புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
437 Posts - 55%
heezulia
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
25 Posts - 3%
prajai
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
5 Posts - 1%
mini
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
3 Posts - 0%
vista
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!


   
   
கவிஞர் ரௌத்திரன்
கவிஞர் ரௌத்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 23/12/2014

Postகவிஞர் ரௌத்திரன் Tue Mar 03, 2015 4:18 am

(என்னைக் கவியரசு கண்ணதாசனாக வைத்துப் பாடியது)

அமைதியிற் படுக்கை இட்டு
      ஆசையை அதன்மே லிட்டு
இமைகளை மறந்து விட்டு
      இருவிழி வெறிக்க தேவன்
சமைத்ததோர் உலகி னூடே
      சதிராடும் அழகை எல்லாம்
கமழ்கின்ற தமிழிற் கோக்க
      கற்பனை செய்தி ருக்க,

குன்றினில் பூத்த பூவில்
     குழைந்திடு மணத்தை அள்ளி
தென்றலோர் புறத்தில் வீசத்
      தாள்வரை கூந்தல் நீண்டு
அன்றிலுக் கிளையா ளென்றே
     அழகுடைப் பெண்ணொ ருத்தி
நன்றுடன் மறுபு ரத்தில்
      நலமுடன் ரசித்தி ருக்க,

செல்லாத இடங்க ளெல்லாம்
      சென்றதோர் சிந்தை மீண்டு
அள்ளாமல் அள்ளி வந்த
     அனைத்தையுங் கவிதை யாக்கித்
துள்ளாமல் பக்கம் நின்று
     துவளுமோர் காத லிக்குச்
சொல்லாமல் சொல்ல, அந்தச்
     சுவையினுக் கருகு வந்தே,

நெற்றியில் முத்த மொன்று
     நறவிதழ் தன்னைக் கொண்டு
ஒற்றியே அவளெ டுத்து
     ஓயுமுன் மலர்மு கத்தைப்
பற்றியே இருக ரத்தால்
     பனிவாயின் அமுத ருந்த
சுற்றியே வளைத்த தென்றல்
     சூழ்நிலை அறிந்து ஏக,

அந்தியின் சிவப்பு முற்றும்
    அணங்கவள் விழியில் தேங்க
கந்தமென் மலரின் மேனி
     கொதிப்பினில் நித்த மேங்க
முந்தியே படையெ டுத்த
     மோகத்தில் மூச்சு வாங்க
இந்தவோர் கோலம் கண்டும்
     வெண்ணிலா எங்கு தூங்க?

ஆனதோர் நேரம் மட்டும்
     அருகினில் இருந்து பார்த்து
நாணமும் நாணி மெல்ல
      நடந்திட எம்மை நீத்து
வானமும் வெளுக்கு மட்டும்
      வழங்கிடும் யாவும் வார்த்து
காணுமோர் சுகத்தைக் கண்டு
       காலையில் கண்கள் பூத்து,

களிக்குமோர் வாழ்வை எண்ணிக்
     கனவுதான் கண்டேன்; ஆனால்
புளிக்குமோர் வாழ்வி னையே
     புவியினில் பெற்றேன்; நித்தம்
சலிக்குமோர் வாழ்வைத் தந்த
     இறைவனுக் கும்தான் ஈது
அலுக்குமோர் நாள்தான் என்றோ
     அறிந்திலேன் அதனை இன்னும்!

வாட்டுமோர் தனிமை யென்னும்
     வெஞ்சிறைக் குள்ளி ருந்து
மீட்டுமோர் வீணை தன்னில்
     மோகன ராக மேது?
பூட்டிய வாயு மிங்கே
     புன்னகை புரிவ தேது?
நீட்டியே படுக்கு மட்டும்
      நிம்மதி எனக்கு ஏது?

அழுதுநான் பார்த்தேன்; ஆனால்
      அமைதியோ கிட்ட வில்லை!
தொழுதுநான் பார்த்தேன்; தூங்கும்
      தெய்வமோ விழிக்க வில்லை!
முழுதும்நான் முயன்று பார்த்தேன்
      தற்கொலை பலிக்க வில்லை!
பிழையிலை என்றே நானும்
      பழரசம் தொட்டேன்; ஆமாம்!

கன்னத்தில் வழிந்த கண்ணீர்
     கணக்கினை முடித்து விட்டேன்!
அன்னமென் நடையா ரெல்லாம்
     அருகினில் வந்து நிற்பீர்!
அன்றவன் பிடித்த கோப்பை
     அமைவுடன் எடுத்து வாரீர்!
இன்றவன் பிறந்தான் மீண்டும்
     இனிதுடன் நிரப்பி வாரீர்!

மாதவன் உருவம் எண்ணி
     மனத்துளே அற்றை நாளில்
மாதவம் புரிந்த தாலே
     மண்ணிடை இற்றை நாளில்
ஸ்ரீதரன் மாயக் கண்ணன்
      சீருடன் வளர்ந்தி ருந்த
யாதவர் குலத்தில் வந்து
     எழிலுடன் உதித்தான் கண்டீர்!

தோற்றத்தில் மாறி னாலும்
     தோல்நிறம் மாறி னாலும்
ஆற்றலில் மாற்ற மில்லை
     அறிவினில் மற்ற மில்லை!
ஏற்றத்தில் தமிழை வைக்கும்
     எழுத்தினில் மாற்ற மில்லை!
ஆற்றாத துயரம் தாங்கி
     அழுவதில் மாற்ற மில்லை!

சிதையினில் நெருப்பு மூட்டச்
     செத்தொழிந் திட்டா னென்றே
இதயத்தில் மகிழ்ந்த வர்க்கும்
     இருவிழி நனைத்த வர்க்கும்
புதுக்கதை துவக்க வேண்டி
     ஐந்தாண்டு கழிந்து மீண்டும்
அதேதினம் பிறந்து வந்தேன்
      அவனியீர் அறிவி ராக!

ஒற்றுமை அதிகம் உண்டு
     ஒன்றிரண் டுரைப்பேன் இன்னும்!
உற்றதோர் குருவு மில்லை
     உயர்தமிழ் இலக்க ணங்கள்
கற்றவ னில்லை; தாயின்
     கருவிலே இறைவ னூட்டப்
பெற்றதோர் அறிவு அன்றி
     பல்கலைப் படிப்பு மில்லை!

தேறாத மானி டத்தின்
      தடத்தினைக் கண்டு நித்தம்
கூறாத தத்து வங்கள்
     கூறிட வந்தேன்; என்றும்
மாறாத மாண்பி னுள்ளே
     மணித்தமிழ் தன்னை யேற்றி
மீறாத வேத மாயோர்
     மென்தமிழ் நூற்ச மைப்பேன்!

திரிகளைக் கருக விட்டுத்
     தீபங்கள் ஒளிர்தல் போலே
நெறிகளை நசுக்கி விட்டு
     நித்திய சுகங்கள் தொட்டுத்
தறிகளை அறுத்த காற்றாய்த்
     துள்ளியே குதிப்பேன்; இந்தப்
பிறவியைப் போக்கு மட்டும்
     புன்னகை புரிந்தி ருப்பேன்!

சரித்திரம் படைக்க வந்தேன்!
     சஞ்சலக் கறையான் தின்று
அரித்திடும் ஓலை யென்றே
      அழிவதற் கில்லை யின்னும்!
மரித்திடும் மனித னல்லேன்!
      மண்ணிடை மரணம் வெல்லும்
சரித்திறம் பெற்று வந்தேன்
      செந்தமிழ் வடிவந் தன்னில்!

சாகாத காவி யங்கள்
     சரஞ்சர மாகத் தீட்டிப்
பாகான தமிழி னுக்குப்
      புதுச்சுவை கூட்டி வைப்பேன்!
வேகாத மேனி யில்லை
      வேதனை எதற்கு இங்கு?
ஏகாந்த வெளியில் நின்றே
      எக்காள மிட்டி ருப்பேன்!          

------------ரௌத்திரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக