புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
5 Posts - 3%
prajai
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
சிவா
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
435 Posts - 47%
heezulia
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
30 Posts - 3%
prajai
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_m10தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 28, 2014 10:17 am

First topic message reminder :

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்
ரமணி


இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம்.

01. Pantoum: பாண்டி
Pantoum - Wikipedia, the free encyclopedia


இந்த வடிவத்தைத் தமிழில் ’பாண்டி’ என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள்
தம் ’சந்தவசந்தம்’ மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w

இந்த pantoum--’பாண்டி’ வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்:

Stanza 1 A B C D
Stanza 2 B E D F
Stanza 3 E G F H
Stanza 4 G I (or A or C) H J (or A or C)

This pattern continues for any number of stanzas, except for the final stanza,
which differs in the repeating pattern. The first and third lines of the last stanza
are the second and fourth of the penultimate; the first line of the poem
is the last line of the final stanza, and the third line of the first stanza
is the second of the final. Ideally, the meaning of lines shifts when they
are repeated although the words remain exactly the same: this can be done
by shifting punctuation, punning, or simply recontextualizing.

Ref: Pantoum - Wikipedia, the free encyclopedia

அதாவது, ஒவ்வொரு செய்யுளின் இரண்டாம், நான்காம் அடிகள்
அதற்கடுத்த செய்யுளின் முதலாம், மூன்றாம் அடியாக வரவேண்டும்.
இதுபோல் எத்தனை செய்யுட்களும் வரலாம். ஆனால் இறுதிச் செய்யுள் அமைப்பில்
அதன் முந்தைய செய்யுளில் அடிகள் இரண்டும் நான்கும் இதன் முதல், மூன்றாம்
அடிகளாக அமைவதுடன், முதற்செய்யுளின் மூன்றாம் அடி இதன் இரண்டாம் அடியாகவும்,
முதற்செய்யுளின் முதலடி இதன் இறுதி அடியாகவும் அமைதல் வேண்டும்.

pantoum உதாரணங்கள்:
Pantoum Poems | Examples of Pantoum Poetry - PoetrySoup

*****

இனி, நான் எழுதிய சில ’பாண்டி’க் கவிதைகள்:

வேலை எனவோ?
(ஆங்கிலப் பாவடிவம் pantoum-இன் தமிழ் வடிவாகப் ’பாண்டி’ எனப் பெயரிட்டு,
சந்தவசந்தம் இணையக் குழும ஸ்தாபகர் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் செய்த வடிவம்)


காலை நேரம் கதிர்வரும் போதில்
மேலைக் காற்றில் மேனியும் குளிர
சாலை வாகனம் சற்றே குறைய
காலை வீசிக் கடற்கரை சென்றாள். ... 1

மேலைக் காற்றில் மேனியும் குளிர
சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
காலை வீசிக் கடற்கரை சென்றாள்
வாலைக் குமரி வயதில் இளையாள். ... 2

சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
வாலைக் குமரி வயதில் இளையாள்
சாலை யோரம் தாள்களைப் பதித்தாள். ... 3

சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
சாலை யோரம் தாள்களைப் பதித்தாள்
வேலை எனவோ? வியந்தேன் நானே! ... 4

மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
சாலை வாகனம் சற்றே குறைய
வேலை எனவோ வியந்தேன் நானே
காலை நேரம் கதிர்வரும் போதில்! ... 5

--ரமணி, 26-27/12/2014

*****

வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்!
(நாற்சீர்ப் ’பாண்டி’)

’பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’*
வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்
காரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்!

’நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதீர்’
பாரினில் உம்போல் பார்ப்பது அரிதே
காரிருள் நீங்கும் கண்ணொளி சேரும்
நேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்!

பாரினில் உம்போல் பார்ப்பது அரிதே
யாரும் உம்மை ஏய்த்தல் ஆகா
நேரமும் வருமே நினைவினிற் கொள்வீர்
சாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்!

யாரும் உம்மை ஏய்த்தல் ஆகா
தேரும் வாழ்வில் தேடியே ஞானச்
சாரமே கொண்டு சக்கையைத் தள்ளுவீர்
சீரும் சிறப்பும் செயல்வித மாகும்!

தேரும் வாழ்வில் தேடியே ஞான
வேரினைக் காண்பீர் விழுமமே சேரும்
சீரும் சிறப்பும் செயல்வித மாகும்
’பாரத பூமி பழம்பெரும் பூமி’!

--ரமணி, 27/12/2014

குறிப்பு:
முதற் செய்யுளின் முதலிரண்டு அடிகள் மகாகவி பாரதியாரின் ’சத்ரபதி சிவாஜி’
என்னும் பாடலில் இருந்து கொண்ட மேற்கோள் ஆகும்.

*****

பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்!
(மழலையர் பாட்டு: நாற்சீர்ப் பாண்டி)

பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்
வெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்
கிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்
அள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்! ... 1

வெள்ளையாம் ஆடையே மேனிமேல ணிந்தவர்
உள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்
அள்ளியே தருவரே ஆற்றலுடன் புத்தியும்
பிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்! ... 2

உள்ளமே வந்திடில் ஊஞ்சலாடும் உவகையாம்
துள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்
பிள்ளைநான் பொண்ணுநீ பிள்ளையாரைப் போற்றுவோம்
கொள்ளவே அளவினில் குறையாத செல்வமே! ... 3

துள்ளுவோம் பிள்ளையார் தோற்றமெழில் கண்டுநாம்
புள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்
கொள்ளவே அளவினில் குறையாத செல்வமே
பள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்! ... 4

புள்ளிமான் ஓட்டமாய்ப் போகுமே சோம்பலும்
கிள்ளையைப் போலவர் கீர்த்தியினைப் பாடுவோம்
பள்ளியின் கல்வியாய்ப் பட்டறியும் ஞானமாய்ப்
பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்! ... 5

--ரமணி, 27/12/2014, கலி.12/09/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jun 19, 2015 8:26 am

அன்புடையீர்!

கல்லூரிப் படிப்பை முடித்ததும் நான் ’பாபா அணு ஆராய்ச்சி நிலையம்’
அனுப்பியிருந்த நேர்காணல் மடலில் மகிழ்ந்து சென்னையில் இருந்து
மும்பைக்குத் தனியாக தாதர் விரவுவண்டியில் பதிவுசெய்யப் படாத
இருக்கையில் முப்பது மணிநேரம் அமர்ந்து பயணித்தேன்.

என் நண்பன் இதே வேலைக்கு ஒருநாள் முன்னதாகவே மடல் வந்து
முதல்நாள் கிளம்பிச் சென்றவன் என்னை தாதர் மாதுங்கா ரயில் நிலையம்
வந்து கூட்டிச் செல்வதாகச் சொல்லியிருந்தான். பயணத்தில் புனே-மும்பை
ரயில்வே தடத்தில் அதிகாலை சென்றபோது மேற்குத் தொடர்ச்சி மலையின்
இயற்கை அழகை ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ரயில்வண்டியில் வாசல் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு காலைத்
தொங்கப்போட்டபடி அங்கும் இங்கும் கண்ணோட்டி ரசித்த காட்சிகள்
இன்றும் என் நெஞ்சில் பசுமையாக. இந்தப் பாடலில் நான் ரயில்
சக்கரம் எழுப்பும் ஒலியை எதிரொலிக்கும் வகையில் சொற்களை
அமைத்துள்ளேன். பாடலைப் பற்றி அன்பர்கள் கருத்துரைக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,
ரம்ணி

*****

தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
5. இரண்டு கலிவிருத்தம் + ஒரு கலிவிருத்தம் + ஒரு குறள் வெண்செந்துறை

ஆ5. படித்ததும் கிடைத்ததும்
[அளவியல் ஆங்கில சானட்: கலிவிருத்தம் (விளம் விளம் விளம் மா) + குறள் வெண்செந்துறை:
இயைபு: அஆஅஆ, இஈஇஈ, உஊஉஊ, எ‍எ]


புனேநகர் கடந்ததும் பூத்ததே எங்கும்
சினேகிதம் நடம்பயில் சிலிர்ப்பினில் இயற்கை!
அனேகமாய்ப் பசுமையே, அருவிகள் தொங்கும்
முனேவரும் குகைத்தடம் முடுக்கிடும் மயற்கை!

இயற்கையின் நடக்கையில் எழுந்திடும் ஆடல்
நயம்படும் முகத்துடன் நடம்புரி மங்கை!
கயங்கிடும் கருந்திரள் கசிந்திடும் தூறல்
இயன்றிடும் வெடித்திடும் இசைத்திடும் கங்கை!

படிப்பினை முடித்தவன் பார்க்கவோர் வேலை
கிடைப்பதற் கென்றுநான் கிடந்தவண் சென்றேன்
கடுமையாய் வந்தநேர் காணலோர் காலை
கடிதமும் வருமெனக் கனவுகள் கண்டேன்.

வந்ததோ மறுப்பென; வாழ்விலே இறைவன்
தந்தவோர் வேலையில் தங்கியே நிறைவன்!

--ரமணி, 13/04/2015

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jul 08, 2015 7:52 am

தமிழில் அளவியல் இத்தாலிய சானட் உதாரணங்கள்
6. முதல் எட்டடி குறள் வெண்செந்துறை + இறுதி ஆறடி குறள் வெண்செந்துறை

இ6. சவலத்தில் மனம்தோய்வேன்!
(அளவியல் இத்தாலிய சானட்: குறள் வெண்செந்துறை:
இயைபுத் திட்டம்: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)


எத்தனை புத்தகங்கள் எப்படிப் படிப்பேன்?
இத்தனை சஞ்சிகைகள் ஈயென மொய்த்தால்
மாமரப் பூக்களாய் மலைக்க வைத்தால்
பாமரன் நானெதைப் படித்து முடிப்பேன்?
இவைபோ தாதென்று இணையத்தில் கால்கடுப்பேன்
கவையோ கலையோ கரைமீறிக் கால்வைத்தால்
கனவிலும் அலைமனம் கட்டெறும்பாய் மொய்த்தால்
நனவிலெதைக் கொள்ளுவேன் நலமெனவாய் மடுப்பேன்?

மனதின் விருத்தியில் வளரும் வினைகளாய்
நனவின் மாயயை நன்றாய் மறைப்பதில்
உள்ளுறை ஆன்மாவை உள்ளுதல் தடுத்தே
கள்ளுறும் போதையாய்க் காமச் சுனைகளாய்
அவலத்தை நலிவை அறிவென்றே உரைப்பதில்
சவலத்தில் மனம்தோய்வேன் சாதனை விடுத்தே.

[கவை = செயல், வேலை; சவலம் = சபலம்]

--ரமணி, 26/04/2015

*****


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 08, 2015 10:45 pm

சூப்பருங்க சூப்பருங்க தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 1571444738 தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Aug 01, 2015 8:32 am

தமிழில் அளவியல் ஆங்கில சானட் உதாரணங்கள்
6. முதல் மூன்று நாலடிச் செய்யுள் குறள் வெண்செந்துறை + இறுதிக் குறள் வெண்செந்துறை

ஆ6. காக்கையும் யாக்கையும்!
[அளவியல் ஆங்கில சானட்: குறள் வெண்செந்துறை:
இயைபு: அஆஅஆ, இஈஇஈ, உஊஉஊ, எ‍எ]

வாடைக் காற்றில் வானம் வழியும்
கோடை மழையில் குளிர்ந்தது உள்ளம்
சல்லடை மேகம் சலித்துப் பொழியும்
உல்லாச முழுக்கில் உச்சிகள் துள்ளும்!

மின்காற் றனலில் மேனி புழுங்க
மின்னல் வெட்ட மின்வெட் டானது
வெள்ளை வானை மேகம் விழுங்க
உள்ளக் குமுறல் ஒருவழி யானது.

மழைப்பொழி வோட மண்ணில் அலையாய்
குழையும் சிறகைக் குறுக்கி யமர்ந்தே
காக்கை யொன்றுமின் கம்பியில் சிலையாய்
தாக்கும் மழையில் தவமாய்ச் சிறந்தே!

காக்கையின் ஒருமை கண்ணுறும் போதும்
யாக்கையின் கவனமே என்னிடம் மோதும்!

--ரமணி, 27/04/2015

*****


வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Aug 02, 2015 8:06 am

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 3838410834 தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 3838410834 தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 103459460



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2015 11:13 am


பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்...
-
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 3838410834
-
தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் - Page 4 8xVVcNpTL2NCoK8BF4Mg+ganesh2

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Aug 19, 2015 8:09 am

தமிழில் நெடிலடி இத்தாலிய சானட் உதாரணங்கள்
1. இரண்டு கலித்துறை + ஒரு கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை

இ7. தலைமேல் உறுமோ மழைக்கால்?
(நெடிலடி இத்தாலிய சானட்: கலித்துறை (மா கூவிளம் விளம் விளம் மா) x 3
+ ஒரு குறள் வெண்செந்துறை: இயைபுத் திட்டம்: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)

வெய்யில் அக்னியின் தணலெனப் பரவியே வேர்க்கும்
கையில் ஜன்னலின் கம்பிகள் கனலுறக் காயும்
மெய்யின் ஆடையை மீறியே அனலது மேயும்
பெய்யும் வான்மழை நேருமோ அத்தனை பேர்க்கும்?
செய்யும் காரியம் எதுவுமே சலிப்பினில் சேர்க்கும்
நெய்யில் வாணலித் தணலுற வறுபடும் நேயம்
ஒய்யா ரம்தரும் நிழலுமே குறுகியே ஓயும்
கொய்யா மஞ்சளுள் வெண்மையாய்ச் சூரியன் கூர்க்கும்!

வேற்றில் ஈரமாய் வேண்டியே கவிதையில் விதைத்தேன் ... ... [வேற்றில் = வேற்றுமை இல்லாத]
சேற்றில் தாமரை விந்தையாய்க் கருமுகில் சிரிக்கும்
போற்றும் மழையாய்ப் பூமியில் சிலிர்க்கப் பொழியும்!
சீற்றம் மின்னலின் இடியென வெம்மையைச் சிதைத்தே
நேற்றுக் கண்படாக் கார்முகில் நீரினை நிறைக்கும்
ஏற்றம் பெற்றநீர்க் மழைக்கால் வரிகளாய் இழியும்!

--ரமணி, 25/05/2015

*****


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 10:11 pm

அய்யா நீங்கள் அருமையாக எழுதுகிறீர்கள் .. எனக்கு தான் இன்னும் கொஞ்சம் நேரமும் அறிவும் இருந்தால்..இன்னும் ரசிப்பேன் .
வாழ்த்துக்கள் அய்யா . அன்பு மலர் அன்பு மலர்

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Sep 06, 2015 6:20 pm

தமிழில் நெடிலடி ஆங்கில சானட் உதாரணங்கள்
1. முன்று கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை

ஆ7. தனியெனில் நன்றே பொதுவெனில் ஊறே!
[நெடிலடி ஆங்கில சானட்: முன்று கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை
இயைபு: அஆஅஆ, இஈஇஈ, உஊஉஊ, எ‍எ]


சொன்னால் செய்பவன் எனக்கொரு நண்பனாம் சூர்ய
மின்சா ரக்கதிர் ஆற்றலைக் கொண்டவன் இல்லம்
அன்றா டம்கொளும் மின்னொளி வெம்மையை ஆர்ய
மின்சா ரம்வழிப் பெற்றவன் வாழ்வது செல்லும்!

மழையோ வெய்யிலோ தடையிலா மின்னளி மாட்சி
இழியும் சக்தியின் காப்பென மின்கலன் இரண்டு
நிழலாய் ராத்திரி அரசுமின் சார்ஜினில் நீட்சி
கழுகாய்க் காத்திருக் கும்விசை தட்டிடக் கரண்ட்டு!

அனலோன் ஆடிகள் பலமைல் பரப்பினில் அமைத்தே
கனலின் ஆற்றலைப் பொதுசனம் பெறுதலைக் காணில்
சனனம் கொண்டது கொல்லுமே பறவைகள் சமைத்தே!
வினவும் நன்மையைத் தருமென முனைவது வீணே.

தன்னில் லந்தனில் கதிரொளி நலம்தரும் சக்தி
உன்னில் ஊர்க்கென ஊறுகள் விளைத்திடும் யுக்தி!

--ரமணி, 27/05/2015

உதவி:
The Dark Side Of Solar Power
http://news.investors.com/ibd-editorials/021914-690545-ivanpah-shines-a-light-on-the-dark-side-of-solar-power.htm
போன்ற இணையச் செய்திகள்.

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Oct 05, 2015 9:52 am

தமிழில் நெடிலடி இத்தாலிய சானட் உதாரணங்கள்
2. மூன்று கட்டளைக் கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை

இ8. தீத்திறந் தான்வரும் சிந்தையிலே!
(நெடிலடி இத்தாலிய சானட்: மூன்று கட்டளைக் கலித்துறை + ஒரு குறள் வெண்செந்துறை:
இயைபுத் திட்டம்: அஆஆஅ-அஆஆஅ, இஈஎ-இஈஎ)


மாலைப் பொழுதின் மயக்கில் பறவை மரக்கிளையில்
ஓலம் விடுத்தவை ஒன்றோ பலவோ ஒருங்கமரும்
சோலை மலர்கள் சொகுசாய் மலர்ந்தே மணங்கமழும்
சாலை மருங்கில் சருகுகள் காற்றில் உருக்குலைவில்!

மாடப் புறாவினம் மட்டும் எளிதாய் அமர்வதில்லை
கூடும் துரத்தும் குழுவாய்ப் பறந்தபின் மீண்டமரும்
சாடும் துணையைத் தவிர்க்க மறுபடித் தாண்டிவரும்
ஓடும் ஒடுங்கும் உறையும் அவைதான் அயர்வதில்லை!

ஒருநிலை கொள்ளா துலவும் புறாவின் மனமெனக்கே
துருவும் அலகால் துரத்தும் பறக்கும் சிறகடித்தே
உருவம் மயங்கியே உள்நினை வோடிடும் அந்தியிலே
கருவம் செழித்துக் கனல்வரும் எண்ண வனமெனக்கே
வெருவும் சினமும் வெளிப்படத் தாக்கும் விறகொடித்தே
திருவெனக் கொள்முதல் தீத்திறந் தான்வரும் சிந்தையிலே!

--ரமணி, 15/06/2015

*****


Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக