புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
48 Posts - 60%
heezulia
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
17 Posts - 21%
dhilipdsp
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
3 Posts - 4%
D. sivatharan
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
43 Posts - 60%
heezulia
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
15 Posts - 21%
mohamed nizamudeen
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
4 Posts - 6%
dhilipdsp
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
கவி - பாரதி I_vote_lcapகவி - பாரதி I_voting_barகவி - பாரதி I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவி - பாரதி


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 4:49 pm

தேடி சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடி துன்பம் மிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து - நரை
கூடி கிழப் பருவம் எய்தி - கொடும்
கூற்றுக்கு இரையென மாயும்- பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

- பாரதியார்


செல்லம்மாள் சேலை கேட்டாள்
பாரதி நூல் கொடுத்தான்
கவிதைக்குப் பொன்னாடை
பாடைக்குப் பதினாலுபேர்
கவிதை எழுதுபவன் கவியன்று.
கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 4:59 pm

நமிதாவின் மறுபக்கம் என்றதும் கற்பனையில் மூழ்கும் ஜொள்ளர்களுக்கு முதலில் ஒரு குட்டு. இது மனசின் மறுபக்கம்.

வெயிலில் காயும் உதவியாளர்களை பார்த்துக்கொண்டே பழச்சாறு அருந்தும் சில நடிகைகளுக்கு மத்தியில் நமிதா ரொம்பவே மாறுபட்டவராம். படப்பிடிப்பு தளத்தில் யூனிட்டில் உள்ள ஆட்களுக்கு ஏதாவது ஒன்றால் உதவிக்கரம் நீட்டுவதில் முதல் ஆளாக நிற்பாராம்.

ஒருமுறை ‘பம்பரக் கண்ணாலே' படத்தின் பாடல் காட்சி எடுத்தபோது நடந்த சம்பவம் ஒன்றை நினைவுகூறுகிறார் அப்படத்தில் பணியாற்றிய ஒருவர். மிளகாய் வத்தல் மீது நமிதாவும், டான்ஸர்கள் பலரும் ஆடவேண்டிய காட்சி. முதல் டேக் எடுக்கும்போதே டான்ஸர்களின் நாசி கரம்மசாலாவாக, பாதி பாடல் எடுத்து முடிப்பதற்குள் தும்மலும் விம்மலுமாக தொந்தரவுகளை அனுபவித்தனராம்.

இதைபார்த்த நமியின் மனசு இளகிவிட்டதாம். உடனே தனது சம்பளத்திலிருந்து சில லட்சங்களை எடுத்து டான்ஸர்களுக்கு தனது சார்பில் கூடுதல் சம்பளம் தரச்செய்தாராம். இது மட்டுமின்றி தான் நடிக்கும் படங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தன்னால் முடிந்தவரை பண உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளாராம். இது வெளியே பப்ளிசிட்டி ஆகக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறாராம்.

இப்படி நமிதாவின் மறுபக்கத்தை எழுத பல பக்கம் தேவைப்படும் என்கிறார் சினிமா பிரமுகர் ஒருவர்.தமிழ்த்திரையுலகில் கவர்ச்சி நடிகைகளாக கலக்கிய சில்க்ஸ்மிதா, அனுராதா உள்ளிட்ட பலரும் மனிதநேயம்மிக்கவர்களாக இருந்துள்ளனர்.

பூஜா போன்ற இளம் நடிகைகள் சிலர் ஆதரவற்ற குழந்தைகளின் நலனில் அக்கறைகாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. பிறந்த நாளின்போது மட்டும் சில்லரை உதவிகளை செய்து சீப்பான பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் சில நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் நமீதா, பூஜா போன்றவர்களின் நல்ல மனசுக்கு கோயில் கட்டினாலும் தப்பில்லை.

தமிழில் நடித்துக்கொண்டிருக்கும் நமிதா சத்தமில்லாமல் இந்திப்படம் ஒன்றில் நடித்த கதை தெரியுமா? ஒன்றரை வருடங்களுக்கு முன் நடந்த விஷயம் என்பதால் இந்தப் படம் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. படம் முடிந்து பல மாமாங்கம் ஆன நிலையில், இப்போது தூசிதட்டி படத்தை வெளியிடுகிறார்கள். சினிமாவில் நடிக்க வரும் அனைவருக்கும் இந்திப் படங்கள் ஒரு லட்சியமாகவே இருந்து வருகிறது. பாலிவுட்டில் நுழைந்தால் இந்தியா முழுவதும் அங்கீகாரம் கிடைக்கும் என்பது இதற்கு காரணம். வடக்கிலிருந்து தமிழ்சினிமாவில் நடிக்கவரும் அனைத்து நடிகைகளும் இந்தியில் சரியான வாய்ப்பு அமையாமல் அல்லது கிடைக்காமல் இங்கு வருகிறவர்கள்தான். அன்றைய நக்மா முதல் இன்றைய நமிதா வரை பலர் இதற்கு உதாரணங்கள்.

ஸ்லிம் ப்யூட்டிகளின் கோட்டையான பாலிவுட்டில் 'கும்'மென்றிருக்கும் நமிதாவுக்கு இடம் கிடைப்பது ரொம்ப சிரமமமாகவே இருந்திருக்கிறது. கடைசியில் 'பியார்கா சக்கர்மே' என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்து. ஜோடி, மும்பையின் பிரபல மாடல். இந்தப் படத்தில் நடித்த தெரிந்த ஒரே ஒரு முகம், ரிஷிகபூர். உலக அழகிகளுக்கே உடைகளை அளந்து கொடுக்கும் இந்தி சினிமா, நமிதாவுக்கு அதனை கொடுக்கவும் ரொம்ப யோசித்ததாம். படம் முழுக்க நமிதா கவர்ச்சியை வாரியிறைத்திருக்கும் இந்தப்படம் விரைவில் இந்தியில் ரிலீஸாகிறது.
நமிதாவின் உயிர் ரசிகர்கள் நிறைய பேர் தமிழ்நாட்டில் இருப்பதாலும், இப்படிப்பட்ட படங்களை தமிழில் 'டப்' செய்து வெளியிட ஒரு கூட்டம் தயாராக இருப்பதாலும் நமிதாவின் இந்த பாலிவுட் படம் தமிழிலும் விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 6:34 pm

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்க்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.


-பாரதியார்



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 08, 2009 6:49 pm

என்ன கார்த்திக்..கவிதை..இருக்கு..அதே பதிவில் நமீதாவின் மறு பக்கம் என்பதையும் பதிந்து உள்ள்ளீர்கள் ,, சினிமா பகுதியில் ,நமீதா பற்றியும் ..கவிதை பகுதியில் ,,உங்கள் கவிதைகளையும் பதிந்தால் நல்லது ,,
கவிதை அருமையாக இருக்கு ,, கவி - பாரதி 677196



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 6:54 pm

அநியாயம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 6:57 pm

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா !!!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பேரும் ஸதியென்ற நாமமும்.

அன்பு வாழ்கென் றமைதியி லாடுவோம்
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பந் தீர்வது பெண்மையி னாலடா
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோர்த்துக் களித்துநின் றாடுவோம்.

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயின் பிறகொரு தாழ்வில்லை;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா!

சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஒத்தி யல்வதொர் பாட்டும் குழல்களும்
ஊர்வி யக்கக் களித்து நின்றாடுவோம்.

உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்
உயிரி னுமிந்தப் பெண்மை யினிதடா !!!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.

“போற்றி தாய்” என்று தோள் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே.

“போற்றி தாய்” என்று தாளங்கள் கொட்டடா!
“போற்றி தாய்” என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே.

அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்!

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா !!!

- மகாகவி பாரதி.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 08, 2009 9:18 pm

கவி - பாரதி 677196 கவி - பாரதி 677196 அருமை கார்த்திக்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக