புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
53 Posts - 42%
heezulia
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
304 Posts - 50%
heezulia
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
21 Posts - 3%
prajai
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
2 Posts - 0%
Barushree
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வள்ளுவப்புரட்சி Poll_c10வள்ளுவப்புரட்சி Poll_m10வள்ளுவப்புரட்சி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவப்புரட்சி


   
   
CHENATHAMIZHAN
CHENATHAMIZHAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2015

PostCHENATHAMIZHAN Wed Feb 04, 2015 9:36 am

வள்ளுவப் புரட்சி
-கு.காமராஜ் எம்.ஏ., எம்.ஏ., எம்.பில்(பி.எச்டி)
முனைவர் பட்ட ஆய்வாளர்., பாரதியார் பல்கலைக்கழகம்.

உலக இலக்கியங்களை உற்று நோக்கினால் அறிவியல், அரசியல், ஆன்மிகம், அறம், பகுத்தறிவு, பொருளாதாரம், பொதுஉடைமை போன்ற கருத்துக்களை எடுத்தியம்பும் வண்ணம் படைக்கப்பட்ட பல்வேறு நூல்களைக் காணமுடிகிறது. ஆனால், இத்தகைய நூல்களின் அத்தனை கருத்துக்களையும் மொத்தமாகக் கொண்டிருக்கும் ஒரு நூல் உண்டென்றால் அது திருக்குறள் மட்டும்தான்.
பல்லாயிரம் சொற்களால் படைக்கப்பட்டிருந்தாலும் கருத்து வளமற்ற இலக்கியம் எதற்கும் பயன்படாது. பல இலட்சம் சொற்களாலும் வழங்கமுடியாத கருத்து வளத்தினையும், கற்பனைத் திறத்தினையும் “12000” சொற்களால் படைக்கப்பட்ட திருக்குறளுள் காணமுடிகிறது. அதனால்தான், நாடு, மொழி, இனம், மதம் இவற்றையெல்லாம் கடந்தும் அனைவராலும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இலக்கியமும் அறச்சிந்தனைகளும்

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
அய்யர் யாத்தனர் கரணம் என்ப”
என்னும் தொல்காப்பியர் கூற்று, பொய்யும், புரட்டும், ஏமாற்றும், துரோகமும் பண்டைக்காலம் தொட்டே மானிடச்சமூகத்தில் நிலைகொண்டிருந்ததனை மெய்ப்பிக்கின்றது. ஆகவேதான், இலக்கியத்தின் வாயிலாக அறக்கருத்துக்களைப் போதிக்கும்நிலை சங்ககாலம்தொட்டே தொடர ஆரம்பித்துவிட்டது எனலாம். பேராசைகளும், பெரும்போர்களும், இரக்கமின்மையும், ஈகைக்குறைவுகளும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மிகுதியாகிக் கொண்டிருந்ததால் இலக்கியத்தில் அறம் என்ற நிலைமாறி அறத்தையே இலக்கியமாகப்படைக்கும் நிலையும் உருவானது. பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் 11 நூல்கள் அறநூல்களாக அமைந்துள்ளமையை இதற்குச் சான்றாகக்கொள்ளலாம்.
அரசர்களைப் போற்றவும்., ஏழ்மையை விளக்கிப் பரிசில் பெறுவதற்காகவுமே இலக்கியம் என்னும் நிலையினை மாற்றி தமிழ் இலக்கியப்போக்கினை ஒரு புதுவழிக்கு அழைத்துச் சென்ற பெருமை அறநூல்களையே சாரும். அத்தகைய அறநூல்களுள் தனித்துவம் பெற்றுத்திகழ்வது திருக்குறள்.

நன்னெறிக்கோட்பாடு

அந்நியரின் படையெடுப்புகள், சமயங்களின் தோற்றங்கள், பிறமொழியாளர்களின் ஊடுருவல்கள் போன்றவற்றால் தமிழர்தம் பண்பாட்டிலும்., பழக்கவழக்கங்களிலும் மிகுந்த மாற்றங்கள் உருவாகியுள்ளதை வரலாற்றுச்சுவடுகள் எடுத்துக்காட்டுகின்றன. பெயரைவைத்தே இவர்கள் தமிழ் இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற முடிவுக்கு வருமாறு தாம் இறந்தபிறகும் ஆய்வாளர்களுக்குத் தமது பெயர்களின் மூலம் இன அடையாளத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்தனர் பண்டையத்தமிழர். ஆனால் தற்காலத்தவர், பெயர்களின் மூலம் தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தை மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழர்களின் தனித்துவம் மிக்க சிறப்புகள் கலப்புத்தன்மைக்கு மாறியதற்கும், சொந்தமண்ணிலேயே ஏதிலிகளாய் அடிமைப்படவேண்டியச் சூழலுக்குத் தள்ளப்படுவதற்கும் அந்நியர் வருகையும், அவர்களின் பண்பாட்டுத்தாக்கமுமே காரணம் எனலாம். நெடுஞ்செழியன் என்றும், இரும்பொறை என்றும் தமது பெயரிலேயே தமிழ்ப்பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டிருந்த மன்னர்கள் அருகி பல்யாகச்சாலை முதுகுடுமிப் பெருவழுதிகளும், இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளிகளும் பெருகி யாகங்களிலும் பூசை-புனசுகாரங்களிலும் மூழ்கினர். தன்னறிவோடு நல்லாட்சி செய்தோர் சமயவாதிகள் ஆட்டுவிக்கும் பொம்மைகளாகி., மாறுபட்டகருத்து கொண்டோரை கழுவிலேற்றிக் கொலைசெய்யும் அளவிற்கு சமயப்பித்தர்களாகவும் மாறினர். உயிர்ப்பலியாகங்களும், நெய்யூற்றிவளர்க்கும் நெருப்பு யாகங்களும் மிகுந்திருந்த காலக்கட்டத்தில் “ஆயிரம் யாகங்கள் வளர்த்து வழிபாடு நடத்துவதைவிடவும், உயிரைக் கொல்லாமையும் அதனை உண்ணாமையுமே சிறந்தது” என்று புரட்சிக்குரல் கொடுத்த வள்ளுவரின் கூற்றினை,
“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று”
என்னும் குறள் தாங்கி நிற்கின்றது. ஆக அரசர்களுக்கும், சமயவாதிகளுக்கும் போற்றிப் பாடிக்கொண்டிருக்காமல் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிக் கோட்பாடுகளை அஞ்சாது எடுத்துரைக்கும் ஆற்றல் வள்ளுவரிடம் நிறைந்திருந்ததைக் காணமுடிகிறது.

புதிதாய் ஒலித்த குறளின் குரல்

பரத்தமைஒழுக்கத்தையும், கள்ளுண்டு களிப்பதையும், சூதாட்டத்தில் திளைப்பதையும் முக்கிய வாழ்வியல் கூறுகளாகச் செல்வாக்குமிக்கோர் கடைப்பிடித்து வந்தகாலத்தில்,

“இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு”
என்று எதிர்ப்புக்குரல் கொடுத்தார் வள்ளுவர்.
ஊடல் என்னும் உரிப்பொருளை விளக்குவதற்குச் சங்கப்பாடல்களில் பெரும்பாலும் பரத்தமை ஒழுக்கம்தான் முன்னிறுத்தப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொள்ளும்போது விலைமகளிரோடான தொடர்பு நாடெங்கிலும் மலிந்திருந்ததை அறியமுடிகிறது. அத்தகைய பரத்தமையை..
“பொருட்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று”
என்று குறளுக்கு முன்னர் எங்கணுமே காணமுடியாத உவமையைக் கையாண்டு கடுமையாய்க் கண்டிக்கிறார் வள்ளுவர்.
“பிணத்தைத் தழுவுவதற்கு ஒப்பானது” என்னும் இவ்வள்ளுவக் கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் அண்மைக்காலங்களில் இனப்படுகொலையில் ஈடுபட்ட ஈனர்கள் பிணமுயக்கத்திலும் ஈடுபட்டனர் என்னும் செய்திகள் அமைந்துள்ளன.
“மட்டுவாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும்,
அட்டு ஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பளுனி ......”
(புறம்-113)
என்று கையறுநிலையில் கூட புலால் உணவு அளித்ததை நினைவுகூர்ந்து பாரியின் புகழ்பாடினார் கபிலர். ஈசல் முதல் யானை வரையிலான உயிர்கள் கொல்லப்பட்டு உணவாகக் கொள்ளப்பட்ட நிலையில்,
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்”
என்று கொல்லாமைக்காகக் குரல் கொடுத்தவர் வள்ளுவர்.

பொய்மையும் வாய்மையே

தனது நாட்டை இழந்து, நாட்டுமக்களைப் பெரும் இன்னல்களுக்குள்ளாக்கி, மனைவி - மகனை விற்கவேண்டிய நிலைக்குவந்து, மகனின் இறப்பிற்கும் காரணமாகிய பின்பும் வாய்மை தவறவில்லை அரிச்சந்திரன் என்று பெருமையாகக் கூறுகிறது அரிச்சந்திர புராணம். தன்னைமட்டும் துன்பத்தில் ஆழ்த்தி வாய்மை தவறாதவன் என்று தனதுபெயரை நிலைநாட்டியிருந்தால் போற்றத்தக்கவன் எனலாம் அரிச்சந்திரனை. ஆனால், தனது நாட்டுமக்களையும்., மனைவி-மகனையும் பெரும் துன்பத்தில் தள்ளிய அரிச்சந்திரனின் செயலை எங்ஙனம் பாராட்டமுடியும்? வள்ளுவத்தின் துணையோடு உளவியல் நோக்கில் அணுகினால், வாய்மை தவறாதவன் என்று தான் பெயரெடுக்கத் தன்னையும் பிறரையும் பெரும்துயரில் ஆழ்த்தியவன் என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. பிறரின் துயரத்திற்குக் காரணம் ஆகிவிடும் எனில் அத்தகைய வாய்மையே தேவையில்லை என்கின்ற கருத்தினைக் கொண்டுள்ளது குறள். “எவருக்கும் எத்துயரும் ஏற்படாத வண்ணம் சொல்லக்கூடிய சொற்கள் அனைத்தையுமே வாய்மை சார்ந்தவையாகத்தான் கொள்ளவேண்டும்” எனும் கருத்தினை,
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்”
என்றும், எவருக்கும் தீங்கு விளைவிக்காமல் கிடைக்கும் நன்மைக்காகப் பொய்பேசினால் அதுவும் வாய்மைக்கு ஒப்பானதுதான் என்பதனை,
“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்”
என்றும் குறிப்பிட்டுள்ள வள்ளுவர் வாய்மைக்கு ஒரு புதிய விளக்கம் அளித்தவராகவே தெரிகின்றார்.
உலகப்பொதுமறையான தமிழ்மறை

சமயங்களால் வேறுபட்டிருப்போரையும்., கருத்துக்களால் மாறுபட்டிருப்போரையும்., இனங்களால் பிரிக்கப்பட்டிருப்போரையும் ஒன்றிணைக்கும் வல்லமை வாய்ந்தது திருக்குறள். இதற்கு ஒரு சான்றாக, தைவான் நாட்டில் நடைபெற்ற 30-ஆவது உலகக்கவிஞர்கள் மாநாட்டில் சீனக்கவிஞர் யூசி அவர்கள் ஆற்றிய திருக்குறள் பற்றிய உரையினைக் குறிப்பிடலாம்.
“இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் படைக்கப்பட்ட திருக்குறள் நூலை அப்துல்கலாம் அவர்கள் எனக்குப் பரிசாக வழங்கினார். அதனைப் படித்து உள்வாங்கியதோடு திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆங்கில உரைகளையும் படித்தேன். எத்துணை அருமையான கருத்துக்கள் அடங்கிய காலப்பெட்டகம் அது. அறம், பொருள், இன்பத்தைப் பற்றி வள்ளுவர் எழுதிய குறட்பாக்கள், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த தமிழ்ச் சமுதாயத்தின் மாட்சிமையையும், அந்தச் சமூகத்தின் அறிவுத்திறனையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. உலகில் மாந்தரினம் எப்படி வாழவேண்டும் என்பதனை இக்காலத்திற்கு மட்டுமன்றி எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எடுத்துரைக்கும் வகையில் அதன் பாக்கள் அமைந்திருப்பதனைக் கண்டு வியந்தேன். திருக்குறளைப் படிக்க படிக்க, இந்தக் கருத்துப்பேழை எப்படியும் சீன மொழி பேசும் மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மேலோங்கிக் கொண்டேயிருந்தது. அதன் வெளிப்பாடாகத்தான் திருக்குறளைச் சீன மொழியில் மொழிபெயர்த்து இருக்கிறேன். இந்த 30-ஆவது உலகக் கவிஞர்கள் மாநாட்டில் எனது நண்பர் அப்துல்கலாம் முன்னிலையில் உலகப்பொதுமறையான திருக்குறளைச் சீனமொழியில் வெளியிடுவதனைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.”
என்று சீனக்கவிஞர் யூசீ அவர்கள் உரையாற்றியதும் அங்குக் கூடியிருந்த அத்தனை உலகக் கவிஞர்களும், அறிஞர் பெருமக்களும் திருக்குறளின் மேன்மையினை அறிந்து வெகுவாகப் பாராட்டினர். “இந்த உலகக் கவிஞர்களின் ஒருமித்த பாராட்டு, திருவள்ளுவரால் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் கிடைத்த பாராட்டு” என்று மேனாள் இந்தியக் குடியரசுத்தலைவர் கலாம் அவர்கள் அகமகிழ்ந்து கூறினார்.
“நன்றென எப்பால வரும் இயைபவே
வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி”
என்னும் கல்லாடர் கூற்றுக்கும் சான்றாகின்றது அந்நிகழ்வு.

வையத்தின் துணை வள்ளுவமே
.
மானிடராய்ப் பிறந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிக்கோட்பாடுகளையும்., விலக்கவேண்டிய கொடுங்குணங்களையும் பல்வேறு சமயங்கள் எடுத்துரைத்தாலும் மனித மனங்களை அவற்றால் செம்மைப்படுத்த முடியவில்லை என்பதனைப் பெரும்போர்களும், இனப்படுகொலைகளும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. உலகம் வன்முறைகளால் இன்று புண்பட்டுக் கொண்டிருப்பதற்கும் சமயப்பூசல்களே அடிப்படைக்காரணமாக உள்ளன. அன்பெனும் அடித்தளத்தில் எழுப்பப்பட்ட சமயங்களே பலகோடி கல்லறைகளுக்கும் காரணமாகிப்போனது நல்லவைகள் திரிக்கப்பட்டு அல்லவைகள் புகுத்தப்பட்டதன் விளைவே எனலாம்.
“சைவரின் அன்பு நெறியினையும்., வைணவரின் சரணாகதிக்கோட்பாட்டினையும், புத்தரின் அகிம்சையையும், இயேசுவின் பொறையையும், நபிநாயகத்தின் சகோதரத்துவத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பது வள்ளுவம்” என்றார் தனிநாயகம் அடிகளார். எல்லா சமயங்களும் போதிக்கும் நன்னெறிகளோடு “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்னும் பகுத்தறிவு சிந்தனையையும் கொண்டிருக்கும் வள்ளுவம் வையகத்தோரால் கடைப்பிடிக்கப்படுமானால், ஆழிசூழ் உலகம் அன்பாலும் அறிவாலும் நிறையும் என்பதில் ஐயமில்லை.
--------------------------------------------------------


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 10:41 am

நல்ல பகிர்வு தமிழன்   புன்னகை...............உங்கள் வரவு நல்வரவாகுக ! புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக