புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
37 Posts - 37%
heezulia
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
31 Posts - 31%
Dr.S.Soundarapandian
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
1 Post - 1%
mruthun
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
106 Posts - 44%
ayyasamy ram
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
2 Posts - 1%
manikavi
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொங்குத் தமிழ்


   
   
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Nov 06, 2014 10:36 am

கொங்குத் தமிழ்
கொங்குத் தமிழ் என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி ஆகும். கொங்கு என்ற சொல்லுக்குத் தேன், பூந்தாது என்று பொருள். ஆயினும் அதற்கும் இந்த நாட்டின் பெயருக்கும் தொடர்பிருப்பதாக இன்னும் மொழியியல்படிச் சான்றுகள் இல்லை.
தமிழின் சிறப்பு ‘ழ’ என்பது போல் கொங்குத் தமிழின் சிறப்பு ‘ற’ மற்றும் ‘ங்’ என்பனவாகும். என்னுடைய, உன்னுடைய என்பதை என்ற, உன்ற என்றும், என்னடா என்பதை என்றா என்பார்கள். சாப்பிட்டுவிட்டு, குளித்துவிட்டு என்பனவற்றை சாப்டுபோட்டு, “தண்ணிவார்த்துகுட்டு”, ‘தண்ணிஊத்திக்கிட்டு’ என்று கூறுவார்கள்.
மரியாதை கொடுத்துப் பேசும் தமிழ் கொங்குத் தமிழ். ஏனுங்கோ, சொல்லுங்கோ, வாங்கோ, போங்கோ என்று எதிலும் ‘ங்கோ’ போட்டு மரியாதையாகப் பேசுவார்கள். பெரியவர்களிடம் பேசும் போது ‘ங்கோ’ என்பதற்கு பதில் ‘ங்’ போட்டும் பேசுவார்கள். சொல்லுங், வாங், போங், சரிங், இல்லீங் என்று ‘கோ’ வை சொல்லாமல் முழுங்கி விடுவார்கள்.


கொங்குப் பகுதியில் புழங்கும் சில சொற்கள் (அகரவரிசையில்)
* அக்கட்ட, அக்கட்டு. அக்கட்டாலே – அந்த இடம், அந்த இடத்திலே. “நீ அக்கட்டாலே போய் உட்காரு”
* அங்கராக்கு – சட்டை
* அட்டாரி, அட்டாலி – பரண்
* அப்பச்சி , அப்புச்சி- தாய்வழித் தாத்தா
* அப்பு – அறை. (அவள ஓங்கி ஒரு அப்பு அப்புடா, செவுனி திலும்பரப்பல)
* அம்மாயி – அம்மாவின் அம்மா
* அப்பத்தாள் – அப்பாவின் அம்மா
* ஆம்பாடு – காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)
* இக்கட்டு – இந்த இடம்
* இட்டாரி (இட்டேறி) – தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)
* இண்டம் பிடித்தவன் – கஞ்சன்
* உண்டி – (sample) = உண்ணும் பதம்? – தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்
* ஊக்காலி (?ஊர்க்காலி)- பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். ( ரவுடி )
* எச்சு – அதிகம்.
* எகத்தாளம் – நக்கல், பரிகாசம்
* ஏகமாக – மிகுதியாக
* ஒட்டுக்கா – ஒரேயடியாக, இணைந்து (இரண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாருங்கள் – இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
* ஒடக்கான் – ஓணான்
* ஒப்பிட்டு – போளி
* ஒளப்பிரி – உளறு “இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்”
* ஒறம்பற – உறவினர் (உறவின்மு்றை) – விருந்தினர்
* ஓரியாட்டம் – சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.
* கட்டுத்தரை – மாட்டுத் தொழுவம்
* கட்டிச்சோற்று விருந்து – கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு
* கரடு – சிறு குன்று
* கண்ணாலம் – கல்யாணம் \ திருமணம்
* கூம்பு – கார்த்திகை தீபம் ( கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு )
* குரல்வளை \ தொண்டை
* கோடு – கடைசி ( கோட்டுக்கடை – கடைசிக்கடை, அந்த கோட்டில பாரு – அந்த கடைசில பாரு)
* சாடை பேசுறான் – மறைமுகமாக தாக்கிப் பேசுகிறான்
* சிலுவாடு – சிறு சேமிப்பு
* சீரழி – நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
* சீராட்டு – கோபம். (கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீராடிட்டு வந்துவிட்டது)
* சுல்லான் (சுள்ளான்?) – கொசு
* செம்புலிகுட்டி – செம்மறியாட்டுக்குட்டி
* சோங்கு – சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி
* தாரை – பாதை
* தொண்டுப்பட்டி – மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் – ஆட்டைத் தொண்டுப்பட்டியிலே அடை
* துழாவு – தேடு
* நலுங்கு – உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லை பயன் படுத்த மாட்டார்கள் – அவங்க குழந்தை நலுங்கிகிச்சாம் )
* நாயம் – பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் – அவன் நாயம் யாருக்கு வேணும், அங்க என்னடா பேச்சு – அங்க என்னடா நாயம் )
* நோக்காடு – நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்றைக்கு வரக் காணோம்.
* நோம்பி – (நோன்பு) திருவிழா
* பவுதியாயி நோம்பி – பகவதி அம்மன் திருவிழா
* படு – குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை
* பழமை – பேச்சு ( அங்க என்ன பேச்சு – அங்க என்ன பழமை )
* பாலி – குளத்தை விடச் சிறிய நீர்நிலை.
* பிரி – பெருகு, கொழு (“பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்”)
* புண்ணியாசனை – (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா
* பெருக்கான் – பெருச்சாளி
* பொக்கென்று – வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)
* பொட்டாட்ட – அமைதியாக இருத்தல்
* பொடக்காலி – புழக்கடை
* பொடனி, பொடனை – (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து
* பொறந்தவன் – உடன் பிறந்த சகோதரர்
* பொறந்தவள் – உடன் பிறந்த சகோதரரி
* மச்சாண்டார் – கணவனின் அண்ணன்
* மழைக்காயிதம் – பாலிதீன் காகிதம்
* மலங்காடு – மலைக்காடு
* முக்கு – முனை, மூலை, வளைவு
* வெகு – அதிக
* வெள்ளாமை – வேளாண்மை \ விவசாயம்.

நன்றி
பண்ணையார்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 06, 2014 2:58 pm

அருமை, இதில் அதிக சொற்களை நான் பயன்படுத்துகிறேன்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 06, 2014 4:35 pm

மரியாதை கொடுத்துப் பேசும் தமிழ் கொங்குத் தமிழ்

  நாயந்தானுங்கோ !!


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக