புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
5 Posts - 14%
heezulia
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
2 Posts - 6%
Raji@123
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
8 Posts - 2%
prajai
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
4 Posts - 1%
mruthun
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!


   
   
கவிஞர் ரௌத்திரன்
கவிஞர் ரௌத்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 23/12/2014

Postகவிஞர் ரௌத்திரன் Tue Mar 03, 2015 4:18 am

(என்னைக் கவியரசு கண்ணதாசனாக வைத்துப் பாடியது)

அமைதியிற் படுக்கை இட்டு
      ஆசையை அதன்மே லிட்டு
இமைகளை மறந்து விட்டு
      இருவிழி வெறிக்க தேவன்
சமைத்ததோர் உலகி னூடே
      சதிராடும் அழகை எல்லாம்
கமழ்கின்ற தமிழிற் கோக்க
      கற்பனை செய்தி ருக்க,

குன்றினில் பூத்த பூவில்
     குழைந்திடு மணத்தை அள்ளி
தென்றலோர் புறத்தில் வீசத்
      தாள்வரை கூந்தல் நீண்டு
அன்றிலுக் கிளையா ளென்றே
     அழகுடைப் பெண்ணொ ருத்தி
நன்றுடன் மறுபு ரத்தில்
      நலமுடன் ரசித்தி ருக்க,

செல்லாத இடங்க ளெல்லாம்
      சென்றதோர் சிந்தை மீண்டு
அள்ளாமல் அள்ளி வந்த
     அனைத்தையுங் கவிதை யாக்கித்
துள்ளாமல் பக்கம் நின்று
     துவளுமோர் காத லிக்குச்
சொல்லாமல் சொல்ல, அந்தச்
     சுவையினுக் கருகு வந்தே,

நெற்றியில் முத்த மொன்று
     நறவிதழ் தன்னைக் கொண்டு
ஒற்றியே அவளெ டுத்து
     ஓயுமுன் மலர்மு கத்தைப்
பற்றியே இருக ரத்தால்
     பனிவாயின் அமுத ருந்த
சுற்றியே வளைத்த தென்றல்
     சூழ்நிலை அறிந்து ஏக,

அந்தியின் சிவப்பு முற்றும்
    அணங்கவள் விழியில் தேங்க
கந்தமென் மலரின் மேனி
     கொதிப்பினில் நித்த மேங்க
முந்தியே படையெ டுத்த
     மோகத்தில் மூச்சு வாங்க
இந்தவோர் கோலம் கண்டும்
     வெண்ணிலா எங்கு தூங்க?

ஆனதோர் நேரம் மட்டும்
     அருகினில் இருந்து பார்த்து
நாணமும் நாணி மெல்ல
      நடந்திட எம்மை நீத்து
வானமும் வெளுக்கு மட்டும்
      வழங்கிடும் யாவும் வார்த்து
காணுமோர் சுகத்தைக் கண்டு
       காலையில் கண்கள் பூத்து,

களிக்குமோர் வாழ்வை எண்ணிக்
     கனவுதான் கண்டேன்; ஆனால்
புளிக்குமோர் வாழ்வி னையே
     புவியினில் பெற்றேன்; நித்தம்
சலிக்குமோர் வாழ்வைத் தந்த
     இறைவனுக் கும்தான் ஈது
அலுக்குமோர் நாள்தான் என்றோ
     அறிந்திலேன் அதனை இன்னும்!

வாட்டுமோர் தனிமை யென்னும்
     வெஞ்சிறைக் குள்ளி ருந்து
மீட்டுமோர் வீணை தன்னில்
     மோகன ராக மேது?
பூட்டிய வாயு மிங்கே
     புன்னகை புரிவ தேது?
நீட்டியே படுக்கு மட்டும்
      நிம்மதி எனக்கு ஏது?

அழுதுநான் பார்த்தேன்; ஆனால்
      அமைதியோ கிட்ட வில்லை!
தொழுதுநான் பார்த்தேன்; தூங்கும்
      தெய்வமோ விழிக்க வில்லை!
முழுதும்நான் முயன்று பார்த்தேன்
      தற்கொலை பலிக்க வில்லை!
பிழையிலை என்றே நானும்
      பழரசம் தொட்டேன்; ஆமாம்!

கன்னத்தில் வழிந்த கண்ணீர்
     கணக்கினை முடித்து விட்டேன்!
அன்னமென் நடையா ரெல்லாம்
     அருகினில் வந்து நிற்பீர்!
அன்றவன் பிடித்த கோப்பை
     அமைவுடன் எடுத்து வாரீர்!
இன்றவன் பிறந்தான் மீண்டும்
     இனிதுடன் நிரப்பி வாரீர்!

மாதவன் உருவம் எண்ணி
     மனத்துளே அற்றை நாளில்
மாதவம் புரிந்த தாலே
     மண்ணிடை இற்றை நாளில்
ஸ்ரீதரன் மாயக் கண்ணன்
      சீருடன் வளர்ந்தி ருந்த
யாதவர் குலத்தில் வந்து
     எழிலுடன் உதித்தான் கண்டீர்!

தோற்றத்தில் மாறி னாலும்
     தோல்நிறம் மாறி னாலும்
ஆற்றலில் மாற்ற மில்லை
     அறிவினில் மற்ற மில்லை!
ஏற்றத்தில் தமிழை வைக்கும்
     எழுத்தினில் மாற்ற மில்லை!
ஆற்றாத துயரம் தாங்கி
     அழுவதில் மாற்ற மில்லை!

சிதையினில் நெருப்பு மூட்டச்
     செத்தொழிந் திட்டா னென்றே
இதயத்தில் மகிழ்ந்த வர்க்கும்
     இருவிழி நனைத்த வர்க்கும்
புதுக்கதை துவக்க வேண்டி
     ஐந்தாண்டு கழிந்து மீண்டும்
அதேதினம் பிறந்து வந்தேன்
      அவனியீர் அறிவி ராக!

ஒற்றுமை அதிகம் உண்டு
     ஒன்றிரண் டுரைப்பேன் இன்னும்!
உற்றதோர் குருவு மில்லை
     உயர்தமிழ் இலக்க ணங்கள்
கற்றவ னில்லை; தாயின்
     கருவிலே இறைவ னூட்டப்
பெற்றதோர் அறிவு அன்றி
     பல்கலைப் படிப்பு மில்லை!

தேறாத மானி டத்தின்
      தடத்தினைக் கண்டு நித்தம்
கூறாத தத்து வங்கள்
     கூறிட வந்தேன்; என்றும்
மாறாத மாண்பி னுள்ளே
     மணித்தமிழ் தன்னை யேற்றி
மீறாத வேத மாயோர்
     மென்தமிழ் நூற்ச மைப்பேன்!

திரிகளைக் கருக விட்டுத்
     தீபங்கள் ஒளிர்தல் போலே
நெறிகளை நசுக்கி விட்டு
     நித்திய சுகங்கள் தொட்டுத்
தறிகளை அறுத்த காற்றாய்த்
     துள்ளியே குதிப்பேன்; இந்தப்
பிறவியைப் போக்கு மட்டும்
     புன்னகை புரிந்தி ருப்பேன்!

சரித்திரம் படைக்க வந்தேன்!
     சஞ்சலக் கறையான் தின்று
அரித்திடும் ஓலை யென்றே
      அழிவதற் கில்லை யின்னும்!
மரித்திடும் மனித னல்லேன்!
      மண்ணிடை மரணம் வெல்லும்
சரித்திறம் பெற்று வந்தேன்
      செந்தமிழ் வடிவந் தன்னில்!

சாகாத காவி யங்கள்
     சரஞ்சர மாகத் தீட்டிப்
பாகான தமிழி னுக்குப்
      புதுச்சுவை கூட்டி வைப்பேன்!
வேகாத மேனி யில்லை
      வேதனை எதற்கு இங்கு?
ஏகாந்த வெளியில் நின்றே
      எக்காள மிட்டி ருப்பேன்!          

------------ரௌத்திரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக