புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
91 Posts - 63%
heezulia
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
1 Post - 1%
viyasan
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
1 Post - 1%
eraeravi
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
283 Posts - 45%
heezulia
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
19 Posts - 3%
prajai
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_m10நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 28, 2015 12:05 am

நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! NiMMTgZaSny5AHFECI0n+kampali5001

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிறிய கிராமம் கலங்கல். தமிழகத்தின் தலை சிறந்த விஞ்ஞானியான ஜி.டி.நாயுடுவை தந்த பெருமைக்குரிய கிராமம்.
ஒரு காலத்தில் செம்மறியாட்டின் ரோமங்களிலிருந்து கம்பளி தயாரிக்கும் தொழில் இங்கு பிரபலம். பல ஊர் மக்களும், மைனர்களும்,செல்வந்தர்களும் இவர்களின் கைவித்தையிலேயே ‘குளிர்காய்ந்துள்ளனர்’ கம்பளி வழி. ஆனால் இன்று அது பழம்பெருமையாகிவிட்டது.

ஊரே செய்தே இத்தொழிலை இப்போது ஊரிலேயே 10 குடும்பங்கள் மட்டுமே செய்து வருகின்றன என்பதுதான் இதன் மறுபக்க சோகம். இன்றும் இத்தொழிலை மேற்கொண்டு வரும் ராயப்பன்-சாவித்திரி குடும்பத்தினரிடம் இது பற்றி பேசினோம்.

“ கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு மேலாக எங்கள் பாட்டன்,பூட்டன் காலத்திலிருந்தே இதுதான் எங்கள் தொழில். இங்கு மொத்தம் 500 குடும்பங்கள் இதையே முழு மூச்சாக செய்து வந்தோம்.ஒவ்வொரு வீட்டிலும் செம்மறி ஆடுகள் சொந்தமாக இருக்கும். அப்போது அவரவர் வசதிக்கேற்ப 10 முதல் 200 ஆடுகள் வரை வைத்திருந்தனர். ஆட்டை இங்கிருந்து திருச்சூர்,மைசூர், பழனி, கோபி, பொள்ளாச்சி என ஊர்களில் வைத்து மேய்ப்பார்கள். ஆட்டிலிருந்து முடி மட்டுமே எங்களுக்கு தேவை. ஆட்டின் கழிவு ஆனது தோட்டங்களுக்கு நல்ல உரமாக பயன்படும். எனவே அதற்கும் அங்கு மதிப்பு இருக்கும்.

கம்பளி தேவைக்காக ஆண்டுக்கொரு முறை ஆட்டின் முடியை வெட்டுவோம். அன்றைய தினம் ஆட்டினை நன்கு தூய்மையாக கழுவி அதன் நான்கு கால்களையும் நாலா புறத்தில் நட்டு வைக்கப்பட்டுள்ள குச்சியில் கட்டி ,மனிதர்களுக்கு முடி வெட்டுவது போன்று கத்தரிக்கோல் வைத்து வெட்டி பயன்படுத்துவோம். கம்பளி தயாரிக்கும் மற்ற ஊர்களில் ஆடுகள் இல்லாதவர்கள் எங்களிடமிருந்து ஆட்டின் முடியை விலைக்கு வாங்கிச் செல்வார்கள்.

...................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 28, 2015 12:06 am

நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! 0VThA54TPCqg4h6JFopf+kampaliright

கம்பளி நெய்தல் ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. அதற்கு நீண்ட பொறுமையும்,உடல் பலமும் வேண்டும். பச்சை முடியை இதற்கென உள்ள இயந்திரத்தில் இட்டு அரைக்க வேண்டும். இந்த ஊருக்கே ஒரே இயந்திரம் மட்டுமே உள்ளது. அதில் அரைத்து பின் வீட்டிற்கு கொண்டு வந்து நூலாக திரிக்க வேண்டும்.திரித்த நூலை நன்கு சேர்த்து கயிறு போல மாற்ற வேண்டும். இதற்கு பாவு வீசுதல் என்று பெயர்.இப்படி பாவு வீசி முடிந்ததும் கஞ்சி போட்டு ஓரிரு நாட்கள் காயவைக்க வேண்டும்.
இப்படி காய்ந்த நூலை சுவற்றின் ஒரு முனையிலும்,நெசவு இயந்திரத்தின் ஒரு முனையிலும் கட்டி நெய்ய வேண்டும்.நெய்தல் என்பது சாதாரணமான ஒன்றல்ல..நெய்யும் போது இரண்டு மார்புகளும் கடுமையாக வலிக்கும். ஒரு முழு கம்பளி தயாரிக்க குறைந்த பட்சம் 16 நாட்களாகும்.நன்கு செய்ய தெரிந்த ஒருவர் செய்யவே 16 நாட்கள். சுமாராக செய்பவர், இலகுவான உடல்வாகு கொண்டவர்கள் நெய்தால் 30 நாட்கள் ஆகும்.

நெய்த கம்பளியை ஊட்டி,வெள்ளியங்காடு, கேரளா, பழனி, பொள்ளாச்சி, கோபி, மைசூர் ஆகிய பகுதிகளில் இருந்து வாங்க வருவர். உள்ளூர் மக்கள் நேரடியாக வீட்டிற்கே வந்து வாங்கி செல்வார்கள்.

இந்த வகை கம்பளிகள் பயன்படுத்திய யாரும் சாதாரண கம்பளிகளை பயன்படுத்த மாட்டார்கள். அவ்வளவு சுகம். ஒரு கம்பளியின் ஆயுள் ஒரு தலைமுறையே தாண்டி வாழும்.தந்தை பயன்படுத்திய கம்பளிகளை தற்போது அவர் ஞாபகமாக பயன்படுத்துவோர் இன்றும் உள்ளனர். நெசவாளியை பொறுத்தவரை ஒரு கம்பளியை நெய்து முடித்தால் ஒரு பிரசவத்தின் இன்பமே ஏற்படும்” என பழைய நினைவுகளில் மூழ்கினர்.
...................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 28, 2015 12:07 am

நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! UfJHgT9USZ6ZoW33ICFd+kampali5003

தொழிலில் நலிவு ஏற்பட்டது ஏன் என்றோம் அவர்களிடம். “ கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பாகவே இந்த தொழில் தனது களையை இழந்தது. காரணம் இங்கு அமைந்த பஞ்சாலைகளே. இந்த தொழிலில் ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு 12 முதல் 15 மணி நேரம் வரை செலவிட வேண்டும். அதிகமான உடலுழைப்பு தேவை. குறைந்தபட்சம் 20 நாட்கள் சேர்த்து செய்யும் ஒரு கம்பளிக்கு கிடைக்கும் லாபமும் மிக குறைவே.

இதனால் ஒரு கம்பளியை 2000 ரூபாய்க்கு விற்றாலும் லாபம் கிடைப்பதில்லை. இங்கு வந்து ஆக்கிரமித்த பஞ்சாலைகள் நாள் சம்பளம் என்று அதிகமான சம்பளம் கொடுப்பதை பார்த்து ஊரில் பலரும் ஆடுகளை விற்றும், தொழிலை நிறுத்தியும் மில் வேலைகளுக்கு செல்லத் துவங்கினர்.அப்படியும் இந்த தொழிலை தொடர்ந்து செய்தவர்கள் வெகு சிலரே. அவர்களும் பல்வேறு கஷ்டங்களால் சிறிது சிறிதாக ஒரு கட்டததில் கைவிட்டனர்.

இதன் மேலுள்ள மதிப்பும், இந்த கலங்கல் கம்பளிக்கு இன்றும் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் ஏமாறக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இப்போதும் நாங்கள் இதனை தொடர்ந்து செய்கிறோம். இதிலுள்ள கஷ்டங்கள் பல. தற்போது நாங்களும் ஆடு வளர்ப்பை கைவிட்டதால் செம்மறி ஆடு வளர்ப்பவர்களிடமே முடிகளை பெற வேண்டியுள்ளது.

இந்த முடியின் தற்போது வரத்தும் குறைந்து விட்டது. காரணம் இந்த செம்மறி ஆடுகள் வைத்திருப்பவர்கள் இதற்காக அதிக செலவை பராமரிப்பிற்காக செலவிட வேண்டியது வரும். எனவே இதை சாதாரண ஆடுகளோடு சேர்த்து விடுவதால் முடிகளற்ற ஆடுகளே உருவாகின்றன. இதனால் முடி வரத்தும், பராமரிப்பு செலவும் குறைகிறது.

............................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 28, 2015 12:08 am

நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! OvGoMmAERsSODFyWtmEn+kampali5002

அனைவரும் சாதாரண வகை கம்பளிகளுக்கு மாறி விட்டனர்.அவை சில மாதங்கள் கூட தாக்கு பிடிக்காது.”என நிறுத்தியவர் உள்ளே சென்று 2 கம்பளிகளை கொண்டு வந்து நமக்கு காட்டினார்.

தற்போது நெய்ததா?என நாம் கேட்க, ஒன்று 25 வருடங்களுக்கு முன் நெய்தது. இன்னொன்று இப்போது நெய்து முடித்தது “என அவர் சொன்னபோது அகல விரிந்தது நம் கண்கள். ஆச்சரியம், இரண்டிற்கும் துளி வேறுபாடு தெரியவில்லை.

“தற்போது எங்கள் வாரிசுகள் கூட இந்த இயந்திரங்களை தொட்டதில்லை. ஒரு வேளை நவீன இயந்திரங்கள் வந்தால் மீண்டும் கலங்கல் கம்பளி எழுச்சி பெறலாம். அரசும் இதற்கு இதற்கு உதவினால் வாய்ப்புண்டு' என முடித்தார்.

பலரை ‘காத்த’ கலங்கல் கம்பளி தன்னை மீட்டெடுக்குமா?

-ஞா.சுதாகர்
படங்கள்: ர.சதானந்த்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 28, 2015 3:56 pm

நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! 3838410834 நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! 103459460


படிக்கும்போதே சோகமா இருக்கு சோகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 29, 2015 4:30 am

நடுங்கும் குளிரில் கலங்கல் கம்பளி! 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக