புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பணம் தா! Poll_c10ஒரு பணம் தா! Poll_m10ஒரு பணம் தா! Poll_c10 
32 Posts - 50%
heezulia
ஒரு பணம் தா! Poll_c10ஒரு பணம் தா! Poll_m10ஒரு பணம் தா! Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
ஒரு பணம் தா! Poll_c10ஒரு பணம் தா! Poll_m10ஒரு பணம் தா! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு பணம் தா! Poll_c10ஒரு பணம் தா! Poll_m10ஒரு பணம் தா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பணம் தா! Poll_c10ஒரு பணம் தா! Poll_m10ஒரு பணம் தா! Poll_c10 
32 Posts - 50%
heezulia
ஒரு பணம் தா! Poll_c10ஒரு பணம் தா! Poll_m10ஒரு பணம் தா! Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
ஒரு பணம் தா! Poll_c10ஒரு பணம் தா! Poll_m10ஒரு பணம் தா! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு பணம் தா! Poll_c10ஒரு பணம் தா! Poll_m10ஒரு பணம் தா! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பணம் தா!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 10, 2015 11:43 pm

கொல்லூர் என்ற ஊரில் வீரபாண்டி என்பவன் இருந்தான். பிறரை ஏமாற்றியே, அவன் வாழ்க்கை நடத்தி வந்தான். தன்னிடம் உள்ள பொருள்களைப் பிறருக்குக் குறைவான விலைக்கு விற்பான். பிறகு அவர்களை ஏமாற்றி, அந்தப் பொருள்களைப் பிடுங்கிக் கொள்வான். இப்படிச் செய்வது அவன் வழக்கமாக இருந்தது. அந்த ஊரில் நிறைய பேர் அவனிடம் ஏமாந்தனர்.

அவன் இயல்பை அறிந்த யாரும் அவன் வழிக்கே செல்வது இல்லை. அவனிடம் எந்தப் பொருளையும் வாங்குவது இல்லை.

வெளியூரில் இருந்து கோபி என்பவன் தன் குடும்பத்துடன் அந்த ஊருக்குக் குடி வந்தான். அங்கேயே நிலத்தை வாங்கி உழவு செய்யத் தொடங்கினான். புதியவனான அவனை எப்படி ஏமாற்றுவது என்று சிந்தித்தான் வீரபாண்டி.

கோபியிடம் வந்த அவன், ""நீங்கள் வாங்கிய நிலத்திற்கு அருகே எனக்குச் சொந்தமான கிணறு உள்ளது. அதை நீங்கள் வாங்கினால், உங்கள் நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச உதவியாக இருக்கும். எனக்கு இப்போது பணத் தேவை இருப்பதால், உங்களுக்குக் குறைந்த விலைக்குத் தருகிறேன்,'' என்று இனிமையாகப் பேசினான்.

அவன் ஏமாற்றுக்காரன் என்பதை அறியாத கோபி, ""என்ன விலை சொல்கிறீர்கள்?'' என்று கேட்டான்.
""நூறு பணம் தாருங்கள்,'' என்றான் வீரபாண்டி.

குறைவான விலை என்று நினைத்தான் கோபி. அந்தக் கிணற்றை நூறு பணம் கொடுத்து வாங்கினான்.
ஒருவாரம் சென்றது.

கோபியிடம் வந்த அவன், ""நான் உன்னிடம் கிணற்றைத்தான் விற்றேன். தண்ணீரை அல்ல... அதில் உள்ள தண்ணீர் எனக்கு உரிமையானது. அந்த தண்ணீரைப் பயன்படுத்த, எனக்கு ஒரு நாளைக்கு ஒரு பணம் தர வேண்டும்,'' என்றான் வீரபாண்டி.
இதைக் கேட்ட கோபி திகைத்தான்.

""கிணற்றை விற்கும்போது அதில் உள்ள தண்ணீரையும் சேர்த்துத்தான் விற்பர். இப்போது கிணற்றில் உள்ள தண்ணீருக்குப் பணம் கேட்கிறாயே. எந்த ஊரிலும் இல்லாத அநியாயமாக உள்ளதே,'' என்றான்.
""நான் கிணற்றைத்தான் உன்னிடம் விற்றேன். அதில் உள்ள தண்ணீருக்கு நீ பணம் தர வேண்டும்,'' என்று அடாவடியாகப் பேசினான் வீரபாண்டி.

வேறு வழி தெரியாத கோபி ஊர்ப் பெரியவர்களிடம் சென்றான். அவர்களிடம் நடந்ததை எல்லாம் சொன்னான்.
""நீங்கள்தான் எனக்கு நல்ல வழி காட்ட வேண்டும்,'' என்று வேண்டினான்.

""அவன் பெரிய ஏமாற்றுக்காரன் ஆயிற்றே, நாங்கள் எல்லாருமே அவனிடம் ஏமாந்து உள்ளோம். அவனிடமா கிணற்றை வாங்கினாய்? அவன் யார் பேச்சுக்கும் கட்டுப்பட மாட்டானே... அவன் என்ன சொல்கிறானோ அதன்படி நடந்து கொள். உனக்கு உதவி செய்ய எங்களால் முடியாது,'' என்றனர்.
ஏமாற்றத்துடன் திரும்பிய அவனைப் பார்த்து சிரித்தான் வீரபாண்டி.

""ஊர்ப் பெரியவர்களிடம் சென்றாயே... அவர்கள் என்ன சொன்னார்கள்?'' என்று கேலியாகக் கேட்டான்.
""நீ கேட்டது போல என்னால் அவ்வளவு பணம் தர முடியாது. ஒரு மாதத்திற்கு ஒரு பணம் தருகிறேன்,'' என்று கெஞ்சினான் கோபி.

""ஒரு நாளைக்கு ஒரு பணம் தா. இல்லையேல், கிணற்றில் உள்ள தண்ணீரை எல்லாம் என்னிடம் தந்துவிடு,'' என்று அடாவடியாகப் பேசினான்.
என்ன செய்வான் கோபி?

நீதிமன்றத்திற்குச் சென்ற அவன், நீதிபதியிடம் நடந்ததை எல்லாம் சொன்னான்.
""நீங்கள்தான் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்,'' என்று வேண்டினான்.
வீரபாண்டியை அழைத்து விசாரித்தார் நீதிபதி.

""நீதிபதி அவர்களே! நான் இவனிடம் கிணற்றைத்தான் விற்றேன். அதில் உள்ள தண்ணீரை அல்ல. எனக்கு உரிமையான தண்ணீர் இப்போது இவன் கிணற்றில் உள்ளது. அதற்காக இவனிடம் வாடகை கேட்கிறேன். அதில், என்ன தவறு?'' என்று சாமர்த்தியமாகப் பேசினான்.

செய்வது ஏமாற்றுத்தனம். என்ன அழகாகப் பேசுகிறான். இந்த வழக்கில் எப்படி தீர்ப்பு வழங்குவது என்று சிந்தித்தார் நீதிபதி. நல்ல வழி ஒன்று அவருக்குத் தோன்றியது.

வீரபாண்டியை பார்த்து, ""நீ சொல்வது சரிதான். உன் கிணற்றை இவரிடம் விற்று விட்டாய். அதற்கான தொகையையும் பெற்றுக் கொண்டாய். உனக்கு உரிமையான தண்ணீர் அவர் கிணற்றில் உள்ளது. அதற்கு வாடகை கேட்கிறாய். நீ கேட்பதில் நியாயம் உள்ளது,'' என்றார் நீதிபதி.

"தனக்கு சாதகமாகவே தீர்ப்பு வரப் போகிறது' என்று உள்ளுக்குள் மகிழ்ந்தான்.
நீதிபதி வீரபாண்டியை பார்த்து, ""உனக்கு உரிமையான தண்ணீரை அவர் கிணற்றிற்குள் ஏன் வைத்து இருக்கிறாய்? உனக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன்.

அதற்குள் அந்தத் தண்ணீர் முழுவதையும் எடுத்துச் செல்ல வேண்டும். அதன் பிறகு கோபி கிணற்றுக்குள் உனக்கு உரிமையான தண்ணீர் இருக்கக் கூடாது. ஒரு சொட்டுத் தண்ணீர் இருந்தாலும் உனக்கு தண்டனைதான்,'' என்றார் நீதிபதி "கிணற்றுத் தண்ணீரை முழுமையாக எப்படி எடுக்க முடியும்? தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்குமே... என்ன செய்வது?' என்று திகைத்தான் வீரபாண்டி.

""நீதிபதி அவர்களே! கிணற்றுக்குள் இருந்த தண்ணீரை முழுமையாக எடுக்க முடியாதே,'' என்றான்.
""எனக்கு அது தெரியாது. உனக்கு உரிமையான தண்ணீர் அவர் கிணற்றில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் நீ அவருக்கு ஒரு நாளைக்கு ஒரு பணம் வாடகை தர வேண்டும்,'' என்றார் நீதிபதி.

"கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாகி விட்டதே. என்ன செய்வேன்?' என்று கலங்கினான்.
""நீதிபதி அவர்களே! என்னை மன்னியுங்கள். இனி யாரையும் ஏமாற்ற முயற்சி செய்ய மாட்டேன். நாள்தோறும் ஒரு பணம் கொடுத்தால் நான் ஓட்டாண்டியாகி விடுவேன். என் மீது இரக்கம் காட்டுங்கள்,'' என்று கெஞ்சினான்.
""உன் கிணற்றை விற்ற நூறு பண
த்தை இவருக்கு அபராதமாகச் செலுத்து, ஏமாற்ற முயன்றதற்கு இதுதான் உனக்குத் தண்டனை,'' என்றார் நீதிபதி.

கோபியிடம் நூறு பணத்தைக் கொடுத்தான் வீரபாண்டி.
அதன்பிறகு அவன் மற்றவர்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, நல்லவனாக நடந்து கொண்டான்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 11, 2015 5:52 am

ஒரு பணம் தா! GmfOp96XRgWJpSP0qiB9+E_1423030546
-
ஒரு பணம் தா! 3838410834

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Feb 11, 2015 10:04 am

மிகவும் அருமையான கதை....





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஒரு பணம் தா! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 12, 2015 6:09 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றிமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக