புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ப்ளாஸ்டிக் இரவுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மு. குணசேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
ப்ளாஸ்டிக் இரவுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மு. குணசேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1120739ப்ளாஸ்டிக் இரவுகள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் மு. குணசேகரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராயர் நகர், சென்னை600 017. பேச : 044 52070663
நூலாசிரியர் கவிஞர் மு. குணசேகரன் அவர்கள் நூலின் தலைப்பை ப்ளாஸ்டிக் இரவுகள் என்று சூட்டியதற்கு எது காரணமோ? என வியப்பை நன்கு பதிவு செய்துள்ளார் இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள், இயக்குநர் தரணி அவர்களும் வாழ்த்துரை வழங்கி உள்ளார். காதல் மணம் கமழ கவிதைகள் வடித்துள்ளார். வானில் உள்ள நிலவை ரசிக்க சலிப்பு வருவதில்லை. அதுபோலவே யாருடைய காதல் கவிதையாக இருந்தாலும், படிப்பதற்கு சலிப்பு வருவதில்லை. காரணம், காதல் கவிதைகள் படிக்கும் போது, படிக்கும் வாசகர்களின் காதல் நினைவுகளையும் மலரும் நினைவுகளாக மலர்வித்து மகிழ்விக்கும். அந்த வகையிலான கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன.
முதல் கவிதையே ஒரு ஹைக்கூவோடு தொடங்கி உள்ளார்.
வாழ்ந்ததற்கு
அடையாளம்
காதல்.
உண்மைதான், காதல் வயப்பட்டவர்கள் எல்லாம் பாக்கியவான்கள் எனலாம். அது ஒரு சுகமான அனுபவம். சொற்களால் உணர்த்தி விட முடியாத உன்னத உணர்வு.
எதற்கென்று தெரியவில்லை !
உன்னை பிடித்திருக்கிறது
காதல் செய்திட்டு
இயல்பாய் இருப்பது
இயலாத காரியம்
நான் நெய்யும்
ஒவ்வொரு கவிதையிலும்
நூலாக இருப்பது நீயே
காதல் கதைக்கு
விதை போட்டாய்
கவிதை
காதலிக்க வேண்டாம்
மனிதனாக விரும்பாதவர்கள்.
காதலுக்காக கொடி பிடித்து கட்சி தொடங்கி மனிதனாக வேண்டுமா? உடன் காதலியுங்கள் என்று கவிதையை வடித்துள்ளார்.
காதலுக்கு மெய் அழகு, காதல் கவிதைக்கு பொய் அழகு, பொய் என்று தெரிந்தும் காதலி ரசிப்பது உண்மை. அதனால் தான் பலர் காதல் கவிதைகளில் மையோடு பொய்யும் கலந்து எழுதி வருகின்றனர்.
நீ
மழையில் நனைந்தால்
எறும்பு கூட
காளானுடன் வருகிறது.
எறும்புகள் ஒன்று கூடி காளானை இழுத்து வரலாம். அதனைக் கண்ட கவிஞர் அவை காதலிக்குக் குடைப்பிடிக்கக் கொண்டு வருவதாகக் காட்சிப்படுத்துகின்றார்.
கல்லூரிகளில் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் வகுப்பறைகள் உண்டு. இதில் காதலி வரவில்லை என்றால் காதலன் எழுந்து சென்று விடுவதுண்டு. தமிழ்த் திரைப்படங்களிலும் காட்டி இருக்கிறார்கள். இவர் அக்காட்சியை கவிதையில் உணர்த்துகின்றார். பாருங்கள்.
என் தேவதை
இல்லாத வகுப்பில்
நமக்கென்ன
வேலையென
சென்று விட்டேன்
மறு நாள் தான்
தெரிந்தது
நீ காலம் தாழ்த்தி வந்திருக்கிறாய் !
அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்பதையும் உணர்த்தி விடுகின்றது.
இமைக்காமல் பார்க்கும் போட்டி வைத்தால் வெல்வது யார்? என்றால் காதலி எனலாம். கண்களால் விழுங்குவது கேள்விப்பட்டிருக்கிறோம். இவர் கண்களால் உண்பது பற்றி கவிதை வடித்துள்ளார்.
எத்தனை முறை தின்றாலும்
என் இதயத்திற்கு மட்டும்
திகட்டுவதில்லை
உன் விழிகள்.
நான்
உறங்க படுத்ததும்
எங்கிருந்தோ வந்து
என் நெஞ்சத்தில் சாயும்
உன் நினைவுகளுக்கும் சேர்த்தே
தாலாட்டு பாடுகிறது
காதல்
பார்வைகளை
உதிர்த்துக் கொண்டே போ
நான் சேகரித்துத் தருகிறேன்.
காதல் கவிதைகளில் முத்தம் பற்றிய கவிதை இல்லாமலா இருக்கும். இருக்கின்றது. முத்தத்தின் தித்திப்பிற்குக் காரணம் முத்தமிழ் என்கிறார்.
ஒரு சந்தேகம்
இதழ்களை தமிழிலா
ஊற வைப்பாய்
இப்படி சுவைக்கிறது
நீயும்
என் போல் தானே
அவஸ்தைப்படுவாய்
பிறகேன்
முத்தம் தர மறுக்கிறாய்
என்னிடம் சண்டை போடு
அப்போது தானே
சமாதானஞ் செய்ய
முத்தமிட முடியும்.
நீ! , நீ! என்று முடிக்கும் நீள்கவிதை மிக நன்று. பதச்சோறாக சில வரிகள் மட்டும்.
அழுதால் அணைக்கும் ஆறுதல் நீ
நடையிட ரசிக்கும் ரசிகை நீ
விடைபெற குறையும் புன்னகை நீ
நேரம் காலம் இல்லாமல்
இமைத்ததும்
என் முன் வருபவள் நீ
இராசி, கோள்கள்
ஏதுமின்றி பார்த்ததும்
ஆசை வைத்தவள் நீ
வேசம் முகத்தில் போடாமல்
உண்மை உருவில் உறைபவல் நீ!
காதல் வயப்பட்டவுடன் காதலன், காதலி இருவரும் உணவருந்தும் போது காதலி, காதலனுக்கு ஊட்டி விடும் பழக்கம் சிலருக்கு உண்டு. அதனை நினைவூட்டும் கவிதை மிக நன்று.
என் விரல்களை விட
உன் விரல்களையே
அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன்
சாப்பிட உதவியாய்.
உண்மையில் காதலன் குழந்தையாக இருந்த போது அவரது அம்மா தான் ஊட்டி விட்டு இருப்பார்கள். காதலி சில வேளை மட்டும் ஊட்டி இருக்கலாம். காதலன் அம்மாவை மறந்துவிட்டு காதலியைப் பாராட்டுவது இயல்பு தான். நாட்டில் நடக்கும் ஒன்று தான்.
சண்டையிட்டு ஊடலில் கோபித்துக் கொண்டு சென்ற காதலி உடன் வந்து விட்டாள் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லது கண் மூடியதும் கனவில் வந்து விடுகிறாள் என்றும் பொருள் கொள்ளலாம். இதில் எது உண்மை என்பது எழுதிய கவிஞருக்கே வெளிச்சம்.
நாம் சந்திக்க
வாய்ப்பே இல்லையென
சென்ற நீ
ஏன் இமைத்ததும்
எதிர்வந்து நிற்கிறாய்.
காதல் கவிதைகளில் வாசகர்கள் கேள்வி கேட்க கூடாது. இது நடக்குமா? இது நடந்ததா? இப்படி எழுதலாமா? என்று கவிதையை அப்படியே ரசிப்பது தான் ரசிகரின் வேலை. அப்படியான கவிதை ஒன்று, இப்படி எழுதினால் தான் காதலி ரசிப்பாள்.
நீ
வந்து போன பாதை
தனக்குத்தான் சொந்தமென
உச்சநீதிமன்றத்தில்
புற்களும் பூமியும்.
உச்சநீதிமன்றத்தில் மனிதர்கள் தொடுக்கும் சில வழக்குகளே ஏற்காமல் தள்ளுபடி செய்து விடுகின்றனர். புற்களும் பூமியும் வழக்குத் தொடுத்தால் உச்சநீதிமன்றத்தில் ஏற்பார்களா? என்ற கேள்வி எழுப்பாமல் கவிதையை ரசியுங்கள்.
காதலிக்கும் காலத்தில், காதலிக்கு வலி, வேதனை, துன்பம் வரக்கூடாது என்று காதலன் நினைப்பது வாடிக்கை.
அன்பே !
பிரசவ வலி உனக்கு வேண்டாம்
குழந்தை வேண்டுமானால்
தத்தெடுத்துக் கொள்வோம்!
காதலியின் மீதுள்ள அக்கறையில் தத்தெடுக்கும் பொதுநலமும் உள்ளது. பாராட்டுக்கள். உண்மையில் பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் மறுஜென்மம் என்பார்கள். ஒவ்வொரு பெண்ணும் தன்னுயிரை துச்சமென நினைத்துத்தான் இந்த மண்ணில் குழந்தையை பிரசவிக்கிறார்கள்.
காதல் ரசம் சொட்டச் சொட்ட புதுக்கவிதை வடித்த நூலாசிரியர் கவிஞர் மு. குணசேகரன் அவர்களுக்கு பாராட்டுக்கள். .
நூல் ஆசிரியர் : கவிஞர் மு. குணசேகரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராயர் நகர், சென்னை600 017. பேச : 044 52070663
நூலாசிரியர் கவிஞர் மு. குணசேகரன் அவர்கள் நூலின் தலைப்பை ப்ளாஸ்டிக் இரவுகள் என்று சூட்டியதற்கு எது காரணமோ? என வியப்பை நன்கு பதிவு செய்துள்ளார் இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள், இயக்குநர் தரணி அவர்களும் வாழ்த்துரை வழங்கி உள்ளார். காதல் மணம் கமழ கவிதைகள் வடித்துள்ளார். வானில் உள்ள நிலவை ரசிக்க சலிப்பு வருவதில்லை. அதுபோலவே யாருடைய காதல் கவிதையாக இருந்தாலும், படிப்பதற்கு சலிப்பு வருவதில்லை. காரணம், காதல் கவிதைகள் படிக்கும் போது, படிக்கும் வாசகர்களின் காதல் நினைவுகளையும் மலரும் நினைவுகளாக மலர்வித்து மகிழ்விக்கும். அந்த வகையிலான கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன.
முதல் கவிதையே ஒரு ஹைக்கூவோடு தொடங்கி உள்ளார்.
வாழ்ந்ததற்கு
அடையாளம்
காதல்.
உண்மைதான், காதல் வயப்பட்டவர்கள் எல்லாம் பாக்கியவான்கள் எனலாம். அது ஒரு சுகமான அனுபவம். சொற்களால் உணர்த்தி விட முடியாத உன்னத உணர்வு.
எதற்கென்று தெரியவில்லை !
உன்னை பிடித்திருக்கிறது
காதல் செய்திட்டு
இயல்பாய் இருப்பது
இயலாத காரியம்
நான் நெய்யும்
ஒவ்வொரு கவிதையிலும்
நூலாக இருப்பது நீயே
காதல் கதைக்கு
விதை போட்டாய்
கவிதை
காதலிக்க வேண்டாம்
மனிதனாக விரும்பாதவர்கள்.
காதலுக்காக கொடி பிடித்து கட்சி தொடங்கி மனிதனாக வேண்டுமா? உடன் காதலியுங்கள் என்று கவிதையை வடித்துள்ளார்.
காதலுக்கு மெய் அழகு, காதல் கவிதைக்கு பொய் அழகு, பொய் என்று தெரிந்தும் காதலி ரசிப்பது உண்மை. அதனால் தான் பலர் காதல் கவிதைகளில் மையோடு பொய்யும் கலந்து எழுதி வருகின்றனர்.
நீ
மழையில் நனைந்தால்
எறும்பு கூட
காளானுடன் வருகிறது.
எறும்புகள் ஒன்று கூடி காளானை இழுத்து வரலாம். அதனைக் கண்ட கவிஞர் அவை காதலிக்குக் குடைப்பிடிக்கக் கொண்டு வருவதாகக் காட்சிப்படுத்துகின்றார்.
கல்லூரிகளில் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் வகுப்பறைகள் உண்டு. இதில் காதலி வரவில்லை என்றால் காதலன் எழுந்து சென்று விடுவதுண்டு. தமிழ்த் திரைப்படங்களிலும் காட்டி இருக்கிறார்கள். இவர் அக்காட்சியை கவிதையில் உணர்த்துகின்றார். பாருங்கள்.
என் தேவதை
இல்லாத வகுப்பில்
நமக்கென்ன
வேலையென
சென்று விட்டேன்
மறு நாள் தான்
தெரிந்தது
நீ காலம் தாழ்த்தி வந்திருக்கிறாய் !
அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்பதையும் உணர்த்தி விடுகின்றது.
இமைக்காமல் பார்க்கும் போட்டி வைத்தால் வெல்வது யார்? என்றால் காதலி எனலாம். கண்களால் விழுங்குவது கேள்விப்பட்டிருக்கிறோம். இவர் கண்களால் உண்பது பற்றி கவிதை வடித்துள்ளார்.
எத்தனை முறை தின்றாலும்
என் இதயத்திற்கு மட்டும்
திகட்டுவதில்லை
உன் விழிகள்.
நான்
உறங்க படுத்ததும்
எங்கிருந்தோ வந்து
என் நெஞ்சத்தில் சாயும்
உன் நினைவுகளுக்கும் சேர்த்தே
தாலாட்டு பாடுகிறது
காதல்
பார்வைகளை
உதிர்த்துக் கொண்டே போ
நான் சேகரித்துத் தருகிறேன்.
காதல் கவிதைகளில் முத்தம் பற்றிய கவிதை இல்லாமலா இருக்கும். இருக்கின்றது. முத்தத்தின் தித்திப்பிற்குக் காரணம் முத்தமிழ் என்கிறார்.
ஒரு சந்தேகம்
இதழ்களை தமிழிலா
ஊற வைப்பாய்
இப்படி சுவைக்கிறது
நீயும்
என் போல் தானே
அவஸ்தைப்படுவாய்
பிறகேன்
முத்தம் தர மறுக்கிறாய்
என்னிடம் சண்டை போடு
அப்போது தானே
சமாதானஞ் செய்ய
முத்தமிட முடியும்.
நீ! , நீ! என்று முடிக்கும் நீள்கவிதை மிக நன்று. பதச்சோறாக சில வரிகள் மட்டும்.
அழுதால் அணைக்கும் ஆறுதல் நீ
நடையிட ரசிக்கும் ரசிகை நீ
விடைபெற குறையும் புன்னகை நீ
நேரம் காலம் இல்லாமல்
இமைத்ததும்
என் முன் வருபவள் நீ
இராசி, கோள்கள்
ஏதுமின்றி பார்த்ததும்
ஆசை வைத்தவள் நீ
வேசம் முகத்தில் போடாமல்
உண்மை உருவில் உறைபவல் நீ!
காதல் வயப்பட்டவுடன் காதலன், காதலி இருவரும் உணவருந்தும் போது காதலி, காதலனுக்கு ஊட்டி விடும் பழக்கம் சிலருக்கு உண்டு. அதனை நினைவூட்டும் கவிதை மிக நன்று.
என் விரல்களை விட
உன் விரல்களையே
அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன்
சாப்பிட உதவியாய்.
உண்மையில் காதலன் குழந்தையாக இருந்த போது அவரது அம்மா தான் ஊட்டி விட்டு இருப்பார்கள். காதலி சில வேளை மட்டும் ஊட்டி இருக்கலாம். காதலன் அம்மாவை மறந்துவிட்டு காதலியைப் பாராட்டுவது இயல்பு தான். நாட்டில் நடக்கும் ஒன்று தான்.
சண்டையிட்டு ஊடலில் கோபித்துக் கொண்டு சென்ற காதலி உடன் வந்து விட்டாள் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லது கண் மூடியதும் கனவில் வந்து விடுகிறாள் என்றும் பொருள் கொள்ளலாம். இதில் எது உண்மை என்பது எழுதிய கவிஞருக்கே வெளிச்சம்.
நாம் சந்திக்க
வாய்ப்பே இல்லையென
சென்ற நீ
ஏன் இமைத்ததும்
எதிர்வந்து நிற்கிறாய்.
காதல் கவிதைகளில் வாசகர்கள் கேள்வி கேட்க கூடாது. இது நடக்குமா? இது நடந்ததா? இப்படி எழுதலாமா? என்று கவிதையை அப்படியே ரசிப்பது தான் ரசிகரின் வேலை. அப்படியான கவிதை ஒன்று, இப்படி எழுதினால் தான் காதலி ரசிப்பாள்.
நீ
வந்து போன பாதை
தனக்குத்தான் சொந்தமென
உச்சநீதிமன்றத்தில்
புற்களும் பூமியும்.
உச்சநீதிமன்றத்தில் மனிதர்கள் தொடுக்கும் சில வழக்குகளே ஏற்காமல் தள்ளுபடி செய்து விடுகின்றனர். புற்களும் பூமியும் வழக்குத் தொடுத்தால் உச்சநீதிமன்றத்தில் ஏற்பார்களா? என்ற கேள்வி எழுப்பாமல் கவிதையை ரசியுங்கள்.
காதலிக்கும் காலத்தில், காதலிக்கு வலி, வேதனை, துன்பம் வரக்கூடாது என்று காதலன் நினைப்பது வாடிக்கை.
அன்பே !
பிரசவ வலி உனக்கு வேண்டாம்
குழந்தை வேண்டுமானால்
தத்தெடுத்துக் கொள்வோம்!
காதலியின் மீதுள்ள அக்கறையில் தத்தெடுக்கும் பொதுநலமும் உள்ளது. பாராட்டுக்கள். உண்மையில் பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் மறுஜென்மம் என்பார்கள். ஒவ்வொரு பெண்ணும் தன்னுயிரை துச்சமென நினைத்துத்தான் இந்த மண்ணில் குழந்தையை பிரசவிக்கிறார்கள்.
காதல் ரசம் சொட்டச் சொட்ட புதுக்கவிதை வடித்த நூலாசிரியர் கவிஞர் மு. குணசேகரன் அவர்களுக்கு பாராட்டுக்கள். .
Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|