புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
62 Posts - 63%
heezulia
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
1 Post - 1%
viyasan
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
254 Posts - 44%
heezulia
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
15 Posts - 3%
prajai
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான உதவி!


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 4:54 pm

உண்மையான உதவி!


தென்னாப்ரிக்காவில்
ஒரு அடர்ந்த காடு. அதில் மிகப்பெரிய மரங்கள் வளர்ந்திருந்தன. அதில் உள்ள
ஒரு மரத்தை தங்களின் வசிப்பிடமாகக் கொண்டு பல பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து
வந்தன. அதில் இரண்டு புறாக்களும் இருந்தன. அவை இரண்டும் மிகவும் நெருங்கிய
நண்பர்கள். அவர்களது நட்பு பற்றி காட்டில் இருந்த மற்ற பறவைகளுக்கும்
நன்கு தெரியும்.

ஒரு புறாவின் பெயர் சோனு; மற்றது பெயர் மோனு.
இரண்டும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாலும், இரண்டுக்கும் வேறுபாடு
இருந்தது. சோனு நல்ல உழைப்பாளி; மோனு மிகவும் சோம்பேறி. சோனு நாள்
முழுவதும் இரைதேடி அலைந்து திரிந்து தனக்கான உணவைத் தேடிக் கொண்டது. ஆனால்
மோனு எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருந்தது.

தனது நண்பன்
இப்படி இருப்பதைக் கண்ட சோனு, தினமும் தான் அலைந்து திரிந்து தேடிவரும்
உணவில் மோனுவுக்கும் பங்கு தந்தது. இதனால் மோனு எந்தவித கவலையும் இல்லாமல்
சோனு உழைப்பில் வாழ்ந்து வந்தது.

உழைப்பாளியான சோனு, மழைக்காலம்
வந்தவுடன் வசிப்பதற்காக தனக்கென ஒரு கூடு கட்டியது. ஆனால் மோனு கூடு ஏதும்
கட்டாமல் சோனுவின் கூட்டில் வந்து தங்கிக் கொண்டது. சோனு, நண்பன்தானே
என்று தன்னுடன் தங்க அனுமதித்தது. ஒரு நாள் மோனுவிடம், ""நண்பனே மோனு, நீ
தங்குவதற்கு எனத் தனியாக ஒரு கூட்டை அமைத்துக் கொள். இதனால், மழை, வெயில்,
குளிர் போன்றவற்றில் இருந்து காத்துக் கொள்ளலாம்'' என்றது. ஆனால் சோனு
கூறியதை மோனு அலட்சியம் செய்தது. தொடர்ந்து நண்பன் சோனுவின் கூட்டையே
பயன்படுத்தியது.

ஒருநாள் அவர்கள் வசித்து வந்த மரத்தில் ஓர் அழகான
பறவை வந்து அமர்ந்தது. அதன் பெயர் பிஃசி. பிஃசி தன்னை சோனுவிடமும்,
மோனுவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டது. பிஃசியின் இனிய பேச்சைக் கேட்டு
சோனுவும், மோனுவும் அதனுடன் நட்பாகி விட்டன. இதற்கிடையில், பிஃசிக்கு
அங்கிருந்த இயற்கைச் சூழ்நிலை மிகவும் பிடித்துப் போனது.

அதனால்,
அங்கேயே சிறிது நாள் தங்க தீர்மானித்தது. அதற்குள் சோனு, மோனுவுக்கு இடையே
இருந்த நட்பைப் பற்றி புரிந்து கொண்டது பிஃசி. சோனு, மோனுவுக்காக அதிகம்
உழைப்பதையும், மோனு உழைக்காமல் சோம்பேறியாகத் திரிவதையும், நண்பன்
என்பதால் நட்புக்காக சோனு இவற்றை சகித்துக் கொண்டு போவதையும் கண்டு
வருத்தமடைந்தது.

மோனுவின் சோம்பேறித்தனத்தைப் பற்றி பிஃசியும்,
சோனும் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தன. அப்போது, பிஃசி, ""மோனு இப்படி
சோம்பேறியானதற்கு நீதான் காரணம். இதில் மோனுவின் பங்கு மிகவும் குறைவு.
உன் பங்குதான் அதிகம்'' என்றது.

இதைக் கேட்ட சோனு அதிர்ச்சி அடைந்து, ""அது எப்படி என் குற்றமாகும்?'' என்று கேட்டது.

அதற்கு
பிஃசி, ""உன் உழைப்பால் தேடிய உணவில் மோனுவுக்கு பங்கு தருகிறாய். இதனால்
அதற்கு தனக்காக உழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. மேலும், உன்
கூட்டில் அதற்கு இடம் தருகிறாய். இதனால் அது தனக்கென ஒரு கூடு அமைத்துக்
கொள்ளாமல் சோம்பித் திரிகிறது. நீ அதற்கு வாழ்க்கையில் உழைப்பின்
அவசியத்தைக் கூற மறந்து விட்டாய். அதனால் அது சோம்பேறித்தனத்தால் சொகுசு
கண்டுவிட்டது. அது இப்படி ஆனதற்கு நீதான் முழுக் காரணம்'' என்றது.

இதைக் கேட்ட சோனு, ""ஒருவேளை நான் அதற்கு உணவு தரவில்லை என்றால் பாவம் அது இறந்து போயிருக்குமே?'' என்றது அப்பாவியாக.

இதைக் கேட்டு பிஃசி கூறியது, ""எங்கே, எப்படி இறக்கும்? ஏன் அதற்குப் பசித்தால் அது தனக்காக உணவு தேடிக் கொள்ள முடியாதா?''

""ஆமாம்! தேடிக் கொள்ள முடியும்!'' என்றது சோனு.

பிஃசி,
""நீ மோனுவுக்கு உணவு தருவதையும், உன் கூட்டில் வசிக்க இடம் தருவதையும்
நிறுத்திவிட்டால், அது தனக்காக உழைக்கத் தொடங்கி, தன் வாழ்க்கைத் தேவைகளை
தானே பூர்த்தி செய்து கொள்ளும். இதனால் அதற்கு நன்மை விளையுமே தவிர,
எந்தவித தீமையும் விளையாது. கவலைப்படாதே! உன் நண்பனுக்கு உதவி செய்வதாக நீ
நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், நீ செய்யும் இந்த உதவிகளே, ஒருநாள்
மிகப் பெரிய தீமையில் கொண்டு போய் விட்டுவிடும் புரிந்து கொள். நான்
கூறியபடி செய்'' என்று கூறிவிட்டு, அதனிடம் விடைபெற்று பறந்து போய்விட்டது.

பிஃசி
கூறியதில் நியாயம் இருப்பதாக சோனுவுக்கு பட்டது. இப்பொழுது அனைத்தையும்
புரிந்து கொண்டது. பிஃசி கூறியதைப் போலவே மோனுவிடம் நடந்து கொண்டது சோனு.
இரண்டு நாட்களாக சோனு உணவு தரும் என்று காத்துக் கிடந்தது மோனு. மூன்றாம்
நாளும் சோனு உணவு தரவில்லை என்றவுடன் இரைதேடக் கிளம்பியது மோனு. நாள்
முழுவதும் சுற்றி அலைந்து, மாலையில் உணவுடன் வந்தது. இதைக்கண்ட சோனு, மோனு
உழைக்கத் தொடங்கியதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. மற்ற
பறவைகளும் இதைக் கண்டு ஆச்சரியப்பட்டன.

மழைக் காலம் வந்தது.
அப்போது மோனு இரண்டு நாட்கள் கூடு இல்லாமல் சிரமப்பட்டது. மறுநாள் தனக்காக
ஒரு கூட்டைத் தயார் செய்வதற்காக அங்கும் இங்கும் அலைந்து, திரிந்து
சின்னஞ்சிறு குச்சிகளைப் பொறுக்கி வந்து, சில நாட்களுக்குள் ஓர் அழகான
கூட்டை அமைத்தது. மேலும், அதில் நிம்மதியாக வசிக்கத் தொடங்கியது. இப்போது
மோனுவுக்கு ஒரு விஷயம் புரியத் தொடங்கியது. "உழைப்பு இல்லாமல்
வாழ்க்கையில் எதுவும் இல்லை. உழைப்புதான் அனைவரையும் உயர்த்துகிறது.
அடுத்தவர் உழைப்பில் வாழ்வது கூடாது' என்பதைப் புரிந்து கொண்டது.

மோனு
நல்ல உழைப்பாளியாகவும், வேலை செய்யவும் தொடங்கியதைப் பார்த்து சோனு
மிகவும் பெருமைப்பட்டது. பிஃசி பறவை கற்றுக் கொடுத்த பாடத்தில், ஒன்று
மட்டும் நன்கு புரிந்தது சோனுவுக்கு. அது, "நண்பனுக்கு அவசியம் உதவி செய்ய
வேண்டும். ஆனால், அந்த உதவி அவனை சோம்பேறியாக்கும் அளவுக்கு போய்விடக்
கூடாது' என்பதுதான்.

நன்றி தினமணி!


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 10, 2009 5:00 pm

நல்ல கருத்து அபி... வாழ்த்துக்கள்.... உண்மையான உதவி! 677196 உண்மையான உதவி! 677196 உண்மையான உதவி! 677196
தாமு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தாமு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக