புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
46 Posts - 40%
prajai
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
4 Posts - 3%
Jenila
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
1 Post - 1%
kargan86
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
1 Post - 1%
jairam
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
8 Posts - 5%
prajai
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
6 Posts - 4%
Jenila
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
1 Post - 1%
kargan86
அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_m10அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!


   
   
கவிஞர் ரௌத்திரன்
கவிஞர் ரௌத்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 23/12/2014

Postகவிஞர் ரௌத்திரன் Tue Mar 03, 2015 4:18 am

(என்னைக் கவியரசு கண்ணதாசனாக வைத்துப் பாடியது)

அமைதியிற் படுக்கை இட்டு
      ஆசையை அதன்மே லிட்டு
இமைகளை மறந்து விட்டு
      இருவிழி வெறிக்க தேவன்
சமைத்ததோர் உலகி னூடே
      சதிராடும் அழகை எல்லாம்
கமழ்கின்ற தமிழிற் கோக்க
      கற்பனை செய்தி ருக்க,

குன்றினில் பூத்த பூவில்
     குழைந்திடு மணத்தை அள்ளி
தென்றலோர் புறத்தில் வீசத்
      தாள்வரை கூந்தல் நீண்டு
அன்றிலுக் கிளையா ளென்றே
     அழகுடைப் பெண்ணொ ருத்தி
நன்றுடன் மறுபு ரத்தில்
      நலமுடன் ரசித்தி ருக்க,

செல்லாத இடங்க ளெல்லாம்
      சென்றதோர் சிந்தை மீண்டு
அள்ளாமல் அள்ளி வந்த
     அனைத்தையுங் கவிதை யாக்கித்
துள்ளாமல் பக்கம் நின்று
     துவளுமோர் காத லிக்குச்
சொல்லாமல் சொல்ல, அந்தச்
     சுவையினுக் கருகு வந்தே,

நெற்றியில் முத்த மொன்று
     நறவிதழ் தன்னைக் கொண்டு
ஒற்றியே அவளெ டுத்து
     ஓயுமுன் மலர்மு கத்தைப்
பற்றியே இருக ரத்தால்
     பனிவாயின் அமுத ருந்த
சுற்றியே வளைத்த தென்றல்
     சூழ்நிலை அறிந்து ஏக,

அந்தியின் சிவப்பு முற்றும்
    அணங்கவள் விழியில் தேங்க
கந்தமென் மலரின் மேனி
     கொதிப்பினில் நித்த மேங்க
முந்தியே படையெ டுத்த
     மோகத்தில் மூச்சு வாங்க
இந்தவோர் கோலம் கண்டும்
     வெண்ணிலா எங்கு தூங்க?

ஆனதோர் நேரம் மட்டும்
     அருகினில் இருந்து பார்த்து
நாணமும் நாணி மெல்ல
      நடந்திட எம்மை நீத்து
வானமும் வெளுக்கு மட்டும்
      வழங்கிடும் யாவும் வார்த்து
காணுமோர் சுகத்தைக் கண்டு
       காலையில் கண்கள் பூத்து,

களிக்குமோர் வாழ்வை எண்ணிக்
     கனவுதான் கண்டேன்; ஆனால்
புளிக்குமோர் வாழ்வி னையே
     புவியினில் பெற்றேன்; நித்தம்
சலிக்குமோர் வாழ்வைத் தந்த
     இறைவனுக் கும்தான் ஈது
அலுக்குமோர் நாள்தான் என்றோ
     அறிந்திலேன் அதனை இன்னும்!

வாட்டுமோர் தனிமை யென்னும்
     வெஞ்சிறைக் குள்ளி ருந்து
மீட்டுமோர் வீணை தன்னில்
     மோகன ராக மேது?
பூட்டிய வாயு மிங்கே
     புன்னகை புரிவ தேது?
நீட்டியே படுக்கு மட்டும்
      நிம்மதி எனக்கு ஏது?

அழுதுநான் பார்த்தேன்; ஆனால்
      அமைதியோ கிட்ட வில்லை!
தொழுதுநான் பார்த்தேன்; தூங்கும்
      தெய்வமோ விழிக்க வில்லை!
முழுதும்நான் முயன்று பார்த்தேன்
      தற்கொலை பலிக்க வில்லை!
பிழையிலை என்றே நானும்
      பழரசம் தொட்டேன்; ஆமாம்!

கன்னத்தில் வழிந்த கண்ணீர்
     கணக்கினை முடித்து விட்டேன்!
அன்னமென் நடையா ரெல்லாம்
     அருகினில் வந்து நிற்பீர்!
அன்றவன் பிடித்த கோப்பை
     அமைவுடன் எடுத்து வாரீர்!
இன்றவன் பிறந்தான் மீண்டும்
     இனிதுடன் நிரப்பி வாரீர்!

மாதவன் உருவம் எண்ணி
     மனத்துளே அற்றை நாளில்
மாதவம் புரிந்த தாலே
     மண்ணிடை இற்றை நாளில்
ஸ்ரீதரன் மாயக் கண்ணன்
      சீருடன் வளர்ந்தி ருந்த
யாதவர் குலத்தில் வந்து
     எழிலுடன் உதித்தான் கண்டீர்!

தோற்றத்தில் மாறி னாலும்
     தோல்நிறம் மாறி னாலும்
ஆற்றலில் மாற்ற மில்லை
     அறிவினில் மற்ற மில்லை!
ஏற்றத்தில் தமிழை வைக்கும்
     எழுத்தினில் மாற்ற மில்லை!
ஆற்றாத துயரம் தாங்கி
     அழுவதில் மாற்ற மில்லை!

சிதையினில் நெருப்பு மூட்டச்
     செத்தொழிந் திட்டா னென்றே
இதயத்தில் மகிழ்ந்த வர்க்கும்
     இருவிழி நனைத்த வர்க்கும்
புதுக்கதை துவக்க வேண்டி
     ஐந்தாண்டு கழிந்து மீண்டும்
அதேதினம் பிறந்து வந்தேன்
      அவனியீர் அறிவி ராக!

ஒற்றுமை அதிகம் உண்டு
     ஒன்றிரண் டுரைப்பேன் இன்னும்!
உற்றதோர் குருவு மில்லை
     உயர்தமிழ் இலக்க ணங்கள்
கற்றவ னில்லை; தாயின்
     கருவிலே இறைவ னூட்டப்
பெற்றதோர் அறிவு அன்றி
     பல்கலைப் படிப்பு மில்லை!

தேறாத மானி டத்தின்
      தடத்தினைக் கண்டு நித்தம்
கூறாத தத்து வங்கள்
     கூறிட வந்தேன்; என்றும்
மாறாத மாண்பி னுள்ளே
     மணித்தமிழ் தன்னை யேற்றி
மீறாத வேத மாயோர்
     மென்தமிழ் நூற்ச மைப்பேன்!

திரிகளைக் கருக விட்டுத்
     தீபங்கள் ஒளிர்தல் போலே
நெறிகளை நசுக்கி விட்டு
     நித்திய சுகங்கள் தொட்டுத்
தறிகளை அறுத்த காற்றாய்த்
     துள்ளியே குதிப்பேன்; இந்தப்
பிறவியைப் போக்கு மட்டும்
     புன்னகை புரிந்தி ருப்பேன்!

சரித்திரம் படைக்க வந்தேன்!
     சஞ்சலக் கறையான் தின்று
அரித்திடும் ஓலை யென்றே
      அழிவதற் கில்லை யின்னும்!
மரித்திடும் மனித னல்லேன்!
      மண்ணிடை மரணம் வெல்லும்
சரித்திறம் பெற்று வந்தேன்
      செந்தமிழ் வடிவந் தன்னில்!

சாகாத காவி யங்கள்
     சரஞ்சர மாகத் தீட்டிப்
பாகான தமிழி னுக்குப்
      புதுச்சுவை கூட்டி வைப்பேன்!
வேகாத மேனி யில்லை
      வேதனை எதற்கு இங்கு?
ஏகாந்த வெளியில் நின்றே
      எக்காள மிட்டி ருப்பேன்!          

------------ரௌத்திரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக