புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
34 Posts - 43%
heezulia
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
2 Posts - 3%
prajai
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
2 Posts - 3%
jothi64
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
398 Posts - 49%
heezulia
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
26 Posts - 3%
prajai
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
புறா சொன்ன அறிவுரை! Poll_c10புறா சொன்ன அறிவுரை! Poll_m10புறா சொன்ன அறிவுரை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறா சொன்ன அறிவுரை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2015 1:43 pm

ஒரு ஊரில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவன் பெயர் மணிகண்டன்; மற்றவன் பெயர் சிவக்குமார்.

மணிகண்டனும், சிவக்குமாரும் படிப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அதனால், அவர்களைப் பத்தாம் வகுப்புடன் நிறுத்தி விட்டார் தந்தையார். மணிகண்டன் விவசாய வேலைகளில் தனது தகப்பனாருக்கு உதவிகரமாக இருந்து வந்தான்.

ஒரு சமயம் அவனது தந்தை சொந்த வேலையாக வெளியூர் சென்று விட்டார். பத்துப் பதினைந்து நாட்களாகியும் திரும்பி வரவில்லை. அதுவரை வீட்டையும், வயலையும் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டான். வெளியூரிலிருந்து திரும்பி வந்ததும், மணிகண்டனின் செயலைப் பாராட்டினார் தந்தை.

மணிகண்டனுக்கு நேர்மாறான குணம் கொண்டிருந்தான் சிவக்குமார். தந்தையுடன் வயல் வேலைகளுக்குச் செல்வதென்றால் அவனுக்கு அது கொலைக் களத்துக்குப் போகிற மாதிரி இருந்தது. சுட்டுப் போட்டாலும் அவனுக்கு வயல் வேலைகளில் நாட்டம் ஏற்படவில்லை. அதனால், அவனை பக்கத்து நகரத்தில் இருந்த தொழில் பட்டறை ஒன்றில், வேலைக்குச் சேர்த்து விட்டார் தந்தையார்.

சம்பாதித்து கொடுக்கவில்லை என்றாலும், அந்தத் தொழிலில் அவன் நிலைத்து முன்னேற வேண்டும் என்பதே அவனது தந்தையின் விருப்பம்.

சம்பளத்தை வாங்கியவுடன் சக தொழிலாளர்களுடன் சேர்ந்து மதுக் கடைக்குச் சென்றான். அன்றுதான் மதுவை முதன் முதலாகச் சுவைக்கத் தொடங்கினான். நாட்கள் செல்லச் செல்ல தனியாகவே மதுக்கடைக்குச் சென்று குடித்துவரத் துவங்கினான் சிவக்குமார். மது அருந்திய பின் அவனுக்குப் பிடித்தமான உணவு புறாக்கறியாகும்.

வயல் வெளியில் மேயும் புறாக்களை வில்லைக்கொண்டு அடித்து சமைத்துத் தின்பான். சகோதரன் அன்போடு வளர்த்து வந்த புறாக்களையும் கூட அவன் விட்டு வைப்பதில்லை. அதனால், அடிக்கடி அண்ணன், தம்பிக்கிடையில் சண்டை ஏற்படுவதும் உண்டு.

சிவக்குமாரின் செயலை அவனது தந்தை அடிக்கடி கண்டிப்பதுண்டு.

ஒருநாள்- ஞாயிற்றுக்கிழமை. தந்தை வெளியூர் சந்தைக்கு வியாபார நிமித்தமாகச் சென்றுவிட்டார். மணிகண்டன் மட்டும் வீட்டில் இருந்தான். காலை பத்து மணிக்கு வெளியே கிளம்பிய சிவக்குமார், பகல் இரண்டு மணிக்கு ஓரளவு தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவனது கையில் ஒரு ரொட்டி பாக்கெட் இருந்தது.

மணிகண்டன் அப்போது தானியத்தை எடுத்துப் புறாக்களுக்குத் தீனிப் போட்டுக் கொண்டிருந்தான். சகோதரனைக் கண்டதும் அவனிடம் எதுவும் பேச வேண்டாம் என்றெண்ணி வேண்டா வெறுப்போடு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

சிவக்குமார் ""அப்பாடா!'' என்று சப்தமிட்ட வண்ணம் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தான். அவனது சப்தத்தைக் கேட்ட புறாக்களில் சில பறந்து சென்று வீட்டுக் கூரையின் மீது உட்கார்ந்து கொண்டன. இரண்டு புறாக்கள் மட்டும் பறந்து செல்லாமல் அங்கேயே இருந்தன.

கையில் இருந்த ரொட்டியைச் சிறு, சிறு துண்டுகளாகப் பிய்த்தான் சிவக்குமார். பின்னர் அவற்றை ஒவ்வொன்றாகப் புறாவை நோக்கி வீசினான்.

""நல்லா சாப்பிடுங்க. சந்தோஷமாக இருங்க,'' என்று புறாக்களிடம் கூறினான்.

புறாக்கள் இரண்டும் அவன் வீசிய ரொட்டியைக் கொத்தித் தின்னவில்லை. மீண்டும் சில ரொட்டிகளை வீசினான். அவற்றையும் புறாக்கள் கண்டு கொள்ளவில்லை.

""புறாக்களே! உங்களுக்கு கண்ணு ரெண்டும் குருடா? நான் வீசிய ரொட்டித் துண்டை ஏன் சாப்பிடவில்லை?'' என்று உளறியபடியே புறாக்களைப் பார்த்து கேட்டான்.

மீண்டும் ரொட்டித் துண்டுகளை வீசி விட்டுத் தின்னும்படி கூறினான். அப்போதும் புறாக்கள் ரொட்டித் துண்டைக் கண்டு கொள்ளவில்லை.

""ம்... இப்போது புரிகிறது. உங்களுக்குக் கண்ணும் தெரியவில்லை; காதும் கேட்கவில்லை. இந்தப் புறாக்கள் இரண்டும் குருடு, செவிடு, பிடித்துச் சாப்பிட இதுதான் தருணம்,'' என்று சொல்லியபடி கட்டிலை விட்டு மெதுவாக எழுந்து புறாக்களை நோக்கிக் காலடி எடுத்து வைத்தான்.

புறாக்கள் இருந்த இடத்தை நெருங்கியதும், அவற்றைப் பிடிக்க கையை நீட்டினான்.

அப்போது...

""தன்னிலை மறந்த மனிதனே கேள்! எங்களுக்குக் கண் பார்வை உண்டு. காதுகளும் நன்கு கேட்கும். உனக்குத்தான் பார்வையில் கோளாறு. பிறர் சொல்லும் புத்திமதியும் உன் காதில் ஏறுவதில்லை. நீதான் குருடன்; செவிடன். உனக்கு சுய நினைவு இல்லாத சமயத்தில்தானே எங்களுக்கு ஏதாவது போட வேண்டும் என்று தோன்றுகிறது? என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது பற்றித் தெரியாத வேளையில் நீ எங்களுக்குப் போடும் தீனியானது, எங்கள் மீது உனக்குள்ள அக்கறையைக் காட்டவில்லை. ஆனால், போதை தெளிந்ததும் எங்களைப் பிடித்துக் கறி சமைக்க உன் கரம் நீளுகிறதே... உன்னை எப்படி நம்புவது?

""உன்னை நம்பி நீ போட்ட தீனியை எப்படிச் சாப்பிட்டு உயிர் வாழ முடியும்? உங்களது இனத்தை விருத்தி செய்வதில் எவ்வளவு கண்ணுங்கருத்துமாக இருக்கிறீர்கள்? அதே வேலையை நாங்கள் செய்யும் போது, அதற்குத் தடையாக நீங்கள் ஏன் வருகிறீர்கள்? எங்கள் இனத்தை அழித்துத் தானா நீங்கள் சுவையுள்ள உணவு சாப்பிட வேண்டும்?

""சாராயமும், புறாக்கறியும் தேவையென்று உணவு வகையையே மாற்றி விட்டீர்கள்! இதனால் நீங்களும் சாகப் போகிறீர்கள். நாங்களும் சாகப் போகிறோம். இருவரும் இணைந்து வாழ்தலே இன்புற வாழ்க்கையாகும். அதற்கு மனிதர்களாகிய நீங்கள்தான் மாற வேண்டும். உங்களது உணவு வகைகளை மாற்றினாலே, எங்களைப் போன்றோர் மகிழ்ச்சியாக இருக்க முடியும். நீங்கள் போடும் ரொட்டித் துண்டுகளை எங்களுக்கு வீசி எறிந்துவிட்டு, எங்களை உணவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக, வீசுகின்ற ரொட்டித் துண்டை நீங்களே உண்டு எங்களை வாழ விடுங்கள்,'' என்று அந்தப் புறாக்கள் கூறின.
போதை தெளிந்த நிலையில் இருந்த சிவக்குமாருக்கு, புறாக்களின் பேச்சு நல்லபடியாக மூளையில் பதிந்து விட்டது.

அதன் பின்னர், அவன் தொழில் பட்டறையில் வேலை முடிந்ததும் வீடு திரும்பி, எஞ்சிய நேரத்தில் வயல் வேலைகள் செய்வான். பறவை வளர்ப்பு அவனுக்குப் பொழுது போக்காக மாறியது.

***
சிறுவர் மலர்



புறா சொன்ன அறிவுரை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Sat Feb 07, 2015 12:21 am

நல்ல கதை.



புறா சொன்ன அறிவுரை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுறா சொன்ன அறிவுரை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புறா சொன்ன அறிவுரை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 07, 2015 2:50 pm

புறா சொன்ன அறிவுரை! 1571444738 புறா சொன்ன அறிவுரை! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 07, 2015 4:01 pm

நல்ல அறிவுரை கதை....





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

புறா சொன்ன அறிவுரை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக