புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_m10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10 
21 Posts - 84%
heezulia
நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_m10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10 
2 Posts - 8%
viyasan
நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_m10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_m10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_m10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_m10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_m10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_m10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10 
21 Posts - 4%
prajai
நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_m10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_m10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_m10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_m10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_m10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_m10நிலக்கரியும் நிறைய அரசியலும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலக்கரியும் நிறைய அரசியலும்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 26, 2015 8:49 pm

'2ஜி அலைக்கற்றை ஊழலில், 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு’ எனச் செய்தி வந்தபோது, அந்தத் தொகை அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், 'நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு’ என்ற செய்தி, மக்களிடம் அத்தனை அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஒப்பீட்டளவில் 2ஜி-யைவிட, நிலக்கரி ஊழல் குறித்து பேசப்பட்டது மிகக் குறைவு. மக்களின், ஊடகங்களின் இந்த மௌனத்தை, தனக்கான கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டது அப்போதைய காங்கிரஸ் அரசு.

'அரசியல் ஆசை வந்துவிட்டதால்தான் மத்திய தணிக்கை அலுவலர் (CAG) வினோத் ராய் இப்படி எல்லாம் உளறுகிறார்’ என காங்கிரஸ் அப்போது குற்றம் சாட்டியது. அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், 'மத்திய தணிக்கை அலுவலகத்தில் ஊடுருவியுள்ள வைரஸ்’ என வினோத் ராயை வர்ணித்தனர். 'இப்படிப்பட்ட அதிகாரிகளால் மத்திய தணிக்கை அலுவலகத்துக்கே அசிங்கம்’ எனத் திட்டக் கமிஷனின் அப்போதைய துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தோள்களை நாகரிகமாகக் குலுக்கி அலுத்துக்கொண்டார். 'நிலத்தில் இருந்து வெட்டியே எடுக்கப்படாத நிலக்கரிக்குக்கூட விலை நிர்ணயித்து ஊழல் நடந்துவிட்டதாகச் சொல்வது பிதற்றல்’ என வினோத் ராயை, அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டலடித்தார்.

நிலக்கரியும் நிறைய அரசியலும்! Nw4nP9gSSBOHzuY7ldYM+p91a

'நிலக்கரி ஊழல் நடந்தபோது அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தது நீங்கள்தான். அதனால் நீங்கள் பதில் சொல்லுங்கள்’ என எதிர்க்கட்சியினர் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேள்விகள் எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கியபோது, அவரிடம் இருந்து ஒரு பதில்கூட வரவில்லை. மாறாக 'அது சம்பந்தமான கோப்புகள் தொலைந்துவிட்டன’ என்ற செய்தி மட்டுமே வந்தது. பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு சென்றது. உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடி விசாரணையின் காரணமாக வழக்கு சூடுபிடித்தது. '1993 முதல் 2010-ம் ஆண்டு வரையில் வழங்கப்பட்ட நிலக்கரிச் சுரங்க உரிமங்கள் அனைத்துமே சட்ட விரோதமானவை’ என அறிவித்த உச்ச நீதிமன்றம், 200-க்கும் மேற்பட்ட சுரங்க ஒதுக்கீட்டு உரிமங்களையும் ரத்துசெய்து உத்தரவிட்டது. பின்னர் 2014-ம் ஆண்டு அக்டோபரில், நிலக்கரிச் சுரங்கங்கள் மின்னணு முறையில் ஏலம்விடப்படும் என அரசு அறிவித்தது.

இப்போது முதல்கட்டமாக 15 சுரங்கங்களுக்கான ஏலம் நடந்து முடிந்துள்ள நிலையில், அரசுக்குக் கிடைத்துள்ள ஏலத்தொகை பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

15 சுரங்கங்களுக்கான ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு 83 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்தச் சுரங்கங்கள் அமைந்திருக்கும் மாநில அரசுகளுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் ராயல்ட்டி கிடைக்கவிருக்கிறது. இதையெல்லாம்விட கவர்ச்சியான அம்சம், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மின் கட்டணம் சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. காரணம், 'ரிவர்ஸ் ஆக்ஷன்’ என்ற, ஏலத்தின் முக்கிய விதிமுறையிலேயே மின் கட்டணம் தொடர்பான முடிச்சும் போடப்பட்டிருப்பதுதான்.

இதுவரை ஏலம் விடப்பட்டிருப்பது 15 நிலக்கரிச் சுரங்கங்கள் மட்டும்தான். இதிலேயே இவ்வளவு பலன் என்றால், மீதம் இருக்கும் சுரங்கங்களில் இருந்தும் இன்னும் பெருந்தொகையைத் திரட்ட முடியும் என்பது உறுதி. 'குறைந்தது 15 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடியும்’ என்கிறார்கள் நிபுணர்கள். இதற்கு மேல் மதிப்பிடுவோரும் உண்டு.
www.mstce-commerce.com/coalauctionhome
என்ற இணையதளத்தில் நிலங்கரிச் சுரங்க ஏலத்தை நேரலையாகவே பார்க்கலாம். இவ்வளவு பிரமாண்டமான தொகை அரசுக்கு வருமானமாகக் கிடைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி என்றால், இதைச் சாத்தியமாக்கியது உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பும், கண்காணிப்பும், கறாரான அணுகுமுறையும்தான். கடந்த காலங்களில் இதேபோன்ற பெருந்தொகை ஈட்டும் சாத்தியம் இருந்தும், ஏன் அரசு அதைச் செய்யவில்லை? இதைப் புரிந்துகொள்ள நமது சுரங்க ஏல விதிமுறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நிலக்கரியும் நிறைய அரசியலும்! LZcIRuGST2OdqmaWmLKt+p91b
1990-களுக்கு முன்பு வரை நாட்டில் இரும்பு, சிமென்ட் போன்ற மூலப்பொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவியது. இதற்கு முக்கியக் காரணம், மின் பற்றாக்குறை. போதுமான அளவுக்கு மின் உற்பத்தி நிலையங்கள் அப்போது இல்லை. இருந்தவற்றை முழுத் திறனுடன் இயக்கப் போதுமான நிலக்கரியும் கிடைக்கவில்லை. அரசின் 'கோல் இந்தியா’ நிறுவனத்தின் மந்த செயல்திறன்தான் இதற்குக் காரணம். இதனால் இரும்பு, மின் உற்பத்தி, சிமென்ட் போன்ற துறைகளில் ஈடுபட்டுவந்த தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரியைத் தோண்டி எடுக்கும் உரிமத்தை, இலவசமாக வழங்க வழிசெய்யும் வகையில் Coal Mines (Nationalisation) Act, 1973 சட்டத்தை அரசு திருத்தியது.

நிலக்கரிச் சுரங்கங்களை இப்படி இலவசமாக தனியாருக்குத் தாரைவார்க்கும் நடைமுறை கடந்த 20 ஆண்டுகளாக இருந்ததுடன், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 2004-2014 காலகட்டத்தில் இது அதிவேகமாக நடந்தது. நவீன் ஜிண்டால், விஜய் தார்தா, சுபோத்காந்த் சகாய் போன்ற பண முதலைகள், பணத் திமிங்கிலங்களாக உருவெடுத்தனர். முறையான ஏலம், வெளிப்படைத்தன்மை எதுவுமே இல்லாமல் பெயருக்கு கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த கமிட்டி கை காட்டும் நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன. இதன் பின்னணியில் ஊழலும் கொள்ளை லாபமும் இருந்தன என்பதை தனியே சொல்லத் தேவையில்லை.

என்னென்ன காரணங்களுக்காக இந்தத் தனியார் நிறுவனங்களுக்குச் சுரங்க உரிமம் வழங்கப்பட்டதோ அதுவும் நிறைவேறவில்லை; நிலக்கரி உற்பத்தியையும் அவர்களால் அதிகரிக்க முடியவில்லை. இதுதான் பின்னணி. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட சுரங்க ஒதுக்கீடு, அதில் ஏற்பட்ட வருமான இழப்பு, இப்போதைய மின்னணு ஏல முறையில் கிடைத்துள்ள ஆதாயம்... இவற்றை இணைத்துப் பார்த்தால் இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

முன்பு இருந்ததைவிட இப்போது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு குறித்த புரிதல் மேம்பட்டிருக்கிறது. கூடவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பும் இருப்பதால், ஏல முறையில் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது. ஆனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பலனடைந்த அதே நவீன் ஜிண்டால் நிறுவனம், இப்போதும் பெரும் ஆதாயம் அடைந்துள்ளது. ஒரு டன் 108 ரூபாய் என்ற மதிப்பில் சட்டீஸ்கரில் இரண்டு சுரங்கங்களை இந்த நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. நிலக்கரிச் சுரங்கத்தைப் பொறுத்தவரை ஒவ்வொன்றுக்கும் ஏல மதிப்பு மாறுபடும். என்றாலும், ஏலம் விடப்பட்டுள்ள மற்ற அனைத்துச் சுரங்கங்களையும் ஒப்பிடும்போது, நவீன் ஜிண்டால் நிறுவனம் மிகக் குறைந்த தொகைக்கே ஏலம் பெற்றிருக்கிறது. இதில் இருந்து நமக்குத் தெரிவது ஒன்றே ஒன்றுதான்... அரசுகள் மாறலாம்; ஏல முறைகள் மாறலாம்; நிறுவனங்களும் மாறுகின்றன. ஆனால், அவை தங்களின் லாபியை மாற்றிக்கொண்டு லாபத்தை உறுதிப்படுத்திக்கொள்கின்றன!

நன்றி-ஆனந்தவிகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக