புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மீகக் கதைகள்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
1 . சதாசிவ பிரமேந்திரர்
சதாசிவ பிரமேந்திரர் என்ற ஞானி கோயில் நகராம் மதுரையில் 18ம் நூற்றாண்டில் அவதரித்தவர். பெற்றோர் இட்ட பெயர் சிவராமகிருஷ்ணன். இளமை முதலே வீடு, வாசல், சொந்தம், பந்தம் என்ற பற்றில்லாமல் இருந்தார். படிப்பில் திறமைசாலியான இவர், மொழியியல், கலைகள் மற்றும் தத்துவஞான வித்தகராகத் திகழ்ந்தார். அக்காலத்தில், குழந்தை திருமணம் செய்து வைப்பது வழக்கம்.
பிரம்மேந்திரருக்கும் அவ்வாறே செய்து வைக்கப்பட்டது. திருமணமான குழந்தைகள் பருவமடையும் வரை பெற்றோர் வீட்டிலேயே இருப்பது வழக்கம். பிரம்மேந்திரரின் மனைவியும் அவ்வாறே இருந்தாள். பிரம்மேந்திரர் குருகுலம் சென்று விட்டு திரும்பியதும், அம்மா வாசலில் நின்று எதிர்பார்த்துக் காத்திருப்பார். வந்ததும் அவருக்கு உணவு தருவாள். ஒருநாள், அம்மாவை வாசலில் காணவில்லை. வீட்டிற்கு, மனைவியின் தந்தையும், உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர். எல்லார் முகத்திலும் ஆனந்தம். உணவு தயாராகிக் கொண்டிருந்தது. பிரம்மேந்திரர் 13 வயது பாலகன் தானே!
பசியோடு வந்தார். அம்மாவைக் காணததால் ஏமாற்றம். வீட்டுக் குள் சென்று, உறவினர்கள் வருகைக்கான காரணத்தை அறிந்து கொண்டார். அம்மாவிடம் சாப்பாடு கேட்டார்.
""கொஞ்சம் பொறுத்துக் கொள். மாமாவும் உ<றவினர்களும் வந்துள்ளார்கள் இல்லையா? சாப்பாடு தயாராகிறது. அவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம். அதுவரை பசியைப் பொறுத்துக் கொள்ளடா குழந்தை!'' என்று அமைதிப்படுத்தினாள். இது எல்லா தாய்மார்களும் சொல்வது தானே! ஆனால், சிறுவனான பிரம்மேந்திரர் மனதில் இது பெரிய அலைகளைக் கிளப்பியது.
""ஆஹா...குடும்ப வாழ்க்கை துவங்கும் முன்னரே இப்படி ஒரு நிலையா? இன்று சாப்பாடு இல்லை என்கிறாள் அம்மா. நாளை என்ன இல்லை என்று சொல்வாளோ? இப்படி எத்தனை 'இல்லை' களை நாம் சமாளிக்க வேண்டியிருக்குமோ! வேண்டாம் இந்த குடும்ப வாழ்க்கை,'' என்று யோசித்தவர் வீட்டை விட்டுப் போய்விட்டார். துறவறம் பூண்டார். ஒரு கவுபீனம் (கோவணம்) கூட உடலில் இல்லாமல் நிர்வாண நிலையில் இருந்தார். பல ஊர்களில் சுற்றித்திரிந்தார். ஒருநாள் ஈரோடு அருகிலுள்ள கொடுமுடியில் காவிரி நதியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். திடீரென வெள்ளம் வர, மணல் அதிகமாக அடித்து வரப்பட்டு அவரை மூடிவிட்டது. வெள்ளம் வற்றியதும், மணலைத் தோண்டிப் பார்த்தால், தலையில் மண்வெட்டி காயத்துடன் ரத்தம் வழிய அவர் தன் வழியில் சென்றார்.
ஒருமுறை இவர் குறுநிலமன்னன் ஒருவனது அந்தப்புரத்துக்குள் நுழைந்து விட்டார். நிர்வாணநிலையில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்ததால் கோபமடைந்த மன்னன், அவரது கையை வெட்டிவிட்டான். வெட்டுப்பட்டது கூட தெரியாமல் அவர் தன்போக்கில் நடந்தார். வியப்படைந்த மன்னன், அவரிடம் மன்னிப்பு கேட்ட போது தான் கை போனதே அவருக்கு தெரிய வந்தத. பிறகு வெட்டுப்பட்ட தன் கையுடன் நடந்து சென்ற போது, ஆச்சரியப்பட்ட மன்னன் அவரிடம் மன்னிப்பு கேட்டான். உணர்வு நிலைக்கு திரும்பிய பிரம்மேந்திரர், துண்டான கையை ஒட்ட வைத்துக் கொண்டார்.
இவர் பல நூல்களை எழுதியுள்ளார். கீர்த்தனைகள் பாடியுள்ளார். அத்வைத ரசமஞ்சரி, யோக சுகதாரம், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி ஆகியவை இவரது நூல்கள். இப்படி பல அதிசயங்கள் செய்த அவர் கரூர் அருகிலுள்ள நெரூரில் சமாதியானதாக தகவல் உண்டு.
1 . சதாசிவ பிரமேந்திரர்
சதாசிவ பிரமேந்திரர் என்ற ஞானி கோயில் நகராம் மதுரையில் 18ம் நூற்றாண்டில் அவதரித்தவர். பெற்றோர் இட்ட பெயர் சிவராமகிருஷ்ணன். இளமை முதலே வீடு, வாசல், சொந்தம், பந்தம் என்ற பற்றில்லாமல் இருந்தார். படிப்பில் திறமைசாலியான இவர், மொழியியல், கலைகள் மற்றும் தத்துவஞான வித்தகராகத் திகழ்ந்தார். அக்காலத்தில், குழந்தை திருமணம் செய்து வைப்பது வழக்கம்.
பிரம்மேந்திரருக்கும் அவ்வாறே செய்து வைக்கப்பட்டது. திருமணமான குழந்தைகள் பருவமடையும் வரை பெற்றோர் வீட்டிலேயே இருப்பது வழக்கம். பிரம்மேந்திரரின் மனைவியும் அவ்வாறே இருந்தாள். பிரம்மேந்திரர் குருகுலம் சென்று விட்டு திரும்பியதும், அம்மா வாசலில் நின்று எதிர்பார்த்துக் காத்திருப்பார். வந்ததும் அவருக்கு உணவு தருவாள். ஒருநாள், அம்மாவை வாசலில் காணவில்லை. வீட்டிற்கு, மனைவியின் தந்தையும், உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர். எல்லார் முகத்திலும் ஆனந்தம். உணவு தயாராகிக் கொண்டிருந்தது. பிரம்மேந்திரர் 13 வயது பாலகன் தானே!
பசியோடு வந்தார். அம்மாவைக் காணததால் ஏமாற்றம். வீட்டுக் குள் சென்று, உறவினர்கள் வருகைக்கான காரணத்தை அறிந்து கொண்டார். அம்மாவிடம் சாப்பாடு கேட்டார்.
""கொஞ்சம் பொறுத்துக் கொள். மாமாவும் உ<றவினர்களும் வந்துள்ளார்கள் இல்லையா? சாப்பாடு தயாராகிறது. அவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம். அதுவரை பசியைப் பொறுத்துக் கொள்ளடா குழந்தை!'' என்று அமைதிப்படுத்தினாள். இது எல்லா தாய்மார்களும் சொல்வது தானே! ஆனால், சிறுவனான பிரம்மேந்திரர் மனதில் இது பெரிய அலைகளைக் கிளப்பியது.
""ஆஹா...குடும்ப வாழ்க்கை துவங்கும் முன்னரே இப்படி ஒரு நிலையா? இன்று சாப்பாடு இல்லை என்கிறாள் அம்மா. நாளை என்ன இல்லை என்று சொல்வாளோ? இப்படி எத்தனை 'இல்லை' களை நாம் சமாளிக்க வேண்டியிருக்குமோ! வேண்டாம் இந்த குடும்ப வாழ்க்கை,'' என்று யோசித்தவர் வீட்டை விட்டுப் போய்விட்டார். துறவறம் பூண்டார். ஒரு கவுபீனம் (கோவணம்) கூட உடலில் இல்லாமல் நிர்வாண நிலையில் இருந்தார். பல ஊர்களில் சுற்றித்திரிந்தார். ஒருநாள் ஈரோடு அருகிலுள்ள கொடுமுடியில் காவிரி நதியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். திடீரென வெள்ளம் வர, மணல் அதிகமாக அடித்து வரப்பட்டு அவரை மூடிவிட்டது. வெள்ளம் வற்றியதும், மணலைத் தோண்டிப் பார்த்தால், தலையில் மண்வெட்டி காயத்துடன் ரத்தம் வழிய அவர் தன் வழியில் சென்றார்.
ஒருமுறை இவர் குறுநிலமன்னன் ஒருவனது அந்தப்புரத்துக்குள் நுழைந்து விட்டார். நிர்வாணநிலையில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்ததால் கோபமடைந்த மன்னன், அவரது கையை வெட்டிவிட்டான். வெட்டுப்பட்டது கூட தெரியாமல் அவர் தன்போக்கில் நடந்தார். வியப்படைந்த மன்னன், அவரிடம் மன்னிப்பு கேட்ட போது தான் கை போனதே அவருக்கு தெரிய வந்தத. பிறகு வெட்டுப்பட்ட தன் கையுடன் நடந்து சென்ற போது, ஆச்சரியப்பட்ட மன்னன் அவரிடம் மன்னிப்பு கேட்டான். உணர்வு நிலைக்கு திரும்பிய பிரம்மேந்திரர், துண்டான கையை ஒட்ட வைத்துக் கொண்டார்.
இவர் பல நூல்களை எழுதியுள்ளார். கீர்த்தனைகள் பாடியுள்ளார். அத்வைத ரசமஞ்சரி, யோக சுகதாரம், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி ஆகியவை இவரது நூல்கள். இப்படி பல அதிசயங்கள் செய்த அவர் கரூர் அருகிலுள்ள நெரூரில் சமாதியானதாக தகவல் உண்டு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல தொடர் பதிவு சிவா தொடருங்கோ.............. ஒவ்வொன்றாக படித்து பதில் போடுகிறேன்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமையான பதிவு...
தொடருங்கள் நண்பரே.....
தொடருங்கள் நண்பரே.....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சதாசிவ பிரமேந்திரர்
புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் சுவாமிகள் ஒருமுறை சுற்றிக் கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னர், எப்படியாவது மகானிடம் பேசி, தன்னோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதனால் மகான் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் கடந்தன. மன்னனும் ஊன், உறக்கமின்றி மகானையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். மகான் சதாசிவர் மனம் இரங்கவே இல்லை.
பின் ஒருநாள், ”என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீக்ஷை அளித்தால் போதும்” என சதாசிவரைத் தொழுதார் மன்னர். உளம் இரங்கிய சதாசிவரும், மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார்.
அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலை தமது ஆடையில் எடுத்துச் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அக்ஷரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூஜை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.)
இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவராகக் கருதப்படும் இம்மகான் மானஸ ஸஞ்சரரே, சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.
நன்றி : விக்கி பீடியா
அற்புதமான மஹானின் சரித்திர பகிர்வுக்கு நன்றி சிவா
புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் சுவாமிகள் ஒருமுறை சுற்றிக் கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னர், எப்படியாவது மகானிடம் பேசி, தன்னோடு அரண்மனைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதனால் மகான் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் கடந்தன. மன்னனும் ஊன், உறக்கமின்றி மகானையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். மகான் சதாசிவர் மனம் இரங்கவே இல்லை.
பின் ஒருநாள், ”என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீக்ஷை அளித்தால் போதும்” என சதாசிவரைத் தொழுதார் மன்னர். உளம் இரங்கிய சதாசிவரும், மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார்.
அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலை தமது ஆடையில் எடுத்துச் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அக்ஷரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூஜை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.)
இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவராகக் கருதப்படும் இம்மகான் மானஸ ஸஞ்சரரே, சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.
நன்றி : விக்கி பீடியா
அற்புதமான மஹானின் சரித்திர பகிர்வுக்கு நன்றி சிவா
11. முடிந்தால் அழித்துப் பார் - குட்டிக்கதை
தைரியம் என்பது இருவகை. ஒன்று ஒருவர் நம்மை எதிர்க்கும் போது, அவரோடு போரிட்டு வெல்லும் குணம். இன்னொன்று ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டிய திடமான மனது. முன்னதை விட இரண்டாவதே மிக உயர்ந்தது.
வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு சக்கரவர்த்தியின் குரு, நம் நாட்டிலுள்ள முனிவர்களைப் போய் சந்திக்கும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். அவரும் படை, பட்டாளத்துடன் இங்கு வந்து சேர்ந்தார். காட்டிற்கு வேட்டைக்கு சென்ற சக்கரவர்த்தி, அங்கிருந்த குகையில் இருந்த ஒரு முனிவரைப் பார்த்தார்.
""முனிவரே! நீர் என்னுடன் என் நாட்டுக்கு வர வேண்டும்,'' என்றார்.
""அப்பனே! எனக்கு இங்கு எந்தக் குறையுமில்லை. அங்கு வந்து என்ன செய்யப் போகிறேன்,'' என்றார் முனிவர்.
சக்கரவர்த்தி அவரிடம்,""நீர் அங்கு வாரும். உமக்கு பொன்னும், மணியும், பொருளும் வந்து பெரும் செல்வந்தன் ஆக்குகிறேன்,'' என்றார்.
""அதை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். அவற்றில் எனக்கு நாட்டமில்லை,'' என்றார் முனிவர்.
சக்கரவர்த்தி அவரை வற்புறுத்த முனிவர் தன் முடிவில் திடமாக இருந்துவிட்டார். இது சக்கரவர்த்தியின் கோபத்தை கிளறிவிட்டது.
""முனிவரே! நீர் மட்டும் என்னுடன் வராவிட்டால் உம்மைக் கொன்று விடுவேன்,'' என்று எச்சரித்தார் சக்கரவர்த்தி.
முனிவர் சத்தமாகச் சிரித்தார்.
""ஏய் சக்கரவர்த்தி!
நீ முட்டாள் என்பதை நிரூபித்து விட்டாய். உன் வாள் என் உடலையே கொல்லும். ஆனால், என் ஆன்மாவை அழிக்க உன்னால் முடியுமா? நான் எங்கோ இருந்து இதே பணியைச் செய்வேன்,'' என்றார்.
சக்கரவர்த்திக்கு உண்மை உரைத்தது.
இப்போது சொல்லுங்கள், உடல் என்றாவது ஒருநாள் அழியத்தான் செய்யும். ஆன்மாவை அழிக்க யாரால் இயலும்! ஒரு ஆன்மிகவாதியால் மட்டுமே உடலைப் பற்றிய கவலையில்லாமல் திடமாக வாழ முடியும்.
தைரியம் என்பது இருவகை. ஒன்று ஒருவர் நம்மை எதிர்க்கும் போது, அவரோடு போரிட்டு வெல்லும் குணம். இன்னொன்று ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டிய திடமான மனது. முன்னதை விட இரண்டாவதே மிக உயர்ந்தது.
வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு சக்கரவர்த்தியின் குரு, நம் நாட்டிலுள்ள முனிவர்களைப் போய் சந்திக்கும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். அவரும் படை, பட்டாளத்துடன் இங்கு வந்து சேர்ந்தார். காட்டிற்கு வேட்டைக்கு சென்ற சக்கரவர்த்தி, அங்கிருந்த குகையில் இருந்த ஒரு முனிவரைப் பார்த்தார்.
""முனிவரே! நீர் என்னுடன் என் நாட்டுக்கு வர வேண்டும்,'' என்றார்.
""அப்பனே! எனக்கு இங்கு எந்தக் குறையுமில்லை. அங்கு வந்து என்ன செய்யப் போகிறேன்,'' என்றார் முனிவர்.
சக்கரவர்த்தி அவரிடம்,""நீர் அங்கு வாரும். உமக்கு பொன்னும், மணியும், பொருளும் வந்து பெரும் செல்வந்தன் ஆக்குகிறேன்,'' என்றார்.
""அதை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். அவற்றில் எனக்கு நாட்டமில்லை,'' என்றார் முனிவர்.
சக்கரவர்த்தி அவரை வற்புறுத்த முனிவர் தன் முடிவில் திடமாக இருந்துவிட்டார். இது சக்கரவர்த்தியின் கோபத்தை கிளறிவிட்டது.
""முனிவரே! நீர் மட்டும் என்னுடன் வராவிட்டால் உம்மைக் கொன்று விடுவேன்,'' என்று எச்சரித்தார் சக்கரவர்த்தி.
முனிவர் சத்தமாகச் சிரித்தார்.
""ஏய் சக்கரவர்த்தி!
நீ முட்டாள் என்பதை நிரூபித்து விட்டாய். உன் வாள் என் உடலையே கொல்லும். ஆனால், என் ஆன்மாவை அழிக்க உன்னால் முடியுமா? நான் எங்கோ இருந்து இதே பணியைச் செய்வேன்,'' என்றார்.
சக்கரவர்த்திக்கு உண்மை உரைத்தது.
இப்போது சொல்லுங்கள், உடல் என்றாவது ஒருநாள் அழியத்தான் செய்யும். ஆன்மாவை அழிக்க யாரால் இயலும்! ஒரு ஆன்மிகவாதியால் மட்டுமே உடலைப் பற்றிய கவலையில்லாமல் திடமாக வாழ முடியும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
12: பிறர் பொருளை அபகரிக்காதே
உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன் வீரசேனன். இவனுக்கு அழகும், அறிவும், பணிவும், கண்டிப்பும் கலந்த நற்குண மனைவி வாய்த்தாள்.
ஒருநாள் இரவில் மன்னன் தன்னந்தனியாக நகர்வலத்துக்கு மாறுவேடத்தில் புறப்பட்டான். அன்றிரவு ஏதோ காரணத்தால் அவன் சாப்பிடவில்லை. சாப்பிடாமலே கிளம்பிய அவனுக்கு நள்ளிரவு வேளையில் பசித்தது. சற்றுநேரத்தில் பசி அதிகமாகவே, அரண்மனைக்குத் திரும்பி ஏதாவது சாப்பிடலாம் என எண்ணியிருந்த வேளையில் பெருமழை பிடித்துக் கொண்டது. அவன் ஒரு வீட்டின் ஓரமாக ஒதுங்கினான். பசியோடு, மழை பெய்ததால் குளிரும் சேர்ந்து கொள்ள சற்று சிரமத்துடன் ஒதுங்கி நின்றான். தற்செயலாக அந்த வீட்டுக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே ஒரு அந்தணர், அவரது மனைவி மக்களுடன் உறங்கிக் கொண்டிருந்தார். பசி தாளாத மன்னன், வீட்டுக்கதவைத் தட்டவே, அந்தணர் குடும்பத்தினர் திடுக்கிட்டு விழித்தனர்.
""கதவைத் திற'' என மன்னன் அதிகாரமாகவே கூறவே, அந்த தொனியிலேயே மாறுவேடத்தில் இருப்பது மன்னன் என்பதை அந்தணர் புரிந்து கொண்டு கதவைத் திறந்தார்.
""தாங்கள் மன்னர் தானே!'' என்றதும், ஆச்சரியமடைந்த மன்னன், ""எப்படி அதைக் கண்டுபிடித்தீர்?'' என்று அந்தணரிடம் கேட்டான்.
""பேச்சின் தோரணையிலேயே கண்டுபிடித்தேன்,'' என்ற அந்தணரிடம், ""சரி! போகட்டும், எனக்கு பசிக்கிறது. ஏதாவது கொடும்,' என்றான் மன்னன். அந்தணர் வீட்டில் ஏதுமில்லை. ""மன்னா! இப்போதைக்கு உணவேதும் இல்லையே,' 'என்றதும், ""பொய்யா சொல்கிறீர்,'' என்ற மன்னன், ""அதோ! அங்கே சில பழங்கள் வைத்திருக்கிறீரே! அது யாருக்கு? மன்னனையே ஏமாற்றப் பார்க்கிறீரா?'' என்று மிரட்டினான். பழங்களைப்
பார்த்ததும், அவனுக்கு பசி இன்னும் அதிகமானது போல் இருந்தது.
""இல்லை மன்னா! நேற்று வருமானம் ஏதும் கிடைக்காததால் நாங்கள் பட்டினியாக கிடக்கிறோம். அந்தப் பழங்களை சிரார்த்தத்துக்காக வாங்கி வைத்துள்ளோம். அது முன்னோர் தெய்வமான விஸ்வதேவரைச் சேர வேண்டும். அவருக்கு படைக்கவே அதை வைத்துள்ளேன். அதைச் சாப்பிடுவது பெரும்பாவம்,'' என்றார் அந்தணர். அதைச் சற்றும் கேட்காத மன்னன் அந்தணரை மிரட்டவே, பயந்து போன அவர் பழங்களைக் கொடுத்துவிட்டார். பசியுடன் இருந்த மன்னன் அவற்றைக் காலி செய்துவிட்டு, ஏதும் சொல்லாமல் கிளம்பிவிட்டான். வீட்டுக்கு வந்ததும் தீராத வயிற்றுவலி ஏற்பட்டது.
வீட்டுக்கு வந்த அவனைக் கண்ட மனைவி, அவன் முகத்தில் ஏதோ மாறுதல் இருப்பதைக் கவனித்தாள்.
""பிறர் பொருளை அபகரித்தவர் போல் விழிக்கிறீர்களே! என்ன விஷயம்?'' என்றாள். நடந்ததைச் சொன்னான் மன்னன். அவள் அவனைத் திட்டினாள். மந்திரிகளை வரவழைத்துக் கேட்டதில் பல தலங்களுக்கும் செல்லுமாறு அவர்கள் கூறினர். கோயில் கோயிலாக அலைந்த மன்னன், இறுதியாக அகத்தியர் வணங்கிய சங்கரன்கோவில் என்னும் தலத்துக்கு வந்தான். அங்கு ஒரு பிராமணரைச் சந்தித்தான். அத்தலத்து தீர்த்தத்தில் நீராடினால் தீராத பாவமெல்லாம் தீரும் என்றார் அவர். மன்னனும் நீராடி, சிவனை வணங்கினான். அவனது நோய் நீங்கியது. பசிக்காக பிறர் பொருளை சாப்பிடக்கூடாது. யாரேனும், பிறர் பொருளை அபகரித்ததற்காக சிரமப் பட்டால், இனி அவ்வாறு செய்வதில்லை
உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன் வீரசேனன். இவனுக்கு அழகும், அறிவும், பணிவும், கண்டிப்பும் கலந்த நற்குண மனைவி வாய்த்தாள்.
ஒருநாள் இரவில் மன்னன் தன்னந்தனியாக நகர்வலத்துக்கு மாறுவேடத்தில் புறப்பட்டான். அன்றிரவு ஏதோ காரணத்தால் அவன் சாப்பிடவில்லை. சாப்பிடாமலே கிளம்பிய அவனுக்கு நள்ளிரவு வேளையில் பசித்தது. சற்றுநேரத்தில் பசி அதிகமாகவே, அரண்மனைக்குத் திரும்பி ஏதாவது சாப்பிடலாம் என எண்ணியிருந்த வேளையில் பெருமழை பிடித்துக் கொண்டது. அவன் ஒரு வீட்டின் ஓரமாக ஒதுங்கினான். பசியோடு, மழை பெய்ததால் குளிரும் சேர்ந்து கொள்ள சற்று சிரமத்துடன் ஒதுங்கி நின்றான். தற்செயலாக அந்த வீட்டுக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே ஒரு அந்தணர், அவரது மனைவி மக்களுடன் உறங்கிக் கொண்டிருந்தார். பசி தாளாத மன்னன், வீட்டுக்கதவைத் தட்டவே, அந்தணர் குடும்பத்தினர் திடுக்கிட்டு விழித்தனர்.
""கதவைத் திற'' என மன்னன் அதிகாரமாகவே கூறவே, அந்த தொனியிலேயே மாறுவேடத்தில் இருப்பது மன்னன் என்பதை அந்தணர் புரிந்து கொண்டு கதவைத் திறந்தார்.
""தாங்கள் மன்னர் தானே!'' என்றதும், ஆச்சரியமடைந்த மன்னன், ""எப்படி அதைக் கண்டுபிடித்தீர்?'' என்று அந்தணரிடம் கேட்டான்.
""பேச்சின் தோரணையிலேயே கண்டுபிடித்தேன்,'' என்ற அந்தணரிடம், ""சரி! போகட்டும், எனக்கு பசிக்கிறது. ஏதாவது கொடும்,' என்றான் மன்னன். அந்தணர் வீட்டில் ஏதுமில்லை. ""மன்னா! இப்போதைக்கு உணவேதும் இல்லையே,' 'என்றதும், ""பொய்யா சொல்கிறீர்,'' என்ற மன்னன், ""அதோ! அங்கே சில பழங்கள் வைத்திருக்கிறீரே! அது யாருக்கு? மன்னனையே ஏமாற்றப் பார்க்கிறீரா?'' என்று மிரட்டினான். பழங்களைப்
பார்த்ததும், அவனுக்கு பசி இன்னும் அதிகமானது போல் இருந்தது.
""இல்லை மன்னா! நேற்று வருமானம் ஏதும் கிடைக்காததால் நாங்கள் பட்டினியாக கிடக்கிறோம். அந்தப் பழங்களை சிரார்த்தத்துக்காக வாங்கி வைத்துள்ளோம். அது முன்னோர் தெய்வமான விஸ்வதேவரைச் சேர வேண்டும். அவருக்கு படைக்கவே அதை வைத்துள்ளேன். அதைச் சாப்பிடுவது பெரும்பாவம்,'' என்றார் அந்தணர். அதைச் சற்றும் கேட்காத மன்னன் அந்தணரை மிரட்டவே, பயந்து போன அவர் பழங்களைக் கொடுத்துவிட்டார். பசியுடன் இருந்த மன்னன் அவற்றைக் காலி செய்துவிட்டு, ஏதும் சொல்லாமல் கிளம்பிவிட்டான். வீட்டுக்கு வந்ததும் தீராத வயிற்றுவலி ஏற்பட்டது.
வீட்டுக்கு வந்த அவனைக் கண்ட மனைவி, அவன் முகத்தில் ஏதோ மாறுதல் இருப்பதைக் கவனித்தாள்.
""பிறர் பொருளை அபகரித்தவர் போல் விழிக்கிறீர்களே! என்ன விஷயம்?'' என்றாள். நடந்ததைச் சொன்னான் மன்னன். அவள் அவனைத் திட்டினாள். மந்திரிகளை வரவழைத்துக் கேட்டதில் பல தலங்களுக்கும் செல்லுமாறு அவர்கள் கூறினர். கோயில் கோயிலாக அலைந்த மன்னன், இறுதியாக அகத்தியர் வணங்கிய சங்கரன்கோவில் என்னும் தலத்துக்கு வந்தான். அங்கு ஒரு பிராமணரைச் சந்தித்தான். அத்தலத்து தீர்த்தத்தில் நீராடினால் தீராத பாவமெல்லாம் தீரும் என்றார் அவர். மன்னனும் நீராடி, சிவனை வணங்கினான். அவனது நோய் நீங்கியது. பசிக்காக பிறர் பொருளை சாப்பிடக்கூடாது. யாரேனும், பிறர் பொருளை அபகரித்ததற்காக சிரமப் பட்டால், இனி அவ்வாறு செய்வதில்லை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
13: முன்னோர் செய்த சடங்கைப் பற்றி தெரிந்து கொண்டு செய்ய வேண்டும்.
""எங்க முப்பாட்டனார் காலத்தில் இருந்தே இந்த பூஜையை நாங்கள் செய்து வருகிறோம். எங்க தாத்தா, அப்பா, மாமா... இவர்களெல்லாம் இதை அப்படி செய்வார்கள், இப்படி செய்வார்கள்,'' என்று பரம்பரைகவுரவம் பேசுவோர் உண்டு. தாத்தாக்களும், அப்பாவும் எந்தளவுக்கு அதைப் பக்தியோடு முறையாகச் செய்தார்கள் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அந்த பக்தி சற்றும் குறையாமல் பூஜை செய்தால் தான் நல்லது.
ஒரு பெரியவர், பகவானுக்கு தினமும் மதியம் படைக்க வேண்டிய நெய் பதார்த்தத்தை தயார் செய்து ஒரு தட்டில் வைத்திருப்பார். ஒரு பூனை இதை நோட்டமிட்டுக் கொண்டே இருந்தது. இவர் பதார்த்தம் செய்து பூஜை அறையில் வைக்கும் நேரம் அதற்கு தெரியும். வேகமாக உள்ளே வந்து, கவ்விக்கொண்டு ஓடிவிடும். இதை ஒருநாள் கவனித்து விட்டார் பெரியவர். ஒருநாள் பூனையை அடித்தே தீருவதென முடிவெடுத்து, கம்புடன் காத்திருந்தார். பூனை வந்தது.
பொருளைக் கவ்வியது. இவர் கம்புடன் பாய்ந்தார். அது சிட்டாய் பறந்துவிட்டது. இப்படியாக, தினமும் அது நேரத்துக்கு வர, இவர் கம்புடன் விரட்ட, வேறு பலகாரத்தை அவர் நைவேத்யம் செய்வார். இதைக் கவனித்துக் கொண்டே இருந்தான் அவரது மகன். ஒருநாள் பெரியவர் இறந்துவிட்டார்.
அப்பா செய்த பூஜையை பிள்ளை செய்ய ஆரம்பித்தான். இவனுக்கு அப்பா ஏன் பூனையை விரட்டினார் என்று தெரியாது. பண்டத்தை எடுக்கத் தான் அது உள்ளே வந்துபோனது என்று அறியும் ஆற்றல் கூட இவனிடம் இல்லை. தினமும் 12 மணிக்கு பண்டத்தை வைத்து விட்டு கம்புடன் <உட்கார்ந்துஇருப்பான். பூனை வரும். இவன் வாசல் வரை விரட்டுவான்.
ஒருநாள் ஒரு பெரியவர் வந்தார். "" பூனையை ஏண்டா விரட்டுறே!'' என்றார்.
பண்டத்தை எடுக்க வந்ததால் விரட்டினேன் என்று இவன் சொல்லவில்லை. ""எங்க அப்பா இதே நேரத்தில் தினமும் விரட்டினார். நானும் விரட்டுகிறேன்,'' என்று பதில் சொன்னான். ஆக அப்பா பூனையை விரட்டியதை ஒரு சடங்காகவே நினைத்து செய்ய ஆரம்பித்து விட்டான். முன்னோர் செய்த சடங்கைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு சரியாகச் செய்ய வேண்டும். புரிகிறதா!
""எங்க முப்பாட்டனார் காலத்தில் இருந்தே இந்த பூஜையை நாங்கள் செய்து வருகிறோம். எங்க தாத்தா, அப்பா, மாமா... இவர்களெல்லாம் இதை அப்படி செய்வார்கள், இப்படி செய்வார்கள்,'' என்று பரம்பரைகவுரவம் பேசுவோர் உண்டு. தாத்தாக்களும், அப்பாவும் எந்தளவுக்கு அதைப் பக்தியோடு முறையாகச் செய்தார்கள் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அந்த பக்தி சற்றும் குறையாமல் பூஜை செய்தால் தான் நல்லது.
ஒரு பெரியவர், பகவானுக்கு தினமும் மதியம் படைக்க வேண்டிய நெய் பதார்த்தத்தை தயார் செய்து ஒரு தட்டில் வைத்திருப்பார். ஒரு பூனை இதை நோட்டமிட்டுக் கொண்டே இருந்தது. இவர் பதார்த்தம் செய்து பூஜை அறையில் வைக்கும் நேரம் அதற்கு தெரியும். வேகமாக உள்ளே வந்து, கவ்விக்கொண்டு ஓடிவிடும். இதை ஒருநாள் கவனித்து விட்டார் பெரியவர். ஒருநாள் பூனையை அடித்தே தீருவதென முடிவெடுத்து, கம்புடன் காத்திருந்தார். பூனை வந்தது.
பொருளைக் கவ்வியது. இவர் கம்புடன் பாய்ந்தார். அது சிட்டாய் பறந்துவிட்டது. இப்படியாக, தினமும் அது நேரத்துக்கு வர, இவர் கம்புடன் விரட்ட, வேறு பலகாரத்தை அவர் நைவேத்யம் செய்வார். இதைக் கவனித்துக் கொண்டே இருந்தான் அவரது மகன். ஒருநாள் பெரியவர் இறந்துவிட்டார்.
அப்பா செய்த பூஜையை பிள்ளை செய்ய ஆரம்பித்தான். இவனுக்கு அப்பா ஏன் பூனையை விரட்டினார் என்று தெரியாது. பண்டத்தை எடுக்கத் தான் அது உள்ளே வந்துபோனது என்று அறியும் ஆற்றல் கூட இவனிடம் இல்லை. தினமும் 12 மணிக்கு பண்டத்தை வைத்து விட்டு கம்புடன் <உட்கார்ந்துஇருப்பான். பூனை வரும். இவன் வாசல் வரை விரட்டுவான்.
ஒருநாள் ஒரு பெரியவர் வந்தார். "" பூனையை ஏண்டா விரட்டுறே!'' என்றார்.
பண்டத்தை எடுக்க வந்ததால் விரட்டினேன் என்று இவன் சொல்லவில்லை. ""எங்க அப்பா இதே நேரத்தில் தினமும் விரட்டினார். நானும் விரட்டுகிறேன்,'' என்று பதில் சொன்னான். ஆக அப்பா பூனையை விரட்டியதை ஒரு சடங்காகவே நினைத்து செய்ய ஆரம்பித்து விட்டான். முன்னோர் செய்த சடங்கைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு சரியாகச் செய்ய வேண்டும். புரிகிறதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
14: இறைவன் இருக்கின்றானா?
ஒரு பெரியவர் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். வார்த்தைக்கு வார்த்தை "பகவான் தான் நம்மைக் காப்பாற்றுகிறார்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் எழுந்தார், ""என் குடும்பத்தை நான் தான் உழைத்துக் காப்பாற்றுகிறேன். நீங்கள் சொல்கிற மாதிரி கடவுள் என்றும் பாதுகாத்த மாதிரி தெரியலையே,' 'என்றார்.
பெரியவர் அவரிடம், சில கேள்விகளைக் கேட்க கேள்வி கேட்டவர் பதில் சொன்னார்.
""நேற்று ராத்திரி நன்றாக சாப்பிட்டீரா?''
""சாப்பிட்டேன்...''
""நன்றாக உறங்கினீரா?''
"உறங்கினேன்...''
""எத்தனை மணிக்கு படுத்தீர்?''
""பத்து மணிக்கு?''
""எத்தனை மணிக்கு தூக்கம் வந்தது?
""பத்தரை இருக்கும்''.
""எப்போது எழுந்தீர்?''
""ஐந்து மணிக்கு''.
""ராத்திரி பத்தரைக்குப் பிறகு ஐந்து மணி வரை உம் நிலை எப்படியிருந்தது என்று தெரியுமா?''
""தூக்கத்தில் மனுஷனுக்கு என்ன தெரியும்?''
""அப்படியானால், அந்த நேரத்தில் உம்மை நீரே பாதுகாத்துக் கொண்டீரா?''
""இல்லை...''
""பார்த்தீரா! ஆழ்ந்து தூங்கும் போது பாம்போ, பூச்சியோ உம்மைக் கடித்தாலும்தெரியாது. நீர்படுத்திருக்கும் கட்டடம் இடிந்து விழுந்தாலும் உணரமாட்டீர்! அதுபோன்ற ஆபத்தையெல்லாம் தடுத்து இறைவன் தானே உம்மைக் காத்தான்...!''
பெரியவர் இப்படி கேட்டதும், கேள்வி கேட்டவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
இப்போது புரிகிறதா!
இறைவனால் மட்டுமே நம்மைப் பாதுகாக்க முடியும். அவன்இருக்கிறானா இல்லையா என்ற ஆராய்ச்சியே தேவை இல்லை
ஒரு பெரியவர் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். வார்த்தைக்கு வார்த்தை "பகவான் தான் நம்மைக் காப்பாற்றுகிறார்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் எழுந்தார், ""என் குடும்பத்தை நான் தான் உழைத்துக் காப்பாற்றுகிறேன். நீங்கள் சொல்கிற மாதிரி கடவுள் என்றும் பாதுகாத்த மாதிரி தெரியலையே,' 'என்றார்.
பெரியவர் அவரிடம், சில கேள்விகளைக் கேட்க கேள்வி கேட்டவர் பதில் சொன்னார்.
""நேற்று ராத்திரி நன்றாக சாப்பிட்டீரா?''
""சாப்பிட்டேன்...''
""நன்றாக உறங்கினீரா?''
"உறங்கினேன்...''
""எத்தனை மணிக்கு படுத்தீர்?''
""பத்து மணிக்கு?''
""எத்தனை மணிக்கு தூக்கம் வந்தது?
""பத்தரை இருக்கும்''.
""எப்போது எழுந்தீர்?''
""ஐந்து மணிக்கு''.
""ராத்திரி பத்தரைக்குப் பிறகு ஐந்து மணி வரை உம் நிலை எப்படியிருந்தது என்று தெரியுமா?''
""தூக்கத்தில் மனுஷனுக்கு என்ன தெரியும்?''
""அப்படியானால், அந்த நேரத்தில் உம்மை நீரே பாதுகாத்துக் கொண்டீரா?''
""இல்லை...''
""பார்த்தீரா! ஆழ்ந்து தூங்கும் போது பாம்போ, பூச்சியோ உம்மைக் கடித்தாலும்தெரியாது. நீர்படுத்திருக்கும் கட்டடம் இடிந்து விழுந்தாலும் உணரமாட்டீர்! அதுபோன்ற ஆபத்தையெல்லாம் தடுத்து இறைவன் தானே உம்மைக் காத்தான்...!''
பெரியவர் இப்படி கேட்டதும், கேள்வி கேட்டவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
இப்போது புரிகிறதா!
இறைவனால் மட்டுமே நம்மைப் பாதுகாக்க முடியும். அவன்இருக்கிறானா இல்லையா என்ற ஆராய்ச்சியே தேவை இல்லை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
15: பக்தியில் சுயநலம் கூடாது
காசியில் பிறந்து வளர்ந்தவர் சோமதேவன். இவர், பிறந்ததில் இருந்தே கங்கையில் குளிப்பது, கங்கையால் பாவங்கள் கழுவப்படுவது குறித்து ஆராய்வது என இருந்தார். தேவையில்லாமல் யாரிடமும் பேசமாட்டார். ஒரு கட்டத்தில் பெற்றவர்களைப் பிரிந்து, துறவியாகி விட்டார். இமயமலைச் சாரலில் ஒதுக்குப்புறமாக அமர்ந்து தெய்வநாமங்களை உச்சரித்தபடியே இருப்பார். பல சமயங்களில் பசி, தூக்கத்தை மறந்து அப்படியே தியானத்தில் ஆழ்ந்துபோய் விடுவார். இதனால், இவரது ஆன்மிக பலம் பெருகியது. தெய்வசிந்தனையைத் தவிர வேறெதுவும் இல்லாத இவருக்கு ஏதாவது வரமளிக்க வேண்டும் என முடிவு செய்த தேவர்கள் இமயமலைக்கு வந்தனர். அவர்களை துறவி பணிவுடன் வணங்கினார்.
""துறவியே! தங்கள் ஆன்மிக சாதனைகளைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டோம். வேறு எதையுமே நினையாமல், ருசிக்காக சாப்பிடாமல், பசிக்காக மட்டும் ஏதோ சாப்பிட்டு உயிர்வாழும் தாங்கள், தேவர் நிலைக்கு உயர்ந்து விட்டீர்கள். நாங்கள் உங்களுக்கு வரமளிக்கவே வந்தோம். நீங்கள் ஏதாவது கேளுங்கள், என்ன கேட்டாலும் தருகிறோம். தங்களைப் போன்ற நல்லவர்கள் அந்த வரத்தை உலக உயிர்களின் நலத்துக்குப் பயன்படுத்துவீர்கள் என்பதை அறிவோம். எனவே தங்களுக்கு பலவித சித்திகளைத் தருகிறோம், கேளுங்கள்,'' என்றனர் அன்புடன்.
துறவி தனக்கு எதுவும் வேண்டாம் என மறுத்தார். கேட்டுத்தான் ஆக வேண்டும் என தேவர்கள் வற்புறுத்தவே,""தெய்வஅருள் கிடைக்க வேண்டும். அதைத் தவிர கேட்க வேறு ஏதுமில்லை,'' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் சோமதேவர். தேவர்கள் விடுவதாக இல்லை.
""துறவியே! தாங்கள் விரும்பாவிட்டாலும் பரவாயில்லை. இந்த உலக உயிர்களின் நோய் தங்கள் கைபட்டாலே தீர்ந்துவிடும் வரம் தருகிறோம். இதன்மூலம் தங்களுக்கு உயிர்களின் மீதுள்ள அன்புநிலை வெளிப்படும். இதன்மூலம் தாங்கள் புகழும் பெறுவீர்கள். பூமியில் வாழ்வதே புகழ் அடைவதற்காகத்தானே!'' என்றார்கள் மிகவும் பவ்வியமாக.
""தேவர்களே! புகழுக்காக ஒருவன் செய்யும் செயல்கள் அர்த்தமற்றவை. நோயைத் தீர்ப்பது என் வேலையல்ல. எந்த இறைவன் உயிர்களைப் படைத்தானோ அவனால் மட்டுமே மக்களின் நோயைத் தீர்த்து வைக்க முடியும். நாமாக தீர்த்து வைத்தால் மக்கள் நம் புகழ் பாடுவார்கள். ஆனால், இறைவனை மறந்து விடுவார்களே! இறைவனை மறக்கடிக்கவா நாம் இவ்வளவு பாடுபடுகிறோம்,'' என்று அந்த வரத்தையும் ஏற்க மறுத்தார். அப்போதும் விடாத தேவர்கள், ""தங்கள் கருத்தை ஏற்கிறோம். நீங்கள் செய்யும் நற்செயல் உங்களுக்கே தெரியாத வகையில், உயிர்களுக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அருள்கிறோம்,'' என்றார்கள்.
அதையும் ஏற்க மறுத்தார் துறவி. ""தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சேவையால் வரும் பலனும் புண்ணியமும் எனக்குத் தேவையில்லை. அதுவும் ஒருவகையில் சுயலாபமே,'' என்றார்.
இப்படிப்பட்ட உயர்ந்த குணமுள்ள அவருக்கு, அந்த துறவியே அறியாத வகையில் அவர் எங்கு சென்றாலும், மக்களின் துன்பம் நீங்கும் வகையிலான சக்தியைக் கொடுத்துவிட்டு தேவர்கள் சென்றுவிட்டனர். அந்தத் துறவி ஏதாவது ஊருக்குள் நுழைந்தாலே, அங்கு வசித்தவர்கள் கொண்ட ஆசைகள் நிறைவேறிவிட்டன. நோயாளிகள் துன்பம் நீங்கி துள்ளிக்குதித்து வேலை செய்ய ஆரம்பித்தார்கள். இதையறியாத துறவி, இறைநினைப்புடன் காலத்தைக் கழித்து இறைவனின் திருவடியில் ஐக்கியமாகி பிறவாநிலை என்னும் பெரும்பேறு பெற்றார். சுயநலமின்றி இறைவன் மீது காட்டும் பக்தியே, உலகில் நிலைத்து நிற்கும் என்பதற்கு சோமதேவ துறவியை உதாரணமாகக் கொள்ளலாம்.
காசியில் பிறந்து வளர்ந்தவர் சோமதேவன். இவர், பிறந்ததில் இருந்தே கங்கையில் குளிப்பது, கங்கையால் பாவங்கள் கழுவப்படுவது குறித்து ஆராய்வது என இருந்தார். தேவையில்லாமல் யாரிடமும் பேசமாட்டார். ஒரு கட்டத்தில் பெற்றவர்களைப் பிரிந்து, துறவியாகி விட்டார். இமயமலைச் சாரலில் ஒதுக்குப்புறமாக அமர்ந்து தெய்வநாமங்களை உச்சரித்தபடியே இருப்பார். பல சமயங்களில் பசி, தூக்கத்தை மறந்து அப்படியே தியானத்தில் ஆழ்ந்துபோய் விடுவார். இதனால், இவரது ஆன்மிக பலம் பெருகியது. தெய்வசிந்தனையைத் தவிர வேறெதுவும் இல்லாத இவருக்கு ஏதாவது வரமளிக்க வேண்டும் என முடிவு செய்த தேவர்கள் இமயமலைக்கு வந்தனர். அவர்களை துறவி பணிவுடன் வணங்கினார்.
""துறவியே! தங்கள் ஆன்மிக சாதனைகளைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டோம். வேறு எதையுமே நினையாமல், ருசிக்காக சாப்பிடாமல், பசிக்காக மட்டும் ஏதோ சாப்பிட்டு உயிர்வாழும் தாங்கள், தேவர் நிலைக்கு உயர்ந்து விட்டீர்கள். நாங்கள் உங்களுக்கு வரமளிக்கவே வந்தோம். நீங்கள் ஏதாவது கேளுங்கள், என்ன கேட்டாலும் தருகிறோம். தங்களைப் போன்ற நல்லவர்கள் அந்த வரத்தை உலக உயிர்களின் நலத்துக்குப் பயன்படுத்துவீர்கள் என்பதை அறிவோம். எனவே தங்களுக்கு பலவித சித்திகளைத் தருகிறோம், கேளுங்கள்,'' என்றனர் அன்புடன்.
துறவி தனக்கு எதுவும் வேண்டாம் என மறுத்தார். கேட்டுத்தான் ஆக வேண்டும் என தேவர்கள் வற்புறுத்தவே,""தெய்வஅருள் கிடைக்க வேண்டும். அதைத் தவிர கேட்க வேறு ஏதுமில்லை,'' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் சோமதேவர். தேவர்கள் விடுவதாக இல்லை.
""துறவியே! தாங்கள் விரும்பாவிட்டாலும் பரவாயில்லை. இந்த உலக உயிர்களின் நோய் தங்கள் கைபட்டாலே தீர்ந்துவிடும் வரம் தருகிறோம். இதன்மூலம் தங்களுக்கு உயிர்களின் மீதுள்ள அன்புநிலை வெளிப்படும். இதன்மூலம் தாங்கள் புகழும் பெறுவீர்கள். பூமியில் வாழ்வதே புகழ் அடைவதற்காகத்தானே!'' என்றார்கள் மிகவும் பவ்வியமாக.
""தேவர்களே! புகழுக்காக ஒருவன் செய்யும் செயல்கள் அர்த்தமற்றவை. நோயைத் தீர்ப்பது என் வேலையல்ல. எந்த இறைவன் உயிர்களைப் படைத்தானோ அவனால் மட்டுமே மக்களின் நோயைத் தீர்த்து வைக்க முடியும். நாமாக தீர்த்து வைத்தால் மக்கள் நம் புகழ் பாடுவார்கள். ஆனால், இறைவனை மறந்து விடுவார்களே! இறைவனை மறக்கடிக்கவா நாம் இவ்வளவு பாடுபடுகிறோம்,'' என்று அந்த வரத்தையும் ஏற்க மறுத்தார். அப்போதும் விடாத தேவர்கள், ""தங்கள் கருத்தை ஏற்கிறோம். நீங்கள் செய்யும் நற்செயல் உங்களுக்கே தெரியாத வகையில், உயிர்களுக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அருள்கிறோம்,'' என்றார்கள்.
அதையும் ஏற்க மறுத்தார் துறவி. ""தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சேவையால் வரும் பலனும் புண்ணியமும் எனக்குத் தேவையில்லை. அதுவும் ஒருவகையில் சுயலாபமே,'' என்றார்.
இப்படிப்பட்ட உயர்ந்த குணமுள்ள அவருக்கு, அந்த துறவியே அறியாத வகையில் அவர் எங்கு சென்றாலும், மக்களின் துன்பம் நீங்கும் வகையிலான சக்தியைக் கொடுத்துவிட்டு தேவர்கள் சென்றுவிட்டனர். அந்தத் துறவி ஏதாவது ஊருக்குள் நுழைந்தாலே, அங்கு வசித்தவர்கள் கொண்ட ஆசைகள் நிறைவேறிவிட்டன. நோயாளிகள் துன்பம் நீங்கி துள்ளிக்குதித்து வேலை செய்ய ஆரம்பித்தார்கள். இதையறியாத துறவி, இறைநினைப்புடன் காலத்தைக் கழித்து இறைவனின் திருவடியில் ஐக்கியமாகி பிறவாநிலை என்னும் பெரும்பேறு பெற்றார். சுயநலமின்றி இறைவன் மீது காட்டும் பக்தியே, உலகில் நிலைத்து நிற்கும் என்பதற்கு சோமதேவ துறவியை உதாரணமாகக் கொள்ளலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
16: பழசை நினைச்சுப் பாருங்க!
இன்று நாம் பல ஊர்களில், உயர்ந்த நிறுவனங்களில் பணிசெய்கிறோம். ஐம்பதாயிரம் வரை சம்பளம் வாங்கிக் குவிக்கிறோம். இதற்கு காரணமானவர்கள் யார்? நமது ஆசிரியர்கள். நமக்கு மூன்று வயதாக இருந்தபோதே, ஏ, பி, சி,டி....அ, ஆ.. கற்றுக்கொடுத்த அந்த ஆசிரியர்களை குறைந்தபட்சம் ஒன்றாம் தேதி கைநீட்டி சம்பளம் வாங்கும் போதாவது நினைக்கிறோமா!
ஆனால், படிப்பறிவே இல்லாத ஒருவர் தன் குருவை உயிராக மதித்தார் என்ற கதை தெரியுமா?
கோல்கட்டாவிலுள்ள ஒரு டாக்டரின் வீட்டில் வேலைக்காரனாக இருந்தவர் லாட்டு. ராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தரான அந்த டாக்டர், அவரைத் தரிசிக்கச் செல்லும் போதெல்லாம், தன் தேவைகளைக் கவனித்துக் கொள்ள லாட்டுவையும் உடனழைத்துச் செல்வார். ஒருமுறை லாட்டுவைப் பார்த்த ராமகிருஷ்ணர், ""நீ ஆன்மிகத்தில் உயர்ந்த இடம் பெறுவாய்,'' என்றார்.
"எழுத்தறிவே இல்லாத தனக்கு ஆன்மிகத்தில் உயர்ந்த இடமா? இந்த சாமிக்கு என்னாயிற்று?' என்று தானே லாட்டு நினைத்திருப்பார்! டாக்டரும் அதே போல் தான் நினைத்தார்.
ஒருமுறை லாட்டுவை ராமகிருஷ்ணர் தொட்டார். ""இப்போது சொல், ஈஸ்வரகோடிகள் (இறைவனின் பல பிரிவு) என்பவர்கள் யார்?'' என்றார். லாட்டு மடமடவென கண்களில் கண்ணீருடன் பதிலளித்தார்...இப்படி ஒரு உயர்ந்த கேள்விக்கு பதிலளிக்க தன்னால் எப்படி முடிந்ததென ஆச்சரியப்பட்டார். அவரை அடிக்கடி தியானம் செய்யும்படி ராமகிருஷ்ணர் சொல்வார்.
ஒருமுறை லாட்டுவைக் காணவில்லை. அவர் கோயிலில் அதிக நேரமாக தன்னைஜ மறந்து தியானத்தில் இருப்பதாக ஒரு சீடர் சொல்லவே, ராமகிருஷ்ணர் அங்கு சென்றார். லாட்டுவுக்கு உடலில் வியர்வை வழிந்தோடியது. அது கூட தெரியாமல் அவர் தன்னிலை மறந்து அமர்ந்திருந்தார். அதைக் கண்ட குரு அவருக்கு விசிற ஆரம்பித்துவிட்டார். இந்த அற்புதத்தைப் பார்த்தோ என்னவோ, சுவாமி விவேகானந்தர் லாட்டுவுக்கு "அத்புதானந்தர்' என்று பெயர் சூட்டினார். படிப்பே இல்லாத தன்னை ஆன்மிகப் பெருமகனாக்கியதற்காக, ராமகிருஷ்ணரின் இறுதிக்காலத்தில், அவருக்கு மலஜலம் அள்ளிக்கூட சேவை செய்தார் லாட்டு. இந்தக் கதையைப்படித்த நீங்கள், இனியேனும் உங்களை வளர்ச்சிக்கு காரணமான ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை எண்ணிப் பார்த்து மானசீகமாக வணங்குவீர்கள் தானே!
இன்று நாம் பல ஊர்களில், உயர்ந்த நிறுவனங்களில் பணிசெய்கிறோம். ஐம்பதாயிரம் வரை சம்பளம் வாங்கிக் குவிக்கிறோம். இதற்கு காரணமானவர்கள் யார்? நமது ஆசிரியர்கள். நமக்கு மூன்று வயதாக இருந்தபோதே, ஏ, பி, சி,டி....அ, ஆ.. கற்றுக்கொடுத்த அந்த ஆசிரியர்களை குறைந்தபட்சம் ஒன்றாம் தேதி கைநீட்டி சம்பளம் வாங்கும் போதாவது நினைக்கிறோமா!
ஆனால், படிப்பறிவே இல்லாத ஒருவர் தன் குருவை உயிராக மதித்தார் என்ற கதை தெரியுமா?
கோல்கட்டாவிலுள்ள ஒரு டாக்டரின் வீட்டில் வேலைக்காரனாக இருந்தவர் லாட்டு. ராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தரான அந்த டாக்டர், அவரைத் தரிசிக்கச் செல்லும் போதெல்லாம், தன் தேவைகளைக் கவனித்துக் கொள்ள லாட்டுவையும் உடனழைத்துச் செல்வார். ஒருமுறை லாட்டுவைப் பார்த்த ராமகிருஷ்ணர், ""நீ ஆன்மிகத்தில் உயர்ந்த இடம் பெறுவாய்,'' என்றார்.
"எழுத்தறிவே இல்லாத தனக்கு ஆன்மிகத்தில் உயர்ந்த இடமா? இந்த சாமிக்கு என்னாயிற்று?' என்று தானே லாட்டு நினைத்திருப்பார்! டாக்டரும் அதே போல் தான் நினைத்தார்.
ஒருமுறை லாட்டுவை ராமகிருஷ்ணர் தொட்டார். ""இப்போது சொல், ஈஸ்வரகோடிகள் (இறைவனின் பல பிரிவு) என்பவர்கள் யார்?'' என்றார். லாட்டு மடமடவென கண்களில் கண்ணீருடன் பதிலளித்தார்...இப்படி ஒரு உயர்ந்த கேள்விக்கு பதிலளிக்க தன்னால் எப்படி முடிந்ததென ஆச்சரியப்பட்டார். அவரை அடிக்கடி தியானம் செய்யும்படி ராமகிருஷ்ணர் சொல்வார்.
ஒருமுறை லாட்டுவைக் காணவில்லை. அவர் கோயிலில் அதிக நேரமாக தன்னைஜ மறந்து தியானத்தில் இருப்பதாக ஒரு சீடர் சொல்லவே, ராமகிருஷ்ணர் அங்கு சென்றார். லாட்டுவுக்கு உடலில் வியர்வை வழிந்தோடியது. அது கூட தெரியாமல் அவர் தன்னிலை மறந்து அமர்ந்திருந்தார். அதைக் கண்ட குரு அவருக்கு விசிற ஆரம்பித்துவிட்டார். இந்த அற்புதத்தைப் பார்த்தோ என்னவோ, சுவாமி விவேகானந்தர் லாட்டுவுக்கு "அத்புதானந்தர்' என்று பெயர் சூட்டினார். படிப்பே இல்லாத தன்னை ஆன்மிகப் பெருமகனாக்கியதற்காக, ராமகிருஷ்ணரின் இறுதிக்காலத்தில், அவருக்கு மலஜலம் அள்ளிக்கூட சேவை செய்தார் லாட்டு. இந்தக் கதையைப்படித்த நீங்கள், இனியேனும் உங்களை வளர்ச்சிக்கு காரணமான ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை எண்ணிப் பார்த்து மானசீகமாக வணங்குவீர்கள் தானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
17: வேதநாயகனின் வாழ்விலிருந்து - நாராயணனே வியாசர்
ஒருவருடைய உயர்ந்த குணங்கள் இன்னொருவரிடம் அப்படியே தொற்றிக்கொள்ளுமானால் அதை "அனுப்பிரவேச அவதாரம்' என்பர். பராசர மகரிஷயின் பிள்ளையே வியாசர். அந்த மகரிஷி தன் பிள்ளை வியாசரின் பெருமையைப் பற்றி விஷ்ணுபுராணத்தில் சொல்கிறார்.""என் பிள்ளை வியாசரைப் பற்றி நீங்கள் சாமானியமாக நினைக்காதீர்கள். விஷ்ணுவினுடைய அவதாரம் அவன். இல்லையென்றால், மகாபாரதம் என்ற அவ்வளவு பெரிய கிரந்தத்தை அவர் இயற்றியிருக்க முடியுமா? ஆகையால், அவரை நாராயணன் என்றே நீங்கள் உணருங்கள்,'' என்கிறார்.திருமாலின் அம்சங்கள் வியாசரிடத்தில் நிறைந்திருந்தபடியால், அவரை அனுப்பிரவேச அவதாரம் என்றனர்.
மீன்வாசம் பூ வாசம்
வியாசரின் தாய் சத்தியவதி. அவளுக்கு ""மச்சகந்தி'' என்றொரு பெயருண்டு. அவள் இருக்கும் இடத்தில் மீன்வாடை வீசியதால் இப்பெயர் உண்டானது. மீனவர்களாலும் சகிக்கமுடியாத அளவுக்கு அவள் உடம்பில் மீன்நாற்றம் அடித்தது. அவள் தன்னை நினைத்து வருந்தாத நாளில்லை. யமுனை ஆற்றில் படகோட்டியாக பணி செய்தாள்.
ஒருநாள் தீர்த்தயாத்திரை வந்த பராசர முனிவர், இவளது படகேறி பயணிக்க வந்தார். பிதுர் சாபத்தினால் (முன்னோர் சாபம்) தான் அவளுக்கு மீன்வாடை நோயாக தொற்றிக் கொண்டது என்ற உண்மையையும், தாங்கள் அந்த நேரத்தில் உ<றவு கொண்டால், அதற்கு முடிவு வரும் என்றும் தெரிவித்தார். அவளும்
சம்மதித்தாள்.
அந்த உத்தமமான நேரத்தில் மச்சகந்திக்கு பராசரமுனிவரால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர் தான் வேதங்களை நமக்களித்த வியாசர். அன்றுமுதல் மச்சகந்தியின் உடலில் நறுமணம் வீசத் தொடங்கியது. ஒரு யோஜனை தூரம் அந்த நறுமணம் பரவியதால் அவள் ""யோஜனகந்தி'' என்று அழைக்கப் பட்டாள். பராசரரின் யோகசக்தியால், அவள் மீண்டும் கன்னித்தன்மையை அடைந்தாள்.
தாய்க்கு பிள்ளை தந்த வரம்
பராசரருக்கும், மச்சகந்திக்கும் பிறந்த மகன், பிறக்கும் போதே ஏழு வயது குழந்தையாக இருந்தான். அவனது தந்தை அவனுக்கு ஆசியளித்து ஒரு கமண்டலத்தைப் பரிசாக வழங்கினார். பாச மேலீட்டால் பிள்ளையை அணைக்க ஆவல் கொண்டாள் மச்சகந்தி. ஆனால் பிள்ளையோ, ""மீனவப்பெண்ணான நீ என்னைத் தொடக்கூடாது!'' என்று தடுத்தான். மச்சகந்தி அப்படியோ சிலையாக நின்று விட்டாள். கண்களில் கண்ணீர் பெருகியது. "தாயும் தந்தையும் சமம்' என்று முனிவர் பிள்ளைக்குப் போதித்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந்த வியாசர், அவரது கட்டளைக்கு இணங்கி, அன்போடு அம்மாவின் மடியில் அமர்ந்து கொண்டார். மச்சகந்தி தன் பிள்ளையிடம்,""ரிஷிபுத்திரா! நீ என்னை விட்டு விலகிச் செல்லாதே!'' என்று வேண்டிக் கொண்டாள். தன்னால் மனம் வருத்தம் அடைந்த தாய்க்கு வியாசர் ஒரு வரம் அளித்தார்.
"" அம்மா! இப்போது போகிறேன். நீ எப்போது நினைத்தாலும் அப்போதெல்லாம் உன் முன் உடனே தோன்றி விடுவேன்!'' என்றார். தாயின் வயிறு குளிர்ந்தது.
ஒருவருடைய உயர்ந்த குணங்கள் இன்னொருவரிடம் அப்படியே தொற்றிக்கொள்ளுமானால் அதை "அனுப்பிரவேச அவதாரம்' என்பர். பராசர மகரிஷயின் பிள்ளையே வியாசர். அந்த மகரிஷி தன் பிள்ளை வியாசரின் பெருமையைப் பற்றி விஷ்ணுபுராணத்தில் சொல்கிறார்.""என் பிள்ளை வியாசரைப் பற்றி நீங்கள் சாமானியமாக நினைக்காதீர்கள். விஷ்ணுவினுடைய அவதாரம் அவன். இல்லையென்றால், மகாபாரதம் என்ற அவ்வளவு பெரிய கிரந்தத்தை அவர் இயற்றியிருக்க முடியுமா? ஆகையால், அவரை நாராயணன் என்றே நீங்கள் உணருங்கள்,'' என்கிறார்.திருமாலின் அம்சங்கள் வியாசரிடத்தில் நிறைந்திருந்தபடியால், அவரை அனுப்பிரவேச அவதாரம் என்றனர்.
மீன்வாசம் பூ வாசம்
வியாசரின் தாய் சத்தியவதி. அவளுக்கு ""மச்சகந்தி'' என்றொரு பெயருண்டு. அவள் இருக்கும் இடத்தில் மீன்வாடை வீசியதால் இப்பெயர் உண்டானது. மீனவர்களாலும் சகிக்கமுடியாத அளவுக்கு அவள் உடம்பில் மீன்நாற்றம் அடித்தது. அவள் தன்னை நினைத்து வருந்தாத நாளில்லை. யமுனை ஆற்றில் படகோட்டியாக பணி செய்தாள்.
ஒருநாள் தீர்த்தயாத்திரை வந்த பராசர முனிவர், இவளது படகேறி பயணிக்க வந்தார். பிதுர் சாபத்தினால் (முன்னோர் சாபம்) தான் அவளுக்கு மீன்வாடை நோயாக தொற்றிக் கொண்டது என்ற உண்மையையும், தாங்கள் அந்த நேரத்தில் உ<றவு கொண்டால், அதற்கு முடிவு வரும் என்றும் தெரிவித்தார். அவளும்
சம்மதித்தாள்.
அந்த உத்தமமான நேரத்தில் மச்சகந்திக்கு பராசரமுனிவரால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர் தான் வேதங்களை நமக்களித்த வியாசர். அன்றுமுதல் மச்சகந்தியின் உடலில் நறுமணம் வீசத் தொடங்கியது. ஒரு யோஜனை தூரம் அந்த நறுமணம் பரவியதால் அவள் ""யோஜனகந்தி'' என்று அழைக்கப் பட்டாள். பராசரரின் யோகசக்தியால், அவள் மீண்டும் கன்னித்தன்மையை அடைந்தாள்.
தாய்க்கு பிள்ளை தந்த வரம்
பராசரருக்கும், மச்சகந்திக்கும் பிறந்த மகன், பிறக்கும் போதே ஏழு வயது குழந்தையாக இருந்தான். அவனது தந்தை அவனுக்கு ஆசியளித்து ஒரு கமண்டலத்தைப் பரிசாக வழங்கினார். பாச மேலீட்டால் பிள்ளையை அணைக்க ஆவல் கொண்டாள் மச்சகந்தி. ஆனால் பிள்ளையோ, ""மீனவப்பெண்ணான நீ என்னைத் தொடக்கூடாது!'' என்று தடுத்தான். மச்சகந்தி அப்படியோ சிலையாக நின்று விட்டாள். கண்களில் கண்ணீர் பெருகியது. "தாயும் தந்தையும் சமம்' என்று முனிவர் பிள்ளைக்குப் போதித்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந்த வியாசர், அவரது கட்டளைக்கு இணங்கி, அன்போடு அம்மாவின் மடியில் அமர்ந்து கொண்டார். மச்சகந்தி தன் பிள்ளையிடம்,""ரிஷிபுத்திரா! நீ என்னை விட்டு விலகிச் செல்லாதே!'' என்று வேண்டிக் கொண்டாள். தன்னால் மனம் வருத்தம் அடைந்த தாய்க்கு வியாசர் ஒரு வரம் அளித்தார்.
"" அம்மா! இப்போது போகிறேன். நீ எப்போது நினைத்தாலும் அப்போதெல்லாம் உன் முன் உடனே தோன்றி விடுவேன்!'' என்றார். தாயின் வயிறு குளிர்ந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|