புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி! by கிருஷ்ணாம்மா !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 26, 2015 8:07 pm

First topic message reminder :

நீங்கள் அனைவரும் கொடுத்த உற்சாகத்தில் இதோ மற்றும் ஒன்று எழுதிவிட்டேன் ....படித்து கருத்து சொல்லுங்கள் Guest புன்னகை

தூங்கிக்கொண்டிருந்த ஊர்மிளாவிற்கு இடுப்பை வலிப்பது போல இருந்தது, மணி பார்த்தால் இரவு 2. சரி விடியும் வரை பொறுக்கலாம் என்று எண்ணியவாறே படுக்கை இல் கிடந்தாள். வீட்டிலிருந்து 5 கிலோமிட்டர் தான் ஹாஸ்பிடல்..............போவது ஒன்றும் சிரமம் இல்லை. பிள்ளைப்பேறுக்காக   இந்தியா போகாமல் கணவனும் மனைவியும் சௌதிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டார்கள்.  

இங்கு உதவிக்கு யாரும் இல்லை என்றாலும் இந்தியாவிலும் இவர்களுக்கு இதே கதி தான். காதலித்து மணம் புரிந்தாலே இப்படித்தானே? என்று எண்ணி பெருமுச்சு ஒன்றை விட்டாள். வலி அதிகரிப்பது போல இருந்தது. தாள முடியாமல் 'அம்மா' என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டாள் போல இருக்கிறது. பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆனந்த், விழித்துக்கொண்டான்.

"என்ன ஆச்சு ஊர்மி?" என்றான்.

"வலிக்குதுங்க, என்றாலும் இந்த நேரத்தில் வேண்டாம், விடியட்டும் பார்க்கலாம்"....என்று சொல்வதற்குள்ளே மீண்டும் 'பளீர்' என்று ஒரு வலி.

" இல்லை இல்லை ..உன் முகம் சரியாக இல்லை, இந்த ஊரில் என்ன பயம்? வா கிளம்பலாம்" என்று சொல்லி, முகம் கழுவி, ஏற்கனவே தயாராய் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு, இவளையும் கைத்தாங்கலாய் பிடித்துக்கொண்டு காரை நோக்கி சென்றான்.  

அவளை பத்திரமாய் உட்காரவைத்து விட்டு, தானும் ஏறி காரை ஸ்டார்ட் செய்தான். அந்த இருளில் வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டு கார் மெயின் ரோடு இல் சீறிப்பாய்ந்தது. ஏசி இலும், வலியால் வியர்த்து இருந்த மனைவி இன் பக்கம் திரும்பி, " கொஞ்சம் பொறுத்துக்கோ, 5 கிலோ மீட்டர் தான்" என்றான்.

அவளும் கஷ்டத்துடன் புன்னகைக்க முயன்றாள். அந்த விடியற்காலை இல் நிறைய வண்டிகள் கடப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டர்கள். இவ்வளவு காலை இல் என்ன இப்படி என்று. 'உம்ரா' வுக்கு போகிறவர்களுடைய வண்டிகள் இந்த ரோடு இல் செல்வது வழக்கம் தான் என்றாலும், 'இத்தனை காலை இல்' என்று கொஞ்சம் நெருடலாகவே எண்ணினான் ஆனந்த்.

ஒரு 2 கிலோமீட்டர் கூட தாண்டி இருக்க மாட்டார்கள், ஒரு பெரிய குலுக்கலுடன் வண்டி  நின்றுவிட்டது. " அடாடா.... என்ன அச்சு? " என்று சொல்லிக்கொண்டே, ஸ்டார்ட் செய்தான், ஸ்டார்ட் ஆகலை...............கொஞ்சம் பதட்டத்துடன், மீண்டும் ஸ்டார்ட் செய்து பார்த்தான், ஸ்டார்ட் ஆகவில்லை.

அதற்குள் ஊர்மிளா கேட்டாள், " என்னங்க ஆச்சு? " என்று...." தெரியலை, கொஞ்சம் இரு பார்க்கிறேன்".என்று சொல்லி , ஹசாட் போட்டுவிட்டு, வண்டியை விட்டு கீழே இறங்கி பானட்டை திறந்து பார்த்தான்....இவனுக்கு ஒன்றும் பிடிபடலை.

இப்போது என்ன செய்வது? ஊர்மிக்கோ வலி அதிகமாகி விட்டது, தாங்க முடியவில்லை அவளால். அப்போது, சாலைகளில் சென்றுகொண்டிருந்த வண்டிகளில் ஒன்று இவர்கள் வண்டியைத்தாண்டி ஒரு 10 அடி சென்று நின்றது. அதிலிருந்து வெள்ளை நிற 'தோப்' அணிந்த சில இளைஞர்கள் இறங்கினார்கள்; இவர்கள் வண்டியை நோக்கி வந்தார்கள்.

அதைப்பார்த்ததும் ஆனந்த் அவர்களை நெருங்கினான், விவரத்தை அவர்களிடம் விளக்கினான், அவர்கள் சொன்ன விஷயத்தை கேட்டதும், ஊர்மிளாவுக்கு தலை சுற்றியது; அவ்வளவுதான் தான், தன்கணவன் மற்றும் தன் குழந்தை எல்லாம் இன்றோடு முடிந்தோம் என்று நினைத்து மனம் நடுங்கினாள்.

அவர்கள் சொன்னது இது தான், "மன்னர் அப்துல்லா மறைந்துவிட்டார்" ...நாங்கள் என்று
அவர்கள் மேலே சொன்னது எதுவுமே கேட்கலை...இந்த செய்தியே காதுகளில் ரீங்காரம் இட்டது, நம் நாட்டில் தலைவர்கள் மறைவின் போது, மற்றும் கலவர நேரங்களில் நடக்கும் அட்டுழியங்களை அவள் பத்திரிகைகளில் படித்தும் டிவி இல் பார்த்தும் இருக்கிறாள் ........அப்படி ஏதாவது நடந்தால் ..........????? காருடன் தன்னையும் கணவரையும் கொளுத்திவிடுவார்களோ ?............குஜராத் சம்பவம் போல கத்தியால் வயிற்றை கிழித்து நடு ரோட்டில் போட்டுவிடுவார்களோ?.............என்றெல்லாம் எண்ணி மிகவும் பயந்து போனாள்.

செய்வது அறியாது திகைத்தாள்.............இறங்கியவர்கள் தங்கள் காரை நோக்கி வருவதையும் பார்த்தாள். கணவரும் அவர்களுடன் வந்தாலும் இவளுக்கு பயத்தில் எதுவுமே மனதில் மூளை இல் உறைக்கவே இல்லை...........வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அருகில் வந்த ஆனந்த், " ஊர்மி, இறங்கு"........என்றான்.

இவள் உடனே " மாட்டேன்....பயமாய் இருக்கு..என்று திக்கியவாறே சொன்னாள்."

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை ............" என்ன ஆச்சு உனக்கு?  நம் வண்டி நின்று விட்டது, இவர்கள் நம்மை ஹாஸ்பிடலில் கொண்டு விடுவதாக சொல்கிறார்கள்...இறங்குமா" என்றான்.

அவளுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ஒருவாறாக சுதாதரித்துக்கொண்டு ஏதோ கேட்க வாயை திறந்தாள், ஆனால் அதற்குள் ஒரு இளைஞன் அவர்கள் காரை அருகில் கொண்டு வந்து விடவே, பேசாமல் மெல்ல இறங்கி அதில் ஏறினாள். அவர்களே இவர்களின் பொருட்களை  கொண்டுவந்து அந்த வண்டி இல் வைத்து தந்தார்கள்.  

ஒருவன் மட்டும் காரை  எடுத்தான், மற்றவர்கள் அங்கேயே நின்றுகொண்டார்கள். வண்டி இல் போகும் போதும் ஆனந்த்தும் அந்த இளைஞனும் ஏதோ பேசிய படியே வந்தார்கள்...ஆனால் இவளால் தன் பிரமிப்பிலிருந்து விடுபட முடியலை. 2 நிமிடத்தில் ஹாஸ்பிடல் வந்து விட்டது. இவர்கள் பத்திரமாய் இறங்கியதும், தான் காரை 'பார்க்' செய்து விட்டு வருவதாக சொல்லி சென்றான் அந்த இளைஞன்.

இறங்கியதும் ஊர்மிளா அவனுக்கு கைகளை கூப்பியபடி நன்றி சொன்னாள், கண்களில் நீர் வழிய சரியாக பேசக் கூட முடியலை அவளால். அதற்கு அந்த இளைஞன், புன்னகைத்த வாறே  
"நோ ப்ரோப்ளேம், இன்ஷா அல்லா, எல்லாம் நல்லபடி நடக்கும், கவலை வேண்டாம்" என்றான் ஆங்கிலத்தில்.

இவள்,"உங்கள் பெயர்? "....என்றதும், Sarfaraz  ஸர்பராஸ் என்றான்.

ஊர்மிளா அட்மிட் ஆகும் வரை காத்திருந்து விடை பெற்றான்.

சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றேடுத்தாள் ஊர்மிளா. நர்ஸ் வந்து குழந்தை இன் பேர் கேட்டதும் ஏதோ சொல்ல வாய் எடுத்த கணவனை தடுத்து Sarfaraz என்றாள். நர்ஸ் சென்றதும், "என்ன ஊர்மி இது? எவ்வளவு நாள் நெட் எல்லாம் தேடி எடுத்த பேரை வெக்காமல்? " என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் ஆனந்த்.

"ஆமாங்க, தன்னுடைய அரசர், மாமன்னர் மரணத்துக்காக வழிபாடு நடத்த மக்கா போகும் அவர்கள், இடை இல் நமக்காக அதைக்கூட விட்டுக்கொடுத்து, உதவினார்கள் என்றல் அந்த மனித நேயத்துக்கு என்ன கைம்மாறு செய்வது என்று தெரியலை எனக்கு, அது தான் இப்படி செய்தேன். நான் ரொம்ப பயந்து போனேன், நாம் அனைவரும் அவ்வளவுதான் ...முடிந்தோம் .. என்று நினைத்தேன். எவ்வளவு பொறுப்பாக நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்தான் அந்த பையன்"...மேலும்  சொன்னாள் " Sarfaraz " என்றால் 'அரசன் ' என்று அர்த்தம், அதனால் தான் அவனுக்குள்ளாகவே அந்த 'காக்கும்' எண்ணம் இருந்திருக்கு .... என்று மனம்  நெகிழ்ந்து சொன்னாள்.

மேலும் தொடர்ந்தாள் " ஒரு காலத்தில் நம் இந்தியாவில், இந்திய மண்ணில் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வெளி நாட்டிலிருந்து வருவார்களாம். அந்த அளவு புனிதம் நிறைந்ததாக இருந்த நம் நாடு, இப்போது எப்படி ஆகிவிட்டது??? இன்று அந்த புனிதம் எங்கே போனது ?........அந்த புனிதம் கேள்விக்குறி ஆனது போல உணர்கிறேன்.....இந்த மண்ணில் பிள்ளை பெற்றதை நினைத்து ரொம்ப பெருமைப்படுகிறேன்" என்றாள்.

இது எதுவுமே தெரியாத Sarfaraz நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். தன்னுடைய நன்றியை தெரிவித்து விட்ட திருப்தி இல் ஊர்மிளாவும் கண் அயர்ந்தாள்.

கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 27, 2015 11:50 am

மாணிக்கம் நடேசன் wrote:சும்மா சொல்லக்கூடாது அக்கா, கற்பனையை நிகழ்காலத்தோடு இணைத்து இப்படி ஒரு கதையை வடித்தெடுத்து எங்களுக்கு தந்துள்ளீர்கள். நன்றியை எப்படி சொல்லுவதென்று தெரியாத இக்காலத்தில் மற்றவர்கள் மண்டையில் நன்றி என்னும் நன்மலர் நிலைக்க வேண்டும் என்பதை உணர்த்திவிட்டீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1117342

மிக்க நன்றி மாமா நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 1571444738 நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ....................உங்களுக்கு கதை பிடித்தது குறித்து எனக்கு ரொம்ப சந்தோஷம்...இன்றும்   ஒரு கதை போட்டிருக்கேன் பாருங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 27, 2015 12:26 pm

சிறப்பான கதை .... கலக்குங்க கிருஷ்ணம்மா ..(வி.பொ .பா )



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 27, 2015 12:31 pm

ayyasamy ram wrote:நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834
-
கதை மாந்தரின் போக்கில் மனிதம் போற்றப்படுகிறது...
-
ஆனால் நம் நாட்டில் இன்னும் புனிதம் போய்விடவில்லை....
உடல் உறுப்புகள் தானத்தில் முன்னிலையில் இருப்பது தமிழ்நாடு
-
சௌதியில் வீட்டுவேலைக்கு சென்ற மகளிரின் கதி இதுதான்
பல்வேறு நிகழ்வுகளில்...
-
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 K6mfpAFySa6CgAzgkZe2+index
மேற்கோள் செய்த பதிவு: 1117310

முற்றிலும் உண்மை . பெரும்பாலும் அவர்கள் பாலியல் கொடுமைக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் .
ஷேக்குகள் வீட்டில் மதுபான கடையே இருக்குமாம் . பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகளும் அதிகம்
என கேள்விப்பட்டுள்ளேன். சிறுவர்களை ஒட்டகத்தில் கட்டி வைத்து ஓட்டப்பந்தயம் ,சித்திரவதை நடக்கும்
என்றும் அதற்காக இந்தியாப் போன்ற நாடுகளில் இருந்து சிறுவர்களை விலைக்கு வாங்கிப் போக ஒரு கும்பல் இருப்பதாக கேள்வி.
உண்மைதானா இவைகள் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Jan 27, 2015 3:10 pm

தவறு எல்லா இடங்களிலும் உள்ளது , அது போல் நல்லதும் எல்லா இடங்களிலும் உள்ளது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jan 27, 2015 7:47 pm

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.


நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 27, 2015 8:27 pm

பாலாஜி wrote:சிறப்பான கதை .... கலக்குங்க கிருஷ்ணம்மா ..(வி.பொ .பா )

நன்றி பாலாஜி புன்னகை.....மற்ற 2ம் படியுங்கோ புன்னகை
..
.
.
.
ஆமாம் .(வி.பொ .பா ) என்று சொன்னீர்களே ......அப்படி எதுவும் காணுமே ? அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 27, 2015 8:31 pm

T.N.Balasubramanian wrote:

முற்றிலும்  உண்மை . பெரும்பாலும் அவர்கள் பாலியல் கொடுமைக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் .
ஷேக்குகள் வீட்டில் மதுபான கடையே இருக்குமாம் . பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகளும் அதிகம்
என கேள்விப்பட்டுள்ளேன். சிறுவர்களை ஒட்டகத்தில் கட்டி வைத்து ஓட்டப்பந்தயம் ,சித்திரவதை நடக்கும்
என்றும் அதற்காக இந்தியாப் போன்ற நாடுகளில் இருந்து சிறுவர்களை விலைக்கு வாங்கிப் போக ஒரு கும்பல் இருப்பதாக கேள்வி.
உண்மைதானா இவைகள் ?

ரமணியன்  

மது இங்கு கண்டிப்பாக கிடையாது ஐயா, நான் வேறு ஒரு பதிவில் கூட சொல்லி இருந்தேன்,

" நாங்கள் முன்பு இருந்த இடம், ரோடிலேயே மது ஆறாக ஓடும் இடம்....இப்போ இருக்கும் இடம் அந்த பேரை கூட வாயில் சொல்லக்கூடாத ஊர்" என்பர்.அந்த அளவுக்கு இன்கு கடுமையான சட்டங்கள் இருக்கு.................

மற்றது பற்றி எனக்கு தெரியலை ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 27, 2015 8:32 pm

mbalasaravanan wrote:தவறு எல்லா இடங்களிலும் உள்ளது , அது போல் நல்லதும் எல்லா இடங்களிலும் உள்ளது

அது சரி.......என் கதைக்கு பதிவு  போடுங்கோ   சரவணன் ஜாலிஜாலிஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 27, 2015 8:33 pm

நவீன் wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.  


நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரொம்ப சரி நவீன் ! ......................நன்றி புன்னகை நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 1571444738 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 1571444738 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 2 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 30, 2015 5:51 pm

கதை படிக்கும் போது கதாபாத்திரத்தோடு சேர்ந்து பயணிப்பது போல இருக்கு அருமைமா....

ஈகரையில் சிறுகதை போட்டியில் ஏன் கலந்து கொள்ளவில்லை...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக