புதிய பதிவுகள்
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
51 Posts - 45%
heezulia
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
3 Posts - 3%
Manimegala
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
2 Posts - 2%
prajai
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
417 Posts - 49%
heezulia
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
28 Posts - 3%
prajai
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10யூதிகா பரமேஸ்வரன்! Poll_m10யூதிகா பரமேஸ்வரன்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூதிகா பரமேஸ்வரன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 10, 2015 12:13 pm

எம்பெருமான் ஈசனுக்கு எத்தனை எத்தனையோ
திருப்பெயர்கள் உண்டு. ஆனால் வித்தியாசமான,
"யூதிகா பரமேஸ்வரன்' என்ற பெயரோடு அவர்
அருளும் தலம் ஒன்று நாகை மாவட்டத்தில்
உள்ளது.
-
யூதிகா பரமேஸ்வரருக்கு "முல்லைவன நாதர்'
என்றும் ஒரு பெயர் உண்டு. அப்பெயர் வந்ததற்கான
புராண வரலாறு, மன்னன் முதலாம் கிளிவளவனுடன்
தொடர்புடையது.
-
ஒருசமயம் மன்னன் தன் பரிவாரங்களுடன்
வேட்டைக்குச் செல்கையில் வனத்தில் ஓரிடத்தில்
அரசரது குதிரையின் கால்கள் முல்லைக்கொடிகளில்
சுற்றிக் கொள்ளவே, தன் வாளால் அந்தக்
கொடிகளை வெட்டினான்.
-
முல்லைக்கொடி வெட்டுப்பட்ட கணத்தில்
அங்கிருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது. அதிர்ந்து
போனான் மன்னன். உள்ளே தவம் செய்த முனிவர்
யாரையோ அறியாமல் வெட்டி விட்டோம் என
நினைத்து பயந்து நடுங்கியபடி, கொடிகளை
அகற்றிப் பார்த்தார்.
-
அங்கே சிவலிங்கம் ஒன்றிலிருந்து குருதி வழிந்தபடி
இருக்க, ஈசனையே வெட்டி விட்டோமே என்ற
வேதனை தாளாமல் தனது தலையை வாளால் வெட்ட
முனைந்தான்.
-
உடனே தன நாயகியுடன் அங்கு தோன்றி,
மன்னனை மன்னித்து ஆசியளித்தார்.
-
முல்லைவனத்தில் தோன்றியதால் இறைவன்,
முல்லைவனநாதர். அவருடன் அணியாகவந்ததால்
அம்பிகை அணிகொண்ட கோதை நாயகி
திருமுல்லைவாசல், தென் திருமுல்லைவாசல் எனவும்
இத்தலம் அழைக்கப்படுகிறது.
-
அரசன் வாளால் வெட்டுண்ட தழும்பு இன்றும்
முல்லைவனநாதரின் லிங்கத்திருமேனியில் காணப்ப
டுவதாகச் சொல்கிறார்கள். இத்தழும்பு இருந்தாலும்
இவரை வழிபடுவதில் எந்தக் குற்றமும் இல்லை
என்பதால், மாசிலா மணீஸ்வரர் என்றும்,
வடமொழியில் யூதிகா (குற்றமற்ற) பரமேஸ்வரர்
எனவும் அழைக்கப்படுகிறார் இத்தலத்து இறைவன்.
-
ஒருசமயம் கிள்ளிவளவனுக்கு உடல் முழுவதும்
கொப்புளங்கள் ஏற்பட்டு வெப்பநோயால் பெரும் அவதிப்
பட்டான். அந்த நோய் மருந்தால் தீராததால், இறைவனை
வேண்டி யாகம் ஒன்றைச் செய்தனர்.

அப்போது அங்கே வந்த அகத்திய மாமுனிவர், முதலில்
கடலிலும் அதன்பின், முல்லைவனநாதர் ஆலய
தீர்த்தங்களுள் ஒன்றான சந்திர புஷ்கரணியிலும்
நீராடும்படி சொல்ல, அவ்வாறே செய்து நோய் நீங்கப்
பெற்றான் மன்னன்.

அவன் இத்தலத்தில் நீராட வந்தபோதுதான், வழியில்
முல்லைவன நாதர் வெளிப்பட்டதாகவும் சொல்வதுண்டு.

வாமதேவன் எனும் முனிவன் தனது தந்தையின்
அஸ்தியை புணணிய தீர்த்தங்கள் பலவற்றிலும் இட்டார்.
அப்படி இத்தலத்து புண்ணிய தீர்த்தத்திலும் போட்டபோது,
அது ரத்தினக்கல்லாக மாறியதாம்.

அதே சமயத்தில் வானில் இருந்து பிரம்மா என்று ஓர்
ஒலி முழங்க, அதுமுதல் இந்த தீர்த்தம் பிரம்மதீர்த்தம்
என அழைக்கப்படுகிறது. ஆடி அமாவாசை நாளில்
இந்தத் தீர்த்தக்கரையில் பித்ரு தர்ப்பணம் செய்தால்
முன்னோரின் ஆசியோடு, சகல நலன்களையும் பெறலாம்
என்பது ஐதிகம்.

இந்த தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம் மற்றும் சந்திர
தீர்த்தம் ஆகியவற்றிற்கு இணையாக தேவலருகில்கூட
எந்தத் தீர்த்தமும் இல்லை என்கிறார்கள் சித்தர்கள்.

சந்திரன், பெண்ணால் சாபம் பெற்று இந்த இரு
தீர்த்தங்களிலும் நீராடி சாபவிமோசனம் பெற்றதாகவும்
ஒரு புராண சம்பவம் உண்டு.

இத்தலம் வந்து ஈசனையும் அணி கொண்ட கோதை
நாயகியையும் வழிபட்டால், வாழ்க்கையில் பதவி,
மேன்மை, ஆரோக்கியம் பெறலாம் என்கிறது வரலாறு.

இந்தக் கோயிலின் தலவிருட்சம், முல்லை. கோயிலின்
பின்புறம் ஒரு மரத்தில் பெரிதாகப்படர்ந்து செழித்துள்ளது.
பௌர்ணமி நாட்களில் இங்கே வந்து சந்திரதீர்த்தத்தில்
நீராடி இறைவனை வழிபட்டு, பின் தலவிருட்சத்தை
வணங்கினால் தோல் நோய்கள், மூட்டு எலும்பு
தேய்மானம் போன்ற நோய்கள் விலகுமாம்.

பன்னிரண்டு அமாவாசை தினங்களில் இங்கு வந்து
கடலில் நீராடி, பின் சந்திர, பிரம்ம தீர்த்தத்தில் குளித்து
முல்லைவனநாதரை நினைத்த பிதுர் பூஜை செய்தால்
நிச்சயம் செல்வந்தர் ஆகலாம் என்கிறார் காக முனிவர்.

இந்த கோயிலில் பள்ளியறை கிடையாது.
இதற்கும் ஒரு சுவாரஸ்ய தகவல் வரலாற்றில்
குறிப்பிடப்பட்டிருக்கிறது. பஞ்சாட்சர மந்திரத்தை
பொருளோடு சிவபெருமானிடம் கற்கவேண்டும் என்று
ஆசைப்பட்ட பார்வதிதேவி, இது குறித்த சிவனிடம்
வேண்ட, அவரும் இத்தலத்தில் தேவிக்கு பஞ்சாட்சர
மந்திரத்தையும், அதன் பெருமையையும் உபதேசித்தார்.

இத்தலத்தில் சிவன் குருவாகவும், அம்மன் சத்தியானந்த
சவுந்தரியாக சிஷ்யையாக இருந்ததால் இத்
திருக்கோயிலில் பள்ளியறை இல்லை. இறைவன்
இங்கே குருவாக அமர்ந்ததால் ஜாதகத்தில் குருவின்
ஸ்தானம் சரியாக அமையப் பெறாதவர்கள்
முல்லைவனநாதரை பூஜித்தால் குருதோஷ பாதங்கள்
நீங்கும் என்பது ஐதிகம்.

யூதிகா பரமேஸ்வரர் என்று அழைக்கப்படும்
முல்லைவனநாதர் மூலவராக வீற்றிருக்க, அவருக்கு
அருகே தனிசன்னதியில் அணிகொண்ட கோதையாக
சத்தியானந்த சவுந்தரி அருள்பாலிக்கிறாள். சன்னதியின்
மேற்குதிசையில் முருகப்பெருமான் வள்ளி -
தெய்வானையுடனும், தென்திசையில் தட்சிணாமூர்த்தியும்
காட்சி தருகிறார்கள்.
-
ஈசானிய மூலையில் சந்திரத்தீர்த்தமும், வட திசையில்
பிரம்ம தீர்த்தமும் அமைந்திருக்கின்றது.
திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற, காவிரி வடகரைத்
தலங்களுள் ஒன்றான இங்கே வந்து இறைவனையும் -
இறைவியையும் வழிபட்டு வளமான வாழ்வினை
நீங்களும் பெறலாமே!

எங்கே இருக்கு:
நாகை மாவட்டம், சீர்காழியிலிருந்து கிழக்கே சுமார்
12 கீ.மீ. தொலைவில் திருமுல்லைவாசல் உள்ளது.
-
தரிசன நேரம்: காலை 6-12, மாலை 4-9
-
- ஆர். விவேக் ஆனந்தன்.
-
--------------------------
குமுதம் பக்தி


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 10, 2015 12:46 pm

திருக்கருகாவூர் இருக்கும் சிவபெருமானுக்கும் முல்லைவனநாதர் என்று தான் பெயர்

இந்த திருக்கருகாவூர் கோவிலில் உள்ள அம்பாளை வழிபட்டால் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பேரு இல்லாதவர்களுக்கும் அடிக்கடி கருசிதைவு ஆகுபவர்களுக்கும் நல்லபடியாக குழந்தை பேரு கிட்டும்.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Mar 10, 2015 2:23 pm

நல்ல பதிவு.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

யூதிகா பரமேஸ்வரன்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக