புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 20, 2015 11:09 pm

First topic message reminder :

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! - Page 2 Untitled%209%28255%29

கடந்த ஜனவரி 27 ஆம் தேதி கரூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர் ஒருவர், மது போதையில் பள்ளி உடையோடு போதையில் மயங்கி கிடந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், திருச்சி ஜங்ஷன் பகுதியில் நேற்று மாலை போதையில் ஒரு பெண் ரோட்டில் மயங்கி கிடந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய கரூர் மாணவர், கரூர் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றபோது போதையின் உச்சத்தால் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே விழுந்து கிடந்தார். பள்ளி சீருடையில் மாணவர் ஒருவர் போதையில் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த மாணவனை தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றும் அவரால் எழ முடியவில்லை. இதையடுத்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து அந்த மாணவனை அழைத்துச் சென்றனர்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதும், உடனே அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த அந்த மாணவரிடமும், அவரது பெற்றோரிடமும், பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். அத்தோடு, பள்ளிக்கு ஒழுங்காக வராமை, பள்ளிச் சீருடையில் மது அருந்தி போதையில் மயங்கி கிடந்தது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களுக்காக பள்ளியில் இருந்து அந்த மாணவரை நீக்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் திருச்சி ஜங்சன் பகுதிகளில் நேற்று மாலை சிவகாமி என்ற பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) போதையில் நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்து கிடந்தார். போலீஸாரும், பொதுமக்களும் வேடிக்கை பார்த்தனர். நீண்ட நேரத்திற்கு பின் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண், கையில் காசு கிடைக்கும்போதெல்லாம் சரக்கு வாங்கி குடிப்பது வழக்கமாம். நேற்று காசு அதிகமாக கிடைத்ததால் கொஞ்சம் ஓவராக போயிடுச்சு என்று போதை தெளியாமல் உளறி இருக்கிறார். சமூகத்தின் அடித்தளமாக விளங்கும் பெண்களும் இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்களே என்று அங்கிருந்தவர்கள் கூறிச் சென்றனர்.

புள்ளி விவரங்கள் என்ன சொல்கிறது...

இந்தியாவில் 1950-60களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் இளமைப் பருவத்தில் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் 19.5 சதவீதம். இதுவே, 1981-86-க்கு இடையே பிறந்தவர்கள் தங்கள் இளமைப் பருவத்தில் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோர் 74.3 சதவீதம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மேலும் மது மட்டுமல்லாமல், எந்தவொரு கெட்டப் பழக்கமும் வீட்டிலிருந்தே துவங்குகிறது என்கிறார்கள் ஆய்வர்கள்.

தற்போதெல்லாம் பிறந்த நாள், திருமணம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு என எதற்கெடுத்தாலும் நண்பர்களுக்கு 'பார்ட்டி' கொடுப்பது என்பது ஒரு கட்டாய நிகழ்வாகவே உள்ளது. அதிலும் அந்த பார்ட்டிகளில் முக்கிய இடம் பிடித்திருப்பது மதுபானம்தான்.

மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மதுக்கடைகளின் விற்பனை மற்ற நாட்களைவிட நான்கு மடங்கு அதிகரிக்கிறது. போதைப் பழக்கத்துக்கு அடிமையாவோர் பணிபுரியும் இடம், வீடு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும், சுற்றத்தாரிடமிருந்து ஒதுக்கி வைக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

உலக அளவில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர் என்றும், இவர்களில் 12-25 வயதில் உள்ளோர் அதிகம் உள்ளனர் என்றும், நகர்ப்புறங்களிலேயே இவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில், இளைஞர்களுக்கு அடுத்தபடியாக, போக்குவரத்து பணியில் ஈடுபடுவோர், தெருவோரங்களில் வசிக்கும் சிறுவர்கள் இப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

உலக அளவில் போதை பொருட்களை உட்கொள்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 90 லட்சமாம் (15 முதல் 64 வயது). இதுமட்டுமல்லாமல், 25 கோடியே 10 லட்சம் பேர் வாழ்க்கையில் ஒருமுறையாவது போதை மருந்து பயன்படுத்தி இருக்கிறார்களாம். கடந்த 2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், 439 கோடியே 60 லட்சம் பேர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக ஐ.நா. அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சகத்தின் நேஷ்னல் சர்வே நிறுவனம் 4,648 பெண்களிடம் நடத்திய ஆய்வில் 8 சதவிகித பெண்கள் போதையால் சீரழிந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது தோராயமாக, 6.25 கோடி பெண்களில் 10 லட்சம் பெண்கள் நாடுமுழுக்க குடி பழக்கத்திற்கு அடிமையாக ஆரமித்துள்ளார்கள் என எச்சரித்துள்ளது. உலக அளவில் நடைபெறும் தற்கொலைகளில் 50 விழுக்காடு மது குடிப்பதனாலோ அல்லது போதைப்பொருட்களாலோ ஏற்படுவதாக ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார்கள். இதில், இளம் வயது தற்கொலைகளே அதிகமாக காணப்படுகிறது.

மது பழக்கம் நமது சமூகத்தையே சீரழித்து வருகிறது. மதுவினால் தங்களது தாலிக்கு ஆபத்து வருகிறது என்று மதுக்கடைகளை மூட போராட்டம் நடத்தும் பெண்களில் ஒரு பிரிவினரே, தற்போது தாராளமாக மது அருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆண்களுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று போதையில் தள்ளாடும் பெண்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர்.

அரசாங்கம் தனது வருமானத்திற்காக மதுக்கடைகளை தாராளமாக திறந்து வைத்துள்ளதால் முதலில் ஆண்கள் மதுவிற்கு அடிமையானார்கள். அது வேகமாக வளர்ந்து தற்போது மாணவர்கள் மற்றும் பெண்களிடமும் பரவி அவர்களையும் சீரழிக்க ஆரம்பித்துள்ளது. விரைவில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டுவருவதே இதற்கான தீர்வாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

சி.ஆனந்தகுமார் @ விகடன்



 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 23, 2015 12:36 am

பேசாம லேடிஸ் ஷ்பெசல் சாராயக்கடை திறக்கலாமே, மக்களின் முதல்வர் யோசிப்பாரா?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Feb 23, 2015 2:03 pm

மக்களின் முதல்வர் அல்ல நண்பரே !!!!!
மாக்களின் முதல்வர்....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்! - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 23, 2015 2:53 pm

மதுக்கடைகளை ஆதரிக்கவில்லை .
நிச்சயமாக ஆதரிக்கவில்லை .


சிறிது யோசனை செய்துபாருங்கள் .
இவற்றை அறவே ஒழிக்க முடியாதா ?
அரசு கூறும் காரணம் என்ன ?
வருவாய் இல்லை --இலவசமாக பல விஷயங்கள் கொடுக்கப்பட வேண்டி இருக்கிறது .அதை ஈடு கட்ட , மது விற்பனையில் , கிடைக்கும் வருமானம் உதவுகிறது . இது ஓரளவுக்கு உண்மை . இருப்பினும் சுய லாபம் என்ற நலனை மறைக்க கூறும் ,உபயோகப்படுத்தும் ,மாயப் போர்வை .
நம்முடைய அண்டை நாட்டில் , இயற்கை சூழ்நிலையை ரசிக்க ,சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் .
வருமானம் கருதி , விலை மாதர்கள் /விபச்சாரம் குற்றமென கருதப்படுவதில்லை .
அவரவர்கள் தங்கள் உடல் நலனை பேண, எடுத்துகொள்ளவேண்டிய , எச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்களே செய்துக் கொள்கின்றனர் .
குடித்துதான் ஆகவேண்டும் என்பவர்கள் , தங்களை கட்டுபடுத்திக்கொள்ளக்கூடாதா ?
இல்லை , அரசுதான் முழு பொறுப்பு எடுக்கவேண்டும் என்று விரும்பினால் ,
இலவசங்களே வேண்டாம் என்று கூறுங்கள் !
வருந்தி அழைத்திக் கொடுத்தாலும் வாங்காதீர்கள் .
இலவசம் என்கிற , இலவச மின்சாரம் ,TV ,grinder , fan எல்லாவற்றையும் , வேண்டாம் என்று கூறுங்கள் .
இதில் இன்னும் ஒரு நன்மை இருக்கு . மட்டமான பொருட்களை ,கொள்முதல் செய்து ,உங்கள் தலையில் இலவசம் என கொடுத்து , பணம் பண்ணும் அரசியல்வாதிகள் , தரகர்கள் -பணம் பண்ணுவது குறையும் .

கடைசியாக , ஒரு சுயக்கட்டுப்பாடு , ஆணோ /பெண்ணோ ஒவ்வொருவருக்கும் அவசியம் .
எந்த அரசும் , மதுவை ,இலவசமாக உன் வாயில் திணிக்கப் போவதில்லை .

அளவாக குடித்து வளமாக வாழ்பவர்களை நாம் அறிவோம் .

முடிக்கும் முன் ,
மறுபடியும் ஆரம்பத்தில் கூறியதையே , கூறுகிறேன் .

மதுக்கடைகளை ஆதரிக்கவில்லை .
நிச்சயமாக ஆதரிக்கவில்லை .


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 23, 2015 3:05 pm

ராஜா wrote:லக்க்ஷனாவின் வகுப்பு தோழியின் பெற்றோர் குஜராத்தை சேர்ந்தவர்கள் , அவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கு மதுவிலக்கு அமுலில் இருப்பதால் மது விற்பனை கிடையாது. ஆனாலும் கள்ளசந்தையில் கிடைக்கும்  மாட்டிகொண்டால் தண்டனை அதிகம் என்பதால் வாங்குபவர் கூட மற்றவர்களுக்கு தெரியாமல் வீட்டிற்குக் கொண்டு சென்று குடித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் உறங்கி விடுவர் என்று சொன்னார்.

இது போல தான்  நான் சிறுவயதில் எங்கள் கிராமத்தில் இருந்த போது நடக்கும், இப்ப பள்ளி மாணவர்களே குடித்துவிட்டு மயங்கி கிடக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டது தமிழகம்
மேற்கோள் செய்த பதிவு: 1121891

குஜராத்தில் இருந்த அனுபவம் எனக்குண்டு .
அங்கும் பூரண மதுவிலக்கு என்று இருந்தாலும் ,சரக்குகள் கிடைக்கும் .
அளவாக அருந்தி , வீட்டில் வந்து கப்-சிப் என்று படுத்துக் கிடப்பார்கள் .
கலைஞர் அரசோ அம்மா அரசோ கட்டாயம் எல்லோரும் குடித்தே ஆகவேண்டும் கூறவில்லை .

மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தே , வெள்ளி ,சனிகளில் சாரிசாரியாக வண்டிகள் பாண்டிச்சேரி
போவதை கண்டிருக்கேன் .குடிப்பவர்களுக்கு தெரியாத வழிகளா ?
புகைப் பிடிப்பவர்களுக்கு, புகைப் பிடிப்பதால் புற்று நோய் வரும் என்று தெரியாதா ?
புற்று நோயினால் அவர்கள் படும் கஷ்டம் பார்க்கையில் மனம் எவ்வளவு வேதனை படுகிறது .

எதிலும் சுயக்கட்டுபாடு இல்லை எனில் , அவதி படத்தான் வேண்டும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 23, 2015 5:00 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:லக்க்ஷனாவின் வகுப்பு தோழியின் பெற்றோர் குஜராத்தை சேர்ந்தவர்கள் , அவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கு மதுவிலக்கு அமுலில் இருப்பதால் மது விற்பனை கிடையாது. ஆனாலும் கள்ளசந்தையில் கிடைக்கும்  மாட்டிகொண்டால் தண்டனை அதிகம் என்பதால் வாங்குபவர் கூட மற்றவர்களுக்கு தெரியாமல் வீட்டிற்குக் கொண்டு சென்று குடித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் உறங்கி விடுவர் என்று சொன்னார்.

இது போல தான்  நான் சிறுவயதில் எங்கள் கிராமத்தில் இருந்த போது நடக்கும், இப்ப பள்ளி மாணவர்களே குடித்துவிட்டு மயங்கி கிடக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டது தமிழகம்
மேற்கோள் செய்த பதிவு: 1121891

குஜராத்தில் இருந்த அனுபவம் எனக்குண்டு .
அங்கும் பூரண மதுவிலக்கு என்று இருந்தாலும் ,சரக்குகள் கிடைக்கும் .
அளவாக அருந்தி , வீட்டில் வந்து கப்-சிப் என்று படுத்துக் கிடப்பார்கள் .
கலைஞர் அரசோ அம்மா அரசோ கட்டாயம் எல்லோரும் குடித்தே ஆகவேண்டும் கூறவில்லை .

மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தே , வெள்ளி ,சனிகளில் சாரிசாரியாக வண்டிகள் பாண்டிச்சேரி
போவதை கண்டிருக்கேன் .குடிப்பவர்களுக்கு தெரியாத வழிகளா ?
புகைப் பிடிப்பவர்களுக்கு, புகைப் பிடிப்பதால் புற்று நோய் வரும் என்று தெரியாதா ?
புற்று நோயினால் அவர்கள் படும் கஷ்டம் பார்க்கையில் மனம் எவ்வளவு வேதனை படுகிறது .

எதிலும் சுயக்கட்டுபாடு இல்லை எனில் , அவதி படத்தான் வேண்டும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1122248

ஆமாம் அய்யா ... இரண்டு டங்கையும் நிறைத்துகொண்டு வருவார்கள் ... பாண்டியில் இருந்து வரும்பொழுது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 24, 2015 11:44 am

பாலாஜி wrote:ஆமாம் அய்யா ... இரண்டு டங்கையும் நிறைத்துகொண்டு வருவார்கள் ... பாண்டியில் இருந்து வரும்பொழுது
ஆம் நாட்டாமை , AVC கல்லூரியில் இருந்து ஒரு அழுத்து அழுத்தினால் காரைக்கால் பார்டர் வந்துடும்.

அப்புறமென்ன பெட்ரோலும் விலை குறைவு , சரக்கும் விலை குறைவு புன்னகை Full பண்ணிட வேண்டியது தான் புன்னகை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 24, 2015 1:32 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:ஆமாம் அய்யா ... இரண்டு டங்கையும் நிறைத்துகொண்டு வருவார்கள் ... பாண்டியில் இருந்து வரும்பொழுது
ஆம் நாட்டாமை , AVC கல்லூரியில் இருந்து ஒரு அழுத்து அழுத்தினால் காரைக்கால் பார்டர் வந்துடும்.

அப்புறமென்ன பெட்ரோலும் விலை குறைவு , சரக்கும் விலை குறைவு புன்னகை Full பண்ணிட வேண்டியது தான் புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1122400

கட்டுபாட்டுடன் இருந்தால் மட்டுமே ,
அரை டேங்கோ ஃ புல் டேங்கோ
கரையேறிடலாம் கண்ணியமாக .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக