புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய விடியல்! Poll_c10புதிய விடியல்! Poll_m10புதிய விடியல்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
புதிய விடியல்! Poll_c10புதிய விடியல்! Poll_m10புதிய விடியல்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
புதிய விடியல்! Poll_c10புதிய விடியல்! Poll_m10புதிய விடியல்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
புதிய விடியல்! Poll_c10புதிய விடியல்! Poll_m10புதிய விடியல்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
புதிய விடியல்! Poll_c10புதிய விடியல்! Poll_m10புதிய விடியல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிய விடியல்! Poll_c10புதிய விடியல்! Poll_m10புதிய விடியல்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
புதிய விடியல்! Poll_c10புதிய விடியல்! Poll_m10புதிய விடியல்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
புதிய விடியல்! Poll_c10புதிய விடியல்! Poll_m10புதிய விடியல்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
புதிய விடியல்! Poll_c10புதிய விடியல்! Poll_m10புதிய விடியல்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
புதிய விடியல்! Poll_c10புதிய விடியல்! Poll_m10புதிய விடியல்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய விடியல்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 26, 2015 3:33 pm

பள்ளி வளாகத்திலுள்ள மரங்களையும், நுழைவாயிலில் உள்ள நீரூற்றைச் சுற்றியிருக்கும் புல் தரையையும், பூச்செடிகளையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் ஏகாம்பரம். அத்தனையும், அவர் நட்டு வளர்ந்தவை; அவைகள் அனைத்தும், அவரது குழந்தைகள்.

அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் மேலாக, அவற்றை நேசித்து வருகிறார்.
குழந்தைகளுக்கு பாலூட்டி, சோறூட்டி வளர்ப்பது போல, தினமும் அவைகளுக்கு நீரூற்றி வளர்த்து வருகிறார். அவரை, பள்ளிக் குழந்தைகள், 'தாத்தா' என்று கூப்பிடுவதைப் போல், அந்த மரங்களும், செடிகளும் கூப்பிடுவதாக கற்பனை செய்து கொள்வார்.

இந்த மரங்களையும், செடி, கொடிகளையும் தினமும் பார்ப்பதும், அவற்றுடன் பேசிக் கொண்டிருப்பதும் அவர் உணர்வில் கலந்துவிட்ட விஷயம். அவ்வாறு மரம், செடிகளோடு பேசிக் கொண்டிருந்தவர், பள்ளி முடிந்து நேரமானதால், வகுப்பறைகளை பூட்டக் கிளம்பினார்.
ஒவ்வொரு அறையாக பூட்டிக் கொண்டு வந்தவர், ஏழாம் வகுப்பு அறைக் கதவை சாத்தியபோது, ''தாத்தா,'' என்ற குரல், அவரை தடுத்தது.

''தாத்தா பூட்டாதீங்க; இன்னக்கி ராத்திரிக்கு மட்டும் இங்கேயே தங்கிக்கிறோம்,'' என்ற வார்த்தைகள் அழுகுரலோடு சேர்ந்து வந்தன.

''வீட்டுக்குப் போகாம இங்க என்ன செய்றீங்க... உங்க அப்பா, அம்மா தேடுவாங்கல்ல. வெளியில் வாங்க, ரூம பூட்டணும்,'' என்றார்.

'வீட்டுக்குப் போக பயமா இருக்கு தாத்தா... ப்ளீஸ்... இன்னக்கி மட்டும் இங்க தங்கிக்கிறோம்...' என்றனர்.

'என்னடா இது தொந்தரவாப் போச்சு...' என்று தனக்குள் சொன்னவர், ''நீங்க அடம்பிடிக்கிறது தப்பு; இங்கல்லாம் தங்க விட மாட்டாங்க. வம்பு செய்யாம வெளிய வாங்க. நீங்க வரலன்னா, 'ஹெட்மாஸ்டர்'கிட்ட சொல்லிடுவேன்,'' என்றவர், அவர்கள் பிடிவாதமாக வர மறுக்கவே, தலைமையாசிரியையிடம் தகவல் சொல்லப் போனார்.

''அம்மா, ஏழாம் வகுப்புல ரெண்டு புள்ளைங்க உட்கார்ந்துக்கிட்டு, வீட்டுக்கு போகமாட்டோம்ன்னு அடம்பிடிச்சு அழுகுதுங்க; நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன் கேட்க மாட்டேங்குதுக,''என்றார்.

''ஏன் வீட்டுக்கு போக மாட்டேங்கிறாங்க...'' என்று கேட்டபடி ஏகாம்பரத்தை பின் தொடர்ந்து வந்தார் தலைமையாசிரியை.

வகுப்பறையில் உட்கார்ந்திருந்த குழந்தைகளை பார்த்ததும், அவர்கள் முகத்தில் தெரிந்த பீதியையும், பயத்தையும் கண்டு தலைமையாசிரியைக்கு கோபம் வரவில்லை. அவர்களின் தலையை வருடியபடி, ''நீங்க ரெண்டு பேரும் அக்கா, தங்கச்சிக தானே... போன ஆண்டு விழாவில, நீ பாரதியாராவும், உன் தங்கச்சி திருவள்ளுவர் வேடமும் போட்டு, முதல் பரிசு வாங்குனவங்க தானே...'' என்றாள்.

''ஆமா மிஸ்.''
''வாங்க என்னோட ரூமுக்குப் போகலாம்.''

தன்னோட அறையில் உட்கார வைத்து, அவர்களிடம் பிஸ்கெட்டைக் கொடுத்தவர்,
''ம் சொல்லுங்க... ஏன் வீட்டுக்குப் போகமாட்டேன்னு சொல்றீங்க... உங்கள காணோம்ன்னு உங்க அப்பா, அம்மா தேடுவாங்கல்ல,'' என்றார்.

''ஆமா மிஸ் ஆனா, இன்னிக்கு மட்டும் நாங்க வீட்டுக்கு போகாம இங்கேயே இருக்கோம்; ப்ளீஸ்...'' என்றாள் ஏழாம் வகுப்பு படிக்கும் ரஞ்சனி.

''அதுதான் ஏன் வீட்டுக்கு போக மாட்டேங்கிறீங்கன்னு கேட்கிறேன்...'' என்றாள் தலைமை ஆசிரியை கனிவுடன்.

''வீட்டுக்கு போக பயமாயிருக்கு மிஸ். அங்க போனா...'' என்று தயங்கினாள்.
''ஏன் வீட்டுக்கு போக பயமாயிருக்கு... நீங்க ரெண்டு பேரும் ஏதாவது தப்பு செய்தீங்களா சொல்லுங்க. நானே உங்க வீட்டுக்கு வந்து உங்கள விட்டுட்டு வர்றேன்,''என்றாள்.
''தப்பு எதுவும் செய்யல மிஸ். ஆனா, வீட்டுக்குப் போனா, நாங்க செத்துப் போயிருவோம்,'' என்றாள் ரஞ்சனி. அவள் கண்ணில் பயம் தெரிந்தது.

இதைக்கேட்டதும் தலைமை ஆசிரியைக்கு, ஒருபுறம் சிரிப்பும், மறுபுறம் இவர்கள் சொல்வதில் உண்மை இருக்கக் கூடுமோ என்று நினைத்தவள், அதற்கான காரணத்தை அறியும் நோக்கில், ''நேத்து ராத்திரி கனவு எதுவும் கண்டீங்களா இல்ல எதையாவது பாத்து பயந்தீட்டீங்களா... பயப்படாம சொல்லுங்க,'' என்றார்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரஞ்சனியின் தங்கை ரஞ்சிதா, மெல்ல திக்கித் திணறி பேச ஆரம்பித்தாள்...

''நேத்து ராத்திரி நல்லா தூங்கிட்டு இருந்தப்ப அப்பாவோட அழுகைச் சத்தம் கேட்டு முழிச்சுட்டேன் மிஸ். அப்ப, அம்மா, அப்பாவை சமாதானப்படுத்தி, 'புள்ளைங்க முழிச்சுடப் போறாங்க; அழாமச் சொல்லுங்க'ன்னு சொன்னாங்க.

''அதுக்கு அப்பா, 'வேல போயி, ஆறு மாசமாச்சு. செலவுக்கும் பணமில்ல; கையில இருந்த பணமும் தீர்ந்தாச்சு. இந்த மாத வீட்டு வாடகையும் இன்னும் கொடுக்கல; அடுத்த மாசம் புள்ளைங்களுக்கு பீஸ் கட்டணும். வீட்டுச் செலவுக்குன்னு, 500 ரூபாதான் கையில இருக்கு. நமக்கு கடன் குடுக்கிறதுக்கு யாரு இருக்கா... அப்படி வாங்குனாலும், திரும்ப நம்மால கட்ட முடியுமா... இதையெல்லாம் நினைக்கும் போது எனக்கு பைத்தியம் பிடிச்சுரும் போல இருக்கு'ன்னு சொன்னாரு.

''உடனே அம்மா, 'இன்னிக்கு வேலை தேடிப் போனீங்களே... என்னாச்சு'ன்னு கேட்டாங்க,'' என்று சொன்னவள், அக்காட்சிகளை நினைவுக்கு கொண்டு வந்தாள்...
'ரெண்டு மாசம் கழிச்சு வந்து பாருங்கன்னு சொல்லிட்டாங்க; ஆனா, எதையும் உறுதியா சொல்ல முடியாது...'

'கவலப்படாதீங்க கடவுள் வழிகாட்டுவாரு. முயற்சி செய்தா ஏதாவது ஒரு வேலை கிடைக்கும்...'

'எனக்கென்னமோ இந்த உலகத்துல பிறந்ததுக்கான அர்த்தமே இல்லாம வாழ்ந்துக்கிட்டு இருக்கிற மாதிரி தோணுது...'

'ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க... உங்களுக்கு வேலை கிடைக்கிற வரைக்கும், நான் வேலைக்கு போறேன். பக்கத்து வீட்டு அக்கா கூட, 'வீட்டு வேலைக்கு ஆளே கிடைக்க மாட்டேங்குது; உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தாச் சொல்லு'ன்னு சொன்னாங்க. அவங்ககிட்ட சொன்னா, எனக்கு வேலை கிடைக்கும். அதனால கவலைப்படாம நிம்மதியா தூங்குங்க...' என்றாள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 26, 2015 3:36 pm

'இவ்வளவு நாள் கவுரவமா இருந்துட்டு இப்ப வீட்டு வேலைக்குப் போறேங்கிறயே...' என்றார் அப்பா சங்கடத்துடன்!

'திருடிச் சாப்பிடறதுதாங்க தப்பு; உழைச்சு சாப்பிடுறது ஒண்ணும் தப்பில்ல. வீட்டு வேலைய ஏன் இழிவா நினைக்கிறீங்க; வீட்ல செய்ற வேலையை காசு வாங்கிட்டு செய்யப் போறோம் அவ்வளவு தான்; அதுவும் நல்ல வேலைதான்ங்க...' என்றாள் அம்மா.

'ஆம்பிள வீட்ல இருந்துக்கிட்டு, பொம்பளய வேலைக்கு அனுப்பி சாப்பிடுறானேன்னு ஊர், உலகம் தப்பா பேசுவாங்கம்மா. எனக்குப் பிடிக்கல; இதுக்கு மேல பேசாத...'

'கைநிறைய சம்பளம் வாங்குற ஆம்பிளைங்க, தங்களோட பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பலியா... இதுல நீங்க மட்டும் ஏன் இதக் கவுரவக் குறைச்சல்ன்னு நினைக்கிறீங்க.
'நீங்க என்னை காதலிச்சுக் கல்யாணம் செய்துகிட்டதாலதான் உங்க அப்பா, அம்மா, சொந்தங்க எல்லாரும் நம்மள ஒதுக்கிட்டாங்க.

என்னக் கல்யாணம் செய்யலன்னா, அவங்க உதவியாவது உங்களுக்கு கிடைச்சிருக்கும். எங்க வீட்லயும் நமக்கு உதவி செய்ற நிலையில அவங்க இல்ல...'
'அதுதான் சொல்றேன்... உங்களுக்கு சோறு போட முடியாம, பேருக்கு மட்டும் அப்பாவாகவும், புருஷனாவும் நானு இருக்கணுமா... அதனால நான் போயிரலாம்ன்னு இருக்கேன். நீயும், பிள்ளைங்களும் உங்க அப்பா, அம்மாகிட்ட போயிச் சேந்துக்கங்க...'

'ஏன் இப்படி கோழைத்தனமா பேசுறீங்க. நீங்க எங்களுக்கு தைரியம் சொல்றத விட்டுட்டு, இப்படிப் பேசுறது நல்லாவா இருக்கு; நீங்க இல்லாத, இந்த பூமியில நாங்க மாத்திரம் உயிரோட இருக்கணுமா? செத்துப் போறதுன்னு முடிவெடுத் தப்புறம் ஏன் நீங்க மட்டும் போறேன்னு சொல்றீங்க. எங்களையும் சேர்த்து கொன்னுடுங்க...' என்று கூறி அழுதாள் அம்மா.
இதை சொல்லி முடித்ததும், கேவிக் கேவி அழுதாள் ரஞ்சிதா. உடனே ரஞ்சனி,''ஆமாம் மிஸ், காலையில இதையெல்லாம் என் தங்கச்சி என்கிட்ட சொன்னாளா... எனக்கு பயமா போச்சு.

இவ்வளவு பெரிய உலகத்துல நாங்க மட்டும் வாழ்றதுக்கு வழி இல்லயா... எங்கப்பாவுக்கு அத தேடுறதுக்கான வழியும், பொறுமையும், இல்ல. கிராமத்துல எல்லாம் ஆம்பள, பொம்பள எல்லாரும் தானே வயல்ல வேலை செய்றாங்க... இதுல அம்மா வேலைக்குப் போனா அதுல என்ன தப்பு... அவங்களுக்கு வாழப் பிடிக்கலன்னா, எங்கள எதுக்கு கொல்ல நினைக்கணும். எங்கள கொல்ல அவங்களுக்கு என்ன உரிமை இருக்கு... அதான், வீட்டுக்கு போக பயமா இருக்கு. ப்ளீஸ் மிஸ்... எங்கள எங்க வீட்டுக்கு அனுப்பாதீங்க; அதுக்கு பதில், எதாவது அனாதை இல்லத்துல சேத்துடுங்க,'' என்று அழுதுகொண்டே கூறினாள்.

அவர்களின் பேச்சு தலைமை ஆசிரியையிடம், தாக்கத்தை ஏற்படுத்த, ஒரு நிமிடம் சிலையாக நின்றிருந்தாள்.

அப்போது, அறைக்குள் நுழைந்த ரஞ்சனியின் அப்பா, ''ரஞ்சனி என்ன மன்னிச்சுரும்மா... நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், என்னை யோசிக்க வச்சுருச்சும்மா. நீங்க எங்களுக்கு புள்ளைகளா பிறந்தது நாங்க செஞ்ச புண்ணியம். மூட்டை தூக்கி பிழைச்சாவது உங்கள நான் காப்பாத்துவேன்,'' என்று கூறி தன் பிள்ளைகளை அணைத்துக் கொண்டார்.

''இந்த மாதிரி பிள்ளைங்கள பெத்ததுக்கு நீங்க குடுத்து வச்சிருக்கணும் தம்பி. உங்களுக்கு வேலை கிடைக்கிற வரையில, பிள்ளைகளோட பீஸ் எதையும் நீங்க கட்ட வேண்டாம், நான் பாத்துக்கிறேன். கவலைப்படாம, மனந்தளரமா முயற்சி செய்யுங்க; நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைக்கும்,'' என்றாள் தலைமை ஆசிரியை.

இரவு —
''அப்பா... நீங்க எப்ப ஸ்கூலுக்கு வந்தீங்க?'' அப்பாவின் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைத்தபடி கேட்டாள் ரஞ்சிதா.
''அக்கா பேச ஆரம்பிக்கும்போதே வந்துட்டேன்; அவளோட பேச்சு சத்தம் கேட்டு ரூமுக்கு வெளியிலயே நின்னுருந்தேன்.''
''எம் மேல கோபமாப்பா...''

''எம் மேலதாம்மா எனக்கு கோபம். குடும்பத் தலைவன்கிற பொறுப்பு எவ்வளவு முக்கியமானதுன்னு, இன்னிக்கு நீங்க எனக்கு புரியவச்சதுடன், தன்னம்பிக்கையையும் குடுத்துட்டீங்க. இப்படி, நீங்க ஒரு முடிவு எடுக்கலன்னா, எனக்கு இந்த சமூகத்துல கோழை, கையாலாகாதவன்கிற பேருதான் கிடைச்சிருக்கும்.

அதுக்கும் மேல கொலைகாரன்ங்கிற பழியும் விழுந்திருக்கும். இதையெல்லாம் நினைச்சுப் பாத்தாலே என்னோட உடம்பெல்லாம் நடுங்குது. என்னை மறுபிறவி எடுக்க வச்சிட்டிங்க என் செல்லக் குட்டிகளா...'' என்று அவன் பேசி முடித்தபோது, அவனால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

''அப்பா... 'குட் நைட்...' எங்களுக்குத் தூக்கம் வருதுப்பா. அம்மா நீயும் வா,'' மனைவியும், குழந்தைகளும் உறங்குவதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அவன் காதுகளில், 'வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்...' பாடல் காற்றில் கலந்து, அவன் காதுகளில் ஒலித்தது.

- மாரி சுந்தரம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 27, 2015 5:38 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றிமா
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 28, 2015 11:38 pm

ம்.ஆமாம் பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக