புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல மனம் வேண்டும்!


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 31, 2015 6:10 pm

நல்ல மனம் வேண்டும்! ZSqDZvivS7SepBOPXNpz+saints


ஓருவன் செய்யும் காரியங்களுக்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு மனமே அடிப்படை. தண்ணீரைப் போல எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் தன்மைப் படைத்தது மனம். நமது எண்ணங்கள் தான் செயல்பாடுகளின் அஸ்திவாரம். நம் மூளையில் தோன்றும் எண்ணங்களின் தொகுப்பைதான் நாம் மனம் என்கிறோம். மனத்தின் கட்டளைப்படியே கண் முதலான ஐம்புலன்களும், கை, கால்களும் தத்தம் கடமைகளைச் செய்கின்றன.

அதாவது மூளை கருவி என்றால் மனம் அதன் இயக்கம் ஆகும். பொறிகளுக்கு தனியே அறிவுமில்லை, ஆற்றலும் இல்லை, பொருளுமில்லை. பொறிகளைப் பொருள்வழி இயக்க வல்லது மனமே. நல்ல நடத்தை என்பது மனதுக்கு அலங்காரம் மட்டுமல்ல, நல்ல மனிதனுக்கு அடையாளம். அன்பையும், பொறுமையையும் போற்றி வந்த மனம் இன்று வெறுப்பையும் கொடுமையையும் கொட்டும் இடமாகி விட்டது.

மனிதனை மனிதானாக்க, மனிதரிடமிருக்கும் மிருகத்தனத்தைப் போக்க, மனிதனை தேவனாக்க, எண்ணத்திலுள்ள இருளைப் போக்க ஒருவனுக்கு மனமே அடியிட்டுக் கொடுக்கிறது. மனிதன் செய்யும் எல்லா காரியங்களுக்கும் அவனது மனமே வித்து அவன் படும் இன்பமும், துன்பமும் அதன் விளைவுகள். நல்ல எண்ணம், நன்மைப் பயக்கும், உள்ளத்தை உயர்த்தும், அமைதி நல்கும். உடம்பை வளர்க்க உணவு, உயிரை வளர்க்க ஆன்றோர்களின் அறிவுரை, உள்ளத்தை உயர்த்த நல்ல எண்ணங்கள் தேவை. எளிமை வேண்டும் சொல்லில் சத்தியம் வேண்டும். செய்கையில் தூய்மை வேண்டும். நீரோட்டம் போல மனித மனம், தேரோட்டம் போல வாழ்க்கை என்பது. மேடு பள்ளம் என்பது வாழ்க்கையின் நியதி.

நச்சுப் பொய்கையிலே யட்சனுடைய வினாக்களுக்கு விடையளித்து கொண்டு வந்த தருமபுத்திரன் சுகம் என்பது என்ன என்ற கேள்விக்கு நல்ல நடத்தையே சுகம் என்றார். நல்ல நடத்தையை நல்குவது நல்ல மனம். கல்மனம் கரைந்து நன்மனம் பெற்றோர் மனதை இறைவன் கோயிலாகக் கொண்டு வீற்றிருப்பான். சுயநலமிகுந்து தீய குணங்களின் உறைவிடமாக மனது இருக்கக் கூடாது. மனதில் தீய எண்ணங்கள் குடி கொண்டால், அது காடாகி விடும், அங்கு விலங்குகள் நடமாடும்.

சிந்தை நலமாக இருந்தால் சொல் நலமாக இருக்கும் சொல் நலமாக இருந்தால் செயல் நலமாக இருக்கும். செயல் நலமாக இருந்தால் மனம் அமைதியாக இருக்கும். நாம் நம்மை அறிந்து வாழ்க்கையில் போராட மனம் உதவுகிறது. மனித இனம் சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தது பகுத்தறிவைக் கொண்டு மிக நுணுக்கமாக ஆராயும் திறனும் கொண்ட.து. பொறுமையும், நிதானமும் கைவரப் பெற்றால் மனிதன் புனிதனாக உயருகிறான். அருளே உருவம் கொண்டவர்களால் சங்கிலி போன்ற வாழ்க்கை முறையின் கண்ணியாக அவர்களின் நன்னடத்தை அமைகிறது.

மனித மனம் விசித்திரமானது அதுவே நரகத்தையும் ஏற்படுத்தும், சொர்க்கத்தையும் படைக்கும் ஆற்றல் வாய்ந்தது. மனதுக்கு அணிகலனாக இருப்பது தூயசிந்தனை. அந்த உள்ளத்தில் நல்ல எண்ணம் எனும் பயிர் விளைந்தால் அது மலர் மணம் பரப்பு பொழிலாகி விடுகிறது. அன்பு நலன், அடுத்தவர் நலம் பெற வேண்டும் என்ற கருணை மனம் வேண்டும்.

மனம் தெளிவாக இருந்தால் தான் புதிய புதிய சிந்தனைகள் தோன்றி வேரூன்ற வழி வகுக்கும். தம் சிந்தனையை பயன்படுத்தி அடுத்தவருக்கு தீமை தராமல் பிறருக்கு பயன்பட வாழ்வதே மனிதனின் கடமை.

அரசர், ஆண்டி, உயர் பதவியில் இருப்பவர், உதிரம் சிந்தி உழைப்பவர் வரை மனதை அது போன போக்கில் போக விடாமல், தீய காரியகளுக்கு போவதைத் தடுத்து நல்ல காரியங்களுக்கு ஈடுபட செய்வது அறிவு. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது முதுமொழி. நாம் செய்யும் தவறுகளை அறியும் ஒரே சாட்சி நம் மனசாட்சி. அதனிடமிருந்து நாம் தப்ப முடியாது. இன்று மனித மனங்கள் காற்றில் பறக்கும் கற்பனை குதிரைகளாகி விட்டன.

ஆடம்பரமாக வாழ்வது தான் வாழ்க்கை என்ற வகையில் மக்கள் மனங்கள் மாறி வருவதால் கொலை, கொள்ளை, வன்முறை அதிகரித்து வருகின்றன. இந்த உலகில், சத்தியம், நீதி, நேர்மை, நியாயம், உண்மை இவைகளுக்கு எல்லாம் தனி இடம் உண்டு. நாம் நம் சுய தேவைகளுக்காக விதிமுறைகளை மீறி மனம் மாறும் போது தான் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மனிதன் உருவத்தில் மனிதனாக இருந்தால் போதாது அவன் உள்ளத்தில் நேர்மை மணம் கமழுமானால் அவன் முழுமைப் பெற்ற மனிதன் ஆகிறான். மனம் உள்ளவன் மனிதன். மனம் ஒரு பூக்கூடை, அதில் நச்சரவம் மறைந்திருக்கலாகாது. மலர் வண்ணத்தால் மணத்தால் பலருக்கு பயனளிக்கிறது அதுபோல மனிதன் மனதாலும், செயலாலும் மற்றவர்களுக்கு நன்மை அளிக்க வேண்டும்.

நன்றி: இராதாகிருஷ்ணன், சென்னை.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 31, 2015 8:06 pm

நல்ல பதிவு அன்பரே. எதற்கும் மனம் ( இருக்க ) வேண்டும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 31, 2015 9:02 pm

அருமையான பகிர்வு செந்தில், நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Feb 01, 2015 4:04 pm

P.S.T.Rajan wrote:நல்ல பதிவு அன்பரே. எதற்கும் மனம் ( இருக்க ) வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1118092

மனம் இல்லையேல் மானுடன் இல்லை, இருக்கும் அந்த மனம், நல்ல மனமாய் இருக்க வேண்டும்.. கருத்துக்கு நன்றி ஐயா



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Feb 01, 2015 4:05 pm

krishnaamma wrote:அருமையான பகிர்வு செந்தில், நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1118110

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 02, 2015 3:19 am

நல்ல மனம் வேண்டும்! 103459460

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Feb 02, 2015 3:56 am

''உடம்பை வளர்க்க உணவு,
உயிரை வளர்க்க ஆன்றோர்களின் அறிவுரை,
உள்ளத்தை உயர்த்த நல்ல எண்ணங்கள்''

அருமையான பதிவு.





நேர்மையே பலம்
நல்ல மனம் வேண்டும்! 5no
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 02, 2015 9:34 am

அகிலன் wrote:''உடம்பை வளர்க்க உணவு,
உயிரை வளர்க்க ஆன்றோர்களின் அறிவுரை,
உள்ளத்தை உயர்த்த நல்ல எண்ணங்கள்''

அருமையான பதிவு.

மேற்கோள் செய்த பதிவு: 1118309

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக