புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_c10 
21 Posts - 66%
heezulia
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_c10 
63 Posts - 64%
heezulia
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_c10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_m10இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய பெண்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும்..!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஈசுவரன்
ஈசுவரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 18/01/2015
http:// jaivabaieswaran.blogspot.com

Postஈசுவரன் Mon Jan 19, 2015 7:26 pm

First topic message reminder :


கடந்த ஒருவருடமாக எனது உறவினர் மகனுக்காக..இரவு... பகல் என்று தீவிரமாக தமிழ் மேட்ரிமோனியல் பதிந்து வைத்து கொங்கு வேளாளர் சமூகத்தில் பதிந்துள்ள பெண்களின் விபரங்களை நான் இணையம் மற்றும் கொங்கு செய்தி மடலில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..இதுவரை எனது சகலன் மகனின் விபரத்தை 2337 முறை பெண்களின் பெற்றோரால் பார்க்கப்பட்டுள்ளது. நான் இதுவரை 753 பெண்களின் விபரங்களை மேட்ரி மோனியலில் பார்த்துள்ளேன். அதில் 57% சதமான பெண்கள் பொறியியல்(பி.ஈ & எம்.ஈ) பட்டதாரிகள், மென்பொருள் வல்லுனர்களாக வேலை பார்க்கின்றனர். 13% சதமான பெண்கள் எம்.பி.ஏ. படித்து வேலையில் இருப்பவர்கள்..முது நிலை பட்டதாரிகள் (எம்.ஏ, எம்.எஸ்.சி)11%, பி.ஏ, பி.காம் போன்றவர்கள் 9%, மருத்துவர்கள் 2% ஆக உள்ளனர். மீதியுள்ள படிப்புகளில் 8 % ஆக உள்ளனர்.

இந்த 753 பெண்களின் பெற்றோர்களுக்கும் மெயில் மூலம் செய்தியனுப்பியுள்ளேன். 80 பெண்களின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியும், 95 பெற்றோர்களிடம் போனிலும் பேசியுள்ளேன். திருப்பூரில் உள்ள சிலரிடம் ஜாதகத்தையும் கொடுத்துள்ளேன். ஒரு வருடம் ஆகியும் இன்னும் பெண் தேடிக்கொண்டுதான் உள்ளோம். இது ஏதோ எனக்குமட்டும் ஏற்படவில்லை. இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாகவே இருக்கிறது.. திருமணத்திற்கு ஆண்-பெண் இருந்தும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானபேர்கள் திருமணம் ஆகாமல் வயதாகிக்கொண்டே இருக்கின்றனர். பெற்றோர்களும் புரோக்கர் மூலமும், உறவினர்கள் மூலமும், இணைய தளம் மூலமும் தேடிக்கொண்டே உள்ளனர். ஏன் இந்த நிலை.. ஏன் அமையவில்லை….. இவர்கள் கேட்டுள்ள விபரப்படி மாப்பிள்ளை இல்லையா..
தங்களுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று பெண்கள் /பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு எப்படிப்பட்ட மணமகன் /மருமகன் வேண்டும் என்று மேட்ரிமோனியலில் எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை மாதிரிக்காக தந்துள்ளேன்..பாருங்கள்.
(1)WE ARE LOOKING FOR A GROOM WITH GOOD FAMILY BACKGROUND
(2)Good character, easy going ,active participant in all works involved.
(3)I expect my life partner to be Broad Minded, Understandable & Caring person with good habits.I want him to
be with me in all the situations of my life and as a motivational factor for me. I will also be the same for him.
(4)gud looking and talented in his job.caring.family loving.
(5)Good guy with clean habbits
(6)We are looking for groom from a decent family who values the relationship. He should be well settled, with clean habits, respect the elders. He should be very caring and take care of her very well. We are just not looking for a son-in-law but another son for our family. She will also resiprocate the same.
(7) gud looking and talented in his job.caring.family loving.We are looking for Australian PR or Citizen.
மேற்கூறியது போன்று பையன்கள் அமைந்தாலும் பெண் வீட்டில் மறுப்பதற்கு என்ன காரணம்..? . முதலில் பெண்ணின் நட்சரத்திற்கு ஏற்றபடி பையனின் நட்சத்திரம் பொருந்தவில்லை என்கிறார்கள்....
இரண்டாவதாக நட்சத்திரம் பொருந்தியிருந்தாலும் உங்கள் பையனுக்கு ராகு/கேது இரண்டிலும் எட்டிலும் இருக்கிறது. எங்க பெண்ணின் ஜாதகம் சுத்த ஜாதகம். அதனால் எங்கள் குடும்ப ஜோதிடர் ராகு-கேது உள்ள ஜாதகத்தை கையில் கூட தொடமாட்டார் என்கிறார்கள். உங்கள் பையனுக்கு இதே போல 1 & 7 மற்றும் 2 & 8 –ல் ராகு-கேது இருக்கிற பெண்னாகப்பாருங்கள் எனக்கூறுகிறார்கள்..
மூன்றாவதாக எங்கள் பெண்ணிற்கு செவ்வாய் தோசம் உள்ளது.. உங்கள் பையனுக்கு ஒத்துவராது நீங்கள் செவ்வாய் தோசம் இல்லாத பெண்னாக பாருங்கள் என்கிறார்கள்.. எப்படியோ இணையத்தில் தேடி.. நட்சத்திரப்பொருத்தம், ராகு-கேது உள்ள பெண் ஜாதகமாகத்தேடி சம்மதமா .. எனக்கேட்டால்... ஹீ..ஹீ.. ராகு/கேது சரியாகத்தான் இருக்கிறார்கள்.. ஆனால் பாருங்கள்.!.உங்கள் பையனுடைய நட்சத்திரம் ராட்சஷ கணத்தை சேர்ந்தது.. எங்கள் பெண்ணின் நட்சத்திரம் தேவகணத்தைச்சேர்ந்தது... ராட்சஷ கணத்தைச்சேர்ந்த பையனுக்கு தேவதை கணம் நட்சத்திரம் பொருந்திவருமா.. நீங்களே சொல்லுங்கள்...என்கிறார்கள்.. ஏனுங்க ராகு/கேது என்ற இரண்டு கிரகங்களே இல்லை... இல்லாத கிரகங்களை வைத்துக்கொண்டு.. இருக்கின்ற
பையன்களுக்கு பெண் இல்லையென்கிறீகளே.. இது நியாயமா.. எனக்கேடால்... எங்கள் ஜோசியர்.. கூறிவிட்டார்..அவர் பேச்சை நாங்கள் தட்ட முடியாது... என்கிறார்கள்.. பையனின் ஜாதகம் ஒரு சில பெண்களின் ஜாதகத்துடன் அனைத்தும் ஒத்துப்போகிறது..ஆனாலும் தரமாட்டோம் என கூறுகிறார்கள்..ஏனுங்க பையன் அழகாக வசீகரமாக இருக்கிறார். மாத வருமானம் ஒரு லகரத்திற்கு பக்கமாக வருகிறது.. நல்ல குடும்பம், அருமையான மாமனார், மாமியார், கொளுந்தனார், வசதியான வீடு..பின் ஏன் இந்தப்பையன் வேண்டாம் எனக்கேட்டால்.... இதப்பாருங்க உங்க பையன் தமிழ் நாட்டில் படித்துவிட்டு, டெல்லிக்கருகில் லார்சன் & டூப்ரோவில் பொறியாளராக இருக்கிறார்.. எங்களுக்கு கோவைப்பகுதியில் இருக்கும் மாப்பிள்ளை தேவை.. இல்லாவிட்டால்... தயக்கத்துடன் .. என் மகளுக்கு ஆஸ்திரேலியா/அமெரிக்கா/கனடா/இங்கிலாந்து போன்ற நாடுகளை சுற்றிப்பார்க்க ஆசைப்படுகிறாள்...மாப்பிள்ளை இந்த நாடுகளில் வேலை செய்பவராகத்தேடுகிறோம்.. என்கிறார்கள்.
சென்னையில் இருந்து ஒரு பெற்றோர், தங்கள் மகளின் ஜாதகம் சுத்த ஜாதகமாக இருந்தும், தங்கள் மகளை திருமணம் செய்திட விருப்பப்பட்டனர். ஆனால் பையனின் அப்பா, அம்மா இருவரும் வேண்டாம் என்கின்றனர்.. அட.. என்னங்க.. எத்தனையோ பெற்றோர்கள் வட நாட்டிற்கு தங்கள் மகளைத்தர மறுக்கும் போது, இவர்கள் பையன் மற்றும் வேலை பிடித்துப்போய்.. தர முன்வரும் போது ஏன் வேண்டாம் என்கிறீர்கள் எனக்கேட்டேன்..அதற்கு.. சம்பந்தி வீடு பக்கமாக இருக்கவேண்டும்..அதாவது திருப்பூர், பல்லடம்,அவினாசி, கோவை என இருக்க வேண்டுமாம்.. அப்போதுதான் ஒரு நல்லது பொல்லாததற்கு போகமுடியும் என்றார்கள்.. எப்படியோ கோவையில் ஒரேயொரு பெண்ணை வைத்திருப்பவர் தன் மகள் ஜாதகத்தில் ராகு-கேது இல்லாதபோதும், சம்மதம் என்றார்.. பையனின் அப்பா.. தனது குடும்ப ஜோதிடரிடம் சென்று

பார்த்து விட்டு வேண்டாம் என்றார், ஏன் என்றேன்.. அது.. பெண்ணின் ராசிக்கட்டத்தில் சந்திரனும், சூரியனும் ஒரே கட்டத்தில் இருக்கிறதால் பின்னால் ஏதாவது தொந்தரவு வரும் என்கிறார்..இந்த கணணி, மொபைல் போன் யுகத்திலும் இன்னும் நமது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள உள்ளூர் சம்பந்தி, ஜாதகத்தில் பின்னால் நடக்கலாம், அது சொத்தை, இது சொத்தையென்று மறுதளிப்பது என்பது பெண் வீட்டிலும், சரி.. மாப்பிள்ளை வீட்டிலும் தொடர்வது திருமணங்கள் தாமதமாவதற்கு மேலும் ஒரு காரணமாக அமைகிறது..
. ஒரு சில பெற்றோர்கள் பொன் முட்டையிடும் வாத்தை உடனடியாக அனுப்ப மனமில்லாமல், வங்கியில் வாங்கிய கல்விக்கடனைக்கட்டவும், சொந்த வீடு, காரு என வாங்கிட ஆசைப்படுவதால்.. வேண்டுமென்றே பெண்ணின் திருமணத்தை தள்ளிப்போடவும் செய்கிறார்கள்.. இப்படி எத்தனை ஆண்டுகள்..தள்ளிப்போடுவார்களோ தெரியவில்லை.. கொங்கு நண்பர்கள் செய்தி
மடலிலும், கொங்கு மேட்ரிமேனியலிலும் சென்று பார்த்தால் நூற்றுக்கு 70 % சதமான பெண்களின் வயது 24-ல் இருந்து 30 வரை நீடிக்கிறது...முப்பது வயதுக்கு மேல் திருமணம் செய்து.. எப்பொழுது பேரன்/பேத்தியெடுத்து அப்பா அம்மாக்கல் கொஞ்சிமகிழ்வது...பெண்ணைப்பெற்றவர்கள் சிந்திக்கவேண்டாமா..? ஒரு பெண்ணிற்கு 24 வயதை தாண்டிவிட்டாலே.. 24 ஆ..ஆ..ஆ … என இழுக்கிறார்கள்..25 ஐ தாண்டிவிட்டால் முதிர்கன்னியாகிவிடுகிறார்கள்.
பையன்கள்..25 . வயதான பெண்ணா.. என யோசிக்கிறார்கள்..அதே போல பையன்களுக்கு 29-ஐ தாண்டிவிட்டாலே.. வயதான மாப்பிள்ளை என்ற பெயர் வந்துவிடுகிறது... பெண்ணின் திருமண வயது 18 என்று அரசு சொன்னாலும் உண்மையென்னவோ...27, 28-ஐ தாண்டுகிறது....திருமண வயதில் பெண்ணை வைத்திருப்பவர்களே... சிந்தியுங்கள்... ஜோசியகாரர்கள் தங்கள் வாழ்விற்காக ஒவ்வொரு முறையும் நீங்கள் கொண்டுசெல்லும் ஒரு
ஜாதகத்தை கணிக்க.. ரூ.100 முதல் ரூ1000-ம் வரை கட்டணம் ஆளுக்கு தகுந்தாற்போல வாங்குகிறார்கள்.. நீங்கள் கொண்டு செல்லும் ஜாதகம் நடசத்திரப்பொருத்தம் இருந்தாலும்...... வானத்தில் உள்ள நட்சத்திரங்கள், ராசிகள்.. பெயரால் இந்த ஜாதகம் சரியில்லை..ராகு /கேது, செவ்வாய் .. பரிகார செவ்வாய் எனக்கூறி அனுப்பினால்தானே.. நீங்கள் மறுபடி, மறுபடி வருவீர்கள்... ஒவ்வொரு முறையும் பணம் கறக்க முடியும்.. உங்களை மறுபடி மறுபடி வரவழைக்க புதிது புதிதாக ஏதாவது ஒன்றை கூறுவது ஜோசியகாரர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்க.. 27 நட்சத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு.. தங்கள் பிழைப்பை ஓட்டுகிறார்கள்.. ஆயில்ய நட்சத்திரம் உள்ள பெண்.. மாமியாருக்கு ஆகாது..குறையுள்ள வீட்டில் பெண்ணைத்தரவேண்டும்..மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது..ஆயில்ய நட்சத்திரம் பெண்ணைக்கட்டினால்.. மாமியாருக்கு ஏதாவது ஆகிவிடும், மூலம் நட்சத்திர பெண்ணைக்கட்டினால்..
குடும்பம் நிர்மூலமாகிவிடும்..கேட்டை நட்சத்திரம்பெண் இருந்தால் மாப்பிள்ளையின் அண்ணனுக்கு ஆகாது. விசாக நட்சத்திர பெண்ணைக்கட்டினால் தம்பிக்கு ஆகாது..இப்படி ... புதிது புதிதாக கதையளக்குகிறார்கள்.... மொத்த பொருத்தங்கள் முதலில் 13என்றார்கள்.. தற்போது பத்து( தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீ தீர்த்தம்ம் யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜு, வேதை) என்கிறார்கள்..இதில் முக்கியமாக ஐந்து பொருத்தம்( தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு) இருந்தாலே.. திருமணம் செய்யலாம்.அதிலும் 9 பொருத்தம் இருந்தும், இந்த ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்று மிரட்டி பயமுறுத்தி வைத்துள்ளார்கள்... இருந்தாலும் மக்கள் குறைந்தது ஏழு அல்லது எட்டாவது வேண்டும்(தனியார் பள்ளிகளில் 400 மதிப்பெண்ணிற்கு மேல் இருப்பவர்களுக்குதான் மதிப்பு) என்ற மன நிலையில் இருக்கிறார்கள். மகேந்திரப்பொருத்தம் இல்லையென்றால குழந்தை பாக்கியம் இல்லை என்கிறார்கள். எனது மகளுக்கும்,
மாப்பிள்ளைக்கும் 8 பொருத்தம் இருந்தும் மகேந்திரப்பொருத்தம் இல்லை. இந்தப்பொருத்தத்தைப்பொய்யாக்கும் வகையில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.. அதை.. விடுங்கள்.. எனது மனைவி ஜாதகத்தில் செவ்வாய் தோசம் இருக்கிறது.. எனக்கு .. இல்லை... எங்களுக்கு திருமணமாகி 35 வருடமாகிறது....ஒரு பிரச்சனையும் இல்லை... . எல்லாம் நமது எண்ணத்தில் இருக்கிறது.. மனசில் இருக்கிறது..அப்படியெல்லாம் எங்களால் இருக்க மனசு இடம் தரவில்லை என நினைக்கிறீர்களா..! நேராக கணணி ஜாதக கடைக்குப்போங்கள்.. பிள்ளைக்கு பெயர் வைக்க, ஜாதகம் கணிக்க, பிறந்த நாள் பயனை அறிய, வாழ் நாள் பயனை அறிய என அனைத்துக்கும் கணணி ஜெராக்சுக்குப்போய் பிரிண்ட எடுக்கிறோம். திருமண ஜாதகப்பொருத்தத்திற்கு மட்டும் ஜோதிடர்களை ஏன் நம்ப வேண்டும்..கணணி ராசி-பலன் கடைக்கு செல்லுங்கள்.. திருமண ஜாதகப்பொருத்தம்( நட்சத்திரம், ராசி) மட்டும் பாருங்கள்.. 10 க்கு ,6, 7& 8 என்று வருகிறதா... தாராளமாக திருமணத்தை முடியுங்கள்..

ஆ.ஈசுவரன்,
8/88, புது நகர், ஜெய்வாபாய் பள்ளி ரோடு,
திருப்பூர்-641601. போன்: 9443024086
E mail: sivakamieswaran@gmail.com



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jan 20, 2015 10:25 pm

பலே.....பதிவு.......

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக