புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரை விமர்சனம் » பூஜை
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
படம் : பூஜை
நடிகர் : விஷால்
நடிகை : ஸ்ருதிஹாசன்
இயக்குனர் :ஹரி
ஹரி இயக்கத்தில், தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால் நடித்திருக்கும் திரைப்படம், விஷால்-ஸ்ருதிஹாசன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம், விஷால் சொந்தமாக தயாரித்திருக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு தீபாவளி விருந்தாக வந்திருக்கும் படம் தான் ''பூஜை''.
கோயம்புத்தூரில் பெரிய பெரிய பிஸினஸ் எல்லாம் செய்யும் பெரிய குடும்பத்து வாரிசு, வாசு எனும் விஷால். ஆனால் ஒருசின்ன மனவருத்தத்தில் குடும்பத்தை பிரிந்து காய்கறி மார்க்கெட்டில் வட்டிக்கு விட்டு பக்காவாக சொந்தக்காலில் வாழுகிறார் விஷால். எதிர்பாராமல் ஷாப்பிங் மால் ஒன்றில் சந்திக்கும் திவ்யா எனும் ஸ்ருதிஹாசன் உடன் முதலில் நட்பும், அதன்பின் காதலும் கொள்கிறார் மனிதர்.
பொள்ளாச்சியில் பெரிய மனிதர் அந்தஸ்த்துடன் வாழும் கூலிப்படை தலைவன் அன்னை தாண்டவம் எனும் வில்லன் முகேஷ் திவாரியிடம் மோதுகிறார். சொந்த பகைக்காவும், அதேநேரம் விஷாலின் குடும்பத்துடனான பெரும்பகைக்காவும் விஷாலை தீர்த்துக்கட்ட துடிக்கும் முகேஷ், விஷாலை வென்றாரா.? விஷால், முகேஷை கொன்றாரா.? எனும் அதிரடி ஆக்ஷ்ன் கதையுடன், விஷால்-ஸ்ருதியின் காதல் களியாட்டத்தையும் கலந்துகட்டி அதிரடியாக, அதேநேரம் லவ், காமெடி, சென்ட்டிமென்ட் என ஜனரஞ்சமாக தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி, ''பூஜை'' போட்டிருக்கிறார் இயக்குநர் ஹரி!
வாசு எனும் வாசுதேவனாக விஷால், செய்யாத குற்றத்திற்காக குடும்பத்தை பிரிந்து தாயின் அன்பிற்கு ஏங்கும் காட்சிகளிலாகட்டும், ஸ்ருதிஹாசன் உடனான காதல் காட்சிகளாகட்டும், ஒற்றை ஆளாய் 30-40 ஆட்களை அடித்து துவம்சம் செய்வதிலாகட்டும், சூரியுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் கலக்குவதிலாகட்டும்... அனைத்தையும் அசால்ட்டாக செய்து சக்கைபோடு போட்டிருக்கிறார். கீப்ட்-அப் விஷால்!
ஸ்ருதி, திவ்யாவாக நடிப்பிலும், இளமை துடிப்பிலும், 16 அடி, இல்லை இல்லை... 32 அடி பாய்ந்திருக்கிறார். அம்மணி காட்டுவது ஓவர் கிளாமர் என்றாலும் அது ஓவராக தெரியாதது ஸ்ருதியின் ப்ளஸ்!
பரோட்டா சூரி - பிளாக் பாண்டி - இமான் அண்ணாச்சி கூட்டணி, கவுண்டமணி-செந்தில் அண்ட் கோவினரை நம் கண்முன் ரொம்ப நாளைக்கு அப்புறம் நிறுத்துகிறது என்றால் மிகையல்ல. அதிலும் அந்த உரித்த வாழைப்பழ காமெடி செம சிரிப்பு.
விஷால் - ஸ்ருதி - சூரி அண்ட் கோவினர் மாதிரியே, போலீஸ் ஆபிசராக வரும் சத்யராஜ், விஷாலின் அம்மாவாக வரும் ராதிகா, சித்தாரா, ரேணுகா, கெளசல்யா(பழைய கதாநாயகிகள் மீது இயக்குநர் ஹரிக்கு அப்படி என்ன ஈர்ப்போ...?), தலைவாசல் விஜய், ஜெய்பிரகாஷ், பிரதாப் போத்தன், வில்லன் முகேஷ் திவாரி உள்ளிட்ட ஒவ்வொரு கேரக்டரும் தங்களது பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், ''இப்படியே... என தொடங்கும் பாடல் உள்ளிட்ட 6 பாடல்களும் 'நச்' என்று இருக்கிறது. ப்ரியனின் ஒளிப்பதிவு, வி.டி.விஜயன்-டி.எஸ்.ஜாய் இருவரது படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், 'பூஜை'க்கு மாவிலை தோரணம் கட்டியிருக்கின்றன.
ஹரியின் எழுத்து-இயக்கத்தில், 'பூஜை' படம் படு ஸ்பீடாக செல்வது, இந்த தீபாவளி ரேசில், இளைய தளபதியை காட்டிலும், புரட்சி தளபதியின் படத்திற்கு மவுஸை கூட்டியிருக்கிறது.
ஆகமொத்தத்தில், விஷால்-ஹரி கூட்டணியின் ''பூஜை'' - ''ஆர்டினரி பூஜை அல்ல, அசத்தும் அதிரடி ஆயுத பூஜை!''
-- தினமலர்
நடிகர் : விஷால்
நடிகை : ஸ்ருதிஹாசன்
இயக்குனர் :ஹரி
ஹரி இயக்கத்தில், தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால் நடித்திருக்கும் திரைப்படம், விஷால்-ஸ்ருதிஹாசன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம், விஷால் சொந்தமாக தயாரித்திருக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு தீபாவளி விருந்தாக வந்திருக்கும் படம் தான் ''பூஜை''.
கோயம்புத்தூரில் பெரிய பெரிய பிஸினஸ் எல்லாம் செய்யும் பெரிய குடும்பத்து வாரிசு, வாசு எனும் விஷால். ஆனால் ஒருசின்ன மனவருத்தத்தில் குடும்பத்தை பிரிந்து காய்கறி மார்க்கெட்டில் வட்டிக்கு விட்டு பக்காவாக சொந்தக்காலில் வாழுகிறார் விஷால். எதிர்பாராமல் ஷாப்பிங் மால் ஒன்றில் சந்திக்கும் திவ்யா எனும் ஸ்ருதிஹாசன் உடன் முதலில் நட்பும், அதன்பின் காதலும் கொள்கிறார் மனிதர்.
பொள்ளாச்சியில் பெரிய மனிதர் அந்தஸ்த்துடன் வாழும் கூலிப்படை தலைவன் அன்னை தாண்டவம் எனும் வில்லன் முகேஷ் திவாரியிடம் மோதுகிறார். சொந்த பகைக்காவும், அதேநேரம் விஷாலின் குடும்பத்துடனான பெரும்பகைக்காவும் விஷாலை தீர்த்துக்கட்ட துடிக்கும் முகேஷ், விஷாலை வென்றாரா.? விஷால், முகேஷை கொன்றாரா.? எனும் அதிரடி ஆக்ஷ்ன் கதையுடன், விஷால்-ஸ்ருதியின் காதல் களியாட்டத்தையும் கலந்துகட்டி அதிரடியாக, அதேநேரம் லவ், காமெடி, சென்ட்டிமென்ட் என ஜனரஞ்சமாக தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி, ''பூஜை'' போட்டிருக்கிறார் இயக்குநர் ஹரி!
வாசு எனும் வாசுதேவனாக விஷால், செய்யாத குற்றத்திற்காக குடும்பத்தை பிரிந்து தாயின் அன்பிற்கு ஏங்கும் காட்சிகளிலாகட்டும், ஸ்ருதிஹாசன் உடனான காதல் காட்சிகளாகட்டும், ஒற்றை ஆளாய் 30-40 ஆட்களை அடித்து துவம்சம் செய்வதிலாகட்டும், சூரியுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் கலக்குவதிலாகட்டும்... அனைத்தையும் அசால்ட்டாக செய்து சக்கைபோடு போட்டிருக்கிறார். கீப்ட்-அப் விஷால்!
ஸ்ருதி, திவ்யாவாக நடிப்பிலும், இளமை துடிப்பிலும், 16 அடி, இல்லை இல்லை... 32 அடி பாய்ந்திருக்கிறார். அம்மணி காட்டுவது ஓவர் கிளாமர் என்றாலும் அது ஓவராக தெரியாதது ஸ்ருதியின் ப்ளஸ்!
பரோட்டா சூரி - பிளாக் பாண்டி - இமான் அண்ணாச்சி கூட்டணி, கவுண்டமணி-செந்தில் அண்ட் கோவினரை நம் கண்முன் ரொம்ப நாளைக்கு அப்புறம் நிறுத்துகிறது என்றால் மிகையல்ல. அதிலும் அந்த உரித்த வாழைப்பழ காமெடி செம சிரிப்பு.
விஷால் - ஸ்ருதி - சூரி அண்ட் கோவினர் மாதிரியே, போலீஸ் ஆபிசராக வரும் சத்யராஜ், விஷாலின் அம்மாவாக வரும் ராதிகா, சித்தாரா, ரேணுகா, கெளசல்யா(பழைய கதாநாயகிகள் மீது இயக்குநர் ஹரிக்கு அப்படி என்ன ஈர்ப்போ...?), தலைவாசல் விஜய், ஜெய்பிரகாஷ், பிரதாப் போத்தன், வில்லன் முகேஷ் திவாரி உள்ளிட்ட ஒவ்வொரு கேரக்டரும் தங்களது பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், ''இப்படியே... என தொடங்கும் பாடல் உள்ளிட்ட 6 பாடல்களும் 'நச்' என்று இருக்கிறது. ப்ரியனின் ஒளிப்பதிவு, வி.டி.விஜயன்-டி.எஸ்.ஜாய் இருவரது படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், 'பூஜை'க்கு மாவிலை தோரணம் கட்டியிருக்கின்றன.
ஹரியின் எழுத்து-இயக்கத்தில், 'பூஜை' படம் படு ஸ்பீடாக செல்வது, இந்த தீபாவளி ரேசில், இளைய தளபதியை காட்டிலும், புரட்சி தளபதியின் படத்திற்கு மவுஸை கூட்டியிருக்கிறது.
ஆகமொத்தத்தில், விஷால்-ஹரி கூட்டணியின் ''பூஜை'' - ''ஆர்டினரி பூஜை அல்ல, அசத்தும் அதிரடி ஆயுத பூஜை!''
-- தினமலர்
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
அவிநாசி மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார் விஷால். இவருக்கு துணையாக பிளாக் பாண்டி, சூரி வேலை பார்த்து வருகிறார்கள். ஒரு நாள் ஷாப்பிங் மாலில் நாயகி சுருதிஹாசனை விஷால் சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே இரண்டு பேரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் சுருதிஹாசன் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த விஷால், சுருதியிடம் மன்னிப்பு கேட்கிறார். பிறகு அவர் மீது விஷாலுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.
பிறகு அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவரும் நட்பாக பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் சுருதி மீது விஷாலுக்கு காதல் ஏற்படுகிறது. அந்த காதலை சுருதியிடம் நேரடியாக சொல்கிறார். ஆனால் சுருதியோ அவருடைய காதலை நிராகரித்து, அவமானப்படுத்தி விடுகிறார்.
இதற்கிடையில் கோவையில் மிகப்பெரிய தொழில் நிறுவனமான கோவை குருப்ஸ் கம்பெனியின் பங்குதாரர்களான ராதிகா, தலைவாசல் விஜய், ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தை பொள்ளாச்சி சேத்துமடை பெருமாள் கோவில் அறங்காவலராக இருக்கும் அன்னதாண்டவம் அபகரிக்க முயற்சி செய்கிறார். பைனான்ஸ் கம்பெனி நடத்திவரும் இவர், மறைமுகமாக பல கொலைகளை செய்து வருகிறார். இவரது அபகரிப்பு திட்டத்தை தெரிந்து கொண்ட கோவை குருப்ஸ் பங்குதாரர்கள், அந்த நிலத்தை ஊர் கோவிலுக்கு எழுதி கொடுக்க முடிவு செய்கிறார்கள்.
இந்நிலையில் சுருதியின் தோழி வீட்டுக்கு தெரியாமல் காதலுடன் ஊரை விட்டு ஓடுகிறாள். இதை அறியும் சுருதி விஷாலின் உதவியுடன் அவளது தோழியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கிறார். தான் அவமானப்படுத்தினாலும் தன்னுடைய சொல்லுக்கு மதிப்பு கொடுத்த விஷாலின் மீது சுருதிக்கு காதல் வருகிறது. தன் காதலை விஷாலிடம் சொல்ல செல்கிறார்.
அப்போது நிலத்தை ஊர் கோவிலுக்கு எழுதி கொடுக்க ரிஜிஸ்டர் அலுவலத்திற்கு சென்றிருக்கும் ராதிகாவுடன் விஷாலை பார்த்ததும் சுருதி, விஷால் யார் என்று சூரியிடம் கேட்கிறார். அதற்கு சூரி கோவை குரூப்ஸ் பங்குதாரர்களின் ஒருவரான ராதிகாவின் மகன் தான் விஷால் என்று கூறுகிறார். இதை கேட்டதும் விஷாலை அவமானப்படுத்தியதை எண்ணி வருந்துவதுடன், தன் காதலை சொல்லமலேயே சென்று விடுகிறார். இருந்தாலும் அவளது தோழி மூலமாக சுருதி காதலிப்பதை விஷால் தெரிந்துக் கொள்கிறார். இருவரும் காதலித்து வருகிறார்கள்.
ஒரு நாள் போலீஸ் உயர் அதிகாரியான சத்யராஜை, அன்னதாண்டவத்தின் ஆட்கள் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். அவர்களை விஷால் அடித்து சத்யராஜையும் அவரது மனைவியையும் காப்பாற்றுகிறார். தன்னுடைய திட்டம் நிறைவேறாததால் கோபம் அடையும் அன்னதாண்டவம் யார் என்று தெரியாத விஷாலை தேடி கண்டுபிடித்து தீர்த்து கட்ட முயற்சி செய்கிறார். இந்நிலையில் அன்னதாண்டவத்திற்கு அறங்காவலர் பதவியும் பறிபோகிறது. அந்தப் பதவிக்கு ஜெயப்பிரகாஷ் வருகிறார். ஊர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொள்ளும் ஜெயப்பிரகாசை ஊர் மக்கள் முன்னிலையில் வேறொருவர் மூலம் அவரை அடிக்கவைத்து அவமானப்படுத்துகிறார் அன்னதாண்டவம்.
ஜெயப்பிரகாசுக்கு நேர்ந்த அவமானம், தனக்கு ஏற்பட்டதாக எண்ணிய ராதிகா, தனது மகனான விஷாலை அழைத்து, அன்னதாண்டவத்தை அடிக்கும்படி ஆணையிடுகிறார். விஷாலும் தன் அம்மாவின் ஆணைக்கிணங்க அன்னதாண்டவத்தின் வீட்டிற்கு சென்று அவரை அடித்து துவம்சம் செய்கிறார். தன் சித்தப்பா ஜெயப்பிரகாசை அவமானப்படுத்தியது போல் பொதுமக்கள் முன்னால் அன்னதாண்டவத்தையும் அவமானப்படுத்துவேன் என்று விஷால் சவால் விட்டு செல்கிறார்.
சொன்னது போல் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வைத்து பலரும் பார்க்கும் வகையில் அன்னதாண்டவத்தை அடித்து அவமானப்படுத்துகிறார். இதை சுருதி வீடியோ எடுத்து தோழிக்கு அனுப்புகிறார். தோழியோ அந்த வீடியோவை யூ டியூப்பில் அப்லோடு செய்து விடுகிறார். இது உலகம் முழுவதும் பரவி அன்னதாண்டவத்திற்கு பெரிய அவமானத்தை ஏற்படுகிறது. இந்தளவிற்கு அவமானப்படுத்திய விஷாலையும் அவனது குடும்பத்தையும் பழி வாங்க அன்னதாண்டவம் முடிவு செய்கிறார்.
இறுதியில் அன்னதாண்டவம் விஷால் குடும்பத்தை பழிவாங்கினாரா? இல்லை அன்னதாண்டவத்திடம் இருந்து தன் குடும்பத்தை விஷால் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் விஷால் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மாஸ் ஹீரோவிற்கான அந்தஸ்தை அதிகப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். நாயகியான சுருதியை கோவை பெண்ணாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஹரி படத்தில் வரும் கதாநாயகிகளுக்கு உண்டான கிராமத்து பெண் வேடம் சுருதிக்கு பொருந்தாமல் இருக்கிறது. ஆனால் நல்ல நடிப்பு, பாடல் காட்சிகளில் சிறப்பான ஆட்டம் என ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.
சூரி, பிளாக் பாண்டி இவர்கள் செய்யும் காமெடி ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. குறிப்பாக சூரியின் காமெடி அருமை. ராதிகா அழகான கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட செய்திருக்கிறார். சத்யராஜ் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று மொட்டை தலையுடன் மிரட்டுகிறார். ஆக்ரோஷமான காட்சிகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அன்னதாண்டவம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
படத்திற்கு கூடுதல் பலம் யுவனின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக சத்யராஜுக்கு பின்னணி இசை அருமை. ஆண்ட்ரியா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருக்கிறார். ஆனால் ஆட தான் முடியவில்லை.
ஹரி தனது படத்திற்குண்டான காதல், ஆக்ஷன், செண்டிமென்ட், காமெடி என அனைத்தையும் இப்படத்திலும் சரியாக கலந்து சுவையாக படைத்திருக்கிறார். படத்தில் வரும் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் மிரள வைக்கிறது. அதை காட்சியமைத்த விதமும் பின்னணி இசையும் சேர்ந்து விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘பூஜை’ பூஜிக்கலாம்.
மதிப்பெண் : 77/100
-- மாலைமலர்
பிறகு அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவரும் நட்பாக பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் சுருதி மீது விஷாலுக்கு காதல் ஏற்படுகிறது. அந்த காதலை சுருதியிடம் நேரடியாக சொல்கிறார். ஆனால் சுருதியோ அவருடைய காதலை நிராகரித்து, அவமானப்படுத்தி விடுகிறார்.
இதற்கிடையில் கோவையில் மிகப்பெரிய தொழில் நிறுவனமான கோவை குருப்ஸ் கம்பெனியின் பங்குதாரர்களான ராதிகா, தலைவாசல் விஜய், ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தை பொள்ளாச்சி சேத்துமடை பெருமாள் கோவில் அறங்காவலராக இருக்கும் அன்னதாண்டவம் அபகரிக்க முயற்சி செய்கிறார். பைனான்ஸ் கம்பெனி நடத்திவரும் இவர், மறைமுகமாக பல கொலைகளை செய்து வருகிறார். இவரது அபகரிப்பு திட்டத்தை தெரிந்து கொண்ட கோவை குருப்ஸ் பங்குதாரர்கள், அந்த நிலத்தை ஊர் கோவிலுக்கு எழுதி கொடுக்க முடிவு செய்கிறார்கள்.
இந்நிலையில் சுருதியின் தோழி வீட்டுக்கு தெரியாமல் காதலுடன் ஊரை விட்டு ஓடுகிறாள். இதை அறியும் சுருதி விஷாலின் உதவியுடன் அவளது தோழியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கிறார். தான் அவமானப்படுத்தினாலும் தன்னுடைய சொல்லுக்கு மதிப்பு கொடுத்த விஷாலின் மீது சுருதிக்கு காதல் வருகிறது. தன் காதலை விஷாலிடம் சொல்ல செல்கிறார்.
அப்போது நிலத்தை ஊர் கோவிலுக்கு எழுதி கொடுக்க ரிஜிஸ்டர் அலுவலத்திற்கு சென்றிருக்கும் ராதிகாவுடன் விஷாலை பார்த்ததும் சுருதி, விஷால் யார் என்று சூரியிடம் கேட்கிறார். அதற்கு சூரி கோவை குரூப்ஸ் பங்குதாரர்களின் ஒருவரான ராதிகாவின் மகன் தான் விஷால் என்று கூறுகிறார். இதை கேட்டதும் விஷாலை அவமானப்படுத்தியதை எண்ணி வருந்துவதுடன், தன் காதலை சொல்லமலேயே சென்று விடுகிறார். இருந்தாலும் அவளது தோழி மூலமாக சுருதி காதலிப்பதை விஷால் தெரிந்துக் கொள்கிறார். இருவரும் காதலித்து வருகிறார்கள்.
ஒரு நாள் போலீஸ் உயர் அதிகாரியான சத்யராஜை, அன்னதாண்டவத்தின் ஆட்கள் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். அவர்களை விஷால் அடித்து சத்யராஜையும் அவரது மனைவியையும் காப்பாற்றுகிறார். தன்னுடைய திட்டம் நிறைவேறாததால் கோபம் அடையும் அன்னதாண்டவம் யார் என்று தெரியாத விஷாலை தேடி கண்டுபிடித்து தீர்த்து கட்ட முயற்சி செய்கிறார். இந்நிலையில் அன்னதாண்டவத்திற்கு அறங்காவலர் பதவியும் பறிபோகிறது. அந்தப் பதவிக்கு ஜெயப்பிரகாஷ் வருகிறார். ஊர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொள்ளும் ஜெயப்பிரகாசை ஊர் மக்கள் முன்னிலையில் வேறொருவர் மூலம் அவரை அடிக்கவைத்து அவமானப்படுத்துகிறார் அன்னதாண்டவம்.
ஜெயப்பிரகாசுக்கு நேர்ந்த அவமானம், தனக்கு ஏற்பட்டதாக எண்ணிய ராதிகா, தனது மகனான விஷாலை அழைத்து, அன்னதாண்டவத்தை அடிக்கும்படி ஆணையிடுகிறார். விஷாலும் தன் அம்மாவின் ஆணைக்கிணங்க அன்னதாண்டவத்தின் வீட்டிற்கு சென்று அவரை அடித்து துவம்சம் செய்கிறார். தன் சித்தப்பா ஜெயப்பிரகாசை அவமானப்படுத்தியது போல் பொதுமக்கள் முன்னால் அன்னதாண்டவத்தையும் அவமானப்படுத்துவேன் என்று விஷால் சவால் விட்டு செல்கிறார்.
சொன்னது போல் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வைத்து பலரும் பார்க்கும் வகையில் அன்னதாண்டவத்தை அடித்து அவமானப்படுத்துகிறார். இதை சுருதி வீடியோ எடுத்து தோழிக்கு அனுப்புகிறார். தோழியோ அந்த வீடியோவை யூ டியூப்பில் அப்லோடு செய்து விடுகிறார். இது உலகம் முழுவதும் பரவி அன்னதாண்டவத்திற்கு பெரிய அவமானத்தை ஏற்படுகிறது. இந்தளவிற்கு அவமானப்படுத்திய விஷாலையும் அவனது குடும்பத்தையும் பழி வாங்க அன்னதாண்டவம் முடிவு செய்கிறார்.
இறுதியில் அன்னதாண்டவம் விஷால் குடும்பத்தை பழிவாங்கினாரா? இல்லை அன்னதாண்டவத்திடம் இருந்து தன் குடும்பத்தை விஷால் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் விஷால் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மாஸ் ஹீரோவிற்கான அந்தஸ்தை அதிகப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். நாயகியான சுருதியை கோவை பெண்ணாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஹரி படத்தில் வரும் கதாநாயகிகளுக்கு உண்டான கிராமத்து பெண் வேடம் சுருதிக்கு பொருந்தாமல் இருக்கிறது. ஆனால் நல்ல நடிப்பு, பாடல் காட்சிகளில் சிறப்பான ஆட்டம் என ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.
சூரி, பிளாக் பாண்டி இவர்கள் செய்யும் காமெடி ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. குறிப்பாக சூரியின் காமெடி அருமை. ராதிகா அழகான கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட செய்திருக்கிறார். சத்யராஜ் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று மொட்டை தலையுடன் மிரட்டுகிறார். ஆக்ரோஷமான காட்சிகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அன்னதாண்டவம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
படத்திற்கு கூடுதல் பலம் யுவனின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக சத்யராஜுக்கு பின்னணி இசை அருமை. ஆண்ட்ரியா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருக்கிறார். ஆனால் ஆட தான் முடியவில்லை.
ஹரி தனது படத்திற்குண்டான காதல், ஆக்ஷன், செண்டிமென்ட், காமெடி என அனைத்தையும் இப்படத்திலும் சரியாக கலந்து சுவையாக படைத்திருக்கிறார். படத்தில் வரும் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் மிரள வைக்கிறது. அதை காட்சியமைத்த விதமும் பின்னணி இசையும் சேர்ந்து விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘பூஜை’ பூஜிக்கலாம்.
மதிப்பெண் : 77/100
-- மாலைமலர்
ஹரி படம் என்றாலே நன்றாகத்தான் இருக்கும்! நம்பி பார்க்கலாம்! ஆனால் இன்னும் இணையத்தில் தரவிறக்கம் கிடைக்கவில்லை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திரை விமர்சனம் » பூஜை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098765சிவா wrote:ஹரி படம் என்றாலே நன்றாகத்தான் இருக்கும்! நம்பி பார்க்கலாம்! ஆனால் இன்னும் இணையத்தில் தரவிறக்கம் கிடைக்கவில்லை!
டவுன்லோட் செய்து பார்த்து விட்டேன் சிவா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மேலும், தமிழ் ட்விஸ்ட் போன்ற தளங்களும் லிங்க் இருக்கு சிவா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நிறைய fight இருக்கே...............அந்த பாக்டரி உல் நடக்கும் அடிதடி இல் ஆபீஸ் செக்யூரிட்டி வந்திருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும்................ஹீரோ என்பதால் எல்லாமே விஷால் தான் போடணுமா என்று தோன்றுகிறது .................அதே போல எதுக்கு பீகார் வரை கதையை கொண்டு போகணும் என்று தெரியலை.....என்றாலும் கத்திக்கு இது தேவலாம்........நல்லாவே இருக்கு......கமல் பெண் அப்படியே சரிகா தான்.....சூப்பர் ஆக இருக்கா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கத்தியை விட இது பரவாயில்லை.
ஹரி அவருடைய தாமிரபரணி படத்தையே உல்டா செஞ்சு மீண்டும் பூஜை ன்னு கதை விட்டுட்டார். தாமிரபரணி, பூஜையை விட நல்லாருந்தது.
ஹரி அவருடைய தாமிரபரணி படத்தையே உல்டா செஞ்சு மீண்டும் பூஜை ன்னு கதை விட்டுட்டார். தாமிரபரணி, பூஜையை விட நல்லாருந்தது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|