புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Poll_c10 
42 Posts - 63%
heezulia
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Poll_c10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Poll_m10மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 07, 2015 10:58 pm

First topic message reminder :

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 XfBad0VvSOSsCcAwZXvQ+ALJ_3241(1)
[img]https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-

[img]https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10930124_872135902828612_6784567739548620886_n.jpg?

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 1546280_872135779495291_1839059579936697234_n
oh=12b38400ef2b9028ffc93d6a76521e49&oe=55714827&__gda__=1434758477_ca66c065630ec90ef7f74111da1ad790[/img]
9/11034179_870425096333026_3515519045302774961_n.jpg?
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 10373708_872135766161959_2347873433498487896_n

oh=7fa27c4776637061af5efa567ee3b7e1&oe=55766B54&__gda__=1434708030_76723ed9d694ad9e6b4821fba1149d0a[/img]

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 10957539_870425229666346_6574534299497182464_n

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 11025793_870427586332777_5474336910337572831_n

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 11038880_870427909666078_7080954106703028726_n

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 18103_870440996331436_7029734561947710898_n
மும்பையில் ஞாயிறு இலக்கிய அமைப்பு நடத்திய மகளிர்தினக் கவியரங்கில் தலைமை வகித்த போது நான் பாடிய தலைமைக் கவிதை.


தமிழ்வாழ்த்து

எல்லையை இழந்தாய் வாழ்ந்த
இருப்பிடம் நீ தொலைத்தாய் – இன்று
முல்லையும் இழந்தாய் எங்கள்
முத்தமிழ்த் தாயே என்றும்
தொல்லையில் கிடந்தும் வீரத்
தோள்தனைத் தூக்கி நின்றாய்
இல்லையே சங்க காலம்
ஏங்கினேன் தமிழே வணக்கம்.

அவை வணக்கம்
கொங்கன் கடற்கரையின் செல்வமிகு நங்கை
பாற்கடலில் கால்பிடிக்கும் இலக்குமியின் தங்கை
பாலிவுட்டின் படச்சுருளில் பளபளக்கும் அம்பை
இந்திய நகரங்களில் இவள் பூலோக ரம்பை
தமிழை வளர்ப்பதில் இவள் இன்னொரு கங்கை

பொன்னகராம் புதுநகராம்
வருவாய் எல்லாம் குவிக்கின்ற வளநகராம்
மின்னரகராம் தொழில்கள் கலைகள்
எல்லாம் வளர்கின்ற இந்நகரை
எந்நகரம்? என்போர்க்கு
என் நகரம் என் நகரம்
என முழக்கி இருமாப்பு கொள வைக்கும்
நன்னகராம் மும்பை முதுநகரில்
பெண் பெயரில் கவியரங்கம்


549 கவிஞர்கள் கவிதை பாடினர் (தென்மதுரை)
அது முதலாம் தமிழ்ச்சங்கம்
59 புலவர்கள் கவிதை பாடினர் (கபாடபுரம்)
அது இரண்டாம் தமிழ்ச்சங்கம்
49 புலவர்கள் கவிதை பாடினர் (மதுரை)
அது மூன்றாம் தமிழ்ச்சங்கம்
இப்போது 18 புலவர்கள் பாடுகின்றனர்
இது நான்காம் தமிழ்ச்சங்கம்
ஞாயிறு தமிழ்ச்சங்கம்

ஞாயிறு
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றும்
தண்டமிழ் வளர்க்கும் ஞாயிறு போற்றுதும் - ஞாயிறு
இது அவைக்கு ஒளியேற்றும் மெழுகு வர்த்தி அல்ல
அரங்கத்திற்கு ஒளியேற்றும் மின் விளக்கும் அல்ல
அகிலத்திற்கே ஒளியேற்றும் வெஞ்ஞாயிறு அல்ல
அண்டத்திற்கே அறிவுச்சுடர் ஏற்றுகின்ற செஞ்ஞாயிறு
ஞாயிறு தமிழ்ச்சங்க அவைக்கு வணக்கம்

நாளுக்கு முகவரிதான் விடியல்
நாட்டுக்கு முகவரிதான் ஆளும் மன்னன்
வேலுக்கு முகவரிதான் வேலன் (முருகன்)
வெற்றிக்கு முக்வரிதான் சூடும் வாகை
தாளுக்கு முகவரிதான் தடவும் எழுத்து
தமிழுக்கு முகவரிதான் கவிதை
கோளுக்கு முகவரிதான் ஞாயிறு - மும்பைக்
கோட்டத்திற்கு முகவரிதான் ஞாயிறு இராமசாமி

யோசித்துப் புகழ் பெற்றான் சிந்தனைச் சிற்பி சாக்ரடீசு
வாசித்துப் புகழ் பெற்றான் குறுமுணி அகத்தியன்
பூசித்துப் புகழ் பெற்றான் சோழன் கோச்செங்கண்ணான்
யாசித்துப் புகழ் பெற்றான் மாபாரதக் கண்ணன்
நேசித்தே புகழ்பெற்றார் ஞாயிறு இராமசாமி
(தமிழையும் தமிழர்களையும்)

சபரிக்கும் திருப்பதிக்கும் பறக்கின்ற ஆன்மிகப் புயல்
இது கரையைக் கடக்கும்போதெல்லாம் தமிழகத்துக்கு
அடர்த்தியான பெயல்
அதனால்தான் தழைக்கின்றது எம் போன்ற கவிஞர்களின் வயல்
ஆகையினால் கவிஞர்கள் எல்லோருக்கும் இவர்மீது அளவில்லாத மயல்

இசைத்தமிழை வளர்ப்பதில் இன்னொரு முத்துத்தாண்டவர்
இலக்கியத்தை வளர்ப்பதில் இன்னொரு கம்பன்
இவர், மின்னலை வானில் ஏற்றுவார்
வேர்களை மண்ணில் இறக்குவார்
மரங்களைப் பேச வைப்பார்
மயில்களை நடனமாட வைப்பார்
மொத்தத்தில்
இயற்கைக்குச் சிறகேற்றும் இன்னொரு புரட்சிக் கவிஞர்
தலைவர் ஞாயிறு இராமசாமிக்கு அவர்களுக்கு இன்னொரு ஞாயிற்றின் குளிர் வணக்கம்

தேவர் அசுரர் போர் 18 ஆண்டுகள்
இராமாயணப் போர் 18 மாதங்கள்
மகாபாரதப் போர் 18 நாட்கள்
சேரன் செங்குட்டுவன் போர் 18 நாளிகை
புராணம் 18
உப புரானம் 18
மேல்கணக்கு 18 கீழ்க்கணக்கு 18
ஐயப்பன் கோவில் படிகள் 18
அஷ்டபதி 18
கணங்கள் 18
ஆடிப்பெருக்கு 18
சொல்லிக்கொண்டே போகலாம்…
ஆனால் காலம் தடுப்பதால் முடிக்கிறேன் பட்டியலை
இங்கு கவிதை பாடும் கவிஞர்களும் 18
பேரளவில் இல்லை என்றாலும் பெயரளவில்
குவிந்திருக்கும்
மும்பைக் கவிதைகளுக்கு இந்தக் கவியின்
கனிந்த வணக்கம்


இனி கவிஞர்களின் கவிச்சுரங்கம் திறக்கட்டும்
உற்சாகச் சிறகடிக்கும் ஒய்யார வார்த்தைகளால்
கவிமகளின் ஊர்வலம் நடக்கட்டும்
இச்சங்கத்தமிழ் கேட்டு ஈடிலா இன்பத்தில்
இதயங்கள் இனிப்பாகட்டும்
பொன்னுரைத்த கவி உரைக்கக் கவிஞர்களை
கவிமுற்றத்திற்கு அழைக்கின்றேன்

இது தலைமைக் கவிதை
முதுமக்கள் தாழியிலிருந்து
வெளியில் வா


இட்டலிக்கு
ஊற வைத்த அரிசியை
உப்பரிகையில்
உலர வைத்த துணிமணியை
கோபத்தில்
காய வைத்த கணவரை
குழந்தைகளின் கத்தலை
மாமியாரின் குத்தலை
பேச மறந்த அம்பலை (வம்பினை)
பூசமறந்த அரிதாரத்தை
தொலைக்காட்சித் தொடரினை
சற்றுநேரம் அப்புறப் படுத்துங்கள்
உங்கள் நினைவுகளிலிருந்து

செவிகளையும் சிந்தையையும்
கொடுங்கள் என் கவிதைக்கு

உற்பத்தி உலகே நீ
ஆண் பூசைக்கே ஊதுவத்தியாய் மணந்து
சாம்பல் ஆனாய்

உலகின் ஆதிமூலமே நீ
தொட்டில் பணி ஒன்றே சுகமென்று
கட்டிலில் முடங்கிப் போனாய்

படைப்பு கணிதத்தில்
வர்க்கமூலம் நீ
அடைப்புக் குறிக்குள் ஆச்சரியக்
குறியாய் அடங்கிப் போனாய்

கர்ப்பத்தில் நிர்மூலம் ஆகாமல் தப்பித்த
ரசமூலம் நீ
(பாதரசம்) நீ
சொர்ப்பத்தில் மதிமயங்கி மண்ணோடு
மண்ணாகி மட்கிப் போனாயே

படுத்தபடி உனைக் கிடத்தி நதி என்பார்
பர்த்தாவின் தாகம் தீர்ப்பதே உன் விதி என்பார்
ஆண் மோகக் குளியலுக்கு அடர்மழையா நீ?
கொதி கொதித்தெழு கொப்பளி

புலிப்பல் தாலி என்றார்
ஐம்படைத் தாலி என்றார்
ஆளுமையில் உயர்ந்த உன்னை அடிமையாக்கி
அந்த வேலிக்குள் சிறை பிடிப்பார்
குதி, வேலி தாண்டு, குதித்தோடு
ஆளுமைத் திறன் உனக்குள் அதிகம் எனக் காட்டு

சங்கமத்தில் சரிபாதி நீ
உனை அகத்துறையில் மூழ்கடித்து
குங்குமத்தில் அடைத்து விட்டார்
முடி.. மோகக்கதையை முடி!
நீ முடிப்பதற்கு வேறு இருக்கிறது படி!

மூடிக்கிடக்கும்
முதுமக்கள் தாழியிலிருந்து
வெளியில் வா
அந்த முதுமை கள் தாழியிலிருந்து
முண்டியடித்து வெளியில் வா
காத்துக்கிடக்கிறது படைப்புலகம் உனக்காக

உன் நெற்றித் திலகத்தை வினாக்குறியாக்கு
கேள்வி கேள்
சாதனையின் திறவுகோள் எது என்று

வெற்றிப் புள்ளியைத் தொடும் சூத்திரத்தை
உன் வட்டப் பொட்டிடம் கேட்டுப் பார்

கங்குலை உடை
தூள் தூளாக்கு
உனை இருளில் தள்ளிய
காலத்தின் முகத்தில்
கரியைப் பூசு

வீரம் கொள்
மீசையில்லையே என்று வருந்தாதே
புருவங்களை முறுக்கு

விழி.. விழிதிற
கணன்று எரியும் உள்ளத்தை வெளித்தர
தொலைதுரக் கனவு காண்
உன் கனவுகளைக் கலைப்போரை
கணலாட்டு விழிச் சுடராலே

இனியும் இருட்டுத் தெருவில்
இருந்து உலவாதே
வெளிச்ச பவனி வா
பவனி முடியும் நாளில்
பெண்ணுக்கே கொடையாக்கு
அந்த வீர விழிகளை

33  33 என்று
விழுக்காடு கேட்டு புலம்பாதே
குறை வேக்காடா நீ
எடுத்துக் கொள் 100 விழுக்காடு
எதிர்ப்பவர்களை விழுக்காட்டு
எரியும் தணலில்

சேலைக்கடையில்
நிறங்களுக்காக நெடுந்தவம் செய்யாதே
நிறுவுவதற்காக கடுந்தவம் செய்
எங்கெங்கும் உன்சக்தியை நிறுவ
கடுந்தவம் செய்
பெண் சக்தியை நிறுவுவதற்காகக் கடுந்தவம் செய்

பாலியல் கல்வியைக் கண்மூடி எதிர்க்காதே
பச்சைக் குழந்தைகளின் பரிதாபம் உணர்

உழவைக் கொடுக்காத ஊதியக் கல்வியால்
உருப்படுமா இந்தியத் தேசம்
சிந்தித்தாயா? செயல் என்ன செய்தாய்

ஈழக் கனவை எப்படி முடிப்பது
ஏதாவது செய் உன்னாலும் முடியும்
பாலுக்கழுகும் பருவமா உன்னது
பால்மணம் மாறா மழலைகள்
மடிந்தை மறக்க முடிந்ததா
மங்கையே உன்னால்

காவிரி ஓடம் தமிழ்க்கரையேற
ஒரு துடுப்பேனும் நீ போட்டாயா?
ஆடிப்பெருக்கில் தீபம் ஏற்றினால்
அதுபோதுமென்று இருந்துவிட்டாயே

விலை ஏற்றமில்லாத எரிவாயுக்காக
எப்போதாவது போராடினாயா
எப்படிக் கிடைக்கும் ஏற்றம் உனக்கு?

போதையில் இளைஞர் களிக்கின்றார்களே
வேதனை கொள்வது மட்டுமா தீர்வு?
வீதியில் இறங்கிப் போராட வேண்டாமா?

அடுத்த தலைமுறை அணுஉலைக் கசிவிலா
அநியாயமில்லை? ஆராய்ந்தாயா?
எரியில் மூழ்கிய இருநாடு பற்றி
ஏட்டில் படித்தது நினைவில் இல்லையா

ஒத்தி வைப்பில்லாப் பாராளுமன்றம்
ஓர்நாள் நடந்ததாய்ச் சரித்திரம் இல்லை
ஒதுங்கிப் போவதற்கா ஓட்டுப் போட்டாய்

தீட்டுப் பற்றி பேசுகின்றாயே
தீண்டாமைத் தீயில் கருகிய முகங்கள்
எத்தனை எத்தனை கணக்கெடுத்தாயா?

அடுப்பை மாற்றுவது
நாள் கோள் பார்த்து உடுப்பை மாற்றுவது
அதிஷ்டக் கல் மாட்டுவது (கணையாழியில்)
வாஸ்து பார்த்து பல்வரிசை மாற்றுவது
எல்லாவற்றையும் மாற்றிவிடு

தொப்புள் கொடியை தேசியக் கொடியாக்கு
திருப்பூர் குமரர்களைத் தேகத்தில் தேக்கு

உழைப்பைச் சாவியாய் இடுப்பில் மாட்டு
கருப்பைச் சுமையென்றால் கழற்றி விடு
உறுப்புதானே

பிறப்பில் வேறுபாடு இல்லை.. வெற்றி பெறு!


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 09, 2015 10:30 pm

P.S.T.Rajan wrote:கவியரங்ஙை அதிரவைக்கும் ஆதிராவுக்கு வாழ்த்துகள்.............வளர்க புலமை......நன்று.......
மேற்கோள் செய்த பதிவு: 1124726
அன்பாக வாழ்த்தும் திரு ராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்



மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Tமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Hமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Iமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Rமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Empty
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Mar 10, 2015 2:42 pm

அற்புதமான கவிதை குவியல் தோழி...என்னை மறந்து நான் கவிதையில் ஒன்றிவிட்டேன்.....
என்ன ஒரு சிந்தனை தங்களுக்கு!!!!!!!!!!
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தோழி.தரணியெங்கும் தமிழ் பாடி தமிழுக்கு பெருமை தந்து கொண்டிருக்கும் தங்கள் சேவை மகத்தானது...
பெண்மையை பற்றி எவ்வளவு நுணுக்கமாய் கூறியுள்ளீர்கள்...வாழ்க!!!!!!!! வளர்க!!! உங்கள் தமிழ் தொண்டு!!!!!





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 10, 2015 8:53 pm

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Yh97yycdT5OsvczCg09x+ALJ_3225

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 XfBad0VvSOSsCcAwZXvQ+ALJ_3241(1)

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Co9rPbfSbmlxkHldTKoE+ALJ_3296(1)





மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Tமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Hமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Iமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Rமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Empty
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக