புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நிதிநிலை அறிக்கை 2015  Poll_c10 நிதிநிலை அறிக்கை 2015  Poll_m10 நிதிநிலை அறிக்கை 2015  Poll_c10 
10 Posts - 56%
heezulia
 நிதிநிலை அறிக்கை 2015  Poll_c10 நிதிநிலை அறிக்கை 2015  Poll_m10 நிதிநிலை அறிக்கை 2015  Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
 நிதிநிலை அறிக்கை 2015  Poll_c10 நிதிநிலை அறிக்கை 2015  Poll_m10 நிதிநிலை அறிக்கை 2015  Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
 நிதிநிலை அறிக்கை 2015  Poll_c10 நிதிநிலை அறிக்கை 2015  Poll_m10 நிதிநிலை அறிக்கை 2015  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நிதிநிலை அறிக்கை 2015  Poll_c10 நிதிநிலை அறிக்கை 2015  Poll_m10 நிதிநிலை அறிக்கை 2015  Poll_c10 
10 Posts - 56%
heezulia
 நிதிநிலை அறிக்கை 2015  Poll_c10 நிதிநிலை அறிக்கை 2015  Poll_m10 நிதிநிலை அறிக்கை 2015  Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
 நிதிநிலை அறிக்கை 2015  Poll_c10 நிதிநிலை அறிக்கை 2015  Poll_m10 நிதிநிலை அறிக்கை 2015  Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
 நிதிநிலை அறிக்கை 2015  Poll_c10 நிதிநிலை அறிக்கை 2015  Poll_m10 நிதிநிலை அறிக்கை 2015  Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிதிநிலை அறிக்கை 2015


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 5:09 am



நிதிநிலை அறிக்கையின் குறிக்கோள்கள் மூன்று. ஆளும் கட்சியின் கொள்கைகளுக்கும், வாக்குறுதிகளுக்கும், திட்டங்களுக்கும் செயல் வடிவம் கொடுப்பது; தேசத்தின் நிதி நிர்வாகத்தை சாதுர்யமாகக் கையாண்டு, பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தித் தனது சாதனைகளின் அடிப்படையில் அடுத்த தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு முயற்சிப்பது; அரசின் வரி வருவாயை உறுதிப்படுத்தி, நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்வது ஆகியவைதான் நிதியமைச்சரின் முனைப்பாக இருக்க முடியும். மேலே குறிப்பிட்ட மூன்று குறிக்கோள்களையும் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் முதலாவது முழுமையான நிதிநிலை அறிக்கை கணிசமாகவே நிறைவேற்ற முற்பட்டிருக்கிறது.

கடந்த முப்பதாண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் எல்லா நிதிநிலை அறிக்கைகளைவிடவும் தெளிவான, குழப்பமே இல்லாத, இலக்குகளை சரியாக அடையாளம் கண்டு அவற்றை எட்ட எத்தனித்திருக்கும் நிதிநிலை அறிக்கை இதுவாகத்தான் இருக்கும். இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு அறிவிப்பிலும் புத்திசாலித்தனமும் தெரிகிறது; நேர்மையும் பளிச்சிடுகிறது. ஒளிவுமறைவு இல்லாத தெளிவான அணுகுமுறையும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மாற்றம் இல்லாத பொருளாதார நிலைத்தன்மையும் இந்த நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்.

கருப்புப் பணம், இந்தியாவில் உற்பத்தி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, மத்திய தர வகுப்பினரின் நலன் ஆகியவை இந்த நிதிநிலை அறிக்கையின் அடிப்படை அம்சங்கள். சிறுதொழில் முனைவோர் நலன், நீர்ப்பாசன வசதியை அதிகரிப்பது, கட்டமைப்புப் பணிகளுக்கு முன்னுரிமை தருவது ஆகியவை இந்த நிதிநிலை அறிக்கை முன்னுரிமை அளித்திருக்கும் ஏனைய பிரச்னைகள். இந்த நிதிநிலை அறிக்கையின் இன்னொரு பாராட்டுக்குரிய அம்சம், அதன் தொலைநோக்குப் பார்வை.

தனது முதல் நிதிநிலை அறிக்கையிலேயே, வருமான வரிக் குறைப்பு, எல்லாத் தரப்பினருக்கும் சரமாரியாக சலுகைகள், தன்னை "ஏழைப் பங்காளன்' என்று காட்டிக் கொள்வதற்காக மானியங்களை அதிகரித்து நிதிப் பற்றாக்குறைக்கு வழிகோலும் அறிவிப்புகள் என்று எதையும் செய்யாமல் இருந்ததற்காகவே நிதியமைச்சர் அருண் ஜேட்லியை முதலில் பாராட்ட வேண்டும். இதற்கு அனுமதி அளித்த பிரதமரையும் பாராட்ட வேண்டும்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் தாங்கள் செய்ய இருக்கும் பொருளாதார மாற்றங்களுக்கான அடித்தளத்தை இந்த நிதிநிலை அறிக்கை மூலம் செய்ய முற்பட்டிருக்கிறார் அருண் ஜேட்லி. இந்த நிதிநிலை அறிக்கை வணிகக் கூட்டாண்மை (கார்ப்பரேட்) நிறுவனங்களுக்குச் சாதகமான ஒன்று என்று விமர்சிப்பவர்கள், ஏதாவது விமர்சிக்க வேண்டுமே என்பதற்காக விமர்சிக்கிறார்கள் அல்லது முழுமையான விவரம் தெரியாமல் விமர்சிக்கிறார்கள். மலருக்கு நோகாமல் தேனை உறிஞ்சும் வண்டைப் போல நிதியமைச்சர் அருண் ஜேட்லி செயல்பட்டிருக்கிறார் என்பது, நிதிநிலை அறிக்கையைக் கூர்ந்து படித்தவர்களுக்கும், நிதி நிர்வாகம் பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கும் மட்டும்தான் தெரியும்.

அருண் ஜேட்லியின் இந்த நிதிநிலை அறிக்கையின் மீது சாட்டப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு, இது வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு சாதகமான நிதிநிலை அறிக்கை என்பது. இந்தக் குற்றச்சாட்டை இடதுசாரிக் கட்சிகளோ, பல்வேறு மாநிலக் கட்சிகளோ சொன்னால்கூடப் பரவாயில்லை. நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு வாரி வழங்கிய, வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களின் வரியைப் பாதிக்குப் பாதியாகக் குறைத்து, உலகிலேயே மிகக் குறைவான வணிகக் கூட்டாண்மை நிறுவன வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றிய காங்கிரஸ் கட்சி கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

அது போகட்டும், நிதியமைச்சர் அருண் ஜேட்லி எப்படி வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களின் காதில் பூச் சுற்ற முற்பட்டிருக்கிறார் என்பதுதான் மிகவும் சுவாரஸ்யமான செயல்பாடு. புத்திசாலித்தனமான அணுகுமுறையும்கூட.

முதலாவது, செல்வ வளமை வரி (வெல்த் டாக்ஸ்) விதிப்பை அறவே அகற்றி இருக்கிறார். இதன்மூலம், ஆண்டொன்றுக்கு அரசுக்குக் கிடைத்து வந்த வரி வருவாய் ரூ.845 கோடி. அதே நேரத்தில், இந்த வரியை வசூலிப்பதற்காக ஒரு தனித் துறை, அலுவலர்கள், ஊழியர்கள், நிர்வாகச் செலவுகள் என்று ஆண்டொன்றுக்கு ரூ.500 கோடிக்கும் மேலே செலவாகி வந்தது. செல்வ வளமை வரி மூலம் அரசுக்கு கிடைத்த நிகர வரி வருவாய் ஆண்டுக்கு வெறும் ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி வரை மட்டும்தான்.

செல்வ வளமை வரியை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக பெரும் பணக்காரர்கள், அதாவது ரூ.1 கோடிக்கும் மேலே வருமானமுள்ளவர்கள் மீதான வரியில், வரித்தொகையில் 2% கூடுதல் வரியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அரசு எதிர்பார்க்கும் வரி வருவாய் எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.9,000 கோடி. ரூ.400 கோடியை இழப்பது போலவும், கூட்டாண்மை நிறுவனங்களுக்கு சலுகை போலவும் தோற்றத்தை ஒருபுறம் கொடுத்து, இன்னொருபுறம், எந்தவிதக் கூடுதல் நிர்வாகச் செலவுமே இல்லாமல், கோடீஸ்வரர்களிடமிருந்து நோகாமல் ரூ.9,000 கோடி வரி வருவாயை அதிகமாகப் பெற வழிவகை செய்திருப்பது புத்திசாலித்தனமா இல்லை கூட்டாண்மை நிறுவனங்களுக்குக் காட்டப்பட்டிருக்கும் சலுகையா?

இதே போன்றதுதான் கூட்டாண்மை நிலுவை வரியை 30%-இல் இருந்து 25% ஆகக் குறைத்திருப்பதும்.



 நிதிநிலை அறிக்கை 2015  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 5:10 am

வணிகக் கூட்டாண்மை நிறுவன வரி 30 விழுக்காடாக இருந்ததை நிதியமைச்சர் 25 விழுக்காடாகக் குறைத்து அவர்களுக்கு மிகப்பெரிய சலுகையை அளித்து விட்டிருக்கிறார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டும், நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் அறிவிப்புகளை முறையாகவும் முழுமையாகவும் படிக்காமல், ஏதாவது குற்றம் சாட்ட வேண்டுமே என்பதற்காக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.

கூட்டாண்மை நிறுவன வரி 30% என்று பெயர்தானே ஒழிய, எந்தவொரு நிறுவனமும் 30% வரியைச் செலுத்துவதில்லை. கூட்டாண்மை நிறுவனங்களுக்கு பல்வேறு விதமான வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கூட்டாண்மை நிறுவனங்கள் மட்டுமல்ல, உற்பத்தி தொடர்பான தொழில் நிறுவனங்கள் அனைத்துமே வரி விதிப்பில் பல சலுகைகளைப் பெறுகின்றன.

குறிப்பிட்ட சில பகுதிகளில் தொழிற்சாலை நிறுவுவது, குறிப்பிட்ட பொருளின் தயாரிப்பில் ஈடுபடுவது, ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிப்பில் ஈடுபடுவது போன்ற பல்வேறு காரணங்களுக்காக கூட்டாண்மை நிறுவனங்களுக்கு தொழில் தொடங்கிய ஐந்தாண்டுகளுக்கு மொத்த வரியில் குறிப்பிட்ட விழுக்காடு வரிச் சலுகையாக வழங்கப்படுகிறது. இதுபோன்ற வரிச் சலுகைக்கு பல காரணங்கள் கூட்டாண்மை நிறுவன வரிச் சட்டத்தில் தரப்பட்டிருக்கின்றன. அவற்றைக் காரணம் காட்டி ஒவ்வொரு நிறுவனமும் ஏதாவது ஒரு விதத்தில் மொத்த வரியில் சில விழுக்காடுகள் வரிச் சலுகை பெறுகின்றன.

அதன்படி 30% வரிச் சலுகை என்று சொன்னால், 30% மொத்த வருமான வரியில் வரிச் சலுகை 30% போக அந்த நிறுவனம் உண்மையில் செலுத்தும் வரி வெறும் 21% மட்டுமாகத்தான் இருக்கும். 20% வரிச் சலுகை என்று சொன்னால், மொத்த வரியில் 20% கழிக்கப்பட்டு, உண்மையில் அந்த நிறுவனம் அரசுக்குத் தரும் வரியானது 24% மட்டுமே.

நிறுவனங்கள் வரிச் சலுகை கோருவதும், அதை வருமான வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மறுப்பதும், கூட்டாண்மை நிறுவனங்கள் மேல் முறையீடு செய்வதும், இப்படி தாவாவில் நிலவும் மேல் முறையீடுகள் லட்சக்கணக்கில் தேங்கிக் கிடப்பதும், இதற்கு முன்னால் இருந்த அரசுகளோ, நிதியமைச்சர்களோ கவலையே படாமல் விட்டு விட்டவை. நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் கவனத்தை இந்தப் பிரச்னை எப்படிக் கவர்ந்தது என்பதே வியப்பாக இருக்கிறது.

ஒருபுறம் கூட்டாண்மை நிறுவனங்களின் லாபத்தின் மீதான வரி விதிப்பை 30% இருந்து 25%மாகக் குறைப்பதுபோலக் குறைத்திருக்கும் நிதியமைச்சர், வரிச் சலுகைகளை ஒட்டுமொத்தமாக மூட்டை கட்டி அகற்றி விட்டிருக்கிறார் என்பது யார் கண்ணிலும் படாமல் போவது ஏன்? ஏறத்தாழ ரூ.4 லட்சம் கோடிக்கான மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பது யாருக்காவது தெரியுமா?



 நிதிநிலை அறிக்கை 2015  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 5:11 am

வரிச் சலுகைகள் என்று இருந்தால் அதனால் வருமான வரித் துறைக்கும் வரி விதிக்கப்படுபவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு வருவதும், வரி விதிப்பை எதிர்த்து மேல் முறையீடுகள் குவிவதும் மட்டுமல்ல பிரச்னை. இந்த வரிச் சலுகைகளைப் பெறவும், அதைக் காரணம் காட்டி அதிகாரிகளின் மிரட்டலுக்குப் பயந்து பல கோடி ரூபாய் லஞ்சம் புழங்கவும் இடமிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாக கூட்டாண்மை நிறுவனங்களின் லாபத்தின் மீதான வரி 5% குறைக்கப்படும் வேளையில், வரிச் சலுகைகள் அகற்றப்படுவதால் அரசுக்கு வரி இழப்பு எதுவுமே ஏற்பட்டுவிடப் போவதில்லை. தேவையில்லாத மேல்முறையீடுகள் தவிர்க்கப்பட்டு, வருமான வரி அலுவலகங்கள் முறையாகச் செயல்படும் நிலைமையை ஏற்படுத்தும்.

கூட்டாண்மை நிறுவன வரி என்று சொன்னால், அது ஏதோ பன்னாட்டுப் பெரு நிறுவனங்களுக்கான வரி மட்டுமே என்று நினைத்துவிடக் கூடாது. சிறு தொழிற்சாலைகளும்கூட இந்தப் பட்டியலில் இடம் பெறுபவை என்பதை நாம் மறந்துவிடலாகாது. வரிச் சலுகைகள் அகற்றப்பட்டிருப்பதால் அதிகம் பாதிப்பை எதிர்கொள்ளப் போவது, பன்னாட்டுக் கூட்டாண்மை நிறுவனங்கள்தானே தவிர, குறைந்த அளவு வரிச் சலுகைகளைப் பெறும் சிறுதொழில் முனைவோர் அல்ல என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும், உற்பத்தி பெருக வேண்டும், ஏற்றுமதியில் அன்னியச் செலாவணி இருப்பு அதிகரிக்க வேண்டும், ஏற்றுமதி - இறக்குமதி விகிதம் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று சொன்னால், அதிக அளவில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டாக வேண்டும். வெட்டிப் பேச்சு பேசுவதால் தொழில் வளம் பெருகிவிடாது. அதற்கு அன்னிய முதலீட்டாளர்களும் தேவை, வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களும் தேவை.

அன்னிய முதலீடுகள் அதிகரிக்கவும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை நிறுவவும், உள்நாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள் உற்சாகமாக உற்பத்திக்கான முயற்சிகளில் ஈடுபடவும் பொருளாதாரக் கொள்கையில் உறுதியான நிலைப்பாடுகள் இருந்தாக வேண்டும். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான எங்களது அரசின் நிதிக் கொள்கையும், பொருளாதாரக் கொள்கையும் இவைதான் என்பதைத் தெளிவுபடுத்தும்போது மட்டுமே முதலீட்டாளர்கள் துணிந்து இறங்க எத்தனிப்பார்கள்.

முந்தைய மன்மோகன் சிங் அரசு போல கூட்டாண்மை நிறுவனங்களுக்கு பெரிய அளவில் சலுகைகளை வாரி வழங்காமலும், அதேநேரத்தில் அவர்களுக்கு நிலையான பொருளாதாரக் கொள்கையையும், அணுகுமுறையையும் தெளிவுபடுத்தி உற்சாகப்படுத்தவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் முடிந்திருக்கிறது என்பதுதான் இந்த நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சம்!



 நிதிநிலை அறிக்கை 2015  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 5:11 am

ஆண்டுதோறும் நிதியமைச்சரால் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், ஒரு சில நிதிநிலை அறிக்கைகள் மட்டும் சில முக்கிய அறிவிப்புகளுக்காகத் தனித்துவமும் முக்கியத்துவமும் பெற்று விடுகின்றன. மொரார்ஜி தேசாயின் 1968-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்திற்காகவும், 1987, 1997 நிதிநிலை அறிக்கைகள் கருப்புப் பணப் பதுக்கலுக்குப் பொது மன்னிப்பு அறிவித்ததற்காகவும், 1991 நிதிநிலை அறிக்கை பொருளாதார சீர்திருத்த அறிவிப்புக்காகவும் நினைவுகூரப் படுகின்றன. அந்த வரிசையில் அருண் ஜேட்லியின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அறியப்படப் போவது வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்படும் கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைக்காகத்தான் இருக்கும்.

கருப்புப் பணத்தை மீட்டெடுத்துக் கொண்டு வருவதிலும், வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கப்படுவதைத் தடுப்பதிலும் அரசு முனைப்பாகவே இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது இந்த நிதிநிலை அறிக்கை. இதற்கு முந்தைய மன்மோகன் சிங் அரசும் 2009 மக்களவைத் தேர்தலின்போது, பதவிக்கு வந்த நூறு நாள்களில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதற்கான முனைப்பு எதையுமே காட்டாமல் இருந்தது என்பது மட்டுமல்ல, அன்னிய நாடுகளின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்று காரணமும் கூறியது.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தைத் திரும்பப் பெறுவது என்பது எளிதானதல்லதான். ஆனால் அதற்கான முயற்சிகளில்கூட ஈடுபடாமல் இருந்தால் எப்படி? நரேந்திர மோடி அரசும் மன்மோகன் சிங் அரசைப் போலவே கருப்புப் பண விவகாரத்தில் பின்வாங்குகிறதோ என்கிற சந்தேகத்தை இந்த நிதிநிலை அறிக்கை உடைத்து எறிந்திருக்கிறது.

வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்தால் பத்தாண்டு கடுங்காவல் சிறை. பிணையில் வெளியில் வர முடியாது. பொருளாதாரக் குற்றத்திற்காக இந்த அளவுக்குக் கடுமையான சட்டம் கடந்த 67 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டதில்லை. அதுமட்டுமல்ல, வெளிநாடுகளில் சொத்து, சேமிப்பு என்று வைத்திருப்பவற்றைத் தங்களது வருமான வரி தாக்கலில் தெரிவிக்காமல் மறைத்தால் அதற்கு ஏழு ஆண்டுகள் தண்டனை என்று அந்தச் சட்டம் மேலும் கடுமையான விதிகளை ஏற்படுத்த இருக்கிறது.

ஏற்கெனவே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்க முடிகிறதோ இல்லையோ, இதுபோன்ற கடுமையான சட்டத்தின் விளைவாக இனிமேல் வெளிநாடுகளில் பதுக்கும் போக்கு நிச்சயமாகக் கட்டுப்படுத்தப்படும். வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்குபவர்கள் அரசியல் தொடர்புடையவர்கள், திரைப்படம் மற்றும் விளையாட்டுத் துறையினர், பெரும் தொழிலதிபர்கள் ஆகியோராகத்தான் இருக்க முடியும். அவர்களுக்கு எதிராக, அவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக ஓர் அரசு சட்டம் இயற்றுகிறது என்றால், அந்த ஆட்சியின் நேர்மையையும், கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற முனைப்பையும் பாராட்டாமல் இருக்க முடியாது.



 நிதிநிலை அறிக்கை 2015  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 5:12 am



இனிவரும் காலங்களில் வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கல் செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது என்பது சரி. ஆனால், ஏற்கெனவே பதுக்கப்பட்டிருக்கும் பணத்தை மீட்டெடுப்பது எப்படி? மொரீஷஸ், சீஷெல்ஸ் போன்ற நாடுகளுடன் நாம் நிதி முறைகேடுகள் தொடர்பாக ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளாத நிலையில் அங்கிருந்து பணத்தை எப்படிப் பெறுவது? யார் மீது வழக்குத் தொடர்வது? எப்படித் தண்டிப்பது?

அப்படியே கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டாலும், சர்வதேச நீதிமன்றத்திலா நாம் வழக்குத் தொடர முடியும்? அவர்கள் வலிய வந்து கருப்புப் பணத்திற்கு வரி செலுத்த முற்பட்டால், 300% அபராதம் என்று கூறுகிறார் நிதியமைச்சர். அதாவது பதுக்கி வைத்திருக்கும் மொத்தப் பணத்தையும் அரசுக்குச் செலுத்தி விட வேண்டும் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கிறார். இது சாத்தியமானதுதானா? யாராவது இதற்கு சம்மதிப்பார்களா?

பொது மன்னிப்பு வழங்குவது என்பது தவறான முன்னுதாரணம்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை அவர்கள் தானாகவே முன்வந்து, கணக்குக் காட்டி இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால், அரசு பொது மன்னிப்புத் திட்டம் ஒன்றை வெளியிட்டாக வேண்டும். ஆறு மாதத்திற்குள் கணக்குக் காட்டி கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தால் தண்டனையிலிருந்து தப்பலாம் என்கிற ஆசையைக் காட்டி வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை திரும்பிப் பெறுவதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

சர்வதேச நிறுவனங்களின் கருத்துப்படி, உலகிலேயே வெளிநாடுகளில் மிக அதிகமாகக் கருப்புப் பணமும், முறைகேடான சொத்துகளும் பதுக்கி வைத்திருப்பவர்கள் இந்தியர்கள்தான். ஏறத்தாழ 6 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் பாதிக்குப் பாதி வரியாகவோ அபராதமாகவோ விதித்தாலும், குறைந்தது 3 லட்சம் கோடி ரூபாய் இந்திய அரசுக்கு கிடைக்கும், மீதி 3 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவுக்கு திரும்பும்.

கருப்புப் பணத்திற்கு எதிராக நேர்மையுடன் ஓர் அரசு துணிந்து நடவடிக்கை எடுக்க முற்பட்டிருக்கிறது. துணிவுடன் சற்று சாதுர்யமும், புத்திசாலித்தனமும் சேர்ந்தால் மட்டுமே நரேந்திர மோடி அரசின் நோக்கம் நிறைவேறும் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.



 நிதிநிலை அறிக்கை 2015  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 5:12 am

கருப்புப் பணத்திற்கு எதிரான நிதியமைச்சரின் நடவடிக்கைக்கு எள்ளளவும் குறையாத முக்கியத்துவம் பெறும் நிதிநிலை அறிக்கையின் இன்னொரு அறிவிப்பு "முத்ரா' திட்டம். இந்தத் திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ அந்த அளவுக்கு நரேந்திர மோடி அரசின் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதுதான் இதன் முக்கிய அம்சம்.

கடந்த கால் நூற்றாண்டு காலமாகப் பெரிய தொழில் நிறுவனங்களும், பன்னாட்டுக் கூட்டாண்மை நிறுவனங்களும், நகைக் கடை, துணிக் கடை, உணவு விடுதிகள் உள்ளிட்ட வியாபார நிறுவனங்களும் ஏறத்தாழ 54 லட்சம் கோடி ரூபாய் வரை வெளிநாட்டு, உள்நாட்டு மூலதனத்தையும், கடனையும் பெற்றிருக்கின்றன. ஆனால், இவற்றால் உருவாக்கப்பட்டிருக்கும் வேலைவாய்ப்புகள் சில லட்சங்கள் மட்டுமே. ஒரு கோடியைக்கூட தொடவில்லை என்பதுதான் நிஜ நிலைமை.

நரசிம்ம ராவ் அரசில் தொடங்கி மன்மோகன் சிங் அரசு வரை, தொழில்வளம் பெருக வேண்டும், அதன்மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்று கூறிவந்தார்களே தவிர, அவர்கள் கவனிக்காமல் விட்டுவிட்ட துறை, எந்தவித ஆதரவும் இல்லாமல் இந்தியா முழுவதும் இயங்கி வரும் சிறு தொழில்கள். தள்ளுவண்டிக் கடை, இஸ்திரி வண்டி, பெட்டிக் கடை, திண்ணையில் நடத்தப்படும் பலசரக்கு, காய்கறிக் கடை, செருப்பு தைப்பது, எலக்ட்ரீஷியன், பிளம்பர் வேலைகள், சைக்கிள் கடை, மோட்டார் மெக்கானிக்குகள், தெருவோர தேநீர்க் கடை, இளநீர் விற்பவர்கள் என்று இந்தியா முழுவதும் சிறிய அளவில் சுயதொழில் செய்து பிழைப்பு நடத்துபவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 6 கோடிக்கும் அதிகம். ஏறத்தாழ 13 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பாகவும், வாழ்வாதாரமாகவும் இந்தச் சுயதொழில்கள் அமைந்திருக்கின்றன.

இந்தத் துறையைப் பற்றி முந்தைய அரசுகள் கவலைப்படாததற்குக் காரணம், அவர்களது மேற்கத்திய சிந்தனையும், உலக வங்கி சர்வதேச நிதி ஆணையத்தின் வழிகாட்டுதலும்தான். வளர்ச்சி அடைந்த நாடுகளில் இதுபோன்ற தெருவோர வியாபாரங்கள், கடைகள் போன்றவை சட்ட விரோதமானவை. எல்லாமே முறையாகப் பதிவு செய்து, முறைப்படி உரிமம் பெற்றுதான் நடத்த முடியுமே தவிர, இந்தியாவில் இருப்பதுபோல திண்ணையில் பெட்டிக் கடையோ அல்லது சைக்கிள் பழுது நீக்கும் கடையோ நடத்திவிட முடியாது. இங்கே அப்படியல்ல.

இந்தத் துறையில் ஈடுபட்டிருப்பவர்களில் பலர் பத்தாம் வகுப்புக்கூட படிக்காதவர்கள். ஏன் எழுதப்படிக்கத் தெரியாதவர்களும் பலர். அவர்கள் வங்கிகளில் சென்று வெறும் ஐயாயிரம் அல்லது பத்தாயிரம் ரூபாய் கடன் பெறுவதுகூட சாத்தியமல்ல. வங்கி மேலாளருக்கும் இதுபோன்ற சிறு கடன்களைக் கொடுத்து அதனை நிர்வாகம் செய்வதில் ஈடுபாடு இருப்பது இல்லை. இந்தத் துறையைச் சேர்ந்த சிறு சிறு சுயதொழில் முனைவோரின் வருமானத்தின் பெரும் பகுதி கந்து வட்டிக்காரர்களின் பையை நிரப்புகிறதே தவிர, அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஏறத்தாழ 13 கோடிப் பேர் ஈடுபட்டிருக்கும் இந்தத் துறை வங்கிகளிடமிருந்து பெறும் கடனுதவி வெறும் 4 விழுக்காடு மட்டுமே.

காலையில் தொண்ணூறு ரூபாய் பெற்று வியாபாரம் செய்து மாலையில் நூறு ரூபாயாகத் திருப்பிக் கொடுக்கும் முறைதான் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் அன்றாட சுயதொழில் முனைவோரை ஆதரிக்கும் கடனுதவி. வட்டி விழுக்காட்டைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றும். ஒன்பதே நாளில் போட்ட முதலை இரட்டிப்பாக்கும் வட்டித் தொழில் இது. வட்டிக் கணக்கைப் பார்த்தால் 4,055 விழுக்காடு வட்டி கணக்காகும்.



 நிதிநிலை அறிக்கை 2015  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 5:13 am

"முத்ரா' என்கிற சிறுதொழில் வளர்ச்சி மறு நிதி அமைப்பு, நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மரபுசாராத் துறைக்கு கடனுதவி வழங்கும் திட்டத்திற்கு வைப்பு நிதியாக ரூ.20,000 கோடியும், வங்கிகள் வழங்கும் கடன் தொகைக்கு உத்தரவாதமாக நிதிநிலை அறிக்கையில் ரூ.3,000 கோடியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறு சுயதொழில் முனைவோருக்கு பதிவு செய்யப்பட்ட தனியார் நிதி நிறுவனங்களின் மூலம் நியாயமான வட்டிக்குக் கடன் வழங்குதல் என்பதுதான் "முத்ரா' திட்டத்தின் நோக்கம்.

தனியார் நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் சாதாரண வட்டியைவிடக் குறைந்த வட்டியில் கடன் வழங்கும். அவர்கள் நியாயமான வட்டிக்கு சிறிய, நடுத்தர சுயதொழில் முனைவோருக்கும், கடைகளுக்கும் கடன் வழங்குவார்கள். பணத்தை வசூலித்துத் திருப்பிக் கட்ட வேண்டியது தனியார் நிதி நிறுவனங்களின் பொறுப்பு. அவர்கள் கொடுத்திருக்கும் கடனைப் பொருத்து வங்கிகள் அவர்களுக்கு மேலும் கடன் வழங்கும்.

கூட்டுறவு வங்கிகள், ஏன் "சிட்பி வங்கி', "ஐ.டி.பி.ஐ.' போன்ற வங்கிகள் முன்பு செய்ததைப் போன்ற திட்டம்தான் இதுவும் என்றாலும் இதில் வித்தியாசம் இருக்கிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களைப்போல, இந்த நிதியுதவி முறையினால் கந்து வட்டிக்காரர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்பதும், சிறு சிறு வியாபாரிகள் தங்கள் லாபத்தை வட்டியாக இழக்காமல் பயனடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகளிர் மேம்பாட்டுக்கு உதவும் இந்தத் திட்டத்தில், அவர்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதை நிதியமைச்சர் ஏன் உறுதிப்படுத்தவில்லை?

இந்தத் திட்டத்தால் சிறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய இந்தத் திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதில்தான் அதன் வெற்றி அமைந்திருக்கிறது என்பது என்னவோ உண்மை.



 நிதிநிலை அறிக்கை 2015  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 5:13 am

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போதெல்லாம், மத்திய தர, மாத வருமானம் பெறுபவர்களின் முதல் எதிர்பார்ப்பு, வருமான வரியில் என்னென்ன சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன, வருமான வரி வரம்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறதா, வரி குறைக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான். அருண் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கையில் வருமான வரி வரம்பும் அதிகரிக்கப்படவில்லை, வரிக் குறைப்பும் இல்லை என்பதே மிகப்பெரிய ஏமாற்றமாக ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஆனால், இந்த எதிர்பார்ப்பு நியாயமற்றது. குற்றச்சாட்டும் அர்த்தமில்லாதது.

ஆட்சிக்கு வந்த அடுத்த சில மாதங்களிலேயே நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வருமானவரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுவிட்ட நிலையில், முழுமையான இந்த நிதிநிலை அறிக்கையிலும் வருமான வரி விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. கைதட்டல் பெறுவதற்காக வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்தாததற்காகவே அருண் ஜேட்லி பாராட்டப்பட வேண்டும்.

அதே நேரத்தில், மாத ஊதியதாரர்களுக்கும், மத்திய தர வகுப்பினருக்கும் அவர் சலுகைகள் அளிக்காமல் இருந்தாரா என்றால் அதுவும் இல்லை. மாதம் எண்ணூறு ரூபாயாக மட்டுமே இருந்த போக்குவரத்துச் செலவுக்கான கழிவை இரட்டிப்பாக்கி இருப்பது, மத்திய தர வகுப்பினரின் நியாயமான செலவை உணர்ந்திருப்பதன் வெளிப்பாடு. இதே கரிசனம், வீட்டு வாடகை விஷயத்திலும் இருந்திருக்கலாம். இன்னமும் வாடகைக்கான கழிவு மாதத்திற்கு வெறும் ரூ.2,000 அனுமதிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. கிராமத்தில்கூட, அந்த வாடகைக்கு வீடு கிடைக்காது என்பதை யாராவது அவரிடம் சொன்னால் நல்லது.

நேரிடையாக வரி வரம்பைக் குறைக்கவில்லையே தவிர, சமூகப் பாதுகாப்பு தொடர்பாகப் பல சலுகைகளையும், கழிவுகளையும் நிதியமைச்சர் அனுமதித்திருப்பது பாராட்டுக்குரியது. மருத்துவக் காப்பீட்டுக்கான கட்டணத் தொகையைத் தனி நபருக்கு ரூ.15,000-த்திலிருந்து ரூ.25,000-மாக உயர்த்தி இருப்பதும், மூத்த குடிமக்களுக்கு ரூ.20,000-த்திலிருந்து ரூ.30,000-மாக உயர்த்தி இருப்பதும், 80 வயதுக்கு அதிகமானவர்களை முதிர்ந்த குடிமக்கள் என்று வகைப்படுத்தி, அவர்களது மருத்துவக் காப்பீட்டுக்கு சிறப்புச் சலுகை அளித்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்புகள். மூத்த குடிமக்களின் நலனுக்கு வருமான வரிச் சட்டத்தின் மூலம் மருத்துவ வசதிகளையும், ஏனைய நன்மைகளையும் செய்ய முற்பட்டிருப்பது புதிய அணுகுமுறை.

ரூ.4,44,200 வரை சம்பாதிக்கும் தனிநபர் முறையாகத் திட்டமிட்டால் வருமான வரியே கட்டாமல் இருக்க முடியும் என்கிற வழிவகை இந்த நிதிநிலை அறிக்கையில் காணப்படுகிறது. ஆண்டொன்றுக்கு வெறும் ரூ.12 கொடுத்து ரூ.2 லட்சம் விபத்து மரண இழப்பீடு, ஆண்டொன்றுக்கு ரூ.330 அளித்து ரூ.2 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடு, புதிய ஓய்வூதியத் திட்டம் என்று பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்க அறிவிப்புகள்.

வருமான வரி விஷயத்திலும், நரேந்திர மோடி அரசு தொலைநோக்குத் திட்டத்துடன் பிரச்னையை அணுக முற்பட்டிருக்கிறது. இப்போது தரப்பட்டிருக்கும் வரம்புகளையும், சலுகைகளையும் அப்படியே வைத்துக் கொண்டு, வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் அரசின் நோக்கம் எனத் தெரிகிறது. பல்வேறு சமூகப் பாதுகாப்பு அம்சங்களை வருமான வரியுடன் இணைப்பதன் மூலம், அந்த சலுகைகளைப் பெறுவதற்காகவாவது, வரி செலுத்தாமல் தவிர்ப்பவர்கள் வருமான வரி வளையத்துக்குள் வரக்கூடும் என்பது நிதியமைச்சரின் எதிர்பார்ப்பாக இருக்கக் கூடும்.

உலகின் பத்தாவது பெரிய பொருளாதார நாடு, உலக வல்லரசாக அடுத்த 20 ஆண்டுகளில் வளரக்கூடிய வாய்ப்புள்ள நாடு என்பவை இந்தியா பற்றி சர்வதேச பொருளாதார நிபுணர்களின் கணிப்பு. ஆனாலும்கூட, இந்தியா வறுமையான தேசமாகவும், 8 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் வீடு வாசலே இல்லாமல் தெருவோர வாசிகளாக இருக்கும் தேசமாகவும் தொடர்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. அதைவிடக் கசப்பான உண்மை, எந்தவித வருமான வரிக் கணக்கும் இல்லாமல், பெரும் பணம் சம்பாதிப்பவர்கள் அதிகம் உள்ள நாடும் இதுதான்.

இந்தியாவின் மக்கள் தொகை ஏறத்தாழ 120 கோடி. ஆனால், இதில் வெறும் 4% பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். மொத்த வரி வசூல் விழுக்காடு என்று எடுத்துக் கொண்டால், "பிரிக்ஸ்', "ஜி-20' நாடுகளில் இந்தியா கடைசி இடத்தில் இருக்கிறது. வரி விதிப்பு வலையில் இந்தியாவில் 25% பேர்களையாவது கொண்டு வருவது என்பதுதான் நிதியமைச்சர் வெளியில் தெரிவிக்காத இலக்காக இருக்கக்கூடும். அந்த நோக்கத்தை அவர் தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கை சொல்லாமல் சொல்கிறது.

நடுத்தர வகுப்பினருக்குக் கல்வி, மருத்துவம், காப்பீடு ஆகியவற்றிற்கான செலவினங்களுக்காக வருமான வரியில் வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய் வரைதான் அதிகபட்ச விலக்கு அளிக்கப்படுகிறது. இன்றைய சூழலில் கல்விக்கு மட்டுமே நகர்ப்புற மக்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவழிக்கும் நிலைமை. காப்பீட்டுக்கான தவணைத் தொகை, மருத்துவச் செலவு, வீட்டுக்கடன் என்று கூட்டிப் பார்த்தால் ஒன்றரை லட்சம் என்பது மிக மிகக் குறைவான சலுகை. குறைந்தபட்சம் கல்விக்கு மட்டும் என்று பிரித்துத் தனியாக ஒரு லட்சம் ரூபாய் கழிவை அளிப்பது பற்றி நிதியமைச்சர் சிந்தித்திருக்கலாம். ஏனோ செய்யவில்லை.



 நிதிநிலை அறிக்கை 2015  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 5:14 am

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கை பற்றிய மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்த நிதிநிலை அறிக்கையின் நல்ல அம்சங்கள் விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், இதில் இருக்கும் சில நிஜமான குறைகள் பற்றி யாரும் பேசுவதே இல்லை.

14-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, மத்திய அரசின் நிதி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு முன்பிருந்த 32% இப்போது 42% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்குவதால், மத்திய அரசின் பல திட்டங்களை அரசு நிறுத்தவும் முற்பட்டிருக்கிறது. எட்டு மத்திய அரசுத் திட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. 24 திட்டங்களுக்கு இனிமேல் மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும். நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், மதிய உணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம் உள்பட 31 திட்டங்கள் மட்டுமே இனி மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும்.

இதன் விளைவாக, பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு ரூ.13,000 கோடி குறைக்கப்பட்டு விட்டது. தாய் - சேய் நலம், குடிநீர் வடிகால் ஆகியவற்றிற்கான மத்திய ஒதுக்கீடு 50% குறைந்து விட்டிருக்கிறது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு ரூ.3,401 கோடியிலிருந்து வெறும் ரூ.95 கோடியாகக் குறைக்கப்பட்டுவிட்டது. மாநில அரசுகளின் பொறுப்பில் இந்தத் திட்டங்கள் இயங்கும் என்பது கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும்தான். ஆனால், மாநிலங்கள் கவனத்துடன் செயல்படா விட்டால், சில மாநிலங்கள் மிகவும் பின்தங்கி விடுமே. அதுபற்றி மத்திய அரசு கவலைப்பட வேண்டாமா?

கல்விதான் எங்கள் அரசின் முதல் கவனம் என்று கூறும் நிதியமைச்சர் அதற்கான மொத்த ஒதுக்கீட்டில் 2% குறைத்துவிட்டிருக்கிறாரே, அது ஏன்? 2014-15க்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது, பள்ளி, உயர் கல்விக்கான ஒதுக்கீடு 16.54% குறைவு. கல்வியைப் போலவே, நிதிநிலை அறிக்கையில் இன்னொரு பளிச்சிடும் குறை, பாதுகாப்புத் தொடர்பானது. இந்தியாவில் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க வேண்டும், ராணுவம் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் அறிக்கை குறிப்பிடுகிறதே தவிர, ஒதுக்கீடு அதற்கேற்றாற்போல இல்லையே, ஏன்? கடந்த நிதியாண்டுடன் (1.78%) ஒப்பிடும்போது இந்த ஆண்டு (1.24%) மொத்த உள்நாட்டு உற்பத்திப் புள்ளியில் ராணுவத்தின் பங்கு குறைந்து விட்டிருக்கிறது.

ராணுவத்திற்கான மொத்த ஒதுக்கீடான ரூ.2.46 லட்சம் கோடியில், சம்பளம், அன்றாடச் செலவுகள் என நிர்வாகச் செலவினத்திற்கு ரூ.1.52 லட்சம் கோடி போய்விடுகிறது. வெறும் ரூ.94,588 கோடியில் ராணுவத்தை நவீனப்படுத்துவது எப்படி?

விவசாயம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு வகிக்கிறது என்றும் நமது மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் விவசாயம் சார்ந்தவர்கள் என்றும் நிதியமைச்சர் தனது உரையில் கூறியிருக்கிறார். ஆனால், விவசாயத்திற்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட வெறும் 1.1% தான் அதிகரித்திருக்கிறது. 2013 - 14-இல் ரூ.17,788 கோடியாக இருந்த விவசாயத்திற்கான ஒதுக்கீடு, இந்த நிதிநிலை அறிக்கையில் 35% குறைந்து ரூ.11,657 கோடியாகி இருக்கிறது. விவசாயக் கடனுக்கான நிதி ரூ.50,000 கோடி அதிகரிக்கப்பட்டு ரூ.8.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதும், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக ரூ.5,300 கோடி ஒதுக்கி இருப்பதும் ஆறுதலான விஷயங்கள்.

தொழில்வளம் பெருக வேண்டும். அதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்று முனைப்புக் காட்டுவதில் தவறில்லை. ஆனால், இந்தியாவில் மிக அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பாகவும், வாழ்வாதாரமாகவும் இருக்கும் விவசாயம் பலப்படுத்தப்படுவதுதான் நமக்கு வலு சேர்க்கும். பண்டித நேருவின் கூட்டுறவு விவசாயத் திட்டம் அப்போது தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், இப்போது நடைமுறைப்படுத்த வேண்டிய அத்தியாவசியத் திட்டம் அது. அதன் மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்கி, இந்தியாவை உணவு ஏற்றுமதி நாடாக மாற்றுவதன் மூலம் மட்டுமே விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாறுவதைத் தடுக்க முடியும்.

ராணுவம், உணவு, கல்வி ஆகிய மூன்று முக்கியமான அம்சங்களில், நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கை போதிய கவனமும், முக்கியத்துவமும் அளிக்கவில்லை என்பதல்லவா அவர் மீது வைக்கப்பட்டிருக்க வேண்டிய குற்றச்சாட்டு. நிஜமான குறைபாடுகளை விட்டுவிட்டு இல்லாத குறைகளை பெரிது படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நிதியமைச்சரின் மிக முக்கியமான கடமை இரண்டு. முதலாவது, புத்தசாலித்தனமாக, மக்களைப் பாதிக்காத வகையிலும், விலைவாசி அதிகரிக்காத வகையிலும் வரி விதித்து அரசின் வருவாயை அதிகரிப்பது. அதன்மூலம் புதிய திட்டங்களைத் தீட்டி வளர்ச்சிக்கு வழிகோலுவது. இரண்டாவது நிர்வாகச் செலவினங்களைக் கட்டுப்படுத்தி பற்றாக்குறை இல்லாத நிலைமைக்கு வழிகோலுவது. இந்த இரண்டு விஷயங்களையும் அருண் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றவில்லை.

2015-16 நிதிநிலை அறிக்கையின்படி, அரசு எதிர்கொள்ளும் மொத்த வருவாய் ரூ.16,71,223 கோடி. மொத்தச் செலவு ரூ.17,77,477 கோடி. பற்றாக்குறை ரூ.1,06,254 கோடி. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று பற்றாக்குறையை ஈடுகட்டுவது என்பது மளிகைக் கடை பாக்கிக்காக குடியிருக்கும் வீட்டை விற்பதற்குச் சமம்.

சுதந்திரம் அடைந்து முதல் அரை நூற்றாண்டுக் காலம் இந்தியா வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. பற்றாக்குறை இருந்ததனால் தவறில்லை. இன்னுமா அப்படி? 64 ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்போதுதான் பற்றாக்குறை இல்லாத நிதிநிலை அறிக்கை தயாரிக்கப் போகிறோமோ தெரியவில்லை!

தினமணி!




 நிதிநிலை அறிக்கை 2015  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக