புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_m10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10 
44 Posts - 58%
heezulia
விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_m10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_m10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_m10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10 
3 Posts - 4%
viyasan
விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_m10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_m10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10 
236 Posts - 42%
heezulia
விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_m10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_m10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_m10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_m10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10 
13 Posts - 2%
prajai
விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_m10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_m10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_m10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_m10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10 
7 Posts - 1%
mruthun
விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_m10விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே?


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 09, 2009 3:57 pm

'அம்மா என்பது தமிழ் வார்த்தை அது தான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும் ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை'

[You must be registered and logged in to see this image.]

எந்த மொழியில் குழந்தை பிறப்பினும் முதல் வார்த்தை அம்மா என்றுதான் அழைப்பதாக சொல்கிறார்கள்!
இது எப்படி சாத்தியமானது?

விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே?

....கா ந கல்யாணசுந்தரம்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Nov 09, 2009 4:55 pm

தாங்களின் கேள்விக்கு விளக்கம் தேடி அலைந்த போது கிடைத்தது இங்கு அப்படியே தருகிறேன்..!


அன்பிற்குரிய இணையத்தாருக்கு,

அய்யா, ஆத்தா பற்றித் திருவாட்டி கமலாதேவிக் கேட்கப் பலரும் தங்கள் கருத்தைக் கூறிவந்தார்கள். இங்கே
நாட் கழித்து, என் கருத்தைக் கூறுகிறேன்.

"பெற்றோரைப் பற்றி" என்ற ஒரு அருமையான நூலை தஞ்சைப் பல்கலைக் கழக மொழியறிஞர் ப.அருளி
வெளியிட்டிருக்கிறார். கட்டாயமாகப் படிக்க வேண்டிய ஒரு நூல். அதில் விளக்கமாக இது போன்ற
சொற்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அவருடைய பொத்தகத்தில் உள்ள பல அருமையான கருத்துக்களில் நான்
ஒன்று பட்டாலும், சிலவற்றில் வேறுபடுகிறேன்.

இங்கே என்வழியில் இச்சொற்களையும் அவற்றை ஒட்டியவையும் பற்ற எனக்கே உரிய முறையில் நோக்குகிறேன்.
அதே பொழுது எனக்குமுன் இவை பற்றி ஆய்வு செய்த பாவாணர், அருளி, இளங்குமரன் ஆகியோரின் கருத்துக்கள்
இங்கே இடையூடுவதை நினைவு படுத்தவேண்டும்.

அம்மா என்ற சொல் தான் முதலில் பார்க்க வேண்டிய சொல். இது விலங்குகள், குறிப்பாக ஆ வினம், எழுப்பும்
ஒலியை ஒட்டி எழுந்த ஒப்பொலிச் சொல். ஒப்பொலி என்பது ஒன்றைப் போல் இன்னொன்று அப்படியே ஒலிக்கும்
வகை. இந்த "மா" என்னும் விளி ஒலியே ஆவினத்தைக் குறிப்பதற்கு விதப்பாகி (specific)ப் பின்
விலங்கினத்தையே குறிப்பதற்குப் பொது(generic)வானது. மாந்த வாழ்வில், ஆவின் பங்கு மிகப்
பெரியது. அதைப் பற்றியே நீண்ட மடல் எழுதலாம். (இன்றைக்குக் கொள்கையின் காரணமாய்ப் பழசை மறந்து,
அல்லது மறைத்து 4000, 5000 ஆண்டுகளுக்கு முன்னே ஆவின் ஊனே இந்திய மாந்தன் சாப்பிடாதது போலப்
பம்மாத்துப் பண்ணி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, வரலாற்றுப் பொத்தகங்களை மாற்றி எழுத சட்டம்
பிறப்பித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. பேராயக் கட்சியும் அதற்கு ஆமாம் போட்டுக் கொண்டிருக்கிறது)

மா வென்னும் ஒலியே, ஆவினத்தையும், விலங்குகளையும் குறித்தது போக, நம்மைப் பெற்றவளுக்கும் அமைந்தது.
மாட்டின் கன்று தாயை விளிப்பது இந்த ஒலியால் தானே! உலகத்தின் பல மொழிகளில் இந்த அறதப் பழஞ்
சொல்/ஒலி புழங்குகிறது.

'மா'வைப் பலுக்க வாயை மூடித் திறக்கிறபோது, பலருக்கும் அ என்ற உயிர் முதலில் சேர்ந்தார்ப்போல்
எழுவது இயற்கையே. இப்படி எழுந்த சொல் தான் "அம்மா".

மாந்தன் நாகரிகம் அடைவதற்கு முன்னால், விலங்காண்டி நிலையில், தாயே குடும்பத் தலைவி. அந்தக்
குமுகாயத்தில் யார் தந்தை என்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால், தாய் என்ற தலைவி தெரிந்தாள்.
இந்தக் காலத்தில் குடும்ப உறவுகள் ஒழுங்கு ஆகி, இந்த உறவு ஏற்றுக் கொள்ளக் கூடியது, இது தகாதது, என்று
கட்டுப் படுத்தப் பட்ட காரணத்தால், இப்படித் தாயை மட்டுமே அடையாளம் காட்டித் தந்தை யாரென்று தெரியாத
தாய் வழிக் குமுகாயம் என்பது நமக்கு வியப்பாகவும், ஒருவகையில் பொருந்தாததுபோலவும்
காட்சியளிக்கும். ஆனால் மாந்தவியலார் தங்கள் ஆய்வின் மூலம் இதை உறுதி செய்திருக்கிறார்கள். இந்த
வழக்கத்தின் மிச்ச சொச்சங்கள், மாற்றங்கள் தான் கேரளத்திலும், குமரி மாவட்டத்திலும் உள்ள மருமக்கள்
வழித் தாயம். (தாய் தான் அந்தக் கூட்டுக் குடும்பத்தை நிருவகிக்கிறவள்.) தமிழ் நாட்டில் பல
இடங்களிலும், சில சடங்குகளில் தந்தைக்கு முதலிடம் கொடுக்காது, தாயின் வழியான மாமனுக்கு முதலிடம்
கொடுக்கும் வழக்கம் கூட இந்தப் பழைய தாய்வழிக் குமுகாயத்தின் எச்சம் தான். இராகுல சங்கிருத்தியாயனின்
"வால்கா முதல் கங்கை வரை" படித்தவர்களுக்கு நான் தாய் வழிக் குமுகாயம் பற்றிச் சொல்ல வருவது புரியும்.
(இது போல "பஃறுளி முதல் கங்கை வரை" என்று எழுதத்தான் ஆய்வும் இல்லை; ஆளும் இல்லை. என்ன செய்வது?
நம் நிலை அப்படி :-))

மாந்தனுக்கு முதலில் புரிந்த முதல் உறவு தாயே! பிறகுதான் மற்றவை எல்லாம். அன்றாடம் வேட்டைக்கு அலைந்து
தன் கணத்தை ஒட்டியவர்களுக்காக உணவைத்தேடும் போது, தாயே தலைவி. ஆனால் நாளாவட்டத்தில், அன்றாடம்
அலைவதற்குப் பதிலாக தாங்கள் உண்ணக் கூடிய விலங்குகளை தங்களுக்கு அருகிலேயே வைத்து வளர்த்துப் பின்
வேண்டும் போது அவற்றைக் கொன்று பசி போக்கிக் கொள்ளும் நிலை வந்தபிறகுஆட்டு மந்தைகளும், மாட்டுத்
தொழுக்களும் பெருகின. கணத்தில் உறுப்பினர் தொகை பெருக, மந்தைகளுள் விலங்குகளின் எண்ணிக்கை பெருக,
வேலை பகிர்வு என்பதும் பெருகியது. "இதுஎன்னுடையது" என்ற எண்ணம் தனிச் சொத்தை
உருவாக்கிற்று. இந்தக் காலத்தில் தான்,தாய்வழிக் குமுகாயம் போய், தந்தைவழிக் குமுகாயம் வந்தது.
"என் சொத்து என் மக்களுக்குப் போகவேண்டும்" என்ற விழைவில், "கற்பு" என்பது முன்னிடம் பெறுகிறது. பெண்
மனையாள், இல்லாள் என்று ஆகிறாள். குடும்பம் என்ற கட்டுப்பாடு வருகிறது. இது உலகம் எங்கணும் எதோ ஒரு
காலகட்டத்தில் நடந்திருக்கிறது. இந்தமாற்றத்தில் அப்பா என்பவர் முதலிடம் பெறுகிறார். அப்பாவைக்
குறிக்கும் சொல்லும் அம்மாவில் இருந்தேதிரிவு முறையில் பெறப் படுகிறது.

நம் மக்களில் ஒரு சாரார் மெல்லின இரட்டையை அப்படியே ஒலிப்பதும், இன்னொரு சாரார் அதற்கு ஈடாக,
மெல்லொலியோடு அதன் இணை வல்லொலியைச் சேர்த்துப் பலுக்குவதும் நம் தமிழ் இயல்புதான். கேரளத்தார்
மெல்லின இரட்டையாகப் பல சொற்களைப் பலுக்க (காட்டு: 'வ்ந்நு'), கீழைப்பக்கத்தில் உள்ள நாம் மெல்வல்
இணையாக(காட்டு: 'வந்து')ப் பலுக்குகிறோம். ஒருசாரார் கும்மல் என்றால் இன்னொரு சாரார் கும்பல்
என்கிறோம். அதுபோல அம்மா என்பது அம்பா என்றும் ஒலிக்கப்படுவது உண்டு. அந்த அம்பா தான் அம்பாள் என்று
இந்தக் காலத்தில் இறைவியை அழைக்கும்சொல்லுக்கு முதலாக இருக்கிறது. இந்த அம்பா என்ற பலுக்கல்
முதலில் அம்மாவைக் குறித்து பின் அப்பாவையும் குறித்திருக்க வேண்டும். சிறு குழந்தை அம்மாவையும்
அப்பாவையும் வேறுபடுத்திக் கூப்பிடும் முன் அம்பா என்று குழறிக் கூப்பிடுவதை உன்னித்துப் பார்த்து அறிய முடியும்.

இந்த 'அம்பா' என்ற சொல்லுக்கு 'அப்பா' என்று திரிய வாய்ப்புண்டு. தமிழில் "சொந்தம்" "சொத்து"
ஆவது போல், மெல்லும் வல்லும் சேர்ந்த இணையொலி, வல்லின இரட்டையாக மாறுவதற்கு ஏகப்பட்ட எடுத்துக்
காட்டுகளை நீங்களே காண முடியும். நாளடைவில் அம்பா என்ற சொல் அருகி இலக்கியத்தில் மட்டுமே
பயன்படுகிறது. அம்மா என்ற சொல்லின் வல்லினத் திரிபான அப்பா குடும்பத் தலைவனைக் குறிக்கிறது.
இந்தச் சொல் வாயிதழை மூடித் திறந்தாலே வருவதால் ஒலிக்கவும் எளிதாக இருக்கிறது.

மொத்தத்தில் அம்மா,அம்பா,அப்பா எல்லாமே ஒப்பொலியின் தொடர்பால் ஏற்பட்டவை.


அன்புடன்,
இராம.கி.



[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 09, 2009 5:34 pm

[You must be registered and logged in to see this image.] அருமை அருமை தல

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Nov 09, 2009 7:20 pm

வணக்கம்
திரு தமிழன் அவர்களுக்குச் சிறப்பான மீண்டும் ஒரு முறை வணக்கம். நல்லதகவல், இதுவரை நான் அறிந்திராத ஒன்று. நன்றி
அன்புடன்
நந்திதா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 09, 2009 10:04 pm

இந்த 'அம்பா' என்ற சொல்லுக்கு 'அப்பா' என்று திரிய வாய்ப்புண்டு. தமிழில் "சொந்தம்" "சொத்து"
ஆவது போல், மெல்லும் வல்லும் சேர்ந்த இணையொலி, வல்லின இரட்டையாக மாறுவதற்கு ஏகப்பட்ட எடுத்துக்
காட்டுகளை நீங்களே காண முடியும். நாளடைவில் அம்பா என்ற சொல் அருகி இலக்கியத்தில் மட்டுமே
பயன்படுகிறது. அம்மா என்ற சொல்லின் வல்லினத் திரிபான அப்பா குடும்பத் தலைவனைக் குறிக்கிறது.
இந்தச் சொல் வாயிதழை மூடித் திறந்தாலே வருவதால் ஒலிக்கவும் எளிதாக இருக்கிறது.

மொத்தத்தில் அம்மா,அம்பா,அப்பா எல்லாமே ஒப்பொலியின் தொடர்பால் ஏற்பட்டவை.



[You must be registered and logged in to see this image.]


ஈகரைக்கு இன்னொரு ஆராய்ச்சியாளராக திகழ்கிறார் நம் தமிழன்!
நல்லதொரு விளக்கத்தினை எடுத்து சொன்னீர்கள். வாழ்த்துக்கள் தமிழன் அவர்களே!


.......கா.ந.கல்யாணசுந்தரம்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Nov 09, 2009 10:37 pm

நன்றிகள்..! நன்றி

திரு.கா.ந.கல்யாணசுந்தரம் & நந்திதா அக்கா தாங்களிடம் வாழ்த்து பெற்ற எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக