புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 02, 2015 12:36 am

First topic message reminder :

பன்றிக் காய்ச்சல்: மக்களைக் கைவிடுகிறதா அரசு?

இது ‘H1N1 இன்ஃபுளுயென்சா வைரஸு’க்கும் மனிதர்களுக்குமான வாழ்வா, சாவா போராட்டம். கடந்த 2009-ல் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்காப்புக்காக ஆண்டுதோறும் தன்னைத் தகவமைத்துக்கொண்டுவருகிறது. இப்படியாக 5 ஆண்டுகளில் அதன் வீரியம் பல மடங்கு பெருகிவிட்டது. அதன் மரபணு மாற்றத்தின் வேகமும் அதிகரித்துவிட்டது. பரிணாம வளர்ச்சியின் நியதி இது. ஆனால், அதை எதிர்கொள்ளும் வகையில் நமது அரசு இயந்திரம் பரிணாமம் அடைந்திருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

புள்ளிவிவரங்கள் ஏமாற்றுகின்றனவா?

ஏழை மக்களின் மீது அலட்சிய மனோபாவம் கொண்ட அரசு மருத்துவ அமைப்புகளைக் கொண்ட நம் நாட்டில், வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலிக் காய்ச்சல் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளத் திராணியில்லாமல் ஏழைகள் தவிக்கிறார்கள். தினம் தினம் பன்றிக் காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் உயர்ந்துகொண்டே போகிறது. “தனியார் மருத்துவமனைகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல் ஆகியவற்றால் ஒருவர் இறந்தால், இறப்புக்குக் காரணமாக அதைக் குறிப்பிடக் கூடாது என்று உள்ளூர் நிர்வாகங்கள் வாய்மொழி உத்தரவிட்டிருக்கின்றன” என்கிறார் தனியார் மருத்துவமனை நிர்வாகி ஒருவர். இப்படியான சூழலில் அரசு தரும் புள்ளிவிவரங்களை நம்புவது அபத்தமாகவே அமையும். ஆகவே, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 16,235 பேர்; இறந்தவர்கள் 926 பேர் என்று அரசு தெரிவிக்கும் புள்ளிவிவரங்களை நாம் நம்பிவிட முடியாது. உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது.

கடும் தட்டுப்பாட்டில் தடுப்பூசிகள்!

இவ்வளவு ஆபத்தான நிலையிலும்கூட பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் பரிந்துரையின் பேரில், அந்த நாடு 2009, செப்டம்பர் மாதத்திலிருந்தே சீரான இடைவெளிகளில் இதற்கான தடுப்பூசிகளை நான்கு மாதம் முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்டோர், இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு விநியோகித்துவருகிறது. ஐரோப்பிய நாடுகளும் இதைக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், 2009-ம் ஆண்டு முதலே இந்தியாவில் பன்றிக் காய்ச்சலில் கணிசமான உயிரிழப்பு ஏற்பட்டாலும், இன்றைய தேதியில் உடனடியாக உயிர் காக்க ஒரு தடுப்பூசியை வாங்கிவிட முடியாது என்பதே முகத்தில் அறையும் உண்மை.

இங்குள்ள சொற்ப நிறுவனங்களின் தயாரிப்புகள் மொத்த நோயாளிகளுக்கும் போதுமானதாக இல்லை. சொல்லப் போனால், தமிழகத்தில் மேற்கண்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர் களுக்கே தடுப்பூசி கிடைப்பதில்லை என்கின்றன மருத்துவ வட்டாரங்கள். பணம் செலுத்தி முன்பதிவு செய்தால் ஒரு வாரத்தில் கிடைக்கலாம். புணேவைச் சேர்ந்த ஒரு தனியார் தடுப்பூசி நிறுவனம், இப்போதுதான் 65 ஆயிரம் ‘வீரியம் குறைக் கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி’களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சுமார் ரூ. 800 விலை கொண்ட இதுவும் மார்ச் மாதம் இறுதியில்தான் விற்பனைக்கு வரும். அதுவரை நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

ஏழைகளின் ‘ரத்தம் உறிஞ்சும்’ பரிசோதனை!

சில நாட்களுக்கு முன்பு வரை நாடு முழுவதும் தனியார் பரிசோதனைக் கூடங்கள், மேற்கண்ட நோய்களின் பரிசோதனைகளுக்கு ஏகபோகமாகக் கட்டணம் (ரூ.10 ஆயிரம் வரை) வசூலித்தன. சில நாட்களுக்கு முன்புதான் அரசு, டெல்லியில் ரூ. 4,500, தமிழகத்தில் ரூ. 3,750 என்று கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது. சரி, தனியார் நிறுவனங்கள் எந்தக் காலத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலித்திருக்கின்றன? எங்கே செல்வார்கள் ஏழைகள்?

அரசு மையங்களில் ரத்தப் பரிசோதனை இலவசம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், எத்தனை அரசு மையங்கள் இருக்கின்றன என்பதுதான் கேள்வி. 32 மாவட்டங்களும் 12 மாநகராட்சிகளும் கொண்ட தமிழகத்தில், ஆறு பரிசோதனை மையங்கள் மட்டுமே அரசு மையங்கள். மீதமுள்ள 13 தனியார் வசம். (பார்க்க: பெட்டிச் செய்தி). அவையும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கின்றன. எங்கோ ஒரு மூலையிலும் மலைக் கிராமங்களிலும் வசிப்போர் எங்கே செல்வது?

என்னதான் தீர்வு?

இதுகுறித்து மருத்துவர் ரெக்ஸ் கூறும்போது, “எனக்குப் போட்டுக்கொள்ள தடுப்பூசிக்காகப் பதிவுசெய்து இரண்டு நாட்களாகிவிட்டன. எப்போது வரும் என்று தெரியவில்லை. மருத்துவரான எனக்கே இந்தக் கதி என்றால், பொதுமக்களின் கதி? அரசை நம்பிப் பலன் இல்லை. இதன் வீரியம் குறையும் வரை மக்கள் பயணங்களைத் தவிர்க்கலாம். அதிகமாகக் கூட்டம் கூடும் பொதுஇடங்களைத் தவிர்க்கலாம். விழாக்களைக் குறைத்துக்கொள்ளலாம். அப்படியே செல்வதாக இருந்தாலும் பிரத்தியேக முகமூடிகள் (சுமார் ரூ.50) அணிந்துகொண்டு செல்லுங்கள்.மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்றால், ‘என் 95’ ரக முகமூடி (ரூ. 200 - 225) அணிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்குள் நுழையும் முன்பு கை, கால்களைச் சுத்தமாகக் கழுவிவிட்டுச் செல்ல வேண்டும்” என்றார்.

சுவாசக் கருவிகள் பற்றாக்குறை- மருத்துவர் ரவீந்திரநாத்

பன்றிக் காய்ச்சலால் 2009-ம் ஆண்டு தொடங்கி, இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாக 600 பேர் வரை உயிரிழக்கிறார்கள். ஆனால், அரசு முடிந்த வரை உண்மையான புள்ளிவிவரங்களை மறைப்பதிலேயே முனைப்பாக இருக்கிறது. தமிழக அரசு 2014-ம் ஆண்டு தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் ஓர் இறப்புகூட இல்லை என்ற தகவலை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இப்போதும் ‘9 பேர் மட்டுமே இறந்துள்ளனர்; நிலைமை கட்டுக்குள் இருக்கிறது’ என்றே அரசு கூறிவருகிறது. இங்கு அரசு மருத்துவமனைகளில் சுவாசக் கருவிகள் கூட பற்றாக்குறையாக உள்ளன.

எங்கெல்லாம் பரிசோதனை செய்யலாம்?

அரசு: கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட், சென்னை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, நெல்லை மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி.

தனியார்: சென்னை - பாரத் பரிசோதனை மையம், ஹைடெக் டயக்னாஸ்டிக் மையம், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, லிஸ்டர் மெட்ரோபாலிக் லேப் அண்ட் ரிசர்ச் சென்டர், டயக்னாஸ்டிக் சர்வீசஸ், ஸ்டார் பயோடெக் சொலுஷன், பிரிமியர் ஹெல்த் சென்டர்.

கோவை - மைக்ரோ பயாலஜி லேப்.

நாகர்கோவில் - விவேக் லேப்.

வேலூர் - கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி.

திருச்சி - டாக்டர்ஸ் டயக்னாஸ்டிக் சென்டர்.

மறைக்க நினைக்கும் மத்திய அரசு- மருத்துவர் புகழேந்தி

பன்றிக் காய்ச்சலுக்கான வைரஸ் கிருமியின் டி.என்.ஏ-வில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்) விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சரகம் அப்படி ஏற்படவில்லை என்கிறது. ஆனால், கிருமியின் வீரியம் கூடிவிட்டதை மட்டும் மத்திய அமைச்சரகம் ஏற்றுக்கொள்கிறது. டி.என்.ஏ-வில் மாற்றம் ஏற்படாமல் கிருமியின் வீரியம் அதிகரிக்காது என்பது அடிப்படை உண்மை. ஆனால், இதுதொடர்பாக இந்திய அரசு விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. சென்னையில் மட்டுமே 18 இடங்களில் பன்றிக் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், அரசு 4 என்று மட்டுமே சொல்கிறது. சமூக அக்கறை கொண்ட தனியார் அமைப்புகளுடன் அரசு நிர்வாகம் இணைந்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கான தீர்வு காண முடியும்.

தாமதமாகிவிட்டது!- மருத்துவர் கு.கணேசன்

நோயாளியின் மூக்கு, தொண்டையிலிருந்து சளியை எடுத்துச் செய்யப்படும் ‘ரியல் டைம் பி.சி.ஆர்.’ பரிசோதனையும் ‘வைரஸ் கல்ச்சர்’ பரிசோதனையும் பன்றிக் காய்ச்சலை உறுதிசெய்கின்றன. ஆனால், இவை நவீன மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம். அதேபோல் டாமிஃபுளூ மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளன. தனியார் மருத்துவமனைகள் இவற்றை அரசு மருத்துவமனைகளிடம் கேட்டு வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஆனால், தனியார் மருத்துவமனைகள் இதில் ரிஸ்க் எடுப்பதில்லை. நோயின் மூன்று நிலைகளில் முதல் நிலையில் மட்டுமே சித்தா, ஆயுர்வேதம் தீர்வளிக்கும். அடுத்தடுத்த நிலைகளில் இருப்பவர்களுக்கு அலோபதி மட்டுமே தீர்வு. தடுப்பூசியைப் பொறுத்தவரை மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே போட்டால்தான் பயன் தரும். பன்றிக் காய்ச்சல் பரவிய பிறகு போடுவது முழுமையான பலன் தராது. செலுத்தப்பட்ட மூன்று வாரங்கள் கழித்தே இதன் தடுப்பாற்றல் வெளிப்படும்.

- டி.எல். சஞ்சீவிகுமார்



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2015 12:05 am

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவனுக்கு பன்றி காய்ச்சல் நோய் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். லாரி டிரைவர். இவருடைய மகன் தேவராஜன் (வயது 4). ராஜேஷ்குமாரின் தம்பி கரூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரை பார்க்க குடும்பத்துடன் நேற்று முனதினம் ராஜேஷ்குமார் கரூர் வந்தார். அன்று இரவு சிறுவன் தேவராஜனுக்கு திடீர் என்று காய்ச்சல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சிறுவனை கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். டாக்டர்கள், சிறுவனை பரிசோதனை செய் தனர். அப்போது சிறுவனுக்கு பன்றி காய்ச்சல் நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனுக்கு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2015 10:34 pm

அதிக உக்கிரத்துடன் தாக்கும் பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 1,627 ஆக உயர்ந்தது

காலனின் வடிவில் வந்து இந்தியர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1,627 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்நோயின் தாக்கத்தால் 28,441 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.

இந்நிலையில், பன்றிக் காய்ச்சலுக்கு நேற்று (12-ம் தேதி) வரை 1,627 பேர் பலியாகியுள்ளதாகவும், நாடு முழுவதும் இந்நோயால் 22,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் மட்டும் 368 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில், ஒருவரின் உடலுக்குள் புகுந்து, பிற உடல்களுக்கு மாறி, மாறி பரவி வரும் எச்1என்1 வைரஸ் முன்பைவிட அதிக உக்கிரத்துடன் பரவிக் கொண்டுள்ளதாக அமெரிக்காவின் மாஸாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையம் நேற்று எச்சரித்துள்ளது.



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2015 10:35 pm

ராஜஸ்தானில் மேலும் 8 பேர் சாவு: பன்றிக்காய்ச்சல் பலி 366 ஆக உயர்வு

ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்ததையடுத்து இந்த ஆண்டில் இதுவரை இம்மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 68 பேர் தலைநகர் ஜெய்ப்பூரில் பலியாகியுள்ளனர்.

எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.

ராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இம்மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6,123 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து நேற்று (12-ம் தேதி) வரை மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் 68 பேர், அஜ்மீரில் 41 பேர், ஜோத்பூரில் 33, நகவுர்-29, பார்மர்-23, கோட்டா-18, சிட்டோர்கர்-13, சிகர் மற்றும் உதய்ப்பூர் மாவட்டங்களில் தலா 12 பேரும் இதர மாவட்டங்களில் தலா பத்துக்கும் குறைவானவர்களும் பலியாகியுள்ளனர்.



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2015 10:41 pm

மானாமதுரையில் பன்றிக்காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பணிகள்

சிவகங்கை மண்டல பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மானாமதுரை சி.எஸ்.ஐ. ஆரம்ப பள்ளியில் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியை பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் மற்றும் மாணவ– மாணவிகள் காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகி கிசிச்சை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்துகளை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மாணவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக்கொள்ள வேண்டும். பேருந்து, தொடர் வண்டி, பள்ளிகள், அலுவலகங்கள், கோவில்கள் மற்றும் பொது கழிப்பிடங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்றுவந்த பிறகு கைகளில் அனைத்து பகுதிகளையும் சோப்பு நீரால் 20 விநாடி முதல் 40 விநாடி வரை சுத்தம் செய்ய வேண்டும். பயன்படுத்திய கைக்குட்டைகள் மற்றும் துணிகளை நன்கு துவைத்து வெயிலில் காய வைத்த பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும். கைகளை கழுவாமல் மூக்கு, வாய் மற்றும் கண்களை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

பொது இடங்களுக்கு செல்லும்போது, கை சுத்தகரிப்பான் கொண்டு செல்லப்பட வேண்டும். தண்ணீர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும்போது கை சுத்திகரிப்பானை பயன்படுத்தி குறைந்தபட்சம் 20 விநாடிகள் கைகளின் அனைத்து பாகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். கைகுலுக்கும்போது பிறரிடம் இருந்து இந்நோய் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதால், கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் கைகளை சுத்தப்படத்தினாலே 80 சதவீதம் இந்நோய் ஏற்படாமல் தடுக்க இயலும். மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். நெருக்கடியான இடங்களில் மனிதர்களுக்கு மிக அருகில் செல்லாமல் ஓரளவு இடைவெளி விட்டு நிற்க வேண்டும். இவ்வாறு செயல்படுவதால் இந்நோய் கண்டவர்களிடம் இருந்து இருமல், தும்மல் மூலம் நோய் கிருமிகள் நம்மை தாக்காமல் இருக்க வழிவகை செய்யும்.

மேற்கண்ட விவரங்களை பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் விளக்கி கூறினார்கள்.

மாணவர்களுக்கு கை சுத்தம் செய்யும் முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பேரூராட்சி சார்பில் சோப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், துப்பரவு மேபார்வையாளர் மணிகண்டன், பாலசுப்பிரமணியன், முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார வட்டார சுகாதார மேற் பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் பிராங்கிளின், குமாரவேலு, கோபாலகிருஷ்ணன் மற்றும் ஞானசேகரன், சி.எஸ்.ஐ. ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை ஞானஜெபஜோதிபாய் மற்றும் ஆதாரக்கல்வி ஆசிரியர் விக்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 1:50 am

இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 1,710 பேர் பலி

இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய நோய்க்கு நேற்று மேலும் 36 பேர் பலியானார்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 1,710 பேர் பலியாகி உள்ளனர்.

அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 382 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் 29 ஆயிரத்து 558 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 16, 2015 12:19 pm

பயனுள்ள கட்டுரை... பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 103459460

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 11:30 pm

பன்றிக் காய்ச்சல் பயம் வேண்டாம்... பதற்றம் வேண்டாம்!

“இந்த நூற்றாண்டில், திடீர் திடீரென நோய்கள் பரவி, பதற்றத்தை உருவாக்கி வருகின்றன. நம் முன்னோர்கள், பல காய்ச்சல்களுக்கும் கண்டறிந்துவைத்துள்ள மருந்துகளை நாம்தான் கண்டுகொள்வதும் இல்லை. உபயோகிப்பதும் இல்லை. வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடிய காய்ச்சல்களை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே `கபசுரம்’ என்று வகை பிரித்து, மருந்தும் சொல்லியிருக்கிறார் யூகி முனி என்ற மாமுனிவர். இப்போது மக்களை பீதிக்கு உள்ளாக்கியிருக்கும் பன்றிக் காய்ச்சலும் இந்த கபசுரத்துக்குள் அடங்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

“பன்றிக்காய்ச்சல் வரக் காரணம் என்ன?”

“எச்1என்1 (H1N1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஒரு கலப்பின நுண்ணுயிரிதான் (Mutated virus) இந்தக் காய்ச்சலுக்குக் காரணம். மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளில் குப்பையில் கொட்டப்படும் பன்றி இறைச்சி, கோழி இறைச்சி போன்றவை அழுகிய நிலையில் இருக்கும்போது, அதில் இருந்து உருவாகும் நுண்ணுயிரி இது. அங்கிருந்துதான் நம் நாட்டுக்குப் பரவியிருக்கிறது. அந்த நாடுகளின் சீதோஷ்ண நிலையில் இது வேகமாகப் பரவக்கூடியது. ஆனால், நம் நாட்டின் சீதோஷ்ண நிலையில் அவ்வளவு வேகமாகப் பரவாது.”

“எப்போது இந்த வைரஸ் பரவும்? எல்லோருக்கும் தொற்றுமா?”

“பொதுவாக, குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் காலத்தில்தான், எல்லா வைரஸ்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இந்த வைரஸும் அப்படித்தான் பரவும். காற்று மூலம் பரவக்கூடியது. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களை இந்த வைரஸ் எளிதில் தாக்கி, கபத்தை உண்டாக்கும். முக்கியமாக, காசநோய் இருப்பவர்களுக்கு உடனடியாகத் தொற்றி, நோயை இன்னும் தீவிரமாக்கிவிடும்.”

“கபசுரக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?”

“மூக்கு, தொண்டை போன்ற மேல் சுவாசப் பாதை (Upper respiratory tract) உறுப்புகளைத்தான் இந்தக் கிருமி முதலில் தாக்கும். எனவே, மூக்கு எரிச்சல், மூக்கில் நீர் வழிதல், மூக்கடைப்பு, தொண்டையில் தொற்று, தொண்டை வலி எனக் காய்ச்சல் வரை போய் நிற்கும்.”



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 11:31 pm

“சித்த மருத்துவத்தில் இதற்கு மருந்து உள்ளதா?”

“யூகி முனி என்ற சித்தர், காய்ச்சலை 64 வகைகளாகப் பிரித்துள்ளார். உலகிலேயே வேறு எங்கும், இத்தகைய பகுப்பு கிடையாது. இப்போது பன்றிக் காய்ச்சல் என்று சொல்லப்படும் காய்ச்சலுக்கு உரிய தன்மையையும் அதைக் குணப்படுத்துவதற்கு மருந்தையும் கூறியிருக்கிறார். ‘கபசுரக் குடிநீர்’ என்னும் மருந்து, இந்தக் காய்ச்சலைப் போக்கும் என்பது, அவருடைய ‘யூகி வைத்திய சிந்தாமணி’ என்னும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தாகவும், வந்த பின் குணமளிக்கும் மருந்தாகவும் இதைப் பயன்படுத்தலாம்.”

“கபசுரக் குடிநீர் என்றால் என்ன?”

“நிலவேம்புக் கஷாயம் போலவே, இதுவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இந்த மருந்தில் நிலவேம்பும் ஓர் உட்பொருளாகக் கலந்துள்ளது.

நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, அக்ரஹாரம், கண்டுபாரங்கி (சிறு தேக்கு), ஆடாதொடை வேர், சீந்தில், கோஷ்டம், கற்பூரவள்ளி, கோரைக் கிழங்கு உள்ளிட்ட 15 மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துதான் கபசுரக் குடிநீர். இந்தத் தூளை 10 கிராம் (2 டீஸ்பூன்) எடுத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து கொதிக்கவைக்க வேண்டும். நன்றாகக் கொதித்து, அரை டம்ளராக வற்றியதும், இறக்கி, வடிகட்டி, காலையிலும் மாலையிலும் உணவுக்கு முன் அருந்த வேண்டும். ஒரு முறை செய்துவைத்த மருந்தை, அடுத்த வேளைக்குப் பயன்படுத்தாமல், அவ்வப்போது புதிதாகத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.

நோய் வருவதற்கு முன் தடுப்பு மருந்தாகக் குடிக்க நினைப்பவர்கள், 30 மி.லி எடுத்தால் போதும். தடுப்பு மருந்தாக எடுத்துக்கொள்வதென்றால் மூன்று நாட்களும், சிகிச்சையாக எடுத்துக்கொள்வதென்றால் நோயின் தன்மைக்கும் நோயாளியின் தன்மைக்கும் ஏற்ப 15 நாட்கள் வரையிலும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கபசுரக் குடிநீர், சித்த மருந்துக் கடைகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.

டெங்குக் காய்ச்சல் பரவியபோது, நிலவேம்புக் குடிநீர் பற்றிய தீவிர பிரசாரத்தை முடுக்கிவிட்டு, ஊடகங்களில் விளம்பரப்படுத்தியதன் விளைவாக, மக்களுக்கு நல்ல விழிப்புஉணர்வு ஏற்பட்டது. அதேபோல இந்தக் கபசுரக் குடிநீர் பற்றியும் அரசு தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு, ஊடகங்களில் பெரிய அளவு விளம்பரப்படுத்தி, மக்களிடையே பன்றிக் காய்ச்சல் குறித்துப் பரவியுள்ள பீதியைக் குறைக்கவேண்டும். இந்த மருந்தைப் பயன்படுத்தி நோயைத் தடுத்துக்கொள்ள, அரசு முயற்சி எடுக்க வேண்டும்.”



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 11:31 pm

பன்றிக் காய்ச்சல்... என்ன டயட்?

1.வறுத்த அரிசி அல்லது வறுத்த நொய்யில் கஞ்சி செய்து அருந்தலாம். தொட்டுக்கொள்ள, தூதுவளை அல்லது இஞ்சித் துவையல் நல்லது.

2.வடித்த சோற்றில், மீண்டும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி, அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவைத்து, அந்தத் தண்ணீரை வடித்து அருந்தலாம்.

3.குழைய வடித்த சுடு சோற்றில், சுண்டை வற்றல் பொடி சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். இட்லிக்கும் இந்தப் பொடியைத் தொட்டுக்கொள்ளலாம். சுண்டை வற்றலைக் குழம்பாகச் செய்து சாப்பிடலாம்.

4.அன்னாசிப் பழம் மிகவும் நல்லது. உணவில் சேர்க்கலாம். பன்றிக் காய்ச்சலுக்கு அரசு வழங்கும் ‘டேமிஃப்ளூ’ மாத்திரைகளில் அன்னாசி கலந்துள்ளது.

5.பால், தயிர் தவிர்க்க வேண்டும். விருப்பப்பட்டால், மோர் குடிக்கலாம்.



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 11:32 pm

எளிய - வலிய சில மருந்துகள்!

தொண்டையில் தொற்று, வலி மற்றும் கரகரப்பு ஆரம்பிக்கும்போதே, முன்னெச்சரிக்கையாகத் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சித்த மருந்துக் கடையில், தாளிசாதி வடகம் என்ற மருந்து கிடைக்கும். இதை வாயில் போட்டு, உமிழ்நீருடன் மென்று, தொண்டையில் படும்படி விழுங்கினால், தொண்டைப் பாதிப்பு குறையும்.

மூக்கு எரிச்சல், மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூக்கடைப்பு இருப்பவர்கள், சிறிது ஓமம், சிறு துண்டு பச்சைக் கற்பூரம், ஒரு சிட்டிகை சுத்தமான மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் நசுக்கி, ஒரு தூய வெள்ளைத் துணியில் முடிந்து, அவ்வப்போது மூக்கில்வைத்து முகர்ந்துகொண்டே இருந்தால், மேலே சொன்ன மூக்குப் பிரச்னைகள் அண்டாது. சுவாசப் பாதையில் நோய்க் கிருமிகள் தொற்றாமல், கவசம் போல காக்கும்.



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக