புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுமை தொல்லையா? Poll_c10முதுமை தொல்லையா? Poll_m10முதுமை தொல்லையா? Poll_c10 
14 Posts - 70%
heezulia
முதுமை தொல்லையா? Poll_c10முதுமை தொல்லையா? Poll_m10முதுமை தொல்லையா? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
முதுமை தொல்லையா? Poll_c10முதுமை தொல்லையா? Poll_m10முதுமை தொல்லையா? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
முதுமை தொல்லையா? Poll_c10முதுமை தொல்லையா? Poll_m10முதுமை தொல்லையா? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதுமை தொல்லையா? Poll_c10முதுமை தொல்லையா? Poll_m10முதுமை தொல்லையா? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
முதுமை தொல்லையா? Poll_c10முதுமை தொல்லையா? Poll_m10முதுமை தொல்லையா? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
முதுமை தொல்லையா? Poll_c10முதுமை தொல்லையா? Poll_m10முதுமை தொல்லையா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
முதுமை தொல்லையா? Poll_c10முதுமை தொல்லையா? Poll_m10முதுமை தொல்லையா? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
முதுமை தொல்லையா? Poll_c10முதுமை தொல்லையா? Poll_m10முதுமை தொல்லையா? Poll_c10 
8 Posts - 2%
prajai
முதுமை தொல்லையா? Poll_c10முதுமை தொல்லையா? Poll_m10முதுமை தொல்லையா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முதுமை தொல்லையா? Poll_c10முதுமை தொல்லையா? Poll_m10முதுமை தொல்லையா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முதுமை தொல்லையா? Poll_c10முதுமை தொல்லையா? Poll_m10முதுமை தொல்லையா? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
முதுமை தொல்லையா? Poll_c10முதுமை தொல்லையா? Poll_m10முதுமை தொல்லையா? Poll_c10 
4 Posts - 1%
mruthun
முதுமை தொல்லையா? Poll_c10முதுமை தொல்லையா? Poll_m10முதுமை தொல்லையா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுமை தொல்லையா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 9:35 pm

"மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா” மண்ணுக்கு மரமும், மரத்துக்கு இலையும், கொடிக்கு காயும், குழந்தை தாய்க்கும் பாரமில்லை. ஆனால் இன்று...பெற்ற பிள்ளைகளுக்கு பெற்றோரே பாரமாகி விட்டார்கள்.

முதுமை ஒரு செல்லாக்காசு. இப்படி சொல்வதற்கு காரணம். முதுமையினால் தள்ளாமை, தள்ளாமையினால் இயலாமை, இயலாமையினால் மற்றவர்களின் உதவியை நாடியே தீர வேண்டிய கட்டாயம். எப்பொழுதும் யாரோ ஒருவரின் கையை எதிர்பார்த்தே வாழ வேண்டிய சூழ்நிலை. சொந்தங்களோ, சுற்றங்களோ, எத்தனை பேர் பெற்றோரை ஒரு சுமையாக கருதாமல் பேணி பார்க்கின்றனர்.

பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், படிக்கின்றார்கள், வேலைக்கு செல்கின்றார்கள். திருமணமும் ஆகிறது. பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறார்கள். பிறந்த பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை எண்ணியே உழைத்து, உழைத்து, பிள்ளைகளை கரை சேர்க்கின்றனர். இதற்குள் வாழ்க்கை முழுவதையும் உண்ணாமல், உறங்காமல், உழைத்து ஓய்ந்து போய் விடுகின்றனர். கடமைகளை எல்லாம் முடித்ததும், கடைசிப்பயணம் உடனே வந்து விட வேண்டும்.

கடமையை முடிக்காதவர்களுக்கு கடமையை முடிக்கும் வரை காலனிடம் கொஞ்சம் வாய்தா வாங்கி கொள்ளலாம். ஆனால், இப்படி ஒரு ஏற்பாடு இறைவனின் படைப்பில் இல்லை. அதனால், முதுமை காலத்தில் முகப்பில் அமர்ந்து கொண்டு மோட்டை பார்த்து கொண்டு, பழைய நினைவுகளை அசை போட்டு கொண்டிருக்கின்றனர். முதுமை காலத்தில் பெரும்பாலானோருக்கு நடமாட முடிவதில்லை. நடை, உடை இன்றி நலிந்து, மெலிந்து போனபோது, மகனோ, மகளோ, சுற்றமோ உதவிக்கு வந்து கவனித்து கொள்ள மாட்டார்களா என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். இன்றைய சூழலில் முதுமை உற்றத்தார்க்கும், சுற்றத்தார்க்கும் தொல்லையாகவே படுகிறது.

முதுமையால் தனிமைப்படுத்தப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு.

"மண்ணும் தான் நல்ல மண்ணு மன்னவரும் நல்லவரே!
மன்னவரை பெற்றெடுத்த மலைக்குரங்கே தொந்தரவு!!

"பூமியும் தான் நல்ல பூமி புண்ணியரும் நல்லவரே!
புண்ணியரை பெற்றெடுத்த பெருங்குரங்கே தொந்தரவு!!”

என்று மாமியாரை வசை பாடியே, அவர் மகனை அழைத்து கொண்டு தனிக்குடித்தனம் சென்ற மருமகள்கள் உண்டு. பணியின் காரணமாக வெளிநாடு சென்று விட்ட பிள்ளைகளும் உண்டு. மனம் போனபடி குணங்கள் போகாமல், குணம் மாறி பெற்றோரை பிரிந்து சென்ற பிள்ளைகளும் உண்டு. சொத்தை பிரிப்பதில்லை என்று பெற்றோரும், சொத்தை பிரி என்று பிள்ளைகளும் இருபக்கம் இழுக்க, ஒரு பக்கத்தில் பெற்றோரை பிரித்து விட்ட பிள்ளைகளும் உண்டு.

"தங்க மக்கள் வாசலிலே, தங்க காசு தரையெல்லாம் உருளுது. எங்கட்கு உண்பதற்கு காசு இல்லை” என்று முதுமை காலத்தில் புலம்பும் பெற்றோரும் இருக்கிறார்கள். சொந்த வீட்டை தவிக்க விட்டு சின்ன வீட்டை தேடி சீரழிந்த மகனால், முதுமைக் காலத்தில் பெற்றோர் முனங்கித் தீர்க்கும் நிகழ்வுகளும் உண்டு. இப்படி பல காரணங்களுக்காக பிரிந்து சென்ற பிள்ளைகள் கவனிக்காததால், தனியே தவிக்கும் பெற்றோர் ஏராளம்.

சில இடங்களில் பிள்ளைகள் பெற்றோரை பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் முடிவதில்லை. காரணம், அவர்களின் குடும்பச் சூழல். பிள்ளைகள் கவலை, பணி செய்யும் இடத்தில் பிரச்னை, வருமானம் பற்றாக்குறை என அவர்களின் பிரச்னை வரிசையில் நிற்கின்றன. பெற்றோரின் பிரச்னைகளை கேட்டால் நிச்சயம் பிள்ளைகள் நல்ல தீர்வு சொல்வார்கள். ஆனால், பிள்ளைகளுக்கு பெற்றோரின் பிரச்னையை கேட்கவே நேரமில்லை. அதனால்தான் இன்று முதியவர் இல்லம் பெருகி கொண்டே இருக்கிறது.

முதியவர்களை இல்லத்தில் சேர்த்து விட்ட கையோடு, பிள்ளைகள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், முதியவர்கள் மகிழ்வாக இருக்கின்றார்களா? அது தான் இல்லை. காரணம் சற்று நல்ல நிலையில் இருப்பவர்களை, அதாவது அவர்கள் வேலைகளை அவர்களே செய்து கொள்ளுபவர்கள் அங்கு சென்றால், அங்குள்ள சூழல் அவர்களை பைத்தியமே ஆக்கிவிடும். நம்மை விட ரொம்பவும் நலிவுற்றவர்களை, அங்கு காணும்போது, நமக்கும் இப்படி ஆகிவிடுமோ, என்ற பீதியும் ஒரு வித பயமும் கூட ஏற்பட்டு மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது.

முதுமை, அது எல்லோருக்கும் ஒருநாள் கண்டிப்பாக வரும். ஏன், கடவுள் கூட மனித அவதாரம் எடுத்தால் முதுமையை சந்திக்க வேண்டியது வரும். ஆகவே முதுமையை தொல்லையாக கருதாதீர்கள். கடமைக்காக பெற்றோரை கவனிக்காவிட்டாலும் ஒரு தொண்டாய் நினைத்து செய்யலாமே. நம்மை பெற்றவர்கள் என்ற எண்ணம் கண்டிப்பாக நமக்கு மகிழ்ச்சியை தரும்.

முதியவர்களுக்கு ஒரு செய்தி. நமக்கு பிள்ளைகள் வேண்டும் என்று எண்ணி, மக்களை பெற்று கொண்ட பெற்றோர்களே, உங்களின் பிள்ளைகளிடம் குறை காணாதீர்கள். சொந்தங்களிடமும், சுற்றங்களிடமும், ஆர்ப்பாட்டம் இல்லாமல், அனுசரித்து செல்லுங்கள். அவர்கள் அன்பை பொழிவார்கள். பிறகு என்ன, முதுமைக்கு 'குட்பை' சொல்லுங்கள். மனதினால் என்றும் இளமையாக இருங்கள்.

- ப.சுப்பிரமணியன், வங்கி மேலாளர் (ஓய்வு)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 9:45 pm

தினமலர் பின்னூட்டத்தில்   ரசித்தது புன்னகை

//முதுமை எல்லோருக்கும் வரும் .இறப்பு என்று தான் தெரியவில்லை . கடைசி காலம் வரை உங்கள் சேமிப்பை உங்களிடமே வைத்து கொள்ளுங்கள் . அசையா சொத்துக்களின் பேரில் remortgage லோன் வங்கி உங்கள் செலவை கணக்கு இடுங்கள். உங்கள் காலத்திற்கு பிறகு தான் உங்கள் பிள்ளைகளுக்கு. உங்களை உங்களின் முதுமை காலத்தில் கவனிக்காத பிள்ளைகள் வட்டியும் முதலும் கட்டி சொத்தை அனுபவிக்கட்டும். வீடு வரை மனைவி, காடு வரை பிள்ளை கடைசி வரை (remortgage லோன்) சொத்தின் பாதுகாப்பு.
T N Subramaniyan - trivandrum,இந்தியா//




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 02, 2015 3:21 am

முதுமை தொல்லையா? 103459460
-
தசைகள் தளரலாம், தன்னம்பிக்கை தளரக்கூடாது...!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 10:57 am

ayyasamy ram wrote:முதுமை தொல்லையா? 103459460
-
தசைகள் தளரலாம், தன்னம்பிக்கை தளரக்கூடாது...!
மேற்கோள் செய்த பதிவு: 1118306

ரொம்ப சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக