புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
25 Posts - 78%
heezulia
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
5 Posts - 16%
viyasan
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
201 Posts - 40%
heezulia
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
21 Posts - 4%
prajai
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கையறுநிலை Poll_c10கையறுநிலை Poll_m10கையறுநிலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையறுநிலை


   
   
CHENATHAMIZHAN
CHENATHAMIZHAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2015

PostCHENATHAMIZHAN Tue Feb 17, 2015 6:31 pm

கையறுநிலை
=============
                                கு.காமராஜ்.,
                                 முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதியார் பல்கலைக்கழகம்

     பன்னெடுங்காலப் பண்பாட்டுச் சிறப்புமிக்க தமிழினத்தின் வரலாற்றினைக் காலம்தோறும் உலகுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப்பவைத் தமிழிலக்கியங்கள். பழக்கவழக்கங்கள், போர்முறைகள், பொருளீட்டல் போன்ற தமிழரின் வாழ்வியல் கூறுகளை எடுத்தியம்பும் விதமாக அவ்விலக்கியச் செய்யுள்கள் படைக்கப்பட்டுள்ளன. உள்ளுறைக் கருத்துக்களின் அடிப்படையில் தனித்தனித் துறைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ள அவற்றுள்,  உள்ளக்குமுறலை உருக்கமாகக் காட்டுபவைதாம் கையறுநிலைத் துறையினைச் சார்ந்த செய்யுட்கள்.

கையறுநிலையால் காணலாகும் மெய்யன்பு
=========================================
         “அவர் இல்லை என்றவுடன் எனக்குக் கையே ஒடிந்ததைப்போல் இருக்கிறது”. “அவர் எனது வலது கையைப்போன்றவர்”. “அது கைநழுவிப் போய்விட்டது”, போன்ற பேச்சுவழக்குச் சொற்கள் தற்போதும் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கின்றன. இதன்மூலம் கையை முன்னிலைப்படுத்தி வாழ்வியல் நிகழ்வுகளைக் குறிப்பிடும் வழக்கம் தமிழரிடையே பண்டுதொட்டு நிலவிவருவதனை அறியலாம்.
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”
என்னும் குறளின் மூலம், நழுவும் ஆடையினை விரைந்து பிடிக்கும் கையினை நட்புக்கு உவமையாக்கியுள்ளார் வள்ளுவர். ஆக உடலுறுப்புகளில் கையானது இன்றியமையா அவயமாகவும், கையின் இழப்பு அளப்பரிய துயரத்தினை அளிப்பதாகவும் கொள்ளப்பட்டது எனலாம்.

     அன்பிற்குரிய ஒருவர் இறந்துவிட்டால் அதனால் ஏற்படும் இழப்புகளையும், அவரிருந்தபோது நிலவிய மகிழ்ச்சியினையும் ஒப்பிட்டுப் புலம்பும்வண்ணம் கையறுநிலைப் பாடல்கள் படைக்கப்பட்டுள்ளன. கைபோன்று உடனிருந்து உதவிய ஒருவர் இறந்துபட்டதும் கையே அறுந்துபோன நிலைக்குத் தள்ளப்படும் ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே கையறுநிலை துறைப்பாடல்கள் அமைந்துள்ளன.

பண்டைத்தமிழரும் கையறுநிலைத்துறையும்
==========================================

        சங்க இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கும் கையறுநிலைப்பாக்கள் மூலம் அக்காலத் தமிழரின் ஆழ்ந்த அன்புடை வாழ்க்கை முறையினை அறியமுடிகிறது. பரிசில் தந்து பாதுகாத்தப் புரவலனைப் பிரிந்து உருகும் புலவர்கள்., உயிருக்குயிரானக் கணவனைப் பிரிந்து கதறும் மனைவியர்., தலைவியர் பிரிவால் தமது வாழ்க்கையை வெறுத்துப் புலம்பும் தலைவர்கள்., தந்தையின் இறப்பால் தனித்து நின்று அழும் மக்கள்...எனப் பல்வேறு மாந்தரின் மாசற்ற அன்பினைக் கண்முன்னர் நிறுத்துகின்றன அப்பாடல்கள்.

உடன் உறைவு ஆக்குக
=======================

“என்னருமை நண்பனே..,பறம்புமலை மன்னனே..எல்லா வளங்களும் எமக்களித்து என்னைச் செழிக்கவைத்த பாரிவள்ளலே.,என்னைத் தனியே விட்டுவிட்டு நீ மட்டும் சென்றுவிட்டாயே.,என்னையும் உன்னுடன் அழைத்துவிடு.. இம்மைபோல் மறுமையிலும் நாம் நண்பர்களாய் வாழ வழியமைத்துக்கொடு.” என்று புலவர் பெருமகனார் கபிலர் தனது நண்பனான பாரிமன்னனின் இறப்பால் நொந்து புலம்புவதை,

….இம்மை போலக் காட்டி, உம்மை
இடையில் காட்சி நின்னோடு
உடன்உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே! (புறம்-236)
என்னும் புறநானூற்றுச் செய்யுளால் அறியமுடிகிறது.

பொய்கையும் தீயும் ஒன்றே
=========================
துயரத்தின் பெரும் தாக்குதலுக்கு ஆளாகிவிட்டால் வாழ்க்கையின் மீதிருக்கும் பற்றுதலும் அற்றுப்போய்விடுவதனைக் காணமுடிகிறது. பூதப்பாண்டியனின் இறப்பால் துயரிற்றிருக்கும் அவனது மனைவி பெருங்கோப்பெண்டு,” பல்லறிவு மேதைகளே..உங்களுக்கு வேண்டுமானால் எனது கணவனை எரிக்கும் ஈமத்தீயானது வெம்மையினை உமிழும் கொடும் நெருப்பாகத் தெரியலாம், ஆனால் என் தலைவனைப் பிரிந்திருக்கும் எனக்கு, அது நல்ல குளிர்ச்சியைத்தரும் பொய்கையே..” எனத்தனது கையறுநிலையினைக் கதறிப்பாடிவிட்டு உடன்கட்டை ஏறியதை,

“பல் சான்றீரே  பல் சான்றீரே பல் சான்றீரே
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே………
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிது ஆகுக தில்ல; எமக்கு எம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!”
என்னும் செய்யுளால் அறியமுடிகிறது.

மனநோயாளியான மாக்கோதை
==============================
மனம் முழுதும் நிறைந்திருந்த மனைவி.,இல்லறத்தை நல்லறமாய்ச் சிறக்கவைத்த துணைவி, நோய்வாய்ப்பட்டு மாண்டுவிட்டாள். அவளது உடல் விறகுக் கட்டையினூடே எரிந்துகொண்டு இருக்கிறது.  ஈமநெருப்பினை நோக்கியபடி சேர இளவல் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை,”என் உயிருக்குயிரான மனைவி எரிந்துகொண்டிருக்கிறாள் நானின்னும் உயிரோடு இருந்து கொண்டிருக்கிறேன்” என்று மனம் குமுற கதறியழுது மனநோயாளியாகிவிடுகிறான்., அந்நிகழ்வினை..

“……..கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து,
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை ;
இன்னும் வாழ்வல் ; என்இதன் பண்பே!
              ( புறம்-245)
என்னும் செய்யுளடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

அன்றிருந்தார் இன்றில்லை
==========================
“அன்பு மிக்க எம் தந்தையான பாரிமன்னர் அன்று வந்த முழுநிலவு நாளில் எம்மோடிருந்தார்., ஆனால் இன்று வந்திருக்கும் இந்த முழுநிலவு நாளில் எம்தந்தையும் இல்லை எமது பறம்பு மலைநாடும்  இல்லை” என்று தமது கையற்றநிலையில் வெதும்பும் பாரிமகளிரான அங்கவை-சங்கவையை நம் கண்முன் நிறுத்தும் வண்ணம்,
“ அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

எந்தையும் உடையோம் எம்குன்றும் பிறர் கொள்ளார்

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்

வென்று எறிமுரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே”

என்னும் செய்யுளடிகள் அமைந்துள்ளன.
  இவ்வாறே.. “பொன்னுறு நறுமேனி பொடியாடிக்கிடப்பதோ..” என்று கொலைகளத்தினில் கொலையுண்டுகிடக்கும் கோவலனைக்கண்டு கதறியழும் கண்ணகியின் கையறுநிலையினை சிலம்பிலும், தன்னைப் பேணிக்காத்த பல்லவமன்னன் மூன்றாம் நந்திவர்மன் இறந்துபட்டதால்

"வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயா பரனே!"
 
என்று புலம்பிய புலவரின் கையறுநிலையினை நந்திக்கலம்பகத்திலும்  காணமுடிகிறது.
சங்க இலக்கியத்தில் அறிமுகமாகி, காப்பிய இலக்கியத்தில் வளர்ந்து, கலம்பகம் உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் மூலம் சிறப்புற்ற கையறுநிலைத்துறை., “ சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ.. தீயே உனக்கொரு நாள் தீமூட்டி பாரோமோ” என்று நேருவின் இறப்புக்காய்ப் பாடிய கண்ணதாசனோடு தொடர்ந்து தற்கால இலக்கியத்தியத்திலும் தனி இடத்தைப் பெற்றுள்ளது.
                    ===========================================================

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 17, 2015 6:40 pm

நன்றி நன்றி நன்றி

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக