புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
75 Posts - 56%
heezulia
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
41 Posts - 31%
mohamed nizamudeen
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
Sathiyarajan
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
70 Posts - 56%
heezulia
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
39 Posts - 31%
mohamed nizamudeen
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_m10மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 1:57 pm

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி
அங்கத்தில் குறை இருந்தாலும்
அகத்தில் குறை இல்லாதவர்கள் !
உடலில் குறை இருந்தாலும்
உள்ளத்தில் குறை இல்லாதவர்கள் !
நடக்க முடியாவிட்டாலும் சோராதவர்கள்
பேச முடியாவிட்டாலும் பேதலிக்காதவர்கள் !
பார்க்க முடியாவிட்டாலும் அசராதவர்கள்
கேட்க முடியாவிட்டாலும் வருந்தாதவர்கள் !
கைகள் இல்லாவிட்டாலும் கலங்காதவர்கள்
குறைகள் கண்டு கரையாதவர்கள் !
நான்கு சுவருக்குள் சுருங்காதவர்கள்
நான்கு திசைகளும் செல்வர்கள் !
இல்லாததற்காக என்றும் வருந்தாதவர்கள்
இருப்பதை செம்மையாக்கும் திறனாளர்கள் !
வாய்ப்புகள் வழங்கினால் ஒளிர்வார்கள்
வசதிகள் ஏற்படுத்தினால் வளர்வார்கள் !
குறையையும் நிறையாக எண்ணுபவர்கள்
குறைக்காக என்றும் வருந்தாதவர்கள் !
பரிசுகளும் பதக்கங்களும் பெறுபவர்கள்
பலரின் பாராட்டுக்கு உரியவர்கள் !
எக்குறையும் இல்லாதோர் சிலர்
எவ்வேலையும் செய்யாமல் உளர் !
உடற்குறை இருந்தபோதும் பலர்
ஓடி ஓடி உழைப்போர் உளர் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 1:58 pm

பார்வையற்றவர்கள் ! கவிஞர் இரா .இரவி

புறப்பார்வை இரண்டு இல்லாவிட்டாலும்
வந்தவர் குரல் கேட்டவுடன்
வந்தவரின் பெயரை அறிவார்கள் !
பணத்தின் மதிப்பு என்ன என்பதை
பார்க்காவிடினும் விரலால் உணர்வார்கள் !
பாடல் வரிகள் மனனம் செய்து
பாடுவார்கள் வரி எதுவும் விடாமல் !
இசைக்கருவிகளை நுட்பமாக கையாண்டு
இனிமையாக இசை அமைப்பார்கள் !
மா என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தவர்
மாற்றுத்திறனாளி மதுரைக்காரர் !
இசைக்குழுக்கள் அமைத்து நிகழ்வுகளில்
இன்னிசை விருந்து தருபவர்கள் !
அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர்
பார்வையற்றோர் பலருக்கு ஏணி அவர் !
படிக்க வைத்து கரை சேர்க்கும் தோணி அவர் !
பலகுரல் நிகழ்ச்சியும் நடத்துவார்கள்
பல்வேறு திறமைகள் உள்ளவர்கள் !
கணினி இயக்கவும் கற்கிறார்கள்
கண் பார்வையின்றியே சாதிக்கிறார்கள் !
ஊன்றுகோல் தட்டியே உணர்வார்கள்
உயரம் பள்ளம் குச்சியால் அறிவார்கள் !
முதுநிலை பட்டம் கூட பெற்றுள்ளார்கள்
முத்திரைப் பதிக்கும் செயல்கள் செய்வார்கள் !
தன்னம்பிக்கை பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள்
தன்னம்பிக்கை சிகரமாக வாழ்கிறார்கள் !
பார்வையுள்ளவர்களில் சோம்பேறிகள் உண்டு
பார்வையற்றவர்களில் சோம்பேறிகள் இல்லை !
துன்பத்திற்கு துன்பம் தந்து திருக்குறள் வழி
இன்பமாய் வாழும் வல்லவர்கள் நல்லவர்கள் !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !























eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 1:59 pm

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ! கவிஞர் இரா .இரவி

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே !
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்று
சொல்லியது பன்மொழி அறிஞர் பாரதியார் !
உலகின் முதல் மொழி தமிழ் என்று
உரைப்பது தமிழனன்று அமெரிக்கா ஆய்வாளர் !
உறவுகளுக்கு என்று பலவிதமான சொற்கள்
அடுக்கு மொழியில் அள்ளி விட சொற்கள்
ஆயிரக்கணக்கில் அழகு தமிழில் உண்டு !
தமிழ் !தமிழ் !தமிழ் ! என்று உச்சரித்துப் பாருங்கள்
அமிழ்து ! அமிழ்து ! என்று ஒலி கேட்கும் !
முத்தமிழுக்கும் மகுடமாக விளங்குவது சொற்கள்
முக்காலமும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி !
ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு
ஒரு சொல் கூட பொருள் இன்றி இல்லை !
ஓர் எழுத்து சொல்லுக்கும் பொருள் உண்டு
இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்கள் உண்டு !
உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர்மெய் எழுத்து
மூவகை எழுத்துக்களின் சுரங்கம் தமிழ் மொழி !
பிறமொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி
பிறக்கும்போதே சிறப்போடு பிறந்த மொழி !
பன்மொழி அறிஞர்கள் பாராட்டும் தமிழ்மொழி
பன்னாட்டு அறிஞர்கள் போற்றிடும் தமிழ்மொழி !
உலக உயிரினங்கள் உச்சரிக்கும் அம்மா தமிழ்
உலகமே போற்றிடும் உன்னத மொழி தமிழ்மொழி !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !




















eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 2:00 pm

பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி
தேவை விளம்பரம்
பூக்கடைக்கும்
காகிதப்பூக்கள் !
பணிவு கூட்டிடும்
கர்வம் குறைத்திடும்
புகழ் !
வாத்தியார் பிள்ளை மக்கல்ல
ஆசிரியர் பிள்ளை
பேராசிரியர் !
ஆசைப்படலாம் முடவன்
கொம்புத் தேனுக்கு
கடையில் கிடைக்கும் !
நாலு பெண்கள் கூடினால்
வேற்றுமையல்ல ஒற்றுமை
மகளிர் சுய உதவிக்குழு !
நாய் விற்ற காசு குரைக்காது
தெரிந்தது
நாயின் முகம் !
நிலையாமை ஒன்றே
நிலையானது
வாழ்க்கை !
நீர் உயர
நெல் உயரவில்லை
அழுகியது நெல் !
பெண் புத்தி பின் புத்தி
பின்னால் வருவதை
யோசிக்கும் புத்தி !
பொறுத்தார் பூமி ஆளவில்லை
இழந்தார்கள்
பூமியை !
அதிகம் வேண்டும்
ஞாபகம்
பொய்யனுக்கு !
பிறந்ததும்
கற்றது நீச்சல்
மீன்குஞ்சு !
பழம்தான்
இனிப்பதில்லை
மிளகாய்ப்பழம் !
எடுத்தால் ஓடாததால்
எடுக்கவில்லை படம்
பாம்பு !
பசுமரத்தாணியாகப் பதிகின்றன
ஊடகத்தில் காட்டும்
கெட்டவைகள் !
பழகப் பழக
புளிக்கும் பால்
இனிப்பால் காதலி !
பாம்புக்கு பால் வார்ப்பு
இலங்கைக்கு உதவும்
இந்தியா !
பாம்பு என்றால்
படையும் நடுங்கும்
அஞ்சுவதில்லை பருந்து !
பிள்ளையில்லா வீட்டில்
துள்ளவில்லை வருத்தத்தில்
கிழவன் !
உருவத்தில் சிறியது
உடல் நலத்திற்கு நல்லது
மிளகு !
மூர்த்தி சிறியது
கீர்த்தி பெரியது
மிளகு !
பல் போனால்
சொல் போகவில்லை
செயற்கைப் பற்கள் !
தோளுக்கு மிஞ்சினால்
தோழனாகப் பழகினால்
நீடிக்கும் உறவு !
பிள்ளையார் பிடிக்க
குரங்காய் முடிந்தது
அணு உலை !
சிப்பியில் விழும்
எல்லா மழைத்துளியும்
முத்தாகாது !
நல்ல மரத்தில் புல்லுருவிகள்
கல்வித்துறையில்
தனியார் !
வயதாகும் முன்பும்
நரை வரும்
இளநரை !
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்
எல்லாப் பிள்ளைக்கும் வாயுண்டு
பேசத்தெரிந்த பிள்ளை பிழைக்கும் !
பயம் கொள்ளவில்லை
புலிக்குகை புகுந்த மான்
குகையில் இல்லை புலி !
இரண்டும் ஒன்று
தவளை அரசியல்வாதி
தன் வாயால் கெடுபவர்கள் !
தீட்டின மரத்திலேயே
கூர் பார்த்தனர்
கட்சி மாறி !
பசுத்தோல் போர்த்திய
புலியாக
தலைவர்கள் !
தோலிருக்க
சுளை முழங்கி
அரசியல்வாதி !
வாய்ப்பந்தல்
நிழல் தராது
தேர்தல் அறிக்கை !
நெற்றிக்கண் கண்டால்
நடுங்குகின்றனர்
இக்காலப் புலவர்கள் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 2:01 pm


பாவையின் பார்வை ! கவிஞர் இரா .இரவி
சிக்கி முக்கி கற்களை
உரசினால்தான் தீ வரும் !
கள்ளி அவள்

கண்களால் பார்த்தாலே தீ வரும் !
இமைகள் கூட
இமைக்க மறக்கின்றன
அவளைக் கண்டால் !
அவள் விழிகளிலிருந்து
வரும் விசைகளால்
ஆட்டம் காண்கிறது
மனசு !
இதழ்கள் அசைத்து
எதுவும் பேசவில்லை
எல்லாம் பேசிவிட்டாள்
விழிகளால் !
வேறு எங்கும்
நான் கண்டதில்லை
கரு விழிகள் நடனம் !
நோக்கும்போது
நோகவில்லை
நோக்காதபோது
நொந்து போனேன் !
பாவையின் பார்வை
பரவசத்தில்
நேரம் கடப்பதை
உணரவில்லை !
மேனி தீண்டல்
தேவையில்லை
பார்வை சீண்டல் போதும் !
உற்றுப்பார்ததில்
ஊட்டசத்தை
உணர்ந்தேன் !
விழி வழி
இன்பரசம்
அனுப்பும் கள்ளி
. இமைக்காமல் பார்க்கும்
போட்டியில்
வெற்றி அவளுக்கு
வசமானது !
நான் தோற்றபோதும்
மகிழ்ச்சி எனக்கு !
ஆயிரம் பேரோடு
நான் இருந்தாலும்
அழகாக காண்கிறாள்
அழகி !
தொலை தூரத்தில்
நான் இருந்தாலும்
பார்வையால் துரத்திப்
பிடித்து விடுகிறாள் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



































































eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 2:02 pm


ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி
அடிக்கிற கை
வேண்டாம் அணைக்க
குடிகாரன் !
அனைத்தையும் ரசிக்கும்
அடையும் மகிழ்ச்சி
அமைதியான மனம் !
அழுத பிள்ளை
பால் குடிக்கவில்லை
பால் விலை உயர்வு !
அம்மா இறந்தால்
அப்பாவும் இல்லை
குழந்தைக்கு !
அச்சாணி இல்லாத தேர்
முதியோர் இல்லாத
வீடு !
அறுக்கத் தெரிந்தவனுக்கு
ஒன்று போதும்
அரிவாள் !
அடியாது மாடு படியாது
தவறு
அடித்த மாடு சண்டி !
அத்தைக்கு மீசை முளைத்தாலும்
சித்தப்பா அல்ல
அத்தைதான் !
ஆடிப்பட்டம் தேடி விதை
சரி
நிலம் ?
ஆடிக்காற்றில் அம்மியும்
நகரும் சரி
அம்மி ?
இயந்திய வாழ்வை
இனிதாக்கும்
இலக்கியம் !
இலை உதிர் காலம்
இலை உதிர்ப்பதில்லை
ஈச்சம் மரம் !
இட்டுக் கெட்டார்
இங்கு உண்டு
தேர்தலில் வாக்கு !
உதடு வெல்லம்
உள்ளம் கள்ளம்
அரசியல்வாதி !
உடல் பெரிது
கண்கள் சிறிது
யானை !
உழவன் கணக்குப் பார்த்தால்
உழக்கும் மிஞ்சவில்லை
இன்று !
உலகில் எங்கு பிறந்தாலும்
நிறம் கருமைதான்
காகம் !
உலகில் இளைஞர்கள்
அதிகம் வா(ழு )டும் நாடு
இந்தியா !
ஊர் கூடி
தேர் இழுத்ததில்
வந்தது சண்டை !
எச்சிற் கையால்
காக்கை ஓட்டாதவன்
மாறினான் காதலித்ததும் !
நிறையை கூட்டத்தில்
குறையை தனிமையில் கூறுவது
நல்ல நட்பு !
ஓநாயிடம் அன்பு
ஆட்டுக்கு தீமை
இலங்கையிடம் இந்தியா !
கடன் வாங்கித் திருமணம்
குழந்தைக்கு முன்பாக
பிறந்தது வட்டி !
கண்ணுக்கு இமை
காதலனுக்கு காதலி
காவல் !
ஒரு கை தட்டினாலும்
ஓசை வந்தது
மேசை மீது தட்டியதால் !
உரைத்தார் காந்தியடிகள்
உழைக்காமல் உண்பது
திருட்டு !
கடவுளை நம்பினோர்
கைவிடப்பட்டார்
யாத்திரை விபத்து !
கட்டி வா என்றால்
வெட்டி வந்தான்
காது கேளாதவன் !
காக்கை உட்கார
பனம் பழம் விழுந்தது
தங்கத்தின் விலை குறைவு !
காற்றுக்கு சாயும்
ஒடியாது
நாணல் !
பூனையிடம் சிக்கிய கிளியாய்
குடிகாரனிடம்
மனைவி !
கேழ்வரகில் நெய்
வடிகிறது என்கிறார்
சாமியார் !
உலகில்
எங்கும் இல்லை
சைவ கொக்கு !
சனி பிணம் தனியே போகாது
வெட்டியானுக்கு இலாபம்
கோழி !
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சரி
நெல் ?
நரம்புகள் உண்டு
எலும்பு இல்லை
நாக்கு !
வைரம் அறுக்க வைரம்
அன்பைப் பெற செலுத்துக
அன்பு !
பேச்சில் அன்பிருந்தால்
உறவாகும்
உலகம் !
தன்னம்பிக்கை இழக்க
உயிர்த்தெழும்
மூட நம்பிக்கை !
மிதிக்காமல்
கொத்தாது
நல்ல பாப்ம்பு !
தீண்டாமல்
எழுப்பாது ஓசை
மணி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 2:03 pm

குதிரை !கவிஞர் இரா .இரவி!

தொடர்ந்து ஓடும்
தொய்வின்றி ஓடும்
குதிரை !
பற்களால் யாரையும்
கடிப்பது இல்லை
குதிரை !
கொம்புகள் கிடையாது
குத்துவதும் கிடையாது
குதிரை !
ஆற்றல் விரையம் இல்லை
ஆகவே சோர்வும் இல்லை
குதிரை !
சண்டை போடாது
சஞ்சலம் அடையாது
குதிரை !
கடினமாக உழைத்த போதும்
உண்பதில்லை அசைவம்
குதிரை !
கண்களை மூடினாலும்
கவலை கொள்ளாது
குதிரை !
போட்டியில் ஓடினாலும்
பக்கத்தை பார்க்காது
குதிரை !
குறிக்கோள் அடைய
வேகமாக ஓடும்
குதிரை !
பயணம் செய்வதில்
பயம் கொள்ளாது
குதிரை !
மின்சார மோட்டாருக்கும்
சக்தியின் அளவு
குதிரை !
--



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



























M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Feb 16, 2015 3:08 pm

அருமை அருமை.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக