளிப்பதிவுக் கருவிகளைப் போட்டு உடைத்து எறிந்துவிட்டு, அலுவலகத்தில் பணி புரியும் பெண் நிருபர்கள், பணியாளர்களை வாய்க்கு வந்தபடி வசைமாரி பெய்து கலகத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஏதோ ஒரு இந்து அமைப்பினர் என்று கூறிக் கொண்டனர். அவர்களின் உணர்விற்கு மதிப்பளித்து அந்நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டது தொலைக்காட்சி நிர்வாகம். எனவே அந்நிகழ்ச்சி ஒளி பரப்பப்படவே இல்லை.

   ‘இருந்தும் ஏன் குண்டெறிதல்?’ என்று கேட்டேன். குண்டெறிதல் அன்று நடக்கவில்லை என்று இரு நாட்கள் கழித்து 12-3-2015 ஆகிய இன்று காலையில் தான் நடந்தது. இது பற்றி தான் இன்று ‘மக்கள் மேடை’ நிகழ்ச்சியில் அலச இருக்கிறோம், தாங்கள் வர இயலுமா என்று வேண்டுகோள் விடுத்தனர். சரி, என்று ஒப்புக்கொண்டு என் இல்லத்தில் தொலைக்காட்சியைத் திருப்பினால் இது பற்றிய செய்தியே எல்லா சேனல்களிலும் ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தன. ஏன், நாடாளுமன்றத்திலேயே கண்டனக் குரல்கள் ஒலித்தன. ‘ஜெயம்’ என்ற பெயருடைய ஒரு இளைஞர் காவி உடையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் இது தொடர்பாக சரணடைந்து, தான் ‘இந்து இளைஞர் சேனை’யின் தலைவர் என்றும், தான் தான் குண்டெறியச் செய்தவன் என்றும் ‘மிக்க மகிழ்ச்சி’யுடன் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.

  அன்று ‘மக்கள் மேடை’ நிகழ்ச்சிக்கு ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்குச் சென்றிருந்தேன். எனக்கு இடம், வலமாக திரு.சித்தண்ணன் என்கிற ஓய்வு பெற்ற காவல் அதிகாரியும், மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்களில் ஒருவரான திரு.மகேந்திரன் அவர்களும் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சியில் கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து சில அன்பர்களும் தொலையமர் காட்சியில் கலந்து கருத்துக்களைப் பரிமாறினர். நெறியாளராக திரு. G.S.வெங்கடபிரகாஷ் கேள்விகளை முன்வைத்துக் கொண்டிருந்தார்.

    நிகழ்ச்சியில் என்னிடம் வைத்த கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு வந்தேன். ஆனால் அதன்பின் எந்தத் தொலைக்காட்சியைத் திருப்பினாலும் இது பற்றியே காரசாரமான விவாதங்களே நடந்து கொண்டிருந்தன. செய்தித்தாள்களிலும் இதே பரபரப்பு – விளைவு, தாறுமாறான கருத்துக்கள் தாலியைப் பற்றி வெளிவந்தன. தமிழ்க் கலாச்சாரத்தின் அடிநாதமான இது பற்றி இனியும் மௌனம் காத்தல் அறநெறியாகாது என்று உணர்ந்ததாலும், இது பற்றி தாங்கள் தெளிவாக்குங்கள் என்று ‘தெய்வ முரசு’ நேயர்கள் வற்புறுத்தியதாலும் இதை எழுத நேர்ந்தது.

 மேலே கூறிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குண்டெறிந்த வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்துவிட்டு, எந்த மதமும் வன்முறையைப் போதிக்கவில்லை என்று அவை பற்றி மட்டும் கருத்துக்களைத் தெரிவித்தேனே ஒழிய சர்ச்சைக்குரிய ‘தாலி’ விவகாரம் பற்றி அதிகம் பேசவில்லை. ஆனால் தொடர்ந்து ‘தாலி’ பற்றி உண்மைக்கு மாறான கருத்துக்களே இரு சார்பாளர்களாலும் எடுத்து வைக்கப்பட்டு வருவதால் ‘தெய்வ முரசு’ அன்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க வேண்டியவனானேன்.

  சொல்லப்பட்ட நிகழ்ச்சியிலேயே திரு.மகேந்திரன் அவர்கள் சங்க இலக்கியங்களிலேயே தாலி பற்றி பேச்சே இல்லை என்றும், சங்க இலக்கியங்களில் துறை போன ஐயா அவர்கள் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார்.

  அதே போன்று திரு.சித்தண்ணன் அவர்கள் இந்து திருமணச் சட்டத்தில் தாலியே கிடையாது; சப்தபதி என்கிற சடங்கு தான் முக்கியமானது என்று கூறப்பட்டிருக்கிறது என்றார்.

  இவ்விருவர்க்கும் மேற்படி நிகழ்ச்சியிலேயே விளக்கமளித்தேன். அது பற்றி விரிவாக வரும் பகுதியில் விவரிக்கப்படும்.

  16-3-2015 – ஆம் நாளிட்ட ‘தி இந்து’ என்கிற தமிழ் நாளேட்டில் தாலி பற்றிய சர்ச்சை இப்போது புதிதாக எழவில்லை என்றும், 1954-லிலேயே சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களும், ஆய்வறிஞர் மா.ராசமாணிக்கனார் அவர்களும் கருத்துப்போர் நடத்தி இருக்கிறார்கள் என்றும், ம.பொ.சி. சிலப்பதிகாரத்திலேயே தாலி பற்றிக் கூறப்பட்டுள்ளது எனவும் மா.ராசமாணிக்கனார் அதை மறுத்து எழுதி வந்ததாகவும் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

    இந்த விவாதங்களின் மொத்த சாரம் தான்: தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? (தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 02, 2015 4:15 pm

தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா?  - தொடர்ச்சி

4) இதன்படி சுயமரியாதை அல்லது சீர்த்திருத்த திருமணத்தில் புரோகிதர் மந்திரம் ஓதுதல், மணமக்கள் ஹோமத்தை ஏழு அடி எடுத்து வைத்து வலம் வரல் ஆகியவை நடைபெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மற்றவர்களுக்குப் புரியும் மொழியில் கணவனாக அல்லது மனைவியாக மற்றவரை ஏற்றுக் கொள்வதாகச் சொல்ல வேண்டும். மணமக்கள் மாலை அல்லது மோதிரம் மாற்றிக் கொள்வதோ அல்லது தாலி கட்டும் சடங்கைச் செய்து கொள்வதோ மேற்கொள்ளலாம்.

   இதில் முக்கியமான பகுதி என்னவென்றால் ‘சப்தபதி’ என்ற சடங்கு தேவை இல்லை என்பதும் தாலிகட்டுவதை ஒப்புக்கொள்வதும் ஆகும்.

   இதில் ஆச்சரியம் என்னவென்றால் பேரறிஞர் அண்ணாவோ, அல்லது அவர் இச்சட்டத் திருத்தத்திற்கு முன் ஆலோசனை பெற அணுகிய அவரது அரசியல் குருவான தந்தை பெரியாரோ தாலி கட்டுவது பற்றி ஆதரவான கருத்துடையவர்கள் இல்லை என்றாலும் தொன்று தொட்டு வரும் தமிழர் பழக்க வழக்கமான தாலி கட்டுதலை நீக்க இயலாமல் அதை ஏற்று சட்டத் திருத்தத்தில் சேர்த்தது தான்.

   இந்தப் பின்னணியில் நாம் இரண்டு நிகழ்வுகளை ஆச்சரியமாகப் பார்க்க முடிகிறது:

1)   ஆரியப் பிராம்மணர்களின் ஆதிக்கத்தில் இயங்கி வரும், இந்து அமைப்புகள் என்று கூறிக் கொள்பவைகளைச் சேர்ந்த பிராம்மணர்கள் தங்கள் ரிக் வேதத்தின் திருமண முறையில் இல்லாத தாலிக்கு வக்காலத்து வாங்குவதும், அவ்வமைப்புகளின் பெயரில் சிலர் தாலிக்கு ஆதரவு செய்வதாக எண்ணி குண்டெறிவதும் ஆச்சரியம்!

2)   சென்னை சட்டத் திருத்தத்தில் தாலியைச் சேர்த்துவிட்ட திராவிட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அந்த திராவிட எண்ணப் போக்கில் உள்ளவர்களும் தாலி தேவை இல்லை என மோதல் கருத்துக்களை எழுப்புவதும் ஆச்சரியம்!

  ஆக, இரு சாராரும் தங்கள் தங்கள் மூலக் கொள்கையில் இருந்து இந்த தாலி விஷயத்தில் விலகி எதிர் எதிராக நிற்பது காலத்தின் கோளாறு என்றே சொல்ல வேண்டும்.

   வேத காலத்தில் இருந்து இந்து திருமணச் சட்டம் உருவாகும் வரை தாலி கட்டுவது தம் வழக்கம் இல்லை என்றவர்கள் இன்று அதற்காகக் குண்டெறியும் வரை சென்றிருக்கிறார்கள்; உண்மையில் தாலி அவர்களுக்குரிய கலாச்சாரம் இல்லை. அடுத்து தொன்று தொட்டு தாலி கட்டும் வழக்கத்தைத் தமது கலாச்சாரமாகக் கொண்ட தமிழ்த் திராவிட அமைப்புகளையும், அதன் எண்ணப்போக்குகளையும் உடையவர்கள் தாலி தேவை இல்லை என்று மூர்க்கத்தனமாகப் பேசும் நிலைக்குச் சென்றிருக்கிறார்கள்; உண்மையில் அது அவர்களுக்குரிய கலாச்சாரம் இல்லை.

   தாலி பற்றிய கருத்து நிலையில் இரு சாராரும் எது தமது கலாச்சாரம் என்பதே அறியாமல் பேசுகிறார்கள் என்பது வியப்புக்குரிய விஷயம். ஆய்வறிஞர் மா.ராசமாணிக்கனார் போன்றவர்களுக்கும் இந்தத் தடுமாற்றம் இருக்கும் போது பாமர சமூகத்தில் தடுமாற்றங்கள் இருப்பது இயற்கை தான். ஆனால் 1954-ல் மா.ராசமாணிக்கனார் தாலியை எதிர்த்த போதும் அது வெறும் கருத்து மோதலாகத் தான் இருந்தது. அதற்கு மாறாக இப்போது இது குண்டெறியும் கட்டத்திற்கு வந்திருப்பது தான் கவலைக்குரியது.

   இந்த மோசமான நிலைக்கு குண்டெறிந்தவர்களை மட்டுமே முழுப் பொறுப்பிற்கு ஆளாக்க முடியாது. தொலைக்காட்சி விவாதத் தளத்தில் அற்ப விளம்பரத்திற்காக ஒரு பெண் தாலியைக் கழற்றி எறிந்தது தான் நெருப்புப் பொறியைத் தூக்கிப் போட்டது என்பதில் எள்ளவும் ஐயம் இல்லை.

   ஒரு பெண் தாலி தேவை இல்லை என்று வாதிடலாம். ஆனால் ஒரு பொது இடத்தில் அதைக் கழற்றி எறிந்து அந்தக் களத்தைக் கொச்சைப்படுத்துவது மிகவும் கண்டிக்கத் தக்கது. அப்படியே ஒரு பெண் அத்துமீறி நடந்தாலும் அதை அந்தத் தொலைக்காட்சி நிர்வாகம் வெட்டி எறியாமல் அதை முன்னோட்டமாகக் காட்டியது துரதிருஷ்டவசமானது. விவாதம் நடத்துவதற்கு எவருக்கும் உரிமை உண்டு; விவகாரத்தைச் செய்ய யாருக்கும் உரிமை இல்லை.

  பல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் விவாதங்களில் சிலர் அத்துமீறி அநாகரிகமாக நடந்து கொள்வதுண்டு. அதை சில நெறியாளர்கள் சுட்டிக் காட்டி நெறிப்படுத்துவதுண்டு; சிலர் தம் ஊடக நிர்வாகத்தின் எண்ணப் போக்கை நாடிபிடித்து வைத்துக் கொண்டு அநாகரிக அத்துமீறல்களை அனுமதித்து விவாதத்தை ஆரோக்யமான நிலையில் இருந்து சரிய வைத்து அத்துமீறல் ரசாபாசங்களுக்கு இடமளிப்பதும் உண்டு.

   இது போல ஒன்று தான் அந்தப் பெண் படப்பிடிப்பு தளத்தில் தாலியைக் கழற்றி எறிந்தது. தாலி தேவை இல்லை என்பது அவர் கருத்தானால் படப்பிடிப்பிற்கு வருமுன்னே தாலியைக் கழற்றிவிட்டு வந்திருக்க வேண்டும். மாறாக படப்பிடிப்பில் வந்து கழற்றுவது தன்னை பொது மக்கள் குறிப்பாக உலகெங்கிலும் உள்ள லட்சோப லட்சம் தொலைக்காட்சி நேயர்கள் முன் ஒரு வீராங்கனையாகக் காட்டிக் கொள்ளும் அற்ப மனோபாவம் தான் அதற்கு அடிப்படை. பொதுமக்கள் முன் இந்த ‘வீரசாகசம்’ செய்தால் பொதுமக்களிடமிருந்து எதிர்வினையைச் சந்திக்கத் தான் நேரும். அதில் அந்த அம்மையாரின் அற்ப குணம் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஆபத்தாய் முடிந்துவிட்டது.

   அந்தப் பெண்ணிற்கு இதனால் என்ன பாதிப்பு நேர்ந்தது? யாருக்கும் தெரியாது. ஒரு வேளை அவரது கணவர், உறவினர், சமூகத்தினர் ஆகியோரிடம் பாதிப்பு நேர்ந்திருக்கலாம். ஆனால் அது எதுவானாலும் அவரோடு போயிற்று; ஆனால் பாதிக்கப்பட்டது பொதுமக்களும் அந்தத் தொலைக்காட்சியும் தான்.

   பொதுவாக தாலி தேவை இல்லை என்று வாதிடும் எண்ணப் போக்குடையவர்கள் கூட தத்தம் மனைவியர் தாலியைக் கழற்றி எறிவதை ஏற்பார்களா என்பது சந்தேகமே! உதாரணத்திற்கு திருமதி மா.ராசமாணிக்கனார் தாலியைக் கழற்றி எறிந்தார்களா என்பது தெரியாது. காரணம், மா.ராசமாணிக்கனார் தாலிக்கு எதிராகக் கருத்துக்களை வைத்த போது தன் இல்லத்தில் நிலவரம் என்ன என்று ஒரு முறையும் மூச்சு விட்டதாகத் தெரியவில்லை. இது தான் பலரின் நிலையும்.

   ஆனால் மா.ராசமாணிக்கனார் தாலி தேவை இல்லை என்று விவாதங்களை எடுத்து வைத்த போது இத்தனை பெரிய தமிழறிஞரே சொல்கிறாரே என்று திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் தாலிக்கு எதிரான போக்குகளை மேற்கொண்டனர். தாலி ஓர் அடிமைச்சின்னம் என்றார்கள்; தாலியை ஏன் ஆணுக்கு ஒரு பெண் கட்டக் கூடாது என்றார்கள். எல்லாம் பேசினாலும் அவரவர் வீட்டுத் திருமணத்தில் ஆண் ஒரு பெண்ணிற்குத் தாலி கட்டுவது தவறாமல் நடந்தது; நடந்து வருகிறது.

   பொதுவாக தமிழர் திருமணங்களைக் கூட பிராம்மணப் புரோகிதர்களே நடத்தி வந்தமையால், இன்றும் நடத்தி வருவதால் தாலி என்பது பிராம்மணக் கலாச்சாரம் என்றும், அது தமிழர்களுடையது அல்ல என்றும் தவறான மனப்போக்கு கொண்டு அதை எதிர்ப்பதில் பிராம்மணரை எதிர்ப்பது போல மனநிறைவு கொண்டார்கள். இதற்கு மா.ராசமாணிக்கனார் போன்ற அறிஞர்களின் கருத்துக்களும் தூபம் போட்டன.

    இவர்கள் எல்லாம் தாலியை எதிர்ப்பதால், பிராம்மணர்கள் தமதல்லாத தாலி கலாச்சாரத்தை தமதாகவே காட்டிக் கொள்வதில் முனைப்பு காட்டினர்.

   இந்நிலையில் தாலி கலாச்சாரம் யாருடையது? பிராம்மணர்களுடையது அல்ல என்பதை வடவேதங்களும், இந்து திருமணச் சட்டமும் தெளிவாக சான்று தருகின்றன என்பதை ஏற்கெனவே பார்த்துவிட்டோம். அடுத்து எஞ்சி இருப்பது தாலி தமிழரின் கலாச்சாரம் என்பதைப் பற்றி சங்க கால இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்பதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.


(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 07, 2015 1:02 pm

5. தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - தொடர்ச்சி

முதலில் மா.ராசமாணிக்கனார் – மா.பொ.சி. ஆகியோர் கூறிய கருத்துக்களாக ‘தி இந்து’ தமிழ் நாளேட்டில் வந்தவற்றை எடுத்துக் கொள்வோம்.

மா.பொ.சி. அவர்கள் சிலப்பதிகாரத்தில் மூழ்கி முத்தெடுத்தவர். எனவே அவர் சிலம்பிலேயே தாலி வருகிறது என்று வாதிட்டார். சிலப்பதிகார காலம் சங்கம் மருவிய காலம்; அதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. அக்காலத்திலேயே தாலி தமிழரிடையே இருந்து வந்தது என்றார் ம.பொ.சி. அவர் அதற்கு முந்தைய சங்க காலத்திற்குப் போகவில்லை. எனவே சிலப்பதிகார காலத்தில் தமிழரிடையே தாலி இருந்ததா என்பதை ஆராய்வோம்.

இதற்கு ம.பொ.சி. காட்டிய சிலப்பதிகார மேற்கோள்கள்:

1) “மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்”

2) “அரசெழுந்ததோர் படியெழுந்தன அகலுள் மங்கல அணி எழுந்தது”

3) “மறுவின் மங்கல அணியே அன்றியும்

பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்”

மங்கலம் என்ற சொல்லுக்கு அழகு, கலியாணம் (திருமணம்) என்ற இரு பொருள்கள் உண்டு என உ.வே.சா. பதிப்பில் அரும்பத முதலியவற்றின் அகராதியில் குறிப்பிடுகிறார். அத்துடன் மங்கல அணி என்ற சொற்றொடர்க்கு இயற்கை அழகு, மாங்கலிய சூத்திரம் என்கிற இரு பொருள்களையும் கொடுத்துள்ளார்.

சிலப்பதிகாரத்தில் வருகிற பதிகம் என்கிற பகுதியில் மங்கல வாழ்த்துக் காதை என வருவதில் மங்கலம், திருமணத்தைக் குறிக்கிறது என்று அடியார்க்கு நல்லார் உரை எழுதி உள்ளார்.

மங்கல வாழ்த்துப் பாடலில், அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை மங்கல நல்லமளி ஏற்றினர் என்று வருகிறது.

இதில் முதலில் காட்டப்பட்ட மேற்கோள்; ‘மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்’ என்பது அந்திமாலைச் சிறப்பு செய் காதை என்ற பகுதியில் வருகிறது. அதாவது கோவலன் பிரிவில் கண்ணகி வருந்தி அலங்காரங்கள் எல்லாம் எதற்கு என்று எல்லா அணிகலன்களையும் விலக்கினாலும் மங்கல அணியாகிய தாலியை மட்டும் அகற்றாது இருந்தாள் என்ற செய்தியைச் சொல்லும் இடம் இது.

இதற்குப் பொருள் சொன்ன மா.ராசமாணிக்கனார் மங்கல அணி என்பது இயற்கை அழகைக் குறிக்குமே ஒழிய தாலியைக் குறிக்காது என்று ம.பொ.சி.யை மறுத்தார். அடியார்க்கு நல்லார் மங்கல அணி என்பதற்கு இயற்கை அழகு என்று தான் குறிப்பிட்டுள்ளார் என்றார். ஆனால் அரும்பத உரை என்று சிலப்பதிகாரத்திற்கு வேறொரு உரை உண்டு. அதில் தான் மங்கல அணி என்பதற்கு இயற்கை அழகு என்று பொருள் கூறப்பட்டுள்ளது. அடியார்க்கு நல்லார் உரையில் மங்கல அணிக்கு மங்கல அணி என்றே உரை கூறப்பட்டுள்ளது.

இனி, கண்ணகி கோவலனின் பிரிவில் எல்லா அணிகளையும் கழற்றினாள் இயற்கை அழகைத் தவிர என்று மா.ராசமாணிக்கனார் கூறிய பொருள் பொருந்தாத பொருளாக இருக்கிறது. காரணம் அணிகளை எல்லாம் வேண்டாத போது கழற்றிவிடலாம்; ஆனால் இயற்கை அழகு என்பது கழற்றி வைக்க முடியாது. ஆகவே அது கழற்றி வைக்கக் கூடிய அணி அல்ல; இன்னும் இயற்கை அழகு என்பது அணிகலன்களில் ஒன்றும் கிடையாது. எனவே இங்கே மங்கல அணி என்பது நகைகளும் அல்லாமல் அணி அல்லாத இயற்கை அழகும் அல்லாமல் வேறோர் அணி என்பது தெளிவாகிறது. மங்கல அணி என்பதற்கு ஏற்கெனவே மாங்கலிய நூல் என்று ஒரு பொருள் இருப்பதாலும், அரும்பத உரையிலும் வேறோரிடத்தில் மங்கல அணிக்கு தாலி என்றே பொருள் கொள்ளப்பட்டதாலும் இங்கே கண்ணகி தாலியைத் தவிர பிற எல்லா அணிகலன்களையும் கழற்றினாள் என்பதே பொருந்திய பொருளாக இருக்க முடியும். எனவே மா.ராசமாணிக்கனார் சிலப்பதிகாரத்தில் தாலி இல்லை என்று கூறுவது அழிச்சாட்டிய வாதம் என்பது புலனாகிறது.

இரண்டாவது மேற்கோளில் தாலி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது கூறப்படுகிறது. இது மங்கல வாழ்த்துப் பாடற் பகுதியில் வருவது. ‘மங்கல அணி எழுந்தது’ என்று வரும் வரிக்கு அரும்பத உரைகாரர் கூட மாங்கலிய சூத்திரம் வலம் செய்தது என்று தான் உரை கூறுகிறார். இதையே அடியார்க்கு நல்லாரும் தனது உரையில் வழிமொழிகிறார். காரணம், இயற்கை அழகு என்பதை எடுத்துச் சென்று ஊர்வலம் வர முடியாது.

எனவே மா.ராசமாணிக்கனார் சிலப்பதிகாரத்தில் தாலி கூறப்படவில்லை என்று கூறியது உண்மைக்கு முற்றிலும் மாறானது என்பது தேற்றம்.

உண்மையில் சிலப்பதிகாரக் காலத்தில் திருமணத்தின் முன்னாள் திருத்தாலியை முரசு முழங்க ஊர்வலம் செய்து எடுத்து வந்தனர் என்பதால் அக்காலத்தில் தாலிக்கு எத்துணை மதிப்பு கொடுக்கப்பட்டது என்பதை அறியலாம்.

அடுத்து மூன்றாவது மேற்கோள் மனையறம் படுத்த காதையில் வருவது. இதில் மங்கல அணி என்ற சொல் வருகிறது. ஆனால் இது தாலியைக் குறிப்பதல்ல; இயற்கை அழகு என்ற பொருளில் வருவது. மங்கல அணி என்றால் இயற்கை அழகு என்றும் பொருள் உண்டு என்று முன்னர் கண்டோம். ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்குமானால் அதற்கு இடம் நோக்கித் தான் பொருள் கொள்ள வேண்டும்.

இங்கு கோவலன் கண்ணகியைப் பார்த்து உனது இயற்கை அழகு இருக்க அதன் மேல் அணிகலன்களை உன் தோழியர் உனக்குப் புனைவதால் ஆவது என்ன என்று கேட்கிறான்.

ஆக, இந்த இடத்தில் மங்கல அணி என்பதற்கு இயற்கை அழகு என்ற பொருள் கொள்வதையே பொருந்தி வராத வேறிடங்களில் மா.ராசமாணிக்கனார் நீட்டி சிலப்பதிகாரத்தில் தாலியே வரவில்லை என்று சாதிக்க முற்பட்டது வீண்வாதமே அன்றி வேறல்ல.

இனி, சங்க காலத்தில் தாலியின் நிலைமை என்ன என்பதைச் சங்க இலக்கியங்களைக் கொண்டு ஆராயலாம்.

எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள் எனப்படுவன. அவற்றுள் புறநானூறு என்பது தொகை நூல் எட்டில் ஒன்று. இருப்பனவற்றுளே ஆய பழமையானது. கி.மு.18000-த்திலிருந்து கி.பி.முதல் நூற்றாண்டு வரை பல்வேறு காலத்தில் பாடிய பாடல்களின் தொகுப்பு. தொல்காப்பியம் என்பது தொன்மையான தமிழ் இலக்கணம்; இடைச்சங்க காலத்தது. அகநானூறும் தொகைநூலே; அகத்துறையில் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு; இன்னும் குறுந்தொகை, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவற்றில் எல்லாம் தாலி எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்.

முதலில் மிகப் பழமையான புறநானூற்றைப் பார்ப்போம். புறநானூற்றில் 127-ம் பாட்டில்,

“ஈகை அரிய இழையணி மகளிரொடு

சாயின் றென்ப ஆய் கோயில்”

என வருகிறது. ஈகை அரிய இழையணி என்பதற்கு பழைய உரைகாரர் ‘பிறிதோர் அணிகலமும் இன்றிக் கொடுத்தற்கரிய மாங்கலிய சூத்திரத்தை அணிந்த மகளிருடனே’ என்று உரை கூறியிருக்கிறார்.

இந்தப் பாடலைப் பாடியவர் ஏணிச்சேரி முடமோசியார்; பாடப்பட்ட தலைவன் ஆய் என்ற வள்ளல்.

ஆய் வள்ளலின் வள்ளல் தன்மையைக் கூற வந்த புலவர், அவன் மட்டுமல்ல; அவனுடைய இல்லத்து மகளிரும் அவனுடைய வள்ளல் தன்மைக்கு உறுதுணை செய்தனர் என்று கூறுகிறார். அதாவது ஆய் வள்ளலின் விருப்பத்திற்கேற்ப அம்மகளிர் தாம் அணிந்துள்ள அணிகளுள் பிறர்க்குக் கொடுக்க முடியாத ஓர் இழையாகிய தாலியை மட்டும் அணிந்து கொண்டு பிற நகைகளை எல்லாம் கழற்றி இரவலர்களாக வந்த பாணர்க்குப் பரிசாகக் கொடுத்துவிட்டனர். இவ்வாறு அணிகளைக் கழற்றிக் கொடுத்து விட்ட பின் கோலத்தில் அவர்கள் முன்னைய ஒளி குன்றி இருந்தனர் என்பது பாட்டின் பொருள்.

இங்கே உரையின் படி பார்க்கும் போது ‘ஈகை அரிய இழை’ என்பது கொடுத்தற்கரிய தாலியாகிய இழை எனப் பொருள்படுகிறது. எனவே இழை என்பது இங்கே தாலிக்கயிறு என்று குறிக்கப்படுவது காண்க.

புறநானூற்றின் 224-ம் பாட்டு கரிகாற் பெருவளத்தானைப் பற்றியது. அவன் இறந்த போது அவனது மனைவி என்னும் உரிமை பெற்ற மகளிர் தமது திருமணச் சின்னமான தாலியைக் களைந்தனர் என பாடல் குறிப்பிடுகிறது.

“அறிவுடையாளன் இறந்தோன்

. . . . . . . . . . . . . . . . . . .
மெல்லியல் மகளிரும் இழை களைந்தனரே”

என்பது அப்பாடலில் வரும் வரிகள். இங்கேயும் இழை என்ற சொல் தாலிக் கயிற்றைக் குறிப்பிடுவது காண்க.

அடுத்து அகநானூற்றிலும் இந்த இழை என்ற சொல்லால் தாலி குறிக்கப்படுவது அறிதற்குரியது.

அகநானூற்றுப் பாடல் 86 ஒரு திருமண நிகழ்ச்சியைக் கூறுவது. இன்னொரு பாடலான 136-ஆம் பாடலும் தமிழ்த் திருமண நிகழ்ச்சியை விவரிக்கும் பாடலே.

இதில் முதலில் கூறிய 86-ஆம் பாட்டில் நான்கு மகளிர் மணப்பெண்ணை மங்கல நீராட்டு செய்வது கூறப்படுகிறது. அப்போது நீராட்டுச் செய்யும் அந்த நான்கு மகளிரும் சுமங்கலிகளாக இருக்க வேண்டும் என்பதைத் தமிழர்கள் கடைப்பிடித்த வழக்கம் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“வாலிழை மகளிர் நால்வர் கூடி”

என்பது அப்பாடல் வரி. அதில் வரும் இழை மகளிர் என்பது தாலிக் கயிறணிந்த பெண்கள் நால்வர் என்று பொருள்படுவது காண்க.

அகநானூற்றின் 136-ம் பாட்டும் தாலியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் திருமணத்தையே ‘இழையணிச் சிறப்பு’ என்று குறிப்பிடுகிறது.

“மழைபட்டன்ன மணல்மலி பந்தர்

இழையணி சிறப்பின் பெயர் வியர்ப்பாற்றி”

என்பது குறிப்பிட்ட வரிகள்.

சங்க இலக்கியத்தில் ஒன்றான நெடுநல்வாடையில், நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன் போருக்குச் சென்றிருந்த போது அவனுடைய மனைவியான கோப்பெருந்தேவி அடைந்த துயரை நக்கீரர் படம் பிடித்துக் காட்டுகிறார். மன்னன் கூட இருந்த போது முத்துமாலை அப்பெருந்தேவியின் மார்பில் அணி செய்திருந்தது மாறி இப்போது அவள் மார்பில் தாலி நாண் ஒன்று மட்டும் தாழ்ந்து தொங்குகிறது என்ற பொருள்பட,

“ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்

பின்னமை நெடுவீழ் தாழத் துணை துறந்து”

என்று பாடல் கூறுகிறது. பின் என்பது பிடரி; பிடரியைச் சுற்றி மார்பில் தாலி தொங்குதல் தாலி ‘பின்னமை நெடுவீழ்’ எனப்பட்டது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ‘குத்துதல் அமைந்த நெடிய தாலி நாண்’ என்று உரை எழுதினார்.

இது போல பதினெண் கீழ்க் கணக்கில் ஒன்றான திணைமாலை நூற்றைம்பதில் 66 – ஆம் பாடலில் இப்படி ஒரு வரி வருகிறது:

“பவளக் கொழுந்தின் மேல் பெண் தாலி பாஅய்த்

திகழக் கான்றிட்டன”

இவ்வாறாக சங்க இலக்கியங்களில் தாலி பற்றி பல இடங்களில் பேசப்படுகிறது.

ஆனால் அகநானூற்றில் திருமண நிகழ்ச்சி பற்றி விவரிக்கும் 86 – ஆம் பாட்டிலும், 136 – ஆம் பாட்டிலும் மற்றெல்லாம் கூறப்பட்டாலும் பெண்ணுக்குத் தாலி கட்டப்பட்டது என்ற தகவல் மட்டும் ஏன் இல்லை என்பது மா.ராசமாணிக்கனார் போன்றோர் எழுப்பும் கேள்வி.


(தொடரும்)


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 07, 2015 2:16 pm

சிறந்த பகிர்வு சாமி அண்ணா புன்னகை

“மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்”

கண்ணகி கோவலனின் பிரிவில் எல்லா அணிகளையும் கழற்றினாள் இயற்கை அழகைத் தவிர என்று மா.ராசமாணிக்கனார் கூறிய பொருள் பொருந்தாத பொருளாக இருக்கிறது. காரணம் அணிகளை எல்லாம் வேண்டாத போது கழற்றிவிடலாம்; ஆனால் இயற்கை அழகு என்பது கழற்றி வைக்க முடியாது. ஆகவே அது கழற்றி வைக்கக் கூடிய அணி அல்ல; இன்னும் இயற்கை அழகு என்பது அணிகலன்களில் ஒன்றும் கிடையாது. எனவே இங்கே மங்கல அணி என்பது நகைகளும் அல்லாமல் அணி அல்லாத இயற்கை அழகும் அல்லாமல் வேறோர் அணி என்பது தெளிவாகிறது. மங்கல அணி என்பதற்கு ஏற்கெனவே மாங்கலிய நூல் என்று ஒரு பொருள் இருப்பதாலும், அரும்பத உரையிலும் வேறோரிடத்தில் மங்கல அணிக்கு தாலி என்றே பொருள் கொள்ளப்பட்டதாலும் இங்கே கண்ணகி தாலியைத் தவிர பிற எல்லா அணிகலன்களையும் கழற்றினாள் என்பதே பொருந்திய பொருளாக இருக்க முடியும். எனவே மா.ராசமாணிக்கனார் சிலப்பதிகாரத்தில் தாலி இல்லை என்று கூறுவது அழிச்சாட்டிய வாதம் என்பது புலனாகிறது

இந்த அழிச்சாட்டிய வாதத்தை தான் அந்நாளில் இருந்து இந்நாள் வரைக்கும் சில தமிழறிஞர்களும் & தமிழறிஞர்கள் என்று சொல்லிகொல்வோரும் செய்து வருகின்றனர் சோகம்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 07, 2015 2:46 pm

தமிழர் பண்பாடு என்னவாக இருந்தாலும் தற்காலத்திற்கு
பொருந்துகிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும்....
-
அந்தக் காலத்தில் அப்படி செய்தார்கள், என்று இப்பவும்
அதைக் கடைப்பிடிக்க முடியுமா..?
-
தாமோதர கண்ணன் எழுதியஒரு புதுக் கவிதை
இதனை மிக எளிதாக கூறுகிறது:
-
காதலனோடு வாழச் சென்றாள்
சங்க இலக்கியத்தில் உடன்போக்காம்
சமுதாயத்தில் ஓடிப்போனவளாம்


ஆகவே, தாலி கட்டுவது தமிழர் பண்பாடா என்பதை
என்பதை சங்க இலக்கியங்களை வைத்து ஆராய்வதை
விட,
அப்படிப்பட்ட வழக்கம் இன்றைய காலத்திற்குத்
தேவைதானா என விவாதிப்பதே பொருத்தம்
-

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Apr 17, 2015 12:28 am

6) தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? - தொடர்ச்சி

ஆனால் அகநானூற்றில் திருமண நிகழ்ச்சி பற்றி விவரிக்கும் 86 – ஆம் பாட்டிலும், 136 – ஆம் பாட்டிலும் மற்றெல்லாம் கூறப்பட்டாலும் பெண்ணுக்குத் தாலி கட்டப்பட்டது என்ற தகவல் மட்டும் ஏன் இல்லை என்பது மா.ராசமாணிக்கனார் போன்றோர் எழு
ப்பும் கேள்வி.

ஆம்; மேற்கூறிய பாடல் இரண்டிலும் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார் என்பது கூறப்படவில்லை. இதே பாடலில் திருமணம் ‘இழையணிச் சிறப்பு’ என்று கூறப்படுகிறது. ஆனால் மணமகன் மணமகளுக்கு இழையை அணிவித்தான் என்று பாடலில் வரவில்லை. திருமணம் இழையணிச் சிறப்பு எனக் கூறப்படுகிறது; என்ன துயர் வந்தாலும் பெண் தாலியாகிய இழையைத் துறக்க மாட்டாள் என்று கூறப்படுகிறது: மங்கலச் சடங்குகளில் இழையாகிய தாலி அணிந்த மகளிரே கலந்து கொண்டு சடங்கில் பங்கு பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது; கணவன் இறந்த பின் இழையாகிய தாலியைக் களைந்தனர் பெண்கள் என்பதும் கூறப்படுகிறது. இதனால் எல்லாம் திருமணத்தில் தாலி அணிவிக்கப் பெற்றது என்பது உய்த்துணர்வாக உணரக் கூறப்பட்டது; ஆனால் தாலி திருமணத்தில் அணிவிக்கப்பட்டது என்பது மட்டும் கூறப்படவில்லை. ஏன் என்பதே இப்போது ஆய்வு செய்யத் தக்கது.

எதை எதை தெய்வம் என்றும் தெய்வீகம் என்றும் நினைக்கிறார்களோ அதையெல்லாம் பெயரிட்டுக் கூறக்கூடாது என்பதைத் தமிழர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். உதாரணத்திற்கு சிவபெருமானை இலிங்க வடிவில் வைத்துக் கோயில் எழுப்பி வணங்கியவர்கள் தமிழர்கள்.

ஆனால் சிவபெருமானை சங்க இலக்கியங்களில் அவரது அடையாளங்களைக் கூறி வழிபட்டனரே ஒழிய அவரைப் பெயரிட்டுக் கூறுவது இல்லை. சங்க இலக்கியங்களில் சிவபெருமானைப் பற்றி கூறும்போது இறைவன் என்று தான் கூறப்படுமே ஒழிய சிவன் என்ற சொல்லே கூறப்படுவதில்லை.

சிலப்பதிகாரத்தில் முருகனின் குரவைக் கூத்து, ஆய்ச்சியரின் ஆய்ச்சியர் கூத்தில் திருமால், அம்பிகை எல்லாம் பேசப்படுகிறது. ஆனால் சிவபெருமானை ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ என்று பொதுப்படத் தான் கூறப்படுகிறதே ஒழிய சிவன் என்று சொல்லப்படவில்லை.

கி.மு.18000 என்ற கால வரையறையோடு தொடர்பு கொள்ளப்படும் பஃறுளி ஆறு பக்கத்தில் தலைச்சங்கம் இயங்கிய காலத்தில் இருந்த பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி பற்றிய மிகப் பழமையான பாடலில் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்திப் பாடும் போது, உன்னுடைய குடை சிவன் கோயிலின் முன் செல்லும் போது பணிந்து தாழட்டும் எனச் சொல்ல வருகிறார். ஆனால் அங்கே சிவன் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் சிவனின் அடையாளங்களை மட்டும் கூறிச் செல்கிறார்.

“பணியியர் அத்தைநின் குடையே முனிவர்

முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே”

மேலே சிவன் என்று சொல்லாமல் ‘முக்கட்செல்வர்’ என்று சிவனது அடையாளத்தால் மட்டும் சுட்டப்படுவது காண்க.

‘கலிகெழு கந்தம் கைவிட’ . . . (புறம் 50.)

‘நீலமணி மிடற்றொருவன் போல

மன்னுக பெரும” (புறம் 91.)

இப்படித் தான் கி.மு.18000 முதல் சிவன் அடையாளத்தால் கூறப்பட்டானே ஒழிய சிவன் எனப் பெயரிட்டுக் கூறப்படவில்லை.

இது இப்படியே கி.மு.18000 முதல் தொடர்ந்து வந்து புறநானூறு கி.பி.முதல் நூற்றாண்டில் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் தொகுக்கப்பட்ட போது அவரால் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடி சேர்க்கப்பட்டது. அதுவும் சிவபெருமான் வணக்கத்தையே கூறுவது.

கண்ணி கார்நறுங் கொன்றை காமர்

வண்ண மார்பின் தாருங் கொன்றை

ஊர்தி வால்வெள் ஏறே சிறந்த

சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப

கறைமிட றணியலும் அணிந்தன் றக்கறை

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே

பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று அவ்வுருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்

பிறைநுதல் வண்ணம் ஆகின்று அப்பிறை

பதினெண் கணனும் ஏத்தவும் படுமே

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய

நீரறவு அறியாக் கரகத்துத்

தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோர்க்கே (புறம் 1)

இப் புறநானூற்றுப் பாடலில் சிவனது அடையாளங்கள் எல்லாம் கூறப்பட்டாலும் சிவன் என்ற பெயர் மட்டும் கூறப்படாதது காண்க.

இதன் அடிப்படை பரம்பொருளுக்கு ஏது பெயர் என்ற கொள்கை. எனவே அடையாளங்களால் சுட்டிக் காட்டலாமே ஒழிய பெயர் என ஒன்றை வைப்பது கடவுள் இலக்கணத்திற்கு மாறானது என்று கருதினார்கள். கடவுளுக்குப் பெயர் வைக்க நாம் யார் என்பது கருத்து.

ஆக, தெய்வத்திற்குப் பெயர் சொல்லக் கூடாது என்பது தமிழர் தம் கொள்கை; அதே போல் தெய்வீகமாகக் கருதுவனவற்றிற்கும் பெயர் சொல்லக்கூடாது என்று ஒரு மரபைக் கடைப்பிடித்தார்கள்.

ஓர் ஆணும் பெண்ணும் இணைவதையும் தமிழர் தெய்வீகமாகக் கருதினார்கள். பால்வரைத் தெய்வத்தின் முயற்சியன்றி ஓர் ஆணும் – பெண்ணும் கூடுதல் நிகழாது என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஆண்டவனை அன்பு வடிவன் என்றனர்; ஆண் – பெண் இணையும் அகத்துறையை அன்பின் ஐந்திணை என்றனர். இது பற்றிய துறையையே வெளிப்படப் பேசாத அகத்துறை என்றனர். மதுரை சொக்கலிங்கமாம் இறைவனே தெய்வீகமான அகத்துறைக்கு இலக்கணம் வகுக்கும் ‘இறையனார் களவியல்’ என்ற நூல் அளித்தான் என்றனர்.

மிகவும் தெய்வீகமாகக் கருதப்பட்ட ஆண் பெண் இணைப்பை ‘ஓருயிர்க்கிழமை’ என்றனர். தெய்வீகமான இந்த அகத்துறையில் பாடப்படும் பாடல்களில், எப்படி தெய்வத்தின் பெயர் கூறப்படாது என்ற மரபைக் கடைப்பிடித்தார்களோ அப்படி தலைவன் – தலைவியர் பெயர்களைக் கூறக் கூடாது என்று தொல்காப்பியம் வரையறுத்தது.

மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்

சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர் (தொல்; 1003)

திருமணத்தில் ஓர் ஆணையும் பெண்ணையும் இணைக்கும் சடங்கு தாலி கட்டுவதால் அமைவது, அது ஓருயிர்க்கிழமையை நிகழ்த்தும் தெய்வீகச் சடங்காதலால் அதைச் சுட்டிக் கூறுதல் கூடாது என்ற வழிவழி கடைப்பிடித்த தமிழர் மரபின் காரணமாக அதை நேரடியாகக் கூறாமல் உய்த்துணர வைத்தார்கள். அடையாளத்தால் அதை இழையணிச் சிறப்பு என்றார்கள். சேர்த்து வைத்த இணையரில் கணவன் இறக்கப் பிரிவு நேரும் போது இழை களைந்தனர் பெண்டிர் என்று கூறினார்கள். இழையைக் கட்டி இருந்தால் தானே கணவன் இறப்பில் அதைக் களைய முடியும் என்று திருமணத்தில் தாலி கட்டியதை உய்த்துணர வைத்தார்கள்.


(தொடரும்)


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக