புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10 
44 Posts - 60%
heezulia
அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10 
236 Posts - 42%
heezulia
அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_m10அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகிலத்திரட்டு அம்மானை


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 1:59 am

First topic message reminder :

அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 TN_120625172812000000

காப்பு

ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்

பாண்டவர் தமக்காய்த் தோன்றி
பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த
விசளத்தால் கயிலை யேகி
சான்றவர் தமக்கா யிந்தத்
தரணியில் வந்த ஞாயம்
ஆண்டவர் அருளிச் செய்ய
அம்மானை எழுத லுற்றேன்

சிவமே சிவமே சிவமணியே
தெய்வ முதலே சிதம்பரமே
தவமே தவமே தவக்கொழுந்தே
தாண்டவசங் காராதமியே எங்களுட
பவமே பவமே பலநாளுஞ்
செய்த பவம றுத்தன்
அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய்
சிவசிவசிவசிவா அரகரா அரகரா

அலையிலே துயில் ஆதிவராகவா
ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை
சிலையிலே பொன்மகர வயிற்றினுள்
செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில்
முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின்
உற்றதெச்சண மீதில் இருந்துதான்
உலகில் சோதனை பார்த்தவர்
வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே

திருமொழி சீதை யாட்குச்
சிவதலம் புகழ எங்கும்
ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி
உகபர சோதனைகள் பார்த்துத்
திருமுடி சூடித் தர்மச்
சீமையில் செங்கோ லேந்தி
ஒருமொழி யதற்குள் ளாண்ட
உவமையை உரைக்க லுற்றார்.



அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:03 am


வீரவாகுதேவர் தாது

சூர னிடத்தில் தூதாநீ சென்றேகிப்
பாரமுள்ள கயிலைச் பருவதமுந் தேவருட
சிறைக ளகற்றிவானோர் தேவரையும் நீயனுப்பித் 800

திறவா னாயாகச் சீமையர சாளுமென்று
இப்படியே ஆகாட்டால் இன்றுகழித் தெட்டாம்நாள்
அப்படியே உன்றனக்கும் ஆனகந்த சுவாமியர்க்கும்
சண்டை அன்றென்று தரங்கூறி வாவெனவே
அண்டர்பிரான் தூது அனுப்பினா ரம்மானை
தூதன் மிகநடந்து சிவனே செயலெனவே
காதமொன்று தான்கடந்து கண்டானே சூரனையும்
கந்த சுவாமி கருத்தா யுரைத்ததெல்லாம்
அந்த அசுரனுக்கு அத்தூதன் தானுரைத்தான்
சூரா கேள்கந்த சுவாமியரு ளென்றுரைக்க
ஏராத பாவி இகழ்த்தினா னப்போது
தூதனென்றோன் போகாமல் துடர்ந்து மிகப்பிடித்துப்
பாரதப் பெருவிலங்கில் பாவியைவை யென்றுரைத்தான்
ஆரடா நீதான் அறியாயோ என்பலங்கள்
பாரடா வுன்றன் கந்தன் படுகிறதை
ஈசுரனு மென்றனுக்கு இருந்த இடமுமருளி
மாயனிடம் போயலையில் வாழ்ந்ததுநீ கண்டிலையோ
எமலோகம் வானம் இந்திரலோ கம்வரையும்
நவகோளும் நானல்லவோ நாட்ட மறிந்திலையோ
முப்பத்து முக்கோடி உற்றதே வாதிகளும் 820

நாற்பத்துநாற் கோடிரிஷி நமக்கென்ற றிந்திலையோ
அறியாத வாறோகாண் ஆண்டிக்குத் தூதுவந்தாய்ச்
சிறியனென் றிராதேயென் சிரசுடம்பு கண்டிலையோ
உன்னுடைய கந்தன் உயரமது நானறிவேன்
என்னுடைய உயரம் இனிநீ யறிவாயே
ஆனதா லென்னுடைய ஆங்கார மத்தனையும்
கானகத்தில் வாழும் கந்தனுக் கேவுரைநீ
என்று மதமாய் இவன்பேசத் தூதனுந்தான்
அன்று அந்தச்சூரனுக்கு அறையாம லேதுரைப்பான்
நீயோ தானெங்கள் நிமலன் தனக்கெதிரி
பேயோரி நாய்நரிகள் பிய்ச்சிப் பிடுங்கியுன்னை
கண்ட விடத்தில் கழுக்கள் மிகப்பிடுங்கிக்
கொண்டோடித் தின்னவே லாயுதங் கொண்டுவந்தார்
தேவர் சிறையும் தெய்வமட வார்சிறையும்
மூவர் சிறையும் மும்முடுக்க முந்தீர்த்து
உன்னுடைய சேனை உற்றபடை யழித்து
நின்னுடைய கோட்டை நீறு பொடியாக்கி
அரசாள்வா ரெங்கள் ஆறுமுக வேலவனார்
துரையான கந்த சுவாமிசொல்லி யனுப்பினர்காண்
என்றேதான் தூதன் இவையுரைக்கச் சூரனுந்தான் 840

அன்றே மனது அளறித்துணிந் தேதுரைப்பான்
ஆனா லறிவோம் ஆண்டி தனையுமிங்கே
போனா லென்னோடே போருசெய்ய யேவிடுநீ
சூர னிவையுரைக்கச் சூலாயுதப் பெருமாள்
தூதன் மிகநடந்து சொன்னான் சுவாமியர்க்கு




அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:03 am


சூரன்பாடு

சுவாமி மனமகிழ்ந்து சூரன் தனையறுக்கக்
காமிவே லாயுதத்தைக் கையிலெடுத்தா ரம்மானை
வேலா யுதமெடுத்து வேதப் படைசூழ
சூலாயுதப் பெருமாள் துடியாய் நடக்கலுற்றார்
கந்தனார் வேசம் கரந்திருந்த மாயவனார்
வந்தார்காண் சூரன் வலுவிழந்தா னம்மானை
சூர னவன்கண்டு தோசப் படையணிந்து
மூரன் படைக்கு முன்னே நடக்கலுற்றான்
கண்டா ரீராறு கரத்தோ னகமகிழ்ந்து
பண்டார வேசம்பண்பா யெடுத்திறுக்கி
முன்னே வருஞ்சூரன் முகத்தை யவர்பார்த்துப்
பின்னே சுவாமி புத்தி மிகவுரைப்பார்
வம்பி லிறவாதே வாழ்விழந்து போகாதே
தம்பி தலைவன் தளமு மிழவாதே
பற்பக் கிரீடப் பவுசு மிழவாதே 860

அற்ப மிந்தவாழ்வு அநியாயம் விட்டுவிடு
கரணமீ தில்லாமல் கௌவையற்று வாழ்ந்திருந்து
மரணம் வந்துசீவன் மாண்டுபோ கும்போது
நன்மை யதுகூட நாடுமே யல்லாது
தின்மை வராது தேவரையும் விட்டுவிடு
தீட்சை யுடன்புத்தி செவ்வேநே ரிட்டுவொரு
மோட்ச மதுதேட முடுக்கமதை விட்டுவிடு
இத்தனையும் நாதன் எடுத்து மிகவுரைக்கப்
புத்திகெட்டப் பாவி போர்சூர னேதுரைப்பான்
இரந்து திரியுகின்ற இரப்பனுக் குள்ளபுத்திப்
பரந்த புவியாளும் பாரமுடிக் காவலற்கு
ஏற்குமோ ஞானம் இரப்போருக் கல்லாது
ஆர்க்குமே சொல்லாதே ஆண்டிவுன் ஞாயமதை
சண்டைக்கு வாவெனவே தரங்கூறித் தூதுவிட்டப்
பண்டார மென்ற படைக்கார னும்நீயோ
என்னுடைய சேனை எல்லாமிக அழித்து
என்னையும் நாய்நரிக்கு இடுவேனென் றதும்நீயோ
என்றே யச்சூரன் இயம்பி மிகநகைத்துப்
பண்டார னோடே படையெடுத்தா னம்மானை
சூரனுட படைகள் துண்டந்துண்ட மாய்விழவே 880

வீரர்களும் வந்து வெட்டினா ரம்மானை
வெட்டிதினால் செத்தார் மிகுசூ ரக்குலங்கள்
பட்டார்க ளென்று பார்சூரன் தான்கேட்டு
வந்து எதிர்த்தான்காண் மாயாண்டி தன்னோடே
இன்றுவந்து வாய்த்துதென்று எம்பெருமா ளுமகிழ்ந்து
வேலா யுதத்தை விறுமா பதஞ்சேவித்து
மேலாம் பரனார் விமல னருளாலே
எறிந்தார்காண் சூரன் இறந்தானே மண்மீதில்
பறிந்தேவே லாயுதமும் பாற்கடலில் மூழ்கியதே
சூரன் மடிந்து துடித்துயிர் போகுகையில்
வீரமுள்ள நாதன் வீணனவன் முன்பில்வந்து
சொன்ன மொழியெல்லாம் சூட்சமாய்க் கேளாமல்
இந்நிலமேல் பாவி இறந்தாயே வம்பாலே
நாட்டமுடன் நானுரைத்த நல்லமொழி கேளாமல்
கோட்டையு முன்னுடைய குஞ்சரமுந் தோற்றாயே
சந்துவிட்ட சொற்படிக்குத் தந்தரசு ஆளாமல்
விந்துக் குலங்களற்று வீணாய்நீ மாண்டாயே
மாளா வரங்கள் மாகோடி பெற்றோமென்று
பாழாக மாண்டாயே பண்டாரங் கையாலே
என்றந்த ஆதி இத்தனையுந் தான்கூற 900

முந்து பிறந்த முப்பிறப்புச் சூரமதால்
என்னையோ கொல்ல இரப்பனோ ஏலுவது
உன்னையோ கொல்ல ஒட்டுவனோ நான்துணிந்தால்
வேலா யுதத்தாலே வென்றுகொன்ற தல்லாது
ஏலாது வுன்னாலே இளப்பமிங்கே பேசாதே
என்றானே சூரன் எம்பெருமாள் கோபமுடன்
கொன்றாரே சூரனுட குறவுயிரை யம்மானை

சூரனைத் துணித்த சத்தி சூலமும் கடலில் மூழ்கி
வீரமால் பதத்தைப் போற்றி விளம்புவாள் சத்தி மாது
மூரனைச் செயிக்க முன்னே முச்சூலமாய்ச் சபித்த சாபம்
தீரவே வேணு மென்று திருப்பதம் வணங்கி நின்றாள்

ஆதியே நாதி அனாதித் திருவுளமே
சோதியே யென்னுடைய சூலசா பந்தீரும்
என்று உமையாள் எடுத்து மிகவுரைக்க
நன்றெனவே அந்த நாரா யணர்மகிழ்ந்து
சாப மதுதீரச் சாந்தி மிகவளர்த்தார்
தாபமுடன் மாயன் சாந்தி மிகவளர்க்க
அம்மை உமையாளின் ஆனசாபந் தீர்ந்து
செம்மையுடன் கயிலை சென்றனள்கா ணம்மானை




அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:04 am


இரணியன் பாடு

சத்திசா பந்தீர்த்துத் தவலோக மேயனுப்பித் 920
தத்தியாய்ச் சூரனையும் சங்காரஞ் செய்துஅந்த
சூரனூர் தன்னைத் தீயோன் தனக்களித்து
வீரசூ ரன்தனையும் மேலுமந் தவ்வுகத்தில்
பார இரணியனாய்ப் படைத்தார்கா ணம்மானை
சூர னிரணியனாய்த் தோன்றினா னவ்வுகத்தில்
மாய னொருகோலம் மகவா யுருவெடுத்து
வாயல் நடையில்வைத்து மாபாவிச் சூரனையும்
நெஞ்சை யவர்நகத்தால் நேரேப் பிளந்துவைத்து
வஞ்சக னோடே மாயன் மிகவுரைத்தார்
சூர பற்பனாகத் தோன்றினா யந்நாளில்
ஊரிரப்ப னாக உருவாக நான்தோன்றிக்
கொன்னே னானென்று கூறினே னப்போது
அந்நேரம் நீதான் ஆண்டியல்லக் கொன்னதென்றாய்
வேலா யுதத்தாலே வென்றாய்நீ யல்லாது
ஏலாது உன்னாலே என்றன்று பேசினையே
ஆயுதங்க ளம்பு அஸ்திரம்வா ளில்லாமல்
வாயிதமா யென்னகத்தால் வகிர்ந்தேனா னுன்வயிற்றை
என்றுமா யனுரைக்க ஏதுரைப் பான்சூரன்
பத்து மலையைப் பாரநக மாய்ப்பதித்து
இத்தலத்தி லென்னை இறக்கவைத்தா யல்லாது 940

ஏலாது உன்னாலே இந்தமொழி பேசாதே
மாலா னவேதன் மனதுகோ பம்வெகுண்டு
உன்னை யின்னமிந்த உலகில் பிறவிசெய்து
கொன்னா லேவிடுவேன் கிரேதா யுகம்வயது
திகைந்தல்லோ போச்சு திரேதா யுகம்பிறந்தால்
பகையுந் தானப்போ பார்மீதி லுண்டாகும்
முப்பிறவித் துண்டம் உயிர்ப்பிறவி செய்கையிலே
இப்பிறவி தன்னில் இசைந்தமொழி கேட்பேனான்
என்று இரணியனை இரணசங் காரமிட்டு
அன்று கிரேதா யுகமழித்தா ரம்மானை
அந்தக் கிரேதா யுகமழித்த அந்நாளில்
கந்தத் திருவேசம் கலந்திருந்த மாயவனார்
செந்தூர்ப் பதியில் சேர்ந்திருந்தா ரம்மானை 953




அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:04 am


அந்தூர்ப் பதியில் அலங்கரித்த நாட்கழித்து
ஆதி கயிலை அரனா ரிடத்தில்வந்து
வேதியரும் நன்றாய் விளம்புவா ரம்மானை
சூரபற்ப னென்ற சூரக்குலங் களைத்துணித்து
வீரம் பறைந்ததினால் மேலுமந்த அவ்வுகத்தில்
இரணியனாய்த் தோன்றி நின்றஇ ராச்சதனைக்
கொன்னு கிரேதா குவலயமும் நானழித்து
முன்னு கரந்திருந்த ஆறு முகவேசம்
செந்தூரு வாரி திரைமடக்கில் வாழ்ந்திரென்று
வந்தோங் காணய்யா மலர்ப்பாதந் தெண்டனிட
என்றேதா னாதி ஈசுரரோ டேதுரைப்பார்
அன்றேதா னீசர் அருளுவா ராயருக்கு

திரேதா யுகம் - இராவணன் பாடு

முன்னே குறோணி முடிந்ததுண் டாறதிலே
இன்னமூணு துண்டம் இருக்குதுகாண் மாயவரே
என்றீசர் சொல்ல எல்லோருந் தான்கூடி
அன்றிருந்த துண்டம் அதிலேயொரு துண்டமதை
உருவாய்ப் படைத்து உயிர்க்கொடுக்கு மவ்வளவில்
அருகே யிருந்த அச்சுதரு மேதுரைப்பார்
முன்னே இவனும் முற்பிறப் பானதிலே
என்னோடே பேசி எதிர்த்தான் காணீசுரரே 20

ஆனதா லிப்பிறப்பு அரக்க னிவன்றனக்கு
ஈனமில்லாச் சிரசு ஈரஞ் சாய்ப்படையும்
பத்துச் சிரசும் பத்துரண்டு கண்காதும்
தத்துவங் களோடே தான்படையு மென்றுரைத்தார்
மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து
வாய்சிரசு பத்தாய் வகுத்தார்கா ணம்மானை
கூடப் பிறக்கக் குண்டிலிட்ட ரத்தமதை
வாட அரக்கர் குலமாய்ப் பிறவிசெய்தார்
அப்போ படைக்கும் அவ்வளவில் மாயவனார்
மெய்ப்பான மேனிதனில் வியர்வை தனையுருட்டி
விபீஷண னென்று மெய்யுருவந் தானாக்கிக்
கவுசலமா யரக்கன் தம்பியெனக் கருத்தாய்க்
கூடி யிருந்து அரக்கன் குறியறிந்து
வேடிக்கை யாக வீற்றிரென்று தானுரைத்தார்




அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:05 am


இராவணன் வரம் வேண்டல்

பத்துத் தலையான பாவி அரக்கனவன்
மற்று நிகரொவ்வா வாய்த்தபர மேசுரரை
வணங்கி வரம்வேண்ட மனதிற் பிரியமுற்று
இணங்கியே ஈசர்பதம் இறைஞ்சிநின்றா னம்மானை
தவத்தருமை கண்டு தலைபத் தரக்கனுக்குச்
சிவத்தலைவ ரானோர் செப்புவா ரம்மானை 40

காதுரண்டு பத்து கண்ணிருப துள்ளோனே
ஏது வரம்வேணும் இப்போது சொல்லுமென்றார்
அப்போது ஈசுரரை அரக்க னவன்வணங்கி
இப்போது ஈசுரரே யான்கேட்கு மவ்வரங்கள்
தருவோ மெனவே தந்தி முகன்பேரில்
உருவா யெனக்கு உறுதிசெப்பு மென்றுரைத்தான்
அப்படியே ஈசர் ஆணையிட்டுத் தான்கொடுக்க
சொற்படிகேட் டேயரக்கன் சொல்லுவா னப்போது
மூன்றுலோ கத்திலுள்ள முனிவர்தே வாதிகளும்
வேண்டும்பல ஆயுதமும் விதம்விதமா யம்புகளும்
வீரியமாய் நானிருக்கும் விண்தோயுங் கோட்டைசுற்றிச்
சூரியனுஞ் சந்திரனும் சுற்றியது போய்விடவும்
சிவனா ரொருகோடி செய்ய வரந்தரவும்
புவனம் படைக்கும் பிரம்மா வொருகோடி
உமையா ளொருகோடி உற்ற வரந்தரவும்
இமையோ ரரைக்கோடி இப்படியே உள்ளவரம்
மூணரைக் கோடி உள்ளவர மத்தனையும்
கொடுக்கு மளவில் குன்றெடுத்தோன் தன்தேவி 60

அலைமேல் துயிலும் அச்சுதனார் தன்தேவி
சிலைவே லெடுத்துச் செயிக்கவல்லான் தன்தேவி
அலங்கா ரமாகி அன்னைப் பொழுததிலே
கலங்கா தான்தேவி கயிலைஉமை யாளருகே
மணிமேடை தன்னில் மகிழ்ந்திருக்கு மவ்வளவில்
கெணியா மலேயரக்கன் கெடுவ தறியாமல்
அம்மை தனைக்கண்டு அயர்ந்து முகஞ்சோர்ந்து
கர்ம விதியால் கைமறந்து நின்றனனே
நின்ற உணர்வை நெடிய சிவமறிந்து
அன்றந்த அரக்கனுக்கு ஆதிவரங் கொடுத்து
கேட்ட வரங்கள் கெட்டியாய்த் தான்கொடுத்து
நாட்ட முடன்சீதை நகையா லழிவையென்று
இரக்கமில் லான்கேட்ட ஏற்றவரங்க ளெல்லாம்
அரக்க னவன்றனக்கு ஆதிமிகக் கொடுத்தார்
ஆதிகொடுத்த அவ்வரங்க ளத்தனையும்
நீதியில் லான்வேண்டி நெடியோன் தனைவணங்கிக்
கொண்டுபோ கும்போது குன்றெடுத்த மாயவனார்
கண்டு மறித்துக் கௌசலமிட் டேமாயன்
அரைக்கோடி வரமாய் ஆக்கிவிட்டார் மாயவரும்
சரக்கோடி மூணும் தான்தோற்றுப் போயினனே 80

ஆதியைத் தொழுது போற்றி அரக்கனும் வரமும் வேண்டி
சீரிய சீதை யாலே சீவனுக் கிடறும் பெற்று
வாரிய மூணு கோடி வரமது தோற்றுப் பின்னும்
மூரியன் மூணு லோகம் முழுதுமே யடக்கி யாண்டான்

இராவணன் கொடுமை

முக்கோடி வரத்தை உச்சிக்கொண்டார் மாயவரும்
அக்கரைக் கோடி அரக்கன்வரம் கொண்டேகித்
தேவரையும் மூவரையும் தேவேந் திரன்வரையும்
நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டா னம்மானை
வாசு அரக்கன் மணிமேடை தூராட்டால்
வீசுவேன் வாளாலே வெட்டுவேன் பாருவென்பான்
வருண னவன்மேடை வந்துத்தொளி யாதிருந்தால்
மரணம்வரும் வரையும் வலுவிலங்கில் வைப்பேனென்பான்
சந்திரருஞ் சூரியரும் சாய்ந்துமிகப் போகாட்டால்
சந்து சந்தாகச் சரத்தாலறுப் பேனென்பான்
தெய்வ மடவார்கள் திருக்கவரி வீசாட்டால்
கைவரைந்து கட்டிக் கடுவிலங்கில் வைப்பேனென்பான்
நாலு மறையும் நல்லாறு சாஸ்திரமும்
பாலு குடஞ்சுமந்து பணிந்துமுன்னே நில்லாட்டால்
அஸ்திரத்தால் வாந்து அம்மிதனில் வைத்தரைத்து
நெற்றிதனில் பொட்டிடுவேன் நிச்சயமென் பானரக்கன் 100

வானவர்க ளெல்லாம் மலரெடுத்து என்காலில்
தானமது பண்ணித் தாழ்ந்துநில்லா தேயிருந்தால்
சாகும் வரைக்கும் தடியிரும்பி லிட்டவரை
வேகும் படிக்கு வேள்வியதி லிட்டிடுவேன்
மாமறலி மூவர் வந்தென்சொல் கேளாட்டால்
காமனையும் ஈசன் கண்ணா லெரித்ததுபோல்
என்னுடைய கண்ணால் இயமனையுங் காலனையும்
துன்னுடைய வல்லத் தூதனையும் நானெரிப்பேன்
இவ்வுகத்தி லுள்ள இராசாதி ராசரெல்லாம்
முவ்வுகமுங் கப்பமிங்கே முன்னாடி தாராட்டால்
நெருப்பெடுத் திட்டிடுவேன் நேரேகொண்டு வாராட்டால்
எரிப்பே னொருஅம்பால் இராசாதி ராசரையும்
இப்படியே பாவி இந்திரலோ கம்வரையும்
அப்படியே அரக்கன் அடக்கியர சாண்டிருந்தான்




அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:05 am


தேவர்கள் முறையம்

அப்படியே அரக்கன் ஆண்டிருக்கு மந்நாளில்
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
தேவாதி தேவர் தினமேவல் செய்திடவே
மூவாதி மூவர் ஊழியங்கள் செய்திடவே
முறுக்கம தால்பாவி ஊழியங்கள் கொண்டதினால்
பொறுக்க முகியாமல் பூலோகத் தார்களெல்லாம் 120

தெய்வ ஸ்திரீயும் தேவாதி தேவர்களும்
அய்யா திருமாலுக்(கு) அபயம் முறையமென
அபயமிடு மொலியை அச்சுதருந் தானமர்த்திக்
கபயமிடும் வேதன் கயிலையது தானேகி
ஆதி பரமன் அடியைமிகப் போற்றி
சோதித் திருமால் சொல்லுவா ரம்மானை
பத்துத் தலையுடைய பாவி யரக்கனுக்கு
மற்றும் பலகோடி வரங்கள்மிக ஈந்ததினால்
தேவரையும் மூவரையும் தேவேந்தி ரன்வரையும்
நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டா னம்மானை
ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட
ஈனமாய்க் கேட்டு இருக்க முடியுதில்லை
பள்ளி யுறக்கம் பரிவாய் வருகுதில்லை
தள்ளினால் தேவரையும் தற்காப்பா ராருமில்லை
என்ன வசமாய் எடுப்போஞ் சொரூபமது
தன்னிகரில் லாதவனே சாற்றுவீ ரென்றனராம்
மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து
தூயவரு மங்கே சொல்லுவா ரம்மானை
பாவி யரக்கனுக்குப் பண்டுநா மீந்தவரம்
தாவிப் பறிக்கத் தானாகா தென்னாலே 140

இராமாவதாரம்

என்றரனார் சொல்ல எம்பெருமா ளச்சுதரும்
அன்றெம் பெருமாள் ஆலோ சனையாகி
என்னை மகவாய் எடுக்கத் தசரதரும்
முன்னே வரங்கேட்டு உலகி லவரிருக்க
அன்னுகத்தி லுள்ள அரசன் தினகரனும்
பொன்னு திருவைப் பிள்ளையென வந்தெடுக்க
நெட்டையா யரசர் நெடுநாள் தவசிருக்க
சட்டமதைப் பார்த்துத் தானனுப்பு மீசுரரே
பின்னும் பெருமாள் பெரியோனைப் பார்த்துரைப்பார்
முன்னு முறையாய் முறைப்படியே தேவரையும்
வானரமாய்ப் பூமியிலே வந்து பிறந்திருக்கத்
தானவரே யிப்போ தான்படைக்க வேணுமென்றார்
ஏவலா யென்றனுக்கு இப்பிறப் பானதிலே
காவலா யென்றனுக்குக் கைக்குள்ளே நிற்பதற்குப்
பள்ளிகொண்டு நானிருந்த பாம்புரா சன்தனையும்
வெள்ளிமணி மெத்தையையும் வீற்றிருக்கு மாசனமும்
இம்மூணு வேரும் என்னோ டுடன்பிறக்கச்
சம்மூலப் பொருளே தான்படையு மென்றுரைத்தார்
மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து
தூயவரு மந்தப் படியே தெளிந்திருக்கப் 160

படைக்கும் பொழுதில் பரதேவ ரெல்லோரும்
அடைக்கலமே மாயன் அடியெனத் தெண்டனிட்டார்
தெண்டனிட்டுத் தேவரெல்லாம் செப்புவா ரம்மானை
மண்டல மெங்கும் மயமாய் நிறைந்தோனே
எங்களை லோகமதில் இப்போ படைப்பீரால்
மங்களமா யுள்ள வலுவும் பெலமதுவும்
ஆயனுக்கு நாங்கள் அடிபணிந் தேவல்செய்ய
நேயனே நீரும் நெறியாய்ப் படையுமென்றார்
ஈசர் மகிழ்ந்து இப்படியே தான்படைக்க
வாசத் தசரதரும் வந்து தினகரரும்
மகவாசை யுற்று மகாபரனைத் தானோக்கி
அகப்பாச மற்று அதிகத் தவமிருந்து
நாத னறிந்து நன்மறையைத் தான்பார்த்து
பாத னரக்கன் பத்துச் சிரத்தானைத்
தேவர் துயரமறத் திருமால் தசரதற்கு
மூவ ருடன்கூடி உலகமதி லேபிறக்க
அரக்கர் குலமறவே அம்மைசீதா லட்சுமியை
இரக்கம்போ லுள்ள ஏற்ற தினகரற்கு
மகவாய்ப் பிறக்க மறைதான் விதித்தபடி
செகமீதில் ஞான சிருஷ்டி சிவமயமாய் 180

இப்படியே வேதத்(து) எழுத்தின் படியாலே
அப்படியே ஈசர் அமைக்கத் துணிந்தனராம்
உடனே தசரதற்கு உற்றதிரு மாலைத்
திடமாய்ப் பிறவி செய்ய எனத்துணிந்தார்
அப்போது ராமர் அய்யா திருமாலை
இப்போ துபடைக்க ஈசுரனார் சம்மதிக்கப்
படைக்கும் பொழுது பரமசிவ னாரை
நடக்குந் திருமால் நாதனைப்பார்த் தேதுரைப்பார்
அவ்வுலகி லென்னை அதிகத் தசரதற்கு
இவ்வுலகு விட்டங்(கு) என்னைப் பிறவிசெய்ய
வந்த விபரம் வகைவகையா யீசுரரே
என்றனக்குத் தானமைத்து என்னை யனுப்புமென்றார்
மாய னிதுகேட்க மறையோ னகமகிழ்ந்து
தூயவரு மங்கே சொல்லுகிறா ரம்மானை
பரலோ கமென்ற பைம்பொன் கயிலையதில்
சாலோ கந்தன்னில் தானிருந்த மாமுனிவர்
துசுவீசு மாமுனியும் சுகசீல மாமுனியும்
விசுவாச மாயிருந்து விசாரம திட்டனராம்
வாருந் துசுவீசு மாமுனியே நீர்கேளும்
நீரும் நாமுங்கூடி நீணிலத்தில் போயிருந்து 200

நானுமொரு பெண்மதலை நல்ல மகவாகத்
தானுமோ ராண்மதலை தலைவன் தனைவாங்கிச்
சம்மந் தமாகித் தானிருந்து நாடாண்டு
உம்மந் தமான உதவிபெற வேணுமென்று
இருபேரு மிருந்து எனைநினைந்து மாமுனிவர்
உருவேற்றி வேள்வி ஓம மதுவளர்க்க
இந்தப் படியே இவர்களிரு மாமுனியும்
எந்தன் தனைநோக்கி இருந்தார் தவசுகண்டீர்




அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:06 am


குறு முனி சாபம்

அல்லாமற் பின்னும் அரக்கன்ரா வணன்தனக்குக்
கொல்லாமற் கொல்லவொரு குறுமுனிவன் சாபமுண்டு
அரக்கன் வரம்வேண்டி அவன்போகு மவ்வளவில்
இரக்கமாய் மாமுனியும் இருந்தான் தவசதிலே
தவசுநிலை பாராமல் தலைபத் தரக்கனுந்தான்
பவிசு மதமாய்ப் படுவ தறியாமல்
முனியையவன் காலால் ஒத்தினான் மாபாவி
அநியாயப் பாவி அரக்க னவன்றனக்குக்
கூறினான் மாமுனியும் கொள்ளைகொண்டச் சாபமது
தூறின சாபத் துல்லியத்தை நீர்கேளும்
மாலை மிகப்போற்றி வாய்த்ததவம் நிற்கையிலே
காலெடுத்து ஒத்தினையே கள்ளாவுன் றனக்கு 220

இந்தத் தவசுதனில் ஈசுரரைத் தானினைந்து
உந்தன் தனையறுக்க ஒருராம பாணமது
வந்து பிறந்திடவும் மாய னதைத்தானெடுத்து
உந்தனுட மார்பில் ஊடுரு வவிடவும்
துசுவீசு மாமுனிவன் தசரதராய்ப் பூமிதனில்
பிறந்து இருந்திடவும் பின்னுஞ் சுகசீல
மாமுனியும் தினகரராய் வந்து பிறந்திடவும்
ஓமுனிக்கு லட்சமியும் வில்லோ டுதித்திடவும்
இராமபா ணத்தோடே இராமர் தசரதற்கு
முராகமத் தின்படியே உலகி லுதித்திடவும்
பாணமது தன்னாலும் பத்தினிதன் கற்பாலும்
நாணங்கெட் டரக்காவுன் நல்லதலைப் பத்திழந்து
சேனைத் தளமிழந்து சிரசிழந்து வாழ்விழந்து
வானரங்கள் வந்துன் வையகத்தைச் சுட்டழித்து
உன்சடல மெல்லாம் உழுத்துப் புழுப்புழுத்துத்
தன்சடலப் பட்டுச் சண்டாளா நீ மடிவாய்
வேண்டுவேன் தவசு விமலன் தனைநோக்கி
ஆண்டுபன்னி ரண்டாய் அவன்றவசு நின்றனனே
நின்ற தவத்தின் நிலைமையறிந் துமையாள்
அன்றைக்கு வந்து அருளினா ளாயிழையும் 240

உரைத்த மொழிகேட்டு உற்ற முனிதனக்குத்
துரைத்தனமா யித்தனையும் சொல்லி விடைகொடுத்தேன்
இப்படியே மாமுனிக்கு ஈந்திருக்கு மிவ்வரங்கள்
அப்படியே துசுவீசு மாமுனியுஞ் சுகசீல
மாமுனியும் நம்மை வருந்திநிஷ்டை செய்யுகிறார்
ஓமுனிக்கு நல்ல ஒழுங்குசெய்ய வேணுமல்லோ
அல்லாமல் தேவாதி அபயம் பொறுக்கரிது
எல்லா மிதுகண்டு இப்பிறவி செய்யுமென்றார்
நல்லதுகா ணென்று நல்லதிரு லட்சுமியை
வல்லமுள்ள பெட்டகத்தில் வைத்தார்கா ணீசுரரும்
இராமபா ணமதையும் நன்றாய்ப் பிறவிசெய்ய
சீராமஸ்ரீ யம்பகனும் சிவனு மகமகிழ்ந்து
என்ன விதமாய் இதுபிறவி செய்வோமென்று
பொன்னம் பலத்தோர் புத்திநொந்து தாமிருந்தார்
ஈசுரரு மப்போ இரத்தின கிரிதனிலே
வீசு பரனும் வேள்வி யதுவளர்க்க
வேள்வி வளர்த்து விமல னுருவேற்றத்
தாழ்வில்லா ஆயன் தற்சொரூபந் தானாகித்
திருக்கணைக் காலில் செய்ய நரம்புருவி
கருக்கணமாய் ராம பாணக் கணையெனவே 260

உறுதிகொண்டு வேள்விதனில் விட்டெறிந்தா ரம்மானை
பிறிதிகொண்டு லட்சுமியும் பிலத்த திருக்கரத்தில்
தூண்டு விரலில் துய்ய நரம்புருவி
வேண்டும் பெரிய வீரவில் லீதெனவே
ஆராரு மிந்தவில்லை அம்பேற்றக் கூடாமல்
சீரா மரேற்ற சிந்தித்தா ளம்மானை
உடனேயது வில்லாய் ஓம மதில்பிறக்கத்
திடமாக ராமர் திருக்கணைக்கா லுள்நரம்பு
பாணமதாய் வேள்விதனில் பரிவாயப் பிறந்திடவே
தாணரும் வானோரும் சங்கத்தோ ருங்காண
எல்லோருங் கண்டு இதுகண் மாயமெனவே
வல்லோர்க ளான வாய்த்ததே வாதியெல்லாம்
சங்கடங்கள் தீர்ந்ததென்று சந்தோசங் கொண்டாட
அங்கணங்க ளான அலகைமிகக் கூத்தாட
இராமபா ணத்தாலே இராவண சூரனையும்
ஸ்ரீராமர் சென்று தென்னிலங்கை தன்னிலுள்ள
அரக்கர்குல மறுப்பார் அச்சுதனா ரென்றுசொல்லி
இரக்கமுள்ள தேவரெல்லாம் இரங்கிமிகக் கொண்டாட
வில்லோ டுடன்பிறந்த வீரலட்சு மியெனவே
வல்லோர்க ளாராலும் வந்திந்த வில்லதையும் 280

வளைத்தோர்க்கு நல்ல மாலைசூட்ட லாமெனவே
தழைத்த சுகசீல தாட்டீக மாமுனியைத்
தினகரராய்ப் பூமிதனில் செய்துவைத்து லட்சமியை
மனோகரமாய்ப் பூமியிலே வைத்தபெட்ட கத்தோடே
வில்லோ டேபிறக்க விமல னருளினராம்
நல்ல துசுவீசு மாமுனியை நாடதிலே
தசரதராய்த் தோன்றவைத்துத் தேசாதி ராசனுக்கு
விசமாலை ராமருமாய் வீரக் கணையோடே
கூடப் பிறக்கக் குன்றெடுத்தார் தான்துயிலும்
நீட அரவணையை நீதலட்சு மணராக்கித்
தலையணை மெத்தையையும் சத்துரு பரதனுமாய்
நிலைவரமாய் ஈசன் நெறியாய்ப் பிறவிசெய்யத்
தேவரையும் வானரமாய்ச் சிவனார் பிறவிசெய்ய
மூவரை யும்பிறவி உள்ளதெல்லாஞ் செய்திடவே
கொடுமுடியாய்ப் பிறந்த கோளிலங்கைப் பாவிகளை
முடியடிவே ரில்லாமல் முழுது மறுப்பதற்கு
வேண்டும் பிறவியெல்லாம் விமல னருளிமிகத்
தாண்டவ சங்காரம் தானிதென்றா ரம்மானை
இராவணன் தன்னைக் கொல்ல இராம பாணங்க ளோடே
சிராம ராய்மாயன் தானும் தசரதன் தனக்குத் தோன்ற 300

விராகன மாது சீதை வில்லுட னுதிக்கத் தேவர்
மராம ரக்குலங் களாகி வந்தனர் புவியின் மீதே
சிராமருந்தான் ராவணனைச் செயிக்க ஒருவிதமாய்
இராமபா ணத்தோடே நாட்டில் பிறந்தனராம்
தென்னிலங்கை தான்முடிய சீதை சிறையிருக்கப்
பொன்னரிய வில்லோ(டு) உடன்பிறந்தாள் பொன்மாது
தேவரெல்லாம் வானரமாய்த் தென்னிலங்கை சுட்டழிக்கப்
பூவர் சுகுமுனிவர் போர்விசுவ கன்மனெனும்
வானரத்துக் கேற்ற மந்திரி தானாகித்
தானவரையு மனுப்பித் தரணிதனி லெம்பெருமாள்
லட்சும ணரெனவே ஏற்றசத்து ருபரதன்
கட்சியுடன் மாயன் கணையோ டுடன்பிறந்தார்
இப்படியே ராவணற்கு எல்லோ ரும்பகையாய்
முப்படியே உள்ள முறைநூற் படியாலே
வந்து பிறந்தார்காண் மாயவரு மம்மானை
இப்படியே ராமர் ஏற்ற தசரதற்கு
அப்படியே பிறந்து அங்கிருந்தா ரம்மானை




அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:06 am


சீதா கல்யாணம்

சீதை வளர திருவில்லுந் தான்வளர
கோதைக் குழல்சீதைக் கோமான் மிகவளர
சிராமர் பிறப்போர் சிறப்பாய் வளர்ந்திடவே 320

இராமர் குலங்கள் இரகசிய மாய்வளர
அரக்கன் கொடுமை அண்டமள வேவளர
சீதை வளர்ந்து சிறந்த வயதானதிலே
மாதை மணமிடவே மாதா மனதிலுற்றுத்
தன்புரு சனோடே தையல்நின் றேதுசொல்வாள்
அம்பும்வில் லும்வளர ஆயிழையுந் தான்வளர்ந்து
பக்குவங்க ளாச்சே பைங்கிளிக்கு மாலையிட
ஒக்குவ தென்ன உரைப்பீரென் னுத்தமரே
என்று மடமாது ஏற்ற தினகரரை
நின்று வணங்கி நேரிழையுஞ் சொல்கையிலே
வில்லை வளைத்தல்லவோ மெல்லிமணஞ் சூடுவது
வல்ல கலைக்கோட்டு மாமுனியைத் தான்வருத்தி
இன்னபடி யீதென்று எடுத்துரைக்க மாமுனியும்
அன்னப் பொழுதில் அருளுவான் மாமுனியும்
பூரா சமான புவியைம்பத் தாறிலுள்ள
இராசாதி ராசரெல்லாம் இப்போ வரவழைத்து
வில்லை வளைத்தவர்க்கு மெல்லிமணஞ் சூட்டுமென்று
சொல்லியே மாமுனியும் தசரதனார் கண்மணியைக்
கண்டுநின்று மாமுனியும் கண்ணனார்க் கேதுரைப்பான்
பண்டு உனக்குப் பரம சிவனாரும் 340

வில்வளைத்து மாலையிட விதியில் விதித்திருக்குச்
செல்லந்த மன்னன் தினகரானர் தன்மகட்கு
இன்று கலியாணம் இப்போது அங்குசென்றால்
பண்டு அமைத்த பலனுனக்குக் கிட்டுமிப்போ
என்று கலைக்கோட்டு மாமுனியுந் தானேகி
சென்றான் தினகரரின் செல்வி மணந்தனிலே
அன்றைம் பத்தாறு அரசருக்கு மாளனுப்பி
தேசாதி தேசர் திசைவென்ற மன்னரெல்லாம்
மேசாதி யானோரும் மேவுந்தெய் வேந்திரனும்
இராவண சூரன் இராமர்முத லானவரும்
இராமர்குல ராசாதி நல்லமன்னர் வந்தனராம்
வில்லை வளைத்து வில்லில் நாண்பூட்டாமல்
முல்லைமன்ன ரெல்லாம் முகம்வாடிப் போயிருந்தார்
இராம ரெடுத்து இராம சரமேற்றி
சிராமர் மணஞ்செய்தார் சீதைத் திருமாதை
மணம் முகித்துவானோர் மங்களகீ தத்தோடே
துணைவர் தலைவரொடு சென்றா ரயோத்தியிலே
அயோத்தியா புரியில் ஆனதம்பி மாரோடும்
கையேற்று வந்த கன்னி திருவோடும்




அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:06 am


ஸ்ரீராமர் வனவாசம்

வாழ்ந்திருக்கும் நாளில் மாதா கைகேசியம்மை 360
தாழ்ந்தமொழி சொன்னதினால் தம்பி பரதனையும்
நாடாள வைத்து நல்லஸ்ரீ ராமருந்தான்
கூடவொரு தம்பியோடும் குழல்சீதை மாதோடும்
நாடி நடந்தார் நல்லவன வாசமதில்
வாடிவந்து கானகத்தில் வாழ்ந்திருக்கும் நாளையிலே
லட்சுமண ருமங்கே ஏற்றகனி தான்பறிக்கக்
கட்சியுடன் நடந்து காட்டில் மிகப்போகச்
சூர்ப்பநகை தன்மகனும் துய்ய தவசுநிற்க
ஆர்ப்பரவா யீசர் ஆகாசத் தேவழியே
வாளை அயச்சார் வாய்த்தபர மேசுரரும்
தாழ வரும்போது தாமனந்த லட்சுமணர்
கண்டந்த வாளைக் கைநீட்டித் தான்பிடித்துத்
துண்டம் விழஆலைத் துஞ்சிவிழ வெட்டினர்காண்
பட்டந்த ஆலும் படபடெனச் சாய்ந்திடவே
வெட்டந்து வீழ்ந்தான் மீண்டுதிரம் பாய்ந்ததுவே
அரக்கன்தாய் கண்டு அலறி வெகுண்டெழுந்து
இரக்கமில்லாச் சூர்ப்பநகை இலட்சுமண ரைத்தேடி
தேடி ஸ்ரீராமர் சீர்பாதங் கண்டணுகி
நாடியெனைத் தாவுமென்று நாணமில்லா தேயுரைத்தாள்
என்பாரி யிங்கே இருக்கவே வேறொருவர் 380

தன்பாரி தன்னைத் தான்விரும்பேன் போடியென்றார்
போடிநீ யென்ற புத்திதனைக் கேட்டரக்கி
தேடியே லட்சுமணரைச் சேரவுற வாடிநின்றாள்
உறவாடி நின்ற ஒயிலை யவரறிந்து
பறபோடி யென்று பம்பத்தன மூக்கரிந்தார்
மூக்கு முலையும் முகமும் வடிவிழந்து
நாக்குரைக்க வாடி நாணங்கெட்டத் தீயரக்கி
தன்னுடனே கூடித் தமய னெனப்பிறந்த
மன்னன்ரா வணன்தமக்கு வகையா யுரைக்கலுற்றாள்
காட்டி லொருபெண் கமலத் திருமகள்போல்
நாட்டிலொவ்வாக் கன்னி நான்கண்ட தில்லையண்ணே
உன்றனக்கு ஆகுமென்று உற்றவளை நான்பிடித்தேன்
என்றனுட மூக்கரிந்தோர் இருவருண் டல்லாது
மற்றொருவ ரங்கே வாழ்ந்திருக்கக் கண்டதில்லை
கற்றொ ருவர் காணாது கையிலம்பு காணாது
மருவனைய அண்ணேவுன் வாய்த்த விரலதிலே
ஒருயிறைக்கே வுண்டு உற்றஅவர் தன்னுயரம்
என்றந்த அரக்கி ஈனம்பல துரைக்க
அன்றந்த ராவணனும் ஆகாசத் தேரேறிப்
பிச்சைக் கெனவே புறப்பட்டான் காடதிலே 400

அச்சமில்லா லட்சுமணர் ஆனஸ்ரீ ராமருமாய்
மானின் பிறகே மனம்வைத்து நின்றிடவே
வானின் செயலால் வானவர்கள் பார்த்திருக்க
நாரா யணர்தேவி நல்லதிரு லெட்சுமியை
ஏராத பாவி இலச்சைகெட்டத் தீயரக்கன்
தேரிலே அம்மைதனைத் திருடிக்கொண் டேகினனாம்
பாரிலே வுள்ள பட்சி பறவைகளும்
கண்டு பதறிக் கதறிமிக அழவே
அண்டர் முனிதேவர் எல்லோருந் தாமழவே
மான்வேட்டையாடி மாரீசனை யறுத்துத்
தான்வேட் டையாடும் தகையாலே தம்பியுடன்
வந்தார்காண் லட்சுமியும் வாழ்ந்திருக்கு மண்டபத்தில்
பந்தார் குழலனைய பாவையரைக் காணாமல்
கலங்கி மிகவாடி கண்ணீர் மிகச்சொரிய
மலங்கியே லட்சுமணர் மண்ணிற் புரண்டழுதார்
என்னே மணியே எனைப்பெற்ற மாதாவே
பொன்னே யமுதே பெற்றவளே யென்றழுதார்
இராமர் முகம்வாடி நாயகியைத் தான்தேடி
ஸ்ரீரா மர்கலங்கி சினேக முடனழுதார்
மனுவாய்ப் பிறக்க மனுவுடம்பு கொண்டதினால் 420

தனுவா னதையடக்கித் தானே புலம்பலுற்றார்
அன்ன மயிலோடும் அன்றில் குயிலோடும்
புன்னை மலரோடும் புலம்பி மிகவழுதார்
வன்னமுள்ள யானை வாய்த்தசிங் கத்தோடும்
பெண்ணமுதைக் கண்டீரோ என்று புலம்பலுற்றார்
இப்படியே ராமர் இளைய பெருமாளும்
அப்படியே சொல்லி அழுதழுது தான்வாடிச்
சோலை மரத்தின்கீழ்ச் சோர்ந்து முகம்வாடி
மாலவருந் தம்பி மடிமேல் துயின்றிருக்க
அஞ்சனை யாள்பெற்ற அனுமனதில் வந்தடைய
சஞ்சல மேதென்று சாரதியுங் தெண்டனிட
மின்செறியு மாயன் விழித்தவனைத் தானோக்கிக்
கவசகுண்ட லமணிந்த கார்குத்தா யாரெனவே
உபசரித்துச் சொன்ன உச்சிதத்தைத் தானறிந்து
அய்யரே யென்னை ஆட்கொண்ட நாயகமே
மெய்யரே நீங்கள் மெலிந்திருப்ப தேதெனவே
கேட்க அனுமன் கிருபைகூர்ந் தெம்பெருமாள்
சேர்க்கையுடன் சொன்னார் சீதையுட தன்வளமை
ஏற்கை யாகக்கேட்டு இயலுனுமன் ஏதுசொல்வான்
நல்லது அடியேன் கேட்டேன் நானினி வுரைக்கும் வாறு 440

சொல்லவுங் கேட்பீ ரெந்தன் திருவடை யாளஞ் சொன்னீர்
வல்லவர் தகப்ப னானீர் வரந்தர வேணு மிப்போ
புல்லர்வா ழிலங்கை சுட்டு அம்மையைக் கூட்டி வாறேன்
என்தாய் மொழிந்த இயலடையா ளத்தாலே
முன்தானே பெற்ற முதல்வர்தா னென்றனக்கு
அய்யா தானாகும் அடைக்கலமே யாமடியார்
பொய்யாம லென்றன் பேரனுமன் கண்டீரே
இலங்கை தனைச்சுட்டு அம்மையைக் கூட்டிவர
மலங்காதே போவென்று வாக்கருள வேணுமையா
சுக்ரீவன் சாம்புவனும் சுத்தமுள்ள வீரர்களும்
ஒக்கவொரு முகமாய் உடையோன் பதமடைய
கெருடன் மிகமறித்துக் கேலியிட்ட ஞாயமதும்
திருடன் கொடிய தீபாவி ராவணனும்
அம்மை தனைக்கொண்டு அவன்கோட்டை யானதிலே
செம்மையில்லாப் பாவி சிறையில்வைத்த ஞாயமதும்
எல்லா மறிந்து எம்பெருமாள் கோபமுற்று
வெல்லத் துணிந்தார் மிகுபடைகள் தான்திரட்டி
எழுபது வெள்ளம் ஏற்றவா னரங்களையும்
முழுதும் வருத்தி ஒப்பமிட் டெம்பெருமாள்
விசுவகம் மாளனையும் விரைவா யருகழைத்து 460

வசுவாசு மைந்தன் வாய்த்த அனுமனையும்
அனுமன் தனையேவி ஆன மலையெடுத்துத்
துனும னுடனே தோயக் கடலதுக்குள்
கோட்டைய திட்டுக் குக்குளித் தங்கேகி
ஓட்டனாய் விட்டார் உற்ற அனுமனையும்




அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 2:07 am


அனுமன் தூது

பூட்டமுடன் வாயு புத்திரனுந் தான்மகிழ்ந்து
நாட்ட முடனிலங்கை நாடாளும் பாதகனைக்
கண்டு முடுகிக் கருத்தழியத் தான்பேசி
கொண்டு இலங்கை குப்பையிடத் தீக்கொளுத்தி
மால்கொடுத்த வாளி மாதுகையி லேகொடுத்து
வால்கொண்டு வீசி வனங்காவு தானழித்துக்
கேதார மாமலையும் கீர்த்தியுட னேகுதித்துப்
பாதார மென்று பணிந்தானே ராமரையும்

இராவணன் பாடு

அரக்க னவன்பேசும் அநியாயந் தான்கேட்டு
இரக்கமுள்ள எம்பெருமாள் எழுந்தார் படைக்கெனவே
படைக்கு இவர்நடக்க பார்த்துவி பீஷணனும்
அடைக்கல மென்று அவர்பாதஞ் சேர்ந்தான்காண்
சேர்ந்த வுடனே திருமால் மனமகிழ்ந்து
ஓர்ந்த படையோடே உடன்யுத்தஞ் செய்திடவே
அரக்கன் படையும் அச்சுதனார் தன்படையும் 480

இரக்க மில்லாமல் இருபேருஞ் சண்டையிட்டார்
படைபொருது வெல்லாமல் பத்துத்தலை யுள்ளோனும்
கடகரியுந் தோற்றுக் கையிழந்தா னம்மானை
பத்துத் தலையும் பார்மீதி லற்றுவிழ
மற்று நிகரொவ்வா மாயத் திருநெடுமால்
அரக்க னுயிரு அங்குமிங்கும் நிற்கையிலே
இரக்கமுடன் நின்றங்(கு) ஏதுரைப்பா ரம்மானை
கேளாய்நீ ராவணா கிரேதா யுகந்தனிலே
பாழாய் இரணியனாய்ப் பாரில் பிறந்திருந்தாய்
உன்னிடுக்கங் கண்டு உன்புதல்வ னானாகி
தன்னடுக்கல் வந்துவுன்னைச் சங்காரஞ் செய்தேனான்
மகனாய்ப் பிறந்து வதைத்தேனான் பாரறிய
பகை நானென்று பண்பு மிகக்கூற
அப்போது நீயும் அன்றுரைத்த வார்த்தையினால்
இப்போது உன்குலங்கள் எல்லாங் கருவறுத்து
நாணமில்லா துன்னிலங்கை நகரிதீ யாலழித்துப்
பாணமொன்றா லுன்னைப் படஎய்தேன் கண்டாயே
அல்லாம லுன்றனக்கு அங்கமொரு நூறு
எல்லாரும் வெல்லா ஈசன் கயிலையதும்
எடுத்த பெலமுமுண்டே ஈரஞ்சு சென்னியுண்டே 500

கடுத்த பெலமுள்ள காலாட்டுகள் பொரவுண்டே
இந்திரனை வென்ற ஏற்ற புதல்வருண்டே
சந்திரனுஞ் சூரியனும் தன்னிடத்தி லுண்டல்லவோ
மூணுலோ கத்தாரும் உன்னிடத்தி லுண்டல்லவோ
ஆணுவங்கள் பேசினையே அம்பொன்றில் மாண்டாயே
கோலுபோ லேயுயர்ந்த கொடும்பாவி நீகேளு
நாலு முழமல்லவோ நல்லதலை ஒன்றல்லவோ
என்கை வாளி எடுத்துவிடத் தாங்காமல்
உன்கை காலுமற்று உயிரழிந்து மாண்டாயே
பத்து மலைபோலே பருந்தலைகள் பெற்றதெல்லாம்
இத்தலத்தில் கண்டிலனே என்கையால் மாண்டாயே
மாண்டாய்நீ யென்று வசைகூறக் கேட்டரக்கன்
ஏண்டா மழுப்புகிறாய் இராமனோ கொல்லுவது
தம்பி யெனப்பிறந்து சத்துருப்போல் தான்சமைந்து
என்பெலங்க ளெல்லாம் எடுத்துரைத்தா னுன்றனுக்கு
ஆனதா லென்னுயிரு அடையாளம் பார்த்துலக்காய்
ஊனமுற எய்தாய் உயிரழிந்தே னல்லாது
நீயோடா என்பெலங்கள் நிலைபார்த்துக் கொல்லுவது
பேயா நீபோடா புலம்பாதே யென்னிடத்தில்
அப்போது மாயன் அதிகசீற் றத்துடனே 520

ஒப்பொன் றில்லாதார் உரைப்பார்கா ணம்மானை
உன்னுட தம்பி யாலே உயிர்நிலை யறிந்து யானும்
என்னுட சரத்தால் கொன்றேன் என்றியம்பிய அரக்கா வுன்னைப்
பின்னுகப் பிறப்பு தன்னில் பிறப்புநூ றோடுங் கூடி
அன்னுகந் தன்னில் தோன்ற அருளுவே னுன்னை நானே

என்னொரு தம்பி யாலே என்னையுங் கொன்றா யென்று
தன்னொரு மதத்தால் நீயும் சாற்றிய அரக்கா வுன்னைப்
பின்னொரு யுகத்தில் நூறு பிறப்புடன் பிறவி செய்து
இன்னொரு ஆளின் கையால் இறந்திடச் செய்வே னுன்னை

என்னுடைய தம்பி யாலேதா னென்னுயிரை
உன்னுடைய அம்பால் உயிரழிந்தே னல்லாது
என்னைநீ கொல்ல ஏலாது என்றுரைத்தாய்
உன்னை நானிப்போ ஒருபிறவி செய்யுகிறேன்
என்றுசொல்லி மாயன் எண்ணவொண்ணாக் கோபமுடன்
அன்று கயிலை அரனிடத்தில் சென்றிருந்து
முன்னேயுள்ள துண்டம் ஓரிரண்டு உள்ளதிலே
ஒன்னேயொரு துண்டம் ஒருநூறு பங்குவைத்துத்
துவாபர யுகம்வகுத்துத் துரியோதன னெனவே
கிரேதா யுகமழித்துக் கீழுலகில் தோணவைத்தார்




அகிலத்திரட்டு அம்மானை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக