புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
Page 7 of 19 •
Page 7 of 19 • 1 ... 6, 7, 8 ... 13 ... 19
First topic message reminder :
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெரிய அணிகளை அச்சுறுத்திய அயர்லாந்தை இந்தியா அடக்கியது, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி
உலக கோப்பை லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை அதட்டிய இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டோனி தலைமையில் உலக
கோப்பையில் தொடர்ந்து அதிக வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தின் ஹாமில்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் (பி பிரிவு) மோதின. போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் செய்து விளையாடியது. ஸ்டிர்லிங் 42 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார். தொடர்ந்து ஜாய்ஸ் ரெய்னா பந்துவீச்சில் 2 ரன்களில் அவுட் ஆனார். பொறுப்பாகஆடி ரன்சேர்த்த வில்லியம் போர்ட்டர்பீல்டு 67 ரன்களில் மோகித் சர்மா பந்துவீச்சில் அவுட் ஆனார்.
பால்பிர்னியும், ஒபிரையனும் நின்று விளையாடி அயர்லாந்து அணிக்கு ரன்கள் சேர்த்தனர். ஒபிரையன் 75 ரன்களில் முகமது சமி பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கி வீரர்கள் யாரும் சொல்லும்படியாக ரன்எதுவும் அடிக்கவில்லை. 49 ஓவர்கள் வரையில் நின்று விளையாடிய அயர்லாந்து அனைத்து விக்கெட்களையும் இழந்து, 259 ரன்கள் அடித்து இந்தியாவிற்கு 260 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. ஒருநாள் போட்டியில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இதுவரை(இன்றுடன்) மூன்று முறை நேருக்கு நேர் சந்தித்து உள்ளது. இன்று அயர்லாந்து அடித்துள்ள 259 ரன்களே இந்தியாவிற்கு எதிராக அயர்லாந்து அடித்த அதிகரன் ஆகும். அயர்லாந்து உலக கோப்பை போட்டில் முதலில் பேட்டிங் செய்து அடித்த இரண்டாவது அதிகப்பட்ச ரன்னும் இதுவாகும்.
இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து விளையாடியது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டம் மூலம் ரன்சேர்த்தனர். ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடினர். இந்தியா 22-வது ஓவரின்போது விக்கெட் இழப்பின்றி 162 ரன்கள் எடுத்து இருந்தது. ஷிகர் தவான் 77 ரன்னுடனும்(9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்), ரோகித் சர்மா 59 ரன்னுடனும் (3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) களத்தில் நின்றனர். இருவரும் இணைந்து ஆடி இந்தியாவிற்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். ஆனால் நீடிக்கவில்லை.
ரோகித் சர்மா 64 ரன்களில் அவுட் ஆகி நடையை கட்டினார். இதனையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் கோலி தவானுடன் கைகோர்த்து விளையாடினார். தவான் அருமையான சதம் அடித்தார். இந்தியா வலிமையான நிலையை அடைந்தது. சதம் அடித்த வேகத்தில் தவான் அவுட் ஆகி வெளியேறினார். 100 ரன்கள் (85b 11x4 5x6)அடித்திருந்த வேளையில் தோம்சான் பந்துவீச்சில், தவான் அவுட் ஆனார். இதனையடுத்து ரெகானே விராட் கோலியுடன் கைகோர்த்து உள்ளார்.
இருவரும் சிறப்பாக விளையாடினார். இந்தியா 36.5 ஓவர்கள் இரண்டு விக்கெட்கள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்து, அயர்லாந்து அணியின் இலக்கை தகர்த்தது. வில்லியம் போர்ட்டர்பீல்டு தலையிலான அயர்லாந்து அணி டெஸ்ட் அந்தஸ்து பெறாத குட்டி அணியாக இருந்தாலும், பெரிய அணிகளை அச்சுறுத்தும் திறன் கொண்டதாகவே விளங்கி வந்தது. ஆனால் இந்தியாவிடம் முடியவில்லை. இந்தியாவின் அதட்டலில் பணிந்தது. இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதியில் விராட் கோலி 44 ரன்களுடனும், ரெகானா 33 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
அயர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் ஷிகர் தவான் - ரோகித் சர்மா இணை புதிய சாதனையை படைத்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்த இந்திய இணை என்ற பெருமையை தவான் - ரோகித் சர்மா இணை தட்டி சென்றது. தொடர்ந்து 5-வது வெற்றியை இந்திய அணி சுவைத்து உள்ளது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, டோனி தலைமையில் உலக கோப்பையில் தொடர்ந்து அதிக வெற்றி பெற்ற இந்திய அணி என்ற பெருமையை பெற்றது. 2011-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, அது முதல் இதுவரை (வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டம்) உலக கோப்பை போட்டியில் 8 ஆட்டங்களில் வெற்றி கண்டது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று பெருமையை அடைந்துள்ளது. 2003-ம் ஆண்டு உலக கோப்பையில் கங்குலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 8 வெற்றிகள் பெற்றிருந்தது. தற்போது டோனி தலைமையிலான அணி மொத்தம் 9 வெற்றிகளை பெற்றுள்ளது.
உலக கோப்பை லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை அதட்டிய இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டோனி தலைமையில் உலக
கோப்பையில் தொடர்ந்து அதிக வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தின் ஹாமில்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் (பி பிரிவு) மோதின. போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் செய்து விளையாடியது. ஸ்டிர்லிங் 42 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார். தொடர்ந்து ஜாய்ஸ் ரெய்னா பந்துவீச்சில் 2 ரன்களில் அவுட் ஆனார். பொறுப்பாகஆடி ரன்சேர்த்த வில்லியம் போர்ட்டர்பீல்டு 67 ரன்களில் மோகித் சர்மா பந்துவீச்சில் அவுட் ஆனார்.
பால்பிர்னியும், ஒபிரையனும் நின்று விளையாடி அயர்லாந்து அணிக்கு ரன்கள் சேர்த்தனர். ஒபிரையன் 75 ரன்களில் முகமது சமி பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கி வீரர்கள் யாரும் சொல்லும்படியாக ரன்எதுவும் அடிக்கவில்லை. 49 ஓவர்கள் வரையில் நின்று விளையாடிய அயர்லாந்து அனைத்து விக்கெட்களையும் இழந்து, 259 ரன்கள் அடித்து இந்தியாவிற்கு 260 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. ஒருநாள் போட்டியில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இதுவரை(இன்றுடன்) மூன்று முறை நேருக்கு நேர் சந்தித்து உள்ளது. இன்று அயர்லாந்து அடித்துள்ள 259 ரன்களே இந்தியாவிற்கு எதிராக அயர்லாந்து அடித்த அதிகரன் ஆகும். அயர்லாந்து உலக கோப்பை போட்டில் முதலில் பேட்டிங் செய்து அடித்த இரண்டாவது அதிகப்பட்ச ரன்னும் இதுவாகும்.
இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து விளையாடியது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டம் மூலம் ரன்சேர்த்தனர். ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடினர். இந்தியா 22-வது ஓவரின்போது விக்கெட் இழப்பின்றி 162 ரன்கள் எடுத்து இருந்தது. ஷிகர் தவான் 77 ரன்னுடனும்(9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்), ரோகித் சர்மா 59 ரன்னுடனும் (3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) களத்தில் நின்றனர். இருவரும் இணைந்து ஆடி இந்தியாவிற்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். ஆனால் நீடிக்கவில்லை.
ரோகித் சர்மா 64 ரன்களில் அவுட் ஆகி நடையை கட்டினார். இதனையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் கோலி தவானுடன் கைகோர்த்து விளையாடினார். தவான் அருமையான சதம் அடித்தார். இந்தியா வலிமையான நிலையை அடைந்தது. சதம் அடித்த வேகத்தில் தவான் அவுட் ஆகி வெளியேறினார். 100 ரன்கள் (85b 11x4 5x6)அடித்திருந்த வேளையில் தோம்சான் பந்துவீச்சில், தவான் அவுட் ஆனார். இதனையடுத்து ரெகானே விராட் கோலியுடன் கைகோர்த்து உள்ளார்.
இருவரும் சிறப்பாக விளையாடினார். இந்தியா 36.5 ஓவர்கள் இரண்டு விக்கெட்கள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்து, அயர்லாந்து அணியின் இலக்கை தகர்த்தது. வில்லியம் போர்ட்டர்பீல்டு தலையிலான அயர்லாந்து அணி டெஸ்ட் அந்தஸ்து பெறாத குட்டி அணியாக இருந்தாலும், பெரிய அணிகளை அச்சுறுத்தும் திறன் கொண்டதாகவே விளங்கி வந்தது. ஆனால் இந்தியாவிடம் முடியவில்லை. இந்தியாவின் அதட்டலில் பணிந்தது. இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதியில் விராட் கோலி 44 ரன்களுடனும், ரெகானா 33 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
அயர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் ஷிகர் தவான் - ரோகித் சர்மா இணை புதிய சாதனையை படைத்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்த இந்திய இணை என்ற பெருமையை தவான் - ரோகித் சர்மா இணை தட்டி சென்றது. தொடர்ந்து 5-வது வெற்றியை இந்திய அணி சுவைத்து உள்ளது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, டோனி தலைமையில் உலக கோப்பையில் தொடர்ந்து அதிக வெற்றி பெற்ற இந்திய அணி என்ற பெருமையை பெற்றது. 2011-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, அது முதல் இதுவரை (வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டம்) உலக கோப்பை போட்டியில் 8 ஆட்டங்களில் வெற்றி கண்டது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று பெருமையை அடைந்துள்ளது. 2003-ம் ஆண்டு உலக கோப்பையில் கங்குலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 8 வெற்றிகள் பெற்றிருந்தது. தற்போது டோனி தலைமையிலான அணி மொத்தம் 9 வெற்றிகளை பெற்றுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சங்ககரா சரித்திர சாதனை! *இலங்கை அசத்தல் வெற்றி
ஹோபர்ட்: உலக கோப்பை தொடரில் சங்ககரா சதங்களாக விளாசுகிறார். நேற்று 124 ரன்கள் எடுத்த இவர், ஒருநாள் அரங்கில் தொடர்ந்து நான்கு சதமடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவரது அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, இலங்கை அணி, அயர்லாந்தை 148 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நேற்று நடந்த உலக கோப்பை ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், இலங்கை, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் மாத்யூஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
தில்ஷன் சதம்:
இலங்கை அணிக்கு திரிமான்னே (4) ஏமாற்றினார். பின் இணைந்த தில்ஷன், சங்ககரா ஜோடி, துவக்கத்தில் நிதானமாக விளையாடியது. பின் எழுச்சி கண்ட இவர்கள், ஸ்காட்லாந்து பந்துவீச்சை பதம்பார்த்தனர். ஜோஸ் டேவி வீசிய 25வது ஓவரில் அதிரடி காட்டிய தில்ஷன், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 16 ரன்கள் எடுத்தார். இவர், 22வது சதத்தை பதிவு செய்தார்.
சங்ககரா 4வது சதம்:
மறுமுனையில் அசத்திய சங்ககரா, தொடர்ச்சியாக 4வது சதமடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்த போது தில்ஷன் (104) அவுட்டானார். அபார ஆட்டத்தை தொடர்ந்த சங்ககரா, ஈவன்ஸ் வீசிய 36வது ஓவரில், 4 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 24 ரன்கள் எடுத்தார். இவர், 95 பந்தில் 124 ரன்கள் (4 சிக்சர், 13 பவுண்டரி) எடுத்து வெளியேறினார்.
மாத்யூஸ் அதிரடி:
அடுத்து வந்த மகிளா ஜெயவர்தனா (2), குசால் பெரேரா (24) சோபிக்கவில்லை. கேப்டன் மாத்யூஸ், மாட் மக்கானின் ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்கர் அடித்து, 20 பந்தில் அதிவேக அரைசதமடித்தார். இவர், 21 பந்தில் 51 ரன்கள் எடுத்து ‘பெவிலியன்’ திரும்பினார்.
திசாரா பெரேரா (7), பிரசன்னா (3), மலிங்கா (1) சொற்ப ரன்னில் அவுட்டானார்கள். இலங்கை அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 363 ரன்கள் குவித்தது. நுவன் குலசேகரா (18), சமீரா (12) அவுட்டாகாமல் இருந்தனர்.
மம்சன் ஆறுதல்:
கடின இலக்கை விரட்டிய ‘கத்துக்குட்டி’ ஸ்காட்லாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மலிங்கா ‘வேகத்தில்’ கோட்ஜெர் (0) அவுட்டானார். மெக்லியாடு (11), மாட் மக்கான் (19) ஏமாற்றினர். நான்காவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்த போது மம்சன் (60) வெளியேறினார்.
விக்கெட் மடமட:
குலசேகரா பந்தில் கொலேமென் (70) அவுட்டானார். பெர்ரிங்டன் (29) நிலைக்கவில்லை. ஸ்காட்லாந்து அணி 43.1 ஓவரில் 215 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகன் விருதை சங்ககரா வென்றார்.
3
பொறுப்பாக ஆடிய இலங்கையில் தில்ஷன், உலக கோப்பை அரங்கில் 4வது முறையாக சதமடித்தார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில், அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (4 சதம்), இந்தியாவின் கங்குலி (4), ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் (4), இலங்கையின் மகிளா ஜெயவர்தனா (4) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.
20
அபாரமாக ஆடிய இலங்கை கேப்டன் மாத்யூஸ், 20 பந்தில் அரைசதத்தை எட்டினார். இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், குறைந்த பந்தில் அரைசதமடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலத்துடன் (20 பந்து, எதிர்–கனடா, 2007) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (18 பந்து, எதிர்–இங்கிலாந்து, 2015) உள்ளார். தவிர, இம்முறை அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார் மாத்யூஸ்.
* உலக கோப்பையில் அதிவேக அரைசதமடித்த இலங்கை வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் மாத்யூஸ். இதற்கு முன், இத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சண்டிமால் 22 பந்தில் அரைசதம் கடந்தார்.
14
வேகப்பந்துவீச்சில் அசத்தி வரும் ஸ்காட்லாந்தின் ஜோஷ் டேவி, இதுவரை விளையாடிய 5 போட்டியில் 14 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் இம்முறை அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரண்டு இடங்களில், தலா 13 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்தின் டிரண்ட் பவுல்ட், டிம் சவுத்தி உள்ளனர்.
ஹோபர்ட்: உலக கோப்பை தொடரில் சங்ககரா சதங்களாக விளாசுகிறார். நேற்று 124 ரன்கள் எடுத்த இவர், ஒருநாள் அரங்கில் தொடர்ந்து நான்கு சதமடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவரது அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, இலங்கை அணி, அயர்லாந்தை 148 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நேற்று நடந்த உலக கோப்பை ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், இலங்கை, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் மாத்யூஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
தில்ஷன் சதம்:
இலங்கை அணிக்கு திரிமான்னே (4) ஏமாற்றினார். பின் இணைந்த தில்ஷன், சங்ககரா ஜோடி, துவக்கத்தில் நிதானமாக விளையாடியது. பின் எழுச்சி கண்ட இவர்கள், ஸ்காட்லாந்து பந்துவீச்சை பதம்பார்த்தனர். ஜோஸ் டேவி வீசிய 25வது ஓவரில் அதிரடி காட்டிய தில்ஷன், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 16 ரன்கள் எடுத்தார். இவர், 22வது சதத்தை பதிவு செய்தார்.
சங்ககரா 4வது சதம்:
மறுமுனையில் அசத்திய சங்ககரா, தொடர்ச்சியாக 4வது சதமடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்த போது தில்ஷன் (104) அவுட்டானார். அபார ஆட்டத்தை தொடர்ந்த சங்ககரா, ஈவன்ஸ் வீசிய 36வது ஓவரில், 4 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 24 ரன்கள் எடுத்தார். இவர், 95 பந்தில் 124 ரன்கள் (4 சிக்சர், 13 பவுண்டரி) எடுத்து வெளியேறினார்.
மாத்யூஸ் அதிரடி:
அடுத்து வந்த மகிளா ஜெயவர்தனா (2), குசால் பெரேரா (24) சோபிக்கவில்லை. கேப்டன் மாத்யூஸ், மாட் மக்கானின் ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்கர் அடித்து, 20 பந்தில் அதிவேக அரைசதமடித்தார். இவர், 21 பந்தில் 51 ரன்கள் எடுத்து ‘பெவிலியன்’ திரும்பினார்.
திசாரா பெரேரா (7), பிரசன்னா (3), மலிங்கா (1) சொற்ப ரன்னில் அவுட்டானார்கள். இலங்கை அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 363 ரன்கள் குவித்தது. நுவன் குலசேகரா (18), சமீரா (12) அவுட்டாகாமல் இருந்தனர்.
மம்சன் ஆறுதல்:
கடின இலக்கை விரட்டிய ‘கத்துக்குட்டி’ ஸ்காட்லாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மலிங்கா ‘வேகத்தில்’ கோட்ஜெர் (0) அவுட்டானார். மெக்லியாடு (11), மாட் மக்கான் (19) ஏமாற்றினர். நான்காவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்த போது மம்சன் (60) வெளியேறினார்.
விக்கெட் மடமட:
குலசேகரா பந்தில் கொலேமென் (70) அவுட்டானார். பெர்ரிங்டன் (29) நிலைக்கவில்லை. ஸ்காட்லாந்து அணி 43.1 ஓவரில் 215 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகன் விருதை சங்ககரா வென்றார்.
3
பொறுப்பாக ஆடிய இலங்கையில் தில்ஷன், உலக கோப்பை அரங்கில் 4வது முறையாக சதமடித்தார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில், அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (4 சதம்), இந்தியாவின் கங்குலி (4), ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் (4), இலங்கையின் மகிளா ஜெயவர்தனா (4) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.
20
அபாரமாக ஆடிய இலங்கை கேப்டன் மாத்யூஸ், 20 பந்தில் அரைசதத்தை எட்டினார். இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், குறைந்த பந்தில் அரைசதமடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலத்துடன் (20 பந்து, எதிர்–கனடா, 2007) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (18 பந்து, எதிர்–இங்கிலாந்து, 2015) உள்ளார். தவிர, இம்முறை அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார் மாத்யூஸ்.
* உலக கோப்பையில் அதிவேக அரைசதமடித்த இலங்கை வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் மாத்யூஸ். இதற்கு முன், இத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சண்டிமால் 22 பந்தில் அரைசதம் கடந்தார்.
14
வேகப்பந்துவீச்சில் அசத்தி வரும் ஸ்காட்லாந்தின் ஜோஷ் டேவி, இதுவரை விளையாடிய 5 போட்டியில் 14 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் இம்முறை அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரண்டு இடங்களில், தலா 13 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்தின் டிரண்ட் பவுல்ட், டிம் சவுத்தி உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ட்விட்டரில் இந்தியாவின் பிரபல வீரரான ஷிகர் தவான்: அயர்லாந்து சதம் கொடுத்த எக்ஸ்ட்ரா போனஸ்
உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தவானின் அதிரடி ஆட்டத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சதத்தை அந்தப் போட்டியில் பதிவு செய்த தவானுக்கு அந்தப் போட்டியின் மூலமாக இன்னொரு சிறப்பு பரிசு கிடைத்துள்ளது. சமூக வலைதளமான ட்விட்டர் இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பிரபலாமான வீரராக ஷிகர் தவானை நேற்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று ட்விட்டர் வலைதளம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியா- அயர்லாந்து போட்டியின் போது 25.1 மில்லியன் பேர் ட்வீட்டியதாகவும் அதில் பெரும்பாலான ட்வீட்டுகள் ஷிகர் தவானைப் பாராட்டி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவானுக்கு அடுத்த இடத்தில் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் அடுத்து ரோகித் ஷர்மாவும் இடம்பெற்றுள்ளனர்.
உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தவானின் அதிரடி ஆட்டத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சதத்தை அந்தப் போட்டியில் பதிவு செய்த தவானுக்கு அந்தப் போட்டியின் மூலமாக இன்னொரு சிறப்பு பரிசு கிடைத்துள்ளது. சமூக வலைதளமான ட்விட்டர் இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பிரபலாமான வீரராக ஷிகர் தவானை நேற்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று ட்விட்டர் வலைதளம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியா- அயர்லாந்து போட்டியின் போது 25.1 மில்லியன் பேர் ட்வீட்டியதாகவும் அதில் பெரும்பாலான ட்வீட்டுகள் ஷிகர் தவானைப் பாராட்டி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவானுக்கு அடுத்த இடத்தில் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் அடுத்து ரோகித் ஷர்மாவும் இடம்பெற்றுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாதனை புரியும் வீரர்களுக்கு இணையாக பாராட்டைப்
பெறுபவர்கள்:
-
ஷிக்கார் தவானின் மனைவி பெயர் ஆயிஷா முகர்ஜி.
இவர் ஒரு கிக் பாக்ஸர். தவானைவிட 12 வயது
மூத்தவர்.
ஃபேஸ்புக் தோழியாக அறிமுகமானவருக்கு ஆயிஷாவைப்
பற்றி தெரியத் தெரிய அன்பும் அக்கறையும் அதிகரித்திருக்கிறது.
ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான ஆயிஷா
கணவனைப் பிரிந்து வாழ்வதைப் பற்றியெல்லாம் எந்தத்
தயக்கமுமின்றி தன் காதலைச் சொல்லியுள்ளார் தவான்.
பெற்றோரின் எதிர்ப்பை சமாளித்து 2009லேயே மோதிரம்
மாற்றிக் கொண்டாலும், "நீ கிரிக்கெட்டில் செட்டில் ஆன
பிறகுதான் கல்யாணம்' என்று
ஒரு பாஸிடிவ் டார்கெட்டை தவான் முன் வைத்துள்ளார்
ஆயிஷா.
வெற்றி இலக்கை நோக்கி தவானை வேகமாகச் செலுத்தியது
அந்தக் காதல்தான்.
தன் காதல் மனைவி சாக் ஷி ராவத்துக்கு நீளமாக
முடி வளர்த்தால் பிடிக்காது என்ற காரணத்தினால்,
தனக்கு ரொம்பவும் பிடித்த ஹேர் ஸ்டைலை ஷார்ட்
ஆக்கியவர் தோனி.
சாக் ஷி எது கேட்டாலும் "நோ' சொல்லி பழக்கமில்லை.
அவ்வளவு காதல். கிட்டத்தட்ட ஒரு தமிழ் சினிமாவுக்கான
ட்விஸ்ட்கள் நிறைந்தது தோனி - சாக் ஷி காதல் கதை.
"சாக் ஷி எனக்கு செம லக்கி. அவர் வந்து கேலரியில்
அமர்ந்து மேட்ச் பார்த்தால், அன்று இந்தியா நிச்சயம்
வெற்றி பெறும்.
சாக் ஷி வந்தபிறகு தானே உலக கோப்பையை தட்டினோம்'
என்பது தோனியின் அசைக்க முடியாத சென்டிமென்ட்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் சீரிஸ், உலகக் கோப்பை என தோனி
தன் வீட்டை விட்டுக் கிளம்பி மூன்று மாதங்களுக்கு மேலாகிறது.
பிப்ரவரி 06ம் தேதி அவருக்கு குட்டி தேவதை பிறந்திருக்கிறார்.
இன்னும் தன் மகளின் முகத்தை பார்க்க முடியவில்லை
தோனியால்.
"உங்கள் செல்ல மகளை முதன் முதலில் வந்து பார்க்கும்போது
உலகக் கோப்பையுடன் வாங்க' என்று சொல்லியிருக்கிறாராம்
மனைவி சாக் ஷி.
கூடுதல் உத்வேகத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார்
மிஸ்டர் கூல் கேப்டன்.
காலிறுதியில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டித்தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. இப்போட்டித்தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணி 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அத்துடன் காலிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. மேலும், இலங்கை, ஆஸ்திரேலியா வங்காளதேசம் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அதேபோல், பி பிரிவில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன . இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள பிற அணிகள் எந்த இடத்தை பிடிக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஒரு பிரிவில் முதலிடம் வகிக்கும் அணி மற்றொரு பிரிவில் கடைசி இடம் வகிக்கும் அணியோடு மோத வேண்டும். இந்த அடிப்படையில் தற்போது ஏ பிரிவில் வங்காளதேசம் அணி கடைசி இடம் பிடித்துள்ளது. இதனால் பி பிரிவில் முதலிடம் வகிக்கும் இந்திய அணி தனது காலிறுதி போட்டியில் வங்காளதேச அணியை எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டித்தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. இப்போட்டித்தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணி 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அத்துடன் காலிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. மேலும், இலங்கை, ஆஸ்திரேலியா வங்காளதேசம் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அதேபோல், பி பிரிவில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன . இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள பிற அணிகள் எந்த இடத்தை பிடிக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஒரு பிரிவில் முதலிடம் வகிக்கும் அணி மற்றொரு பிரிவில் கடைசி இடம் வகிக்கும் அணியோடு மோத வேண்டும். இந்த அடிப்படையில் தற்போது ஏ பிரிவில் வங்காளதேசம் அணி கடைசி இடம் பிடித்துள்ளது. இதனால் பி பிரிவில் முதலிடம் வகிக்கும் இந்திய அணி தனது காலிறுதி போட்டியில் வங்காளதேச அணியை எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆப்கானிஸ்தானை எளிதில் வென்றது இங்கிலாந்து
உலகக் கோப்பையின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் திணறியது. இதற்கிடையே அடிக்கடி மழை பெய்தால் ஆட்டத்திற்கு இடையூறு ஏற்பட்டது. 25 ஓவர் முடிந்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் 45 ஓவராக குறைக்கப்பட்டது.
பின்னர் 36.2 ஓவரில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆப்கானிஸ்தான் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது. அப்போது ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியின் ஷபிகுல்லா அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் ஜோர்டான், போபரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
பின்னர் மீண்டும் மழை பெய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 25 ஓவர்களில் 101 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி, 41 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. துவக்க வீரர் ஹேல்ஸ் 37 ரன்களும், இயன் பெல் 52 (நாட் அவுட்) ரன்களும் எடுத்தனர்.
9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஜோர்டானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
உலகக் கோப்பையின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் திணறியது. இதற்கிடையே அடிக்கடி மழை பெய்தால் ஆட்டத்திற்கு இடையூறு ஏற்பட்டது. 25 ஓவர் முடிந்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் 45 ஓவராக குறைக்கப்பட்டது.
பின்னர் 36.2 ஓவரில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆப்கானிஸ்தான் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது. அப்போது ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியின் ஷபிகுல்லா அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் ஜோர்டான், போபரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
பின்னர் மீண்டும் மழை பெய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 25 ஓவர்களில் 101 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி, 41 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. துவக்க வீரர் ஹேல்ஸ் 37 ரன்களும், இயன் பெல் 52 (நாட் அவுட்) ரன்களும் எடுத்தனர்.
9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஜோர்டானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
40 ஆண்டில் கண்டிராத சோகத்துடன் விடைபெற்ற இங்கிலாந்து
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 40 ஆண்டு கால வரலாற்றில், இதுவரை கண்டிராத சோகத்துடன் இலங்கிலாந்து அணி விடைபெற்றது.
எனினும், 38-வது லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இங்கிலாந்து ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றிருக்கிறது.
காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட இங்கிலாந்து, தனது கடைசி லீக் ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
இந்த உலகக் கோப்பையின் லீக் சுற்றில் 6 ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து அணி, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளை மட்டுமே வீழ்த்தியது. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் தோல்வி கண்டது.
40 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி, டெஸ்ட் விளையாடும் அணிகளுக்கு எதிராக ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாததோடு, அடுத்த சுற்றுக்கும் முன்னேறாமல் வெளியேறியிருப்பது இதுவே முதல்முறை என்பது அந்த அணிக்கும், அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகுந்த சோகம் அளிக்கும் அம்சம்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. அந்த அணி 36.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தபோது 3 முறையாக மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அணியின் இன்னிங்ஸ் முடிக்கப்பட்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷபியுல்லா 30 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான், போபாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 25 ஓவர்களில் 101 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி, 18.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இயான் பெல் 52, ஜேம்ஸ் டெய்லர் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக அலெக்ஸ் ஹேல்ஸ் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 40 ஆண்டு கால வரலாற்றில், இதுவரை கண்டிராத சோகத்துடன் இலங்கிலாந்து அணி விடைபெற்றது.
எனினும், 38-வது லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இங்கிலாந்து ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றிருக்கிறது.
காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட இங்கிலாந்து, தனது கடைசி லீக் ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
இந்த உலகக் கோப்பையின் லீக் சுற்றில் 6 ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து அணி, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளை மட்டுமே வீழ்த்தியது. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் தோல்வி கண்டது.
40 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி, டெஸ்ட் விளையாடும் அணிகளுக்கு எதிராக ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாததோடு, அடுத்த சுற்றுக்கும் முன்னேறாமல் வெளியேறியிருப்பது இதுவே முதல்முறை என்பது அந்த அணிக்கும், அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகுந்த சோகம் அளிக்கும் அம்சம்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. அந்த அணி 36.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தபோது 3 முறையாக மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அணியின் இன்னிங்ஸ் முடிக்கப்பட்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷபியுல்லா 30 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான், போபாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 25 ஓவர்களில் 101 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி, 18.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இயான் பெல் 52, ஜேம்ஸ் டெய்லர் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக அலெக்ஸ் ஹேல்ஸ் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டெய்லர் சதத்தால் இந்தியாவிற்கு எதிராக ஜிம்பாப்வே 287 ரன்கள் குவித்தது
உலகக்கோப்பை போட்டியின் 39-வது லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா- ஜிம்பாப்வே ஆக்லாந்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஜிம்பாப்வே வீரர்கள் சிபாபா மற்றும் மசகட்சா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சிபாபா 7 ரன் எடுத்த நிலையில் முகமது சமி பந்திலும், மசகட்சா 2 ரன் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்திலும் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த மயர் 9 ரன் எடுத்த நிலையில் மோகிச் சர்மா பந்தில் அவுட் ஆனார். தொடக்கத்தில் இந்தியாவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. இதனால் ஜிம்பாப்வே வீரர்கள் ரன் அடிக்க திணறினார்கள்.
4-வது விக்கெட்டுக்கு டெய்லருடன் வில்லியம்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையாக இன்று இந்தியா பந்து வீச்சை எதிர்கொண்டது. வில்லியம்ஸ் இரண்டு ரன் எடுத்திருக்கும்போது மோகித் சர்மா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். அதை தோனி பிடிக்க தவறினார். இதன் விளைவாக வில்லியம்ஸ் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதனைத்தொடர்ந்து டெய்லரும் அரை சதம் அடித்தார். அவருடன் எர்வின் ஜோடி சேர்ந்தார். அரை சதம் அடித்த டெய்லரின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் பந்தை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் விரட்டினார். இதனால் ஜிம்பாப்வே ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. டெய்லர் 99 பந்தில் 11 பவுண்டரி, இரண்டு சிக்சருடன் சதம் அடித்தார். அதன்பின் 10 பந்தில் 38 ரன்கள் எடுத்து 138 ரன்னில் அவுட் ஆனார். அவர் மோகித் சர்மா பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்தார்.
டெய்லர் அவுட் ஆகும்போது ஜிம்பாப்வே 41.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த ரசா 15 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 15 பந்தில் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால் ஜிம்பாப்வே 48.5 ஓவரில் 287 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் சமி 9 ஓவர்கள் வீசி 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 9.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
உலகக்கோப்பை போட்டியின் 39-வது லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா- ஜிம்பாப்வே ஆக்லாந்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஜிம்பாப்வே வீரர்கள் சிபாபா மற்றும் மசகட்சா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சிபாபா 7 ரன் எடுத்த நிலையில் முகமது சமி பந்திலும், மசகட்சா 2 ரன் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்திலும் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த மயர் 9 ரன் எடுத்த நிலையில் மோகிச் சர்மா பந்தில் அவுட் ஆனார். தொடக்கத்தில் இந்தியாவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. இதனால் ஜிம்பாப்வே வீரர்கள் ரன் அடிக்க திணறினார்கள்.
4-வது விக்கெட்டுக்கு டெய்லருடன் வில்லியம்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையாக இன்று இந்தியா பந்து வீச்சை எதிர்கொண்டது. வில்லியம்ஸ் இரண்டு ரன் எடுத்திருக்கும்போது மோகித் சர்மா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். அதை தோனி பிடிக்க தவறினார். இதன் விளைவாக வில்லியம்ஸ் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதனைத்தொடர்ந்து டெய்லரும் அரை சதம் அடித்தார். அவருடன் எர்வின் ஜோடி சேர்ந்தார். அரை சதம் அடித்த டெய்லரின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் பந்தை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் விரட்டினார். இதனால் ஜிம்பாப்வே ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. டெய்லர் 99 பந்தில் 11 பவுண்டரி, இரண்டு சிக்சருடன் சதம் அடித்தார். அதன்பின் 10 பந்தில் 38 ரன்கள் எடுத்து 138 ரன்னில் அவுட் ஆனார். அவர் மோகித் சர்மா பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்தார்.
டெய்லர் அவுட் ஆகும்போது ஜிம்பாப்வே 41.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த ரசா 15 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 15 பந்தில் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால் ஜிம்பாப்வே 48.5 ஓவரில் 287 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் சமி 9 ஓவர்கள் வீசி 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 9.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 7 of 19 • 1 ... 6, 7, 8 ... 13 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 19
|
|