புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_m10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_m10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_m10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_m10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_m10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_m10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_m10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_m10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_m10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_m10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_m10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_m10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_m10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_m10 நீதிக்குள்ளுமா சாதி? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிக்குள்ளுமா சாதி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 16, 2015 4:10 pm


சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை வழக்குரைஞர் விசாரணை நடத்தும் அறைக்குள் நுழைந்து கூச்சல் போட்டதோடு, "நீ உன் மாநிலமாகிய காஷ்மீருக்குப் போ' என்று தமிழக வழக்குரைஞர்கள் கோஷமிட்டிருக்கும் செயல் இந்திய அளவில் தமிழக நீதிமன்றங்களின் நிலையை அம்பலப்படுத்துவதாக உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர் பால் வசந்தகுமார் பணியேற்றுள்ள இன்றைய சூழலில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கெளல் முன்பாக இவ்வாறு கோஷமிடுவதால் நேரிடக்கூடிய எதிர்வினை எப்படி இருக்கும் என்று சட்டம் படித்தவர்கள் ஏன் சிந்தித்துப் பார்க்கவில்லை? ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் பால் வசந்தகுமாரைப் பார்த்து, "நீ தமிழ்நாட்டுக்குப் போ' என்பார்கள். இது இங்குள்ள வழக்குரைஞர்களுக்குத் தெரியாதா அல்லது தெரிந்திருந்தும், வேண்டுமென்றே காஷ்மீர் வழக்குரைஞர்களை வம்புக்கிழுப்பதற்காக இதுபோன்ற விஷமங்களில் ஈடுபடுகின்றனரா?

இந்த கோஷங்களை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் எழுப்பிடக் காரணம், "காலியாக உள்ள 18 நீதிபதி இடங்களை உடனே நிரப்ப வேண்டும். இரு தவணைகளில் நியமிக்கக் கூடாது. ஏற்கெனவே பிரதிநிதித்துவம் பெற்ற சமூகத்தினருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது. இடஒதுக்கீடு வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்துவதும், இதில் தலைமை நீதிபதி மாறுபட்ட கருத்து கொண்டிருப்பதும்தான்.

ஏற்கெனவே 9 பேர் கொண்ட பட்டியல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது தொடர்பாக வழக்குரைஞர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியது. சில சாதியினரை நீக்கிவிட்டு, சில சாதியினரைச் சேர்க்க வேண்டும் என்பதுதான் அந்தப் போராட்டத்தின் கோரிக்கை.

இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மூண்ட சாதிச் சண்டை, ஒருவரை வாசலில் போட்டு அடித்ததை உலகம் முழுதும் பார்க்க வைத்தது. அதற்கு முன்பு, வழக்குரைஞர்களுக்கும் போலீசாருக்கும் நடைபெற்ற போரை, ஊடகங்கள் மூலம் உலகம் பார்த்தது. சில தினங்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் சங்கத் தேர்தல் முடிவைக் கொண்டாடியபோது ஒரு வழக்குரைஞர் கொலை செய்யப்பட்டார்.

இவை யாவும் வழக்குரைஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் தன்வசம் இழந்து அரசியல் சாய்வுகளுக்கு ஆட்பட்டு விட்டார்கள் என்பதையும், அரசியல் என்பது கொள்கைகளை இழந்து சாதி அடையாளங்களில் சிக்கிவிட்டது என்பதையுமே காட்டுகின்றன.

உயர்நீதிமன்றத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் பலவும் 150 ஆண்டு கால சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றை களங்கப்படுத்திவிட்டன. இதுபோதாதென, தற்போது நீதிபதியை "உன் ஊருக்குப் போ' என்று சொல்லும் அளவுக்குத் தாழ்ந்திருக்கிறது.

வழக்குரைஞர்களின் நடத்தை மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ள தலைமை நீதிபதி கெளல், "நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிலரைத் தண்டிக்கிறோம். உயர்நீதிமன்றத்தை மதிக்க வேண்டிய வழக்குரைஞர்களே மதிக்காமல் செயல்பட்டால், அவர்கள் என்ன நினைப்பார்கள்? பெருமை வாய்ந்த சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கேடு விளைவிக்காதீர்கள்' என்று கூறியுள்ள வார்த்தைகள், வெறும் வழக்குரைஞர்களுக்கானது மட்டுமல்ல, தமிழர் அனைவருக்கும் சொன்ன வார்த்தைகள்.

சென்னை உயர்நீதிமன்றம் இந்த அளவுக்கு ஆகிப்போனதன் காரணம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் அரசியல் புகுந்ததுதான். அரசியல் கட்சிகள் தங்களுக்கு வேண்டிய, சாதகமான நபர்களை நீதிபதிகளாகப் பரிந்துரைக்கவும், அழுத்தம் கொடுக்கவுமான போக்கு 1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிகமானது. தகுதி இல்லாவிட்டாலும், குற்றம் குறை இருந்தாலும் காவல் துறை சான்றொப்பத்தை ஏற்றவாறு பெற்று நீதிபதிகளை பணியமர்த்தினார்கள். அவ்வாறு பணியமர்த்தப்பட்ட நீதிபதிகள் அரசியல்வாதிகளுக்குப் பூங்கொத்து கொடுப்பதும், அவர்களது இல்லத் திருமணத்துக்கு செல்வதும், இவர்களது இல்லத் திருமணத்துக்கு அரசியல் படை வருவதும் சர்வ சாதாரணமானது.

நாளடைவில், சாதிக் கட்சிகள் அரசியலுக்கு வந்த பின்னர், நம் கட்சியின் அனுதாபி என்ற நிலை மாறி, நம் சாதிக்காரர் என்பதாக பரிந்துரைகள் மாறத் தொடங்கின. நீதிபதி நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. எல்லா மாநிலங்களிலும் இந்த நிலைமை உண்டு என்றாலும், தமிழ்நாட்டில் மட்டுமே மிக மோசமாக இருக்கிறது.

ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தின் பெயர் கெட்டுக் கிடக்கிறது. இதில் சாதி அடையாளங்களும் சேர்ந்து கொண்டால், ஒரு நீதிபதி வழங்கும் ஒவ்வொரு தீர்ப்பும், அவரது சாதி, வழக்கில் வெற்றி பெற்ற வழக்குரைஞரின் சாதியை வைத்து பேசப்படும் இழிநிலை தமிழகத்தில் உருவாகிவிடும். அவர் திமுக அனுதாபி, காங்கிரஸ் அனுதாபி, அதிமுக அனுதாபி, அவர் கம்யூனிஸ்ட் என்கிற தற்போதைய அடையாளம் போய், அவர் இன்ன சாதி, இன்ன சமயம் என்ற அடையாளப்படுத்தப்பட்டால் அது நீதிக்கு அழகாகுமா?

சட்டத்தில் ஆழ்ந்த அறிவும், நடுநிலை கோடாத, உணர்ச்சிவசப்படாதவர்தான் நீதிபதியாக இருக்கத் தகுந்தவர். "...வழக்கு இழந்தவர்தாம் மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர் முறை உறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி ஈர்வதோர் வாள் ஆகும்மே' என்கிறாள் ஒளவை. நீதிபதி பதவி வெறும் அதிகாரம் தரும் பதவி மட்டுமல்ல. மூன்று தலைமுறைக்கு கண்ணீரையும் கொடுத்துவிடும் அபாயமுள்ள பதவி.

நீதிக்குள் சாதியையும் சாதிக்குள் நீதியையும் திணிப்பது முறையல்ல.


தினமணி



 நீதிக்குள்ளுமா சாதி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Feb 16, 2015 4:24 pm

சட்டம் படித்தவர்கள் முதலின் அதை பின்பற்ற வேண்டும், அதை விடுத்து
இந்த மாதிரி கீழ் தரமான செயல்களில் ஈடுபடுவது சரியல்ல..



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 நீதிக்குள்ளுமா சாதி? W5td1pX3QFi1kBRhH0I3+Affection

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக