புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
Page 5 of 19 •
Page 5 of 19 • 1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19
First topic message reminder :
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகக் கோப்பை: ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி பாகிஸ்தான் 2 ஆவது வெற்றி
இன்றைய உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 129 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து சற்று கடின இலக்கை நோக்கி ஆடியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி. ஆட்டம் தொடங்கிய சற்று நேரத்திலேயே தொடக்க வீரர்கள் அலி மற்றும் பெரெங்கர் ஆட்டமிழந்தனர். பின் வந்த கிருஷ்ண சந்திரன் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின் இணைந்த குர்ரம் கான் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். அன்வர் நிதான ஆட்டத்தை அரங்கேற்றினார்.
மறுமுனையில் குர்ரம் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் அன்வர் தனது அரை சதத்தை கடந்தார். எனினும் பவர்பிளேவில் அன்வர் அவுட்டானார். பின் வந்த முஸ்தபாவும் டக் அவுட்டாகி திரும்பினார். அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்திய ஜாவேத் 40 ரன்களில் ஏமாற்றினார். இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 210 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 129 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்றைய உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 129 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து சற்று கடின இலக்கை நோக்கி ஆடியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி. ஆட்டம் தொடங்கிய சற்று நேரத்திலேயே தொடக்க வீரர்கள் அலி மற்றும் பெரெங்கர் ஆட்டமிழந்தனர். பின் வந்த கிருஷ்ண சந்திரன் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின் இணைந்த குர்ரம் கான் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். அன்வர் நிதான ஆட்டத்தை அரங்கேற்றினார்.
மறுமுனையில் குர்ரம் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் அன்வர் தனது அரை சதத்தை கடந்தார். எனினும் பவர்பிளேவில் அன்வர் அவுட்டானார். பின் வந்த முஸ்தபாவும் டக் அவுட்டாகி திரும்பினார். அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்திய ஜாவேத் 40 ரன்களில் ஏமாற்றினார். இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 210 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 129 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இன்றைய சிறப்பான வெற்றி மூலம் பங்களாதேஷ் அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஆம் தல , அடுத்த போட்டி இங்கிலாந்து & பங்களாதேஷ் இருவருக்கும் வாழ்வா சாவா போட்டி , ஜெயிப்பவர் அடுத்த சுற்றுக்கு போகலாம்.பாலாஜி wrote:இன்றைய சிறப்பான வெற்றி மூலம் பங்களாதேஷ் அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பங்களாதேஷ்க்கு கடைசி போட்டி நியுசிலாந்து உடன் மோதவேண்டும் , நியுசிலாந்து இப்ப இருக்குற super form ஐ பார்க்கும் போது எதிரே எந்த அணி வந்தாலும் துவம்சம் பண்ணிவிடுவார்கள் போல இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1124353ராஜா wrote:ஆம் தல , அடுத்த போட்டி இங்கிலாந்து & பங்களாதேஷ் இருவருக்கும் வாழ்வா சாவா போட்டி , ஜெயிப்பவர் அடுத்த சுற்றுக்கு போகலாம்.பாலாஜி wrote:இன்றைய சிறப்பான வெற்றி மூலம் பங்களாதேஷ் அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பங்களாதேஷ்க்கு கடைசி போட்டி நியுசிலாந்து உடன் மோதவேண்டும் , நியுசிலாந்து இப்ப இருக்குற super form ஐ பார்க்கும் போது எதிரே எந்த அணி வந்தாலும் துவம்சம் பண்ணிவிடுவார்கள் போல இருக்கிறது.
ஆமாம் தல ...இங்கிலாந்து & பங்களாதேஷ் போட்டி ஒரு நாக்அவுட் போட்டி போல ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இந்தியா வெற்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
சிவா அவர்களே!
வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும் !
வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தோனி பொறுப்பான ஆட்டம்: மே.இ.தீவுகளை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா
பெர்த்தில் நடைபெற்ற உலகக்கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் கடைசி வரை போராடிய மே.இ.தீவுகள் அணியை இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரின் முக்கியத்துவம் வாய்ந்த அதிரடி அரைசதம் மூலம் 182 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணி சில சமயம் நல்ல பந்துவீச்சுக்கும், சில சமயம் அனாவசியமான ஷாட் தேர்வுலும் துரத்தலை சிக்கலாக்கிக் கொண்டது. ஆனால் கடைசியில் தோனி, அஸ்வின் நிதானிக்க இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சற்றே போராடி வெற்றி பெற்றது.
40-வது ஓவர் முதல் பந்தை சாமுயெல்ஸ் வீச தேர்ட் மேன் திசையில் தோனி அதை பவுண்டரி அடிக்க இந்தியா 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தோனி 56 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றி தேடித் தந்தார். மறுமுனையில் எந்த விதமான அனாவசிய முயற்சியையும் மேற்கொள்ளாமல், பவுண்டரியே இல்லாமல் 16 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அஸ்வினும், தோனியும் இணைந்து வெற்றிக்கூட்டணியாக 9.4 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தனர்.
இந்த வெற்றி மூலம் இந்திய அணியின் காலிறுதி வாய்ப்பு உறுதியாகியுள்ளது. பி-பிரிவில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 8-வது போட்டியை வென்றுள்ளது. இதற்கு முன்னதாக 2003 உலகக்கோப்பையிலும் இந்தியா தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்றது. அந்தச் சாதனை தற்போது சமன் செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக அயர்லாந்து அணியுடன் மார்ச் 10ஆம் தேதி நியூசிலாந்தின் ஹேமில்டனில் இந்திய அணி மோதுகிறது.
துரத்தலை சரியாகத் திட்டமிடாத இந்திய அணி, ஓரளவுக்கு பிட்சின் தன்மையை புரிந்து கொள்ளாமல் ஆடியது போல் தெரிகிறது. கோலி ஆட்டமிழந்த பிறகு இந்தியாவுக்கு பதட்டம் அதிகரித்தது. மே.இ.தீவுகளும் அப்போது நன்றாக வீசிவந்தனர்.
பெர்த்தில் நடைபெற்ற உலகக்கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் கடைசி வரை போராடிய மே.இ.தீவுகள் அணியை இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரின் முக்கியத்துவம் வாய்ந்த அதிரடி அரைசதம் மூலம் 182 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணி சில சமயம் நல்ல பந்துவீச்சுக்கும், சில சமயம் அனாவசியமான ஷாட் தேர்வுலும் துரத்தலை சிக்கலாக்கிக் கொண்டது. ஆனால் கடைசியில் தோனி, அஸ்வின் நிதானிக்க இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சற்றே போராடி வெற்றி பெற்றது.
40-வது ஓவர் முதல் பந்தை சாமுயெல்ஸ் வீச தேர்ட் மேன் திசையில் தோனி அதை பவுண்டரி அடிக்க இந்தியா 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தோனி 56 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றி தேடித் தந்தார். மறுமுனையில் எந்த விதமான அனாவசிய முயற்சியையும் மேற்கொள்ளாமல், பவுண்டரியே இல்லாமல் 16 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அஸ்வினும், தோனியும் இணைந்து வெற்றிக்கூட்டணியாக 9.4 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தனர்.
இந்த வெற்றி மூலம் இந்திய அணியின் காலிறுதி வாய்ப்பு உறுதியாகியுள்ளது. பி-பிரிவில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 8-வது போட்டியை வென்றுள்ளது. இதற்கு முன்னதாக 2003 உலகக்கோப்பையிலும் இந்தியா தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்றது. அந்தச் சாதனை தற்போது சமன் செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக அயர்லாந்து அணியுடன் மார்ச் 10ஆம் தேதி நியூசிலாந்தின் ஹேமில்டனில் இந்திய அணி மோதுகிறது.
துரத்தலை சரியாகத் திட்டமிடாத இந்திய அணி, ஓரளவுக்கு பிட்சின் தன்மையை புரிந்து கொள்ளாமல் ஆடியது போல் தெரிகிறது. கோலி ஆட்டமிழந்த பிறகு இந்தியாவுக்கு பதட்டம் அதிகரித்தது. மே.இ.தீவுகளும் அப்போது நன்றாக வீசிவந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்தியா பெற்றது 'எச்சரிக்கை' வெற்றி
பெர்த்தில் நடைபெற்ற உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்திய அணி பெற்றது ஓர் எச்சரிக்கை வெற்றியே!
பெர்த்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என்றே ரசிகர்கள் நினைத்திருக்கக் கூடும். அவர்களுக்கு இருக்கும் ஒரே மனத்தடை கிறிஸ் கெயில் என்ற ஓர் அதிரடி வீரர் மட்டுமே.
முதலில் ஒன்றைக் கூறுவது உத்தமம்: ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஆட்டத்துக்குப் பிறகு பவுலர்கள் ஆதிக்கம் செலுத்திய போட்டி இந்திய-மே.இ.தீவுகள் போட்டி. இப்படிப்பட்ட பிட்ச்கள்தான் தேவை. அதாவது ஒரு நல்ல கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க வைப்பதன் மூலமே கிரிக்கெட் ஆட்டத்தை வளர்த்தெடுக்க முடியும்.
ஆனால், இன்று இந்திய அணிக்கு ஒரு நல்ல சவாலான பந்துவீச்சையும், பதற்றத்தையும் நெருக்கடியையும் மே.இ.தீவுகள் ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஒட்டுமொத்த ஆட்டத்திலும் ஒரேயொரு அரைசதம் அதுவும் மே.இ.,தீவுகள் பவுலர் ஜேசன் ஹோல்டர் அடித்தது. இந்திய அணியில் ஒருவரும் அரைசதம் எட்டவில்லை. தோனியே அதிகபட்சமாக 45 ரன்களை எடுத்தார்.
பெர்த் பிட்ச் முன்பு போல் இல்லாவிட்டாலும் உலகில் உள்ள மற்ற பிட்ச்களை விட, இங்கு எப்போதும் பவுன்ஸ் அதிகமாகவே இருக்கும். பிரிஸ்பனும் அப்படிப்பட்ட ஆட்டக்களமே.
டாஸில் வென்ற மே.இ.தீவுகள் அணி முதலில் பேட் செய்தது. இதுவும் ஒரு நல்ல முடிவே. அந்த அணி கெயில், சாமுயெல்ஸை நம்பியே இருந்தது. நடுவில் சிம்மன்ஸ், கடைசியில் டேரன் சமி, ஆந்த்ரே ரசல், ஜேசன் ஹோல்டர் போன்ற அதிரடி வீரர்கள். அந்த அணியின் பலம் இதுதான். பலவீனங்கள் ஏகப்பட்டது உண்டு, அதுவும் இன்று வெளிப்பட்டது.
கிறிஸ் கெய்ல் நினைத்தபடி இந்திய பந்து வீச்சு இல்லை. அவருக்கு ஷாட்கள் சரியாக சிக்காமலேயே இருந்தது. டிவைன் ஸ்மித் மோசமான பார்ம் தொடர்ந்து அவர் ஷமி பந்தில் 6 ரன்களில் வெளியேறினார்.
சாமுயெல்ஸ் களமிறங்கியும் ஒன்றும் சுலபமாகிவிடவில்லை. உமேஷ் யாதவ், ஷமி, நல்ல வேகம் மற்றும் திசை மற்றும் அளவுகளில் துல்லியமாக வீசி ஸ்விங் செய்தனர், அவ்வப்போது பவுன்சர்களையும், ஷாட் பிட்ச் பந்துகளையும் வீசி சோதனை கொடுத்தனர்.
கெயில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி வந்து பார்த்தார் ஆனால் சிக்கவில்லை. இந்த நிலையில் ஷமியின் ஃபுல் லெந்த் பந்தை டிரைவ் ஆட பந்து தேர்ட்மேனில் காற்றில் சென்றது வேகமாகச் சென்றது உமேஷ் யாதவ் டைவ் அடித்துப் பார்த்தார் ஆனால் பிடிக்க முடியவில்லை. முதல் வாய்ப்பு நழுவியது. ஆனால் கெயில் இதில் கொஞ்சம் ஆடிப்போனார்.
இந்நிலையில்தான் அவர் யாதவ்வின் அபார ஷாட் பிட்ச் பந்தை புல் ஆட அது மிட் ஆனுக்கும் முன்னால் விழ மோஹித் ஓடி வந்து முயன்றார் முடியவில்லை. தான் அவுட் ஆகிவிடுவோம் என்ற பதட்டத்தில் சிங்கிள் என்ற ஒன்று இருப்பதாகவே கெயில் நினைக்கவில்லை. சாமுயெல்ஸ் அவரைக் காப்பாற்றவே சிங்கிள் ஓடினார். அதாவது கெயிலை எப்படியாவது ரன்னர் முனைக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஓடினார். ஆனால் கெயில் கவனிக்கவேயில்லை. திடீரென அவர் இந்தப் பக்கம் பார்க்க சாமுயெல்ஸ் தன் பக்கத்தில் இருப்பது கண்டு அதிர்ந்தார். ரன் அவுட்.
இதில் கோபமற்ற அவர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை ஆத்திரத்தில் அடித்தார். ஆனால் அதே போன்ற முயற்சியை எதிர்பார்த்த தோனி சரியாக மிட்விக்கெட்டில் டீப்பில் பீல்டரை நிறுத்த பொறியில் சிக்கினார் கெயில்.
இந்தக் குழப்பத்தில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. இந்திய அணியின் பந்துவீச்சும் மேலும் உத்வேகம் பெற்றது. நல்ல பவுன்ஸ் இருந்தது. பிட்ச் கொஞ்ச சீரற்ற தன்மையுடன் இருந்தது.
கடைசியில் 85/7 என்று மிகவும் மோசமாக போய்விடும் ஆபத்தான நிலையில் இந்திய அணி கோட்டை விட்ட கேட்ச்களினால் ஹோல்டர், டேரன் சமி முதலில் 39 ரன்கள் கூட்டணி அமைக்க, பிறகு ஹோல்டர், டெய்லர் (11) கூட்டணி 51 ரன்களைச் சேர்த்தனர். ஜேசன் ஹோல்டர் தொடர்ச்சியாக தனது 2-வது அரைசதத்தை எட்டினார். ஆனால் அவர் கொஞ்சம் பொறுமை காட்டியிருந்தால் ஸ்கோரை 200 ரன்களுக்கு எடுத்துச் சென்றிருக்கலாம். அவர் கடைசியில் தூக்கிக் கையில் கொடுத்து வெளியேறினார் மேற்கிந்திய தீவுகள் 182 ரன்களுக்கு 45-வது ஓவரில் வீழ்ந்தது.
இந்திய அணி சுமார் 5 கேட்ச்களை விட்டது. இதில் கடைசியில் ஜடேஜா, ரோஹித் சர்மா விட்ட கேட்ச்கள் மிகக்கொடுமையானது. மிக எளிதான கேட்ச்கள் அவை. நல்ல பீல்டிங் அணி என்று இதுவரை கூறிக்கொண்டிருந்தோம், ஆனால் இன்று நெருக்கடியில் பீல்டிங் மீண்டும் சோதனைக்குள்ளானது.
183 சென்டிமென்ட்:
இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 183 ரன்கள், 1983 உலகக்கோப்பையில் இந்தியா எடுத்த ரன் எண்னிக்கை 183. தோனியின் அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோர்183 நாட் அவுட். கங்குலியினுடையதும் 183. இப்படியாக 183 பற்றி நிறைய பேச்சு எழுந்தது. இதைத் தவிர பெர்த் மைதானத்தில் இதற்கு முன் இந்தியா, மே.இ.தீவுகளைச் சந்தித்த போது 126 ரன்கள் என்று இரு அணிகளும் போட்டியை சமன் செய்துள்ளது. இது நடந்தது 1991-92 முத்தரப்பு தொடரில்.
ஆகவே ஆட்டம் டை ஆகும் என்றும் சிலர் கருதினர். மேலும் 1983 உ.கோ. இறுதியில் விவ் ரிச்சர்ட்ஸ் 33 ரன்களில் அவுட் ஆன பிறகு ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. இன்று விராட் கோலி வேறு அதே 33 ரன்களில் அவுட். இருவரும் 3ஆம் நிலை பேட்ஸ்மென்கள். எனவே மே.இ.தீவுகள் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்று ஒரு சென்டிமென்ட்டும் ஓடிக்கொண்டிருந்தது.
இந்திய பேட்டிங் பலவீனத்தை வெளிப்படுத்திய மே.இ.தீவுகள் பந்துவீச்சு:
பவுன்ஸ் பிட்ச்களில் இந்திய அணிக்கு ஷாட் பிட்ச் பந்து வீசினால் இந்திய பேட்ஸ்மென்கள் திணறுவார்கள் என்ற நிலையை என்று இந்திய அணி மாற்றும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
தவன், ரோஹித் சர்மா ஆகியோருக்கு அபாரமான பந்து விழுந்தது. ஆனாலும் கடைசியில் கூடுதல் பவுன்ஸ்தான் வேலையைக் காட்டியது குறிப்பாக தவனுக்கு. ரோஹித் சர்மாவுக்கும் நல்ல பந்துதான் ஆனால் அதே ஷாட் இந்திய பிட்சாக இருந்தால் கவரில் பவுண்டரி, பெர்த் என்பதால்தான் பின்னால் சென்றது.
கோலி அருமையாக ஆடினார். அவர் ஒரு புறம் அனாயசமாக பவுண்டரிகளை அடித்து வந்தார். ஒரு சமயம் ஆஃப் சைடு வீசிய பந்தைக்கூட லெக் திசை இடைவெளியில் பவுண்டரி அடித்தார். கவர் டிரைவ் அவரது பலம். இப்படியாக அவர் 33 ரன்களை எடுத்து பாதுகாப்பாக சென்று கொண்டிருந்த நேரம், ரசல் வீசிய பவுன்சரை ஹூக் செய்து லாங் லெக்கில் கேட்ச் கொடுத்தார்.
இங்கு ஒன்றைப் புரிந்து கொள்வது நலம். பெர்த் மைதானத்தில் பக்கவாட்டு பவுண்டரிகள் நீளம் அதிகம். சரியாக புல்,ஹுக் ஆட முடியாவிட்டால் கேட்ச் போவது இயல்பு. ஆனால் லாங் பவுண்டரியையே தேர்ந்தெடுத்தனர். குறிப்பாக விராட் கோலி, பிறகு ஜடேஜா.
ரஹானே நாட் அவுட்?
ரஹானேவுக்கு நீண்ட நேரம் ஸ்ட்ரைக் கிடைக்காமல் இருந்தது. அவர் அப்போதுதான் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் என்று கொஞ்சம் ஸ்திரமானார். அப்பொது கிமார் ரோச் பந்தை அவர் தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்தார். பந்து நல்ல வேகம், கொஞ்சம் நல்ல அளவில் விழுந்த பந்து. மட்டையின் வெளிவிளிம்பில் பட்டதாக முறையீடு எழ நடுவர் கையை உயர்த்தினார்.
ஆனால் ரஹானே உடனேயே ரிவியூ செய்தார். அவுட்டாக இருந்தால் ரிவியூ செய்ய மாட்டார். ஏனெனில் பேட்ஸ்மென்களுக்குத் தெரியும் நிச்சயம் 3-வது நடுவர் நமக்கு அவுட் கொடுப்பார் என்று. படாததால்தான் அவர் ரிவியூ செய்தார். நிச்சயமற்ற தனமையே இருந்தது. பந்து பேடில் பட்டதா, பேட், பேடில் பட்டதா, மட்டையின் விளிம்பா என்பதெல்லாம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாக்க வேண்டிய 3ஆம் நடுவர் கள நடுவர் தீர்ப்புக்கு செவி சாய்த்தார்.
அதாவது கள நடுவருக்கு சந்தேகமில்லை என்பதை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் பேட்ஸ்மென் ரிவியூ எதற்கு? எப்படியிருந்தாலும் நடுவர் தீர்ப்புதான் ஜெயிக்கும் என்றால் ரிவியூ தேவையில்லையே? இது ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்புதான். ஆனால், பவுலருக்கு சாதகமாக இருப்பதால் நாம் இதனை உணர்வு ரீதியாக ஆதரிக்கலாம்.
ரெய்னா 22 ரன்களில் வெளியே சென்ற பந்தை விரட்டி அவுட் ஆனார். ஜடேஜா தேவையில்லாமல் நீளமான பவுண்டரியைத் தேர்ந்தெடுத்து ஹுக் ஷாட் ஆடினார். பந்து அவருக்கும் மேலே எழும்பும்போது கட்டுப்பாடு எப்படி கிடைக்கும்? ஆனாலும் அவர் ஆடிவிட்டார். வீழ்ந்தார்.
தோனி இது போன்ற சூழ்நிலைகளில் உண்மையில் தாதா. எவ்வள்வோ போட்டிகளை, குறிப்பாக சிறிய இலக்கு போட்டிகளை இந்தியா டாப் வீரர்கள் சொதப்பலாக்கும்போதும் தோனி வென்று கொடுத்திருக்கிறார். இன்றும் அதுதான் நடந்தது.
மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரின் புரியாத கேப்டன்சி:
வேகப்பந்து வீச்சாளர் டெய்லருக்கு 2 ஓவர்கள் மீதமுள்ளன. ஹோல்டருக்கு 3 ஓவர்கள் உள்ளன. ரோச், ரசல் ஆகியோருக்கு தலா 2 ஓவர்கள் மீதமுள்ளன. இந்நிலையில் ஸ்மித், சாமுயெல்ஸ் 8.1 ஓவர்களை வீச வேண்டிய அவசியமென்ன? அந்த 8 ஓவர்களில் 32 ரன்கள் சென்றது. ஒருவேளை... ஒருவேளை முன்னணி பவுலர்களை பயன்படுத்தி, தோனியையோ, அஸ்வினையோ எடுத்திருந்தால் இந்தியாவுக்கு மேலும் சிக்கல் அதிகமாகியிருக்கலாம்.
ஏனோ இதனை அவர் செய்யவில்லை. இது ஒரு புரியாத புதிர்தான், சர்ச்சைக்குரியதும் கூட. கிமார் ரோச்சைக் கொண்டு வந்து ஒரு மோது மோதிப்பார்த்திருக்க வேண்டும், அவரிடம் அந்த இயல்பூக்கம் இல்லை. இது நிச்சயம் ஏமாற்றமளிக்கக் கூடிய விஷயமே.
எது எப்படியிருந்தாலும் இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை மணியை மே.இ.தீவுகள் இன்று ஒலித்துள்ளது. இந்திய அணி எப்போதும் நேர்மறையான பாசிடிவ் அம்சங்களையே ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் பார்க்கும், இன்று முரணாக வெற்றியில் எதிர்மறைக் கூறுகளைக் கண்டு அதனை களைய வேண்டிய நிர்பந்தத்தை மே.இ.தீவுகள் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியை நாக்-அவுட்டில் வெளியேற்ற நிச்சயம் வேகப்பந்து சாதக ஆட்டக்களங்களையே இனி அமைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே காலிறுதிக்கு முன்பாக இந்தியாவுக்கு இன்னும் 2 ஆட்டங்கள் உள்ளன. அதில் மனத்தளர்வு ஏற்படுமாறு ஆடிவிடக்கூடாது என்பதில் கவனம் தேவை.
பெர்த்தில் நடைபெற்ற உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்திய அணி பெற்றது ஓர் எச்சரிக்கை வெற்றியே!
பெர்த்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என்றே ரசிகர்கள் நினைத்திருக்கக் கூடும். அவர்களுக்கு இருக்கும் ஒரே மனத்தடை கிறிஸ் கெயில் என்ற ஓர் அதிரடி வீரர் மட்டுமே.
முதலில் ஒன்றைக் கூறுவது உத்தமம்: ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஆட்டத்துக்குப் பிறகு பவுலர்கள் ஆதிக்கம் செலுத்திய போட்டி இந்திய-மே.இ.தீவுகள் போட்டி. இப்படிப்பட்ட பிட்ச்கள்தான் தேவை. அதாவது ஒரு நல்ல கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க வைப்பதன் மூலமே கிரிக்கெட் ஆட்டத்தை வளர்த்தெடுக்க முடியும்.
ஆனால், இன்று இந்திய அணிக்கு ஒரு நல்ல சவாலான பந்துவீச்சையும், பதற்றத்தையும் நெருக்கடியையும் மே.இ.தீவுகள் ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஒட்டுமொத்த ஆட்டத்திலும் ஒரேயொரு அரைசதம் அதுவும் மே.இ.,தீவுகள் பவுலர் ஜேசன் ஹோல்டர் அடித்தது. இந்திய அணியில் ஒருவரும் அரைசதம் எட்டவில்லை. தோனியே அதிகபட்சமாக 45 ரன்களை எடுத்தார்.
பெர்த் பிட்ச் முன்பு போல் இல்லாவிட்டாலும் உலகில் உள்ள மற்ற பிட்ச்களை விட, இங்கு எப்போதும் பவுன்ஸ் அதிகமாகவே இருக்கும். பிரிஸ்பனும் அப்படிப்பட்ட ஆட்டக்களமே.
டாஸில் வென்ற மே.இ.தீவுகள் அணி முதலில் பேட் செய்தது. இதுவும் ஒரு நல்ல முடிவே. அந்த அணி கெயில், சாமுயெல்ஸை நம்பியே இருந்தது. நடுவில் சிம்மன்ஸ், கடைசியில் டேரன் சமி, ஆந்த்ரே ரசல், ஜேசன் ஹோல்டர் போன்ற அதிரடி வீரர்கள். அந்த அணியின் பலம் இதுதான். பலவீனங்கள் ஏகப்பட்டது உண்டு, அதுவும் இன்று வெளிப்பட்டது.
கிறிஸ் கெய்ல் நினைத்தபடி இந்திய பந்து வீச்சு இல்லை. அவருக்கு ஷாட்கள் சரியாக சிக்காமலேயே இருந்தது. டிவைன் ஸ்மித் மோசமான பார்ம் தொடர்ந்து அவர் ஷமி பந்தில் 6 ரன்களில் வெளியேறினார்.
சாமுயெல்ஸ் களமிறங்கியும் ஒன்றும் சுலபமாகிவிடவில்லை. உமேஷ் யாதவ், ஷமி, நல்ல வேகம் மற்றும் திசை மற்றும் அளவுகளில் துல்லியமாக வீசி ஸ்விங் செய்தனர், அவ்வப்போது பவுன்சர்களையும், ஷாட் பிட்ச் பந்துகளையும் வீசி சோதனை கொடுத்தனர்.
கெயில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி வந்து பார்த்தார் ஆனால் சிக்கவில்லை. இந்த நிலையில் ஷமியின் ஃபுல் லெந்த் பந்தை டிரைவ் ஆட பந்து தேர்ட்மேனில் காற்றில் சென்றது வேகமாகச் சென்றது உமேஷ் யாதவ் டைவ் அடித்துப் பார்த்தார் ஆனால் பிடிக்க முடியவில்லை. முதல் வாய்ப்பு நழுவியது. ஆனால் கெயில் இதில் கொஞ்சம் ஆடிப்போனார்.
இந்நிலையில்தான் அவர் யாதவ்வின் அபார ஷாட் பிட்ச் பந்தை புல் ஆட அது மிட் ஆனுக்கும் முன்னால் விழ மோஹித் ஓடி வந்து முயன்றார் முடியவில்லை. தான் அவுட் ஆகிவிடுவோம் என்ற பதட்டத்தில் சிங்கிள் என்ற ஒன்று இருப்பதாகவே கெயில் நினைக்கவில்லை. சாமுயெல்ஸ் அவரைக் காப்பாற்றவே சிங்கிள் ஓடினார். அதாவது கெயிலை எப்படியாவது ரன்னர் முனைக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஓடினார். ஆனால் கெயில் கவனிக்கவேயில்லை. திடீரென அவர் இந்தப் பக்கம் பார்க்க சாமுயெல்ஸ் தன் பக்கத்தில் இருப்பது கண்டு அதிர்ந்தார். ரன் அவுட்.
இதில் கோபமற்ற அவர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை ஆத்திரத்தில் அடித்தார். ஆனால் அதே போன்ற முயற்சியை எதிர்பார்த்த தோனி சரியாக மிட்விக்கெட்டில் டீப்பில் பீல்டரை நிறுத்த பொறியில் சிக்கினார் கெயில்.
இந்தக் குழப்பத்தில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. இந்திய அணியின் பந்துவீச்சும் மேலும் உத்வேகம் பெற்றது. நல்ல பவுன்ஸ் இருந்தது. பிட்ச் கொஞ்ச சீரற்ற தன்மையுடன் இருந்தது.
கடைசியில் 85/7 என்று மிகவும் மோசமாக போய்விடும் ஆபத்தான நிலையில் இந்திய அணி கோட்டை விட்ட கேட்ச்களினால் ஹோல்டர், டேரன் சமி முதலில் 39 ரன்கள் கூட்டணி அமைக்க, பிறகு ஹோல்டர், டெய்லர் (11) கூட்டணி 51 ரன்களைச் சேர்த்தனர். ஜேசன் ஹோல்டர் தொடர்ச்சியாக தனது 2-வது அரைசதத்தை எட்டினார். ஆனால் அவர் கொஞ்சம் பொறுமை காட்டியிருந்தால் ஸ்கோரை 200 ரன்களுக்கு எடுத்துச் சென்றிருக்கலாம். அவர் கடைசியில் தூக்கிக் கையில் கொடுத்து வெளியேறினார் மேற்கிந்திய தீவுகள் 182 ரன்களுக்கு 45-வது ஓவரில் வீழ்ந்தது.
இந்திய அணி சுமார் 5 கேட்ச்களை விட்டது. இதில் கடைசியில் ஜடேஜா, ரோஹித் சர்மா விட்ட கேட்ச்கள் மிகக்கொடுமையானது. மிக எளிதான கேட்ச்கள் அவை. நல்ல பீல்டிங் அணி என்று இதுவரை கூறிக்கொண்டிருந்தோம், ஆனால் இன்று நெருக்கடியில் பீல்டிங் மீண்டும் சோதனைக்குள்ளானது.
183 சென்டிமென்ட்:
இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 183 ரன்கள், 1983 உலகக்கோப்பையில் இந்தியா எடுத்த ரன் எண்னிக்கை 183. தோனியின் அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோர்183 நாட் அவுட். கங்குலியினுடையதும் 183. இப்படியாக 183 பற்றி நிறைய பேச்சு எழுந்தது. இதைத் தவிர பெர்த் மைதானத்தில் இதற்கு முன் இந்தியா, மே.இ.தீவுகளைச் சந்தித்த போது 126 ரன்கள் என்று இரு அணிகளும் போட்டியை சமன் செய்துள்ளது. இது நடந்தது 1991-92 முத்தரப்பு தொடரில்.
ஆகவே ஆட்டம் டை ஆகும் என்றும் சிலர் கருதினர். மேலும் 1983 உ.கோ. இறுதியில் விவ் ரிச்சர்ட்ஸ் 33 ரன்களில் அவுட் ஆன பிறகு ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. இன்று விராட் கோலி வேறு அதே 33 ரன்களில் அவுட். இருவரும் 3ஆம் நிலை பேட்ஸ்மென்கள். எனவே மே.இ.தீவுகள் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்று ஒரு சென்டிமென்ட்டும் ஓடிக்கொண்டிருந்தது.
இந்திய பேட்டிங் பலவீனத்தை வெளிப்படுத்திய மே.இ.தீவுகள் பந்துவீச்சு:
பவுன்ஸ் பிட்ச்களில் இந்திய அணிக்கு ஷாட் பிட்ச் பந்து வீசினால் இந்திய பேட்ஸ்மென்கள் திணறுவார்கள் என்ற நிலையை என்று இந்திய அணி மாற்றும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
தவன், ரோஹித் சர்மா ஆகியோருக்கு அபாரமான பந்து விழுந்தது. ஆனாலும் கடைசியில் கூடுதல் பவுன்ஸ்தான் வேலையைக் காட்டியது குறிப்பாக தவனுக்கு. ரோஹித் சர்மாவுக்கும் நல்ல பந்துதான் ஆனால் அதே ஷாட் இந்திய பிட்சாக இருந்தால் கவரில் பவுண்டரி, பெர்த் என்பதால்தான் பின்னால் சென்றது.
கோலி அருமையாக ஆடினார். அவர் ஒரு புறம் அனாயசமாக பவுண்டரிகளை அடித்து வந்தார். ஒரு சமயம் ஆஃப் சைடு வீசிய பந்தைக்கூட லெக் திசை இடைவெளியில் பவுண்டரி அடித்தார். கவர் டிரைவ் அவரது பலம். இப்படியாக அவர் 33 ரன்களை எடுத்து பாதுகாப்பாக சென்று கொண்டிருந்த நேரம், ரசல் வீசிய பவுன்சரை ஹூக் செய்து லாங் லெக்கில் கேட்ச் கொடுத்தார்.
இங்கு ஒன்றைப் புரிந்து கொள்வது நலம். பெர்த் மைதானத்தில் பக்கவாட்டு பவுண்டரிகள் நீளம் அதிகம். சரியாக புல்,ஹுக் ஆட முடியாவிட்டால் கேட்ச் போவது இயல்பு. ஆனால் லாங் பவுண்டரியையே தேர்ந்தெடுத்தனர். குறிப்பாக விராட் கோலி, பிறகு ஜடேஜா.
ரஹானே நாட் அவுட்?
ரஹானேவுக்கு நீண்ட நேரம் ஸ்ட்ரைக் கிடைக்காமல் இருந்தது. அவர் அப்போதுதான் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் என்று கொஞ்சம் ஸ்திரமானார். அப்பொது கிமார் ரோச் பந்தை அவர் தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்தார். பந்து நல்ல வேகம், கொஞ்சம் நல்ல அளவில் விழுந்த பந்து. மட்டையின் வெளிவிளிம்பில் பட்டதாக முறையீடு எழ நடுவர் கையை உயர்த்தினார்.
ஆனால் ரஹானே உடனேயே ரிவியூ செய்தார். அவுட்டாக இருந்தால் ரிவியூ செய்ய மாட்டார். ஏனெனில் பேட்ஸ்மென்களுக்குத் தெரியும் நிச்சயம் 3-வது நடுவர் நமக்கு அவுட் கொடுப்பார் என்று. படாததால்தான் அவர் ரிவியூ செய்தார். நிச்சயமற்ற தனமையே இருந்தது. பந்து பேடில் பட்டதா, பேட், பேடில் பட்டதா, மட்டையின் விளிம்பா என்பதெல்லாம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாக்க வேண்டிய 3ஆம் நடுவர் கள நடுவர் தீர்ப்புக்கு செவி சாய்த்தார்.
அதாவது கள நடுவருக்கு சந்தேகமில்லை என்பதை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் பேட்ஸ்மென் ரிவியூ எதற்கு? எப்படியிருந்தாலும் நடுவர் தீர்ப்புதான் ஜெயிக்கும் என்றால் ரிவியூ தேவையில்லையே? இது ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்புதான். ஆனால், பவுலருக்கு சாதகமாக இருப்பதால் நாம் இதனை உணர்வு ரீதியாக ஆதரிக்கலாம்.
ரெய்னா 22 ரன்களில் வெளியே சென்ற பந்தை விரட்டி அவுட் ஆனார். ஜடேஜா தேவையில்லாமல் நீளமான பவுண்டரியைத் தேர்ந்தெடுத்து ஹுக் ஷாட் ஆடினார். பந்து அவருக்கும் மேலே எழும்பும்போது கட்டுப்பாடு எப்படி கிடைக்கும்? ஆனாலும் அவர் ஆடிவிட்டார். வீழ்ந்தார்.
தோனி இது போன்ற சூழ்நிலைகளில் உண்மையில் தாதா. எவ்வள்வோ போட்டிகளை, குறிப்பாக சிறிய இலக்கு போட்டிகளை இந்தியா டாப் வீரர்கள் சொதப்பலாக்கும்போதும் தோனி வென்று கொடுத்திருக்கிறார். இன்றும் அதுதான் நடந்தது.
மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரின் புரியாத கேப்டன்சி:
வேகப்பந்து வீச்சாளர் டெய்லருக்கு 2 ஓவர்கள் மீதமுள்ளன. ஹோல்டருக்கு 3 ஓவர்கள் உள்ளன. ரோச், ரசல் ஆகியோருக்கு தலா 2 ஓவர்கள் மீதமுள்ளன. இந்நிலையில் ஸ்மித், சாமுயெல்ஸ் 8.1 ஓவர்களை வீச வேண்டிய அவசியமென்ன? அந்த 8 ஓவர்களில் 32 ரன்கள் சென்றது. ஒருவேளை... ஒருவேளை முன்னணி பவுலர்களை பயன்படுத்தி, தோனியையோ, அஸ்வினையோ எடுத்திருந்தால் இந்தியாவுக்கு மேலும் சிக்கல் அதிகமாகியிருக்கலாம்.
ஏனோ இதனை அவர் செய்யவில்லை. இது ஒரு புரியாத புதிர்தான், சர்ச்சைக்குரியதும் கூட. கிமார் ரோச்சைக் கொண்டு வந்து ஒரு மோது மோதிப்பார்த்திருக்க வேண்டும், அவரிடம் அந்த இயல்பூக்கம் இல்லை. இது நிச்சயம் ஏமாற்றமளிக்கக் கூடிய விஷயமே.
எது எப்படியிருந்தாலும் இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை மணியை மே.இ.தீவுகள் இன்று ஒலித்துள்ளது. இந்திய அணி எப்போதும் நேர்மறையான பாசிடிவ் அம்சங்களையே ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் பார்க்கும், இன்று முரணாக வெற்றியில் எதிர்மறைக் கூறுகளைக் கண்டு அதனை களைய வேண்டிய நிர்பந்தத்தை மே.இ.தீவுகள் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியை நாக்-அவுட்டில் வெளியேற்ற நிச்சயம் வேகப்பந்து சாதக ஆட்டக்களங்களையே இனி அமைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே காலிறுதிக்கு முன்பாக இந்தியாவுக்கு இன்னும் 2 ஆட்டங்கள் உள்ளன. அதில் மனத்தளர்வு ஏற்படுமாறு ஆடிவிடக்கூடாது என்பதில் கவனம் தேவை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அணிக்காக கால்காப்பு அணியாமல் கீப்பிங் செய்த தோனியின் துணிச்சல்
மே.இ.தீவுகளுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய கேப்டன் தோனி கால்காப்பு அணியாமல் சில பந்துகளை கீப்பிங் செய்து அசத்தினார்.
கிரிக்கெட் ஆட்டத்தில் இது மிகவும் அரிதான காரியமே. காரணம் கால்காப்பு அணியாமல் விக்கெட் கீப்பர்கள் ரிஸ்க் எடுக்கத் துணிய மாட்டார்கள். ஆனால் தோனி இன்று அஸ்வினின் ஒரு ஓவரில் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்தார்.
காரணம் இல்லாமலில்லை, ஏதோ சாகசம் செய்ய அவர் இந்த முடிவை எடுக்கவில்லை. மாறாக ஆட்டத்தின் 14-வது ஓவரில் அஸ்வின் வீசும் போது அவருக்கு நல்ல பவுன்ஸ் இருந்தது. அதனை பயன்படுத்திக் கொள்ள நெருக்கமாக பீல்டர் ஒருவரை நிறுத்த முடிவு செய்தார் தோனி.
அது நடு ஓவர் என்பதால் அந்த நெருக்கமான பீல்டர் கால்காப்பை வரவழைக்க இயலாது. ஓவர் முடிந்தவுடனேயே கால்காப்பை வரவழைக்க முடியும்.
இந்த நிலையில் ரஹானேயை நெருக்கமாக கொண்டு வந்த தோனி, தனது விக்கெட் கீப்பிங் கால்காப்பை கழற்றி ரஹானேயிடம் அளித்தார்.
அஸ்வின் வீசிய 4 பந்துகளை அவர் ஸ்டம்புகளுக்கு அருகில் நின்று கால்காப்பில்லாமல் கீப் செய்து துணிச்சலை வெளிப்படுத்தினார். அதே வேளையில் விக்கெட் எடுக்கும் வாய்ப்பை கால்காப்பு காரணமாக அவர் இழக்க விரும்பவில்லை என்ற அணுகுமுறையையும் வெளிப்படுத்தினார்.
அஸ்வின் ஒரு வேகமான பந்தை வீசி அது தோனியின் கால்காப்பு கவசம் இல்லாத காலைத் தாக்கியிருந்தால்... ஆனால் தோனி அதையெல்லாம் யோசிக்கவில்லை.
கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் செய்யத்துணியாத காரியத்தை தோனி துணிந்து செய்துள்ளார்.
மே.இ.தீவுகளுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய கேப்டன் தோனி கால்காப்பு அணியாமல் சில பந்துகளை கீப்பிங் செய்து அசத்தினார்.
கிரிக்கெட் ஆட்டத்தில் இது மிகவும் அரிதான காரியமே. காரணம் கால்காப்பு அணியாமல் விக்கெட் கீப்பர்கள் ரிஸ்க் எடுக்கத் துணிய மாட்டார்கள். ஆனால் தோனி இன்று அஸ்வினின் ஒரு ஓவரில் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்தார்.
காரணம் இல்லாமலில்லை, ஏதோ சாகசம் செய்ய அவர் இந்த முடிவை எடுக்கவில்லை. மாறாக ஆட்டத்தின் 14-வது ஓவரில் அஸ்வின் வீசும் போது அவருக்கு நல்ல பவுன்ஸ் இருந்தது. அதனை பயன்படுத்திக் கொள்ள நெருக்கமாக பீல்டர் ஒருவரை நிறுத்த முடிவு செய்தார் தோனி.
அது நடு ஓவர் என்பதால் அந்த நெருக்கமான பீல்டர் கால்காப்பை வரவழைக்க இயலாது. ஓவர் முடிந்தவுடனேயே கால்காப்பை வரவழைக்க முடியும்.
இந்த நிலையில் ரஹானேயை நெருக்கமாக கொண்டு வந்த தோனி, தனது விக்கெட் கீப்பிங் கால்காப்பை கழற்றி ரஹானேயிடம் அளித்தார்.
அஸ்வின் வீசிய 4 பந்துகளை அவர் ஸ்டம்புகளுக்கு அருகில் நின்று கால்காப்பில்லாமல் கீப் செய்து துணிச்சலை வெளிப்படுத்தினார். அதே வேளையில் விக்கெட் எடுக்கும் வாய்ப்பை கால்காப்பு காரணமாக அவர் இழக்க விரும்பவில்லை என்ற அணுகுமுறையையும் வெளிப்படுத்தினார்.
அஸ்வின் ஒரு வேகமான பந்தை வீசி அது தோனியின் கால்காப்பு கவசம் இல்லாத காலைத் தாக்கியிருந்தால்... ஆனால் தோனி அதையெல்லாம் யோசிக்கவில்லை.
கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் செய்யத்துணியாத காரியத்தை தோனி துணிந்து செய்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 5 of 19 • 1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 19
|
|