புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
60 Posts - 40%
heezulia
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
45 Posts - 30%
Dr.S.Soundarapandian
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
311 Posts - 50%
heezulia
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
192 Posts - 31%
Dr.S.Soundarapandian
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
21 Posts - 3%
prajai
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_m10தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெருவெல்லாம் தமிழ் முழக்கம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Feb 27, 2015 6:20 pm

கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி.

மன்னர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு தரப்பினரும் தமிழ் மொழியைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

தற்போதும் கூட தமிழ் மொழி மீது தாக்குதல் நடைபெற்றால் அரசியல் கட்சியினரும், தமிழ் உணர்வாளர்களும் கொதித்தெழுந்து போராடுகின்றனர்.

ஆனால், எந்தத் தரப்பினரும் தமிழ் மொழியை அதற்கே உரிய சீரோடும், சிறப்புகளோடும் கலப்படமின்றி தூய்மையாய் வாழவைக்க முயற்சிகளை எடுக்கவில்லை.

ஏராளமான ஆங்கிலச் சொற்கள் கலப்படமாகி தமிழ் சொற்களைப் போலவே மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மற்றொருபுறம் மீண்டும் ஹிந்தித் திணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இம்மண்ணில் வாழும் தமிழர்களில் பலருக்கும் தமிழ் உணர்வு இல்லை. தமிழ் உணர்வு கொண்டவர்களும்கூட அந்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியாமல் உள்ளனர்.

ஆங்கில மொழிவழிக் கல்விதான் அறிவை வளர்க்கும் என்ற தவறான கண்ணோட்டம் அனைவரது மனதிலும் நிறைந்துவிட்டது.

வீடுகளில், பள்ளிகளில், பணிபுரியும் இடங்களில், அரசு அலுவலகங்களில், பொது இடங்களில்கூட ஆங்கிலம் பேச துடிப்பவர்கள்தாம் இங்கு அதிகம்.

எல்லாவற்றுக்கும் காரணம் என்ன? ஆங்கில மொழியில் பேசுபவனே நாகரிகம் தெரிந்தவன், அறிவுடையவன் என்ற சிந்தனை பரவியிருப்பதே காரணம்.

தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களில்கூட ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே வேலை அல்லது முன்னுரிமை கிடைக்கும் என்ற எதார்த்த உண்மை தமிழர்களை

தங்கிலீஷ்காரர்களாக மாற்றியுள்ளது.

பொருளாதாரம், வேலை இதற்காகத்தான் ஆங்கிலம் தேவை என்பதைத் தாண்டி, எவருக்கும் ஆங்கில மொழி மீது பெரும் பற்று கிடையாது.

தமிழ் பயிற்று மொழியாகவும், ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் இருந்தால் போதுமானது என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.

மழலையர் வகுப்பு தொடங்கி கல்லூரிப் படிப்பு வரை ஆங்கில வழியில் கல்வி பயின்ற பலர் சிறந்த தமிழ் பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக இந்த மண்ணில் தடம் பதித்துள்ளனர்.

தமிழைச் சார்ந்து இயங்குகிற ஊடகங்களில் ஆங்கில வழியில் பயின்றவர்கள் பலர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்து, உணவளிப்பது தமிழ்மொழிதான். எனவே, கற்றல் மொழியின் அடிப்படையில்தான் வேலை கிடைக்கும் என்ற கண்ணோட்டம் தவறு.

அதேபோல, தமிழ் இனத்துக்கு பெருமை சேர்த்த அறிஞர்கள், அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்களில் பலர் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்றும், அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் அல்லது பிற மொழிகளில் பேசி தமது அறிவை பிறருக்கு கற்பித்தனர் என்பதும் மறுக்க இயலாத உண்மை.

ஆக, அறிவை தம் தாய்மொழியில் வளர்த்தாலும், தொடர்பு மொழியைப் பயன்படுத்தி உலகுக்கே கற்பிக்க முடியும் என்பதுதான் உண்மை.

தமிழிலே கல்வி கற்கும் அதே வேளையில், ஆங்கிலம் மட்டுமல்ல ஹிந்தி, பிரெஞ்சு, சீனம் உள்ளிட்ட எந்த மொழியையும் தொடர்பு மொழியாக கற்றுக் கொள்வதற்கு இங்கு தடையற்ற நிலை உருவாக வேண்டும்.

அந்த நிலையை எட்டிவிட்டால், தமிழ்நாட்டிலே எந்த மொழியை யார் திணிக்க முயற்சித்தாலும் தமிழனுக்குக் கவலை தேவையில்லை.

பிறமொழிக் கலப்படம் இல்லாத தூய தமிழை நான் பேசுவேன் என்று ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்ந்து சொல்வதே தமிழுக்குப் பெருமை.

இந்த இலக்கை எட்டுவதற்கு, வீதிகள்தோறும் மதுக்கடைகள் என்ற நிலை மாறி, வீதிகள்தோறும் தமிழ்ச் சங்கங்கள் என்ற நிலை வர வேண்டும்.

முதல்கட்டமாக மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் தமிழ்ச் சங்கங்களை அரசு சார்பில் நிறுவி, அங்கு தமிழறிஞர்களைப் பணியமர்த்துவன் மூலம் தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட முடியும்.

பொதுமக்கள் அனைவரும் தமிழ்ச் சங்கங்களில் உறுப்பினராகி, தமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சென்று தூய தமிழை கற்கும் நிலை வர வேண்டும்.

வார விடுமுறை நாள்களில் தமிழ்ச் சங்கங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடி தூய தமிழ்ப் பேசி பழகினாலே போதும், அதே பழக்கம் அவர்கள் வாழ்க்கையிலும் வந்துவிடும்.

கடைகளில், நிறுவனங்களில் தமிழிலே பெயர்ப்பலகை, விலைப் பட்டியல் வைத்தால் வரிவிலக்கு என்று அறிவிக்காமல், அவ்வாறு வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதியிருப்பவர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு முறையை கட்டாயம் அமலாக்க வேண்டும்.

பொதுமக்களுக்குப் புரியாது என்ற காரணத்தைச் சொல்லி, ஆங்கில சொற்களைக் கலந்து செய்தி வெளியிடாமல் தூய தமிழில் செய்தி வெளியிடவேண்டியது ஊடகங்களின் கடமை.

வாக்குகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு மதத்திற்கும், தனித்தனிச் சாதிக்கும் சிறப்பு இடஒதுக்கீடு கொடுத்ததைப் போல, தமிழ் மொழித் தேர்வை தனியாக நடத்தி அதில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தால் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலை மாறிவிடும்.

தமிழ் படித்தால், தமிழ் வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை போய் தமிழ் படித்தால் மட்டுமே முன்னுரிமை என்று வந்துவிட்டால், மக்களின் எண்ண ஓட்டங்கள் தமிழை நோக்கி திரும்பாதா?

வெறுமனே தமிழுக்காகக் குரல் விடுப்பதோடு நின்று விடாமல், இதுபோன்ற நல்ல தீர்மானங்களை செயல்படுத்துமாறு அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதைச் செய்ய அரசால் முடியாதா? அப்படிச் செய்ய அரசு முன்வரவில்லை என்றால், தமிழர்கள் ஒன்றுபட்டு வென்று காட்ட முடியாதா?கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி.

மன்னர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு தரப்பினரும் தமிழ் மொழியைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

தற்போதும் கூட தமிழ் மொழி மீது தாக்குதல் நடைபெற்றால் அரசியல் கட்சியினரும், தமிழ் உணர்வாளர்களும் கொதித்தெழுந்து போராடுகின்றனர்.

ஆனால், எந்தத் தரப்பினரும் தமிழ் மொழியை அதற்கே உரிய சீரோடும், சிறப்புகளோடும் கலப்படமின்றி தூய்மையாய் வாழவைக்க முயற்சிகளை எடுக்கவில்லை.

ஏராளமான ஆங்கிலச் சொற்கள் கலப்படமாகி தமிழ் சொற்களைப் போலவே மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மற்றொருபுறம் மீண்டும் ஹிந்தித் திணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இம்மண்ணில் வாழும் தமிழர்களில் பலருக்கும் தமிழ் உணர்வு இல்லை. தமிழ் உணர்வு கொண்டவர்களும்கூட அந்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியாமல் உள்ளனர்.

ஆங்கில மொழிவழிக் கல்விதான் அறிவை வளர்க்கும் என்ற தவறான கண்ணோட்டம் அனைவரது மனதிலும் நிறைந்துவிட்டது.

வீடுகளில், பள்ளிகளில், பணிபுரியும் இடங்களில், அரசு அலுவலகங்களில், பொது இடங்களில்கூட ஆங்கிலம் பேச துடிப்பவர்கள்தாம் இங்கு அதிகம்.

எல்லாவற்றுக்கும் காரணம் என்ன? ஆங்கில மொழியில் பேசுபவனே நாகரிகம் தெரிந்தவன், அறிவுடையவன் என்ற சிந்தனை பரவியிருப்பதே காரணம்.

தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களில்கூட ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே வேலை அல்லது முன்னுரிமை கிடைக்கும் என்ற எதார்த்த உண்மை தமிழர்களை

தங்கிலீஷ்காரர்களாக மாற்றியுள்ளது.

பொருளாதாரம், வேலை இதற்காகத்தான் ஆங்கிலம் தேவை என்பதைத் தாண்டி, எவருக்கும் ஆங்கில மொழி மீது பெரும் பற்று கிடையாது.

தமிழ் பயிற்று மொழியாகவும், ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் இருந்தால் போதுமானது என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.

மழலையர் வகுப்பு தொடங்கி கல்லூரிப் படிப்பு வரை ஆங்கில வழியில் கல்வி பயின்ற பலர் சிறந்த தமிழ் பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக இந்த மண்ணில் தடம் பதித்துள்ளனர்.

தமிழைச் சார்ந்து இயங்குகிற ஊடகங்களில் ஆங்கில வழியில் பயின்றவர்கள் பலர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்து, உணவளிப்பது தமிழ்மொழிதான். எனவே, கற்றல் மொழியின் அடிப்படையில்தான் வேலை கிடைக்கும் என்ற கண்ணோட்டம் தவறு.

அதேபோல, தமிழ் இனத்துக்கு பெருமை சேர்த்த அறிஞர்கள், அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்களில் பலர் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்றும், அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் அல்லது பிற மொழிகளில் பேசி தமது அறிவை பிறருக்கு கற்பித்தனர் என்பதும் மறுக்க இயலாத உண்மை.

ஆக, அறிவை தம் தாய்மொழியில் வளர்த்தாலும், தொடர்பு மொழியைப் பயன்படுத்தி உலகுக்கே கற்பிக்க முடியும் என்பதுதான் உண்மை.

தமிழிலே கல்வி கற்கும் அதே வேளையில், ஆங்கிலம் மட்டுமல்ல ஹிந்தி, பிரெஞ்சு, சீனம் உள்ளிட்ட எந்த மொழியையும் தொடர்பு மொழியாக கற்றுக் கொள்வதற்கு இங்கு தடையற்ற நிலை உருவாக வேண்டும்.

அந்த நிலையை எட்டிவிட்டால், தமிழ்நாட்டிலே எந்த மொழியை யார் திணிக்க முயற்சித்தாலும் தமிழனுக்குக் கவலை தேவையில்லை.

பிறமொழிக் கலப்படம் இல்லாத தூய தமிழை நான் பேசுவேன் என்று ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்ந்து சொல்வதே தமிழுக்குப் பெருமை.

இந்த இலக்கை எட்டுவதற்கு, வீதிகள்தோறும் மதுக்கடைகள் என்ற நிலை மாறி, வீதிகள்தோறும் தமிழ்ச் சங்கங்கள் என்ற நிலை வர வேண்டும்.

முதல்கட்டமாக மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் தமிழ்ச் சங்கங்களை அரசு சார்பில் நிறுவி, அங்கு தமிழறிஞர்களைப் பணியமர்த்துவன் மூலம் தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட முடியும்.

பொதுமக்கள் அனைவரும் தமிழ்ச் சங்கங்களில் உறுப்பினராகி, தமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சென்று தூய தமிழை கற்கும் நிலை வர வேண்டும்.

வார விடுமுறை நாள்களில் தமிழ்ச் சங்கங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடி தூய தமிழ்ப் பேசி பழகினாலே போதும், அதே பழக்கம் அவர்கள் வாழ்க்கையிலும் வந்துவிடும்.

கடைகளில், நிறுவனங்களில் தமிழிலே பெயர்ப்பலகை, விலைப் பட்டியல் வைத்தால் வரிவிலக்கு என்று அறிவிக்காமல், அவ்வாறு வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதியிருப்பவர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு முறையை கட்டாயம் அமலாக்க வேண்டும்.

பொதுமக்களுக்குப் புரியாது என்ற காரணத்தைச் சொல்லி, ஆங்கில சொற்களைக் கலந்து செய்தி வெளியிடாமல் தூய தமிழில் செய்தி வெளியிடவேண்டியது ஊடகங்களின் கடமை.

வாக்குகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு மதத்திற்கும், தனித்தனிச் சாதிக்கும் சிறப்பு இடஒதுக்கீடு கொடுத்ததைப் போல, தமிழ் மொழித் தேர்வை தனியாக நடத்தி அதில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தால் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலை மாறிவிடும்.

தமிழ் படித்தால், தமிழ் வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை போய் தமிழ் படித்தால் மட்டுமே முன்னுரிமை என்று வந்துவிட்டால், மக்களின் எண்ண ஓட்டங்கள் தமிழை நோக்கி திரும்பாதா?

வெறுமனே தமிழுக்காகக் குரல் விடுப்பதோடு நின்று விடாமல், இதுபோன்ற நல்ல தீர்மானங்களை செயல்படுத்துமாறு அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதைச் செய்ய அரசால் முடியாதா? அப்படிச் செய்ய அரசு முன்வரவில்லை என்றால், தமிழர்கள் ஒன்றுபட்டு வென்று காட்ட முடியாதா?    ( - இராம.பாரதி / நன்றி: தினமணி நாளிதழ்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக