புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்! Dec2nd
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாடு சுதந்திரமடைந்துவிட்டது. இனி ஆண்டானும் இல்லை அடிமையும் இல்லை'. - அரசியல் மேடைகளில் கேட்டுக்கேட்டு இந்த வார்த்தைகள் பழகிப்போய்விட்டன. ஆனால் இன்றைக்கும் ஏதோ ஒருவடிவில் அடிமை முறை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதனால்தான் அடிமைத்தனமாக வாழ்பவர்களை, மீட்டெடுக்கும் பணியை வலியுறுத்தி டிச., 2 ஐ 'சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினமாக' ஐ.நா. 1986 முதல் அனுசரித்து வருகிறது.
அடிமை சமுதாயம் :
மனித குலம் தோன்றியபோது அது பொதுவுடமை சமூகமாகதான் இருந்திருக்கும். இயற்கையில் கிடைத்த காய் கனிகளையும், வேட்டையாடிய விலங்குகளையும் பகிர்ந்து உண்டான். அடுத்தகட்டமாக குழுகுழுவாகப் பிரிந்து வாழத்துவங்கினான். இந்தக் குழு ஆடு, மாடு போன்றவற்றை வளர்க்கத் துவங்கியது. மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போக அவர்களுக்கான உணவின் தேவையும் அளவும் அதிகரித்தது. உணவுக்காக இந்தக் குழுக்கள் மோதிக்கொள்ளத் துவங்கின. இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்வதில் போட்டி ஏற்பட்டது. போட்டியில் தோற்ற ஆண்கள் கொல்லப்பட்டனர். அவர்களைச் சார்ந்த பெண்களை வெற்றி பெற்ற குழுவினர் கொண்டு சென்றனர். இதற்குப்பின் தோற்றுப்போன ஆண்களையும் அவர்கள் கொல்லவில்லை. தங்களுக்கு வேலை செய்யும் அடிமைகளாக்கிக்கொண்டனர். அப்போது தான் அடிமை சமுதாயம் உருவானது.
யார் அடிமை :
தனிமனித சுதந்திரம் எதுவுமின்றி ஜாதி, குடும்பம், நிறுவனம், அரசாங்கம் போன்றவற்றில் துளியும் விருப்பமின்றி வேலை செய்யும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படும் ஒருவர் அடிமை எனப்படுவார். பண்டைகாலத்தில் ஒருவர் பிறப்பினாலோ, பிடிக்கப்படுவதனாலோ, விலைக்கு வாங்கப்படுவதனாலோ அடிமையாக்கப்பட்டார். அவ்வாறு அடிமையானவருக்கு, இத் தளையில் இருந்து விடுபடும் உரிமையோ, வேலை செய்ய மறுக்கும் உரிமையோ, உழைப்புக்கான ஊதியம் பெறும் உரிமையோ கிடையாது. "போனால் போகட்டும்" என்று உயிர் வாழ்வதற்கான உணவு மட்டும் அடிமைக்கு வழங்கப்பட்டது. அடிமைப்படுத்தி உள்ளவரின் சொத்தாக அவர் கருதப்பட்டார். அடிமைப்படுத்தப்பட்டவரிடம் வலுக்கட்டாயமாக வேலை வாங்குவது "அடிமை முறை"யாகும். அடிமைகள் ரத்தமும் சதையும் கொண்ட மனிதனாகக் கருதப்படாமல் உற்பத்திக் கருவியாகவே கருதப்பட்டனர். அரிஸ்டாட்டில் அடிமைகளை "பேசும் கருவி" என்று சொன்னது சரியானதே.
அடிமை முறையின் துவக்கம் :
அடிமை முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே இருந்தது.அடிமையால் எந்த பயனும் இல்லை என்றால் அவர் கொல்லப்படுவார். அல்லது ஆள் இல்லாத தீவில் கொண்டு விடப்படுவார். பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதும் அடிமைமுறையின் ஒரு அங்கமாக இருந்தது. தொன்மையான நாகரிக நாடுகள் என வர்ணிக்கப்படும் கிரேக்கம், எகிப்தின் வளர்ச்சிக்கு அடிமைகளின் அயராத உழைப்பே காரணம்.எகிப்தில் அடிமைகளை வைத்திருப்பதும் பரிசளிப்பதும் சமூக அஸ்தஸ்து. ஏதென்ஸ் நகரின் மக்கள் தொகை நாற்பதாயிரம் பேர் என்றால் அவர்களிடம் இருந்த அடிமைகளின் எண்ணிக்கை எண்பதாயிரம். அடிமைகள் தங்களுக்கு விருப்பப்பட்ட பெயரை வைத்துக்கொள்வது கூட குற்றம். எஜமானர் தான் பெயர் வைப்பார்.
இந்தியாவில் எப்படி :
ரோம், கிரேக்க நாடுகளைப் போலத் தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி காலங்களில் அடிமைகளாக வாழ்ந்தவர்கள் நிறுவனரீதியாக பணிபுரியவில்லை. விவசாயம் சார்ந்த பணிகளையே பார்த்தனர். சோழர்களின் ஆட்சி காலத்தில் நிலவுடைமை வளர்ச்சியடைந்து அடிமைகளின் உழைப்பு அதிக அளவு உறிஞ்சப்பட்டது.சோழ மன்னர்களும், சோழநாட்டிலிருந்த வசதியானவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. அடிமையாவோர் அடிமையாளருக்கு எழுதிக் கொடுக்கும் இந்த ஓலைக்கு ஆளோலை என்று பெயர். அரசாங்கம் ஒருவருடைய நிலங்களைப் பறிமுதல் செய்யும் போது அவனுடைய பணியாட்களையும் பறிமுதல் செய்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. கோயில் பணி செய்வதற்காகவே சில பெண்கள் அவர்களுடைய குடும்பத்துடன் விற்கப்பட்டனர்.
அடிமைகள் ஆசான்கள் :
உலகம் முழுவதும் அடிமைகள் ஆசான்களாகவும் இருந்தது உண்டு. இந்திய வரலாற்றின் போக்கை இரண்டு அடிமைகள் மாற்றி அமைத்து இருக்கின்றனர். அவர்கள்... அடிமை வம்சத்தை ஆட்சி புரிய செய்த சுல்தான் குத்புதீன் ஐபக், தமிழகம் வரை பெரும் படை எடுத்து வந்த மாலிக்கபூர். இருவருமே அடிமைகள்தான். தங்களது எஜமானனின் விருப்பத்துக்கு உரியவராகி, பின் அதிகாரத்தினுள் நுழைந்து சந்தர்ப்பங்களை தங்களுக்கு ஏற்ப மாற்றி அதிகாரத்தின் உச்சத்துக்கு வந்தவர்கள். அதுபோல விலை மதிப்பற்ற கோகினுார் வைரம் தன் கைக்கு வந்ததும் இந்தியாவிலிருந்து பல ஆயிரம் அடிமைகளைக் கூட்டிக்கொண்டு ஈரானுக்குக் சென்றார் நாதிர் ஷா என்கிறது வரலாறு. ஒட்டகச்சிவிங்கியை பாதுகாக்க சீன மன்னன் ஆப்ரிக்காவில் இருந்து அடிமைகளை தருவித்த தகவலும் உண்டு. இப்படி அடிமைகளுக்கு வரலாற்றில் பல பங்களிப்புகள்.
அடிமை முறை ஒழிந்துவிட்டதா :
ஒரு காலத்தில் அதிதீவிரமாக இருந்த அடிமை முறை இன்று சட்டத்தால் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு தொழிலாளிக்கு முன் பணம் கொடுத்து வலுக்கட்டாயமாக வேலை வாங்குவது, அந்த தொழிலாளிக்கு குறைந்தபட்ச கூலி கொடுக்காமல் இருப்பது, விரும்பிய பணிக்கும், விரும்பிய இடத்துக்கும் செல்லவிடாதபடி அவரைத் தடுப்பது என்ற அடையாளங்களைப் பெற்று அடிமை முறையானது கொத்தடிமை முறையாகியிருக்கிறது. இப்படி ஏதோ ஒரு முகமூடி அணிந்து அடிமைத்தனம் தொடர்ந்து கொண்டு இருக்கிறதுஉலகம் முழுவதும் 3 கோடியே 58 லட்சம் மக்கள் நவீன அடிமைகளாக வாழ்கிறார்கள். நவீன அடிமைகளில் 61 சதவிகிதம் பேர் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளனர்.
"சுமார் 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 1 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 700 மக்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள். இந்தியாவில் கட்டுமானம், விவசாயம், வீட்டு வேலை, ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் மக்கள் நவீன அடிமைகளாக நடத்தப்படுகின்றனர்" என்கிறது ஒரு அறிக்கை.தமிழகத்தில் இருபத்தைந்தாயிரம் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாக 1996- ல் அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. "மீட்கப்படும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு உரிய மறுவாழ்வுத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துவதில்லை. அதனால் அவர்கள் மீண்டும் கொத்தடிமைத் தொழிலுக்கே போய்விடுகிறார்கள்" என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தொடரும் அடிமை முறை :
தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களிலுள்ள முறுக்கு, மிட்டாய்க் கம்பெனிகளுக்கு பெற்றோர் இசைவுடன் அனுப்பப்படும் சிறுவர்கள், அங்கு அடிமையாக நடத்தப்படுவதோடு சித்ரவதைக்கு உள்ளாகி அதில் உயிரிழந்த விபரீதத்தையும் நாம் அறிவோம். ஆனாலும் சிறுவர்களை அனுப்புவது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதுபோல செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள் போன்றவற்றில் அங்கேயே தங்கவைக்கப்பட்டு வேலை வாங்கப்படும் தொழிலாளர் குடும்பங்கள் இன்றும் இருக்கின்றன."சுமங்கலித்திட்டம்" என்ற பெயரில் சிறுமிகளை பஞ்சாலைகளில் தங்க வைத்து வேலை வாங்கும் அவலமும் அங்கு சிறுமிகள் படும் அவஸ்தைகளும் நவீன அடிமைத்தனத்திற்கான உதாரணம்.
தீர்வு என்ன :
நவீன அடிமைகள் கலாசாரம் பரவி வருவதால், உலகம் முழுவதும் அடிமை வாழ்க்கை வாழ்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நாட்டிற்கோ, சமூகத்துக்கோ, கலாசாரத்துக்கோ, தனிப்பட்ட நபருக்கோ உலகில் யாரும் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்கிறது ஐ.நா. அதே நேரத்தில் அடிமை, கொத்தடிமை முறை ஒழிப்பு என்பது அரசாலோ, தனி நபராலோ, தனி இயக்கங்களாலோ, ஊடகங்களாலோ சாத்தியமாகும் சாதாரணமான விஷயமல்ல. அனைவரும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய பணி.
முதலில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சகமனிதனை மனித மாண்புடன் நடத்தும் மனநிலை ஒவ்வொருவருக்குள்ளும் மலரவேண்டும்."ரோமாபுரி அடிமை முறை ஒழிந்துவிட்டது; அமெரிக்கா அடிமை முறை ஒழிந்துவிட்டது; ரஷ்யா அடிமை முறை ஒழிந்துவிட்டது. நாமும் ஒழித்துவிட்டோம்; அடிமை முறை என்ற வார்த்தையை மட்டுமே. ஆனால் அடிமை முறை இன்னும் அப்படியே."- ஜார் மன்னரின் ரஷ்யாவைப் பற்றி எழுதும் போது லியோ டால்ஸ்டாய் சொன்னது இது. நாமும் நம்நாட்டில் அடிமைகள், கொத்தடிமைகள் இல்லை... எனச் சொல்லிக்கொள்ளலாம்; அவ்வளவு தான்!
ப. திருமலை
அடிமை சமுதாயம் :
மனித குலம் தோன்றியபோது அது பொதுவுடமை சமூகமாகதான் இருந்திருக்கும். இயற்கையில் கிடைத்த காய் கனிகளையும், வேட்டையாடிய விலங்குகளையும் பகிர்ந்து உண்டான். அடுத்தகட்டமாக குழுகுழுவாகப் பிரிந்து வாழத்துவங்கினான். இந்தக் குழு ஆடு, மாடு போன்றவற்றை வளர்க்கத் துவங்கியது. மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போக அவர்களுக்கான உணவின் தேவையும் அளவும் அதிகரித்தது. உணவுக்காக இந்தக் குழுக்கள் மோதிக்கொள்ளத் துவங்கின. இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்வதில் போட்டி ஏற்பட்டது. போட்டியில் தோற்ற ஆண்கள் கொல்லப்பட்டனர். அவர்களைச் சார்ந்த பெண்களை வெற்றி பெற்ற குழுவினர் கொண்டு சென்றனர். இதற்குப்பின் தோற்றுப்போன ஆண்களையும் அவர்கள் கொல்லவில்லை. தங்களுக்கு வேலை செய்யும் அடிமைகளாக்கிக்கொண்டனர். அப்போது தான் அடிமை சமுதாயம் உருவானது.
யார் அடிமை :
தனிமனித சுதந்திரம் எதுவுமின்றி ஜாதி, குடும்பம், நிறுவனம், அரசாங்கம் போன்றவற்றில் துளியும் விருப்பமின்றி வேலை செய்யும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படும் ஒருவர் அடிமை எனப்படுவார். பண்டைகாலத்தில் ஒருவர் பிறப்பினாலோ, பிடிக்கப்படுவதனாலோ, விலைக்கு வாங்கப்படுவதனாலோ அடிமையாக்கப்பட்டார். அவ்வாறு அடிமையானவருக்கு, இத் தளையில் இருந்து விடுபடும் உரிமையோ, வேலை செய்ய மறுக்கும் உரிமையோ, உழைப்புக்கான ஊதியம் பெறும் உரிமையோ கிடையாது. "போனால் போகட்டும்" என்று உயிர் வாழ்வதற்கான உணவு மட்டும் அடிமைக்கு வழங்கப்பட்டது. அடிமைப்படுத்தி உள்ளவரின் சொத்தாக அவர் கருதப்பட்டார். அடிமைப்படுத்தப்பட்டவரிடம் வலுக்கட்டாயமாக வேலை வாங்குவது "அடிமை முறை"யாகும். அடிமைகள் ரத்தமும் சதையும் கொண்ட மனிதனாகக் கருதப்படாமல் உற்பத்திக் கருவியாகவே கருதப்பட்டனர். அரிஸ்டாட்டில் அடிமைகளை "பேசும் கருவி" என்று சொன்னது சரியானதே.
அடிமை முறையின் துவக்கம் :
அடிமை முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே இருந்தது.அடிமையால் எந்த பயனும் இல்லை என்றால் அவர் கொல்லப்படுவார். அல்லது ஆள் இல்லாத தீவில் கொண்டு விடப்படுவார். பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும், பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதும் அடிமைமுறையின் ஒரு அங்கமாக இருந்தது. தொன்மையான நாகரிக நாடுகள் என வர்ணிக்கப்படும் கிரேக்கம், எகிப்தின் வளர்ச்சிக்கு அடிமைகளின் அயராத உழைப்பே காரணம்.எகிப்தில் அடிமைகளை வைத்திருப்பதும் பரிசளிப்பதும் சமூக அஸ்தஸ்து. ஏதென்ஸ் நகரின் மக்கள் தொகை நாற்பதாயிரம் பேர் என்றால் அவர்களிடம் இருந்த அடிமைகளின் எண்ணிக்கை எண்பதாயிரம். அடிமைகள் தங்களுக்கு விருப்பப்பட்ட பெயரை வைத்துக்கொள்வது கூட குற்றம். எஜமானர் தான் பெயர் வைப்பார்.
இந்தியாவில் எப்படி :
ரோம், கிரேக்க நாடுகளைப் போலத் தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி காலங்களில் அடிமைகளாக வாழ்ந்தவர்கள் நிறுவனரீதியாக பணிபுரியவில்லை. விவசாயம் சார்ந்த பணிகளையே பார்த்தனர். சோழர்களின் ஆட்சி காலத்தில் நிலவுடைமை வளர்ச்சியடைந்து அடிமைகளின் உழைப்பு அதிக அளவு உறிஞ்சப்பட்டது.சோழ மன்னர்களும், சோழநாட்டிலிருந்த வசதியானவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. அடிமையாவோர் அடிமையாளருக்கு எழுதிக் கொடுக்கும் இந்த ஓலைக்கு ஆளோலை என்று பெயர். அரசாங்கம் ஒருவருடைய நிலங்களைப் பறிமுதல் செய்யும் போது அவனுடைய பணியாட்களையும் பறிமுதல் செய்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. கோயில் பணி செய்வதற்காகவே சில பெண்கள் அவர்களுடைய குடும்பத்துடன் விற்கப்பட்டனர்.
அடிமைகள் ஆசான்கள் :
உலகம் முழுவதும் அடிமைகள் ஆசான்களாகவும் இருந்தது உண்டு. இந்திய வரலாற்றின் போக்கை இரண்டு அடிமைகள் மாற்றி அமைத்து இருக்கின்றனர். அவர்கள்... அடிமை வம்சத்தை ஆட்சி புரிய செய்த சுல்தான் குத்புதீன் ஐபக், தமிழகம் வரை பெரும் படை எடுத்து வந்த மாலிக்கபூர். இருவருமே அடிமைகள்தான். தங்களது எஜமானனின் விருப்பத்துக்கு உரியவராகி, பின் அதிகாரத்தினுள் நுழைந்து சந்தர்ப்பங்களை தங்களுக்கு ஏற்ப மாற்றி அதிகாரத்தின் உச்சத்துக்கு வந்தவர்கள். அதுபோல விலை மதிப்பற்ற கோகினுார் வைரம் தன் கைக்கு வந்ததும் இந்தியாவிலிருந்து பல ஆயிரம் அடிமைகளைக் கூட்டிக்கொண்டு ஈரானுக்குக் சென்றார் நாதிர் ஷா என்கிறது வரலாறு. ஒட்டகச்சிவிங்கியை பாதுகாக்க சீன மன்னன் ஆப்ரிக்காவில் இருந்து அடிமைகளை தருவித்த தகவலும் உண்டு. இப்படி அடிமைகளுக்கு வரலாற்றில் பல பங்களிப்புகள்.
அடிமை முறை ஒழிந்துவிட்டதா :
ஒரு காலத்தில் அதிதீவிரமாக இருந்த அடிமை முறை இன்று சட்டத்தால் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு தொழிலாளிக்கு முன் பணம் கொடுத்து வலுக்கட்டாயமாக வேலை வாங்குவது, அந்த தொழிலாளிக்கு குறைந்தபட்ச கூலி கொடுக்காமல் இருப்பது, விரும்பிய பணிக்கும், விரும்பிய இடத்துக்கும் செல்லவிடாதபடி அவரைத் தடுப்பது என்ற அடையாளங்களைப் பெற்று அடிமை முறையானது கொத்தடிமை முறையாகியிருக்கிறது. இப்படி ஏதோ ஒரு முகமூடி அணிந்து அடிமைத்தனம் தொடர்ந்து கொண்டு இருக்கிறதுஉலகம் முழுவதும் 3 கோடியே 58 லட்சம் மக்கள் நவீன அடிமைகளாக வாழ்கிறார்கள். நவீன அடிமைகளில் 61 சதவிகிதம் பேர் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளனர்.
"சுமார் 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 1 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 700 மக்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள். இந்தியாவில் கட்டுமானம், விவசாயம், வீட்டு வேலை, ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் மக்கள் நவீன அடிமைகளாக நடத்தப்படுகின்றனர்" என்கிறது ஒரு அறிக்கை.தமிழகத்தில் இருபத்தைந்தாயிரம் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாக 1996- ல் அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. "மீட்கப்படும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு உரிய மறுவாழ்வுத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துவதில்லை. அதனால் அவர்கள் மீண்டும் கொத்தடிமைத் தொழிலுக்கே போய்விடுகிறார்கள்" என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தொடரும் அடிமை முறை :
தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களிலுள்ள முறுக்கு, மிட்டாய்க் கம்பெனிகளுக்கு பெற்றோர் இசைவுடன் அனுப்பப்படும் சிறுவர்கள், அங்கு அடிமையாக நடத்தப்படுவதோடு சித்ரவதைக்கு உள்ளாகி அதில் உயிரிழந்த விபரீதத்தையும் நாம் அறிவோம். ஆனாலும் சிறுவர்களை அனுப்புவது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதுபோல செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள் போன்றவற்றில் அங்கேயே தங்கவைக்கப்பட்டு வேலை வாங்கப்படும் தொழிலாளர் குடும்பங்கள் இன்றும் இருக்கின்றன."சுமங்கலித்திட்டம்" என்ற பெயரில் சிறுமிகளை பஞ்சாலைகளில் தங்க வைத்து வேலை வாங்கும் அவலமும் அங்கு சிறுமிகள் படும் அவஸ்தைகளும் நவீன அடிமைத்தனத்திற்கான உதாரணம்.
தீர்வு என்ன :
நவீன அடிமைகள் கலாசாரம் பரவி வருவதால், உலகம் முழுவதும் அடிமை வாழ்க்கை வாழ்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நாட்டிற்கோ, சமூகத்துக்கோ, கலாசாரத்துக்கோ, தனிப்பட்ட நபருக்கோ உலகில் யாரும் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்கிறது ஐ.நா. அதே நேரத்தில் அடிமை, கொத்தடிமை முறை ஒழிப்பு என்பது அரசாலோ, தனி நபராலோ, தனி இயக்கங்களாலோ, ஊடகங்களாலோ சாத்தியமாகும் சாதாரணமான விஷயமல்ல. அனைவரும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய பணி.
முதலில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சகமனிதனை மனித மாண்புடன் நடத்தும் மனநிலை ஒவ்வொருவருக்குள்ளும் மலரவேண்டும்."ரோமாபுரி அடிமை முறை ஒழிந்துவிட்டது; அமெரிக்கா அடிமை முறை ஒழிந்துவிட்டது; ரஷ்யா அடிமை முறை ஒழிந்துவிட்டது. நாமும் ஒழித்துவிட்டோம்; அடிமை முறை என்ற வார்த்தையை மட்டுமே. ஆனால் அடிமை முறை இன்னும் அப்படியே."- ஜார் மன்னரின் ரஷ்யாவைப் பற்றி எழுதும் போது லியோ டால்ஸ்டாய் சொன்னது இது. நாமும் நம்நாட்டில் அடிமைகள், கொத்தடிமைகள் இல்லை... எனச் சொல்லிக்கொள்ளலாம்; அவ்வளவு தான்!
ப. திருமலை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
நல்ல பதிவு , உடனே படிங்கோ னு, வீட்டுலே சொன்னதாலே ,படிச்சேன் .
நல்ல பதிவு ,அருமை .
ரமணியன்
நல்ல பதிவு ,அருமை .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1107477T.N.Balasubramanian wrote:நல்ல பதிவு , உடனே படிங்கோ னு, வீட்டுலே சொன்னதாலே ,படிச்சேன் .
நல்ல பதிவு ,அருமை .
ரமணியன்
நன்றி ஐயா !
-
கடந்த 1791 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி இரவும்
ஆகஸ்ட் 23 ஆம்ம் தேதியும் செயின்ட் டோமிங்
என்கிற நாட்டில் (தற்போதைய ஹைத்தி)
அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சி ஏற்பட்டது
-
இதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் மற்றும்
பாதிப்புகள் இனியும் தொடரக் கூடாது என்பதை
நினைவுப்படும் விதமாகவே இந்தத் தினம் உருவானது.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இன்றைய தின சிறப்பை பதிந்த அம்மாவுக்கு மிக்க நன்றி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|