புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
81 Posts - 67%
heezulia
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
1 Post - 1%
viyasan
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
273 Posts - 45%
heezulia
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
18 Posts - 3%
prajai
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_m10சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 23, 2015 3:54 pm

சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் 60jy1Lz2QYmC6o1FMHUF+TM-4
உலகின் மிகப் பழைமையான சிந்துவெளி நாகரிகத்தின் இடம் தற்போது பாகிஸ்தான், குஜராத் மாநிலம், இராஜஸ்தான் மாநிலங்களின் பகுதியில் இருப்பினும், முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் தமிழராக வாழ்ந்து வந்ததை அங்கு கண்டெடுக்கப்பட்டுவரும் பல பழைமையான சின்னங்கள், முத்திரைகள் சான்று பகன்று வருகின்றன. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் அரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு முத்திரையானது, புறநானூற்றில் வரும் ஒரு வரலாற்றுச் செய்தியோடு ஒப்பு நோக்கத்தக்கதாக உள்ளது. அப்புறப் பாடல் வருமாறு:

நீயே, வடபான்முனிவன்றட வினுட்டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போ ரண்ணல்!
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கட னுடைமையிற் பாண்கட னாற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
யான்தர விவரைக் கொண்மதி வான் கவித்து
இருங்கட லுடுத்தவிவ் வையகத் தருந்திறற்
பொன்படு மால்வரைக் கிழவ! வென்வேல்
உடலுந ருட்குந் தானைக்
கெடலருங் குரைய நாடுகிழ வோயே.

-கபிலர் (புறம் - 201)

பாரியின் மறைவிற்குப் பிறகு, பாரி மகளிரை மணந்து, அவர்கட்கு நல்வாழ்வு அமைத்துத் தரும் பொருட்டு, அவர்களை, கபிலர் இருங்கோவேள் என்னும் அரசனிடம் கூட்டிச் சென்றார். அப்போது கபிலர் பாடிய புறப்பாடல் வழியாக, இருங்கோவேளின் முன்னோர்களுள் ஒருவனான புலிகடிமால் என்பவரின் புகழைப் பதிவு செய்துள்ளார். அதில், ""நாற்பத்தொன்பது(49) தலைமுறைக்கு முன்னர், செம்பால் போர்த்தப்பட்ட மதில்களையுடைய துவாரகையை வாழிடமாகக்கொண்டு வாழ்ந்த உன் முன்னோர்களின் அரச பரம்பரையில் வந்த புலிகடிமால் என்னும் வேளிர் மரபைச் சார்ந்த அரசன், துவாரகாபதியில் தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரைத் தாக்கவந்த புலிகளிடமிருந்து முனிவரின் உயிரைக் காப்பாற்றினான். அவ்வீரச் செயலைப் புரிந்த தம் முன்னோரின் நினைவாக அவ்வேளிர்குல அரசர்க்குப் புலிகடிமால் என்ற பெயர் நிலைத்திருந்தது. மால் என்னும் பெயர் காக்கும் கடவுளைக் குறிக்கும். எனவே, புலியிடமிருந்து காத்ததன் பொருட்டுப் புலிகடிமால் மரபில் வந்த இருங்கோவேளே நான் தர, இப்பாரி மகளிரை ஏற்றுக்கொள்'' என்று மனமுருக வேண்டுகின்றார் கபிலர் பெருமான். இத்தரவானது சிந்துவெளியிலிருந்த மக்கள், தமிழ்நாட்டு வேளிரோடு குருதித் தொடர்பு கொண்டவர்கள் என்பதனை விளக்குகிறது.

சிந்துவெளி நாகரிகத்தின் கடற்கரை நகரமாக விளங்கியது துவரை என்னும் துவாரகை. கடலுள் மாய்ந்த அப்பகுதி, தற்போது தொல்லியலாளர்களால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வலிய கோட்டை மதில்களால் சூழப்பட்ட "துவாரகை' கடலுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நச்சினார்க்கினியர் முதல் ஒளவை துரைசாமிப்பிள்ளை வரை உரை வரைந்த உரையாசிரியர்கள் பலரும், இந்தத் துவரையை ஆண்ட புலிகடிமால் பற்றிய செய்திக்கு விளக்கம்தர இயலாமல் குழப்பம் அடைந்துள்ளனர். இந்நிலையில், சிந்துவெளியில் மாபெரும் நகரமாக விளங்கிய அரப்பாவில் கிடைத்த முத்திரையின், நடுவில் ஓர் ஆணின் உருவமும், அவன் மேல் ஒரு சக்கரமும், அவன் இரு பக்கங்களிலும் இரு பாயும் புலிகளை, அவன் எதிர்ப்பதுமான வடிவம் காணப்படுகின்றது (படம் காண்க). இம்முத்திரையானது அரப்பாவிற்கு அருகில் அமைந்துள்ள துவாரகையைச் சேர்ந்த புலிகடிமாலின் செய்தியோடு ஒப்புநோக்கத்தக்கது.

பாரத நாட்டின் வடபகுதி நதிக்கரையிலிருந்த வேளிர்குடியினரை தென்னாட்டுக் காவிரி நதிக்கரை சென்று உணவைப் பெருக்குமாறு இறைவன் இட்ட ஆணையால் காவிரிக் கரையடைந்த வேளிர்கள் (வேளாள மக்கள்) காவிரிக் கரைக்குக் குடியேறி, உழவுத் தொழிலைப் பெருக்கினர் என்னும் வேளாள புராணச் செய்தியினை இங்கு ஒப்பிட்டுச் சிந்திக்கலாம்.

துவரை யாண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே

என்னும் புறநானூற்றின் தொடர், பல்வகை ஆய்வுகளைக் கருக்கொண்டு நிற்கிறது. புலிகளுக்கு இடையே நிற்பவன் ஒரு குடிமகன் அல்லன், ஒரு மன்னன் என்பதைக் காட்ட அவன் தலைக்கு மேல், ஆட்சிச் சக்கரமும் காலடியில் யானையும் உள்ளதாகச் சிற்பி காட்டியுள்ளதும் உணரத்தக்கது.

புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள புலிகடிமால் என்ற வேளிர் அரசனையே இவ்வுருவம் காட்டுவதாகக்கொண்டு மேலும் ஆய்வுகளை விரிக்க, இச் சிந்துவெளி முத்திரை, வழி திறந்து வைக்கிறது.

அ. வெண்ணிலா இராஜேஷ் - dinamani

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:57 am

சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் 103459460 சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் 103459460 சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன் 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக